Wednesday, March 29, 2017

Mar 29 2017 : The Times of India (Chennai)
Postgraduate med admissions come under HC scanner
Chennai
TIMES NEWS NETWORK


Just a week ahead of this year's postgraduate medical admissions, scheduled to begin on April 4, the Madras high court has directed the Tamil Nadu government to explain whether all unaided medical colleges and deemed universities offering PG medical courses surrender 50% of their seats as mandated by the Supreme Court. Justice N Kirubakaran, passing orders on a writ petition of a PG medicalaspirant, also directed the authorities to specify the seats surrendered, specialtywise, since 2000.

Raising a set of court queries, the judge said Postgraduate Medical Education Regulations, 2000, mandated sharing of PG seats in medical colleges on 50-50 basis between the managements and governments. Pointing out that the provision had not been struck down, he sa id, “Therefore, all non-governmental institutions should have shared 50% of the PG medical seats with their respective state governments, especially in Tamil Nadu. So it has to be explained as to whether the government of Tamil Nadu had received 50% of postgraduate medical seats from unaided institutions from 2000 onward.“

He also sought to know the total number of seats available in PG courses in each medical college in Tamil Nadu, including minority institutions and deemed universities each year, right from the year 2000.

“If non-governmental medical institutions concerned have not [shared seats according to the apex court order] , what action has been taken against them?“ he said. “If no action was taken, why was no action taken against errant nongovernmental medical institutions?“

ஓய்வூதியர்களுக்கான ஆவண சரிபார்ப்பு நேர்காணல் ஏப்.3இல் தொடங்குகிறது

By DIN  |   Published on : 29th March 2017 05:18 PM
 
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாவட்டக் கருவூலங்கள், சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் தங்களது ஆவணங்களை சரிபார்க்க ஏப்ரல், ஜூன் மாதங்களில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும் என ஆட்சியர் மு.கருணாகரன் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

நேர்காணலுக்கு வரும் ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு நேரில் வரும்போது ஓய்வூதியப் புத்தகம், நடைமுறையில் உள்ள சேமிப்புக் கணக்கு எண், வங்கி பற்று வரவு புத்தகம், வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வர வேண்டும். குடும்ப ஓய்வூதியர்களாக இருந்தால் இந்த சான்றுகளுடன் மறுமணம் புரியா சான்றுடனும் வர வேண்டும்.

நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள், வாழ்வு சான்றுக்கான உரிய படிவத்தில் 5 ஆவணங்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். ஓய்வூதிய வங்கி கணக்கு உள்ள கிளை மேலாளர், அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளரிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். நேரில் வர இயலாத குடும்ப ஓய்வூதியர்கள் இத்தகைய ஆவணங்களுடன் மறுமணம் புரியா சான்றும் அளிக்க வேண்டும்.

வெளிநாடுகளில் வசிக்கும் ஓய்வூதியர்கள் வெளிநாட்டில் உள்ள நீதிமன்ற நடுவர், நோட்டரி, வங்கி மேலாளர் அல்லது இந்திய தூதரக அலுவலரிடம் வாழ்வுச் சான்று பெற்று தொடர்புடைய ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.  ஓய்வூதியர்கள் இப்போதைய இருப்பிட முகவரி, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களையும் அளிக்க வேண்டும். ஏப்ரல், ஜூன் மாதங்களில் நடைபெறும்

இந்த நேர்காணலுக்கு வரத் தவறினாலோ, வாழ்வு சான்றுக்கான படிவம் அனுப்பாமல் இருந்தாலோ ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும். சான்றுகளுக்கான மாதிரிப் படிவத்தை www.tn.gov.inkaruvoolam என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேர்காணலுக்கு வர இயலாத நிலையில் உள்ளோர் உரிய படிவத்தில் வாழ்வுச் சான்று அளித்திட வேண்டும்.

