Thursday, March 29, 2018

பேருந்து வேலைநிறுத்தம்: சென்னை போக்குவரத்துக் கழகத்துக்கு எவ்வளவு இழப்பு? #VikatanRTI

ஸ்ரீராம் சத்தியமூர்த்தி   VIKATAN   28.03.2018




இந்தாண்டு ஜனவரி மாதம் புத்தாண்டுக்கு ஊருக்குச் சென்றுவிட்டு, பணிக்குத் திரும்பியவர்கள், ஜனவரி 4-ம் தேதி அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவர்களுக்குத் தான் தெரியும், இந்த வருடம் எவ்வளவு சிக்கலுடன் தொடங்கியது என்று. ஆம்...சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் எட்டு நாட்கள் நீடித்த போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக, அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. பணியாளர்களுக்கு போதிய சலுகைகளைத் தராமல், பொதுமக்களுக்கு உரிய சேவைகளை வழங்க முடியாமல் போக்குவரத்துக்கழகங்கள் சிக்கித் தவிக்க நேரிட்டது. சென்னை மண்டல போக்குவரத்துக் கழகத்திற்கு மட்டும், ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஒரு வார காலத்தில் மட்டும் சுமார் 7 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.



போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்த காலத்தின்போது, சென்னை மண்டல போக்குவரத்து கழகத்திற்கு எவ்வளவு ரூபாய் வருமானம் கிடைத்தது என்ற விவரம், தகவல் அறியும் உரிமைச் சட்டமான ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்டது. அதில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்துக்கு முந்தைய நாளான 4-ம் தேதி வரையிலான காலத்தில் முறையே 2.46, 2.55, 2.55, 2.12 கோடி ரூபாய் என்று தெரிய வந்துள்ளது. ஆனால், வேலை நிறுத்தம் தொடங்கிய அடுத்த நாளே ஒரு நாள் வருமானம் 67.39 லட்சமாக குறைந்தது. அதேபோல் ஜனவரி 4-ம் தேதியன்று சராசரியாக 3,167 சேவைகள் இயக்கப்பட்டுள்ளன. ஆனால் 5-ம் தேதி அதுவும் குறைந்து 1,006 சேவைகளே இயக்கப்பட்டன.

வேலை நிறுத்த சமயத்தில் தற்காலிக பணியாளர்களை போக்குவரத்துக்கழகம் வேலைக்கு அமர்த்தியது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மட்டும் 80 ஓட்டுநர்கள் மற்றும் 38 நடத்துநர்கள் தற்காலிகப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான ஊதியம் ஓட்டுநருக்கு தினமும் 436 ரூபாயும், நடத்துநருக்கு தினமும் 429 ரூபாயும் வழங்கப்பட்டது.

சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தைப் பொறுத்தமட்டில் திங்கள் முதல் வெள்ளிவரை இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை 3,439, வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முறையே 3,150 மற்றும் 3,039 பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இதன்படி பார்த்தால் வாரம் முழுவதும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சராசரியாக 3,000 பேருந்துகளை இயக்குகிறது. ஆனால், வேலை நிறுத்த காலத்தில் சராசரியாக 1,300 பேருந்துகள் மட்டுமே இயங்கியுள்ளன. அதேபோல் தினமும் சராசரியாக 2 கோடியே 40 லட்சம் வருவாய் ஈட்டிவந்த போக்குவரத்துக்கழகங்கள், வேலை நிறுத்தம் நடைபெற்ற 7 நாட்களில் சராசரியாக 98 லட்சம் ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டியுள்ளன. இதனால் ஏற்பட்ட வருமான இழப்பு எவ்வளவு என்ற கேள்விக்கு சென்னை மண்டலம் ஆண்டு வாரியாகத்தான் இழப்பு கணக்கிடப்படும் என்று கூறியிருந்தது. ஆனால் பெறப்பட்ட சராசரி வருமானங்களோடு ஒப்பிட்டாலே, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு மட்டும் 7 கோடி ரூபாய் நஷ்டம் என்று தெரிய வந்துள்ளது.



