Sunday, April 1, 2018

Court refuses relief to PF official held on bribery charge

TIMES NEWS NETWORK   01.04.2018

Chennai: Refusing any relief to an enforcement officer of the Employees’ Provident Fund Organisation (EPFO) who was arrested by the CBI in January last under the Prevention of Corruption Act, the Madras high court has dismissed his discharge plea.

Justice G Jayachandran passed the order on the plea moved by G Elumalai seeking to set aside the order of the XIII additional special court for CBI cases, Chennai, dated December 28, 2017.

On January 15, CBI had arrested Elumalai along with the prime accused E S Durga Prasad, regional commissioner of EPFO, in an alleged bribery case involving Saveetha Group of Institutions. Five others were also arrested in this connection. According to prosecution, Durga Prasad had allegedly demanded Rs 25 lakh as illegal gratification for favouring the educational group which runs a university and a few colleges in Tamil Nadu. Based on a tip, CBI sleuths laid a trap and nabbed Durga Prasad near Ambattur while accepting a bribe of Rs 14.5 lakh from Sengottiyan. When the plea came up for hearing, Elumalai submitted that he has only discharged his duty as an enforcement officer and there is no evidence to show that he received any amount as illegal gratification. Mere association with the other accused in an official capacity cannot be considered to make him aparty to the conspiracy.

“When no material was seized from me and when no incriminating evidence was placed before the court against me, the prosecution ought to have dropped the proceedings against me,” Elumalai contended. Relying on the evidence given by the prosecution, the judge said it appears from the material that when Durga Prasad received the bribe, this petitioner was present along with him. There is enough material to indicate that the petitioner herein had full knowledge of it and was party to the demand and acceptance of illegal gratification. Since prima facie case is made out against him that is sufficient to frame charges, the request to discharge the petitioner does not arise.
Limb lost, but not love: Couple wed in hospital

Shanmughasundaram.J@timesgroup.com 01.04.2018

Vellore: Love conquers all? Isn’t that’s the dog-eared cliché of improbable romantic novels?

It’s also the story of a 23-year-old woman who on Saturday married the love of her life in Vaniyambadi Government Hospital, where he was recuperating after losing a leg in a fall from a moving train on January 23.

To say Shilpa — from Masinagudi in Ooty, who met Vijay in class as a BSc (computer science) student at a Coimbatore college in 2013 — and her new husband are up against the odds would be putting it mildly.

Shilpa and Vijay graduated in 2017. Shilpa is yet to find a job (though, a relative said, in feverish SMSs to Vijay as he lay in hospital, she vowed to do whatever it took to provide for their new household).


STANDING UP FOR LOVE: Vijay lost his leg after falling off a moving train last January

After battle to get married, couple ready to take on life

Vijay, also 23, from Govindapuram in Vaniyambadi, had a temporary job as a data entry operator in Coimbatore when a friend gave him a lead: A promising job in Bengaluru.

While returning home after attending an interview for the post, he slipped and fell from a train near Bangarapet in Kolar district of Karnataka. Doctors at a hospital in Karnataka had to amputate his leg just below the knee. Doctors at the Karnataka hospital later referred referred him to Vaniyambadi Government Hospital.

Vijay, whose parents Ram and Muthamma are daily wage workers, hopes to find work in four months or so, by which time doctors said he would have started physiotherapy and should be able to get around with a walker.

Having overcome objections from her mother — anxious that Vijay may now not be able to provide for her daughter — to get married to, however, Shilpa is far from intimidated by the future, said a relative who arrived at Vaniyambadi Government Hospital for the marriage. “Her courage has rubbed off on Vijay,” he said.

“After they completed their studies, Shilpa and Vijay decided to get married,” the relative said. “They had their families’ blessings. Then tragedy struck.” After she learned about Vijay’s condition, Shilpa tried to convince her mother, a widow, and her relatives that she intended to go with the wedding, he said. Married life would not be easy but she did not care, the relative said.

