Sunday, August 1, 2021

Benefit Of 'Krishna Sradha' Judgment Can Be Availed Only If NEET Candidate Approached Court Without Any Delay: Supreme Court

Benefit Of 'Krishna Sradha' Judgment Can Be Availed Only If NEET Candidate Approached Court Without Any Delay: Supreme Court: The Supreme Court observed that the benefit of S. Krishna Sradha v. State of Andhra Pradesh judgment can be availed only if the NEET candidate approached the Court without delay.In Krishna Sradha,...

மிரட்டும் கேரளா: கொரோனா பரவியது எப்படி?

மிரட்டும் கேரளா: கொரோனா பரவியது எப்படி?

Updated : ஆக 01, 2021 00:22 | Added : ஜூலை 31, 2021 21:45


கேரளாவில், கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அது, தமிழகத்திலும் தன் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என, மருத்துவர்கள் சிலர் தொடர்ந்து எச்சரிக்கை மணி அடிக்கின்றனர். அச்சமூட்டும் இந்த விபரம் சரியா என, மருத்துவ துறையின் நோய் தொற்று ஆய்வில், நீண்டகாலமாக ஈடுபட்டு வரும், மூத்த மருத்துவர் ஒருவர் கூறியதாவது:

கேரள மருத்துவ பல்கலையில் இருந்து, பல தரவுகள் கிடைத்துள்ளன. அவற்றை பார்த்தால், கொரோனா முதல் அலையின் போது, கேரளா பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகவில்லை.

மக்கள் நெருக்கம்

காரணம், கேரளாவில் மலைப் பிரதேசம் அதிகம். வீடுகள் நெருக்கமாக இல்லை. அதனால், மக்கள் நெருக்கம் ஒரே இடத்தில் இல்லை. ஓரளவுக்கு பரவிய கொரோனாவை, விரைவிலேயே கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், அடுத்தடுத்த அலை பரவலால், அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம், மக்கள் நெருக்கமாக கூடியது தான். திருவனந்தபுரம், ஆலப்புழா, திருச்சூர் போன்ற கேரளாவின் பெரிய நகரங்களில், ஏராளமான கல்லுாரிகள் உள்ளன. அங்கு ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்கின்றனர்; பலர் விடுதிகளில் தங்கி உள்ளனர்.


கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள், விடுதியில் தங்கியிருப்போர், எந்தவிதமான எச்சரிக்கை உணர்வும் இல்லாமல் இருந்துள்ளனர். ஒரு கல்லுாரி மைதானத்தில், மாணவர்கள் நெருக்கமாக அமர்ந்து, கால்பந்து போட்டிகளை ரசித்துள்ளனர். கொரோனா நோய் தொற்றுக்கு ஆளான சிலரும், அவர்களுடன் இருந்துள்ளனர். இதுவே, கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம்.

பாதுகாப்பு நடவடிக்கை

அதே நேரத்தில், கல்லுாரி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவியருக்கு, கொரோனா இரண்டாவது அலை பரவலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இன்னொரு கல்லுாரியில், விடுதிக்கான உணவகத்தில் அமர்ந்து சாப்பிட தடை விதித்து, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனமாக பின்பற்றி உள்ளனர். ஆனால், 'மெஸ்'க்கு வந்து சாப்பாடு வாங்கும் மாணவர்கள், விடுதி அறைகளுக்கு சென்று, அங்கே கூட்டமாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர்.


ஒரு சிறிய அறையில், 20 பேர் வரை தங்கி சாப்பிட, ஏற்கனவே கொரோனா தொற்று இருந்தவர்களிடம் இருந்து, மற்றவர்களுக்கும் பரவி விட்டது. இப்படித் தான், கொரோனா பரவல் மாநிலம் முழுதும் அதிகரித்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

'மூன்றாவது அலை அச்சம் வேண்டாம்'

''ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில், மூன்றாவது அலை இருக்கும் என்று கூறுகின்றனர்;அதை புறக்கணிக்க முடியாது. எத்தனை அலை வந்தாலும், எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். இரண்டாவது அலையில், இளைஞர்களும், குழந்தைகளும் பெரிய அளவில் பாதிக்கப்படுவர் என்று கணிக்கப்பட்டது. ஆனால், அது பொதுவாக தான் இருந்தது.

கேரளாவில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. இருந்தபோதும், இறப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அதனால், பெரிய அளவில் அச்சம் வேண்டாம். மூன்றாவது அலையும் அப்படி தான் இருக்கும் என்பது தற்போதைய கணிப்பு.

டாக்டர் தீபக் கண்ணன்

நுரையீரல் சிறப்பு சிகிச்சை நிபுணர்

'-கேரளாவுக்கு செல்வதை கட்டுப்படுத்த வேண்டும்'

கொரோனா மூன்றாவது அலையில், கொரோனா வைரஸ் உருமாற்றம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. 'டெல்டா பிளஸ்' உருமாற்ற வைரசாக இருக்குமானால், அதிக வீரியத்துடன், அதன் தாக்கம் இருக்கும். அதனால், நாம் கவனமாக இருப்பது நல்லது.

