Thursday, June 1, 2017

மினிமம் பேலன்ஸ் கணக்கிடுவது எப்படி?ஓர் அலசல் !!

வங்கிக் கணக்கில் தினமும் ரூ.5000 வைத்திருப்பது அவசியமா?
வங்கிக் கணக்கில் 'குறைந்த சராசரி இருப்புத்' தொகையாக
ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1000 வரை வைத்திருக்க வேண்டியதை எஸ்பிஐ வங்கி கட்டாயமாக்கியுள்ளது.

இதே சில தனியார் வங்கிகள் உதாரணமாக ஐசிஐசிஐ வங்கியில் குறைந்த சராசரி இருப்புத் தொகையாக ரூ.10 ஆயிரம் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். தவறுவோருக்கு அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*இந்த விதிமுறை பலரால் சரியாக புரிந்து கொள்ளப்பட்டாலும், கணக்கு வைத்திருக்கும் சிலருக்கு இது மிகுந்த குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது* அதாவது, வங்கிக் கணக்கில் எப்போதுமே 5 ஆயிரம் ரூபாய் இருப்பு இருக்க வேண்டுமா? ஒரு நாள் கூட 5 ஆயிரத்தில் இருந்து 1000 ரூபாய் எடுத்துவிட்டாலும் அபராதம் விதிக்கப்படுமா? குறைந்த மாத ஊதியம் பெறுவோர் இதனை எப்படி எதிர்கொள்வது என்ற ஏராளமான கேள்விகள் எழுகின்றன.

⛱ முதல் விஷயம் என்னவென்றால், குறைந்த *சராசரி இருப்புத் தொகை ரூ.5000 என்பது சரியாக புரிந்து கொள்ளப்படாததே* இதற்குக் காரணம்.
அதாவது குறைந்த சராசரி இருப்புத் தொகை என்றால், *ஒரு மாதம் முழுவதும் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தின் சராசரி இருப்புத் தொகையாகும்.* வங்கிக் கணக்கில் ஒவ்வொரு நாளும் இருக்கும் பணத்தை அதாவது *30 நாளும் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தைக் கூட்டி அதனை 30 அல்லது 31 ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவுத் தொகைதான் குறைந்த சராசரி இருப்புத் தொகை*யாகும். இந்த ஈவுத் தொகை ரூ.10,000 ஆக இருந்தால், மாதக் கடைசியில் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.2000 அல்லது அதற்கும் கீழ் இருப்பு குறைந்தாலும், எந்த அபராதமும் விதிக்கப்படாது.

உதாரணத்துக்கு..
.
உங்களது சம்பளம் 30 ஆயிரம் ரூபாயாக இருந்து, *மாதத்தின் முதல் நாளில் இருந்து 5 நாட்களுக்கு அந்த 30 ஆயிரத்தை எடுக்காமல் விட்டுவிட்டால் ஒவ்வொரு நாளும் உங்கள் வங்கிக் கணக்கில் 30 ஆயிரம் ரூபாய் இருந்ததாகக் கணக்கில் எடுக்கப்படும். எனவே, 30 ஆயிரம் ரூபாய், 5 நாட்கள் வைத்திருந்ததால் 5 ஆல் பெருக்கப்படும். அது ரூ.1,50,000/-. இந்த தொகையை 30 ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவுத் தொகை ரூ.5000. எனவே, அந்த மாதத்தின் குறைந்தபட்ச சராசரி இருப்புத் முதல் 5 நாட்களிலேயே பூர்த்தியாகிவிடுகிறது.* அதன்பிறகு நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.5000க்கும் குறைவாகப் பணம் வைத்திருந்தாலும் அதற்காக அபராதம் வசூலிக்கப்படாது.

இந்த அடிப்படையில் தான் குறைந்தபட்ச இருப்புத் தொகை கணக்கிடப்படுகிறது. எனவே, *ஒவ்வொரு நாளும் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை* என்பது புரிந்து கொள்ளுங்கள். உங்கள் சம்பளத்தின் அளவைப் பொருத்து ஓரிரு நாட்கள் கூடுதலாகவோ, குறைவாக பணத்தை வைத்திருந்தாலே அபராதத்தைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை.

