Saturday, June 11, 2016

மறக்கப்பட்ட நடிகர்கள் 6 - துணிச்சலின் மறுபெயர் சந்திரகாந்தா

ஆர்.சி.ஜெயந்தன்

முத்து மண்டபம்

“கண்ணா கண்ணா வாராய்… காதல் என்னைப் பாராய்…ஜாலம் பண்ணாதே இப்போ நீ எங்கே போறாய்” என்ற ஜிக்கியின் குரலில் அமைந்த புகழ்பெற்ற பாடலுக்கு ஒய்யாரமான அசைவுகளில் நடனம் ஆடிக்கொண்டு ‘மாயமனிதன்’(1958) படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் சந்திரகாந்தா. இந்தப் படத்தின் நாயகன், ஏவி.எம்.மின் ‘சம்சாரம்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற ஸ்ரீராம்.

இந்தப் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி பிறகு நாயக நடிகராக உயர்ந்தார் அசோகன். ‘இன்விசிபிள் மேன்’ என்ற ஆங்கிலப் படத்தைத் தழுவி டி.பி. சுந்தரம் இயக்கிய இந்தப் படத்துக்குப் பிறகு நடனம், நடிப்பு இரண்டுக்காகவும் கொண்டாடப்படும் முன்னணி நட்சத்திரமாக சந்திரகாந்தா உயர்ந்தார்.

காவிரியின் மகள்

கீழத் தஞ்சை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் உள்ள திருமயிலாடி என்ற கிராமம்தான் சந்திரகாந்தாவின் சொந்த ஊர். இந்த ஊரின் நிலக்கிழார் டி.என். குஞ்சிதபாதப் பிள்ளை, டி.ஆர். ராமாமிர்தம் தம்பதிக்கு ஏழு குழந்தைகள். அவர்களில் ஐந்தாவதாகப் பிறந்தவர்தான் சந்திரகாந்தா. திராவிட இயக்கத்தின் மீது தீவிரப் பிடிப்பு கொண்ட குடும்பம்.

சந்திரகாந்தாவின் அக்கா வத்சலாவை திருமணம் செய்துகொண்டவர் எஸ்.எஸ்.பி. லிங்கம் என்கிற வேதாசலம். இவர் அறிஞர் அண்ணாவின் நெருங்கிய நண்பர். அண்ணா, சென்னை வரும்போதெல்லாம் ராஜா அண்ணாமலைபுரம் இரண்டாவது பிரதான சாலையில் வசித்துவந்த வேதாசலம் வீட்டில்தான் தங்குவார்.

சிறு வயது முதலே நடனத்தில் சந்திரகாந்தாவுக்கு அதிக ஆர்வம் இருந்தது. 9-ம் வகுப்பு படித்து முடித்திருந்த சந்திரகாந்தா, பள்ளி விடுமுறைக்குத் தன் அக்கா வீட்டிற்கு வந்தார். அப்போது சந்திரகாந்தாவும் அவரது அண்ணன் சண்முகசுந்தரமும் (`கரகாட்டக்காரன்’ புகழ்) அண்ணாவின் வாழ்த்துகளைப் பெற்று அவரது அன்புக்குரியவர்கள் ஆனார்கள்.

வேதாசலம் வீட்டில் அண்ணா தங்கியிருக்கும் தருணங்களில் அவரைக் காண அங்கே வருவார் ‘நடிப்பிசைப் புலவர்’ என்று நாடக ரசிகர்களால் அழைக்கப்பட்ட கே.ஆர். ராமசாமி. ‘கலைவாணர்’ என்.எஸ். கிருஷ்ணன் நினைவைப் போற்றும் வகையில் ‘கிருஷ்ணன் நாடக சபாவை 1943-ல் தொடங்கிய கே.ஆர்.ஆர், சமூக சீர்திருத்த நாடகங்களைத் தமிழகம் முழுவதும் நடத்தி, திராவிட இயக்கத்துக்கு வலு சேர்த்துவந்தார். இவரது நாடக சபாவுக்காகவே அண்ணா நாடகங்களை எழுதிவந்த காலம் அது.

ஒருமுறை வேதாசலம் வீட்டுக்கு அண்ணாவைக் காண வந்த கே.ஆர்.ஆர்., வீட்டின் ஓர் அறையில் நட்டுவாங்கம் செய்யும் சத்தம் ஒலிப்பதைக் கேட்டு, அந்த அறையில் நுழைந்தார். அங்கே 14 வயதுப் பருவப் பெண்ணாக லட்சுமிகாந்தத்தின் (இதுதான் சந்திரகாந்தாவின் இயற்பெயர்) துள்ளலான நடனத்தைக் கண்டார்.

வேற்று மனிதர் ஒருவர் வந்திருக்கிறார் என்று வெட்கப்பட்டு ஆட்டத்தை நிறுத்திவிடாமல் ஆடிக்கொண்டிருந்தார் சந்திரகாந்தா. நடனம் முடிந்ததும் குருவுக்கு வணக்கம் சொல்லிவிட்டு வந்தவர், கே.ஆர்.ஆருக்கும் வணக்கம் செய்தார். ஆச்சரியப்பட்ட கே.ஆர்.ஆர்., “என்னைத் தெரியுமா?” என்று கேட்டார். “உங்களைத் தெரியாத பேதையா நான்?” என்று துடுக்காக பதில் சொன்ன அந்தக் கணத்தில் தனது நாடகத்துக்குக் கதாநாயகி கிடைத்துவிட்டதாக நினைத்தார் கே.ஆர்.ஆர்.

15 வயதில் தொடங்கி கே.ஆர்.ஆரின் பல பிரச்சார நாடகங்களில் நடித்துச் சிறந்த நாடக நடிகையாகப் புகழ்பெற்றார் லட்சுமிகாந்தம். ஒரு நாடகத்தில் கதாநாயகியின் கதாபாத்திரப் பெயர் சந்திரா. அந்த நாடகத்துக்குத் தலைமை தாங்க வந்திருந்தார் திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான நாவலர் நெடுஞ்செழியன்.

நாடகத்தின் முடிவில் “இந்த நாடகத்தில் சந்திராவாக மிகச் சிறப்பாக நடித்த காந்தம், நாடகக் கலைக்குக் கிடைத்த அரிய சொத்து” என்று பாராட்டினார். நெடுஞ்செழியன் பாராட்டிப் பேசியதைத் தொடர்ந்து கே.ஆர்.ஆர்., லட்சுமிகாந்தத்துக்கு `சந்திரகாந்தா’ என்று பெயர் சூட்டினார். லட்சுமிகாந்தம் என்ற புகழ்பெற்ற மற்றொரு நடிகையும் இருந்ததால் பெயர் மாற்றம் சந்திரகாந்தாவுக்குக் கைகொடுத்தது.

நவரச நாயகி

முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் தோல்வி அடைவது அபூர்வம் என்ற காலகட்டம் அது. அப்போது முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு ஒரு படத்தை இயக்கி வெற்றிகொடுக்க விரும்பினார் ‘சிட்டாடல்’ என்ற புகழ்பெற்ற பட நிறுவனம் மூலம் பல வெற்றிப் படங்களைத் தயாரித்து இயக்கிய ஜோசப் தளியத். அந்தப் படம் ‘விஜயபுரி வீரன்’.