One of Vijay’s relatives accompanied Shilpa on the train from Ooty. The wedding took everyone in the hospital by surprise. Wary of any adverse reaction from either family, officials discharged Vijay from the hospital. But patients in the ward and their relatives blessed the couple by sprinkling flowers on the groom and blushing bride by way. The nuptials may have caught the doctors off guard, but most were pleasantly surprised by Shilpa’s conviction.

“We were surprised when [Vijay] tied the knot with the girl,” a doctor said with a goodnatured smile. “She was wearing a traditional sari.”

வேலூர் விஐடி தின விழா: 4,187 மாணவர்களுக்கு ரூ.12 கோடி உதவித் தொகை
By DIN | Published on : 31st March 2018 02:23 AM |

சிறந்த மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கே.ரட்சணாவுக்கு தங்கப்பதக்கம், விருது வழங்கி கௌரவித்த விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன்.

வேலூர் விஐடி பல்கலைக்கழக தின விழாவில் 4,187 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ. 12.03 கோடி வழங்கப்பட்டது. மேலும், சிறந்த மாணவிக்கான வேந்தரின் தங்கப்பதக்கம் மாணவி கே.ரட்சணாவுக்கு வழங்கப்பட்டது.

விஐடி பல்கலைக்கழக தினம், விளையாட்டு விழா விஐடி அண்ணா அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, தலைமை வகித்து, பல்வேறு பிரிவுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கம், ரொக்க விருதுகளை வழங்கி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:

விஐடி மாணவர்கள் கல்வி, நன்னடத்தை, ஆராய்ச்சி உள்ளிட்ட அனைத்திலும் சாதனை படைத்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயிலும் விஐடி வளாகம் தூய்மை வளாகமாக விளங்கி வருகிறது. இதற்கு தூய்மை திட்டத்தில் மாணவர்களுக்கு உள்ள ஆர்வமும், அர்ப்பணிப்புமே காரணமாகும். விஐடியில் செயல்படுத்தப்பட்டு வரும் கற்றல், கற்பித்தல் திட்டத்தால் பேராசிரியர்கள், மாணவர்களிடையே ஆராய்ச்சிப் பணிகளில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆராய்ச்சி இதழ்களை வெளியிடுவதில் நாட்டில் விஐடி முதலிடத்தில் உள்ளது.

வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. நாட்டில் உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை 24 சதவீதமாக உள்ளது. உயர் கல்வி படிக்க தகுதியுள்ள 14 கோடி பேரில் 3.5 சதவீதத்தினருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. எனவே, மத்திய, மாநில அரசுகள் உயர்கல்வி நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து கல்வி உதவித் தொகை வழங்கும் வகையில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். இதற்கு, தொழில் நிறுவனங்களும் ஆதரவாக இருக்க வேண்டும்.
மேலும், நாட்டில் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். இதற்கான பரிந்துரைகளை இந்திய கல்வி மேம்பாட்டு சங்கம் மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. சங்கத்தின் பரிந்துரைகளை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

இன்டஸ் இந்த் வங்கியின் தலைவர் ஆர்.சேஷசாயி பேசியதாவது:
மாணவர்களிடையே ஆழமாக கற்பதற்கான ஆர்வம் வேண்டும். அதிலும் கண்டுபிடிப்புக்காக கற்கும் போதுதான் மகிழ்ச்சி உருவாகும். அதேபோல், மாணவர்கள் தங்களை படைப்பாளிகளாக உணர வேண்டும். அதற்கு புதிய எண்ணங்களை உருவாக்கவும், அந்த எண்ணங்களுக்குத் தீர்வு காணவும் வேண்டும். வளரும் நாடான இந்தியா வளர்ந்த நாடாக மாற தொழில் முனைவோர்கள் அதிகளவில் உருவாக வேண்டும். தொழில் முனைவோரை உருவாக்குவதற்காக மாணவர்களின் கற்றல் முறை இருக்க வேண்டும். அத்தகைய கற்றலுக்கு வயது என்பது இல்லை. தொடர்ந்து கற்றல் இருக்க வேண்டும் என்றார் அவர்.