அதோடு, *மாநகராட்சிகளில் இயங்கும் வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே ரூ.5000 என்பது குறைந்த சராசரி இருப்புத்தொகை அவசியம். நகராட்சி மற்றும் கிராமப் புற வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000 என்பதுதான் குறைந்த சராசரி இருப்புத் தொகையாகும்.*

இது தவிர, வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கும் அதிகமாக இருப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் *சில சலுகைகள் வழங்கப்படுகிறது.*

அதாவது, எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.10ம், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஆனால், வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் இருப்பு இருந்தால், அவர்கள் *எஸ்பிஐயில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்காது.* அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருப்பு வைத்தால், பிற வங்கி ஏடிஎம்களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் பிடிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தி சென்னை சில்க்ஸில் பயங்கர தீ: தீயை அணைக்க நாள் முழுதும் போராட்டம்














சென்னை: சென்னை, தி.நகரில் உள்ள, பிரபல ஜவுளி நிறுவனமான, சென்னை சிலக்ஸ் கட்டடத்தில், நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.



தீ மளமளவென பரவியதில், அக்கட்டடத்தில் உள்ள ஏழு மாடிகளும் பற்றி எரிந்தன. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள துணிகள், தங்க நகைகள், தீயில் கருகின. கட்டுக்கடங்காத தீயை கட்டுப்படுத்த, தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் நாள் முழுவதும் போராடினர்.

சென்னை, தி.நகர், உஸ்மான் சாலையில், ஏழு மாடிகள் கொண்ட பிரம்மாண்ட கட்டடத்தில், குமரன் தங்க மாளிகை என்ற நகை கடையும், சென்னை சில்க்ஸ் என்ற ஜவுளி கடையும் செயல்பட்டு வருகின்றன.இரண்டு கடைகளுக்கும், தனித்தனி நுழைவு வாயில்கள் உள்ளன. ஒரே கட்டடத்தில், இரண்டு கடைகள் இருந்த போதிலும், குமரன் தங்க மாளிகைக்கு என, தடுப்பு அமைக்கப்பட்டு, இரண்டு மாடிகளில் நகை கடை செயல்பட்டு வந்தது.

எனினும், வாடிக்கையாளர்கள், இரண்டு கடைகளுக்கும் செல்வதற்கு ஏற்ப, உட்பகுதியில் வாயில்கள் உள்ளன. அடித்தளத்தில் தேவையற்ற, மரச்சாமான்கள், 'ஜெனரேட்டர்' மற்றும் டீசல் பேரல்கள் இருந்துள்ளன.

மொட்டை மாடியில், கல்நார் கூரையால் வேயப்பட்ட, 'கேன்டீன்' உள்ளது. அங்கு, தங்கம் மற்றும் ஜவுளி கடை ஊழியர்களுக்கு, காலை மற்றும் மதிய உணவு தயாரிக்க, 14 பேர் தங்கி வேலை பார்த்து வந்தனர். அவர்களின் வசதிக்காக, சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களும் இருந்தன. இரவு காவலாளிகளும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை, 4:00 மணியளவில், குமரன் தங்க மாளிகை கடைக்கு கீழே, அடித்தளத்தில் திடீரென தீ பற்றி எரிந்து உள்ளது. தீ மளமளவென பரவியதால், தங்கம் மற்றும் ஜவுளி கடை என, ஏழு மாடிகளும் கொளுந்துவிட்டு எரிந்தன.இதனால், மொட்டை மாடியில் உள்ள, கேன்டீனில் இருந்தோர், உயிர் பயத்தில் அலறினர். செய்வதறியாது தவித்த, இரவு காவலாளி, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளார். உடனடியாக, தீயணைப்பு வீரர்கள், தி.நகர், அசோக் நகர் என, நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும், 'ஸ்கை லிப்ட்' எனப்படும் இயந்திர ஏணியுடன் கூடிய வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அப்போது, ஏழு மாடிகளிலும் இருந்த, பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், ஜவுளிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சாம்பலாகி கொண்டு இருப்பதை பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர்.பின், ஆறு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

