Monday, February 27, 2017


41 per cent in Tamil Nadu pass NEET, lowest in South India

DECCAN CHRONICLE. | A RAGU RAMAN

PublishedFeb 27, 2017, 12:56 am IST

Our classroom coaching will be of no help to the students who prepare for the common medical entrance test: Swaminathan.



National Eligibility cum Entrance Test (NEET) (Representational image)

Chennai: Even as parents and students are nervously waiting to know whether Tamil Nadu will get exempted from the National Eligibility cum Entrance Test (NEET), the details of last year’s results may have come as a rude shock to them as only 41% students qualified to study medicine, the lowest among the southern states, as per a RTI query. The neighbouring state Kerala has topped the qualifying percentage with 80% of them having qualified to study medicine last year. From the state, 52,208 (79.77%) have qualified.

From Telangana 8,813 (77.08%) candidates have qualified and Andhra Pradesh 10,917 (72.93%), Karnataka 18,344 (71.85%) qualified for medical courses. The qualifying criterion for “other category” was fixed as 50th percentile and for the rest the qualifying criteria was 40th percentile (50th percentile means of all the candidates who appeared for exam, 50% of them had scored less than 145 marks last year. So, to qualify one has to score at least 145 out of 720 marks).

However, when asked for the board-wise breakup of the qualified candidates, the CBSE, in its reply, said that it is not maintained by the board. It also forwarded another query related to the details of the students admitted in 15% all India quota in MBBS and BDS to Medical Council of India.

“NEET exam requires separate preparation. Our classroom coaching will be of no help to the students who prepare for the common medical entrance test,” said P.Swaminathan, secretary, SRV schools in Namakkal and Tiruchi districts. The SRV schools are reputed to send more students to MBBS course with the current admission procedure based on plus two marks.

P.B. Prince Gajendrababu, general secretary, State Platform for Common Schools System, said, “Only the students who have got money and time to spend for coaching classes will be able to qualify. That’s why the performance of the Tamil Nadu students is poor.”

“In Kerala, Andhra Pradesh and Telangana, the NEET coaching is a big market. There are more coaching centres in these states and importance is being given to competitive exams. But, only those who can afford the exorbitant fee can join these programmes. Students without money cannot join these programmes even if they have aspirations, attitude and aptitude skills,” he said.

He further said, “The high profile schools in Tamil Nadu now have entered an agreement with the coaching centres for NEET and JEE coaching. The eligible and poor students will opt out of the race.”

He also urged the President to give his assent for the Tamil Nadu act exempting the state students from the NEET exam “The students from Tamil Nadu were not trained for entrance exams as there was no entrance exam from 2007 in the state. And the NEET exam was suddenly imposed on them,” said Dr G.R. Ravindranath, Doctors’ Association for Social Equality.

While batting for exempting Tamil Nadu students from NEET, he said that the students should also be encouraged to participate in the national level examinations. “Of 2 lakh seats in various central government institutions, there is not even one percent representation from the state.”

விரல்களை வலிமையாக்கும் 2 நிமிடப் பயிற்சிகள்..! #PhotoStory
எழுதுவது, ஓவியம் வரைவது, கம்ப்யூட்டரில் டைப் செய்வது, பொருட்களை பிடிப்பது, எடையை தூக்குவது என அனைத்துக்குமே பயன்படக்கூடியவை கைவிரல்கள். அத்தகைய கைவிரல்களை வலிமையாக்குவது, பராமரிப்பது நம் வேலைகளை சுலபமாக்கும். கை வலி, விரல் வலி ஆகியவற்றை வராமல் தடுக்கும். இதோ, நமக்கான 2 நிமிட ஈஸி பயிற்சிகள்...

கைமூட்டு தளர்வு பயிற்சி (Fist flexes)

வலது கையை நன்றாக விரித்து, பின் கட்டை விரலைத் தவிர மற்ற விரல்களையும் மடக்கி, மூடியபடி வைக்க வேண்டும். கட்டைவிரலை மற்ற விரல்களின் மேல் வைத்து அழுத்தம் கொடுப்பதுபோல் வைக்க வேண்டும். இதேநிலையில், 30 விநாடிகள் வைத்து இருக்க வேண்டும். பின், மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும். இவ்வாறு செய்வது ஒரு செட். இதேபோன்று, இடது கையிலும் 10 முறை செய்யலாம்.



ஸ்ட்ரெஸ் பந்தை அழுத்துதல் (Stress ball squeezes)

ஸ்ட்ரெஸ் பந்தை உள்ளங்கைகளில் வைத்து, நன்றாகப் பிடித்துக் கொள்ளவும். முடிந்தளவுக்கு, அழுத்தம் கொடுக்க வேண்டும். இதேபோல், ஐந்து விநாடிகள் வரை பந்தை அழுத்திய நிலையிலேயே இருக்கலாம். இந்தப் பயிற்சியை இரண்டு கைகளிலும் தலா ஐந்து முறை வரை செய்யலாம்.
குறிப்பு: இந்தப் பயிற்சியை செய்ய டென்னிஸ் பந்து போல, கடினமான பந்துகளை பயன்படுத்தக் கூடாது.