தொடர்ந்து டிஎக்ஸ்சி டெக்னாலஜிஸ் நிறுவன மூத்த துணைத் தலைவர் சாம்சன் டேவிட் கெளரவ விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கினார்.

விழாவில், 4,187 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ. 12.03 கோடியும், விஐடி வேந்தரின் சிறந்த மாணவிக்கான தங்கப்பதக்கம் கே.ரட்சணாவுக்கும், சிடிஎஸ் நிறுவன விருது மாணவர் அபிஜீத் தாகூருக்கும், டிசிஎஸ் நிறுவன விருது மாணவர் ஷிவோம் பகுகுணாவுக்கும் வழங்கப்பட்டது. மாணவர் பேரவை நிர்வாகி யானிக் அந்தாவோ வரவேற்றார். விஐடி ஆண்டறிக்கையை துணைவேந்தர் ஆனந்த் ஏ.சாமுவேல், விளையாட்டு ஆண்டறிக்கையை பேராசிரியர் ரூபன் குமார், மாணவர் பேரவை ஆண்டறிக்கையை மாணவி ஐஸ்வரியா லட்சுமி ஆகியோர் வாசித்தனர்.

இதில், விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் கே.சத்தியநாராயணன், மாணவர் நலன் இயக்குநர் அமித் கே.மகேந்திரகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


நாளை முதல் தாஜ்மகாலை ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் மட்டுமே பார்வையிட அனுமதி!

By DIN | Published on : 31st March 2018 07:30 PM  |


ஆக்ரா: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை நாளை முதல் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் மட்டுமே பார்வையிட அனுமதி அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்று இந்தியாவின் தாஜ்மகால். காதலின் சின்னமான இது அனைத்து தரப்பையும் ஈர்த்து வருகிறது. தாஜ்மகாலை காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு தொடர்ச்சியாக வருகை புரிகின்றனர்.

தாஹ்மஹாலுக்கு ஆண்டிற்கு சராசரியாக 80 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்வதாக சுற்றுலாத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தாஜ்மஹாலை பார்வையிட தினமும் சுமார் 50,000 சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இவர்களில் 5 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதி இலவசம். இந்தியர்களுக்கும், வெளிநாட்டினருக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்ட போதிலும், நேரக்கட்டுப்பாடு என்பது இல்லை.

இந்நிலையில் தாஜ்மகாலை நாளை முதல் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் மட்டுமே பார்வையிட அனுமதி அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ச்சியாக வரும் பார்வையாளர்களினால் உண்டாகும் மாசுக் கட்டுப்பாட்டில் இருந்து தாஜ்மஹாலை பாதுகாக்கும் வகையில், இவ்வாறு பார்வையாளர்களை அனுமதி நேரத்தில் மாற்றம் கொண்டு வர அதனைப் பாதுகாத்து வரும் தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி ஏப்ரல் 1-ம் தேதி முதல் தாஜ்மஹாலை பார்வையிட 3 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படும். மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் சுற்றி பார்க்க விரும்புபவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என்றும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் தொல்லியல் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கொலைக் களமாகும் காதல்!

By ஆர். வேல்முருகன் | Published on : 31st March 2018 01:25 AM

காதல் என்ற சொல்லை நினைத்தாலே அனைவருக்குமே குறிப்பாக இள வயதினருக்கு ஓர் இனம்புரியாத கவர்ச்சி மனதுக்குள் மத்தாப்புக் கோலம் போடும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் சம்பவங்களைப் பார்த்தால் காதல் என்ற சொல்லுக்கான அர்த்தம் கொலைக்களம் என்று மாறிவிடுமா என்ற பயம் அனைவருக்குள்ளும் ஊசலாடி வருகிறது.