தகவல் அறிந்து, சென்னை கலெக்டர் அன்புச்செல்வன், தீயணைப்பு துறை இயக்குனர், ஜார்ஜ், சென்னை போலீஸ் கமிஷனர், விஸ்வநாதன், கூடுதல் கமிஷனர், சங்கர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின், தி.நகர் உஸ்மான் சாலை முழுவதும், போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அங்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தின் அருகே உள்ள கட்டடங்கள் மற்றும் வீடுகளில் இருந்தோர், உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

அதன்பின், தீயணைப்பு வீரர்கள், போலீசார், மெட்ரோ ரயில் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். புகை மூட்டம் அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின், ஆக்சிஜன் உதவியுடன், தீயை அணைக்க முயன்றனர்; அதுவும் பலன் அளிக்கவில்லை.பின், அதிநவீன இயந்திரம் வாயிலாக, கட்டடத்தின் பின்பக்க சுவரில் துளையிட்டு, தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. 'ஸ்கை லிப்ட்' வாகனம் வாயிலாக, கட்டடத்தின் பக்கவாட்டு பகுதிகளில், பல இடங்களில் துளையிடப்பட்டு, அதன் வழியாக தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. அப்போதும், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

பின், போலீசார், தண்ணீரை அதிவேகமாக பீய்ச்சி அடிக்க கூடிய, 'வஜ்ரா' வாகனம் வாயிலாக, தீயை அணைக்க முயன்றனர். அப்போதும், தீ கொளுந்துவிட்டு எரிந்தபடி இருந்தது. கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் அபாயமும் ஏற்பட்டது. மொட்டை மாடி கேன்டீனில் இருந்த சிலிண்டர்களும் வெடித்து சிதறின.

இதனால், தீயணைப்பு வீரர்கள், கட்டடத்தின் மேல் பகுதியிலும், தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மற்ற கட்டடங்களிலும் தீ பரவாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால், தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் கடுமையாக போராடினர்.தி.நகர் முழுவதும், புகை மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இச்சம்பவம் குறித்து, மேற்கு மாம்பலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தீயணைப்பு வீரர்கள் திணறல்

* தீயணைப்பு பணியில், அதிநவீன வசதி கொண்ட, இரு ஸ்கை லிப்ட் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன

* ஐம்பது தீயணைப்பு வாகனங்களுடன், 200 தீயணைப்பு வீரர்கள், தீயுடன் போராடினர். அவர்களுடன், போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் என, ஏராளமானோர் இருந்தனர்

* தீயணைப்பு வீரர்களுக்கு, அதிநவீன வசதிகள்

கொண்ட உபகரணங்கள் இல்லை. போதிய கவச உடைகள் கூட இல்லாததால், தீயணைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக, தி.நக ரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அங்குள்ள மேம்பாலத்திற் கும், 'சீல்' வைக்கப்பட்டு உள்ளது சென்னை குடிநீர் வாரிய லாரிகளில் இருந்த தண்ணீர், தீ விபத்துக்கு பயன்படுத்தப்பட்ட தால், தி.நகரில் குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது

* தீ விபத்துக்கான காரணம் தெரியாமல், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் திணறி வருகின் றனர். கட்டடத்தின் அடித்தளத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, டீசல் பேரல்கள் தீ பற்றி, இந்த விபத்து நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது

* இரவு முழுவதும் தீ அணைப்பு பணிகளை மேற்கொள்ள, உஸ்மான் சாலையில், கூடுதல் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. மின் தடை நேர்ந்தால் சமாளிக்க, ஜெனரேட்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன

* புகை மூட்டம் காரணமாக, மூச்சுத் திணறல் ஏற்பட்டு வருவதால், அருகில் வசிக்கும் வீடுகளில் உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதி யோர்கள், உறவினர் வீடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

தாமதமே காரணம்!

தீ விபத்து பற்றி தெரிய வந்ததும், காலை, 4:00 மணிக்கெல்லாம், தீயணைப்பு துறைக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 15 நிமிடங்களில், தீயணைப்பு படை வீரர்கள் வந்து விட்டனர். 'பேஸ் மென்ட்' எனப்படும் அடித்தளத்தில் தான், தீ பிடித்திருப்பதாக, அவர்களுக்கு தெரிவிக்கப் பட்டது.ஆனால், தீ எங்கிருந்து வருகிறது என்பதை கண்டுபிடித்த பிறகே, அணைப்புநடவடிக்கையில் இறங்க முடியும் என, காலம் கடத்தி விட்டனர். எங்கிருந்து தீ வருகிறது என, அவர்கள் ஆராய்வதற்கே, ஒன்றரை மணி நேரம் போய் விட்டது.