விரல்களைத் தூக்குதல் (Finger lift)

டேபிளில் அல்லது தரையில் வலது கையை வைக்க வேண்டும். சுண்டு விரலை மட்டும் ஐந்து நொடிகள் வரை தூக்கவும் மற்ற விரல்களை தூக்க முயற்சிக்க கூடாது. இவ்வாறு, ஆள்காட்டி விரல், நடுவிரல் என ஐந்து விரல்களையும் தூக்குவது ஒரு செட். இதேபோல், இரண்டு கைகளிலும் 5 முறைச் செய்யலாம்.



கட்டைவிரல் தொடுதல் (Thumb touch)

கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனியைத் தொட வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்கட்டும். அதே நிலையில், 30 விநாடிகள் வரை வைத்திருக்கவும். ஐந்து விநாடிகள் ரிலாக்ஸ் செய்துவிட்டு, இதேபோல் நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் என ஒவ்வொரு விரலின் நுனியையும் தொட வேண்டும்.



கட்டைவிரல் வளைத்தல் (Thumb curve)

உள்ளங்கை உங்களை நோக்கியபடி, விரல்களை விரிக்க வேண்டும். கட்டை விரலை மட்டும் மடக்கி, சுண்டு விரலின் அடிப்பகுதியில் தொடுவது போல வைக்க வேண்டும். இதேபோல், ஐந்து விரல்களுக்கும் செய்ய வேண்டும். இது ஒரு செட். இவ்வாறு இரு கைகளிலும் 20 முறைச் செய்ய வேண்டும்.



பலன்கள்:

கை, மணிக்கட்டு, தோள்பட்டைப் போன்றவற்றில் இருக்கும் அழுத்தம் நீங்கும்.

விரல் தசைகளின் இறுக்கத்தை நீக்கும்.

விரல்களில், சீரான ரத்த ஓட்டம் பாய உதவும்.

விரல்களுக்கு சிறந்த பயிற்சியாக அமைவதால், வலி நீங்கும்.

விரல்களின் நெகிழ்வுதன்மை மேம்படும்.

குறிப்பு: எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.

-செ.சங்கீதா,
படங்கள்: க.மணிவண்ணன் (மாணவப் பத்திரிகையாளர்)

வெள்ளைச் சர்க்கரை என்கிற விபரீதம்! நலம் நல்லது-80 #DailyHealthDose


தொழில்நுட்பம் `வளர்ச்சி’ என்ற பெயரில் உருவாக்கியதுதான் வெள்ளைச் சர்க்கரை என்கிற விபரீதம். எப்படி புகை, மதுவைத் தடைசெய்யப்படவேண்டிய பட்டியலில் வைத்திருக்கிறோமோ, அப்படி வைக்கவேண்டிய பொருள் சர்க்கரை. ஆனால், இதுவோ உணவு அரசியலில் அரிசிக்கும் கோதுமைக்கும் அடுத்த இடத்தைப் பிடித்துவிட்டது. உலக அளவில் சர்க்கரை நோயாளிகள் பட்டியலில் இந்தியர்களை முதல் இடத்துக்குத் தள்ளியதிலும், பெரும்பாலான பெண்களுக்கு வரும் ஆஸ்டியோபொரோசிஸ் நோய்க்கும், பல புற்றுநோய்கள் வளர்வதற்கும் இந்த வகைச் சர்க்கரை அளித்த பங்கு அளவில்லாதது.



நியூட்டனின் புவியீர்ப்புவிசை சிந்தனையிலும், `கறந்த பால் முலை புகா; கடைந்த வெண்ணெய் மோர் புகா; விரிந்த பூ, உதிர்ந்த மலர் மரம் புகா’ என எழுதிய சிவவாக்கியரின் சிந்தனையிலும், அறிவியலே அடித்தளம். நீயூட்டன் தொடங்கிய புள்ளிக்கு நியூகோமனும் ஜேம்ஸ் வாட்டும் வரைந்த கோலங்கள்தாம் நீராவி இன்ஜினில் இருந்து தொழில் புரட்சி வரைக்குமான வளர்ச்சி. அந்த தொழில் வளர்ச்சிதான் இந்தச் சர்க்கரை உருவாக்கக் காரணமானது.



இனிப்பையோ, இனிப்பு உணவுகளையோ நாம் சாப்பிடாதவர்கள் அல்ல. விதவிதமாகச் சாப்பிட்டிருக்கிறோம். தஞ்சை நாயக்க மன்னர் விஜய ராகவ நாயக்கர் எழுதிய `இரகுனாதப்யுதய’ நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் இனிப்புப் பட்டியல் அதற்குச் சிறந்த உதாரணம். கஜ்ஜாயம், அதிரசம், மோதகம், சாரத்லு, மிகடசட்லு (பாசந்தி), பன்னீர் பாயசம், சீரகப் பாயசம், குளிர் பாயசம், திரட்டுப் பால், சீகரணி, தேங்காய்ப்பால்... என லாலா கடையில்கூட கிடைக்காத இனிப்புகள் ஒரு வேளை உணவில் பரிமாறப்பட்டுள்ள குறிப்பு உள்ளது. அவை அத்தனையும் அப்போது வெள்ளைச் சர்க்கரையில் அல்ல... வெல்லத்திலும், பனைவெல்லத்திலும், தேனிலும்தான் செய்யப்பட்டிருந்தன. எந்த் வகையிலும் இந்த இயற்கை இனிப்புக்கு மாற்றாக வருவதற்குத் தகுதியே இல்லாத இந்தச் சர்க்கரை, தொழில்நுட்ப உதவியால் ஒட்டுமொத்தமாக நம் மீது திணிக்கப்பட்டுவிட்டது.