கடந்த சுமார் 15 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் காதல் பிரச்னைகளுக்காக சுமார் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் சுமார் 80 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாகவே அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் ஆணவக் கொலைகள் அரங்கேறி வருவதைப் பார்க்கிறோம். மூத்தோர் ஏற்காத காதலால்தானே இவை நிகழ்கின்றன. துர்மரணங்கள் மட்டுமே ஊடகங்கள் மற்றும் செய்தித் தாள்களில் வெளிவந்து பொதுமக்களின் கவனத்தைக் கவர்கின்றன.

ஆனால் காதலித்துத் திருமணம் செய்யும்வரை மானே, தேனே என்று கொஞ்சிப் பேசும் சில ஆண்மக்களின் உண்மை சொரூபம் திருமணத்துக்குப் பின் பெண்ணுக்குத் தெரிய வரும் தருணத்திலேயே அவள் மனதளவில் மாண்டுவிடுகிறாள். அப்போதுதான் பெற்றோரும் உற்றோரும் சொல்வது அவளுக்குப் புரியவரும்.

பொதுவாகவே வீடுகளில் பெண் பிள்ளைகளுக்குச் செல்லம் அதிகம். அதேபோல பெண்கள் வயதுக்கு வந்த பின் கட்டுப்பாடுகளும் அதிகம். ஆண்களுக்குச் செல்லமும் குறைவு, கட்டுப்பாடுகளும் குறைவு.
செல்லமாக வளர்க்கப்படும் பெண்கள் என்றாவது ஒரு நாள் தந்தையோ அல்லது தாயோ கடுமையாகப் பேசிவிட்டால் மனமுடைந்துவிடுகிறார்கள். இந்தப் பிரச்னையைத் தங்கள் தோழிகள் அல்லது தோழர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் நல்லவர்களாக இருந்தால் பிரச்னையில்லை. ஆனால் ஆறுதல் சொல்கிறேன் என்ற போர்வையில் இவர்கள் மீது உரிமை எடுப்பது போல நடித்து, காதலில் ஈடுபடுத்துவது மன்னிக்க முடியாத குற்றம்.
பொருத்தமில்லாத நபரை, வெறும் தோற்றத்தைக் கண்டு மயங்கி, காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்து, காலம் கடந்து, தாங்கள் விழுந்த குழியிலிருந்து எவ்வாறு மீள்வது என அறியாத பெண்கள் எத்தனையோ. இது இப்படியென்றால் மதம் மாறித் திருமணம் செய்து கொண்டு வேதனைப்படுபவர்களை என்னவென்று சொல்வது?

பொதுவாக காதல் திருமணங்கள் அனைத்தும் தோல்வியில் முடிவதில்லைதான். ஆனால் பொருளாதார ரீதியாகப் பிரச்னை இல்லாத திருமணங்கள் மட்டுமே பெரும்பாலும் வெற்றி பெறுகின்றன என்பது கண்கூடு.
முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்கள் அதிகமாக இருந்தன. தவறு செய்தால் சுட்டிக் காட்டுவதற்கு வீடுகளில் பெரியவர்கள் இருந்தார்கள். ஆனால் இப்போது 95 சதவீத குடும்பங்களில் அந்த முறை சிதைந்துவிட்டது. இப்போதுள்ள ஒரு சில பெரியவர்கள் மகன், மகள் குழந்தைகளுக்கு இடையில் பிரிவினையைத்தான் விதைக்கின்றனர். இதனால் அன்பு, பாசத்துடன் வளர வேண்டிய அடுத்த தலைமுறை பிரிவினையைக் கற்றுக் கொள்கிறது.
இதுபோன்ற குழந்தைகள்தான் பெரும்பாலும் காதல் எனும் புனிதத்தைக் கெடுக்க வந்து, தம் வாழ்விலும் கேடு விளைவித்துக் கொள்கின்றனர். அவசரமாகக் கல்யாணம் செய்து கொண்டு, குழந்தையையும் பெற்றுக் கொண்டு, சாவகாசமாக சங்கடப்பட்டுக் கொண்டே வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.