அதற்குள் தீ பரவத் துவங்கியதை பார்த்ததும், அணைக்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால், அவர்கள் கொண்டு வந்த வண்டியில் போதுமான தண்ணீர் இல்லை. வெளியிடங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரலாம் என்றால், டீசல் இல்லை என இழுத்தடித்துள்ளனர்.

இதற்கிடையில், சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அவர் முதல் தளம் வரை சென்று பார்த்த பிறகு தான், போலீஸ் படையை வரவழைத்துள்ளார்.
அதன் பிறகே, தீயணைப்பு நடவடிக்கை துரிதமாகி இருக்கிறது.

தகவல் கிடைத்து, சம்பவ இடத்திற்கு வந்த நேரத்திலேயே, தீயை அணைக்க முயன்றிருந்தால், இந்தளவுக்கு போராட வேண்டிய அவசியம், தீயணைப்பு படையினருக்கு ஏற்பட்டிருக்காது என
கூறப்படுகிறது.

தீ தடுப்புக்கு அடுக்கு மாடிகளில்இருக்க வேண்டிய வசதிகள் என்ன

தி.நகரில் உள்ள, சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, அடுக்குமாடி கட்டடங்களில் இருக்க வேண்டிய, பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கேள்வி எழுந்துள்ளது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வின் விதிமுறைகளின்படி கட்டடங்களில் கடைபிடிக்க வேண்டிய தீ தடுப்பு வசதிகள்:

* தீ விபத்து ஏற்பட்டால், மீட்புக்கு தீயணைப்புத் துறையின் லேடர் வாகனம் வந்து செல்லும் அளவுக்கு, பக்கவாட்டில் காலி இடம் இருக்க வேண்டும்

* அவசர காலங்களில், கட்டடத்தில் உள்ளோர் உடனே வெளியேற, வெளிப்புறமாக தனி படிக்கட்டுகள் அமைக்கப்பட வேண்டும்

* கட்டடத்தின் மேல் தளத்தில், தீ விபத்தின் போது பயன்படுத்த, பிரத்யேகமான தண்ணீர் தொட்டி அமைத்து, போதிய அளவு நீர் இருப்பு வைக்க வேண்டும்

* ஒவ்வொரு தளத்திலும், தீ விபத்தின் போது தண்ணீரை பீய்ச்சி அடிப்பதற்கான, 'ஹோஸ்' குழாய் வசதி இருக்க வேண்டும்

* அறைகள், நடைபாதைகளில் தீ விபத்து ஏற்பட் டால், அதை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைப்பதற் கான, 'ஸ்பிரிங்க்சர்'கள் அமைப்பது அவசியம்

* அடுக்குமாடி கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் உடனே எச்சரிக்கும், புகை கண்டுபிடிப்பான் கருவி அறைகள், நடைபாதைகளில் அமைக்க வேண்டும்

* கட்டடத்தின் உயரம், 45 மீட்டருக்கு மேல் சென் றால், அவசர கால மீட்பு பணிகளுக்கு கட்டடத்தின் மேல் பகுதியில், 'ஹெலிபேட்' அமைக்கலாம்.

சி.எம்.டி.ஏ.,வின் முழுமை திட்ட அடிப்படையிலான வளர்ச்சி விதிகளில், இந்த பாதுகாப்பு அம்சங்கள் வலியுறுத்தப்பட்டு உள்ளன.

மீட்பு பணிகள் மும்முரம்

வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர், உதயகுமார் கூறுகையில், ''இந்த தீ விபத்தில், உயிர் இழப்புகள் எதுவும் இல்லை. தீயை முழுவதும் கட்டுக்குள் கொண்டு வர, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்,'' என்றார்.