ஏன் தேவையில்லை?

நம் உடல், தனக்குத் தேவைப்படும் சர்க்கரையை தினையில் இருந்தோ, அரிசியில் இருந்தோ, கிழங்கில் இருந்தோ, கீரையில் இருந்தோ எடுத்துக்கொள்ளும். எனவே, தனியே வெள்ளைச் சர்க்கரை என்ற ஒன்று தேவையற்றது. ஆனால் உண்மையில், இன்றைக்கு ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட நேரடியாகவோ, மறைமுகமாகவோ தினமும் 30 முதல் 40 கிராம் வரை வெள்ளைச் சர்க்கரையைச் சாப்பிடுகிறோம்.

கரும்பை, சர்க்கரை ஆலைக்கு மட்டுமே தர வேண்டும் என வெல்லத்தை ஒழித்து, வெள்ளைச் சர்க்கரை ஆட்சி நடத்த தொழில்நுட்பம் வழிவகுத்துவிட்டது. எத்தனையோ பேருக்கு வேலைவாய்ப்பையும், சாப்பிடுகிறவர்களின் உடலுக்கு நன்மையையும் தரக்கூடிய வெல்லம் ஓரம் கட்டப்பட்டுவிட்டது. அதற்குக் காரணங்களாக, `வெல்லம் சீக்கிரம் கெட்டுவிடும். நீரை உள்வாங்கும். உற்பத்தி தரமாக இல்லை’ ஆகியவை சொல்லப்படுகின்றன. ஆனால், உண்மையான காரணம் இதன் பின்னணியில் இருக்கும் உணவு அரசியலும், ஆல்கஹால் அரசியலும்தான்.



இன்று இட்லிக்குப் பதிலாக சோள அவல் புகுத்தப்படுவதும், வடநாட்டு கோதுமைச் சப்பாத்திக்கு மாற்றாக வெள்ளை பிரெட் வருவதும், கனிமச் செறிவு நிறைந்த கல் உப்பை விரட்டிவிட்டு, `அயோடைஸ்டு சோடியம் குளோரைடு’ எனும் ரசாயனத்தை `சாப்பாட்டு உப்பு’ எனத் திணிப்பதும் தொழில்நுட்ப அறிவியல் போர்வையில் உள்ளே நுழைந்திருக்கும் வணிகம்தானே தவிர, வேறு என்ன?

இங்கே `வளர்ச்சி’ பரிணாமமாக அல்லாமல், வன்முறையாகத் திணிக்கப்படுகிறது. காப்புரிமைகளை கடைசி வரை காசாக்க, மனிதம் முற்றிலும் மறுக்கப்படுகிறது. எதிர்த்துக் கேள்வி கேட்கும் திறன் உருவாகாதபடி, நம் கல்வியை அடிமை முறையில் வடிவமைத்துவிட்டார்கள். அன்றைய கிழக்கு இந்திய கம்பெனியை வெள்ளந்தியாக வரவேற்றதுபோல, வெள்ளைச் சர்க்கரையையும் வரவேற்று வீட்டுக்குள் உட்காரவைத்துவிட்டோம். வெள்ளைக்கு அடிமையாகிவிட்டோம். அதன் மூலம், பல தொற்றா நோய்கள் நம்மைத் தாக்க வழிவிட்டுவிட்டோம்.

வெள்ளைச் சர்க்கரை என்பது விபரீதம். ஆகவே அதைத் தவிர்ப்பதே ஆரோக்கியத்துக்கு அழகு.

நலம் நல்லது முடிவுரையாகச் சில வரிகள்...

மனிதனின் உலகில் பல்வேறு விந்தைகளை, உடலின் சூட்சுமங்களை அறியும் ஆற்றலும் முனைப்பும் அளப்பரியது. பிக்காத் துகள் வடிவில் உடம்பில் உள்ள புரதக் கூறில் ஒளிந்திருக்கும் முப்பாட்டனின் கழுகுமூக்கு நுனிக்கான காரணம் முதல் எறும்புக்கண்ணில் எட்டாயிரத்தில் ஒரு பங்காயிருக்கும் வைரஸ் நம் குடலுள் ஒளிந்துகொண்டு உன் புத்திசாலித்தனத்துக்கும் அறியாமைக்கும் காரணமாயிருப்பதுவரை இன்றைய மருத்துவ அறிவியலின் கண்டுபிடிப்புகள் அளப்பரியது.

ஆனால், கருங்குளத்து வற்றிப்போன கம்மாயின் ஓரத்தில் நிற்கும், வருசத்துக்கு 100 நாள் கூலியாக மாற்றப்பட்ட விவசாயி, குப்பனின் சாதாரணச் சளிக்கும் இருமலுக்கும் கூடச் சில நேரத்தில் சரியான மருந்துதரமுடியாத போது அளப்பறிய அறிவியல் இருந்து என்ன பயன்? எனத் தோன்றுகிறது. அதே சமயம் மூன்று நாளாய் நீடிக்கும் இருமலுக்குப் பின்னால், நுரையீரலின் புற்று ஒட்டியிருப்பதையும், லேசானத் தலைவலிக்கு ஆசுவசப்படுத்தும் அரவணைப்பில் மூளைக்குள் முக்கிப்பிதுங்கும் கிளையோமாகட்டியும் அறிய முடியாத அவசரத்தில் நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம் .