நிகழாண்டு முதல் கருவூலங்களுக்கு செல்லாமலேயே ஆதார் எண் பதிவு செய்து நேர்காணை ஜீவன் பிரமான் என்ற இணையதளம் மூலம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆதார் எண் பதிவு செய்தவர்கள் நேர்காணல் வசதியை அரசு இ சேவை மையங்கள், பொது சேவை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம். ஏப்ரல் 3ஆம் தேதி முதல் தொடங்கும் இந்த நேர்காணலானது அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும். ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் அனைத்து ஆவணங்களுடன் நேரில் ஆஜராகிட வேண்டும் என்றார் ஆட்சியர்.

'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' வாங்கும் இடம் பொதுமக்களுக்கு செல்போனில் அறிவிக்கப்படும்

Published on : 29th March 2017 06:35 PM
சென்னை: குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் கொடுத்துள்ள செல்போன் எண்களில் 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' வாங்கும் இடம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டக் குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' வரும் சனிக்கிழமை (ஏப்.1) முதல் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து உணவு வழங்கல் துறை செயலாளர் பிரதீப் யாதவ் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் 2 கோடி குடும்ப அட்டைகள் (ரேஷன் அட்டைகள்) பயன்பாட்டில் இருந்து வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக குடும்ப அட்டைகள் புதுப்பிக்கப்படாமல், ஒவ்வோர் ஆண்டும் உள்தாள் ஓட்டி கால நீட்டிப்பு செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

போலி குடும்ப அட்டைகளை நீக்கி முறைகேடுகளைத் தடுக்கவும் அத்தியாவசியப் பொருள்கள் கொள்முதலில் தமிழக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களைத் தவிர்க்கவும் ரேஷன் ஸ்மார்ட் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது.

குடும்ப அட்டையை ஸ்மார்ட் கார்டு வடிவில் அமைக்க ரூ.320 கோடி ஒதுக்கப்பட்டது. குடும்ப அட்டைதாரர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை ஆதார் அட்டையிலிருந்து இணைக்க வசதியாக ஒவ்வொரு நியாயவிலைக் கடைக்கும் சிறிய ஸ்கேனிங் கருவி வழங்கப்பட்டு கடந்த 5 மாதங்களாக ஆதார் விவரங்கள் குடும்ப அட்டை விவரங்களுடன் இணைக்கப்பட்டன.

குடும்ப அட்டையுடன் ஆதார் விவரங்களை இணைக்கும் பணி 95 சதவீதம் நிறைவடைந்து விட்டது. இதையடுத்து ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் தயாரிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு அவற்றை விநியோகிக்கும் நிலை எட்டப்பட்டுள்ளது.

சென்னையைத் தவிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாள்தோறும் 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்பட உள்ளன. தொடர்ந்து ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும்.

பழைய குடும்ப அட்டைகளுக்கு பதில் ‘ஸ்மார்ட்’ ரே‌ஷன் கார்டுகள் வழங்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 50 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 1-ஆம் தேதி கொரட்டூரில் தொடங்கி வைக்கிறார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதி காரணமாக சென்னையில் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகளை 1-ஆம் தேதி வழங்க இயலாது. அதனால் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 1-ஆம் தேதி ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளது.

ஸ்மார்ட் கார்டு தயாரானதும், ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டை எந்த தேதியில், எங்கு சென்று வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற செய்தி அவரவர் அளித்துள்ள செல்போனில் எண்களில் தெளிவாக தகவல் அளிக்கப்படும். அதன்பிறகு மக்கள் வந்தால் போதுமானது.

செய்தி வராதவர்களுக்கு இன்னும் கார்டு ‘பிரிண்ட்’ ஆகவில்லை என்று அர்த்தம் கொள்ள வேண்டும். ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் அது கிடைக்கும் வரை பழைய குடும்ப அட்டைகளையே 2 மாதத்துக்கு பயன்படுத்தி கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.


