Friday, June 30, 2017

`Reconnection mela' to woo back lost BSNL customers
Chennai:
TNN


 
BSNL has launched a reconnection mela for postpaid numbers that were disconnected due to non-payment of dues. After the customers agreed to pay the bills, they were given their old numbers back. The scheme was launched in Chennai on Wednesday in the presence of Chennai Telephones CGM S M Kalavathi.
 
Earlier, the telecom major had launched a similar scheme for landline consumers and nearly 60,000 customers reconnected after payment of dues and received their old numbers.
The mela will be on the same lines as that of landline and broadband, with easy instalments for clearing the outstanding dues and getting back the same number, if available for allotment, a statement by BSNL said.

“BSNL CGM thanked the customers for their come back.All customers who want to avail reconnection of their disconnected mobile postpaid numbers can now approach BSNL customer care centres,“ the statement said.


 
"மாண்புமிகுவை இழக்கிறார் விஜயபாஸ்கர்? - சுகாதாரத்தை கூடுதலாக சுமக்கப் போகும் எடப்பாடி" 




விஜயபாஸ்கரிடம் இருக்கும் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை பறிப்பதற்கான அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளும் கனஜோராகத் தொடங்கிவிட்டன.

தமிழக அமைச்சரவையில் செந்தில் பாலாஜிக்குப் பிறகு செல்வாக்குமிக்க அமைச்சராகத் திகழ்ந்து வருபவர் விஜயபாஸ்கர். புதுக்கோட்டையில் ஜாதி பெயரைச் சொல்லி சொந்தக் கட்சியினரே இவருக்கு எதிராக குழி பறித்த போதும் அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி சக்சஸ்புல் பொலிட்டீஷியானாக அடையாளப்படுத்தப்பட்டவர்.

சீனியர்கள் பல இருக்க மருத்துவம் பார்ப்பதில் கைராசிக்காரரான விஜயபாஸ்கரிடம் சுகாதாரத்துறை இலாக்காவை ஒப்படைத்தார் ஜெயலலிதா. அன்றில் இருந்தே மாண்புமிகுக்கள் வட்டாரத்தில் இவருக்கான செல்வாக்கான அதிகரிக்கத் தொடங்கியது.

மருத்துவ மாணவர்களின் போராட்டம் தொடங்கி, நீட் தேர்வு வரை தன் துறை சார்ந்த பல பிரச்சனைகளையும் ஜஸ்ட் லைக் தட்டாக எதிர்கொண்ட விஜயபாஸ்கரை, ஆர்.கே.நகர் தேர்தல் பண விநியோக விவகாரம் பெரிதாக அசைத்து பார்க்கவில்லை. அரசியலின் நீள அகலத்தை அளந்து பார்த்த மார்க்கண்டேயனாக வலம் வந்த விஜயபாஸ்கரை குட்கா ஊழல் குழியில் தள்ளியுள்ளது.

குட்டு வைத்த குட்கா ஊழல்

தமிழகத்தில் தடைவிதிக்கப்பட்ட குட்கா பொருட்களை தடையின்றி விற்பனை செய்ய அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன், முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோருக்கு மாதம் தோறும் 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருமான வரித்துறையினர் கடந்த ஜூலையில் தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இருப்பினும் இவ்விவகாரம் அப்போது வெளியாகவில்லை. இதற்கிடையே சில ஆங்கில நாளிதழ்கள் நேற்று முன்தினம் இது செய்தி வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து #CashForCancer என்ற தலைப்புடன் களமிறங்கிய டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அத்தனை ஆதாரங்களையும் அடுக்கி தமிழக மக்களுக்கு அதிர்ச்சி அளித்ததுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பண விநியோக பிரச்சனையையே அனாயசமாக எதிர்கொண்ட விஜயபாஸ்கருக்கு குட்கா விவகாரம் எல்லாம் ஒரு பொருட்டா? என்று யாரும் கூற முடியாதபடி அவருக்கு எதிரான பிடி டெல்லியில் இருந்து இறுக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் சாட்டை எடுத்த ஸ்டாலின்

குதிரை பேரத்தை அடுத்து, குட்கா ஊழல் விவகாரம் தமிழக சட்டசபையில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோரை பணி நீக்கம் செய்து சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி பேரவையில் இருந்து இன்றும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். குட்கா ஊழல் விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், அவையை நடத்த முடிய முடியாமல் சபாநாயகர் தனபால் திணறத் தொடங்கியுள்ளார்.