தலைவாழை இலையில் இனிப்புப் பரிமாறியக் காலம் மாறிப்போய்ச் சர்க்கரை மாத்திரையான மெட்பார்பினை முதலில் இலையில் பரிமாறும் வல நிலைக்கு ஏற்கனவே வந்து விட்டோம். கருத்தரித்த சந்தோஷத்தில். வளைகாப்பு நடத்திக் கை நிறைய வளையல் ஒலிக் கேட்டு மகிழ வேண்டிய தருணத்தில் "இப்பவுமா இன்சுலின் போட வேண்டும்?" எனச் 'சினையுற்றக் காலத்துச் சர்க்கரை நோய்' எனும் புது வரவில் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்.

என்ன நடக்கின்றது இங்கே? ஏன் இத்தனை அவசர நோய்கள் அவசரக் கதியாய்? "இளமையில் கல்லையும் செரிக்கும் வயது" என்ற நிலை மாறிப்போய் .. இளமையில் எதைத் தின்னால் பித்தம் தெளியும்? எனும் குழப்ப நிலை வந்து குடியேறிய. அவலம் ஏன்?

பயிராக்கலில் துவங்கிப் பாதுகாப்பதில் பக்குவப்படுத்தலில் பதப்படுத்துவதில் பரிமாறப்படுவதில் என அத்தனையிலும் வணிக வன்முறை. "உன் வாயில் ஊட்டப்படும் ஒரு கவளச் சோற்றில் ஒரு பருக்கைக் காசு காப்புரிமையாய் என் வங்கிக்கு வந்து கொண்டே இருக்க வேண்டும்; என் புன்னகைக்கு நீ இக்குப்பையைச் சுவைத்தாக வேண்டும்;" என நம் பசிக்கும் ருசிக்கும் பின் உள்ள வணிகம் அறமற்றதாய் ஆகிப்போனதில்

"உணவெனப்படுவது நிலத்தொடு நீரே" எனப் புறநானூற்றுக் கிழவன் பாடிய வரிகளின் சூழல் காப்புச் சிதைந்து போனது. "அடிச்சட்டி ஆனைப் போல ஏன் ராசா இதுதாண்டாக் கடசி உருண்டை; வாங்கிக்கோடாச் செல்லம்" என நம் குழந்தையை ஒக்கலில் வைத்து ஊட்டிய உணவின் வளமும் நலமும் ஒட்டுமொத்தமாய் ஓரங்கட்டுப்பட்டுவிட்டது.

இனியேனும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். அன்றி விடுதலைக்குக் காந்தி விடுத்த அறைகூவலான உப்புச் சத்தியாகிரகம் போல் உணவுச்சத்தியாகிரகம் இக்காலத்தின் கட்டாயம். அந்நிய உணவு அமிர்தமாய் இருப்பினும், நமக்கு வேண்டாம்.உள் நாட்டுத் தானியங்களை, உள்ளூர்க் கனிகளை, நம் நிலத்துப் புலாலை நம் மரபுத் தின்பண்டங்களை உண்டு உறுதியாய் நலமாய் வாழ்ந்திட முடியும். நம் பாட்டனும் பாட்டியும் அப்படித்தானே இருந்தார்கள். இரசாயனக் கலப்பால் நம் உடலையும் நம் மண்ணையும் மாசுபடுத்தும் வணிகத்தை உற்றுப்பார்த்து ஒதுக்குவோம். நமக்கு மட்டுமல்ல.. நாளை தலைமுறைக்கும் நாளைய நம் இந்தியாவுக்கும் உணவு நல்லது வேண்டும்!

தொகுப்பு: பாலு சத்யா

'வெற்றியை எட்டிப் பிடித்த மூன்றடி முனைப்பு!' - விடைபெற்றார் நடிகர் தவக்களை


வளர்ச்சி குன்றிய ஒருவர், தன் உடல்மொழியால் தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட கால இடைவேளையில் கொடிகட்டி பறந்திருக்கிறார் என்றால், அது நடிகர் தவக்களை தான். ஒய்யாரமாய் வளர்ந்து நின்று, சினிமா வெளிச்சத்தில் தன் திறமைகள் அனைத்தையும் காட்டும் கலைத்துறையில், மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, 3 அடி உயரம் கூட வளராமல், கதாப்பாத்திரங்களின் உடல் மொழியை மட்டும் பேசி, தன் குறைகளையெல்லாம் நிறைகளாக்கி நம்மையெல்லாம் சிரிக்க வைத்த ஒரு நிறை மனிதர்.

உயரம் குறைவாக இருந்தாலும், இவரது வசன உச்சரிப்பும், குழந்தைத் தனமான குரலும் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. நடிப்பைத் தாண்டி, முதன் முதலாக 'பயணங்கள் முடிவதில்லை' படத்தில் 'ஏ ஆத்தா.. ஆத்தோரமா வாரியா' பாடலில் நடனத்தாலும் தன்னை நிரூபித்த தவக்களை, ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் நவாபேட்டையில் 1975, ஜீலை 29-ம் தேதி பிறந்தார்.