ஸ்மார்ட் கார்டில் திருத்தம் இருந்தால் இ.சேவை மையத்துக்கு சென்று திருத்தம் செய்து கொள்ளலாம். ஸ்மார்ட் போனிலும் ஆப் பதிவிறக்கம் செய்து ஓ.டி.பி. நம்பர் மூலம் திருத்தம் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சிலர் புகைப்படம் கொடுக்காதது உள்பட பல்வேறு காரணத்தால் பிரிண்ட் செய்வதில் காலதாமதம் ஆனது. இப்போது அது நிவர்த்தி செய்யப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
எனவே, ஸ்மார்ட் கார்டு கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் பதற்றப்பட வேண்டாம். கார்டு தயாரானதும் உங்கள் செல்லிடைப்பேசிக்கு கண்டிப்பாக மெசெய்திகள் அதன் பிறகு ரே‌ஷன் கடைக்கு வந்தால் போதுமானது என்று கூறியுள்ளார்.

Tuesday, March 28, 2017


தயிர்சாதம், சிங்கப்பூர் காஸ்ட்யூம், மோடி மந்திரம்! - டி.டி.வி.தினகரனின் ஆர்.கே.நகர் ஃபார்முலா




ஆர்.கே.நகரில் போட்டியிடும் சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் குறித்த தகவல்கள் சுவரஸ்யமானவை. தயிர்சாதம், சிங்கப்பூர் காஸ்ட்யூம், மோடி மந்திரம் என தினகரனின் மேனரிஸத்தில் மாற்றங்கள் தெரிவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கின்றனர்.

சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் தயிர்சாதத்துக்கு ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தார், அந்த வி.வி.ஐ.பி. அவருக்கு நெருக்கமானவர்களும் அவருடன் அமர்ந்திருந்தனர். தயிர்சாதம் டேபிளுக்கு வந்ததும் அதை ருசித்துச் சாப்பிட்டார் அந்த வி.வி.ஐ.பி. பில்தொகையைச் செலுத்திவிட்டு வெளியே வந்த வி.வி.ஐ.பி-க்கு, சொகுசு கார் தயாராகக் காத்திருந்தது. அதில் ஏறிப் பறந்தார், அவர். அந்த வி.வி.ஐ.பி, வேறுயாருமில்லை.ஆர்.கே.நகர்த் தேர்தலில் சசிகலா அணி சார்பில் போட்டியிடும் டி.டி.வி.தினகரன்தான். கோடைவெயிலுக்கு முன்புகூட, டி.டி.வி.தினகரனுக்குத் தயிர்சாதம்தான் அவரது ஃபேவரைட் உணவுகளில் ஒன்று என்று சொல்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். மேலும் அவர்கள் கூறுகையில், "தேர்தல் பிரசாரத்தில் படு பிஸியாக டி.டி.வி.தினகரன் இருந்தாலும் தன்னுடைய அன்றாட நடவடிக்கைகளை அவர் மாற்றவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன், கட்சி அலுவலகத்திலும் போயஸ் கார்டனிலும் நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்துவதை வழக்கமாகவைத்துள்ளார். அவரைச் சந்திப்பவர்களை டி.டி.வி.தினகரன் நடத்தும்விதமே வேறுவிதம். எம்.ஜி.ஆர். ஸ்டைலில், சிரித்த முகத்துடன் 'வாங்க... வாங்க... சாப்பிட்டீங்களா' என்றுதான் முதலில் கேட்பார். அதன்பிறகுதான், வந்த விஷயம் பற்றிய பேச்சு.

வருபவர்களை எழுந்துநின்று வரவேற்பது, டி.டி.வி.தினகரனின் தனி ஸ்டைல். மேலும், அவரைச் சந்திக்க வருபவர்களிடமும் நின்றுகொண்டுதான் பேசுகிறார். இதற்காக அவரது இருக்கைக்கு எதிரில் எந்த இருக்கையும் போடப்படுவதில்லை. முக்கியமான வி.வி.ஐ.பி-க்களைச் சந்திக்க, அவரது அலுவலகத்தில் தனிஅறை உள்ளது. அங்குமட்டும் ஷோபா போடப்பட்டிருக்கும். யாரிடமும் ஃபாஸிட்டிவ்வாகவே பேசுவார். தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தின்போதுகூட 'நாமதான் ஜெயிக்கப்போகிறோம்' என்று அடிக்கடி சொல்வார். 

