Thursday, December 22, 2016

கலக்கம்!
வருமான வரி சோதனையால் கலக்கம் :
ஆவணத்தை பதுக்கும் உயர் கல்வி அதிகாரிகள்

DINAMALAR
தமிழக தலைமை செயலர் வீட்டில் நடந்த வரு மான வரித்துறை சோதனையால், உயர் கல்வி அதிகாரிகள் நடுக்கம் அடைந்துள்ளனர். அவருக்கு நெருக்கமானோர், தங்களிடம் உள்ள கறுப்பு பணம், ஆவணங்களை பதுக்கும் முயற்சி யில் ஈடுபட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய முடிவுகள் :


தமிழக தலைமை செயலர், ராமமோகன ராவ் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையால், தமிழகத்தில் உள்ள பல, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர். உயர் கல்வி துறையின் முன்னாள், இந்நாள் முக்கிய அதிகாரிகள் மற்றும் பல்கலைகளில் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீடுகளில், ரெய்டு நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.
ராமமோகன ராவ், சென்னை பல்கலையில்,

பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு படித்த போது, சில பேராசிரியர்கள் மற்றும் உயர் கல்வி அதிகாரி கள், அவருக்கு நண்பர்களாகினர். ராமமோகன ராவ், முதல்வரின் செயலராக பதவிக்கு வந்த பின், அவர் களை சரியாக பயன்படுத்தி கொண்டார்.

பல்கலைகளில்,துணை வேந்தர், பேராசிரியர் நிய மனங்கள், உயர் கல்வி மன்ற திட்டங்களை அமல் படுத்துவது, கல்லுாரிகளில் கட்டுமான பணி களுக்கு, கான்டி ராக்ட் வழங்குவது போன்றவற்றில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதிக தலையீடு :

கல்லுாரிகளில் நடந்த பல நியமனங்களிலும், தலைமை செயலர் பெயரில், பேரம் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உயர் கல்வி துறை யில், தலைமை செயலர், கவர்னர் மற்றும் உயர் கல்வி செயலக அலுவலகங்களில் உள்ளோர், அதிகம் தலையீடு உள்ளதாக, மத்திய அரசுக்கு பலர் புகார் அனுப்பினர். மத்திய அரசு, ரகசிய விசாரணை நடத்தி, பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி யதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனவே, லஞ்சம் கொடுத்து பதவி பெற்றோர், லஞ் சம் வாங்கிய உயர் அதிகாரிகள் மற்றும் அவர்க ளுக்கு இடைத் தரகர்களாக பணியாற்றி யோர், கலக்கத்தில் உள்ளனர். இவர்களில், கறுப்பு பணம்,

முறைகேடான சொத்து வைத்திருப்போர், ஆவணங்களை உறவினர்கள், துறையில் பணி யாற்றும் நண்பர்கள் என, பல இடங்களிலும், பதுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளி கல்வியிலும், 'கிலி' :

தலைமை செயலரின் வீட்டில் நடந்த சோதனை யால், பள்ளி கல்வி துறையில் உள்ள, பல முக்கிய அதிகாரிகள் பயத்தில் உள்ளனர். ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக, ஆளுங்கட்சிக்கு நெருக்கம், தலைமை செயலரின் செல்வாக்கு என, அதிகாரத்துடன், முறைகேடுகளில் ஈடு பட்ட, பள்ளி கல்வி அதிகாரிகளும், சோதனை வலையில் சிக்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...