"தவக்களையின் இயற்பெயர் சிட்டிபாபு. தாய் சுப்புலட்சுமி, தந்தை விஜயகுமார். தந்தை ஒரு நடிகராக இருந்ததால், தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்னரே, 20-க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் குரூப் டான்சில் நடனமாடியுள்ளார் . முக்கியமாக 1981-ல், ‘நேனு மா அவிடே’ என்ற தெலுங்கு படத்தில், தன் அசாத்திய நடிப்பை வெளிக்காட்டினார். தமிழ் சினிமாவில், ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் சிட்டிபாபுவாகவே அறிமுகம் ஆனார். முதல் படமே தனக்கான அடையாளத்தைத் தந்ததால், குறைகளை நிறைகளாக மாற்றத் தொடங்கினார். தந்தை விஜயகுமார், பொய் சாட்சி படத்தின் துணை நடிகர் முகவராக இருந்ததால், தந்தையைக் காண அருணாசலம் ஸ்டுடியோவிற்கு சென்ற சிட்டிபாபு, நடிகர் குள்ள மணி மூலம் இயக்குநரும் நடிகருமான கே.பாக்கியராஜிடம் அறிமுகம் ஆகியிருக்கிறார். அப்போது தன் மனதில் சிட்டிபாபுவை பதிவு செய்துகொண்ட கே.பாக்கியராஜ், ‘முந்தானை முடிச்சு படத்திற்குத் தேர்வு செய்து, ஏ.வி.எம்.மிற்கு அறிமுகம் செய்தார்.

கே.பாக்கியராஜின் இயக்கத்தில், 1983-ம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு படத்தில், நடிகை ஊர்வசியுடன் ரகளை செய்யும் சிறுவனாக அசத்தியிருப்பார். முந்தானை முடிச்சு படத்தைப் பார்த்த ரசிகர்கள் யாரும், நடிகை ஊர்வசியையும் அவருடன் நடித்த அந்த மூன்று பொடியன்களையும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள். அந்தப் படத்தின் கதாபாத்திரத்தின் பெயர் தவக்களை என்பதால், பின்னாளில் அதுவே அவரின் பெயராக நிலைத்துவிட்டது. இதனைத்தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில், அமிதாப் பச்சன், மோகன்லால், பாலகிருஷ்ணா, போன்ற நடிகர்களுடன் நடித்தார். தமிழில் காக்கிச் சட்டை, ஆண் பாவம், நல்ல பாம்பு, மதுரை சூரன், ஓசை, என் இரத்தத்தின் இரத்தமே, நீங்கள் கேட்டவை, தங்கமடி தங்கம், ‘நாலு பேருக்கு நன்றி, பொண்ணு பிடிச்சிருக்கு, நேரம் நல்ல நேரம், மணந்தால் மகாதேவன் ஆகியவை இவர் நடித்ததில் சில படங்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம், இந்தி என ஆறு மொழி படங்களில் சுமார் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் தவக்களை. தமிழில் கடைசியாக மலையாள இயக்குநர் வினயன் இயக்கிய ‘அற்புதத் தீவு’ படத்தில் நடித்திருந்தார். சன் டி.வி.யின் பைரவி உள்ளிட்ட சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததோடு, நூற்றுக்கணக்கான படங்களுக்கு டப்பிங்கும் பேசியுள்ளார்.

நடிகை அனுராதாவின் தந்தை கிருஷ்ணகுமாரிடம் ஏற்கெனவே நடனம் கற்றிருந்ததால், சினிமாவைத் தாண்டி 1990-ம் ஆண்டு முதல், நடனம் மற்றும் கலை ஆர்வம் உள்ளவர்களுக்காக 'சினி மின்மினி நடனக்குழு' மற்றும் 'பல்சுவை கலைப் பள்ளி' ஆகியவற்றையும் நடத்தி நூற்றுக்கும் மேற்பட்ட திறமையாளர்களை உருவாக்கி உள்ளார்.

சினிமா வாய்ப்புகள் இல்லாத நாட்களில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில்,கலைக்குழு மூலமாக மேடை நிகழ்ச்சிகள் நடத்தி தன்னை தக்கவைத்துக்கொண்டே இருந்தார். இதற்கிடையில் சொந்தமாக 'மண்ணில் இந்தக் காதல்' என்ற படத்தை தயாரித்து வந்தார். அந்தப்படம் தற்போது வரை வெளியாகவே இல்லை. தற்போது இவரது நடனப் பள்ளியில் 37 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

கலை ஆர்வத்தைத் தாண்டி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான இவர், அதிமுக-வின் நட்சத்திர பேச்சாளராகவும் தமிழகம் முழுவதும் வலம் வந்தார். குடும்பத்தில், தன் சகோதரர்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்த தவக்களைக்கு, போதுமணி என்ற மனைவி இருக்கிறார். ‘வாரிசு இல்லை என்ற ஏக்கம் மட்டும் கடைசி வரை அவருக்கு இருந்தது” என்று நினைவு கூறுகிறார் அரவது சகோதரர் பாலகிருஷ்ணன்.