குழு நடனங்களில் டான்ஸராகப் புகழ்பெற்றிருந்த சி.எல். ஆனந்தனைக் கதாநாயகனாகவும் ஹேமலதா என்ற புதுமுகத்தைக் கதாநாயகியாகவும் அறிமுகம் செய்த தளியத், இந்தப் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக சந்திரகாந்தாவை ஒப்பந்தம் செய்தார். ஏ.சி. திருலோகச்சந்தர் திரைக்கதை எழுதியிருந்த இந்தப் படத்தில் சாந்தியாக நடித்து கதாநாயகியைவிடப் புகழ்பெற்றார் சந்திரகாந்தா.

அடுத்து கே.சங்கர் இயக்கத்தில் 1963-ல் வெளியான ‘இது சத்தியம்’படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். எம்.ஜி.ஆர். படத்திலிருந்து விலகிக்கொள்ள அவருக்குப் பதிலாக அசோகன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிக்க மறுக்கவில்லை சந்திரகாந்தா. ரா.கி. ரங்கராஜன் வார இதழ் ஒன்றில் தொடர்கதையாக எழுதி புகழ்பெற்று பின் திரைப்படமான இந்தப் படத்துக்கு இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி.

“சரவணப் பொய்கையில் நீராடி உனைத் தந்தருள் என்றேன் முருகனிடம்” என்ற அந்தப் புகழ்பெற்ற பாடல் காட்சியில் ஆற்றில் குளித்தபடி நடித்தார் சந்திரகாந்தா. அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டுசென்றது இந்தப் படம் (இதே படத்தில் இடம்பெற்ற “சிங்கார மனசுக்குத் தேரைக்கட்டி, சின்னச் சின்ன இடையில் பூவைக்கட்டி” என்ற பாடலில் நடனமாடி, துணை நடிகையாக அறிமுகமான ஹேமமாலினி அடுத்த சில ஆண்டுகளில் இந்திப் பட உலகில் புகழ்பெற்ற கதாநாயகியானார்).

அடுத்த ஆண்டே ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான இசைச் சித்திரமான ‘கலைக்கோயில்’ படத்தில் கதாநாயகியாக நடித்து மிகச்சிறந்த குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி பெண் ரசிகர்களின் அன்பையும் பெற்றுக்கொண்டார் சந்திரகாந்தா.

சவாலும் துணிச்சலும்

சி.எல்.ஆனந்தன், அசோகன், முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன், ஜெய்சங்கர் ஆகியோர் மீண்டும் மீண்டும் சந்திரகாந்தாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் முன்னணிக் கதாநாயகியாக உயர்ந்த பிறகு எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடிக்க அன்றைய கதாநாயகிகள் மறுத்தார்கள். ஆனால் சந்திரகாந்தா இதில் விதிவிலக்கான நட்சத்திரம் மட்டுமல்ல, சவாலான கதாபாத்திரங்களைத் தயங்காமல் ஏற்று நடித்ததால் ‘துணிச்சலின் மறுபெயர் சந்திரகாந்தா’ என்றும் பெயரெடுத்தார்.

சிறந்த குரல்வளம், சிறந்த நடனத் திறமை, தரமான நடிப்பு ஆகியவற்றில் முத்திரை பதித்த அவரை நவரசத் திலகமாக உயர்த்தின அவர் ஏற்ற துணிச்சலான கதாபாத்திரங்கள். முத்துராமன் ஜோடியாக ‘முத்து மண்டபம்’படத்தில் அழகும் ஆபத்தும் இணைந்த பெண்ணாக, நாட்டியக் கலைஞர் குமுதவல்லி, நவயுக மங்கை கனகவல்லி ஆகிய இரண்டு பரிமாணங்களில் நடித்து ஆச்சரியப்பட வைத்தார்.

தன் திரைவாழ்வின் தொடக்கத்தில் இருந்த சந்திகாந்தா பீம்சிங் இயக்கத்தில் வெளியான ‘பந்தபாசம்’(1962) படத்தில் சக்கரநாற்காலியில் அமர்ந்து கொண்டு திருமணத்துக்காக ஏங்கும் மாற்றுத் திறனாளிப் பெண்ணாக சிவாஜிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் இரக்கத்தைச் சம்பாதித்துக்கொண்டார்.

தேவர் தயாரித்து இயக்கிய ‘தெய்வத் திருமகள்’ படத்தில் மீண்டும் மாற்றுத் திறனாளியாக நடித்துக் கவர்ந்த சந்திரகாந்தா, ‘துளிசிமாடம்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தது உட்பட சுமார் 30 படங்களில் நடித்திருக்கிறார்.

சிவகாமி கலை மன்றம்

புதிய கதாநாயகிகளின் படையெடுப்பு மிகுந்திருந்த 60-களின் இறுதியில் சினிமாவிலிருந்து முற்றாக விலகிய சந்திரகாந்தா, செங்கல்பட்டு நகரைச் சேர்ந்த பெருமாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு மணவாழ்வில் இணைந்தார்.

இந்தத் தம்பதியின் ஒரே மகள் தீபா. எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் மென்பொருள் துறையில் பணியாற்றிவருகிறார். 1978-ல் மறைந்த சந்திரகாந்தா திரையிலிருந்து விலகியபின் ‘சிவகாமி கலை மன்றம்’ என்னும் நாடக மன்றத்தைத் தொடங்கி பல புகழ்பெற்ற நாடகங்களையும் நடத்தினார். இவற்றில் பல திரைப்படங்களாகியிருக்கின்றன.

லஞ்சம் கொடுக்க மறுத்ததால் மகனை பறிகொடுத்த தந்தை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பரிதாப சம்பவம்

THE HINDU

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஊழியருக்கு 300 ரூபாய் லஞ்சம் கொடுக்க மறுத்ததால் தாமதமான சிகிச்சையால் மகனை பறிகொடுத்த தந்தை போலீஸில் புகார் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை கோ.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. தட்டச்சு வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு மகன் உள்ளனர். மகன் ராஜேந்திர பிரசாத்துக்கு, (18) கடந்த 2-ம் தேதி காலை 10.30 மணியளவில் வலிப்பு ஏற்பட்டதால், 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

மருத்துவமனையில் இறங்கியதும் உடனடியாக அவசர சிகிச்சை வெளிநோயாளிகள் வார்டுக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்காமல், மருத்துவர் சீட்டு எழுதி வாங்கிக் கொண்டு, அவசர சிகிச்சைப் பிரிவு உள்நோயாளிகள் பிரிவுக்குக் கொண்டு செல்லும்படி கணபதியிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால், கணபதி 20 நிமிடம் வரிசையில் நின்று உள் நோயாளிகள் அனுமதிச் சீட்டை வாங்கியுள்ளார்.

அப்போது ஸ்டெரெச்சர் தள்ளும் மருத்துவமனை ஊழியர், கணபதியிடம் 300 ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் ஸ்டெரெச்சரை தள்ளுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

கணபதி லஞ்சம் தர மறுத்ததால், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ராஜேந்திரப் பிரசாத்தை ஸ்டெரெச்சரிலேயே ஊழியர் விட்டுச் சென்றுள்ளார். அதனால், கணபதியே ஸ்டெரெச்சரை தள்ளிக் கொண்டு, உள் நோயாளிகள் பிரிவுக்குக் கொண்டு சென்றுள்ளார். அப்போது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த கணபதி, லஞ்சம் கேட்ட நபர் மீது மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் அந்த நபரை தேடினர். ஆனால், அவர் தலைமறைவானார்.