மக்களைப் பொறுத்தவரையில் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். தனியார் கால் டாக்ஸிகள், பேருந்து வேலை நிறுத்தத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அதிகபட்ச கட்டணத்தை வசூலித்துள்ளன. பொதுவாக 20 ரூபாயில் ஷேர் ஆட்டோக்களில் பயணிப்போர், வேறு வழியின்றி 50 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை கொடுத்து செல்ல நேரிட்டது. ஜனவரி 2 முதல் 4-ம் தேதிவரை வாராந்திர கட்டணச் சலுகைக்கான பாஸ் வாங்கியவர்கள் சென்னையில் மட்டும் 39 பேர். அதன் மூலம் கிடைத்த வருமானம் 11,700 ரூபாய். 'பஸ்ஸே ஓடலை, ஆனா பாஸ் மட்டும் வைச்சு என்ன செய்யுறது' என்பதுதான் அவர்களின் வேதனை.

இதே கேள்விகளை சேலம் மண்டல போக்குவரத்துக் கழகத்திடமும் ஆர்டிஐ மூலம் கேட்டோம். அதில், அவர்கள் வேலைநிறுத்தம் நடைபெற்ற ஏழு நாட்களில் தோராயமாக 35.65 சதவிகித வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம், ஆண்டு இறுதியில்தான் வருவாய் இழப்பைக் கணக்கிட முடியும் என்று கூறும்போது, சேலம் மண்டல போக்குவரத்துக்கழகம் மட்டும் வருவாய் இழப்பு பற்றி தெரிவிப்பது எப்படி என்ற கேள்வியும் எழுகிறது.

சென்னை மணடலத்துக்கு மட்டுமே ஒரு வாரத்தில் 7 கோடி ரூபாய் நஷ்டம் என்றால், மாநிலம் முழுவதும் உள்ள 6 மண்டலங்களையும் சேர்த்தால் எவ்வளவு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கும்? மக்களும் பாதிப்புக்குள்ளாகி, போக்குவரத்துக்கழகங்களுக்கும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், அதனைத் தொடர்ந்து, பேருந்து கட்டண உயர்வு என்ற அறிவிப்பால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். டிக்கெட் கட்டணம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. அப்படியென்றால், சாதாரணமாக நாள் ஒன்றுக்கு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் வருவாய் பெறும் போக்குவரத்துக் கழகங்கள், இப்போது நாளொன்றுக்கு குறைந்தது 5 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டும்.

எனவே, போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், பொதுமக்களுக்கும், ஊழியர்களுக்கும் மட்டுமே சிக்கல் என்று நினைத்தால், போக்குவரத்துக்கழகங்களின் வருவாயிலும் பாதிப்பை ஏற்படுத்தி, அவற்றின் ஆண்டு வருவாயில் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c

ஜெ.நிவேதா     VIKATAN   28.03.2018

சர்க்கரைநோய்... பெயரில்தான் சர்க்கரை இருக்கிறதே தவிர, இன்றைக்குப் பெரும்பாலானவர்களுக்கு வயிற்றில் `புளி’யைக் கரைத்துக்கொண்டிருக்கும் நோய். காரணம், இது ஏற்பட்டால், அதன் பின்னாலேயே பல தொற்றா நோய்கள் வரிசைகட்டி நிற்கும் என்பதுதான். ஒருவருக்கு சர்க்கரைநோய் இருக்கிறதா என்பதை ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைவைத்துக் கணக்கிடலாம். இந்த அளவு, சாப்பாட்டுக்கு முன்னர் 70 முதல் 99 எம்.ஜி/டெ.லி (mg/dl)-க்குள் இருக்க வேண்டும். சாப்பாட்டுக்குப் பின்னர் 140 எம்.ஜி/டெ.லி-க்கு குறைவாக இருக்க வேண்டும் என்பது இந்தச் சோதனையின் அடிப்படை. ஆனால், இந்த சாதாரண பரிசோதனை முறையைவிட துல்லியமாகக் கணக்கிடக்கூடிய இன்னொரு முறை இருக்கிறது, அது ஹெச்.பி.ஏ.1.சி (HbA1c).



