Sunday, April 29, 2018

உதவி கேட்டு ஒரு கதறல்

Published : 05 Dec 2015 12:57 IST
 
டாக்டர் ஆ. காட்சன்





தற்கொலை செய்துகொள்ள நினைக்கும் அனைவருடைய எண்ணமும் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டுமென்பதில்லை என்பது பற்றித் தெரியுமா உங்களுக்கு?

இன்று உலக அளவில் சாலைவிபத்துதான் வளர்இளம் பருவத்தினரின் மரணத்துக்கு முதல் காரணமாக இருக்கிறது. இரண்டாவது முக்கிய காரணம் அதைவிட அதிர்ச்சியளிப்பது, அது தற்கொலை செய்துகொண்டு இறப்பது. இந்த இரண்டுமே தடுக்கக்கூடிய காரணங்கள்தான்.

தற்கொலைக்கு முயற்சிக்கும் நபர்களில் மூன்றில் ஒரு பங்கினர், வளர்இளம் பருவத்தினர் என்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயம். புள்ளிவிவரங்களின்படி தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக்கொள்வதில் ஆண்களும், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதில் பெண்களும் முதலிடம் பெறுகின்றனர்.

மனதில் என்னதான் நடக்கும்?

‘சாகவேண்டும் என்பதற்காகத்தானே ஒருவர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்’ என்பதுதான் பெரும்பாலோருடைய கேள்வி. சில வேளைகளில் உறவினர்கள் ‘நீ பிழைத்ததற்கு, செத்தே தொலைத்திருக்கலாம்’ என்று விரக்தியில் கூறுவதுண்டு. ஆனால் உண்மையில்,

தற்கொலைக்கு முயற்சிக்கும் எல்லோருடைய நோக்கமும் சாகவேண்டும் அல்லது உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு தற்கொலை முயற்சியும் ‘உதவிகோரும் ஒரு கதறலாகவே’ (Cry for help) மனநல ரீதியாக பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான விடலைப்பருவத்தினர் தற்கொலை முயற்சி மூலம், தங்கள் மனதில் நடக்கும் போராட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்கின்றனர். தற்கொலை முயற்சிக்கு முன்பு ‘வாழ்வதா? சாவதா?’ என்ற போராட்டம் மனதுக்குள் நடந்திருக்கும். எனவே,

சரியான நேரத்தில் கிடைக்கும் மனநல ஆலோசனைகள் பெரிய ஆபத்திலிருந்து அவர்களை காப்பாற்றும். ‘வேண்டுமென்றே செய்கிறார்கள்’ என்று பேசாமல் விட்டுவிடுவது, அவர்களைக் காப்பாற்றும் நல்ல வாய்ப்பை தவறவிடுவதைப் போன்றது.

குடும்ப காரணங்கள்

வளர்இளம் பருவத்தினரின் பெரும்பாலான தற்கொலை முயற்சிகளுக்கு, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளே முக்கிய காரணம். பெற்றோர் திட்டுவதால் உணர்ச்சிவசப்பட்டுவிடுவது, தாங்கள் கேட்பதை பெற்றோர் வாங்கித்தராத காரணங்கள்,

கருத்து வேறுபாடு என பல காரணங்கள் இருக்கலாம். அதிலும் வளர்இளம் பருவத்தில் வீட்டில் உள்ளவர்கள் சொல்லும் அறிவுரைகள், எட்டிக்காயாகக் கசப்பதால் எளிதில் வாக்குவாதம் வெடித்துவிடும். பின்னர் அது முற்றி, தற்கொலை முயற்சியாக மாறிவிடும். வீட்டில் அக்கா டிவி ரிமோட்டை கொடுக்கவில்லை என்பதுபோன்ற சின்னச் சின்ன காரணங்களுக்காகக்கூட அரளிவிதையை அரைத்துக் குடித்த விடலைகளும் உண்டு.

தனிப்பட்ட காரணங்கள்

நண்பர்களுடன் ஏற்படும் மனத்தாங்கல், ஒரு தலைக்காதல், காதல் தோல்வி, படிப்பில் நாட்டமின்மை, தேர்வில் தோல்வி, வாழ்க்கையை வெறுமையாக உணர்வது போன்ற தனிப்பட்ட காரணங்களும் தற்கொலையில் முடியலாம். எளிதில் உணர்ச்சிவசப்படுதல், அவசரப்பட்டு முடிவெடுக்கும் தன்மை, ஏமாற்றங்களை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமை போன்ற குணரீதியான காரணங்களும் உண்டு.

பொதுவாக எல்லோரும் யோசித்துவிட்டுதான் செயல்படுவார்கள். ஆனால், சிலர் மட்டும் குணாம்ச ரீதியிலேயே செயல்பாட்டுக்குப் பின்னர்தான் யோசிப்பார்கள். அப்படிப்பட்ட இளம்பருவத்தினர், சின்ன காரணங்களுக்குக்கூட அவசரப்பட்டு தற்கொலை முடிவுவரை போவதுண்டு. ஒரே வித்தியாசம் என்னவென்றால் விஷத்தை குடித்தவுடன், யாரிடமாவது விஷயத்தை சொல்லி உடனடியாகக் காப்பாற்றுமாறு உதவி கேட்பார்கள்.

மனநோய்கள்

விடலைப்பருவத்தினரின் தற்கொலை எண்ணங்களை உருவாக்குவதில், மனநோய்கள் முக்கிய பங்குவகிக்கின்றன. ஆனால், ஒருவர் தற்கொலைக்கு முயற்சிக்கும்வரை இந்த மனநோய் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதே உண்மை. தற்கொலை முயற்சி மனநோயின் முதல் அறிகுறியாகக்கூட இருக்கலாம் அல்லது மனநோய் பாதிப்பால் நிகழலாம். மன அழுத்த (Depression) நோயின் முக்கிய அறிகுறி, காரணமே இல்லாமல் தற்கொலை எண்ணங்கள் உருவாவதுதான். வளர்இளம் பருவத்தினரின் மரணங்களுக்கு முக்கிய காரணங்களுள் இதுவும் ஒன்று.

