Thursday, December 29, 2016

ரிசர்வேஷன் சார்ட் தயாரித்த பின் ரயில் டிக்கெட் புக் செய்தால் 10% தள்ளுபடி


டெல்லி: ரயில்களில் பயணம் செய்யும் போது, ரிசர்வேஷன் சார்ட் தயாரித்த பின் டிக்கெட் புக் செய்தால் 10% தள்ளுபடி அளிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல், ரயில் டிக்கெட் புக் செய்தால் சிறப்பு சலுகை அளிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதாவது ரயில் டிக்கெட் புக் செய்யும் போது, இடம் இருந்தால் உடனடியாக டிக்கெட் கிடைத்துவிடும். இல்லையெனில் அவர்கள் வெயிட்டிங் லிஸ்டில் இருக்க நேரிடும். இதற்கான ரிசர்வேஷன் சார்ட், ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும்.

இந்நிலையில் ரிசர்வேஷன் சார்ட் தயாரித்த பிறகும், சில இருக்கைகள் காலியாக இருக்கக்கூடும். எனவே சார்ட் தயாரித்த பிறகு, காலியான இருக்கைகளுக்கு ரிசர்வேஷன் செய்தால் அவர்களுக்கு 10% தள்ளுபடி அளிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் ஷதாப்தி, துரந்தோ, ராஜ்தானி ரயில்களில் சோதனை செய்து பார்த்துள்ளது. இந்த பரிசோதனை முயற்சி அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட உள்ளது.

மேலும் அனைத்து ரயில்களிலும் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல், ஆறு மாதங்களுக்கு பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 10 % தள்ளுபடி, சார்ட் தயாரிக்கும் முன்பு, குறிப்பிட்ட வகுப்பு பெட்டியில் கடைசியாக விற்கப்பட்ட டிக்கெட் கட்டணத்தில் இருந்து அளிக்கப்படும்.

No comments:

Post a Comment

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win  G Babu Jayakumar & D Sekar 1 2 May 2026 10:05 PM  AMMK member Kamraj supports TVK, expell...