2017-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, `உலகிலுள்ள பதினோரு பேரில் ஒருவருக்கு சர்க்கரைநோய் உண்டு’ என்கிறது. டைப் 2 டயாபட்டீஸ், வாழ்வியல் நோய்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. சர்க்கரைநோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாவிட்டாலும், உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், அதன் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் சர்க்கரைநோயை உறுதி செய்வதற்கும், அதைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கும் இருக்கும் வழிமுறைகளில் முக்கியமான ஹெச்.பி.ஏ.1.சி சோதனை பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கணக்கிடும் வழக்கமான முறையைவிட, ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட் துல்லியமாக இருக்கும். ஏனென்றால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்டறியும் முறைகளின் ரிசல்ட், பரிசோதனைக்குள்ளானவர் அன்றைய தினமும், அதற்கு முந்தைய தினமும் என்ன சாப்பிட்டார் என்பதைப் பொறுத்தே அமையும். ஆனால் ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட்டில் கடந்த மூன்று மாதங்களாக குளூக்கோஸ் எந்த அளவுக்கு ரத்தத்தில் அதிகரித்திருக்கிறது, எவ்வளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் அறிந்துகொள்ளலாம். இந்த அளவை சற்று அதிகரித்துப் புதிதாக ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது அமெரிக்க சர்க்கரைநோய் சங்கம் (American Diabetes Association). இந்தப் பரிசோதனை, அமெரிக்க சர்க்கரைநோய் சங்கம் வலியுறுத்தும் புதிய அளவீடு குறித்து சர்க்கரைநோய் நிபுணர் ராம்குமாரிடம் பேசினோம்...

"நமது உடம்பிலுள்ள கணையம் எனும் நாளமில்லா சுரப்பியில் சுரக்கும் இன்சுலின் ஹார்மோன் குறைவாக சுரக்கும் போதும், சரியாக வேலை செய்யாத போதும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகள், உடலிலுள்ள சர்க்கரையின் அளவை பரிசோதனை செய்வதுக்கொள்வது போல், ஹெச்.பி.ஏ.1.சி. (HbA1c) பரிசோதனையையும் செய்துக்கொள்ளவது நல்லது. இந்த பரிசோதனையின் மூலம் கிடைக்கும் அளவு, ரத்தச்சிவப்பணுக்களிலுள்ள சர்க்கரை அளவைக் குறிக்கும். ஹெச்.பி.ஏ.1.சி. பரிசோதனையில், ஹெச்.பி.எல்.சி. (HPLC) முறை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒருவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா இல்லையா என்பதும், பாதிக்கப்பட்டுள்ளார் எனில் அவரின் சர்க்கரை அளவு கடந்த மூன்று மாதங்களில் எவ்வளவு கட்டுப்பாட்டோடு இருந்துள்ளது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கேற்ப மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும்.

இந்தப் பரிசோதனை மூலம் கண்டறியப்படும் அளவு, 5.6 சதவிகிதம் வரை இருந்தால் சர்க்கரைநோய் பாதிப்பு இல்லை என்று அர்த்தம். 5.7 முதல் 6.4 சதவிகிதம் வரை இருந்தால், சர்க்கரைநோய் வரலாம் (Pre-Diabetes) என்று அர்த்தம். இவர்களுக்கு சர்க்கரைநோய் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.6.5 மேல் இருந்தால் சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட், வருடத்திற்க்கு இரண்டு அல்லது நான்கு முறை செய்யப்படும். 6.5 முதல் 7 சதவிகிதம் வரை இருந்தால் சர்க்கரைநோய் கட்டுக்குள் இருக்கிறது என்றும் பொருள். 7 சதவிகிதத்துக்கும் மேல் என்றால், சர்க்கரைநோய் கட்டுப்பாட்டில் இல்லை, 8 சதவிகிதத்துக்கு மேல் என்றால், மிக மோசமான நிலை என்று பொருள்.



ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்டின் இந்த அளவீடுகளில்தான் இப்போது சிக்கல் உருவாகியிருக்கிறது. இந்த 7 சதவிகிதம் என்ற அளவு, இப்போது அமெரிக்க மருத்துவர்கள் அமைப்பு (American college of physicians) மூலம் 8 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதுவே, அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் க்ளினிக்கல் எண்டோக்ரைணாலஜி (American Association of Clinical Endocrinolog), 6.5 சதவிகிதம் தான் சரியான அளவெனக் கூறுகின்றனர். அமெரிக்கன் டயாபிடிஸ் அசோசியேஷன் (American Diabetes Association) 7 சதவிகிதத்தையே சரியெனக் கூறுகின்றனர்.

இந்தியாவில் பெரும்பாலான மருத்துவர்கள் ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட் அளவுகளை, நோயாளியின் வயது மற்றும் அவரது உடலில் ஏற்கெனவே இருக்கும் பிரச்னைகளை வைத்துதான் அளவிடுவார்கள். பொதுவாக 6.5 முதல் 7 சதவிகிதம் வரை சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றுதான் நோயாளிகள் அறிவுறுத்தப்படுவார்கள். உதாரணமாக, சர்க்கரைநோயைத் தவிர உடலில் வேறு எந்தப் பிரச்னையும் இல்லாதவர்கள் 7 சதவிகிதம் என்ற அளவை மிகத் துல்லியமாக வைத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுவார்கள். உடல் சார்ந்த பிரச்னைகள் இருந்தால், நோயாளியின் உடல் சிகிச்சைக்கு முழுவதுமாக ஒத்துழைக்காமல் போகும் என்பதால் அவர்கள், 8 சதவிகிதம் வரை இந்த அளவை வைத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுவார்கள். இதுபோன்ற சூழலில் சர்க்கரைநோயைத் தவிர உடல் சார்ந்த எந்த பாதிப்பும் இல்லாத ஒருவர் 8 என்ற சர்க்கரை அளவை சரியானதாக நினைத்துக்கொண்டு, அதைப்பின்பற்றுவது அவரது சர்க்கரை பாதிப்பை தீவிரப்படுத்தக்கூடும். இப்படி சர்க்கரைநோய்க்கான பாதிப்பு அதிகரிக்கும்போது, உடல் சார்ந்த பிரச்னைகளும் அதிகரிக்கும். உதாரணமாக, மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகப் பிரச்னைகள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்" என்கிறார் சர்க்கரை மற்றும் நாளமில்லா சுரப்பி மருத்துவர் ராம்குமார்.

ஏன் இந்தச் சிக்கல்?

சர்க்கரைநோய்க்கான அளவை அமெரிக்க சர்க்கரைநோய் சங்கம் அதிகரித்ததுபோல், அண்மையில் ரத்த அழுத்தத்துக்கான அளவுகோலை அமெரிக்க இதயநல மருத்துவர்கள் சங்கம் குறைத்திருக்கிறது. இதுவரை 140/90 எம்.எம்.ஹெச்.ஜி என்று இருந்த அளவு, 130/80 என பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற அளவு மாற்றங்கள் குறித்து பொது மருத்துவர் கு.கணேசனிடம் பேசினோம்...