மனச்சிதைவு நோயின் பாதிப்பாலும் இது ஏற்படும். இதில் தற்கொலை செய்துகொள்ளுமாறு கட்டளையிடும் மாயக்குரல்கள் சில நேரம் கேட்பதால், அதற்கு அடிபணிந்து சிலர் நிறைவேற்றியும் விடுகிறார்கள். இன்றைக்கு வளர்இளம் பருவத்தினரை மிரட்டும் ஒரு பெரிய ஆபத்து என்னவென்றால், போதைப் பழக்கத்தால் பெருகிவரும் தற்கொலைகள். போதைப்பொருட்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பல தற்கொலைச் சம்பவங்களுக்கு காரணமாகின்றன.

மனநோய்கள் மூளைநரம்புகளை பாதிக்கும் ஒரு நோயாக ஏற்றுக்கொள்ளப்படாமல், பேய் பிடித்துவிட்டதாகவும் சாபக்கேடாகவும் பார்க்கப்படுவதால் பல மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்தே முறையான சிகிச்சைக்கு வரும் அவலநிலைதான் உள்ளது.
``பக்கத்து வீட்டு அண்ணங்கதான் இப்படி பண்ணாங்க!'' - கவனத்துக்கு வராத கோவை பாலியல் வன்முறை 

இரா. குருபிரசாத் Coimbatore: 

vikatan

காஷ்மீரில் 8 வயது சிறுமி, கடத்தப்பட்டு, தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்ட அதே நேரத்தில்தான், நம் தமிழகத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கோவை அருகே உள்ள ஒரு சிறு கிராமத்தில், காஷ்மீர் சிறுமியின் வயதை ஒட்டிய 5 சிறுமிகள், பாலியல் தொல்லைக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த மூவரும் 15 வயதைத் தாண்டாத சிறுவர்கள் என்பது வேதனையான அதிர்ச்சி.

,

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள சிறு கிராமம். அங்குள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், உடல் பரிசோதனை செய்தார். அப்போது, ஒரு சிறுமியின் பிறப்புறுப்பில் வீக்கம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அந்தச் சிறுமியிடம் மருத்துவர் பேச்சுக் கொடுத்துள்ளார். அவள் சொன்னவை பேரதிர்ச்சி தருபவை. ``எங்க வீட்டுப் பக்கத்துல இருக்கிற அண்ணங்கதான் தினமும் இப்படிப் பண்ணுவாங்க. என்னைய மட்டுமில்லே. இதே மாதிரி, நாலு பேரை பண்ணுவாங்க” என்றவள், பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் அந்தச் சிறுவர்களின் பெயரையும் சொல்லியிருக்கிறாள்.

இந்தச் சம்பவம் சில மாதங்களாகவே தொடர்ந்து நடந்துள்ளது. ஓர் சிறுமியின் பிறப்புறுப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்தச் சிறுமியால் சிறுநீரை அடக்கமுடியாமல், பலமுறை வகுப்பறையிலேயே கழித்திருக்கிறாள். ``வகுப்பறைக்குள் இப்படி பண்ணக்கூடாது” என ஆசிரியர் பலமுறை கூறியும், அடக்க முடியவில்லை. ஒருகட்டத்தில், சிறுமியின் பெற்றோரிடம் விஷயத்தை கூறியுள்ளார். அவர்களோ தங்கள் மகளை மருத்துவரிடம்கூட அழைத்துச் செல்லவில்லை என்பது வேதனையின் உச்சம்.

இந்நிலையில், சுகாதார மருத்துவர் மூலம் குழந்தைகளின் பிறப்புறுப்பு பாதிக்கப்பட்டுள்ளது குறித்து பெற்றோர்களுக்குச் சொல்லப்பட்டது. அவர்களுக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், குழந்தைகளின் பெற்றோர்கள் மறுத்துவிட்டனர். அந்தச் சிறுவர்களின் மீது புகார் அளிக்கவும் மறுத்திருக்கிறார்கள்.

அந்தச் சிறுமிகள் மற்றும் சிறுவர்கள், அருகருகே வசித்துவருபவர்கள். வெளி உலகம் குறித்து அறியாதவர்கள். இதனால், ``அந்தப் பசங்களும் எங்க சொந்தக்காரங்கதான். எங்கப் பொண்ணுங்களுக்கு நீங்க சொல்ற மாதிரி எந்தப் பிரச்னையும் இல்லை. இது எங்க குடும்பப் பிரச்னை. நாங்களே பார்த்துக்கிறோம். யாரும் தலையிட வேண்டாம்” என்று சொல்லியிருக்கிறார்கள்.



சிறுமிகளுக்கு இப்படி ஒரு பிரச்னை இருப்பதை முதலில் கண்டறிந்த மருத்துவரான ப்ரீத்தி, இந்த விவகாரத்தை சைல்டு லைனுக்கு தெரிவித்துள்ளார். அவர்களும் அந்தக் கிராமத்துக்குச் சென்று, சிறுமிகளின் பெற்றோரிடம் பேசியும் ஒத்துழைக்கவில்லை. ``உங்ககிட்டே வந்தால், எங்க குழந்தைகளை ஹோமுக்கு கூட்டிட்டுப் போய்டுவீங்க. அதனால், நாங்களே பார்த்துக்கிறோம் கிளம்புங்க” என்று விரட்டியுள்ளனர்.

எனவே, சைல்டு லைன் அதிகாரிகள் சார்பில், மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் 3 சிறுவர்களும் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, கோவை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர். விஷயம் தமிழக டி.ஜி.பி வரை சென்றது. சிறுமிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக அதிகாரிகள் நடையோ நடை நடந்துள்ளனர். ஆனால், சிறுமிகளின் பெற்றோர்கள் மசியவேயில்லை. இதுதொடர்பாக, அந்தப் பள்ளியில் கவுன்சிலிங் வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், அன்றைய தினத்திலிருந்து சிறுமிகள் பள்ளிக்கு வரவில்லை. சில சிறுமிகள் தேர்வுகளையும் எழுதவில்லை. “அந்தக் ஸ்கூலுக்கு வந்தாதானே இதெல்லாம் பண்ணுவீங்க? எங்க புள்ளைங்களை வேற ஸ்கூல்ல சேர்த்துக்கிறோம்” என்று சொல்கிறார்களாம்.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் அதே பள்ளியைச் சேர்ந்த ஒன்றாம் மற்றும் 3-ம் வகுப்பைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களும் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள் மிகவும் சிறுவர்கள் என்பதால், இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதுகுறித்து பேசிய மருத்துவர் ப்ரீத்தி, ``அந்தச் சிறுமிகள் யாருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யமுடியவில்லை. பரிசோதனை செய்து பார்த்தால்தான் பிரச்னையின் முழுமை தெரியவரும். பெற்றோர்கள் ஒத்துழைக்க மறுக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் மைனர் என்பதால், எங்களாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை” என்றார்.