இருப்பினும், மூன்றாவது அலை கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தாது என்கின்றனர். ஆனால், கொரோனா வைரசை பொறுத்தவரை, எதையும் உறுதியாக சொல்ல முடியாது. கேரளாவில் வைரஸ் பரவல் அதிகமாக இருக்கிறது. அதனால், கேரளாவுக்கு போவதையும் வருவதையும் கட்டுப்படுத்த வேண்டும். தேவையில்லாத பயணத்தை தவிர்க்க வேண்டும்.

டாக்டர் ஜி.வேல்குமார்

நுரையீரல் சிறப்பு சிகிச்சை நிபுணர்,

மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை

- நமது நிருபர் -

'ஓய்வூதிய பணப்பலன்களை பத்திரங்களாக ஏற்க முடியாது'

'ஓய்வூதிய பணப்பலன்களை பத்திரங்களாக ஏற்க முடியாது'

Added : ஆக 01, 2021 02:49

மதுரை,-''ஓய்வூதிய பணப்பலன்களை பத்திரங்களாக அரசு வழங்குவதை ஏற்க முடியாது,'' என, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் குமார் தெரிவித்தார்.

மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: அரசு பணியாளர்களின் ஓய்வு வயது மீண்டும் 58 ஆக குறைக்கப்படும் என்றும், 60 அல்லது பணிக்காலம் 33 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்படும் என்றும் சில நாட்களாக செய்திகள் வெளியாகின்றன. கலக்கம்ஓய்வூதிய பணப்பலன்கள் உடனடியாக வழங்கப்படாது எனவும், பத்திரங்களாக தவணை முறையில் அளிக்கப்படும் எனவும் வெளியாகும் தகவல்கள், ஓய்வு வயதை எட்டியுள்ளவர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.மாநிலத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 25 ஆயிரம் பணியாளர்கள் ஓய்வு பெறுகின்றனர். ஓய்வின் போது கிடைக்கும் பணப்பலன்களை வைத்து குழந்தைகள் திருமணம் உள்ளிட்ட செலவுகளை மேற்கொள்கின்றனர். எனவே, முதல்வர் ஸ்டாலின் இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.ஓய்வு வயதை நிர்ணயிக்கும் அரசின் கொள்கை முடிவுகள் எதுவாயினும் ஏற்புடையதே. ஆனால், ஓய்வூதிய பணப்பலன்களை ஓய்வின் போதே முழுமையாக வழங்காமல் பத்திரங்களாக வழங்குவதை ஏற்க முடியாது. பணி வரன்முறைமறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பணியாளர்களுக்கு ஆதரவாக இருந்தார். எனவே, முதல்வர் ஸ்டாலின் பணியாளர்கள் நலன் காக்க வேண்டும்.பழைய ஓய்வூதியம் குறித்த தேர்தல் வாக்குறுதியை, வரும் சட்டசபை கூட்ட தொடரில் அறிவிக்க வேண்டும். தற்காலிக, ஒப்பந்த பணியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

சுற்றுலா செல்ல ஐ.ஆர்.சி.டி.சி., அழைப்பு

சுற்றுலா செல்ல ஐ.ஆர்.சி.டி.சி., அழைப்பு

Added : ஆக 01, 2021 00:22

கோவை-பாரத தரிசன சிறப்பு ரயில், சிறப்பு விமானங்கள் வாயிலாக, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல, ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு செய்துள்ளது.

பாரத தரிசன சிறப்பு ரயில் வாயிலாக கோவா, சர்தார் வல்லபபாய் படேல் சிலை, ஜெய்ப்பூர், டில்லி, ஆக்ரா, ஐதராபாத் ஆகிய இடங்களை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து ஆக., 15ல் புறப்படும் ரயில் திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம், எர்ணாகுளம் வழியாக செல்கிறது. 12 நாள் சுற்றுலாவுக்கு நபருக்கு, 12 ஆயிரம் ரூபாய் கட்டணம்.

விமான சுற்றுலா  செப்., 11ம் தேதி கோவையில் இருந்து விமானத்தில், காசி, அலகாபாத், புத்த கயா உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்லலாம். ஆறு நாள் சுற்றுலாவுக்கு, ஒரு நபருக்கு, 27 ஆயிரத்து, 460 ரூபாய் கட்டணம்.ஜெய்ப்பூர் பறக்கலாம்!கோவையில் இருந்து விமானத்தில் அக்., 2ம் தேதி ஜெய்ப்பூர், ஆக்ரா - தாஜ்மஹால், டில்லி செல்லும் விமான சுற்றுலா அறிமுகம் செய்யப்படுகிறது. ஆறு நாள் சுற்றுலாவுக்கு நபருக்கு, 26 ஆயிரத்து, 60 ரூபாய் கட்டணம்.டிக்கெட் முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு, கோவை ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகளை, 82879 31965, 90031 40655 என்ற மொபைல் போன் எண்களிலும், www.irctctourism.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