இதையடுத்து, மருத்துவமனை டீனிடம் கணபதி புகார் செய்தார். இதுதொடர்பாக விசாரிக்க டீன் உத்தரவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக டீன் எம்ஆர். வைரமுத்து ராஜுவிடம் கேட்டபோது, உயிரிழப்பு வருந்தத்தக்கதுதான். லஞ்சம் கேட்ட நபர் மருத்துவமனை ஊழியர் இல்லை. அவர் இடைத்தரகராக இருக்கக்கூடும். விசாரித்து வருகிறோம். தவறு செய்தது யாராக இருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என்றார்.

108 ஆம்புலன்ஸில் கொண்டு வரப்படும் அளவுக்கு உயிருக்கு ஆபத்தானநிலையில் இருந்த நோயாளிக்கு, உடனடியாக சிகிச்சை அளிக்காமல் கண்டிப்பு காட்டிய மருத்துவர்கள், நுழைவுச்சீட்டு சீட்டு வாங்கச் சொல்லி அலைக்கழித்தது, லஞ்சம் கேட்டு ஊழியர் ஸ்ட்ரெச்சரை தள்ள மறுத்தது உள்ளிட்ட காரணங் களால் தாமதமான சிகிச்சையால் ஒரு உயிரிழப்பு நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவமனையில் உள்ள அனைத்து பகுதிகளும் சிசிடிவி கேமரா க்களில் கண்காணிக் கப்படுகிறது. அதனால், சிகிச்சைக்கு தாமதமான சம்பவங்களை கேமரா பதிவு மூலம் ஆராய்ந்து லஞ்சம் கேட்ட நபரை பிடித்து விசாரித்தால், இந்த துயரச் சம்பவத்தின் பின்னணி தெரிய வரும். தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும் உதவியாகவும் இருக்கும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

PIO-OCI conversion

June 30 deadline for India's PIO-OCI conversion

KUALA LUMPUR: The last date for submission of application by PIO card holders for registration as Overseas Citizen of India (OCI) card holder is June 30, 2016.
All PIO card holders who have not applied for OCI card are required to fill-up the OCI online application form (https://passport.gov.in/oci), and submit the application at the High Commission of India before or by June 30, 2016.
The photograph (size 2x2 white background), signature, copy of Malaysian passport and PIO card (first and last page) also has to be uploaded with the OCI application.
Original and hard copy of the Malaysian passport and PIO card should be brought along for verification with the printout of the filled up online application form.
The applications are being accepted at High Commission of India, Kuala Lumpur, Level 28, Menara 1 MK, No. 1, Jalan Mont Kiara, 50480 Kuala Lumpur between
9.30am-12pm (Monday-Friday). — Bernama

Registration opens for Overseas Citizen of India card June 9, 2016


KUALA LUMPUR: All Persons of Indian Origin (PIO) card holders are required to submit their application for registration as Overseas Citizen of India (OCI) to the Indian High Commission by June 30.

In a statement here today, the Indian High Commission said PIO card members who had not applied for their OCI cards were required to fill up the OCI online application form (https://passport.gov.in/oci), and submit the application at the commission by June 30.

Applicants needed to upload a photograph size 2×2 with white background, signature, copy of Malaysian passport and PIO card (first and last page), together with the OCI application, it said.

The original and hard copy of the Malaysian passport and PIO card need to be brought along for verification, alongside the printout of the online application form.

Applicants should send their application to the Indian High Commission, Kuala Lumpur, Level 28, Menara 1 MK, No. 1, Jalan Mont Kiara between 9.30am and noon (Monday-Friday).

Confusion Over Merger Of PIO, OCI Cards, High Commission Says 'No Panic'

Latest News Today
Confusion Over Merger Of PIO, OCI Cards, High Commission Says 'No Panic'

Indians Abroad |Written by Radhika Iyer | Updated: June 10, 2016 18:58 IST

LONDON: The merger of Persons of Indian Origin (PIO) and Overseas Citizens of India (OCI) schemes, as announced by the Centre is turning out to be a confusing exercise for thousands of expats as the deadline for the conversion of cards nears on June 30.

However, the Indian High Commission in London says there is no reason to panic because for those converting the PIO cards to OCI cards - another document that allows unlimited visa-free travel to India - will be allowed to travel even after the deadline, pending issuance of OCI card.

"Currently, June 30 is the last date for applying for PIO to OCI conversion. All PIO cards holders are, therefore, advised to apply for conversion to OCI card well before the last date. At the time of application, the original PIO card is returned to the applicant after verification and only a photocopy is taken for processing," said an official statement from the High Commission of India, London in response to a query by NDTV.

"After processing, at the time the OCI card is issued, the PIO card will be cancelled. During the interim period (from time of application to issue of OCI card), the PIO card continues to be valid," the statement said.

It usually takes about 20 working days to process the OCI for an applicant.

"We are currently putting in place the necessary infrastructure to decentralise the process. Once this is done, the High Commission will be able to do the entire processing and issuance of OCI cards (for PIO to OCI conversion cases) in London which will bring down processing times," it said.

Meanwhile for Nilesh Shah, a visa agent in west London's Ealing area, it is an unusually busy time. He is busy preparing documents for several clients who require an OCI.

"These sudden changes in rules have cause confusion and panic, especially for Indian origin senior citizens. I take a small price but help them put together their applications and get them a VFS office appointment," said Mr Shah.

70-year-old British Indian businessman, Ashwin Kumar, who spent three days getting all documents ready, said: "I will appreciate if the Government of India doesn't change the policy again. The hassle of paper work and frequent trips to the High Commission is more work for us and them."

PIO cards allowed visa-free travel to India for 15 years and required that holders registered with the police if they stayed in the country for more than 180 days. People with Indian heritage and foreigners married to Indians were eligible for the cards.

Meanwhile, OCI cards allow visa free travel with no time limit. The announcement for this conversion was made by Prime Minister Narendra Modi during his trip to the US in 2014.

Panel to monitor MCI goes after 'ghost' faculty



The Oversight Committee appointed by the Supreme Court to oversee the functioning of the Medical Council of India (MCI) seems to have started cracking the whip.

MCI has issued a circular asking all medical colleges to send in details about their faculty within two days so that they can be uploaded on to the website as per the directions of the committee.

This has been a long-standing demand of those calling for greater transparency to help fight the rampant practice of 'ghost' faculty at medical colleges during inspection by MCI teams and the practice of the same professor being shown as faculty at several colleges.

The MCI's urgency is evident from the fact that deputy secretary administration A K Hair has in the circular sent on June 6 to deans and principals of all medical colleges asked them to treat it as "most urgent". The detailed proforma to be filled for each faculty member includes name, date of birth, photo, photo ID, details of qualifications, including year, college and university names, copies of degrees and details of previous appointments and teaching experience. Each completed form is to be countersigned by the principal and head of department, who will vouch for the veracity of the details.

"Not only is the website not regularly updated, currently only the first page of the declaration about faculty is put up on it. They ought to put all four pages in the public domain," said Punjab Medical Council president Dr GS Grewal. He had used forms uploaded on the website to investigate and expose the fraud being perpetrated by medical colleges in faculty hiring. He added that mechanically putting declarations on the website would be of no use unless the MCI used it to cross check the qualifications claimed and also find out whether the same people were being shown as faculty in different colleges.