டெல்லியில் இருந்து வந்த எச்சரிக்கை?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக பண விநியோகம் செய்யப்பட்ட விவகாரத்தில் காட்டப்பட்ட அணுகுமுறையை குட்கா ஊழலிலும் எதிர்பார்க்க வேண்டாம் என்று டெல்லியில் இருந்து காட்டமான எச்சரிக்கை கோட்டைக்கு வந்ததாகக் கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள்.

பிரச்சனை பெரிதாவதற்குள் நடவடிக்கை எடுத்து மக்களிடம் நன்மதிப்பை பெற முயற்சியுங்கள் என்று அழுத்தம் திருத்தமாக பதில் கிடைத்துள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்தால் குற்றத்தை ஒப்புக் கொண்டது போல ஆகிவிடுமே என்று பதில் கூற மறுமுனையில் பேசுவதற்கு ஆளில்லையாம்..

டெல்லியின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரை கட்டம் கட்டுவதற்கான முதற்கட்ட நடவடிக்கையில் முதல் அமைச்சர் எடப்பாடி இன்று காலையில் இருந்து தொடங்கியுள்ளார்.

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 340 உதவி மருத்துவர்கள் மற்றும் 165 சிறப்பு உதவி மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. தமிழ்நாடு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்கத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பணி நியமன ஆணை வழங்குவதாக இருந்தது.

விஜயபாஸ்கர் ஆப்சென்ட்

குட்கா விவகாரம் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசு விழாவில் விஜயபாஸ்கர் கலந்து கொள்கிறார் என்றதும், கூட்ட அரங்கில் செய்தியாளர்கள் குழுமியிருந்தனர். ஆனால் விஜயபாஸ்கர் நிகழ்ச்சிக்கு வரவில்லை.

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணி ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்க விஜயபாஸ்கர் விரும்பினாலும், நீங்க இப்போ கலந்து கொள்வது அவ்வளவு நல்லா இருக்காது என்று மூத்த அமைச்சர்கள் வழியாக சேதி சொல்லப்பட அமைதியாகவிட்டாராம்.

எடப்பாடிக்கு கூடுதல் பொறுப்பு

டெல்லியில் இருந்து ஒருபக்கம் எச்சரிக்கை வந்தாலும், அதிமுக மாண்புமிகுக்களில் பலர் விஜயபாஸ்கருக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. கட்சிக்கும் ஆட்சிக்கும் இனியும் கெட்ட பெயர் ஏற்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஒருவரால் இத்தனை பிரச்சனைகள் என்றால் அவரை நீக்கிவிடுங்களே என்று அட்வைஸ் வர, அத்தனையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த எடப்பாடி, விஜயபாஸ்கரிடம் இருக்கும் சுகாதாரத்தை பறிக்க முடிவு செய்துள்ளாராம்.ஜூலை முதல் வாரத்திற்குள் அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கர் நீக்கப்பட்டு, அந்த இலாகவை எடப்பாடி கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்றும் தகவல்கள் ரெக்கை கட்டிப் பறக்கத் தொடங்கியுள்ளன.
Dailyhunt
குடும்பத் தலைவி என்பவள் வெறும் மனைவி, தாய் மட்டுமல்ல: நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு 



சென்னை: ஒரு குடும்பத் தலைவி என்பவள் வெறும் மனைவி, தாய் மட்டுமல்ல.. அவள்தான் அந்த குடும்பத்தின் நிதியமைச்சர், கணக்காளர் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ளது.