போலீஸ் தரப்பில் கேட்டபோது, ``யார் கேட்டாலும் இப்படி ஒரு விஷயம் நடக்கவேயில்லைனு சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், சிறுமிகளும் சிறுவர்களும் `அப்படி எதுவும் நடக்கலை’னு அழுத்தமா சொல்றாங்க. அவங்க வீட்டிலும் ஒத்துழைக்க மாட்டேங்கறாங்க. பசங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதியின் உத்தரவின்படி சிறுமிகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தலாம்னு இருக்கோம்” என்றனர்.

சைல்டு லைன் தரப்பில், ``சிறுமிகளின் பெற்றோர்கள் நாங்கள் சொல்வதை காது கொடுத்து கேட்கவே தயாராக இல்லை. எந்த ஒரு பிரச்னையையும் பெற்றோர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. முழு விழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும். அவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு கொடுக்கவே நாங்கள் பணியாற்றுகிறோம். இதைப் பெற்றோர்கள் புரிஞ்சுக்கணும்” என்றனர்.



இந்நிலையில், இந்த வழக்கை சத்தமில்லாமல் முடித்துவிடும் வேலைகளும் ஒரு பக்கம் நடப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயத்தில், அந்தப் பகுதியின் ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவரை, சிறுமிகளின் பெற்றோர்கள் அணுகியுள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் அவரின் பங்கும் முக்கியமானது என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்டிருந்த 3 மாணவர்களும் ஜாமீனில் வெளிவந்துவிட்டனர்.

``தமிழகத்துல ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவங்கதான், பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். சமூகம் குறித்த விழிப்பு உணர்வும் அவர்களிடம் இல்லை. அவர்களின் ஜாதிகளைச் சொல்லி அரசியல் செய்பவர்களும், இதுபோன்ற விஷயங்களுக்குக் குரல் கொடுப்பதில்லை'' என்று வருத்தப்படுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இது விஷயமாக பேசிய மனநல மருத்துவர் ஷாலினி, ``அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்ததுதான் பெரிய பிரச்னை. `போலீஸ்கிட்ட போனாலும், நம்ம பேர்தான் கெடும். நமக்கு எந்தப் பலனும் இல்லே’ என்று பெற்றோர்கள் நினைக்கின்றனர். அரசின் மீது நம்பிக்கையிருந்தால், கண்டிப்பாக போராட முன்வருவார்கள். இதுபோன்ற விஷயங்களை நாம் பக்குவமாக கையாள வேண்டும். ஸ்மார்ட்போன்களின் பங்கும் இதில் இருக்கிறது. காஷ்மீர் சிறுமி விவகாரம் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டதும், அது சம்பந்தமாக விவரங்கள் ஆபாச வலைதளங்களில் அதிகளவு தேடப்பட்டுள்ளது. நமது மாணவர்களுக்குப் பாலியல் உணர்வுகளை எப்படி கையாள வேண்டும் என்பது தெரிவதில்லை.

இதுகுறித்து. பள்ளியிலிருந்தே மாணவர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, ஊடகங்களிலும் இதுதொடர்பாக அதிகளவு விழிப்பு உணர்வு விளம்பரங்களை வெளியிட வேண்டும். இதுபோன்ற உணர்வு விளம்பரங்களை இலவசமாக வெளியிட வேண்டும் என அரசே ஓர் சட்டம் இயற்ற வேண்டும்” என்றார்.

இதுதொடர்பாக, அந்தச் சிறுமிகளின் குடும்பத்தைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். ஆனால், பலமுறை எடுத்துச் சொல்லியும், இந்த விஷயம் தொடர்பாக பேச முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.



வக்கிரம் படைத்தவர்களின் வன்முறை ஒரு பக்கம் என்றால், அறியாமையில் கிடக்கும் பெற்றோர்கள் இன்னொரு பக்கம். பாவம் குழந்தைகள். அரசு என்ன செய்யப்போகிறது?
தாலிக்கட்டு, தாலி எடுக்கும் நிகழ்வு, திருநங்கைகள் சங்கமம்... களைகட்டும் கூவாகம் திருவிழா!
மு.ஹரி காமராஜ்


தே.சிலம்பரசன்
vikatan 29.04.2018

அனைத்து ஜீவன்களிலும் இறைவன் உறைகிறார் என்பதும், அதன் காரணமாக அனைத்து ஜீவராசிகளையும் நேசிக்க வேண்டும் என்பதும், இந்து மதத்தின் ஒப்பற்ற தத்துவம். சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்பது போன்ற பேதங்கள் எதுவும் இறைவனின் சந்நிதியில் இல்லை. அவரவர் வழிமுறைகளின்படி அவரவர் வழிபாடுகளைச் செய்துகொள்ள அனுமதிக்கும் இந்து மதத்தில், மரியாதைக்கு உரியவர்கள் என்பதால், 'திரு' என்ற சிறப்பு வார்த்தையை சேர்த்து, 'திருநங்கைகள்' என்று அழைக்கப்படுபவர்களுக்கும் சில வழிபாட்டு முறைகள் இருக்கவே செய்கின்றன.

திருநங்கைகள் கொண்டாடும் விழாக்களில், விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெறும் விழா குறிப்பிடத்தக்கது. இந்த விழா திருநங்கைகள் சங்கமிக்கும் விழாவாக மட்டுமல்லாமல், திருநங்கைகளின் பெருமையை மற்றவர்கள் உணரச் செய்யும் திருநாளாகவும் திகழ்கிறது. முற்காலத்தில் திருநங்கைகள் ஆட்சிப் பொறுப்பிலும், கலைத்துறையிலும் மிகச் சிறப்பான இடத்தை வகித்திருக்கிறார்கள் என்பது வரலாறு.



அரவான் என்னும் கூத்தாண்டவருக்கு கடலூர், கோவை, விழுப்புரம் மாவட்டங்களில் 32 ஆலயங்கள் உள்ளன. அவற்றுள் விழுப்புரம் மாவட்டம், மடப்புரத்திலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள கூவாகம் கிராமத்தில் அமைந்திருக்கும் கூத்தாண்டவர் கோயிலில், சித்திரை மாதம் நடைபெறும் விழாவில், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வரும் திருநங்கைகள் கலந்துகொள்கின்றனர்.

