Thursday, August 31, 2017

எம்.பி.பி.எஸ் :பொது பிரிவு கலந்தாய்வு முடிவு

பதிவு செய்த நாள்30ஆக
2017
20:18


சென்னை: மருத்துபடிப்பிற்கான பொது பிரிவினருக்கு நடைபெற்ற கலந்தாய்வில் 3,686 இடங்கள் நிரம்பியது. இது குறித்து கூறப்படுவதாவது: மொத்தம் உள்ள 3,686 இடங்களில் அரசு கல்லூரியில் 2, 650 இடங்களும் தனியார் கல்லூரியில் 808 இடங்களும் ஈஎஸ்ஐ கல்லூரியில் 72 இடங்களும் நிரம்பியது. பல் மருத்து பிரிவில் அரசு கல்லூரியில் 156 இடங்கள் நிரம்பின. தனியார் கல்லூரியில் உள்ள 860 இடங்களில் 185 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புளுவேல் விளையாட்டுக்கு இன்னொரு பலி: மதுரையில் மாணவர் தற்கொலை
பதிவு செய்த நாள்
ஆக 30,2017 21:48

திருப்பரங்குன்றம், மதுரை விளாச்சேரி மொட்டமலை பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி பேக்கரியில் மாஸ்டராக உள்ளார், இவரது மனைவி டெய்சி ராணி.
இவர்களது மகன் விக்கி,19, தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்தார்.
நேற்று ஜெயமணி வழக்கம் போல் வேலைக்கு சென்று, மாலை 6:30 மணிக்கு வீடு திரும்பினார். 

வீட்டின் உள்ளே வந்த அவர் அறை ஒன்றில் தன் மகன் விக்கி துாக்கில் பிணமாக தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் ஆஸ்டின்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தார்.அங்கு வந்த போலீசார் விக்கியின் இடது கையில் 'புளூவேல்' என்று
எழுதியிருப்பதை கண்டறிந்தனர்.




இன்றைய இளைஞர்களின் உயிரை வாங்கும் 'புளூவேல்' 'கேம்'மை விக்கி தொடர்ந்து விளையாடியதால், இந்த விபரீதம் ஏற்பட்டது தெரிய வந்தது. தாய் டெய்சியும் வேலைக்கு செல்வதால், வீட்டில் தனியாக இருந்த விக்கி, தாயின் சேலையில் துாக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

ஏற்கனவே சில மாநிலங்களில் இந்த விளையாட்டால் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், மதுரையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது வேதனையான விஷயம். இந்த 'கேம்' குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டால் மட்டும் தான் உயிர் பலியை தடுக்க முடியும்

புளூவேல் - ரெட் அலர்ட்

'ஸ்மார்ட் போன்' குறித்து அதிகம் தெரியாத பெற்றோர்கள் 'புளூவேல்' கேம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இந்த 50 நாள் 'சேலேன்ஜ் கேம்' ஆன்ட்ராய்டு ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படுகிறது. போனில் 'இன்ஸ்டால்' செய்ததும் விளையாடலாம்.

விளையாடும் நபருக்கு ஒவ்வொரு நாளும் ஒரு டாஸ்க் கொடுக்கப்படும். உதாரணமாக 'உன் கையில் பிளேடு வைத்து 3 முறை கிழி, அதை போட்டோ எடுத்து அனுப்பு. அதிகாலை எழுந்து பேய் படம் பார், அதை செல்பி எடுத்து எனக்கு அனுப்பு. 

ரயில்வே டிராக்கில் நில், உயரமான பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய். அதை வீடியோ எடுத்து பேஸ்புக், டுவிட்டரில் பதிவேற்று. அப்போது தான் நீ விளையாட்டில் வெற்றி பெறுவாய்,' என்றெல்லாம் கட்டளைகள் வந்து கொண்டே இருக்கும்.

இதை எல்லாம் நான் செய்ய மாட்டேன் என்று சொல்லவும் முடியாது, ஏன் என்றால் இந்த 'கேம்'மை இன்ஸ்டால் செய்ததும், உங்கள் போனில் இருக்கும் எண்கள் உட்பட அனைத்து தகவல்களும் இந்த கேமின் சர்வருக்கு சென்றுவிடும். நீங்கள் கேம் சொல்லும் டாஸ்க்கை செய்யவில்லை என்றால் போனில் உள்ள தகவல்களை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் போனுக்கு அனுப்பப்படும் என்று மிரட்டல் தகவல் வரும். 'கேம்'மில் டாஸ்க் செல்லும் 'மேப்' நீல திமிங்கலம் வடிவத்தில் இருப்பதால், இதற்கு 'புளூவேல்' என்று பெயர் வைத்துள்ளனர்.