திறந்தநிலை பல்கலையில் முதுநிலை பட்டம்; அதிகாரிக்கு பதவி உயர்வு மறுத்தது சரியே


திறந்தநிலை பல்கலையில் முதுநிலை பட்டம்; அதிகாரிக்கு பதவி உயர்வு மறுத்தது சரியே

Added : ஆக 01, 2021 00:11

சென்னை-'பட்டப்படிப்பு படிக்காமல், திறந்தநிலை பல்கலையில், நேரடியாக முதுநிலை பட்டம் பெற்றவருக்கு பதவி உயர்வு மறுத்தது சரியே' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலுார் மாவட்டம் சோளிங்கரில், இரண்டாம் நிலை சார் - பதிவாளராக செந்தில்குமார் என்பவர் பணியாற்றுகிறார். அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றிபெற்று, 2009ம் ஆண்டில் இரண்டாம் நிலை சார் பதிவாளராக நியமிக்கப்பட்டார்.முதல் நிலை சார் - பதிவாளர் பணிக்கான பதவி உயர்வு பட்டியலில் இவரது பெயர் இடம் பெறவில்லை. திறந்தநிலை பல்கலையில் நேரடியாக முதுநிலை பட்டம் பெற்றதால் இடம் பெறவில்லை. பதவி உயர்வுக்கு பரிசீலிக்க கோரியதும் நிராகரிக்கப்பட்டது.

அந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் செந்தில்குமார் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார். உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, பதிவுத்துறை ஐ.ஜி., வணிக வரித்துறை செயலர் சார்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது.மனுவை விசாரித்த, நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:பட்டப்படிப்பு படிக்காமல், திறந்தநிலை பல்கலையில் நேரடியாக முதுநிலை பட்டம் பெற்றவர்களை, பணி நியமனத்துக்கு, பதவி உயர்வுக்கு பரிசீலிக்க முடியாது என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எனவே, பதவி உயர்வு பட்டியலில், செந்தில்குமாரை சேர்க்காதது சரிதான்.தகுதி மற்றும் சீனியாரிட்டியால் மட்டுமே, பதவி உயர்வு பெறுவதற்கான உரிமை வந்து விடாது. கல்வி தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.

பட்டப்படிப்பு முடிக்காமல், திறந்தநிலை பல்கலையில் நேரடியாக முதுநிலை பட்டத்தை செந்தில்குமார் பெற்றுள்ளார்.உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இது செல்லாது. அதிகாரிகள் சரியாக நிராகரித்துள்ளனர். தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

AIQ seats: OPS hails Centre’s move on 27% reservation

AIQ seats: OPS hails Centre’s move on 27% reservation

01/08/2021

Special Correspondent CHENNAI

AIADMK coordinator O. Panneerselvam has hailed the Centre’s decision to provide 27% reservation for the Other Backward Classes (OBCs) in all-India quota (AIQ) seats for undergraduate and postgraduate medical courses as a “revolutionary step”.

Expressing his “happiness, gratefulness and appreciation” to Prime Minister Narendra Modi for the “historic decision” that fulfilled the long-standing demand of the people of Tamil Nadu, the AIADMK leader, in a letter on Friday, said the development would “greatly benefit” thousands of students belonging to the OBCs every year, and generate a “new form of social justice” in the country.

“It reflects your commitment and concern to the welfare of the backward classes,” Mr. Panneerselvam said.

Madurai: Man steals bikes, enjoys for two days, returns them


Madurai: Man steals bikes, enjoys for two days, returns them

If you are passionate about something, you must find a way to do it. Taking this TED talk kind of advice to heart, comes a man, from the shadows, with a taste for expensive bikes.

Published: 01st August 2021 03:26 AM 

By Express News Service

MADURAI: If you are passionate about something, you must find a way to do it. Taking this TED talk kind of advice to heart, comes a man, from the shadows, with a taste for expensive bikes. While most would call him a thief, an outlaw, this man’s modus operandi was to ‘briefly’ steal bikes, ride them and return them. No harm, no foul?

The ‘perfect crime’ came to the attention of the police when a series of two-wheeler thefts were reported in the past few days in Madurai city, Karimedu and Tallakulam. All the thefts stood out because they had a similar pattern.

Now if you own bikes that are cheap and reliable, we have good news for you. Your thriftiness might have just saved you because our bike thief prefers only expensive bikes. Well, from his perspective it might seem like he ‘borrowed’ those bikes and rode it because he would always return the vehicle to its original place. The crime went on smoothly until it was captured by the CCTV cameras and from there the identity of the bike thief came to light. The police nabbed 21-year-old youth P Naveen Kumar from Sellur early this week.

According to the Karimedu police, Kumar has a ‘passion’ for expensive bikes. “Whichever brands he liked, he stole them at night and after riding them for a few days, he left the stolen vehicles in their original spots. He had stolen at least three two wheelers in the past few weeks,” the police said.

To err is indeed human as Kumar, who had meticulously planned his crime, was arrested when he was identified by the CCTV footage from the areas where the vehicles were stolen. Two bikes which could not be returned to their original place were seized from him.

NEWS TODAY 2.5.2024