"சர்க்கரைநோய்க்கான அளவு எட்டாகிவிட்டால், 7-8 சதவிகிதம் அளவிலிருப்பவர்கள், தாங்கள் சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக நினைத்துக்கொண்டு, தங்களுடைய சிகிச்சை முறைகளைத் தளர்த்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அமெரிக்க சர்க்கரைநோய் சங்கத்தின் ஆய்வுகள், அங்கே வாழ்பவர்களின் வாழ்வியலைப் பொறுத்தது. அவர்கள் கூற்றுப்படி, ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட் அளவு 7 முதல் 8 சதவிகிதம்வரை, எந்த அளவிலிருந்தாலும், அது ஏற்படுத்தும் பாதிப்புகளில் மாற்றமிருக்காது என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இந்தியாவின் உணவு, சூழல், தட்பவெப்பநிலை முதலியவற்றை ஒட்டி இந்த ஆராய்ச்சி அமையவில்லை. அப்படியென்றால், `நாம் இப்போது பின்பற்றும் 6.5 - 7 சதவிகிதம் என்ற அளவு யாரால் முன்மொழியப்பட்டது?’ என நீங்கள் கேள்வி எழுப்பலாம். அது, இந்தியாவைச் சுற்றியுள்ள சீனா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளம் போன்ற நாடுகளின் ஒருங்கிணைந்த கோட்பாடு. ஆக, நமக்குப் பொருந்தும் அளவுகோல் 6.5 - 7 சதவிகிதம்தான்.

இது போன்ற அளவு விரிவாக்கங்கள், ஒருவரின் நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தவும், பாதிப்பே இல்லாதவர்களை நோயாளியாக்கவும் செய்துவிடும். இதெல்லாம் இன்று, நேற்று நடப்பதல்ல. சர்க்கரை அளவு, கொழுப்பு அளவு எனப் பல விஷயங்களில் அமெரிக்க ஆய்வுகள் நடத்தப்பட்டு, மாற்று அளவுகள் முன்மொழியப்பட்டிருக்கின்றன. இப்படி நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் மருந்து வியாபாரிகளுக்கு மட்டுமே நன்மை இருக்க முடியும். அமெரிக்க ஆய்வுகள் அனைத்தும், அனைத்து நேரங்களிலும் அனைத்து இடங்களிலும் பொருந்தாது. ஒவ்வோர் இடத்தைப் பொறுத்து மாறுபடும். மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு, இந்திய அளவில் மருத்துவ ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டும். குறைந்தபட்சம், இப்போதைய தீர்வாக இந்த ஆய்வு முடிவுகளை ஏற்காமலாவது இருக்க வேண்டும். இந்தியாவில் செய்யப்படும் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் அளவு நிர்ணயங்கள் மாற்றப்படுவது மட்டுமே சரியான மாற்றமாக இருக்கும்’’ என்கிறார் மருத்துவர் கு.கணேசன் அழுத்தம் திருத்தமாக!
Order to regularise government service 

Special Correspondent               2016 order

 
MADURAI:, March 29, 2016 00:00 IST


The Madras High Court Bench here has directed Regional Manager of Tamil Nadu Civil Supplies Corporation at Nagercoil in Kanyakumari district to regularise the services of a labourer who had been serving the corporation for the last 21 years.

Allowing a writ petition filed by the loadman, T. Manikandan, Justice Pushpa Sathyanarayana held that the TNCSC had been “deliberately dodging” from its duty to regularise the service of the petitioner though similar other employees were regularised in 2001.

Stating that employees were entitled to regularisation on completion of 480 days of continuous service in a period of 24 months, the judge directed the Regional Manager to regularise the services of the petitioner also since 2001 and pay him the consequential monetary benefits.

DGHS


Error in allotment of PG medical, dental seats 

Staff Reporter 

 
Bengaluru, March 29, 2018 00:00 IST

Thousands of aspirants left in the lurch

An error in the online post graduate medical and dental seat allotment process for the all-India quota seats has left thousands of aspirants in the lurch.

Candidates were taken aback as the seat allotment results published on Wednesday afternoon were withdrawn and termed as “null and void.”

Fresh results soon

An announcement on the official website of the medical counselling committee (MCC) under the Directorate General of Health Services, Ministry of Health and Family Welfare, stated, “Due to inadvertent/technical mistake. Result published today (afternoon) may be treated as null and void.” The announcement also said fresh results would be uploaded on the website shortly and added that the last date for reporting to colleges was extended to April 5. Students are dejected that the results were withdrawn and are worried that their results maybe changed.