கிருஷ்ணனின் அம்சமே திருநங்கைகள்:

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைக்கவேண்டும் என்றால், சகல லட்சணங்களும் பொருந்திய ஆண்மகன் ஒருவனை பலியிடவேண்டும். அப்போது அர்ஜுனனுக்கும் நாக கன்னிகைக்கும் பிறந்த அரவான் என்பவன் தன்னை பலிகொடுக்க முன்வந்தான். ஆனால், திருமணம் நடைபெற்ற ஒருவனைத்தான் பலி கொடுக்க முடியும் என்பது சாஸ்திரம். ஆனால், சிறிது நேரத்துக்கெல்லாம் பலியாகப் போகும் ஒருவனை மணந்துகொள்ள எந்தப் பெண் முன்வருவாள்? அரவானை திருமணம் செய்துகொள்ள யாரும் முன்வராத நிலையில், கிருஷ்ணர் மோகினி அவதாரம் எடுத்து அரவானை மணந்துகொண்டார். எனவே, பகவான் கிருஷ்ணரின் அம்சம்தான் திருநங்கைகள்’ என்று சொல்லப்படுகிறது.



திருவிழா விவரங்கள் :

மகாபாரதப் போரின் நினைவாக கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில், அரவான் திருவிழா 18 நாள்கள் நடைபெறுகிறது. சித்ரா பௌர்ணமி தினத்தில் அரவானைக் கணவனாக எண்ணிக்கொண்டு, திருநங்கைகள் கோயில் அர்ச்சகர்களின் கையால் தாலி கட்டிக்கொள்வார்கள். அன்று இரவு முழுவதும் ஆட்டம், பாட்டம் என்று கோயிலில் திருவிழா களைகட்டும். மறுநாள் விடிந்ததும் அலங்கரிக்கப்பட்ட தேரில் அரவான் சிலை, கொலைக்களத்துக்குக் கொண்டு செல்லப்படும். அப்போது திருநங்கைகள் ஒப்பாரிவைக்கும் சடங்கு நடைபெறும். அரவான் தலை துண்டிக்கப்பட்டதும், கணவனை இழந்த திருநங்கைகள் ஓலமிட்டு, தாலி களைந்து, பூவை அறுத்து, வளையல் உடைத்து அழுவார்கள். பிறகு வெள்ளைப் புடவை கட்டி விதவைக் கோலம் பூணுவத்தோடு விழா முடிவுறும்.



திருநங்கைகளுக்கான உரிமைகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள, 'Trans Rights Now Collective' என்னும் அமைப்பின் நிறுவனர் கிரேஸ் பானு கூவாகம் திருவிழாவைப் பற்றியும், கூவாகம் விழாவினால் தங்களுக்குக் கிடைத்திருக்கும் நன்மைகள் பற்றியும் பேசியவர், சில குறைகளையும் ஆதங்கத்துடன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
''கூவாகத்தில் நடைபெறும் திருவிழாவை ஒதுக்கிவிட்டு, எங்கள் வரலாற்றையும் வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கவே முடியாது. எங்கள் வரலாற்றை அவ்வப்போது எங்களுக்கு நாங்களே நினைவுபடுத்திக் கொள்ளவும், பல பகுதிகளிலும் பரவியிருக்கும் நாங்கள் ஒன்றாக சங்கமிக்கும் விழாதான் கூவாகம் அரவான் திருவிழா. காலம்காலமாக எங்களின் பூர்வீக அடையாளமாக இந்த கூவாகத் திருவிழா இருந்து வருகிறது. இன்னும் கூட சிலர் இது ஒரு களியாட்டக் கூத்து என்று விமர்சித்தாலும், இது எங்களின் உரிமைத் திருவிழாவாகவே தொடர்ந்து வருகிறது.

ஆடல், பாடல், அழகிப்போட்டி, திறனறியும் நிகழ்ச்சிகள் என்று நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கச் செய்வதுடன், எங்களை புதுப்பித்துக்கொள்ளவும் உதவுகிறது. ஆண்டுதோறும் எங்கள் முன்னேற்றங்களை அளவிடவும் இந்த விழா உதவுகிறது. வெறும் அழகுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், சென்ற ஆண்டிலிருந்து எங்களுடைய திறமைகளை அறிந்துகொண்டு, பாராட்டும் விதமாக விருது அளிக்கும் விழாவையும் நடத்துகிறோம். இந்த இடத்தில் ஒன்றுகூடி நாங்கள் ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்புகள்தான், எங்கள் முன்னேற்றத்துக்கு உதவியாக இருக்கிறது. நாங்கள் பத்து, இருபது பேர்கள் கொண்ட சிறு குழு இல்லை என்பதையும், பெரும்பான்மை எண்ணிக்கையில் நாங்கள் இருக்கிறோம் என்பதையும் எங்களுக்கு உணர்த்தும் திருவிழா கூவாகம் திருவிழா.

வெறும் போகப் பொருள்களாக திருநங்கைகளை நினைத்திருந்தவர்கள், இன்று தங்களுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டதற்கு, கூவாகத்தில் நாங்கள் சங்கமிக்கும் விழாதான் காரணம். நாட்டின், உலகின் பல பாகங்களிலிருந்து வரும் திருநங்கைகள், பல்வேறு கலாசாரங்களைக் கொண்டிருந்தாலும், இந்த விழா எங்களை ஒன்றிணைத்துவிடுகிறது. வாழ்க்கையில் எங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தாதது மட்டுமல்லாமல், எங்களைக் கண்டு ஒதுக்கியவர்கள்கூட இன்று எங்களுக்கு கௌரவம் தருகிறார்கள் என்றால் கூவாகம் விழாதான் காரணம். முழுக்க முழுக்க எங்களுக்கே எங்களுக்கான இந்த விழா, எங்கள் உரிமை, உற்சாகம், உறவுப் பாலம் என்றே சொல்லலாம். இன்னும் ஒருபடி மேலாக இந்த விழாதான் எங்களை நாகரிகமாக மாற்றியது.