2 குழந்தைகளுக்குத் தாயாகவும் குடும்பத் தலைவியாகவும் இருந்த மாலதி, கடந்த 2009ம் மின்சாரம் தாக்கி பலியான சம்பவத்தில், அந்த குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவதை எதிர்த்து புதுச்சேரி மின்சார வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தனது தீர்ப்பை அளித்தது.

மாலதியின் மரணத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு கோரிய அவரது கணவரின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

மேலும், இந்த தீர்ப்புக்கான தனது விளக்கத்தையும் அளித்தது. அதில், உலக அளவில், குடும்பத் தலைவி என்பவளது சம்பளமற்ற வேலை எப்போதுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இது இன்னும் விவாதத்துக்குரியதாகவே உள்ளது.

இந்தியாவில் குடும்பத் தலைவி என்பவர் வெறும் மனைவி மற்றும் தாய் என்பதோடு நின்றுவிடவில்லை. அதற்கும் மேல் எத்தனையோ பணிகள் உள்ளன.

மாலதி ஒரு மனைவியாக இருந்துள்ளார்.

அன்பு தாயாகவும் இருந்துள்ளார். அதற்கும் மேல், அந்த குடும்பத்தின் நிதியமைச்சரும் அவர்தான். அவள் சமையல் வேலையையும் கவனித்திருப்பார். கணக்காளராகவும் பொறுப்பேற்றிருந்தார்.

குடும்ப நிர்வாகம், வருவாய் மற்றும் செலவினத்தை கவனிப்பது, கணவருடன் இணைந்து குடும்பத்தை நிர்வகிப்பது என்ற பணிகளையும் அவர் செய்துள்ளார்.

இந்த சம்பவத்தில், ஒரு கணவர் தனது வாழ்க்கைத் துணையை இழந்துள்ளார். இரண்டு குழந்தைகள் தன் தாயை இழந்து, அவளிடம் இருந்து கிடைக்க வேண்டிய அன்பையும் இழந்துள்ளது.

மாலதியின் மரணத்தால், அந்த கணவருக்குக் கிடைக்க வேண்டிய கவனிப்பு பறிபோனது. அவரது வாழ்க்கை கேள்விக்குறியானது.

இவற்றையும் ஒரு மனிதனின் மரணத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளது.

அதோடு, மாலதியின் மரணத்துக்கு மின்சார வாரியம் பொறுப்பல்ல என்று கூறியிருந்த வாதத்தை முற்றிலும் நிராகரித்துள்ள நீதிமன்றம், மின்சார கோளாறுகளுக்கு எந்த வகையிலும் தனிமனிதர்கள் பொறுப்பேற்க முடியாது. மின்சார பகிர்மான கேபிளில் வந்த அதிகப்படியான மின்சாரத்தை கவனிக்காமல் விட்டது மின்சார வாரியத்தின் பொறுப்பற்ற தன்மைதான் என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

2009ம் ஆண்டு மாலதி மின்சாரம் தாக்கி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, ரூ.5 லட்சம் இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் அவரது கணவர் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், அவருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால், மாலதி வெறும் குடும்பத் தலைவியாகவே இருந்துள்ளார். இதனால் அவருக்கு இழப்பீடு வழங்க முடியாது என்று கூறி புதுச்சேரி மின்சார வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நேற்று வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த தீர்ப்பினை பதிவு செய்துள்ளது.

இந்த தீர்ப்பு, நடந்து கொண்டிருக்கும் பல வழக்குகளுக்கும், எதிர்காலத்தில் தொடரப்படும் வழக்குகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை.

Dailyhunt
அடேங்கப்பா! ஊருக்குப் போகும் பிளானை மாற்றுவதால் மட்டும் ரூ.1400 கோடி வருமானம் ஈட்டும் ரயில்வே 




இந்தூர்: ரயிலில் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளை, பயணிகள் ரத்து செய்வதன் மூலம் மட்டுமே ரூ.1400 கோடியை வருவாயாக ஈட்டி வருகிறது ரயில்வே துறை.