தமிழகத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் கடந்த சில மாதங்களுக்குள் 6-க்கும் மேற்பட்ட கொலைகள். அதன் பின்னணியில் இருப்பது பெரும்பாலும் ஒருதலைக் காதல்தான். சென்னையில் அண்மையில் கல்லூரி வாசலில் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்குத் தேவையான செலவுகளைச் செய்து படிக்க வைத்த அவளுடைய காதலன், அப்பெண்ணின் பாராமுகத்தால் கொலை செய்ததாகக் கூறியிருக்கிறான். இவர்கள் விவகாரம் அனைவருக்குமே தெரியும் என்கிறார்கள். ஆனால் உண்மை என்பது இந்த சம்பவங்களில் மட்டும் அடங்கிப் போவதில்லையே. விசாரணை முடிந்து கொலையாளிக்குத் தண்டனை கிடைத்தாலும் போன உயிர் திரும்ப வருமா? அந்தத் தீர்ப்பினால் மட்டுமே சமூக நிலை மாறிவிடுமா? அமில வீச்சு ஒரு தனிக் கதை.

பெண்களைப் பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருப்பதாகக் கூறுவார்கள். ஆனால் இதைப் போல காதலில் சிக்கி சின்னாபின்னமாகும்போது அல்லது காதல் திருமணம் செய்யும்போது உறவு மற்றும் ஊர்க்காரர்கள் பேசும் பேச்சு சொல்லி மாளாது. இதற்குப் பயந்துதான் பெரும்பாலானவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதில் நவநாகரிகப் பெருநகரம், சிற்றூர் கிராமம் என்ற பேதமில்லை.
மகளோ அல்லது மகனோ தவறு செய்யும்போது கண்டிக்கும் பெற்றோர், அவர்கள் நல்லது செய்யும்போது அதைப் பாராட்டவும் தயங்கக் கூடாது. அவரவரின் சிறு உலகில் குறுகி அடைந்துவிடாமல், குறைந்தபட்சம் விடுமுறை தினத்திலாவது வாரிசுகளின் மேல் தங்களுக்கு அக்கறை உண்டு என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அப்போது எந்த விஷயமாக இருந்தாலும் அதைப் பகிர்ந்து கொள்வார்கள்.

இவ்வாறு தங்களின் அன்பை வாரிசுகளுக்குப் புரிய வைப்பதன் மூலம், இளையோருக்குத் தவறு செய்யத் தோன்றாது. பெற்றோர் தங்கள் மீது வைத்திருக்கும் அன்பை நினைத்தாவது பெற்றோருக்குத் தலைகுனிவை ஏற்படுத்தக் கூடாது என்ற மனநிலை குழந்தைகளுக்குத் தோன்றும். அப்போதாவது ஒருதலைக் காதலும் அதனால் விளையும் கொலைகளும் தடுக்கப்படும்.
வருமான வரி தாக்கல்: ஆணையர்கள் எச்சரிக்கை

Added : ஏப் 01, 2018 00:58 |

  சென்னை: 'வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என, வருமான வரித்துறை ஆணையர்கள் கூறினர்.கடந்த, 2015 - 16, 2016 - 17ம் நிதியாண்டுகளுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, நேற்றுடன் நிறைவடைந்தது.வரி தாக்கல் செய்ய, காலக்கெடு நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்பதால், சென்னை, வருமான வரி அலுவலகத்தில் அமைக்கப்பட்ட, இணையதள சிறப்பு கவுன்டர்களில், ஏராளமானோர் வரி கணக்கு தாக்கல் செய்தனர். இணையதளம் வாயிலாக, வரி கணக்கு தாக்கல் செய்தவர்களுக்கு, நேற்று இரவு, 12:00 மணி வரை அவகாசம் கிடைத்தது.

