Thursday, March 29, 2018

Ex-VC of law varsity seeks advance bail 

TIMES OF INDIA 29.03.2018

Chennai: Former vice-chancellor of Tamil Nadu Dr Ambedkar Law University P Vanangamudi has approached the Madras high court for anticipatory bail, apprehending arrest in a vigilance case registered against him for bribery to the tune of Rs 30 lakh.

The case is likely to be heard by the high court on Monday. Vanangamudi said he had been fixed in the case by his rivals with an ulterior motive. The entire complaint was based on fabled fact and the same was concocted to the core, he said, adding that the complaint had been lodged only to harass him. TNN
Re-test is unfair for us, leak was in Delhi: City students
It Is Required To Maintain Sanctity Of Board: CBSE

TIMES NEWS NETWORK   29.03.2018

Chennai: The joy of getting over the exam fever, with mathematics on the last day, was shortlived for Class X CBSE students. On Wednesday, soon after students emerged cheerfully from exam halls, happy with an “easy” paper, the board announced it would conduct the Class X maths and Class XII economics papers again due to an alleged leak of questions in Delhi.

While several parents argued that when the leak had allegedly occurred in Delhi, it is unfair to students from other regions, who would also have to rewrite the exam, CBSE officials said since the leak was on social media, the extent of the leak could not be known. The board said reconducting the exam was essential “with the view to uphold the sanctity of the board, examinations, and in the interest of fairness to the students.”

Confusion, fear and anger followed, with students and parents questioning the veracity of the news and expressing dissapointment at schedules going haywire.

“It is exhausting to write an exam all over again. For Class X (non-Sanskrit) students, maths was the last paper and we were already into the holiday mood. We didn’t expect this decision immediately after the exam,” said Avinash, a Class X student from the city.

For Class XII students, IIT Humanities entrance is scheduled on April 15, while IIT JEE will be held on April 8 (online mode) and April 15-16 (offline mode).

Parents and schools said the re-exam would take a psychological toll on students preparing for entrance tests.

“It is traumatic for students. My son has psychology and sociology exams and both take up time to study, placing an exam in between will eat into that time. And after finishing the exams, there are other entrance tests to focus on. So either way this is very upsetting,” said Divya, a parent. Some parents demanded that college entrance tests should be rescheduled if the re-exam comes in the way of preparations.

Vacation plans have also taken a hit. Shreeniketan School said it had to call back a few students who had left town immediately after the exam. The school correspondent said parents and schools have to work together to pacify students and allay their fears about the reexamination. 


கோவை- ராஜபாளையம்- செங்கோட்டைக்கு நேரடி சிறப்பு ரயில்: பயணிகள் வரவேற்பு

By விருதுநகர் | Published on : 29th March 2018 07:54 AM |


கோவை-ராஜபாளையம்- செங்கோட்டை சிறப்பு ரயில் பாலக்காடு வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை ரத்துசெய்து அட்டவணையில், நேர்வழியில் செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளதை பயணிகள் வரவேற்றுள்ளனர்.

இந்த ரயில் கோவையிலிருந்து புறப்பட்டு பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி, மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக செங்கோட்டை செல்வதாக இருந்தது. தற்போது வெளியிட்டுள்ள அட்டவணையில் கோவையிலிருந்து நேரடியாக செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஏப்ரல் 9, 16, 23, 30, மே 7, 14, 21, 28 ,ஜூன் 4, 11, 18, 25, ஜூலை 2 தேதிகளில் கோவையில் இரவு 11.50க்கு புறபட்டு, விருதுநகருக்கு காலை 6.38 மணிக்கும், ராஜபாளையத்துக்கு 7.50 மணிக்கும் வந்து செங்கோட்டை செல்கிறது.

மறுமார்க்கத்தில் ஏப்ரல் 10, 17, 24, மே 1, 8, 15, 22, 29 ஜூன் 5, 12, 19, 26 ஜூலை 3-இல் செங்கோட்டையில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு, ராஜபாளையத்துக்கு 6 .28 மணிக்கும், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு 6.43 மணிக்கும், சிவகாசிக்கு இரவு 7 மணிக்கும், திருத்தங்கலுக்கு 7.08 மணிக்கும், விருதுநகருக்கு 7.28 மணிக்கும் வந்து கோவைக்கு அதிகாலை 4.30 மணிக்கு செல்கிறது.