A candidate who was allotted an MD seat in the Dr. B.C. Roy Post Graduate Institute of Paediatric Sciences, Kolkata, said he was all set to book his tickets to report to the college.

“But later in the evening, I came to know that the results have been withdrawn and I will now have to wait for the results to be announced once again to know where I have obtained a seat,” he said.
CBSE re-exam: students angry 

R. Ravikanth Reddy 


 Hyderabad, March 29, 2018 00:00 IST

It will affect the results, say teachers

An uncertain summer with the preparation for competitive exams hampered, and scheduled tours cancelled apart from increased pressure await thousands of students, with the Central Board of Secondary Education (CBSE) deciding to re-conduct the Mathematics examination for 10th class and Economics paper of 12th class after leakage of the question paper reported in some parts of the country.

“It’s unnecessary pressure on us for no fault of ours,” says K. Praneeth of CGR International School in Madhapur, who appeared for the 10th class Mathematics examination. His family had planned a tour to Tirupati and Chennai for the holidays, but even that looks uncertain now.

Vindhya of Howard Public School, Himayatnagar is not all that worried about taking the exam again as she is confident of her capabilities, but asks how fair it is for the officials to ask thousands of students to take the re-exam. “I have written the exam well today, but waiting for the new schedule and then going through the rigmarole is a bit painful,” she says. The re-conduct of the exam will also affect the 12th class students seriously preparing for the competitive exams as they have to travel in two boats at the same time, says Narsimha Reddy, Principal, Hyderabad Public School, Ramanthapur. This will hamper their preparations, more so in a highly competitive space like Hyderabad where students from other boards will concentrate on competitive exams while CBSE students will have to divide their time. Though the CBSE said that it will post the new dates within a week, teachers feel 15 to 20 days will be lost, and it will also affect the results. Generally 10th class results are expected in the last week of May but now that may move to June.

The decision has also thrown the schedule of school tours haywire. HPS Ramanthapur students are supposed to leave for a tour of Uttarakhand and Himachal Pradesh on April 12 but now all the tickets have to be re-booked or those students will lose out, both money and the tour.

Students also took to social media to pour their woes out and put up some serious questions for officials. Laced with sarcasm, a student asked: ‘Before re-exam, students have right to know (1) paper leak from where ? (2) who did it? (3) will government take hard action? (4) what guarantee that it will be not happen again?”

“Re-exam just doesn’t make things right; rather it is demoralising for the students. #CBSE Maths,” tweeted another. “After 8 years of CCE the 2018 X batch was asked to prepare for full syllabus board exam ALL OF A SUDDEN. This batch, worked REALLY hard for this maths exam. And now, a re-exam puts too much pressure on them,” tweeted another.
Venkatasamy takes over as new Accountant-General of Tamil Nadu

By Express News Service | Published: 29th March 2018 02:51 AM


CHENNAI: R Thiruppathi Venkatasamy, IA & AS, took over as Accountant-General (Accounts and Entitlements), Tamil Nadu, on Tuesday, according to a department press release.

Venkatasamy belongs to Indian Audit and Accounts Service, 2000 batch and was hitherto the Accountant-General of Economic and Social Services Audit (E&RSA) Tamil Nadu.

He completed his Master of Science in Agriculture from Tamil Nadu Agricultural University, Coimbatore and Master of Public Affairs (MPA) from the University of Minnesota, USA. Venkatasamy is also a Certified Information Systems Auditor (CISA).

The department said it was committed to ensure that its officers perform their duties strictly as per rules and maintain a very high level of integrity while performing their duties.

The department also sought to reassure stakeholders and the public that the office of the Accountant-General (A&E), Tamil Nadu, is committed to continue providing quality service on time in the areas of compilation of accounts of the State and performing entitlement functions like General Provident Fund, Pension, and Gazetted Entitlements of State Government employees.

NEWS TODAY 2.5.2024