கடந்த ஆண்டை விட, ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கான கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் 2016-17ம் ஆண்டில் ரயில்வே நிர்வாகம் ரூ.1400 கோடியை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 25.29 சதவீதம் அதிகம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய ரயில்வே தகவல் அமைப்பு இந்த பதிலை அளித்துள்ளது.

மேலும் அந்த பதிலில், 2015-16ம் ஆண்டில், ரயில் டிக்கெட் ரத்து செய்யப்படுவதால் கிடைக்கும் வருவாய் ரூ.1123 கோடி அளவுக்கு இருந்த வந்த நிலையில், 2016-17ம் ஆண்டில் 1400 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது.

இதன் மூலம் ரயில்களை இயக்குவதால் மட்டும் அல்ல, ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுவதாலும் மிகப்பெரிய தொகையை ரயில்வே வருவாயாக ஈட்டுவது தெரிய வந்துள்ளது.

மேலும், 2016-17ம் ஆண்டில் முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகள் மூலம் ரூ.17.87 கோடியை வருவாயாக ஈட்டுகிறது.

ரயில்வே நிர்வாகம், ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கட்டணத்தை கடந்த ஆண்டு அதிகரித்தது. இதன் மூலம், ஏற்கனவே இருந்த தொகை இரண்டு மடங்காக அதிகரித்தது. இது மிகப்பெரிய முறைகேடு. உடனடியாக ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கட்டணங்களை ரயில்வே துறை குறைக்க வேண்டும், இதுவரை பிடித்தம் செய்த கட்டணங்களையும் வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலர் கௌட் கூறியுள்ளார்.

Dailyhunt
ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டினால்... எச்சரிக்கும் ராமதாஸ் 

சகாயராஜ் மு



தொட்டில் குழந்தை திட்டம் முதல் சுடுகாட்டுக் கூரை வரை அனைத்து நிலைகளிலும் ஊழல்செய்து, லட்சக்கணக்கான கோடிகளைக் குவித்தார் என்பதைத்தான் ஜெயலலிதா நினைவிடத்திலிருந்து கற்க முடியும் என்று கூறியுள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக முதலமைச்சராக பதவி வகித்து மறைந்த ஜெயலலிதாவுக்கு, சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்டமான நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட ஒருவருக்கு நினைவு மண்டபம் அமைத்து, தியாகியாக்கும் செயல் கண்டிக்கத்தக்கது. ஜெயலலிதா மறைந்த சில நாள்களில் சட்டப்பேரவையில் நடந்த விவாதத்துக்குப் பதிலளித்த அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்துக்கு அருகில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். எனினும், அந்த நேரத்தில் ஜெயலலிதா எந்த வழக்கிலும் தண்டிக்கப்பட்டிருக்கவில்லை என்பதால், அப்போது எதிர்ப்பு எழவில்லை. அதன்பின்னர் வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த 4 ஆண்டு சிறைத் தண்டனை, தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. இந்த ஊழலில், ஜெயலலிதாவுக்கு உள்ள பங்குகுறித்து விரிவாக விளக்கியிருந்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பளிக்கப்படும்போது, ஜெயலலிதா உயிருடன் இல்லை என்பதால், அவருக்கு தண்டனை வழங்கவில்லை. எனினும், அவர் குற்றவாளிதான். ஊழலின் அடையாளமாகத் திகழும் ஜெயலலிதாவுக்கு மக்களின் வரிப்பணத்தில் நினைவு மண்டபம் அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளிக்கப்படும்போது, ஜெயலலிதா இறந்துவிட்டதால்தான் அவரை குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் அறிவிக்கவில்லை. இது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த நடைமுறைதான். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், அவரும் இந்த வழக்கில் குற்றவாளி என்று அறிவித்து ரூ.100 கோடி அபராதம் செலுத்த உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருக்கும். ஜெயலலிதாவும் முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, 4 ஆண்டு சிறை தண்டனையை னுபவித்துக்கொண்டிருந்திருப்பார். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் ஜெயலலிதாவின் ஊழல்கள் பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் கடுமையான கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். ‘‘சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும், ஒரே முகவரியில் வசித்திருக்கிறார்கள். இவர்களுக்கு இடையில் வேறு தொடர்புகள் இல்லை என்று கூறமுடியாது. இன்னும் கேட்டால், ஊழல்செய்து தாம் குவித்த சொத்துக்களைப் பகிர்ந்தளித்துப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் இவர்களை ஜெயலலிதா தமது போயஸ் தோட்டத்தில் தங்க வைத்திருந்தார்’’ என்று நீதிபதி சந்திரகோஷ் கூறியிருக்கிறார். ஊழல்கள்மூலம் சொத்துக்குவித்த வழக்கில், சசிகலா மற்றும் அவரது உறவினர்களைவிட ஜெயலலிதாதான் முதன்மைக் குற்றவாளி என்பதற்கு இதைவிட சிறந்த ஆதாரம் எதுவும் இருக்க முடியாது.