MCI president Dr Jayshree Mehta and secretary Reena Nayyar did not respond to queries on the sudden urgency on the issue.
There have been several cases of medical colleges fraudulently claiming to have the required number of faculty. Though a few doctors who posed as faculty at various colleges got penalised, the colleges and their managements have gone scot-free.


HC blasts MCI for apathy towards Gondia GMC

Nagpur: Upset with the Medical Council of India 's (MCI) dillydallying attitude towards granting approval to Government Medical College at Gondia , the Nagpurbench of Bombay High Court , on Thursday, flayed the apex body for its casual approach while dealing with such an important issue pertaining to health of poor people.
A division bench comprising justice Bhushan Gavai and justice Vinay Deshpandedirected the MCI to reply before June 16. The court censuring came while hearing a PIL (No 65/2015) by Praful Agrawal , who sought opening of GMC in Gondia , being a backward district affected by naxalism.
Earlier, the MCI informed that it had referred the Gondia GMC's case to 'oversight committee' constituted by the Supreme Court , primarily to oversee the counselling and admissions under MCI, until Parliament enacts a law empowering the apex medical education body to conduct them. It's headed by former Chief Justice of India RM Lodha with former Comptroller and Auditor General Vinod Rai , and eminent doctor Shiv Sarin , as its members.
The judges came down heavily on MCI for taking contradictory stands. In the morning session, its counsel Saurabh Tapadia made a statement which was later contradicted by another counsel Rahul Bhangde stating that the apex body was positively considering Gondia's case. The court then directed state to depute a responsible officer for assisting 'oversight committee' with entire set of documents and completing other formalities.
The petitioner knocked the judiciary's doors contending that the people from area need to travel long distance to Nagpur for serious ailments in absence of proper medical facilities. The central government had also included Gondia in list of places at which GMC is to be established and was ready to provide funds.

STATE FUMES AS DENTAL COUNCIL BLOCKS NEW COLLEGES

The Dental Council of India's decision to not sanction any new colleges in the country has angered the Maharashtra government, which has been struggling to get more dentists to rural areas. Of the total 25,000 dentists in the state, only 4,000 serve in rural areas. 

The DCI believes there is no need for new colleges as there are adequate number of dentists in the country. But Maharashtra fares poorly on this count.

"There is absolutely no penetration of dentists in the interiors of Maharashtra. The small number of dentists in rural areas are all at the taluka and district levels, and there is zero presence in remote villages and padas," said Dr Pravin Shingare, who heads the Directorate of Medical Education and Research (DMER). 

He added that the state government was drafting a strongly-worded letter to the DCI, listing all the relevant statistics. "We will send the letter in the next few days," he said. 

Maharashtra has one civic-run, three government-run and 40 private dental colleges. A new state-run dental college is being planned in Washim district and two private institutions are also in the pipeline. The DCI's stand means the colleges may not get approval. 

The council is already sitting on over 40 proposals for dental colleges across the country. "DCI is the apex body and without its permission, no dental college can be started. It should consider special cases like Maharashtra," Shingare said. "The joint director of the dental stream is collating the data of how many more dental colleges are needed in Maharashtra. The data will be ready in the next 10 days." 

He added that dental care was important not only for oral hygiene, but also for the early detection of oral cancers. 

According to doctors, majority of oral cancer cases are reported in rural areas because of high tobacco consumption. Apart from the consumption of smokeless tobacco, the use of 'masheri' (tobacco roasted and then powdered), an indigenous alternative to toothpaste, also puts residents of rural areas at cancer risk. 

Of the 10 lakh tobacco-related deaths in the country year, 1 lakh are reported in Maharashtra. 

The state receives a number of applications for dental posts, but most aspirants don't want to practise in rural areas. "The moment we announce a new post, we get hundreds of applications. There are hardly any private dentists in the interiors. The moment we create a competitive environment, they will start practising there," Shingare said.

UGC sets up panel for pay revision of academic staff



UGC sets up panel for pay revision of academic staff

CHENNAI: The apex higher education body, University Grants Commission (UGC), constituted the pay review commission for pay revision of academic staff of universities and colleges on Thursday.

The recommendations submitted by this committee will have an impact on seven lakh teachers across the country in various State-run and deemed universities and colleges.

This committee will review the implementation of previous decisions of the government under the revision of pay scale scheme approved for academic staff and evaluate the extent to which the earlier recommendations in relation to qualifications, service conditions and pay-scales were implemented.

The five-member committee, headed by UGC member V S Chauhan, has also been assigned the task of examining the present emolument structures and suggest revision taking minimum advancement, career advancement opportunities and total packets of benefits available to them into account.

The members have been instructed to submit recommendations over attracting and retaining talented persons in teaching profession and methods to improve the quality of research along with the above mentioned tasks before December 9.

The committee has been constituted in the backdrop of increased protests by the teaching fraternity to scrap use of Academic Performance Index (API) for career progression. Supporting this, academic staff from Tamil Nadu have demanded revival of the earlier scheme of self-appraisal system.

Former principal of AM Jain College, Chennai C R Ravi said that the recent amendment to UGC Regulation 2010 has virtually disqualified PhD-holders prior to July 2009 as ineligible for appointment as Assistant Professors. Expecting retrospective fulfilment by having two research journals besides participation in two conferences in area of research is impossible. “So the committee shall recommend that all those who acquired or enrolled for PhD prior to the date of the Regulations of 2009 are deemed to have met the norms”, he added.

Though the fifth UGC pay revision was implemented from January 1, 1996, the benefit of promotion was given effect to only from July 27, 1998 by the Education Ministry. Further, the Ministry gave a higher start of pay only for selection grade lecturers who reached that stage by January 1, 1996 and not later.

By ரமாமணி சுந்தர்

மூப்படைந்து கொண்டிருக்கும் மக்கள்தொகை


நமது நாடு உலகிலேயே மிக அதிகமான இளைஞர்களைக் கொண்ட நாடு என்பதும், நமது மக்கள்தொகையில் பாதி பேர் இருபத்தைந்து வயதைக்கூட எட்டாத இளம் பருவத்தினர் என்பதும் அனைவரும் அறிந்த விவரங்கள்.

ஆனால், இப்படி இளமையான மக்கள் தொகையைக் கொண்ட நமது நாட்டில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது என்பதும், உலகிலுள்ள பத்து முதியோர்களில் ஒருவர் நமது நாட்டில் உள்ளனர் என்பதும் பலருக்குத் தெரியாத விவரங்கள்.

1991-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பின் பொழுது மொத்த மக்கள்தொகையில் 6.8 விழுக்காடாக இருந்த அறுபது வயதைத் தாண்டியவர்களின் எண்ணிக்கை, 2001-ஆம் ஆண்டு 7.4 விழுக்காடாக அதிகரித்து, 2011-ஆம் ஆண்டில் 8.6 விழுக்காடு என்ற இலக்கை எட்டியுள்ளது.