ஸ்மார்ட் போன்களை 'ஹேக்' செய்யக் கூடிய நபர்களால் இந்த கேம் இயக்கப்படுவதால் தான், நம் தகவல்கள் திருடப்படுகிறது என்பதை புரிந்து கொண்டு இந்த 'கேம்'மை விளையாடாமல் தவிர்க்க வேண்டும்.
“மாணவிகள் சுகாதார தூதர்களாக செயல்பட வேண்டும்” கலெக்டர் ரோகிணி அறிவுரை


“டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவிகள் சுகாதார தூதர்களாக செயல்பட வேண்டும்“ என்று கலெக்டர் ரோகிணி அறிவுரை வழங்கினார்.

ஆகஸ்ட் 30, 2017, 04:30 AM
சேலம்,

சேலம் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வந்தாலும், 15-க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். தற்போது சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள நர்சிங் விடுதி மாணவிகளுக்கும் சமீபத்தில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு குணப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் கலெக்டர் ரோகிணி ரா.பாஜிபாகரே சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு ஆகிய பகுதிகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் அவர்கள் உடன் வந்திருந்தவர்களிடம் மருத்துவமனையில் சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுகிறதா? என கேட்டறிந்தார். மேலும், அந்த குழந்தைகளின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

அங்கு ஒரே படுக்கையில் 2 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர். அதைத்தொடர்ந்து பணியில் இருந்த டாக்டர் மற்றும் நர்சுகளிடம் காய்ச்சலுக்கான சிகிச்சை பெற்றுவரும் 2 குழந்தைகளை எக்காரணம் கொண்டும் ஒரே படுக்கையில் வைத்து சிகிச்சை அளிக்க கூடாது என அறிவுறுத்தினார்.

இதையடுத்து கலெக்டர் ரோகிணி மருத்துவமனை வளாகத்தில் உள்ள செவிலியர் விடுதி பகுதிக்கு சென்று சுகாதாரம் முறையாக பராமரிக்கப்படுகின்றதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார். அதிக அளவில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்க்கவரும் நபர்கள் டீ கப்புகள், சிரட்டைகளை ஆங்காங்கே வீசி எறிந்து சென்றுள்ளதை கண்டார்.

உடனே கலெக்டர் ரோகிணி அவற்றை கையில் எடுத்து அப்புறப்படுத்தினார். அப்போது அங்கிருந்தவர்களிடம் இதுபோன்ற பொருட்களை ஆங்காங்கே வீசக்கூடாது என அறிவுறுத்தினார். மேலும் வளாகத்தை சுகாதாரமாக வைத்திருக்க கலெக்டர் ரோகிணி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அத்துடன், குப்பைகளால் நோய்தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதையும் சுட்டிக்காட்டி தொடர்ச்சியாக கூடுதல் பணியாளர்களை கொண்டு மருத்துவமனை வளாகத்தை தூய்மை படுத்தும் பணியினை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து சேலம் அரசு கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் மாணவிகள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி தூய்மையான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பள்ளியில் பயின்று வரும் மாணவிகளிடம் டெங்கு குறித்து ஒவ்வொருவரும் தங்கள் பெற்றோரிடம் எடுத்து கூறி சேலம் மாவட்டத்தை காய்ச்சல் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு ஒவ்வொரு மாணவியும் சுகாதார தூதர்களாக செயல்பட வேண்டும் என்றார்.