மருத்துவ முகாம்

நிதியமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது: இந்த கட்டடத்தில், தீ தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு இருந்தனவா, விதிமீறல் கட்டடமா என்பது குறித்து, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. இப்பகுதி வாசிகளுக்கு, மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தீ முழுவதும் கட்டுப்படுத் தப்பட்ட பின், கட்டடம் பயன்பாட்டிற்கு உகந்ததா என்பது பற்றி, ஆய்வு செய்த பின்னரே, உரிமை யாளரிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தீயணைப்புத்துறை மீது சென்னை சில்க்ஸ் புகார்

'தீயணைப்புத்துறையின் அலட்சியத்தால், கட்டடத் தின் கீழ் தளத்தில் ஏற்பட்ட தீ, மற்ற தளங்களுக்கும் பரவி, பெரிய விபத்தானது' என, சென்னை சில்க்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர், மாணிக்கம் கூறியதாவது:கட்டடத்தின்

அடித்தளத்தில், பரிசு பொருட்கள் இருப்பு வைக்கும் இடத்தின் அருகே, அதிகாலை, 3:45 மணிக்கு புகை வர ஆரம்பித்தது. தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தோம்; 4:00 மணிக்கு தீயணைப்பு வாகனங்கள் வந்தன. புகை அதிகம் வந்த, கட்டட அடித்தளத்தை காண்பித்தோம்.

தண்ணீர் அடிக்காமல், 'தீ எரியும் இடத்தை காட்டுங் கள்; அங்கு தான் தண்ணீர் அடிப்போம்' என, தீயணைப்பு வீரர்கள் கூறினர்.வண்டியில், தண்ணீர் குறைவு; டீசல் பற்றாக்குறை; நான்கு ஆக்சிஜன் சிலிண்டர்களில் ஒன்று மட்டுமே வேலை செய்தது போன்ற, ஒருங்கிணைப்பு இல்லாத தால், மீட்பு பணிகள் தாமதமாயின.

காலை, 6:00 மணிக்கு தான், ஜவுளிகள் இருக்கும் இடத்துக்கு, தீ பரவியது. அப்போதும், தண்ணீரை அதிகம் பீய்ச்சி அடிக்காமல், தீயணைப்பு வீரர்கள் அலட்சியம் காட்டியதால், கட்டடத்தின் அடுத்தடுத்த தளங்களுக்கும் தீ பரவியது. பகல், 12:00 மணிக்கு, போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன், நேரில் வந்து ஆய்வு செய்தார். அவரிடம், தீயணைப்புத்துறை யின் அலட்சிய போக்கு குறித்து புகார் செய்தோம்.

அவர், மற்ற அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு களை பிறப்பித்த பிறகே, அதிக எண்ணிக்கை யில் தீயணைப்பு வாகனங்களும், வீரர்களும் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டன.ஆரம்ப நிலையிலேயே கட்டுப் படுத்தி இருக்க வேண்டிய தீ, பிற இடங்களுக் கும் பரவ தீயணைப்புத்துறையின் அலட்சியமே காரணம். அவர்களின் செயல்பாடு வருத்தம் அளிக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புகையால் குழந்தைகளுக்கு ஆபத்து: அலட்சியம் வேண்டாம்

''புகையால் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம்,'' என, தமிழக பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர், டாக்டர் இளங்கோ கூறினார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:

சென்னையில், ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தால், அதிக புகை வெளியேறுகிறது. நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடையில் தீ விபத்து நடந்திருப்பதால், வேதிபொருட்கள் மற்றும் நச்சு வாயு, 5 கி.மீ., வரை பரவி இருக்கும்.இதை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு, மூச்சு திணறல், நுரையீரல் பாதிப்பு, அடிக்கடி சளி தொல்லை, போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பெரியவர்களுக்கு தலைவலி, மயக்கம், கண் எரிச்சல், காது பிரச்னை, இருமல் போன்றவை உடனே வரலாம். நுரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா, ஒவ்வாமை, சளியுடன் ரத்தம் வரு தல் போன்ற நீண்ட கால பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.இதுபோன்ற பாதிப் புள்ளோர், உடனே டாக்டரை அணுகி, உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு டாக்டர் இளங்கோ கூறினார்.

காற்று மாசு ஆய்வு

புகையால் ஏற்பட்ட காற்று மாசு அளவிடும் பணியை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டது.இதுகுறித்து, வாரிய அதிகாரி கள் கூறுகையில், 'நடமாடும் காற்று தர கண் காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், அளவிடப்பட்ட காற்று மாசு குறித்த ஆய்வறிக்கை, இன்று வெளியிடப்படும்' என்றனர்.