இதற்கெல்லாம் மேலாக, நினைவு மண்டபம் எனப்படுவது பொதுவாழ்வில் ஒழுக்க சீலர்களாகவும், தியாகத் திருவிளக்காகவும் விளங்கியவர்களைப் போற்றுவதற்காக அமைக்கப்படுவது. சிறந்த தலைவர்களின் சிலைகள் மற்றும் நினைவிடங்களை அடுத்தடுத்த தலைமுறையினர் பார்க்கும்போது, அந்தத் தலைவர்களைப் போல நாமும் வாழ்ந்து, நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும் என்பதற்காகத்தான் நினைவிடங்கள் அமைக்கப்படுகின்றன. ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் பட்சத்தில், அவரது வாழ்க்கையிலிருந்து அடுத்தடுத்த தலைமுறையினர் கற்றுக்கொள்ள என்ன இருக்கும். தொட்டில் குழந்தை திட்டம் முதல் சுடுகாட்டுக் கூரை வரை அனைத்து நிலைகளிலும் ஊழல்செய்து, லட்சக்கணக்கான கோடிகளைக் குவித்தார் என்பதைத்தான் ஜெயலலிதா நினைவிடத்திலிருந்து கற்க முடியும். வருங்காலத் தலைமுறையினருக்கு அந்தப் பாவம் தேவையில்லை.

அதுமட்டுமின்றி, சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த மற்றொரு நீதிபதி அமிதவா ராய், ‘‘உயிர்க்கொல்லி தீமையான ஊழலின் பிடியிலிருந்து குடிமக்கள் சமுதாயத்தை மீட்க வேண்டும். நமது முன்னோர் மற்றும் இந்திய விடுதலைக்காகப் போராடிய தியாக சீலர்களால் கனவு காணப்பட்ட நிலையான, நியாயமான, உன்னதமான சமூக அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினால், இப்புனிதப் பணியில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்’’ என்று அழைப்பு விடுத்தார். சாதாரண குடிமகனுக்கான இந்த அழைப்பு, தமிழக அரசுக்கும் பொருந்தும். எனவே, வருங்காலத் தலைமுறையினருக்கு தவறான வழிகாட்டுதலை வழங்குவதைத் தவிர்ப்பதற்காக, ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என எச்சரிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
சென்னை நடைமேடையில் வாழும் மக்களின் ஒரு நாள் இரவு #VikatanPhotoStory

சொ.பாலசுப்ரமணியன்




தறிகெட்டு அலையும் கார்கள் நடைமேடையில் ஏறும் நிகழ்வுகள், குழந்தை கடத்தல் சம்பவங்கள், அவசரத்திற்கு கழிவறையைக் கூட பயன்படுத்த முடியாத நிலை என இந்த மக்களின் ஒவ்வொரு நாளும் சொல்ல முடியாத துயரங்கள் நிறைந்தவை. புயல், மழை வெள்ளம் என அனைத்திலும் இவர்களின் ஒரே துணை இந்த நடைமேடைதான். சென்னையின் நடைமேடைகளில் வாழும் இந்த மக்களைச் சந்தித்து வருவோமா!?



