Thursday, March 29, 2018

சென்னை - கொல்லம் நாளை முதல் ரயில் சேவை : எட்டு ஆண்டுகளுக்குப்பின் துவக்கம்

Added : மார் 29, 2018 01:52 

  எட்டு ஆண்டுகளுக்கு பின், சென்னையில் இருந்து, கேரளா மாநிலம் கொல்லத்திற்கு, நாளை முதல், மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்குகிறது.செங்கோட்டை -- புனலுார் இடையே, 112 ஆண்டுகள் பாரம்பரியமிக்க, 50 கி.மீ., மீட்டர் கேஜ் பாதை, 358 கோடி ரூபாய் செலவில், அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள், 2010, செப்., 20ல் துவங்கின. இப்பாதையில், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.இப்பாதையில், செங்கோட்டை - புது ஆரியங்காவு; எடமன் - புனலுார் இடையே, 2017ல் பணி முடிந்து, ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இப்பாதையில், புது ஆரியங்காவு - எடமன் இடையே பாதை பணி நடந்து வந்தது. செங்கோட்டை - புனலுார் ரயில் பாதை, மலைகளில் அமைக்கப்பட்டுள்ளதால், பணிகளை முடிக்க, எட்டு ஆண்டுகளாகி விட்டன.

இப்பாதையில், பணிகள் நிறைவடைந்ததால், புது ஆரியங்காவு - எடமன் இடையே, தென்பிராந்திய ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், ஒரு மாதத்திற்கு முன், விரைவு ரயில் இயக்கி சோதனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, பயணியர் ரயில் இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால், இப்பாதையில், எட்டு ஆண்டுகளுக்கு பின், நாளை மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்குகிறது.சென்னை - கொல்லம் முதல் சிறப்பு ரயில், தாம்பரத்தில் இருந்து, நாளை மாலை, 5:30 மணிக்கு புறப்பட்டு, விருத்தாசலம், திருச்சி, மதுரை, ராஜபாளையம் வழியாக மறுநாள் அதிகாலை, 5:50 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். செங்கோட்டையில் இருந்து காலை, 6:00 மணிக்கு புறப்பட்டு, 10:30 மணிக்கு கொல்லம் சென்றடையும். கொல்லத்தில் இருந்து, வரும், 31ம் தேதி, மதியம், 1:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள், அதிகாலை, 5:05 மணிக்கு, தாம்பரம் வந்தடையும்.இந்த ரயில்பாதை திறக்கப்பட்டுள்ளது, சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.


- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees The Court refused to interfe...