வருடந்தோறும் நடக்கும் திருவிழாவில், நாங்கள் அளிக்கும் காணிக்கையும், தங்கம் மற்றும் வெள்ளியாலான தாலியும் கோயிலுக்குத்தான் போகிறது. ஆனால், இதுவரை கோயில் நிர்வாகம் எங்களுக்கு கழிப்பிட வசதியைக்கூட செய்து தரவில்லை. தங்குவதற்கு ஒரு மண்டபத்தைக்கூட இன்னும் கட்டவில்லை என்பது வருத்தமான விஷயம். பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும் திருநங்கையர் போலீஸில் புகார் அளித்தால், நடவடிக்கை எடுக்காததோடு, 'இந்த விழாவில் அது சகஜம்தானே' என்ற கமென்ட் வேறு கிடைக்கிறது. அவர்கள் ஊர்த் திருவிழாவில் பெண்களைச் சீண்டினால் அப்படித்தான் இருப்பார்களா?' நாங்களும் பெண்களுக்குச் சற்றும் குறைந்தவர்கள் அல்ல. எங்களையும் கௌரவமாக நடத்த வேண்டும்'' என்று வேதனையோடு சொல்கிறார் கிரேஸ் பானு.

இந்த விழாவைக் குறித்து திருநங்கையான இன்பாவிடம் பேசினோம். ''எங்களின் வழிபாட்டுக்கு உரிய இந்த விழாவில் சில ஆண்கள் செய்யும் தொந்தரவுகள் எங்களைக் கவலை கொள்ளச் செய்கின்றன. இங்கு வரும் திருநங்கைகளும் இதைப் புனித விழாவாகக் கருதி எந்தத் தவறும் செய்யாமல் இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். இந்த விழாவையொட்டி அரசு அதிகப் பேருந்துகளை கூவாகம் மார்க்கத்தில் இயக்க வேண்டும். புதிதாக கூவாகம் விழாவுக்கு வரும் திருநங்கையர்கள் இந்த விழாவின் புனிதம், புராணம், வரலாறு எல்லாம் தெரிந்துகொண்டு வர வேண்டும். அப்போதுதான் அங்கு நடக்கும் தவறுகள் களையப்படும். இந்த ஆண்டு ஏப்ரல் 30, மே 1, மே 2 ஆகிய மூன்று நாள்களில் திருவிழா நடைபெறுகிறது. 1-ம் தேதி தாலிக்கட்டும், மறுநாள் தாலி எடுக்கும் நிகழ்வும் நடக்கும்’’ என்றார்.



கூவாகம் திருவிழா புராதன விழா மட்டுமல்ல, பெருமைக்கு உரிய திருநங்கையர்களின் உரிமை விழாவும்கூட. பெண்மையை மதிப்பவர்கள் நிச்சயம் இந்த விழாவையும் மதிப்பார்கள் என்றே நம்புவோம்.
சென்னை முதலைகள் பண்ணை தோன்றிய வரலாறும் சில ஆச்சர்யங்களும்!
 
க.சுபகுணம்  29.04.2018
vikatan

 அது 1973ஆம் வருடம்... அவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஊர்வன ஆராய்ச்சியாளர். அவரது மனைவியிடம் இப்படி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார், "இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மக்கர், கரியால் போன்ற முதலைகள் தொடர்ச்சியாக அழிந்துகொண்டே வருகின்றன. இதை என்னால் பொறுக்க முடியவில்லை." அவர் அப்படி வேதனைப்படக் காரணம் இருந்தது. 20ஆம் நூற்றாண்டின் 80கள் வரை முதலைகள் அவற்றின் கடினமான தோலுக்காகத் தொடர்ச்சியாக வேட்டையாடப் பட்டன. அது மட்டுமின்றி நீர் மேலாண்மை காரணமாக அதிகமான அணைகள் கட்டப்பட்டு ஆற்று நீரின் பாதை கட்டுப்படுத்தப் பட்டது. அதனால் முதலைகள் அவற்றின் வாழ்விடப் பாதையில் நீர்வரத்து இல்லாமல் இடம் மாறி ஊருக்குள் வருவதும் அதிகமாகிக் கொண்டே இருந்த காலகட்டம் அது.



அந்தச் சமயத்தில் தான் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மக்கர், கரியால், உப்புநீர் முதலை போன்றவையின் எண்ணிக்கை அருகிக்கொண்டே வந்தது. இதுகுறித்துத் தான் அந்த அறிஞர் தனது மனைவியிடம் வருந்திக் கொண்டிருந்தார். இருவரும் இணைந்து ஒரு முடிவை எடுத்தனர். முதலைகளைப் பாதுகாப்பது, அவற்றுக்கென ஒரு வாழ்விடம் அமைப்பது, அவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகளின் மூலம் மக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்துவது, அதைவிட முக்கியமாக அவற்றை இனப்பெருக்கம் செய்யவைத்து எண்ணிக்கையை அதிகப்படுத்தி அழிவில் இருந்து காப்பது, அந்த முடிவை 1976இல் நடைமுறையிலும் சாத்தியமாக்கியது அவர்களது விடா முயற்சி. அது தான் இன்று உலகின் மிகப்பெரிய முதலைப் பூங்காக்களில் ஒன்றாக விளங்கும் சென்னை முதலைகள் பண்ணை.



அதை உருவாக்கியவர்கள் ராமுலஸ் விடேகர் என்ற ஊர்வன அறிஞரும் அவரது மனைவி சாய் விடேகர் என்பவரும் தான். சென்னையில் இருக்கும் முதலைகள் பண்ணை தான் ஆசியாவிலேயே முதல்முறையாக முதலைகளுக்கு என்றே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட காப்பிடம். மூன்று வகை முதலைகளோடு தொடங்கிய இந்தப் பூங்காவில் உலகளவில் இருக்கும் 23 வகையான முதலைகளில் 17 முதலைகள் தற்போது பராமரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வகை முதலைகளுக்கும் தனித்தனி வாழிடம், இனப்பெருக்க காலத்தில் அவற்றைத் தனியாக பராமரிப்பது, இயற்கையானச் சூழல் என்று அசத்துகிறது சென்னை முதலைகள் பண்ணை. சுமார் 5000 முதலைகள் வரை இனப்பெருக்கம் செய்ய உதவிகரமாக அமைந்த அங்கு இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஊர்வனப் பிராணிகள் வாழ்ந்து வருகின்றன.