முதியோர்களின் நலனுக்காகப் பாடுபடும் ஹெல்ப்பேஜ் இந்தியா (ஏங்ப்ல்ஹஞ்ங் ஐய்க்ண்ஹ) எனும் தொண்டு நிறுவனம் மற்றும் ஐக்கிய நாட்டு மக்கள் தொகை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2050-ஆம் ஆண்டிற்குள் நமது நாட்டு மக்கள் தொகையில் முதியவர்களின் பங்கு, 20 விழுக்காடாக ஆகிவிடும் என்றும், தற்பொழுது 10 கோடியாக இருக்கும் முதியோர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கிற்கு மேல் அதிகரித்து 32.4 கோடியாக ஆகிவிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கூடிய விரைவில் நமது மக்கள் தொகை மூப்படைந்த மக்கள்தொகை (ஹஞ்ண்ய்ஞ் ல்ர்ல்ன்ப்ஹற்ண்ர்ய்) என்று கருதப்படும் நிலையை அடைந்து விடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஜப்பான் போன்ற நாடுகள் ஏற்கெனவே அப்படிப்பட்ட ஒரு நிலையை அடைந்து விட்டன.

நாட்டில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டு வருவதும், மருத்துவத் துறையின் முன்னேற்றத்தின் காரணமாக மக்களின் சராசரி ஆயுள்காலம் அதிகரித்துக் கொண்டு வருவதுமே வயதானவர்களின் எண்ணிக்கை விழுக்காடு கூடிக்கொண்டு போவதற்கான காரணங்கள். கடந்த பத்தாண்டுகளில், 62 ஆண்டுகளாகயிருந்த ஆண்களின் சராசரி ஆயுள்காலம் 67-ஆகவும், 64-ஆக இருந்த பெண்களின் ஆயுள்காலம் கிட்டத்தட்ட 70 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஆண்களைவிடப் பெண்களே அதிக காலம் உயிர் வாழ்கிறார்கள் என்பதனால், முதியோர்களில், பெண்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. அதனால், முதியோர்களின் பிரச்னை மகளிர் சம்பந்தப்பட்டப் பிரச்னை என்ற கோணத்திலும் அணுகப்படுகிறது. பெரும்பாலும் பிறரைச் சார்ந்தே வாழும் மகளிர் ஒரு விதவையாக, வயதான காலத்தில் எப்படிப்பட்ட கஷ்டங்களைச் சந்திப்பார் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இப்படி அதிகரித்துக்கொண்டு போகும் முதியோர்களின் எண்ணிக்கையின் காரணமாக நமது நாடும், நமது குடும்பங்களும் பல சமூக மற்றும் பொருளாதார சவால்களைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

ஒரு நாட்டின் மக்கள்தொகையில் 15-லிருந்து 59 வயது வரையில் உள்ளவர்கள் உழைக்கும் மக்கள் என்றும், 0-14 வயது வரையில் உள்ள குழந்தைகளும், 60 வயதிற்கு மேல் உள்ள முதியோர்களும் உழைக்கும் மக்களைச் சார்ந்து, அதாவது அவர்கள் ஈட்டும் வருவாயைச் சார்ந்து வாழும் மக்கள் என்றும் கருதப்படுகிறார்கள்.

தற்பொழுது நமது நாட்டில் அறுபது வயதிற்கு மேலுள்ளவர்களின் சதவீதம் அதிகரித்துக் கொண்டு போகிறது என்பதனால் பொருளாதார ரீதியாக நாட்டின் உழைக்கும் சமுதாயத்தின் மேலுள்ள சுமை கூடிக்கொண்டு போகிறது. உடல்நல பாதிப்பு, பணத் தட்டுப்பாடு மற்றும் இவற்றின் காரணமாக ஏற்படும் பாதுகாப்பின்மை ஆகியன வயது காலத்தில் முதியோர்கள் சந்திக்கும் தலையாயப் பிரச்னைகள்.

அல்சீமர் எனப்படும் மறதி நோய், பார்கின்சன், பார்வை கோளாறு, மூட்டுவலி, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதயக் கோளாறு, புற்று நோய் போன்ற நோய்களின் பாதிப்புகளுக்கு முதியோர்கள் ஆளாகிறார்கள்.

சமீபத்தில் வெளிவந்துள்ள மத்திய அரசின் தேசிய மாதிரி கணக்கெடுப்பின் அறிக்கையிலிருந்து, நமது நாட்டு முதியோர்களில் பலர் தீராத வியாதியினால் அவதிப்படுகிறார்கள் என்றும், அறுபது வயதைத் தாண்டியவர்களில் எட்டு விழுக்காடு பேர்களும், எண்பது வயதைத் தாண்டியவர்களில் முப்பது விழுக்காட்டிற்கு மேற்பட்டவர்ளும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில் அல்லது படுத்த படுக்கையாக உள்ளார்கள் என்றும் தெரிய வருகிறது.

முதியோர்களின் உடல்நலனைக் கவனிப்பதற்காக நமது அரசு ஒவ்வொரு மாவட்ட அரசு மருத்துவமனையிலும் எங்ழ்ண்ஹற்ழ்ண்ஸ்ரீள் எனப்படும் முதியோர் மருத்துவப் பிரிவு ஒன்று இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது.

ஆனால், எல்லா அரசு மருத்துவமனைகளிலும் முதியோர் மருத்துவப் பிரிவுகள் உள்ளனவா, அவை சரியானபடி இயங்குகின்றனவா, எந்த அளவிற்கு அவை முதியோர்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன என்று தெரியவில்லை.

பொருளாதார ரீதியாகப் பிறரைச் சார்ந்து வாழும் முதியோர்களில் எத்தனை பேர் தனியார் மருத்துவ வசதிகளை நாட முடியும்? தேசிய மாதிரி கணக்கெடுப்பின் அறிக்கையின்படி, பெரும்பாலான முதியோர் பொருளாதார ரீதியாக முழுமையாக அல்லது பெருமளவிற்குப் பிறரைச் சார்ந்தே, குறிப்பாக தங்களது பிள்ளைகளைச் சார்ந்தே வாழவேண்டிய நிலைமையில் உள்ளார்கள்.

அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒரு சிலர் மட்டுமே ஓய்வூதியம், வைப்பு நிதி போன்ற பயன்களைப் பெறுகிறார்கள்.

அமைப்புச் சாராப் பணிகளில் வேலை செய்து ஒருவிதமான ஓய்வுப் பயன்களையும் பெறாத முதியோர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதே. ஒரு காலத்தில் பெற்றோர்களைப் பிள்ளைகள் குடும்பத் தலைவர்களாகப் பாவித்து அவர்களுக்கு உரிய மரியாதையையும் அந்தஸ்தையும் வழங்கிக் கொண்டிருந்தார்கள். வீட்டுப் பெரியவர்களைக் கலந்தாலோசித்து குடும்பத்தின் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஆனால், கூட்டுக் குடும்பங்கள் குலைந்து போன பிறகு, பெரும்பாலான பிள்ளைகள் பெற்றோர்களை பாரமாகத்தான் நினைக்கிறார்கள். அதுவும் குறைந்த வருமானம் உள்ள பிள்ளைகள் தங்கள் குடும்பச் செலவைச் சமாளிப்பதற்கே திணறிக் கொண்டிருக்கும் நிலையில் பெற்றோர்களுக்கு இரண்டு வேளை சாப்பாடு போட்டு கவனித்துக் கொண்டாலே அதிகம்.