வால்டாக்ஸ் சாலையோர நடைமேடையில் டி.வி ஓடிக்கொண்டிருக்க, உறங்குபவர்கள் போக மீதமுள்ளவர்கள் படம் பார்க்கிறார்கள்.



பகலில் பரபரப்பாக இருக்கும் என்.எஸ்.சி போஸ் சாலையில் ஆட்டோக்களை ஓரம் கட்டிவிட்டு களைப்புடன் தூங்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்



என்.எஸ்.சி. போஸ் சாலையை ஒட்டிய நடைமேடையில் கூட்டமாக ஏதோ விளையாடிக் கொண்டிருந்தார்கள்



ராத்திரி பன்னிரண்டு மணிக்குமேலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அப்படி என்ன விளையாடுறாங்கன்னு தெரிஞ்சுக்கிற ஆர்வத்தோடு டூவீலரை ஓரம் கட்டிட்டு பக்கத்தில் போய்ப் பார்த்தோம். வட்டமாக உட்கார்ந்திருந்திருந்தவர்கள் எங்களைப் பார்த்ததும் ஒரு நிமிஷம் விளையாடுவதை நிறுத்திவிட்டு “என்ன தம்பிங்களா என்ன வேணும்?'' என்று அதில் ஒருத்தர் அதட்டலாகக் கேட்க, “இந்தா... இன்னாத்துக்குய்யா அந்தப் புள்ளைகளை வெரட்டுற. கம்முன்னு இந்தாண்ட வந்து குந்து” என்று ஒரு பாட்டி குரல் கொடுத்ததும் அவர் அமைதியானார்.



இந்தக் குழந்தைகளுக்குச் சாலையோர நடைமேடைகள்தான் வீடு. மொட்டைமாடியில் நிலா காட்டி சோறு ஊட்டுவதைப் பார்த்திருப்போம். இவர்களின் அம்மாக்கள் சாலையில் விரையும் வாகனங்களைக் காட்டித்தான் சோறு ஊட்டுகிறார்கள். வாகனங்களின் இரைச்சலால் நள்ளிரவிலும் தூங்காமல் விழித்திருக்கும் குழைந்தைகளுக்கு, வேடிக்கை காட்டி தூங்க வைக்க முயல்கிறார்.





தூங்கிக் கொண்டிருக்கும் நேரங்களில் நிறைய குழந்தை கடத்தல்களும் நடந்திருக்கின்றன என்பதால், குழந்தைகளைக் கையில் பிடித்துக்கொண்டு விடிய விடிய விழித்துக் கிடக்கும் அம்மா.

''ராத்திரியில நாங்க தூங்காம இப்புடி பொழுத கழிக்குறதே ஒரு சில ஆம்பளைங்களுக்குப் பயந்துதான். திடீர்னு வண்டியை நிறுத்திட்டு வந்து மேல கை வைப்பானுங்க. சந்துக்கு வர்றியான்னு கூப்பிடுவாங்க. பொம்பளப்புள்ளக தூங்கும்போது வேடிக்கைப் பார்ப்பாங்க. ஆம்பளைங்க தூங்கும்போது பொம்பளைங்க நாங்க ஒண்ணா முழிச்சிருப்போம். நாங்க தூங்கும்போது ஆம்பளைங்க முழிச்சிருப்பாங்க. சில சமயம் பச்சைப் புள்ளைங்களைத் தூக்கிட்டுப் போயிடுவாங்க.

அரசாங்கத்துக்கிட்ட எத்தனையோ மனு கொடுத்தும் யாரும் கண்டுக்கலை'' - இது நாகம்மா என்பவரின் வேதனைக் குரல்.