கோடை விடுமுறைக்காக விடப்பட்ட இந்த ரயிலுக்கு தற்போது முன்பதிவு தொடங்கி உள்ளது. இந்த ரயில் நேர்வழியில் இயக்கப்படுவதை அறிந்து நெல்லை மற்றும் விருதுநகர் மாவட்ட பயணிகள் வரவேற்றுள்ளனர்.
சென்னை - கொல்லம் நாளை முதல் ரயில் சேவை : எட்டு ஆண்டுகளுக்குப்பின் துவக்கம்

Added : மார் 29, 2018 01:52 

  எட்டு ஆண்டுகளுக்கு பின், சென்னையில் இருந்து, கேரளா மாநிலம் கொல்லத்திற்கு, நாளை முதல், மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்குகிறது.செங்கோட்டை -- புனலுார் இடையே, 112 ஆண்டுகள் பாரம்பரியமிக்க, 50 கி.மீ., மீட்டர் கேஜ் பாதை, 358 கோடி ரூபாய் செலவில், அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள், 2010, செப்., 20ல் துவங்கின. இப்பாதையில், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.இப்பாதையில், செங்கோட்டை - புது ஆரியங்காவு; எடமன் - புனலுார் இடையே, 2017ல் பணி முடிந்து, ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இப்பாதையில், புது ஆரியங்காவு - எடமன் இடையே பாதை பணி நடந்து வந்தது. செங்கோட்டை - புனலுார் ரயில் பாதை, மலைகளில் அமைக்கப்பட்டுள்ளதால், பணிகளை முடிக்க, எட்டு ஆண்டுகளாகி விட்டன.

இப்பாதையில், பணிகள் நிறைவடைந்ததால், புது ஆரியங்காவு - எடமன் இடையே, தென்பிராந்திய ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், ஒரு மாதத்திற்கு முன், விரைவு ரயில் இயக்கி சோதனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, பயணியர் ரயில் இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால், இப்பாதையில், எட்டு ஆண்டுகளுக்கு பின், நாளை மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்குகிறது.சென்னை - கொல்லம் முதல் சிறப்பு ரயில், தாம்பரத்தில் இருந்து, நாளை மாலை, 5:30 மணிக்கு புறப்பட்டு, விருத்தாசலம், திருச்சி, மதுரை, ராஜபாளையம் வழியாக மறுநாள் அதிகாலை, 5:50 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். செங்கோட்டையில் இருந்து காலை, 6:00 மணிக்கு புறப்பட்டு, 10:30 மணிக்கு கொல்லம் சென்றடையும். கொல்லத்தில் இருந்து, வரும், 31ம் தேதி, மதியம், 1:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள், அதிகாலை, 5:05 மணிக்கு, தாம்பரம் வந்தடையும்.இந்த ரயில்பாதை திறக்கப்பட்டுள்ளது, சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.


- நமது நிருபர் -
தவறு இருந்தால் கைது செய்யட்டும்'

Added : மார் 29, 2018 01:07

சென்னை: 'என் மீது தவறு இருந்தால், தாராளமாக கைது செய்யட்டும்' என, இளவரசி மகன், விவேக் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: சிங்கப்பூரில் வசிக்கும், என் உடன்பிறந்த சகோதரி வழியாக, வெளிநாடுவாழ் இந்தியர் என்ற பிரிவில், முறையான சான்றிதழ்களை சமர்ப்பித்த பின், கல்லுாரியில் சேர்ந்தேன். இப்போதும், அது சம்பந்தமான சான்றிதழ்களை சமர்ப்பிக்க, தயாராக இருக்கிறேன்.மூத்த அமைச்சராக இருக்கும், ஜெயகுமார், இது குறித்த உண்மைகளை அறியாமல், என்னை கைது செய்யப் போவதாகவும் கூறியுள்ளார். என் மீது தவறு இருந்தால், தாராளமாக கைது செய்யட்டும். இவ்வாறு விவேக் கூறியுள்ளார்.

ஏர் இந்தியா விமான பங்குகள் 76 சதவீதம் விற்க மத்திய அரசு ஒப்புதல்

Added : மார் 28, 2018 18:43 



  புதுடில்லி: மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியாவின் 76 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது: கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரை குழு கூட்டத்தில் ரூ.50 ஆயிரம் கோடிக்கு கடன் சுமை கொண்ட ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்வதற்கான கொள்கையை கோரி இருந்தது. மேலும் விமானப்போக்குவரத்துதுறையும் ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து அதன் பங்குகளை 76 சதவீதம் அளவிற்கு விற்பனை செய்து கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கவர்னரின் பெருந்தன்மை




பன்வாரிலால் புரோகித் தமிழக கவர்னராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6–ந்தேதி பதவியேற்றார்.