பகுதிநேரப் பணியாளர்களில் இருந்து 24 மணிநேரமும் அங்கேயே தங்கிப் பராமரிக்கவும் ஆட்கள் வரை இருக்கிறார்கள். முதலைகள் வாழும் குளங்களைத் தூர்வாருவதில் தொடங்கி முதலைகளுக்கான உணவு வரை அனைத்தையுமே பார்த்துக்கொள்வது முதலைகள் பராமரிப்பாளர்கள்தான். பராமரிப்பு மற்றும் சுற்றுலாத் தளமாகச் செயல்படுவதையும் தாண்டி மேலும் பல ஆராய்ச்சிப் பணிகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.



ஆரம்ப கட்டத்தில் இனப்பெருக்கம் செய்து வெளியிடும் திட்டத்தின் மூலமாக இந்தியாவின் மக்கர் முதலைகளை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்றியிருக்கிறார்கள். இந்தியாவின் சாம்பல் ஆற்றுப் பகுதிகளில் அதிகம் காணப்படும் கரியால் வகை முதலைகள் எண்ணிக்கையில் இன்னும் குறைவாகவே இருப்பதால், ரேடியோ டெலிமெட்ரி ( Radio telemetry) என்ற ஆராய்ச்சியின் மூலம் அவற்றின் வலசைப் பாதை, வாழ்விடம், உணவுப் பழக்கம் அனைத்தையும் கண்காணித்துக்கொண்டு இருக்கிறார்கள். "கங்கா, பிரம்மபுத்திரா, சாம்பல் போன்ற பெருவாரியான நதிகளில் அவை வாழ்ந்துகொண்டு இருந்தாலும் கரியால் முதலைகளைப் பற்றிய தகவல்கள் தெளிவாக இல்லாததால் இந்த கரியால் எக்காலஜி பிராஜக்ட் ( Gharial Ecology project) என்ற ஆராய்ச்சித் திட்டம் அதற்குப் பேருதவியாக இருக்கும். நதிகளில் கொட்டப்படும் ரசாயனக் கழிவுகளால் சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகளால் நூற்றுக்கும் மேற்பட்ட கரியால் முதலைகள் இறப்பதால் அவற்றின் பாதுகாப்பிற்கு அந்தப் பகுதியில் வாழும் மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவது முக்கியம். அதனால் அங்கு இருக்கும் மக்களுக்கும் மீனவர்களுக்கும் அவற்றைப் பற்றிய விழிப்பு உணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்." என்கிறார் அங்கு காப்பிடக் கல்வியாளராக இருக்கும் திரு. அருள்.




அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஓர் ஆராய்ச்சிக் குழு அந்தத் தீவுப் பகுதியில் மட்டுமே வாழக்கூடிய என்டெமிக் உயிரினங்களைப் பற்றி ATREE என்ற அமைப்போடு இணைந்து ஆய்வுசெய்து கொண்டிருக்கிறார்கள். அத்தோடு முதலைகள் பண்ணையில் கோடைக் காலங்களில் எட்டு வயது நிரம்பிய குழந்தைகளுக்கென முகாம் அமைத்து ஊர்வன உயிரினங்கள் பற்றிய வகுப்புகள் எடுப்பதும் கள ஆய்வுகளைச் செய்ய வைப்பதும் என்று சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு மற்ற உயிரினங்கள் மீதான அக்கறையை வளர்த்தெடுக்கிறார்கள்.




முதலைகள் மட்டுமின்றி சில ஆமைகள், பல்லி வகைகள் போன்றவற்றையும் பராமரித்து வருகிறார்கள். பட்டகூர் பாஸ்கா என்று அழைக்கப்படும் வடக்கத்திய ஆற்று ஆமை இனம் உலகில் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக ஐ.நா வரையறுத்துள்ளது. வனங்களில் வெறும் 15 மட்டுமே இருக்கும் இந்த வகை ஆமைகள் உலகளவில் காப்பிடங்களில் இருக்கும் எண்ணிக்கை மொத்தம் 300 மட்டுமே. அதை இந்தியாவில் முதன்முறையாகப் பராமரிப்பில் வைத்து இனப்பெருக்க முயற்சி செய்தது சென்னை முதலைகள் பண்ணை தான்.



இவ்வாறு ஊர்வன விலங்குகளின் பாதுகாப்பிற்காகப் பல முயற்சிகளைச் செய்துகொண்டிருக்கும் சென்னை முதலைகள் பண்ணை சுற்றுலாப் பயணிகளிடம் வசூல் செய்யும் கட்டணங்களிலும், நன்கொடைகளிலுமே செயல்பட்டு வரும் விலங்குகளுக்கான ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம்.






முதலைகளுக்கு வாரம் ஒருமுறை மட்டுமே உணவளித்தால் போதுமானது. ஏனென்றால் நம்மைப் போல் அவற்றுக்கு விரைவில் செரிமானம் ஆவதில்லை. சராசரியாக நாளொன்றுக்கு நமக்கு 2000 கலோரிகள் வரை தேவைப்படும் ஆனால் முதலைகளுக்கு 150 கலோரிகள் இருந்தாலே போதும், அதை அவை ஒரு நாள் உண்ணும் உணவிலிருந்து சிறிது சிறிதாக எடுத்துக்கொள்கின்றன. அவை மற்ற ஊர்வன போலவே தட்பவெப்ப நிலைக்குத் தகுந்தவாறு உடல் வெப்பத்தை மாற்றியமைக்கும் திறன் கொண்டவை. இத்தகைய திறன்மிக்க இயற்கையின் படைப்பிற்குத் தனியாக காப்பிடம் அமைத்த ராமுலஸ் விடேகரை வியக்காமல் இருக்க முடியவில்லை.
இறந்துபோனவரின் விரலை வைத்து மொபைலை அன்லாக் செய்ய முடியுமா? 