சாலையின் நடுவிலுள்ள தடுப்புச் சுவர்களில் காயவைக்கப்பட்ட துணிகள்



அனிதா என்பவரிடம் பேசினோம். ''எங்களாண்ட ரேஷன் கார்டு, ஆதார், ஓட்டு ஐ.டி எல்லாமே இருக்குதுய்யா. 'எங்களுக்கு ஏன் வீடு தர மாட்டேங்கறீங்க?'னு அதிகாரிங்ககிட்ட கேட்டா, 'அதெல்லாம் உங்க தாத்தா பாட்டி காலத்துலயே கொடுத்தாச்சு'னு சொல்லி அனுப்பிடுறாங்க. இங்க முதல்வர்கள்கூட திடீர் திடீர்னு மாறிடறதை டி.வியில் பாக்குறோம். ஆனா, நாங்கதான் காலங்காலமா மாறாமல் பிளாட்பாரத்துலயே சுருங்கிக் கெடக்குறோம். எத்தனையோ பத்திரிகைகாரங்க வந்து போட்டோ புடிச்சுட்டுப் போனாங்க. எம்.எல்.ஏவும் வந்துட்டுப் போனாரு. தூங்கும்போதும் இந்த பிளாட்பாரம்தான்; முழிக்கும்போதும் இந்த பிளாட்பாரம்தான்.

சூரியன் எங்களுக்கு மட்டும் புதுசாவா விடியப்போவுது'' என்று துயரத்திலும் புன்னகைக்கிறார். விடிவதற்கு இன்னும் கொஞ்ச நேரமே இருக்க, கனத்த இதயத்துடன் அங்கிருந்து கிளம்பினோம்!
'பாரசிட்டமால் மருந்துக்கே இந்த கதியா?' - ஓர் எளிய மருத்துவரின் 'ஜி.எஸ்.டி' வேதனை

ஆ.விஜயானந்த்




' ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை' என்ற முழக்கத்தோடு ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட இருக்கிறது. 'சாதாரண மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மருந்துகளுக்கெல்லாம் 12 சதவீத வரியைப் போட்டுள்ளனர். ஆனால், பணக்காரர்கள் பயன்படுத்தும் உலர் பழங்களுக்கு 2 சதவீதம் அளவுக்கு வரியைக் குறைத்துள்ளனர். ஜி.எஸ்.டிக்காக மருந்துக் கடைகள் எங்களை நெருக்குகின்றன' என்கிறார் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இதே தினத்தில் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்படுவதால், மருத்துவர்களும் மருந்துக் கடை உரிமையாளர்களும் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். அதிலும், அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி என அனைத்து மருந்துகளுக்கும் 12 சதவீதம் முதல் 28 சதவீதம் வரையில் வரி போடப்பட இருப்பது, கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. " பதிவு பெற்ற மருத்துவராக இருப்பதால், எனக்கு சலுகை விலையில் மருந்துகள் கிடைக்கும். சாதாரண காய்ச்சலுக்குப் போடப்படும் பாரசிட்டமால் மருந்து, ஆயிரம் மாத்திரைகளை 220 ரூபாய்க்கு வாங்குவேன். இதற்காக 5 சதவீத வரியைக் கட்டி வந்தேன். இப்போது இதே பாரசிட்டமால் மருந்துக்கு நான் 12 சதவீத வரியை செலுத்த வேண்டியிருக்கிறது. பொதுமக்கள் எப்போதும் பயன்படுத்தும் பாரசிட்டமால் மாத்திரைக்கே, இவர்கள் கூடுதல் வரியைப் போட்டுள்ளனர். சாதாரண சத்து ஊசிக்கும் 12 சதவீதம் முதல் 28 சதவீதம் வரையில் வரியைப் போட்டுள்ளனர். இந்தியாவில் 70 முதல் 80 சதவீத மக்கள், தங்கள் சொந்தப் பணத்தில் இருந்துதான் மருந்துகளை வாங்குகின்றனர் என ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. இவர்களை ஒட்டுமொத்தமாக வதைக்கிறது ஜி.எஸ்.டி வரி" எனக் கொந்தளிப்போடு பேசத் தொடங்கினார் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் மருத்துவர் புகழேந்தி.