இந்த ஆய்வின்போது அரசு ஆஸ்பத்திரி டீன் கனகராஜ், துணை இயக்குனர் (சுகாதாரம்) பூங்கொடி மற்றும் டாக்டர்கள் உடன் சென்றனர்.
ரே‌ஷன் கடைகளில் நாளை முதல் ‘ஸ்மார்ட் கார்டு’ மூலம் பொருட்கள் வினியோகம்


ரே‌ஷன் கடைகளில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஸ்மார்ட் கார்டு மூலமாக பொருட்கள் வினியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

ஆகஸ்ட் 31, 2017, 04:15 AM

சென்னை,

தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கமி‌ஷனர், அனைத்து மாவட்டம்(சென்னை நீங்கலாக) உணவு பொருட்கள் வழங்கல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:–

பழைய குடும்ப அட்டைக்கு பதிலாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள்(ஸ்மார்ட் கார்டு) பெற்றவர்களுக்கு மின்னணு அட்டை மூலமாகவே அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட வேண்டும். தற்போது குடும்ப அட்டை அச்சிடப்பட்டு மண்டல அலுவலகம் / வட்ட அலுவலகங்கள் மூலம் சம்பந்தப்பட்ட நியாயவிலை கடைகளுக்கு (ரே‌ஷன் கடைகள்) அனுப்பப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள மின்னணு அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும்.இதுவரையில் தமிழகத்தில் ஒரு கோடியே 42 லட்சத்து 15 ஆயிரத்து 382 மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன. ஏனைய குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

எனவே 1–ந் தேதி (நாளை) முதல் அனைத்து நியாயவிலை கடைகளிலும், மின்னணு குடும்ப அட்டை பெற்றவர்களுக்கு, மின்னணு குடும்ப அட்டை மூலம் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அதன் விவரத்தை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மும்பையில் கனமழைக்கு 8 பேர் பலி வெள்ளம் வடிந்ததால் இயல்பு நிலை திரும்புகிறது


மும்பையில் பெய்த கன மழைக்கு 8 பேர் பலியானார்கள். தற்போது வெள்ளம் வடிந்ததால் இயல்பு நிலை திரும்புகிறது.

ஆகஸ்ட் 31, 2017, 05:00 AM
மும்பை,

மும்பையில் நேற்று முன்தினம் வரலாறு காணாத அளவிற்கு பலத்த மழை கொட்டியது. நேற்று முன்தினம் காலை முதல் நேற்று நள்ளிரவு 12 மணி வரையிலான நேரத்தில் மும்பையில் 316 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

இதனால் நகரில் உள்ள எல்லா சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கின. தண்டவாளங்கள் மழைநீரில் மறைந்தன. எனவே ரெயில், சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. பொதுமக்கள் எங்கும் செல்ல முடியாமல் அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மண்டபங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கி இருந்தனர். ரெயில், பஸ்களில் நடுவழியில் சிக்கிய மக்கள் சுமார் 12 மணி நேரங்களுக்கு மேல் அதிலேயே இருக்க வேண்டிய அவலமும் அரங்கேறின.

8 பேர் சாவு

மும்பையில் பெய்த வரலாறு காணாத மழைக்கு தானே, பால்கர் உள்ளிட்ட இடங்களில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டும், மரம் முறிந்து விழுந்தும் மொத்தம் 8 பேர் வரை பலியாகி உள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. டாக்டர் உள்பட 13 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை மீட்பு படையினர் தேடி வருகிறார்கள்.

சாலைகள், தண்டவாளங்களில் தேங்கிய வெள்ளநீரை வடிய வைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சியினர் நேற்று முன்தினம் விடிய விடிய மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

எனினும் நேற்று அதிகாலை 2 மணிக்கு பிறகே கிழக்கு மற்றும் மேற்கு விரைவு நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து ஓரளவு சீராக தொடங்கியது. எனினும் நேற்று காலை வரை மின்சார ரெயில் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. எனவே இதை சமாளிக்க சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இயல்பு நிலைக்கு திரும்புகிறது

வெள்ளம் வடிந்து வருவதால் மத்திய ரெயில்வேயில் ரெயில் போக்குவரத்து நேற்று மதியத்திற்கு பிறகே தொடங்கியது. மேற்கு ரெயில்வேயில் காலை முதலே ரெயில் சேவை தொடங்கியது. பஸ், ரெயில் போக்குவரத்து தொடங்கியதை அடுத்து நேற்று மும்பையில் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்ப தொடங்கியது.

இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். எனினும் வானிலை ஆய்வு மையம் மீண்டும் பலத்த மழை பெய்யும் என அறிவித்து இருந்ததால் நேற்று பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை.

பள்ளி, கல்லூரிகள் தவிர பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதேபோல அரசு அலுவலகங்களும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடியே காணப்பட்டது.
தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வாய்ப்பு இல்லை’ ராஜ்நாத்சிங் திட்டவட்டம்


தமிழகத்தில் ஆட்சியை கலைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆகஸ்ட் 31, 2017, 05:15 AM
புதுடெல்லி,


தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு மத்திய மந்திரிகளை சந்தித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் மத்திய மந்திரிகள் அருண்ஜெட்லி, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தனர்.