மு.ராஜேஷ்  29.04.2018

கடந்த சில நாட்களுக்கு முன்னால் அமெரிக்காவில் நடந்த சம்பவம் இது. ப்ளோரிடா மாகாணத்தில் இருக்கும் காவல்துறையினருக்கு ஒரு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. லினஸ் பிலிப் ( Linus Phillip) என்ற நபரின் மொபைலை அன்லாக் செய்ய வேண்டும். அதற்கென்ன அவரைக் காவல் நிலையம் வரவழைத்து அன்லாக் செய்துவிட முடியுமே... அவரென்ன வர மாட்டேன் என்றா சொல்லப்போகிறார். ஆம், நிச்சயமாக அவர் காவல்நிலையம் வரப்போவதில்லை. ஏனென்றால் லினஸ் பிலிப் கடந்த மாதம் மார்ச் 23-ம் தேதி காவல்துறையினரால் சுடப்பட்டு இறந்தவர் . போதைப்பொருள் தொடர்பான தேடுதல் வேட்டையின் போது சுடப்பட்டார். காவல்துறைக்குப் போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் தேவைப்பட்ட நிலையில் அதற்கு ஒரே வழி லினஸ் பிலிப்பின் ஸ்மார்ட்போன்தான். அதை ஆராய்ந்து பார்த்தால் அவர்களுக்குத் தேவையான தகவல்கள் ஏதாவது கிடைக்கலாம் எனக் காவல்துறையினர் நினைத்தார்கள்.



Picture Courtesy:Victoria Armstrong (facebook)

அவர் உயிரோடு இருந்தால் அவரை அன்லாக் செய்ய சொல்லியிருக்கலாம். இப்பொழுது ஒரே வழி பிங்கர்பிரிண்ட் மட்டும்தான். ஸ்மார்ட்போனில் இருக்கும் ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனரை பயன்படுத்தி மொபைலை அன்லாக் செய்து விடலாம் எனக் காவல்துறையினர் நினைத்தார்கள். எனவே இரண்டு காவலர்கள் லினஸ் பிலிப்பின் மொபைலை எடுத்துக்கொண்டு அவரது இறுதிச் சடங்கு நடக்கும் இடத்திற்குச் சென்றார்கள். அவரது குடும்பத்தினரிடம் விவரத்தைத் தெரிவித்து விட்டு சடலமாக கிடத்தி வைக்கப்பட்டிருந்தவரின் விரலை எடுத்து ஸ்மார்ட்போனின் ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர் மீது வைக்கிறார்கள். மொபைல் அன்லாக் ஆகும் என காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவர்களால் எவ்வளவோ முயன்றும் மொபைலை அன்லாக் செய்ய முடியவில்லை. பாஸ்வேர்ட் மூலமாக அன்லாக் செய்வது மட்டும்தான் மீதமிருக்கும் ஒரே வழி. ஆனால் அதற்கு லினஸ் பிலிப் வாயைத் திறக்க வேண்டுமே, அதற்கும் வாய்ப்பே கிடையாது என்பதால் காவலர்கள் ஏமாற்றத்தோடு திரும்பி விட்டார்கள்.



மொபைலில் இருக்கும் ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர்கள் பயன்படுத்த எளிதானதாக இருந்தாலும் சில நேரங்களில் சிலருக்கு இது போல சிக்கல்களை ஏற்படுத்தி விடுகின்றன. தொடக்கத்தில் பின் நம்பர் அதன் பிறகு பேட்டர்ன் என மாறிக்கொண்டே இருந்த மொபைல் லாக் வசதி ஒரு கட்டத்தில் ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர்களில் வந்து நின்றது. மற்ற முறைகளை விடவும் கைரேகைகளை பாதுகாப்பிற்காகப் பயன்படுத்துவது எளிதாக இருந்தது. இந்த உலகில் ஒரே மாதிரியான கைரேகை வேறொருவருக்கு இருக்கச் சாத்தியமில்லை என்பதால் இந்த முறை மிகவும் பாதுகாப்பானதாக கருதப்பட்டது. ஒரு மொபைலின் பின் நம்பரோ, பேட்டர்னோ தெரிந்தால் யார் வேண்டுமானாலும் அந்த மொபைலை அன்லாக் செய்து விட முடியும். ஆனால் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்களில் இந்தச் சிக்கல் கிடையாது மொபைலை அன்லாக் செய்ய மொபைலுக்கு உரியவரின் விரல் தேவைப்படும். சரி அப்படியென்றால் லினஸ் பிலிப்பின் மொபைலை காவல்துறையினரால் எதற்காக அன்லாக் செய்ய முடியவில்லை. இறந்துபோன ஒருவரின் விரலை வைத்தால் ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர்கள் செயல்படதா?

ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர்கள் செயல்படும் விதம்

தொடக்கத்தில் இருந்த ஃபிங்கர்பிரின்ட் சென்சார்களில் ஆப்டிகல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இந்தத் தொழில்நுட்பம் கைரேகைகளின் புகைப்படங்களை பயன்படுத்தும். ஸ்கேனர்கரின் மேல் விரலை வைக்கும் பொழுது ரேகைகளின் ஹை ரெசொல்யூசன் புகைப்படம் சேமிக்கப்படும். அதன் பிறகு ,மறுமுறை விரலை வைக்கும் பொழுது ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் புகைப்படத்துடன் ரேகையை ஒப்பிட்டுப் பார்த்து இது செயல்படும். ஆனால் இதில் சில சிக்கல்கள் இருந்தன , ஆப்டிகல் சென்சார்களை எளிதாக ஹேக் செய்து விட முடிந்தது . அதற்கு பிரின்ட் எடுக்கப்பட்ட ஹை ரெசொல்யூசன் புகைப்படங்களே போதுமானதாக இருந்தது . மற்றொன்று இதை ஒரு ஸ்மார்ட்போனில் பயன்படுத்துவதற்கு இடம் சற்று அதிகமாகத் தேவைப்பட்டது.



அதன் பின்னர்தான் கெப்பாஸிட்டிவ் வகை ஃபிங்கர்பிரின்ட் சென்சார்கள் பயன்பாட்டிற்கு வந்தன. இன்றைக்கு பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் பயன்படுவது இந்த வகை சென்சார்கள்தான். இவை மனித உடலில் இருக்கும் சிறிய அளவிலான மின்சாரத்தை ரேகைளை அடையாளப்படுத்தப் பயன்படுத்துகின்றன. விரல்களை உன்னிப்பாகப் பார்த்தால் அதில் மேடு பள்ளங்கள் இருப்பதைக் கானலாம். இந்த மேடு பள்ளங்களிடையே மின்னோட்டம் என்பது ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இந்த வேறுபாட்டை மிகவும் நுணுக்கமாக சென்சார்கள் ஆராய்ந்து அந்த தகவல்களை டிஜிட்டலாக பதிவு செய்து கொள்கின்றன. மறுமுறை விரல் சென்சாரின் மீது வைக்கப்படும் பொழுது ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்களோடு ஒப்பிடுகின்றன. முன்னர் இருந்த இடங்களில் இருப்பதைப் போலவே மின்சார வேறுபாட்டை உணர முடிந்தால் மட்டுமே அன்லாக் செய்வதற்கான அனுமதியை அளிக்கின்றன.