மீட்பு பணிகள் மும்முரம்

வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர், உதயகுமார் கூறுகையில், ''இந்த தீ விபத்தில், உயிர் இழப்புகள் எதுவும் இல்லை. தீயை முழுவதும் கட்டுக்குள் கொண்டு வர, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன,'' என்றார்.

சென்னை கலெக்டர் அன்புச்செல்வன் கூறிய தாவது:பொது மக்கள் யாரும், இந்த பகுதிக்கு வர வேண்டாம். தி.நகர்வாசிகள், எவ்வித அச்சமோ, பயமோ கொள்ள வேண்டாம். கட்டடம் இடிந்து விழாத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

2,500 கட்டடங்களில் தீயணைப்பு வசதி இல்லை

சென்னையில் தற்போது, 2,500 கட்டடங்களுக்கு மேல், 'மக்கள் பயன்படுத்தலாம்' என்ற, தீயணைப்புத் துறையின் உரிமம் இன்றி பயன் பாட்டில் உள்ளது தெரிய வந்துள்ளது. நகர மைப்பு சட்டப்படி, மூன்று தளங்களுக்கு மேலான கட்டடங்களுக்கு, திட்ட அனுமதி வழங்கும்போது, வரைபட நிலையிலேயே, தீ விபத்து கால மீட்பு பணிக்கான இட வசதி உள் ளதை உறுதி செய்ய வேண்டும்.கட்டி முடிக் கப்படும் நிலையில், கட்டடத்தின் ஒவ்வொரு தளத்திலும், தீ தடுப்பு வசதிகள் இருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே, அந்த கட்டடத்தை தீயணைப்புத் துறை ஆய்வு செய்து, மக்கள் பயன்பாட்டுக் கான உரிமம் வழங்கும்.இதன்படி முறையான தீ தடுப்பு வசதிகள், விதிமுறைகள் பின்பற்றா ததால், 2,500 கட்டடங்களுக்கு மக்கள் பயன் பாட்டுக்கான உரிமம் வழங்கப்பட வில்லை.

'இந்த கட்டடங்களை, மக்கள் பயன்படுத்த ஏன் தடை விதிக்கக் கூடாது; ஏன், 'சீல்' வைக்கக் கூடாது' என, விளக்கம் கேட்டு தீயணைப்புத் துறையும், சி.எம்.டி.ஏ.,வும் நோட்டீஸ் அனுப்பி யுள்ளன. ஆனால், அதோடு நடவடிக்கை முடங்கி விட்டது.

இது குறித்து, தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபல தனியார் வணிக வளாகத்தில், 2008ல், தீ விபத்து ஏற்பட்டு, இரண்டு ஊழியர்கள் உயிரி ழந்தனர். இதையடுத்து, இங்குள்ள கட்டடங் களின் பாதுகாப்பு குறித்து, அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறோம்.ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை பகுதிகளில் உள்ள, 90 சதவீத வணிக வளாகங்களில், தீயணைப்பு வசதிகள் இல்லாதது, ஆய்வுகளில் உறுதியானது. நகர் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தீயணைப்புத் துறையின் உரிமம் பெறாமல், 2,500 கட்டடங்கள், மக்கள் பயன்பாட்டில் உள்ளன.

எந்த பகுதிகள்?

இதில், தி.நகர், ஜார்ஜ் டவுன், மயிலாப்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, பிரபல வணிக வளாகங்கள், பிரதானமாக உள் ளன. இந்த கட்டடங்களில், ஸ்மோக் டிடெக்டர், அனைத்து தளங்களிலும் தீயணைப்புக்காக தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் குழாய் வசதிகள் அமைத்தல், அவசர கால வழிகளை ஏற்படுத்த வும் வுறுத்தப்பட்டுஉள்ளது.சி.எம்.டி.ஏ.,வும், மாநகராட்சி நிர்வாகங்களும் தான், இந்த கட்ட டங்கள் மீது, சீல் வைப்பு உள்ளிட்ட நடவடிக் கைகள் எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு நாளை 'ரிசல்ட்' வெளியீடு?
பதிவு செய்த நாள்31மே2017 21:47