டி.டி.வி.தினகரன், 'அம்மா அரசியல் வழிவந்த மாணவன்' என்ற வார்த்தையை அவர் அடிக்கடி உச்சரிக்கும் சொல். இல்லை மந்திரம்.

அவரது காஸ்ட்யூம் சமீபகாலமாக மாறியிருக்கிறது. மேக்கப்புக்காக தனியாக அழகுக்கலை நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிங்கப்பூர் ஸ்டைல் காஸ்ட்யூமைப் பயன்படுத்துவார். அவர் அணிந்திருக்கும் உடைகளில் சில, பிரதமர் மோடியைப் பின்பற்றுவதைப் போலவே இருக்கும். தேர்தல் வியூகங்கள் ஜெயலலிதாவைப் போலவே அமைத்து அசத்துகிறார் டி.டி.வி.தினகரன்" என்றனர்.
டி.டி.வி.தினகரனைச் சந்திக்க வருபவர்களுக்கு இருக்கைகள் ஏன் போடப்படுவதில்லை என்று அவரது அலுவலகத்தில் பணியாற்றிய ஒருவரிடம் கேட்டபோது, அவர் சொன்ன தகவல் நம்மை ஆச்சர்யப்படுத்தியது.

"சாருக்கு நேரத்தை வீணாக்குவது பிடிக்காது. மேலும், தேவையில்லாமல் பேசுவதையும் அவர் விரும்ப மாட்டார். முகஸ்துதி பாடுபவர்களுடன் எச்சரிக்கையாகவே இருப்பார். சந்திக்க வருபவர்களிடம் உட்காந்து பேசினால் நேரம் அதிகமாகும். இதற்காகத்தான் அவரும் எழுந்துநின்றே பேசுவார். மிகவும் முக்கியமானவர்கள் என்றால் மட்டுமே உட்காந்து பேசுவார்" என்றார்.

- எஸ்.மகேஷ்

“150 மணி நேரத்தில் 50 அறிவிப்புகள்” உ.பி-யை உலுக்கும் ஆதித்யநாத்!

VIKATAN

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தின் முதல்வராக பெரும் கோபத்துக்குச் சொந்தக்காரரான சாது, ஆதித்யநாத் யோகி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். சர்ச்சைகளுக்குப் பஞ்சம் வைக்காத இவர், நாடாளுமன்ற உறுப்பினராக 5 முறை பொறுப்பு வகித்தவர். இந்து மகாசபைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து உள்ளார். முதன்முதலாக 26 வயதில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டபோது ஆரம்பித்த இவரின் அரசியல் பயணம் தற்போது உத்தரபிரதேச முதல்வர் பொறுப்பை வந்து அடைந்திருக்கிறது.

இவரது இயற்பெயர், அஜய் மோகன் பிஸ்ட். இவரது இளமைக் காலம் குறித்து சரியான தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், ராமர் கோவில் விவகாரத்தில் தீவிரமாகச் செயல்பட்டபோது பரவலாக வெளியில் தெரிய ஆரம்பித்தார். அந்த போராட்டங்களில் ஆர்வம் காட்டிய முன்னாள் எம்.பி.யான மஹிந்த ஆதித்யநாத்தை தனது அரசியல் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு அவருடன் இணைந்து செயல்பட்டார். அதன் காரணமாகவும் அவர் மீது கொண்ட அன்பின் காரணமாகவும் தனது பெயரை யோகி ஆதித்யநாத் என மாற்றிக் கொண்டார்.