இது குறித்து, வருமான வரித்துறை ஆணையர்கள், சங்கரன், பழனிவேல்ராஜன் கூறியதாவது: இரண்டு நிதியாண்டுகளுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், நேற்றுடன் முடிந்தது. கணக்கு தாக்கல் செய்யாதவர்கள், இனிமேல் தாக்கல் செய்ய முடியாது. மேலும், அவர்கள் மீது, வருமான வரி சட்டப்படி, நடவடிக்கைகள் எடுக்கப்படும்.வருமான வரி, அதற்கான வட்டி, அபராதம் வசூலித்தல் போன்றவையும், சட்ட ரீதியிலான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மேலும், கடந்த நிதியாண்டுக்கு என நிர்ணயிக்கப்பட்ட, 71 ஆயிரத்து, 500 கோடி ரூபாய், வரி வருவாய் இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கையும் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகரிக்க வாய்ப்பு : வருமான வரித்துறை நடவடிக்கையால், 2016 - 17ம் ஆண்டுக்கான, வருமான வரி செலுத்துதல் மற்றும் கணக்கு தாக்கல் செய்ததில், புதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த, 2015 - 16, 2016 - 17ம் நிதியாண்டுகளுக்கான, வருமான வரி தாக்கல், நேற்றுடன் முடிந்தது. கூடுதலாக, வரி வசூலிக்க, வருமான வரித்துறை, புதிய வழிமுறைகளை கையாண்டுள்ளது. இதன் வாயிலாக, புதிதாக கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வருமான வரி வசூலில், ஆண்டுதோறும், பல உத்திகள் கடைபிடிக்கப்படும். அவை, சட்டத்திற்கு உட்பட்டு மாற்றப்படும். அதன்படி, நடப்பு ஆண்டில், வரி வருவாயை அதிகரிக்க, 10க்கும் மேற்பட்ட புதிய வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. இதன் வாயிலாக, மாத சம்பளதாரர்கள், ஓய்வூதியதாரர்களை தவிர்த்து, கூலி வேலை செய்பவர்கள், மாடு மேய்ப்பவர்கள் போன்ற பிரிவினருக்கும், வருமான வரி செலுத்தும்படி கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு, அவர்கள் தெரிவித்த பதிலில், குறிப்பிட்ட வருவாய் தவிர, இதர வருவாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கண்காணிக்க, தனி ஆணையர் நியமிக்கப்பட்டு, அவருக்கு கீழ், பல அதிகாரிகள் பணிபுரிகின்றனர். அதனால், இந்த ஆண்டு, புதிதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு அவர் கூறினார்.

எதிர்பார்ப்பு : கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 2.50 லட்சத்துக்கும் அதிகமானோர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்தனர். நடப்பாண்டில், இந்த எண்ணிக்கை, சில தினங்களுக்கு முன்னரே, நான்கு லட்சத்தை எட்டியது; தற்போது, ஆறு லட்சத்தை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு, முதல் முறையாக, வருமான வரித்துறை தலைமை ஆணையரின் கையெழுத்திட்ட, 20 லட்சம் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டதும்; வரித் தாக்கல் அவகாசம் குறைக்கப்பட்டதும், முக்கிய காரணம்.
கோடை சுற்றுலா அறிவிப்பு

Added : ஏப் 01, 2018 00:01

சென்னை: தமிழக சுற்றுலாத்துறை, கோடை கால சுற்றுலாக்களை அறிவித்துள்ளது.சுற்றுலா பயணி களின் வருகையில், தமிழகம், முதன்மை மாநிலமாக உள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு, ஏப்., முதல் ஜூன் வரை, பல்வேறு சுற்றுலாக்களை அறிவித்துள்ளது. இதன்படி, ஊட்டி, கொடைக்கானல், ஒகேனக்கல், பெங்களூரு, மூணாறு ஆகிய ஐந்து இடங்களுக்கு, வெள்ளி இரவு புறப்பட்டு, திங்கள் காலை திரும்பும் வகையில், மூன்று நாள் சுற்றுலா திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.சுற்றுலா செல்லும் இடம், பஸ் வசதியை பொருத்து, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இதற்கான விபரங்களை, சென்னை, வாலாஜா சாலையில் உள்ள, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளரை நேரிலோ, 044 - 2533 3333, 2533 3857 ஆகிய தொலை பேசி எண்களிலும், 1800 425 31111 என்ற, கட்டணமில்லா தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.



NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...