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், மார்ச்சில் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 28ல் வெளியானது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த தேர்வில், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல், 10ம் வகுப்பு தேர்விலும், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதில், நாடு முழுவதும், 8.8 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். தேர்வு முடிவுகள், நேற்று வெளியாவதாக இருந்தது; ஆனால், மதிப்பெண் பட்டியல் இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டது. எனவே, நாளை தேர்வு முடிவு வெளியாகும் வாய்ப்பு உள்ளது. அதிலும் தாமதம் ஏற்பட்டால், ஜூன், 4ல் வெளியாகும் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தேர்வு முடிவுகளை,www.results.nic.in, www.cbseresults.nic.in, மற்றும் www.cbse.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

- நமது நிருபர் -
சட்ட படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பம்
பதிவு செய்த நாள்31மே2017 20:48

சென்னை: மூன்று புதிய கல்லுாரி கள் உட்பட, ஒன்பது அரசு சட்டக் கல்லுாரிகளில், விண்ணப்ப வினியோகம், நாளை துவங்குகிறது. தமிழகத்தில், ஆறு அரசு சட்டக் கல்லுாரி கள் செயல்பட்டு வந்த நிலையில், விழுப்புரம், தர்மபுரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களில், புதிய சட்டக் கல்லுாரிகள் துவங்கப்பட உள்ளன. இவை உட்பட, ஒன்பது கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையை, அம்பேத்கர் சட்ட பல்கலை துவக்கியுள்ளது. இந்த ஆண்டு, எந்த வயதைச் சேர்ந்தவர்களும், சட்டம் படிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள், நாளை முதல் வினியோகம் செய்யப்படுகிறது. சென்னை, அடையாறில் உள்ள சட்டப் பல்கலை மற்றும் அந்தந்த சட்டக் கல்லுாரிகளில், உரிய கட்டணம் செலுத்தி, விண்ணப்பங்களை பெறலாம். 

மூன்று புதிய கல்லுாரிகளுக்கு, கலெக்டர் அலுவலகங்களில் விண்ணப்பம் கிடைக்கும். ஐந்தாண்டு பி.ஏ., - எல்.எல்.பி., படிப்புக்கு மட்டும், இன்று முதல், 23 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். மூன்றாண்டு படிப்புக்கு, ஜூன், 7 முதல், 17 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
ஐந்தாண்டு படிப்புக்கு, பிளஸ் 2வும்; மூன்றாண்டு படிப்புக்கு, இளநிலை பட்டப் படிப்பும் கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விபரங்களை, http://tndalu.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு மாத விடுமுறைக்கு பின் ஐகோர்ட் இன்று திறப்பு

பதிவு செய்த நாள்31மே2017 23:06

சென்னை: ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை, இன்று முதல் வழக்கம் போல் இயங்கும். கடந்த காலம் போல இல்லாமல், இந்த கோடை விடுமுறையில், நீதிபதிகள் அதிகம் பேர் பணியாற்றினர்.

உயர் நீதிமன்றத்துக்கு, மே மாதம், கோடை விடுமுறை விடப்படுவது வழக்கம். அப்போது, விடுமுறை கால நீதிமன்றங்கள், வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் இயங்கும்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிவுறுத்தலின் படி, இந்த கோடை விடுமுறையில் பணியாற்ற, 20க்கும் மேற்பட்ட நீதிபதிகள் விருப்பம் தெரிவித்திருந்தனர். 

அவர்கள், உயர் நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும் வழக்குகளை விசாரித்தனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்', அங்கீகார மற்ற வீட்டு மனைகள் தொடர்பான வழக்கில், இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. 

முதுகலை மருத்துவ படிப்பில், மருத்துவ கவுன்சில் விதிமுறையை பின்பற்றுவது தொடர்பான வழக்கில், மாறுபட்ட உத்தரவை, நீதிபதிகள் சசிதரன், எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்ததால், மூன்றாவதாக, நீதிபதி சத்தியநாராயணன் விசாரித்தார்.

மருத்துவ நுழைவு தகுதி தேர்வான, 'நீட்' முடிவை வெளியிட தடை, சந்தை யில் மாடு விற்பனையை ஒழுங்குபடுத்தும் விதிக்கு தடை என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுகளை பிறப்பித்தது.