சர்ச்சைகளை விரும்பி ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்டவர், யோகி ஆதித்யநாத். அதற்காக பல முறை வழக்குகளில் சிக்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இப்போதும் கூட அவர் மீது சில வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. லவ் ஜிகாத், பசுவதை தொடர்பாக இவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சைகளை கிளப்பிய போதிலும், தனது கருத்தை திரும்பிப் பெற்றுக் கொள்ளும் வழக்கம் இவரிடம் இருந்ததில்லை. எப்போதும் கனல் கக்கும் பேச்சுக்களும், செயல்பாடுகளுமே இவரது டிரேட் மார்க்.
உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தலின்போது இவர் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படவில்லை. ஆனாலும், தற்போது பா.ஜ.க.வுக்கு பெரும்பானமை கிடைத்ததால், இவரை முதல்வராக்குவதற்கு எந்த தடையும் பா.ஜ.க.வுக்கு ஏற்படவில்லை. முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர், யோகி ஆதித்யநாத் செயல்பாடுகள் அதிரடியாக இருக்கின்றன. இவரது அதிரடி அறிவுப்புகள் உத்தரபிரதேச மாநிலத்தின் அரசியலை சூடேற்றிக் கொண்டு இருக்கின்றன. இவரின் செயல்பாடுகள் சில கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் சூழலில், பல செயல்பாடுகள் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருவதையும் மறுக்க இயலாது.

ஆனால், இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடுத்த அறிவிப்புக்கு தயாராகி வருகிறார், யோகி ஆதித்யநாத். இதுதான் அவரது ஸ்டைல். முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர், இதுவரை அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்படவில்லை. சட்ட மன்றக் கூட்டமும் நடைபெறவில்லை. ஆனால், பொறுப்பேற்ற 150 மணி நேரத்தில், உத்தரபிரதேச மாநிலத்தில் 50 அதிரடித் திட்டங்களை அறிவித்து உள்ளார். இவற்றில், இறைச்சிக் கடைகளை மூட அதிரடி உத்தரவு, சாலையோர ரோமியோக்களை ஒடுக்க சிறப்பு காவல்படை அமைப்பு போன்றவை சர்ச்சையை கிளப்பி இருக்கின்றன. ஆனால், யோகி ஆதித்யநாத் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயல்பட்டு வருகிறார்.

அதிரடியான 50 அறிவிப்புகள்!

முதல்வர் யோகி ஆதித்யநாத், 50 அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். இந்த அறிவிப்புகள் குறித்த விவாதங்கள் மாநிலம் முழுவதும் பலமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் கூடும் இடங்களில் கூட இந்த அறிவிப்புகள் பற்றி பட்டிமன்றம் நடத்தாத குறையாக விவாதங்கள் நடக்கின்றன.

அந்த அறிவிப்புகள் இதோ...

1. இந்துக்கள் புனிதப் பயணமாகச் செல்லும் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு இதுவரை 50,000 ரூபாய் மானியம் வழங்கப்பட்டுவந்தது. அந்தத் தொகை இனிமேல் ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். 
 
2. உத்தரப்பிரதேச மாநில நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. அந்த சாலைகள் அனைத்தும் செப்பனிடப்படும். மாநிலம் முழுவதும் உள்ள சாலைகள் வரும் ஜூன் 15&ம் தேதிக்குள் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் குழிகள் அற்றதாக மாற்றி அமைக்கப்படும். 

3. பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு சாலைகளிலும் போக்குவரத்தின்போதும் சாலையோர ரோமியோக்களால் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன. அதனால் இந்த ரோமியோக்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு காவல்படை அமைக்கப்படும். 

4. பெண்களைப் பாதிக்கும் ஈவ்&டீசிங் செயல் நடைபெற்றால் அல்லது இது தொடர்பான புகார் ஏதேனும் வருமானால், அதற்கு அந்தப் பகுதியில் உள்ள அதிகாரியே பொறுப்பேற்க வேண்டும். தொடர்ந்து அவர் மீது துறை ரீதியில£ன நடவடிக்கையும் எடுக்கப்படும். 

5. ஒருமித்த கருத்து கொண்ட ஆணும் பெண்ணும் பொது இடத்தில் அமர்ந்து இருந்தால் அவர்கள் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள். 

6. காவல் நிலையத்துக்கு புகார் செய்ய வருபவர்களின் மனுவைப் பெற்றுக் கொண்டு காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக உடனடியாக முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்ய வேண்டும்.
 