கேரளாவில் மலையாளப் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர், அதிகாலை எழவே இல்லை. 42 வயதான தவக்களைக்கு, தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்திருக்கிறது. வடபழனியில் உள்ள அவருடைய இல்லத்தில்,நடிகர் தவக்களையின் உடல் வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு ஏ.வி.எம் மயானத்தில் இறுதி சடங்கு நடைபெறுகிறது.

- ரா.அருள் வளன் அரசு

Madurai airport all set to fly high

Patronage by passengers and flight services grow hand in hand

Air India was the only operator flying its aircraft out of Madurai three decades ago. However, when the Centre came up with open sky policy in the early 1990s, private players started trickling in.
Till a decade and a half back, only three air services were available out of Madurai airport. Air India was operating to Mumbai with a touchdown in Chennai, and Jet Airways was flying two flights to Chennai.
But, a combination of factors have now seen that the tier II airport has been well-connected, in fact, with more number of flights to Chennai than another other tier II cities of the State.
It has got at least 10 flights to Chennai, with three transit flights to Mumbai and Delhi. Besides, the city has air links to other metros like Hyderabad and Bengaluru.
From Sunday, Jet Airways is offering another flight service to Delhi via Mumbai. This is the only direct flight to Mumbai from Madurai.
In the next three days, IndiGo will add two more services from Madurai – one to Chennai and the other to Delhi via Chennai.
“Ever since the Madras High Court Bench came to Madurai, the number of regular fliers has increased. A lot of advocates are flying in and out,” said S. Rethinavelu, senior president, Tamil Nadu Chamber of Commerce and Industry.
Similarly, sporadic development of small and medium-scale industries in food processing, garments, plastic and rubber sectors has led to an increase in the number of domestic passengers.
“The next generation industrial leaders have realised the comfort of travelling by aircraft, which saves them time,” he added.
However, R. Sriram, a leading travel agent, attributed the growth to the advent of low-cost airlines like Air Deccan. “Till Air Deccan came to Madurai, flying was confined to the affluent or the top business class. The no-frills service that offered the lowest airfares encouraged more new fliers,” he added.
“The development of IT industry in Chennai, Bengaluru and Hyderabad and its main workforce, which is being supplied from the southern districts, also led to a spurt in air passenger growth,” he added.
“There are some IT professionals who travel to their native places for weekends. Besides, a lot of business travel is also taking place after HCL set up its shop in Madurai. It has got some 800 employees here,” he added.
Being a high-priced air sector, Madurai-Chennai sector attracted more flights, and the competition brought the airfare to around Rs. 4,000 with the early birds getting as low as Rs. 1,200.
“IndiGo is likely to set new benchmark for airfare in the sector,” Mr. Sriram said.
More number of flights would be good for Madurai airport and also the people of southern districts, said Airport Director V.V. Rao. He felt that increased competition among airliners would lower fares.
International flights
Though Madurai airport was the last among the airports in Tamil Nadu to get international status, it is poised for a rapid development and harnessing international passengers and cargo movement, especially to the Far East and Gulf countries, in the months to come.
At present, it is connected with Dubai (SpiceJet) and Colombo (SpiceJet and SriLankan Airlines).
“On an average, all the three flights are operated with more than 90% occupancy,” said Mr. Sriram.
The main attraction is the migrant workforce to the Gulf from the southern districts and their visiting families. However, tourism, both ways, is the major factor for air travel from and to Colombo.
Besides, Colombo and Dubai serve as transit points for people here to fly to various other destinations such as the US, Europe and the Far East, he said.
Mr. Rethinavelu blamed the Centre’s inaction in including Madurai airport in bilateral agreement for operating flights to favourite destinations such as Singapore, Malaysia, and Sharjah.
Many foreign airlines have already submitted their proposals to operate flights to Madurai. “But, somewhere it is not getting through. In fact, there is no financial commitment for the Union Government on this aspect. International connectivity will help bring more investors to southern districts, especially for Madurai-Thoothukudi industrial corridor,” Mr. Rethinavelu said.
Cargo
With Customs Department handing over custodianship to Madurai airport, international cargo operation is likely to become a reality shortly. “Air India diverted its new proposal of Madurai-Sharjah operation to Tiruchi as it felt that lack of international cargo operation in Madurai airport will hit it economically. Now, more international flights will evince interest to come here,” he added.
Meanwhile, an Air India source said the airliner had given a proposal to operate flights to Singapore, Malaysia and Sharjah as it was going to acquire a new fleet of 14 aircraft.
“We do not have any more opportunity to offer additional flight services from metros, and hence our concentration will be on tier II cities, and definitely Madurai is one. If our proposal materialises, we will soon operate a daily service to Sharjah and also to Singapore and Malaysia on alternate days,” the official added.
Air India is also planning its domestic service from Madurai to Bengaluru.