இறந்துபோனவரின் விரலை வைத்து மொபைலை அன்லாக் செய்ய முடியுமா ?

கோடிகளைக் குவித்த ரிலையன்ஸ் ஜியோ! 29.04.2018



ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சென்ற ஜனவரி - மார்ச் காலாண்டில் மொத்தம் ரூ.510 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி 2016ஆம் ஆண்டின் இறுதியில் தனது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் புதிதாகத் தொடங்கினார். இலவசச் சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை அதிகளவில் கவர்ந்து வந்த இந்நிறுவனம் பின்னர் குறைந்த அளவிலான கட்டணங்களை நிர்ணயித்துக் கொஞ்சம் கொஞ்சமாக வருவாய் ஈட்டத் தொடங்கியது. அதன்படி இந்த ஆண்டின் ஜனவரி - மார்ச் காலாண்டில் 3.6 சதவிகித உயர்வுடன் ரூ.510 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதற்கு முந்தைய அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் இதன் வருவாய் ரூ.504 கோடியாக மட்டுமே இருந்தது.

மேற்கூறிய மூன்று மாதங்களில் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 18.66 கோடியாக உயர்ந்துள்ளது. இம்மூன்று மாதங்களில் மட்டும் 2.65 கோடிப் பேர் ஜியோ சேவையில் புதிதாக இணைந்துள்ளனர். இதற்கு முந்தைய அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் புதிதாக 2.15 கோடிப் பேர் ஜியோ சேவையில் இணைந்திருந்தனர். ஜியோ வருவாய் ஈட்டியுள்ள அதே வேளையில் இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமான ஏர்டெல் ரூ.652.30 கோடி வருவாய் இழப்பைப் பதிவு செய்திருந்தது. ஜியோவுடனான போட்டி காரணமாக ஏர்டெல் உட்பட இதர நெட்வொர்க் நிறுவனங்களும் கடுமையான இழப்புகளைச் சந்தித்து வருகின்றன.
Dignity of court lies in its conduct and restraint 

DECCAN CHRONICLE. | NARASIMHAN VIJAYARAGHAVAN


Published Apr 29, 2018, 3:50 am IST

It was a befitting response, becoming of the majesty of the court, and the high constitutional offices, held by the Judges. 



Madras high court

Chennai: Last working day, before the Court went on vacations. As the First Bench comprising Chief Justice Indira Banerjee and Mr. Justice Abdul Quddus took their seats, a practising lawyer of the Madras High Court submitted, "Mi Lords, in the wake of your decision to dismiss the writ petitions filed to declare the seats of 11MLAs belonging to the "OPS faction" vacant, for their defiance of the whip issued by the EPS led dispensation, at the time of the confidence vote, local politicians have expressed their dissent in disparaging terms, tarnishing the dignity of the Court in the eyes of the public.

They have attributed bias and self-interest to the court. Hence, it may be a fit case to initiate suo motu contempt action".

The unassuming, unperturbed Chief Justice, smilingly responded, "Counsel, we are least concerned with such comments. We have done our duty, to the call of our conscience. We bow to the law and Lord Almighty alone. We are sure that the people of Tamil Nadu are well aware of our credibility and conduct. We decline your request. Call the first case."

It was a befitting response, becoming of the majesty of the court, and the high constitutional offices, held by the Judges. They were near dismissive and disdainful of the 'contemptuous expressions', not because they did not care for the majesty of the court or the dignity of the positions they held but because they cared for it more. It was a veritable slap on the faces of those who had attributed bias to the decisions of the Court.

Those who said what they were stated to have said, knew not the nuances of law, which was well beyond their ken. It was their simplistic belief, that while in the case of Pondicherry MLA's cause, the same Bench had held the Speaker's decision ultra vires, in the case of TN Assembly Speaker's failure to act, they chose to treat the decision of the court as biased.

The Court can never take the place of the Speaker in the name of judicial review, it had ruled. To those trained in law and brought up on its discipline, both the decisions were aligned with constitutional norms and propriety. But to those untrained in law, with political leanings at heart, the decisions sounded anachronistic. Most unfortunate that the common man was fed with such unfair criticism, imbued with contempt.

The Judges have held their own, by not yielding to the request. It has always been so and it shall have to be so. Just hark back to the recent Loya judgment of the First Bench of the Supreme Court, authored by Justice Chandrachud. In a brilliant exposition on the magnanimity of the Courts to downsize those in contempt, he said, no matter that the arguments of those on the side of petitioner and interveners were sure ammunition for a contempt call, the Court was too high to fall and would rather ignore, as its 'dignity lay in its conduct and performance in public eye' and not in the embrace of sword.

In the face of Spycatcher verdict, upholding an injunction to ban the publication of the work relating to affairs of MI5 Intelligence Unit, a London tabloid carried the upside down pictures of the Judges, with a bold column headline" You Fools"- the Judges smilingly responded, " Our view is in the judgment. We respect the views of the newspapers in the name of free speech". That was a tall order response for a below-the-belt comment.

Lord Denning put it thus, "All we could ask is that those who criticise us will remember that, from the nature of our office, we cannot reply to their criticisms. We cannot enter into public controversy. Still less into political controversy. We must rely on our conduct itself to be its own vindication". This, after Mr. Quentin Hogg, had said, "Denning is an ass".

Closer home, Chief Justice Gajendragadkar, felt, "Wise judges never forget that the best way to sustain the dignity and status of their office is to deserve respect, from the public at large by the quality of their judgments, the fearlessness, fairness and objectivity of their approach, and by the restraint, dignity and decorum, which they observe in their judicial conduct".

We saw it in abundance in the cryptic response from the Chief Justice Indira Banerjee. TN salutes you, Madam. The Court may have conducted itself with utmost restraint. What of the political class? Is it not time for them to "talk and act to deserve our respect in their restraint?" But, as Justice Krishna Iyer said, "Need to unsheathe the sword can never be ruled out. It lies in the mouths of the contemnors." Need we say more?

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...