7. உத்தரப்பிரதேச காவல்நிலையங்களுக்கு வரக்கூடிய சாமான்ய மக்களிடம் காவலர்கள்பொறுப்பு உணர்வுடன் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும்.

8. காவல்நிலையத்துக்கு புகார் அளிக்க வருபவர்கள் அமர இடம் இருக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான அமரும் இடம் மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டு இருக்க வேண்டும். 

9. காவல்நிலையங்களில் ரிசப்ஷன் அமைக்கப்பட வேண்டும். அதில் ஒரு ஆண் மற்றும் பெண் காவலர்கள் இடம் பெற்று இருக்க வேண்டும். ஒரு இன்ஸ்பெக்டரும் அங்கே இருந்து புகார் அளிக்க வருபவரின் குறைகளைக் கேட்க வேண்டும். 

10. காவல்நிலையங்களில் கூடுதல் வசதிகள் உடனடியாக செய்யப்படும். 

11. காவல் நிலையங்களில் உள்ள பெண் காவலர்களின் வசதிக்காக கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்படும். 
 
12. மாநிலம் முழுவதும் பெண் காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதற்காக பெண் காவலர் தேர்வு நடத்தப்படும். 

13. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளையும் அறியும் வகையில் சைபர் குற்றப்பிரிவு போலீஸார் மூலமாக புளூப்ரிண்ட் தயாரிக்கப்படும். இதன் மூலம் மாநிலத்தில் எந்த இடம் எங்கு இருக்கிறது என்பதை உடனடியாக அறிய வசதி செய்யப்படும். 

14. மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் பான், குட்கா போன்ற பொருட்களுக்கு உடனடியாக தடை விதிக்கப்படுகிறது. 

15. மாநிலம் முழுவதும் இருக்கும் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது. 

16. அரசு அலுவலகங்கள் அனைத்தும் சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் பராமரிக்கப்படும். 

17. அரசு அலுவலகங்களில் இனி ஃபைல்கள் காத்திருப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. உடனடியாக அனைத்துக் கோப்புகளும் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும். 

18. மக்களின் குறைகளை விரைந்து தீர்க்கும் வகையில் கூடுதல் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

19. அரசு அலுவலகங்களில் இனிமேல் ஊழியர்கள் தாமதமாக வர முடியாது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் வருகைப் பதிவுக்காக பயோமெட்ரிக் எனப்படும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி பொருத்தப்படும். 

20. அனைத்து அரசு அலுவலகங்களின் அறைகளிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்படும். 

21. அமைச்சர்கள் தங்களின் துறை சார்ந்த அலுவலகக் கோப்புகள் எதையும் வீடுகளுக்கு எடுத்துச் செல்லக் கூடாது. 

22. அமைச்சர்கள் தங்களின் துறை சார்ந்த பணிகள் குறித்து ஒவ்வொரு வாரமும் அறிக்கை தயார் செய்து தாக்கல் செய்ய வேண்டும்.
 
23. அனைத்து அமைச்சர்களும் தங்களின் துறை குறித்து முழுமையாக அறிந்து வைத்து இருக்க வேண்டும். இது தொடர்பாக அனைவருக்கும் மூன்று நாட்கள் கருத்தரங்கம் நடத்தப்படும். அதில் துறை சார்ந்த விவரங்கள் குறித்துப் பேச வேண்டும். 

24. ஒருவேளை மின்சார டிரான்ஸ்ஃபார்மர்கள் எங்காவது எரிந்துவிட்டால், சம்பவ இடத்துக்கு அதிகாரிகளே நேரில் செல்ல வேண்டும். அவர்களின் முன்னிலையிலேயே அதனை மாற்றுவதற்கான பணிகள் நடக்க வேண்டும். 

25. பசுக்கள் திருடப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

26. அனுமதி பெறாத இடங்களில் இறைச்சியை விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. அவை உடனடியாக மூடப்படும். 
 
27. அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும். அவசியம் இருந்தால் மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படும். 