தொடர்ந்து நம்மிடம் பேசினார். " ஜி.எஸ்.டி வரியின் மூலம் இன்சுலின் மருந்துக்கு மட்டும் வரியைக் குறைத்திருக்கிறார்கள். மீதமுள்ள 99 சதவீத மருந்துகளுக்கு 7 சதவீதம் கூடுதலாக வரி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவசர காலங்களில் போட்டுக் கொள்ளும் குளுக்கோஸுக்கு வரி விதிப்பது எந்த வகையிலும் சரியல்ல. என்னிடம் வரும் நோயாளிகளுக்கு, சலுகை விலையில் கிடைக்கும் மருந்துகளை மிகக் குறைந்த விலைக்குத் தருகிறேன். இப்போது அவர்களிடம் கூடுதலாக வசூலிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்" என்றவர்,

" சென்னையில் நான்கு இடங்களில் மொத்தமாக மருந்துகளை வாங்குகிறேன். கடந்த சில நாட்களாக, 'மொத்தமாக மருந்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்' என மருந்து கொள்முதல் கடைகளில் இருந்து நெருக்குகிறார்கள். ' ஜி.எஸ்.டி வர இருப்பதால், எங்களுக்கு நிறைய இழப்புகள் ஏற்பட இருக்கிறது. இந்த இழப்புகளுக்கு மருந்து நிறுவனங்கள் பொறுப்பேற்க முன்வரவில்லை. எனவே, 30 ஆம் தேதிக்குள் மருந்துகளை வாங்கிக் கொள்ளுங்கள். அதன்பிறகு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும்' என்கிறார்கள். அதற்காக, பல மாதங்களுக்குத் தேவையான மருந்துகளை ஒரே நேரத்தில் எப்படி வாங்கிக் கொள்ள முடியும்? அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது? ஒரு மாதத்துக்குத் தேவையான மருந்துகளை வாங்கி வைத்துக் கொள்ளலாம். அதன்பிறகு, இந்த வரியைக் குறைத்துவிடுவார்களா? அமெரிக்காவில் பிரதமர் மோடி பேசும்போது, 'ஜி.எஸ்.டியால் எங்கள் நாட்டின் வளர்ச்சி உயரும்' என்கிறார். அடித்தட்டு மக்களை வதைத்துவிட்டு, என்ன மாதிரியான வளர்ச்சியை இவர்கள் கொடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
 
மருத்துவரிடம் சென்று மருத்துவம் பார்க்க பணமில்லாதவர்கள், மருந்துக் கடைகளில் கேட்டு வாங்கிச் சாப்பிடும் நிலையும் இருக்கிறது. இந்த வரியால், அவர்கள் கூடுதல் தொகைகளைக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்சுலினோடு சேர்த்து ஓரிரு மருந்துகளைத் தவிர, மற்ற அனைத்துக்கும் 12 முதல் 28 சதவீதம் வரையில் வரி போடப்பட உள்ளது. மருந்து விலைகளும் தாறுமாறாக உயரப் போகிறது. இதுதான் ஜி.எஸ்.டியால் உருவாகக் கூடிய மாற்றமா? இந்த அரசு மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கவில்லை. 'விலைவாசியில் பெரிய மாற்றம் வராது' என மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகிறார். ஆனால், சாதாரண மக்கள் பயன்படுத்தும் மருந்துகளுக்கு இவ்வளவு வரியை விதிப்பது எந்த வகையில் நியாயமானது? தங்களின் கொள்கை சார்ந்த முடிவுகளைத்தான் ஜி.எஸ்.டி வழியாக பிரதமர் அமல்படுத்துகிறாரோ என்ற சந்தேகமும் எங்களுக்கு உண்டு" என்றார் ஆதங்கத்தோடு.

NEWS TODAY 2.5.2024