இவ்வாறு, கோடை விடுமுறையின் போது, பல முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. விடுமுறை தினமான ஞாயிறு கூட, நீதிபதி கிருபாகரன், வழக்குகளை விசாரித்தார்.

ஒரு மாத கோடை விடுமுறை, நேற்றுடன் முடிந்தது; இன்று முதல், உயர் நீதிமன்றம் வழக்கம் போல் இயங்கும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை கோரிய வழக்கு, அங்கீகாரமற்ற வீட்டு மனை தொடர்பான வழக்கு என, பல முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வர உள்ளன.

மே மாதத்தில், நான்கு நீதிபதிகள் ஓய்வு பெற்றனர். 49 நீதிபதிகளை கொண்டு, உயர் நீதிமன்றம் இயங்க உள்ளது. உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை, 75; காலியிடங்களின் எண்ணிக்கை, 26.
தபால் துறை தேர்வு முறைகேடு : சி.பி.ஐ., அதிரடி விசாரணை

பதிவு செய்த நாள்31மே2017 22:21

புதுடில்லி: தமிழ்நாடு தபால் துறையில் காலியாக உள்ள இடங்களுக்கு நடந்த தேர்வில், ஹரியானாவைச் சேர்ந்தவர்கள், தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்றது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.
தமிழ்நாடு வட்ட தபால் துறையில் காலியாக உள்ள தபால்காரர் உள்ளிட்ட இடங்களுக்கு, 2016, டிச., 11ல், 'ஆன்லைன்' மூலம் தேர்வு நடந்தது.
இதில், பொது அறிவு, கணிதம், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய பாடங்களில் தேர்வு நடந்தது. இதற்கான முடிவுகள், இந்த ஆண்டு, மார்ச்சில் வெளியிடப்பட்டன.

அப்போது, இந்தத் தேர்வை எழுதிய ஹரியானாவைச் சேர்ந்தவர்களும், ஹரியானாவில் இருந்து தேர்வு எழுதிய பஞ்சாப், மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதுவும், இதுவரை தமிழைப் படித்திராத அவர்கள், தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இது தொடர்பாக, தபால் துறை அளித்த புகாரின் அடிப்படையில், சி.பி.ஐ., விசாரணையை துவக்கியுள்ளது. அதில், ஹரியானாவில் ஒரு குறிப்பிட்ட கம்ப்யூட்டர் முகவரியில் இருந்து, 47 பேர் தேர்வு எழுதியுள்ளதும், 36 பேருக்கு, ஒரே இ - மெயில் முகவரி இருப்பதும் தெரியவந்துள்ளது.

'அரசு அதிகாரிகள் உதவியுடன், சிலர் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் ஈடுபட்டவர்களை நெருங்கி விட்டோம்' என, சி.பி.ஐ., அதிகாரிகள்
கூறியுள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில்ஜாதிகள் பட்டியலில் மாற்றம்
சென்னை: போட்டித் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவில், ஜாதிகளின் பட்டியல் மாற்றப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வு களில் பங்கேற்க, அதன் இணையதளத்தில், ஒருமுறை பதிவு முறையில், ஆன்லைனில் தகவல்களை புதுப்பிக்க வேண்டும்.

இதில், தேர்வரின் அனைத்து விபரங்களையும் பதிவுசெய்ய வேண்டும். இதில், முந்தைய, 'குரூப் - 2' தேர்வு அறிவித்த போது, ஒருமுறை பதிவுபட்டியலில் இருந்த,நத்தமன், மலையமன்

ஆகிய ஜாதிகளின் பெயர், தற்போதைய தேர்வின் போது இல்லை என, தேர்வர்கள் தெரிவித் தனர். இது குறித்து, நமதுநாளிதழில் செய்தி வெளியானது.



இதை தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி. செயலர், விஜயக்குமார் அனுப்பிய விளக்கத்தில், 'தேர்வர்கள் குறிப்பிடும் நத்தமன், மலையமன்ஆகிய இரு ,

ஜாதிகளும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், பார்கவகுலம் பட்டியலில் இணைக்கப் பட்டு உள்ளது. 'எனவே, தேர்வர்கள் பார்கவ குலத்தில் தங்கள் ஜாதிகளைப் பார்த்து விண்ணப்பிக்க லாம்' என தெரிவித்துள்ளார்.

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...