28. அதிகாரிகளும், அமைச்சர்களும் தங்களது சொத்துப் பட்டியலை அளிக்க வேண்டியது அவசியம். 

29. சொத்துப் பட்டியலை அடுத்த 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். 

30. அமைச்சர்களும், அதிகாரிகளும் தினமும் 10 மணிக்குள் அலுவலகத்துக்கு வந்துவிட வேண்டும். 

31. பா.ஜ&வின் தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் அதிகாரிகள், தங்களுடைய துறை சார்ந்து மக்கள் நலத் திட்டங்களை தயாரிக்க வேண்டும்.
 
32. நவராத்திரி, ராமநவமி போன்ற விஷேச தினங்களில் 24 மணி நேரமும் மின்சாரம் இருக்குமாறு அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும். 

33. நவராத்திரியின் போது பக்தர்கள் தங்களுடைய பிரார்த்தனைகளை மேற்கொள்ள தேவையான அனைத்து வசதிகளையும் அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும்.

34. ராமநவமி விழாவின்போது, அயோத்தியாவில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை அதிகாரிகள் முடிந்த அளவுக்கு நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். 

35. ஒவ்வொரு கிராமத்திலும் மின் வசதி கிடைப்பதற்கு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

36. அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் தங்களது பணி நேரத்தில் கட்டாயமாக மருத்துவமனையில் இருக்க வேண்டும்.

37. அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில், சாமான்ய மக்கள் மருந்துப் பொருட்களை வாங்கும் வகையில் 3,000 புதிய மருந்தகங்கள் தொடங்கப்படும். 

38. சுகாதாரத் துறை சார்பாக தனியாக ஆப் உருவாக்கப்படும். இதன் மூலம், நோயாளிகள் தங்கள் குறைகளை தெரியப்படுத்த வசதி கிடைக்கும். 

39. அலாகாபாத், மீரட், ஆக்ரா, கோரக்பூர், ஜான்சி உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும். 

40. விவசாயிகள் விளைவிக்கும் கோதுமையின் 100 சதவிகிதத்தையும் அரசே நியாயமான விலைக்கு கொள்முதல் செய்யும். 

41. சட்டிஸ்கரில் விவசாயிகளின் விளை பொருட்களை கொள்முதல் செய்வது போன்ற நடைமுறை உத்தரப்பிரதேசத்திலும் பின்பற்றப்படும்.

42. கரும்பு விவசாயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்த ஆலைகள் 14 தினங்களுக்குள் அதற்கான பணத்தை கொடுக்க வேண்டும்.

43. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களும் மீண்டும் செயல்படத் தொடங்கும். 

44. நல்ல முறையில் தரமான வகையில் பணிகளைச் செய்பவர்களுக்கு மட்டுமே அரசின் காண்ட்ராக்ட் பணிகள் செய்ய வாய்ப்பு கொடுக்கப்படும்.

45. வெள்ளம், வறட்சி போன்ற இக்கட்டான காலகட்டங்களில் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் கிடைக்கச் செய்ய வேண்டும். 

46. பாரதப் பிரதமரின் அவாஸ் யோஜனா திட்டத்தின் பணிகள் அனைத்தும் மாநில வீட்டுவசதி வாரியத்தின் மூலமாகவே செய்யப்படும்.

47. கல்வித் துறையைப் பொறுத்தவரையிலும், ஆசிரியர்கள் தாங்கள் கற்பிக்கும் இடங்களில் குரு&சிஷ்யன் உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

48. ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும்போது டி ஷர்ட் அணிந்து வரக்கூடாது. 

49. ஆசிரியர்கள் பள்ளிகளிலும் வகுப்பறைகளிலும் அவசியம் இல்லாமல், செல்போன்களை பயன்படுத்தக் கூடாது.

50. அனைத்து கிராமங்களும் சாலை வழியாக இணைக்கப்படும். சாலை வசதி இல்லாத எந்த கிராமமும் இருக்கக் கூடாது. 
 