மார்ச் 29 2018, 03:00 AM
பன்வாரிலால் புரோகித் தமிழக கவர்னராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6–ந்தேதி பதவியேற்றார். அன்றிலிருந்து கவர்னரின் பேச்சுகள், செயல்கள் அனைத்தும் தமிழக மக்களால் ஆர்வத்துடன் உற்றுநோக்கப்படுவதாகவும், பேசப்படுவதாகவும், வரவேற்கப்படுவதாகவும் அமைந்துள்ளது. கவர்னர் மாளிகையில் பதவியேற்றவுடன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, நான் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அரசியல் சட்டத்தின் அடிப்படையிலேயேதான் அமைந்திருக்கும். அனைத்து முடிவுகளும் அது சிறிதாக இருந்தாலும் சரி, பெரிதாக இருந்தாலும் சரி, எவ்வித அரசியல் கண்ணோட்டமும் இருக்காது. என்னுடைய முடிவுகள் எல்லாம் தகுதியின் அடிப்படையில்தான் இருக்கும். வளர்ச்சிப்பணிகள் அனைத்திற்கும் அரசுக்கு முழுஒத்துழைப்பையும் தருவேன். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருப்பதை உறுதி செய்துகொள்வேன். எனக்கு டெல்லியில் நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதிஉதவி கிடைக்க முயற்சிசெய்வேன் என்று தெரிவித்தது மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதன்பிறகு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செல்லும்போதெல்லாம் அங்கு தூய்மை இந்தியா திட்டத்தை விரைவுபடுத்தி, அவரே துப்புரவு பணிகளில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்பட உயர் அதிகாரிகளை அழைத்து வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்படுவதை கேட்டறிகிறார்.

பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் சேலம் பெரியார், திருச்சி பாரதிதாசன், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஒரு வெளிப்படைத்தன்மையையும், சிறந்த நிர்வாகமுறையையும் கையாண்டுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தமிழ்நாட்டில் இருக்கும்போது, கவர்னர் இவ்வாறு அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்துவது மாநில சுயாட்சியின் தத்துவத்திற்கு எதிரானது என்றுகூறி, செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், கவர்னர் செல்லும் இடங்களில் எல்லாம் தி.மு.க.வினர் கருப்புகொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தராக தம்ம சூர்யநாராயண சாஸ்திரி நியமிக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து, ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகியுள்ள ஒருவரை மீண்டும் அதே பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக நியமிப்பதா? என்று அறிக்கை வெளியிட்டார்.

இந்தநிலையில், மு.க.ஸ்டாலினை கவர்னர் தன்னை சந்திக்க வருமாறு அழைப்புவிடுத்தார். எல்லோரும் கவர்னரை சந்திக்க நேரம் கேட்பார்கள். ஆனால், கவர்னரே மு.க.ஸ்டாலினை அழைத்தது தமிழக மக்களுக்கு வியப்பை அளித்தது. மு.க.ஸ்டாலினிடம் அவர், சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் விதிகளின்படிதான் நடந்தது. தேர்வுக்குழு பரிந்துரை செய்த மூவரில் அவரும் ஒருவர். அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எதுவும் தற்போது இல்லை. முன்பு ஒழுங்கு நடவடிக்கைக்குழு விசாரித்து அவர்மீது தவறு எதுவும் இல்லை என்று அறிவித்துள்ளது. மாவட்டங்களில் நான் ஆய்வு நடத்துவது இல்லை. வளர்ச்சித்திட்டங்களை தெரிந்துகொள்ளத்தான் அவர்களை சந்திக்கிறேன் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் நீங்கள் சொன்னதை நான் யோசிக்கிறேன். நான் பரிசீலித்து முடிவு எடுக்கிறேன் என்று சொன்னதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். கவர்னரின் இந்த பெருந்தன்மை நிச்சயமாக பாராட்டுக்குரியது. ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்றமுறையில் மு.க.ஸ்டாலின் சொன்னதற்கு அவரையே அழைத்து விளக்கம் சொல்வது என்பது இதுவரையில் யாரும் செய்யாத ஒன்றாகும். இதே உறவு அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் இடையேயும் தொடரவேண்டும்.


NEWS TODAY 2.5.2024