HC raps TN govt. for going by State merit list to fill NEET seats

Asks government to move Supreme Court to seek appropriate directions

Coming down on the Tamil Nadu government for not having brought to the knowledge of the Supreme Court that it had filled up 15% of the all-India quota (filled through NEET) medical seats going by the State merit list last year, the Madras High Court in a recent order hoped that the State government would immediately move the apex court and seek appropriate directions on the issue.
The observation of a Division Bench came on a batch of writ appeals filed by medical aspirants, who had appeared in NEET 2016. They had prayed for a direction to the authorities to grant them admission against the vacant seats, which were reverted to the State pool from the 15% all-India Pool. They had filed appeals against a single judge’s order. The Advocate General, however, submitted that after the all-India pool seats were filled by following the NEET-based merit ranking as and when candidates opted out of such admission leaving the seats vacant, the seats would automatically revert to the State pool.
The court was not convinced by the submission. “We express our total unhappiness about the State of Tamil Nadu for not participating in the inquiry before the Supreme Court. It ought to have brought to the notice of the Supreme Court promptly and faithfully the fact that it has filled up the vacant reverted seats from 15% All India Quota by adopting the State criteria of admission, but not based on All India merit ranking of NEET,” a Division Bench comprising Justices Nooty Ramamohana Rao and S.M. Subramaniam observed, while disposing of the appeals.
The Tamil Nadu government “should have invited the attention of the Supreme Court for an authoritative pronouncement” as to which procedure for admission should be followed in such a situation, the Bench said.
“The State of Tamil Nadu, hence, has to share the blame for its inability to comply with the order passed by the Supreme Court on October 6, 2016. Even now it would not be too late, perhaps, for the State to seek the necessary guidance from the Supreme Court,” the judges added. During the hearing of the case, the appellants’ counsel argued even if those seats were reverted to the State pool, the 15% all-India quota seats shall be filled by following the NEET ranking only as per the Supreme Court’s order. The Advocate General, however, stated that the reverted seats were “required to be filled based on the merit ranking of the State, which is the criteria to be adopted for admission against seats available in medical colleges.”
State should have notified SC that it filled the seats from 15% all-India Quota
Madras High Court
 