இதனைத்தொடர்ந்து நேற்று காலை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை அமைச்சர்கள் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின்போது பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, டாக்டர் மைத்ரேயன் எம்.பி. மற்றும் மனோஜ்பாண்டியன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

சந்திப்புக்கு பின்னர், தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

மரியாதை நிமித்தமான சந்திப்பு

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.17 ஆயிரம் கோடி நிதியை உடனே விடுவிக்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து அமைச்சர்கள், நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் வலியுறுத்தினர். தற்போது மரியாதை நிமித்தமாக உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை சந்தித்தோம்.

மத்திய அரசுடன் சுமுகமான உறவு வைத்துக்கொண்டு, தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை பெற போராடி வருகிறோம். நீட் தேர்வு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவால் பிரச்சினையாகிவிட்டது. மீண்டும் அதற்கு ஒரு நல்ல முடிவு காண நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆட்சி கலைப்பு இல்லை

இதற்கிடையே மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்குடன் நடந்த சந்திப்பின்போது, தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருவது பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அமைச்சர்களிடம், ‘தமிழகத்தில் ஆட்சியை கலைக்க எந்த வாய்ப்பும் இல்லை’ என்று ராஜ்நாத்சிங் திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

முகாந்திரம் இல்லை

மேலும், ‘அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள 19 எம்.எல்.ஏ.க்களும் முதல்- அமைச்சர் மீது தான் நம்பிக்கை இல்லை என்று கூறி யிருக்கிறார்கள். முதல்- அமைச்சர் யார்? என்பதை எம்.எல்.ஏ.க்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இதில் கவர்னர் எந்த முடிவும் எடுக்க முடியாது. கட்சியின் உள் விவகாரங்களில் கவர்னர் தலையிட முடியாது. எனவே, ஆட்சியை கலைப்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை‘ என்று அமைச்சர்களிடம் அவர் உறுதிபட தெரிவித்துள்ளதாக கூறப்படு கிறது.

‘நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் அதற்காக சபாநாயகரை தான் சந்திக்க வேண்டும். கவர்னரையும், ஜனாதிபதியையும் ஏன் சந்திக்கிறார்கள்? என்று புரியவில்லை’ என்றும் ராஜ்நாத்சிங் கூறியதாக தெரிகிறது.

தலையங்கம்

வாகன ஓட்டிகளை இது பாதிக்கும்



பொதுவாக அரசு பிறப்பிக்கும் எந்தவித சட்டம் என்றாலும் சரி, எந்தவித உத்தரவு என்றாலும் சரி, மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், மக்கள் விரும்பத்தக்கதாகவும், எந்தவித சிக்கலுமின்றி அவர்கள் நடைமுறைப்படுத்தக்கூடியதாகவும் இருக்கவேண்டும்.

ஆகஸ்ட் 31 2017, 03:00 AM

பொதுவாக அரசு பிறப்பிக்கும் எந்தவித சட்டம் என்றாலும் சரி, எந்தவித உத்தரவு என்றாலும் சரி, மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், மக்கள் விரும்பத்தக்கதாகவும், எந்தவித சிக்கலுமின்றி அவர்கள் நடைமுறைப்படுத்தக்கூடியதாகவும் இருக்கவேண்டும். அத்தகைய உத்தரவுகளைத்தான் வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். ஆனால், தமிழக அரசின் போக்குவரத்துத்துறை நாளை முதல் அமலுக்கு கொண்டுவரும் ஒரு உத்தரவு, எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. இதுவரையில் தமிழ்நாட்டில் உள்ள பஸ், லாரி, டிராக்டர், கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற அனைத்து மோட்டார் வாகனங்களை ஓட்டிச்செல்பவர்களும் தங்களுடைய ஓட்டுனர் உரிமம் என்று அழைக்கப்படும் டிரைவிங் லைசென்சின் ஒரிஜினலை வீட்டில் பத்திரமாக வைத்துவிட்டு, நகலை மட்டும் வாகனத்தில் எப்போதும் வைத்திருப்பார்கள். வழியில் போக்குவரத்து அதிகாரியோ அல்லது போக்குவரத்து போலீசாரோ சோதனை நடத்தும் நேரத்தில் அந்த நகல் உரிமத்தை அவர்களிடம் காட்டுவார்கள்.