இந்த அதிரடி அறிவிப்புகளால் பொதுமக்கள் இடையே சூடான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தச் சூழலில், யோகி ஆதித்யநாத் நல்லவரா? கெட்டவரா? என்கிற விவாதமும் பொதுமக்களால் எழுப்பப்பட்டு வருவதே உண்மை.

பதில் சொல்லுங்கள் முதல்வர் யோகி ஆதித்யநாத்!

-ஆண்டனிராஜ்

Tirumala Tirupati, like you’ve never seen before

By Anushree Madhavan | Express News Service

Last Updated: 28th March 2017 09:25 AM



An inside view of the Tirumala Temple; (below) young boys undergoing training at the veda patashala in Dharmagiri; Rajendra Srivathsa Kondapalli

CHENNAI: A year-and-a-half ago documentary filmmaker Rajendra Srivathsa Kondapalli was working on a show, India’s Mega Kitchens for National Geography India, where he was to shoot the making of prasadam at the kitchens of Tirumala Tirupati Devasthanam (TTD).

It was then that he realised that there was much more to TTD than just the darshanam and the ladoos. Also, this temple was always an idea for a documentary for Rajendra since he came across an article in 2008. “As a devotee, I have been there many times, but it was only in 2008 when I read an article about Tirupati that I wanted to make a full-fledged documentary about TTD,” says the filmmaker who has more than 20 years of experience in the field. 



His documentary, Inside Tirumala Tirupati, was televised worldwide on Monday and he was ecstatic as it was the first time in the history of Nat Geo that a TV show got so many likes on FB. “The promos were out a few days ago and it received more than 12,000 views.

This means two things — one that this is the first documentary shot inside the temple and, two, there are so many devotees of lord Venkateshwara,” he smiles.

As in most temples across the country, photography and videography is prohibited inside TTD and to get permission to shoot and gain access to the higher authorities as well as inside the temple was indeed a herculean task for Rajendra and his team of six.

“Tirupati is one of the most visited places on Earth and nobody has ever done something like this. All shooting is done by their TV channel SVBC, and it was hard for us to make them agree. I met with many authorities and explained what my idea was,” he says.

 No doctors at Collectorate to issue disability certificate

 Fallout of confrontation at Tiruvannamalai Medical College Hospital

Differently abled people visiting Madurai Collectorate on Mondays to get disability certificates from doctors have been returning disappointed for the past three weeks since the designated doctors from Government Rajaji Hospital have refused to make the weekly visit to the Collectorate

Citing GRH doctors, officials from the District Differently abled Welfare Office, said the doctors had made the decision as a result of a confrontation between differently abled people and doctors at Government Tiruvannamalai Medical College Hospital in January over issuance of disability certificates.

N. Jayakumar, a resident of Harveypatti near Tirupparankundram, said he had been bringing his autistic child to the Collectorate for the past two weeks but there were no doctors. “There is no proper communication from the officials as well,” he said. A senior official from the district administration said the system of GRH doctors visiting Madurai Collectorate every Monday was introduced in 2012 to ease the procedure for obtaining disability certificate. “Monday being the public grievance day, a large number of differently abled people visit Collectorate with their grievances. Hence, it was thought it will be easier if the doctors are also available to issue disability certificate,” the official said.
He pointed out that the differently abled people could otherwise visit a ward designated for this purpose in the GRH, where a team of doctors will be available every Thursday. “Since the doctors have stopped coming here, we are asking the differently abled people to visit the GRH on Thursday. However, only 70 or 80 people can be examined in a day. People will therefore have to wait longer to get the certificate,” he added.

When contacted, Collector K. Veera Raghava Rao said the issue had been taken up with the GRH Dean and assured that the doctors would be available on the Collectorate premises from next week.
A senior official from GRH, however, said that the decision to stop the Monday visits to Collectorate was not merely because of the Tiruvannamalai incident. “There are practical difficulties. There are certain disabilities, like hearing impairment, which cannot be checked properly without adequate facilities and equipment which are not available at the Collectorate,” he said.

He added that in most of the districts, including Tiruvannamalai, the check up for disability certificates happened only in the hospital premises.

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...