SPONSORED CONTENT

குறை நம்மிடம்தான்

By எம். அருண்குமார்  |   Published on : 27th February 2017 02:18 AM  |   
ஒரு காலத்தில் நாளிதழ்களை வாங்கிப் படித்து உலக விஷயங்கள் அறிந்தோம். தற்போது செல்லிடப்பேசி மூலம் கூகுள், கட்செவி அஞ்சல், முகநூல், இ-பேப்பர் என்று பல தகவல்கள் நம்மை தேடி வருகின்றன.
அந்த அறிவியல் வளர்ச்சி காரணமாக நமக்கு பல்வேறு பயன்கள் இருந்தாலும், ஒருசில தீமைகளும் இருக்கத் தான் செய்கின்றது.
தகவல் பறிமாற்றம் நொடியில் நடக்கின்றது. உலகில் எந்த மூலையில் எது நடந்தாலும், அடுத்த நொடியே நமக்கு உடனடியாக சமூக வலைதளங்கள் மூலமாக தெரிந்துவிடுகிறது. அந்த அளவுக்கு தகவல் பறிமாற்றம் அதிவேகமாக நடைபெறுகிறது. இது நமக்கு வரமாகும்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி தமிழகத்தில் நடந்த இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டத்திற்கு அனைவரையும் ஒருங்கிணைத்தது முகநூல், கட்செவி அஞ்சல்தான்.
ஆனால் அதே முகநூல், கட்செவி அஞ்சலில்தான் அரசியல்வாதிகள் கீழ்த்தரமாக விமர்சனம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதே சமூக வலைதளங்களில் இதை சாப்பிடாதீர்கள், அதை அருந்தாதீர்கள், இதில் அதை கலக்குகிறார்கள் என்று தகவல் பரப்பி நம்மை குழப்பமடையச் செய்கிறார்கள். உண்மையாகவே எதை வாங்கி பயன்படுத்துவது என்று தெரியாமல் நாம் குழம்பிப்போய்தான் இருக்கின்றோம்.
தற்போது பள்ளி மாணவர்களுக்கு போடப்படும் தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களை உதாரணத்திற்கு எடுத்து கொள்ளலாம்.
தடுப்பூசி போட்டால் நல்லது என அரசும், சில மருத்துவர்களும் கூறுகின்றனர். அதை போட்டுக் கொண்டால் பின் விளைவுகள் ஏற்படும் என சிலர் அதற்கு எதிராக தகவல் பரப்பி வருகின்றனர்.
அரிசி சோறு சாப்பிட்டால் சக்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அதிகரித்துவிடும் என்று கூறி சப்பாத்தி சாப்பிட சொல்கிறார்கள். பிறகு அரிசியும், கோதுமையும் ஒன்று தான். அதனால் அதைவிடுத்து பழம், காய்கறி நிறைய சாப்பிட வேண்டுமென்று கூறுகின்றனர்.
அதை ஆலோசனையாக எடுத்துக் கொண்டு காய்கறி சாப்பிட ஆரம்பித்தால் பூச்சி மருந்து தெளிக்கிறார்கள், இயற்கை உரத்தில் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் காய் சாப்பிடுங்கள் என்று அறிவிக்கிறார்கள். அதை வாங்க ஆர்வமுடன் சென்று விலையை கேட்டால் வாங்க முடியாத அளவுக்கு விலை உச்சத்தில் உள்ளது.
இருந்தாலும் ஆரோக்கியம் தான் முக்கியம் என்று கருதி அதிக விலை கொடுத்து வாங்கி சாப்பிட்டோம். ஆனால் ஆர்கானிக் எல்லாம் என்பது ஏமாற்று வேலை என்று கூறப்படுகிறது.
விளை நிலத்தை ரசாயன உரத்திலிருந்து இயற்கை உரத்திற்கு ஏற்ற நிலமாக மாற்ற வேண்டுமானால் சுமார் 10 ஆண்டுகளாவது ஆகும். அதற்கான செலவும் அதிகம்.
நிலைமை இவ்வாறு இருக்கும்போது ஆர்கானிக் உரம் (இயற்கை உரம்) என்று கூறி இயற்கை உரத்தில் விளைந்த காய்கறி என்று ஏமாற்றுவதாக கூறப்படுகிறது.
காய்கறியில் தான் பிரச்னை, பச்சை தண்ணீரை குடிக்கலாம் என்று பார்த்தால், அது ஆபத்து ஆர்.ஓ. டெக்னாலஜி மூலம் சுத்தப்படுத்திய தண்ணீரை குடிங்கன்னு விளம்பரம் மூலம் நடிகை கூறுகிறார். அதை வாங்கி பயன்படுத்தி சுத்தப்படுத்திய தண்ணீரை குடித்தால் அதில் சத்து இல்லை, எலும்பு உடைந்து போகும்னு வேறு ஒரு குழுவினர் அச்சமடையச் செய்கிறார்கள்.
கடலை எண்ணெயில் கொழுப்பு சத்து அதிகமாக இருக்கின்றது. அதனால் பயன்படுத்தக் கூடாது. சூரியகாந்தி எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட ரீபைன்ட் ஆயில் பயன்படுத்துங்கள், ரைஸ்பிராண் ஆயில் பயன்படுத்துங்கள் என்று கூறுகிறார்கள்.
ஆனால் பெட்ரோல் பிரித்தெடுக்கும்போது கிடைக்கும் எண்ணெயை அதில் கலந்து விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. ஓட்ஸ் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்தியர்களுக்கு ஏற்ற உணவு அதுவல்ல என்ற கருத்தும் நிலவுகிறது.
மனம் நொந்து போய் சோர்வாக அமர்ந்திருக்கும் சமயத்தில் வேறு சிலர், மாடியில் தோட்டம் போட்டால், நமக்கு தேவையான காய்களை நாமே வளர்த்து சாப்பிடலாம். நாட்டு கோழி வளர்த்தா முட்டையும், சிக்கனும் கிடைக்கும். தண்ணீரை கொதிக்க வைத்து செப்பு பாத்திரத்தில் ஊற்றிவைத்து அருந்துங்கள், ஒரு நோயும் வராது என்று கூறுகின்றனர்.
இந்த வாழ்க்கை முறையை பின்பற்றித்தானே கடந்த முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை நாமும், நமது முன்னோர்களும் வாழ்ந்து வந்தோம். அறிவியல் வளர்ச்சியால் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என்று கூறிவிட்டு பிறகு மீண்டும் பழைய முறையையே பின்பற்றுவதுதான் சிறந்தது என்று கூறி அறிவுறுத்துவதை கேட்கும் போது நமது நிலையை நாமே நொந்துக் கொள்வதாக இருக்கின்றது.
எந்த அளவுக்கு நாட்டு நடப்பின் உண்மைகளை அறிய அறிவியல் வளர்ச்சி உதவுகிறதோ, அதே நேரத்தில் தீமைகளையும் சேர்த்தே வளர்க்கவும் அறிவியலை நாம் பயன்படுத்தி வருகிறோம்.
இது அறிவியல் வளர்ச்சியின் குறைபாடு இல்லை. அதை பயன்படுத்தும் மனித சமுதாயத்தின் குறைபாடே ஆகும்.
ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்வி எழும்போது தான் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகின்றன.
ஆனால் அறிவியல் வளர்ச்சி காரணமாக சமூக வலைதளத்தில் ஒருவரால் பதிவிடப்படும் கருத்தை முழுமையாக படித்து பார்க்கக்கூட நமக்கு நேரமில்லை. அதை முழுமையாக படித்து பார்த்துவிட்டு, அது சம்பந்தமாக நம்முடைய மனதில் ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்வியை நம் மனதுக்குள் எழுப்பி அந்த கருத்து சரியானது தானா என தீர ஆராய்ந்து முடிவெடுக்காமலேயே தவறான கருத்தையும், தவறான தகவலையும் நாம் அப்படியே மற்றவருக்கு அனுப்பி விடுகிறோம். இது தான் நாம் செய்யும் தவறாகும்.
அந்தத் தவறையே மற்றவர்களும் செய்கிறார்கள். அதனால் தான் அறிவியல் அழிவிற்கும் வழிவகுத்து விடுகிறது.
முன்பு மாதிரி பேப்பர் மட்டும் படித்துவிட்டு, இந்த முகநூல், கட்செவி அஞ்சல் ஆகியவற்றை மூட்டை கட்டி மூடிவைத்து விட்டு பழைய கருப்பு, வெள்ளை வண்ண செல்லிடப்பேசியை வாங்கி வைத்துக் கொண்டு நிம்மதியாக தூங்கலாம் என்று நினைக்க தோன்றுகிறது.
Ads by ZINC

NEWS TODAY 2.5.2024