சிலநேரம் ஏதாவது விபத்துகள் நடந்தால் அல்லது போக்குவரத்து விதிமீறல் நடந்தால், அதிகாரிகள் அந்த வாகனத்தை தங்கள் வசம் வைத்துக்கொண்டு, ‘ஒரிஜினல் லைசென்சை எடுத்துக்கொண்டு வா’ என்பார்கள். இந்த முறையில் இதுவரையில் எந்தவித சிக்கலும் இல்லாமல் இருந்தது. ஆனால், திடீரென போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 22–ந்தேதி பத்திரிகை நிருபர்களிடம் ஒரு அறிவிப்பை அறிவித்தார். அதாவது, செப்டம்பர் 1–ந்தேதி முதல் எல்லோரும் ஒரிஜினல் டிரைவிங் லைசென்சை எப்போதும் தங்கள் வசம் வைத்திருக்கவேண்டும். அப்படி வைத்திருக்கவில்லை என்றால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஒரிஜினல் லைசென்சு கையில் வைத்திருக்காதவர்களுக்கு ரூ.500 வரை அபராதம் அல்லது 3 மாதம் சிறைத்தண்டனையோ, இரண்டும் சேர்த்தோ விதிக்கப்பட வழி இருக்கிறது. மத்திய மோட்டார் வாகன சட்டத்தில்கூட இப்படி ஒருபிரிவு இல்லை. மற்ற மாநிலங்களிலும் இப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. ஏற்கனவே மத்திய அரசாங்கம் ‘டிஜிலாக்கர்’ முறை அதாவது, இணையதள பெட்டகம் முறைக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதன்மூலம் டிஜிலாக்கர் ‘ஆப்’ என்று கூறப்படும் செயலியை செல்போனில் டவுன்லோடு செய்துகொண்டு, அந்த டிஜிலாக்கரில் நமது டிரைவிங் லைசென்சை பதிவு செய்துகொள்ளலாம். போக்குவரத்து அதிகாரிகள் அல்லது போக்குவரத்து போலீசார் சோதனை செய்யும்போது, செல்போனில் இருந்து அந்த லைசென்சை பதிவு இறக்கம் செய்து காட்டிக்கொள்ளலாம். அதுவே செல்லுபடியாகத்தக்கது என்று மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இப்போது இணையதள உலகத்தில் எல்லோரும் வாழ்ந்துகொண்டிருக்கும்போது, இதுபோன்ற வசதிகளை பயன்படுத்தாமல், இன்னும் பழைய காலமுறைக்கு செல்லச்சொல்வது விந்தையாக இருக்கிறது. ரெயில் டிக்கெட், விமான டிக்கெட் எல்லாவற்றையுமே செல்போனில் பதிவுசெய்து அதை காட்டினால்போதும் என்ற காலக்கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதுபோன்ற முறைகளை பயன்படுத்தவேண்டுமே தவிர, ஒரிஜினல் லைசென்சை எப்போதும் கையில் வைத்துக்கொள் என்றால் நிச்சயமாக சாத்தியமில்லை. மேலும் மழைகாலங்களில் இந்த லைசென்சு மழையில் நனைந்து சேதமடைய வாய்ப்பிருக்கிறது. இதுபோல தொலைந்துபோனாலும் போலீசில் புகார் செய்தாலும், ஒரு மாதம் கழித்தபிறகுதான் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழை தருவார்கள். பின்னர் அதை வைத்துத்தான் டூப்ளிகேட் லைசென்சு வாங்க வழிவகை இருக்கும். இன்றைய இணையதள உலகில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கூட கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, ‘பிரிண்ட் அவுட்’ எடுத்துத்தான் பயன்படுத்தி கொண்டிருக்க, அதுவே எல்லா தஸ்தாவேஜுகளுக்கும் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பல நிறுவனங்களில் டிரைவர்களின் ஒரிஜினல் லைசென்சை வாங்கிக்கொண்டுதான் வேலைகொடுக்கிறார்கள். அவர்களுக்கும் இது பாதிப்பு. வாகன ஓட்டிகளை இன்னலுக்குள்ளாக்கும் இந்த உத்தரவு, தேவையில்லை என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது.








Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...