வயதான காலத்தில் பொருளாதார ரீதியாகப் பிள்ளைகளைச் சார்ந்து வாழும் பெற்றோருக்கு, பெரும்பாலும் சரியான உணவு, மருத்துவ உதவி போன்றவை கிடைப்பதில்லை.

பணம், காசு இல்லாத முதியோர்களின் நிலைமை இப்படி என்றால், ஓரளவு சொத்து உள்ள முதியோர்களை, அவர்களின் பிள்ளைகள் தங்களுக்குச் சொத்தை எழுதிக் கொடுக்குமாறு துன்புறுத்திக் கொண்டிருப்பது சகஜம்.

ஒன்றிற்கு அதிகமானப் பிள்ளைகள் இருந்தால் அதில் யார் பெற்றோர்களை கவனித்துக் கொள்வது என்பதில் சண்டை சச்சரவிற்கும் குறைவில்லை. ஹெல்ப்பேஜ் இந்தியா நடத்திய முதியோர்களின் நிலைமை பற்றிய ஆய்வின்படி, எண்பது வயதைத் தாண்டிய முதியோர்களில் பலரும் மகன்-மருமகள்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும், ஏன் அடிக்குக் கூட ஆளாகிறார்கள் என்று தெரிய வருகிறது.

ஓரளவு வசதியுள்ள குடும்பங்களில் கூட முதியோர்கள் மன உளைச்சல், மன அழுத்தம் போன்ற உள ரீதியானப் பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். முதியோர்களை மதித்து அவர்களிடம் பேசுவதற்கோ அவர்கள் சொல்வதைக் கேட்பதற்கோ யாருக்கும் நேரமில்லை. வீட்டிற்குள்ளேயே அவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் அல்லது முதியோர் இல்லத்திற்கு அனுப்பப்படுகிறார்கள்.

வெளிநாட்டில் குடியேறிவிட்ட பிள்ளைகளின் பெற்றோர்களின் பாடு அதை விடக் கொடுமையானது. ஒரு காலத்தில் தங்கள் பிள்ளைகள் வெளிநாட்டில் செல்வச் செழிப்போடு வாழ்கிறார்கள் என்று பெருமிதம் கொண்ட பெற்றோர்கள், வயது ஆக ஆக, தாங்களும் வெளிநாட்டில் குடியேற முடியாத நிலையில், பிள்ளைகள் அருகில் இல்லாத கஷ்டத்தை உணர்கிறார்கள்.

இன்று தமிழ்நாட்டில் முதியோர் இல்லங்கள் ஒரு நல்ல வணிகமாகத் தழைத்தோங்குகிறது என்றால், அதற்கு உறுதுணையாக இருப்பது வெளிநாட்டில் குடியேறிவிட்ட இந்தியர்கள் தான்.

வேண்டாத தனது தாயையோ தந்தையையோ பிள்ளைகள் வேண்டுமென்றே கும்ப மேளாக்களில் தொலைத்து விட்டு வருவதைக் கேள்வியுறும் பொழுதும், பூரி ஜெகன்நாத் போன்ற கோவில்களில், கிடைக்கும் பிரசாதத்தை மதிய உணவாக உட்கொண்டு நாதியற்றுக் கிடக்கும் தள்ளாத வயதினரைக் காணும் பொழுதும், நம் நெஞ்சம் துடிக்கிறது.

முதியோர்கள் தங்கள் கடைசி காலத்தில் மதிப்புடனும், தன்மானத்துடனும், ஓரளவு வசதிகளுடனும், பாதுகாப்புடனும் வாழ வழி செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. என்னதான் முதியோர் இல்லங்கள் தோன்றினாலும், முதியோர்களுக்கு தங்கள் கடைசி நாள்களை தங்கள் குடும்பத்துடன் கழிப்பதில் உள்ள நிம்மதி வேறு எங்கும் கிடைக்காது.

நமது நாட்டில் தொன்று தொட்டு குடும்பம் என்ற அமைப்பே முதியோர்களுக்கும், மாற்றுத் திறனாளிகள் என்று அழைக்கப்படும் குறைபாடுகள் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கும், ஆதரவளித்து அவர்களை அரவணைத்துச் சென்று கரையேற்றிக் கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட குடும்பம் என்ற அமைப்பை எப்பாடுபட்டாவது வலுப்படுத்த நமது சமூகமும், அரசும் ஆவன செய்ய வேண்டும்.


கட்டுரையாளர்: எழுத்தாளர்.








பாஸ்போர்ட் உரிமையாளர்கள் 48 பேர் நேரில் விளக்கம் அளிக்க போலீஸ் சம்மன்

ஆலந்தூர்,

நங்கநல்லூர் தபால் பெட்டியில் இருந்த பாஸ்போர்ட்டுகளின் உரிமையாளர்கள் 48 பேருக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பழவந்தாங்கல் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

தபால் பெட்டியில் பாஸ்போர்ட்டுகள்

சென்னையை அடுத்த நங்கநல்லூர் மார்க்கெட் பகுதி அருகே 48-வது தெருவில் உள்ள தபால் பெட்டியில் கடந்த 2-ந்தேதி தபால் ஊழியர் கடிதங்களை எடுக்க முயன்றார். அப்போது தபால் பெட்டியில் 23 பாஸ்போர்ட்டுகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தபால் துறை உயர் அதிகாரிகள் அந்த பாஸ்போர்ட்டுகளை பழவந்தாங்கல் போலீசில் ஓப்படைத்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பாஸ்போர்ட்டுகளை சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மீண்டும் அதே தபால்பெட்டியில் 6-ந்தேதி 13 பாஸ்போர்ட்டுகளும், 8-ந்தேதி 15 பாஸ்போர்ட்டுகளும் கண்டெடுக்கப்பட்டன. 3 நாட்களில் அந்த தபால் பெட்டியில் இருந்து மொத்தம் 51 பாஸ்போர்ட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

மாயமானவை

அந்த பாஸ்போர்ட்டுகளை கைப்பற்றிய போலீசார், அவற்றை தபால் பெட்டியில் போட்டுச்சென்றது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பாஸ்போர்ட்டில் உள்ள முகவரியை வைத்து மடிப்பாக்கம், உள்ளகரம் பகுதிகளை சேர்ந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள், வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்தபோது விமான நிலையத்தில் பாஸ்போர்ட் மாயமாகிவிட்டதாகவும், இதுபற்றி போலீசில் புகார் செய்து மாற்று பாஸ்போர்ட்டுகளை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தனர்.

48 பேருக்கு சம்மன்

ஆனால் மீட்கப்பட்ட அனைத்து பாஸ்போர்ட்டுகளும் காலாவதியாகாதவை என தெரிகிறது. எனவே அவை கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டு இருந்ததா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தபால் பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளில் இருந்த முகவரியை வைத்து கொல்கத்தா, டெல்லி, மதுரை, திருவனந்தபுரம், திருச்சி, ராமநாதபுரம், ஐதராபாத் போன்ற பல பகுதிகளில் உள்ள 48 பேருக்கு இது தொடர்பாக விசாரணைக்கு வருமாறு அந்த முகவரிக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

இந்த சம்மன் கிடைக்கப்பெற்ற ஒரு வாரத்துக்குள், சம்பந்தப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்கும்படி கோரப்பட்டு உள்ளது.

சி.பி.ஐ. விசாரணையா?

இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது. இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, “எங்களுக்கு அதுபற்றி எதுவும் தெரியாது. நாங்கள் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

பாஸ்போர்ட்டுகள் கிடந்த தபால் பெட்டியை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் அதில் பாஸ்போர்ட்டை போட்டுச்சென்றது யார்? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அந்த தபால் பெட்டி அருகே உள்ள தனியார் வங்கியின் நுழைவுவாயில் முன் கண்காணிப்பு கேமராவை பொருத்த பழவந்தாங்கல் போலீசார் அறிவுறுத்தினார்கள். அதன்படி அங்கு கேமரா பொருத்தப்பட்டது.

அந்த பகுதிகளில் மாறுவேடங்களிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் நங்கநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Friday, June 10, 2016

அனைத்து செல்போன்களிலும் அவசரகால அழைப்பு பொத்தான் வசதி: நிறுவனங்களுக்கு தொலைத் தொடர்புத்துறை உத்தரவு

THE HINDU

செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் செல்போன்கள் அனைத்திலும் அவசரகால அழைப்பு பொத்தான் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என தொலைத் தொடர்புத் துறை (டிஓடி) வலியுறுத்தியுள்ளது.

அடுத்த ஆண்டு (2017) ஜனவரி முதல் தேதியிலிருந்து புதிதாக விற்பனைக்கு வரும் அனைத்து மொபைல் போன்களிலும் இத்தகைய வசதி கட்டாயமாக இருக்க வேண்டும் என முன்னர் வலியுறுத்தியிருந்தது.

தற்போது புதிதாக அனுப்பப் பட்டுள்ள சுற்றறிக்கையின்படி ஏற் கெனவே உள்ள பழைய போன் களிலும் இதற்கான சாஃப்ட்வேரை நிறுவுமாறு கேட்டுக் கொண்டுள் ளது. அவ்விதம் நிறுவித் தரு வதற்கு எவ்வித காலக் கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

அவசர கால பொத்தானாக 9 அல்லது 5-ஐ அழுத்தினால் அவசர கால அழைப்பாக 112 எண்ணுக்குத் (காவல்துறை) தொடர்பு கொள்ளும் வகையில் இதை உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே உள்ள போன் களில் அவசர கால பொத்தானை தீர்மானித்துவிட்டு, அதற்குரிய சாஃப்ட்வேரை அளிக்க வேண் டும். பிறகு எதிர்காலத்தில் வரும் போன்களில் அதே எண் அவசர கால பொத்தானாக பயன்படுத்தும் வகையில் தயாரிக்க வேண்டும் என்று டிஓடி குறிப்பிட்டுள்ளது.

2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து செல்போன் களையும் சேட்டிலைட்டுடன் இணைக்கப்பட்ட ஜிபிஎஸ் வசதி கொண்டதாக தயாரிக்கப்பட வேண்டும் என அரசு வலியுறுத்தி யுள்ளது.

Medicos who flunked PG exams demand revaluation



CHENNAI: The Doctors' Association for Social Equality (DASE) on Thursday demanded that the exam papers of more than 100 government doctors, who pursued PG courses and failed in their university exams, be revaluated.

Failed candidates claimed their studies were affected due to their involvement in flood relief work after last December's deluge, and wanted grace marks to be granted.

During a press meet at the Chennai press club, DASE general secretary G Ravindranath said none of the students had failed in individual subjects but their total marks fell below the required aggregate. As per MCI norms, a candidate should obtain a minimum 40% in each theory paper and not less than 50% cumulatively in all four papers for PG degree examination and three papers for diploma examination.

"The teachers have awarded the marks for individual papers without thinking of the overall aggregate. There are students who have got one mark less than the required aggregate of 200 due to which they have to re-attempt both their theory and practical exams," complained students.

A final year student of Madras Medical College said students were usually called for 24-hour duties every week and are not able to devote time completely to studies until six months before the exam. "Of the six months time, three months were taken up by flood relief work and this impacted our studies. Unlike dental students whose exams were postponed, our exams weren't, even though we requested for its postponement," said Sugandh, president of the association, adding that grace marks could be considered given the circumstances. According to the Tamil Nadu Dr MGR Medical University , 1397 PG degree diploma candidates appeared for the exam conducted in April 2016 and 1286 passed.The University pointed out that the same pass percentage range of 90-95% has been consistently maintained for the past three years.

Meanwhile, a statement issued by the registrar of Dr MGR University , Dr S Pushkala, says that apart from following MCI norms in evaluation, a second valuation was carried out for the failed theory papers for the benefit of students. "The representation of the failed candidates can be taken for consideration and will be placed in the Governing Council (GC) of this University . The decision of the council will later be sent to the MCI for further action. The University will always stand for the students' welfare and career," the statement said. University sources noted that the decision can only be taken by the council at this point.

DASE members said they are planning to stage a demonstration on June 13 along with the failed candidates if the university doesn't comply with their demand.

30% PG medical seats unrecognised


MCI gave nod to admit students on the assurance that the government will rectify the problems.

Nearly 30 per cent of the postgraduate medical seats in government medical colleges are remaining unrecognised since 2013.

The Medical Council of India (MCI) had let the government admit students in most of the seats, which it marked as irregular, on an assurance from the government that it will rectify the problems. But three years on, the problems remain unattended.

List of deficiencies

The MCI had pointed out a list of nearly 40 deficiencies in government institutions, which included lack of teaching faculty, inadequate senior residents, lack of original publications by professors, and various inadequacies in support systems for the departments.

The government had been dragging its feet on many issues facing undergraduate and post-graduate medical courses, and filling of vacancies is among the major ones. There are 2,125 posts in five medical colleges, of which 450-odd posts are vacant.

K. Mohanan, president, Kerala Government Medical College Teachers Association, said nearly 80 per cent of the vacancies were at the entry and middle level.

The MCI had brought in the stipulation of publishing original papers in 2014 for promotions.

But those who were drawing salaries in the professor scale before the new rule should not be penalised, said Dr. Mohanan.

“There are departments where professors are even without a chair and table, less to talk of publications or other facilities,” he added.










While Director of Medical Education Ramla Beevi claimed that no PG seat had been lost, the fact remains that 208 doctors completing postgraduate courses in a year cannot register their additional qualification as the course remains unrecognised. For instance, P.S. Jinesh, who completed post graduation in forensic medicine from Kottayam Medical College in 2013, had not been able to register till date since the department had not been recognised yet.

Wednesday, June 8, 2016

ரகளை அமைச்சர்... ராஜினாமா செய்த பெண் டிஎஸ்பி... கையைப் பிசையும் கர்நாடக அரசு!

vikatan news
ர்நாடகாவையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. டி.எஸ்.பி., அனுபமா ஷெனாயின் ராஜினாமா விவகாரம். கூடவே இன்று அனுபமா ஷெனாய் தன் முகநூல் பக்கத்தில்,  " நான் ராஜினாமா செய்து விட்டேன். நீ எப்ப ராஜினாமா செய்ய போகிறாய்?"  என்று கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பரமேஷ்வர் நாயக்கிற்கு பகிரங்க சவால் விட்டிருப்பதால்,  பரபரப்பு இன்னும் அதிகமாக பற்றிக்கொண்டுள்ளது. 

கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம் ஹடல்கி டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்தவர் அனுபமா ஷெனாய். இவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஹடல்கி டி.எஸ்.பி.,யாக பதவியேற்றார். இப்பகுதியில் போலி மதுபான  கடைகளும், அங்கீகாரம் இல்லாத பார்களும் ஏராளமாக இருந்தன. இதனையடுத்து பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுபானக்  கடைகளை அதிரடியாக இழுத்து மூடி பரபரப்பை உண்டாக்கினார்.

இதுவிர  பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது நேர்மையாகவும், திறம்படவும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சமூக விரோதக் கும்பல்களின் அடாவடிகளை ஒழித்துக் கட்டி, நிழல் உலகத்தினருக்கு கிலியை ஏற்படுத்தினார். 

அமைச்சர் தலையீடு
இந்நிலையில் கடந்த ஜனவரியில், பொதுமக்கள் திரண்டு வந்து டி.எஸ்.பி. அனுபமாவை நேரில் சந்தித்து ஒரு புகார் மனுவைக் கொடுத்தார்கள். அந்த மனுவில் , ‘‘ஹடல்கி நகர் பகுதியில், பொதுமக்கள் குடியிருப்புக்கு அருகே லோக்கல் காங்கிரஸ் பிரமுகர் ரவீந்தரருக்கு சொந்தமான பார் இருக்கிறது. இந்த பாரில் தினந்தோறும் குடித்து விட்டு குடிமகன்கள் பெரும் சத்தம் போடுகிறார்கள். இதனால் குழந்தைகள் படிக்க முடியவில்லை. அத்தோடு திடீர் திடீரென,எங்களின் வீடுகள் மீது கற்களால் தாக்குகிறார்கள். அதனால் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், எங்களின் வீட்டில் இருக்கும் பெண்களின் கையைப்  பிடித்து இழுத்து பாலியல் தொல்லைக் கொடுக்கிறார்கள். இதனால் நாங்கள் அச்சத்தின் பிடியில் தத்தளிக்கிறோம். குடிமகன்களின்  தொடரும் இந்தத் தொல்லைகளால் சமூக அமைதி சீரழிந்துவிட்டது. எனவே மதுபான பார் கடையை  அகற்ற வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
பொதுமக்களின் கண்ணீர் கோரிக்கையைடுத்து உடனடியாகக் களத்தில் இறங்கினார் டி.எஸ்.பி., அனுபமா ஷெனாய். பிரச்னைக்குரிய பார் இயங்கும் ஹடல்கி நகர் சென்று, அதிரடியாக பாரை இழுத்து மூடினார். அதற்கு லோக்கல் காங்கிரஸ் பிரமுகரான ரவீந்தர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். உடனே அவர்,தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பரமேஷ்வர் நாயக்கை சந்தித்து முறையிட்டார். விசயத்தை கேள்விப்பட்டு கொதித்த அமைச்சர்,  ரவீந்தர் முன்பே, டி.எஸ்.பி. அனுபமா ஷெனாய்க்கு  போன் செய்திருக்கிறார். 

அனுபமா போனில் அமைச்சரின் அழைப்பு ரிங் வந்து கொண்டிருக்கும் போதே, தன் துறையை சார்ந்த உயர் அதிகாரியின் போன் அழைப்பும் வர, 10 நிமிடங்களுக்கு அமைச்சரின் அழைப்பை  வெயிட்டிங்கில் போட்டு விட்டு தன் துறை அதிகாரியிடம் பேசி இருக்கிறார்.  துறை அதிகாரியிடம் பேசி முடித்த பிறகு அமைச்சரின் அழைப்பை 'அட்டன்' செய்திருக்கிறார். இதனால் வெய்ட்டிங்கில் இருந்த அமைச்சர் பரமேஷ்வர் நாயக், கோபத்தில் சினிமா வில்லன் பாணியில் கடுமையாக மிரட்டியிருக்கிறார். 

ஆனால், அதற்கு அனுபமா சற்றும் பணிந்து போகாமல், " நான் செய்தது சரிதான். மக்கள் பணி செய்வதற்காகத்தான் இந்த துறைக்கு வந்தேன். உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள் பார்க்கலாம்" என்று  சொல்லி,போன் இணைப்பைத் துண்டித்து இருக்கிறார். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அமைச்சர் பரமேஷ்வர் நாயக், அனுபமாவை 'டிரான்ஸ்பர்' செய்ய உத்தரவிட்டார். கர்நாடக காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கியது இந்த விவகாரம்.

அமைச்சரின் அடாவடித் தனத்திற்கு பொதுமக்களிடம் கடும் கண்டனம் எழுந்தது. உடனே அதில் மாநில அரசு தலையிட்டு, அனுபமாவின் இடமாற்றத்தை ரத்து செய்தது.  அதையடுத்து தொடர்ந்து ஆளும் அரசியல் கட்சியினரால் டி.எஸ்.பி., அனுபமா ஷெனாய்க்கு டார்ச்சர் வந்து கொண்டே இருந்தது. 

ராஜினாமா

இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்பு, அம்பேத்கர் பவன் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிக்கு செல்ல முடியாத அளவுக்கு, ரவீந்தர் தன் பாரை விரிவாக்கம் செய்திருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லோக்கல் தலித் அமைப்புகள் அனுபமாவை சந்தித்து புகார் தெரிவித்து இருக்கிறார்கள். அதையடுத்து பார் உரிமையார் ரவீந்தரை அழைத்து, பாரை விரிவாக்கம் செய்ய கூடாது என்று உத்தரவிட்டுள்ளார் அனுபமா. ஆனார் ரவீந்தர் அந்த உத்தரவு நகலை கிழித்துப் போட்டு விட்டு, "விரிவாக்கம் செய்வேன். நீ செய்வதை செய்" என்று மிரட்டும் தொனியில் பேசி இருக்கிறார். 

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுபமா, கடந்த சனிக்கிழமை (4.6.2016) பாரின் உரிமையாளர் ரவீந்தர் மற்றும் இருவரை கைது செய்து பெல்லாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அப்போது அங்கு வந்த சிலர் அனுபமாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அவரை அசிங்கமாகவும் ஆபாசமாகவும்  பேசியுள்ளனர். இதனால் மனம் வெறுத்த நிலையில், அனுபமா தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். 

இதுப்பற்றி மாவட்ட எஸ்.பி., சேத்தன், ‘‘அனுபமா ராஜினாமா கடிதம் கொடுத்திருக்கிறார். ஹடல்கியில் உள்ள அம்பேத்கார் பவனுக்கு செல்லும் சாலையில் உள்ள மதுக்கடையை, உரிமையாளர் ரவி விரிவுப்படுத்தி இருக்கிறார். அந்த பணி நடந்தால் அம்பேத்கார் பவனுக்கு செல்லும் சாலையின் அகலம் குறையும் என்று சில தலித் தலைவர்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து பாரின் உரிமையாளர் ரவியை அழைத்து, பாரின் விரிவாக்கத்தை நிறுத்துமாறு டி.எஸ்.பி., உத்தரவிட்டார். ஆனால் பார் உரிமையாளர் ரவி அதைக் கேட்கவில்லை. இதையடுத்து ரவி மற்றும் 2 பேரை முன்னெச்சரிக்கையாக கைது செய்திருக்கிறார். அதையடுத்து இந்த ராஜினாமா கடிதத்தை கொடுத்திருக்கிறார்’’ என்றார். 

காவல்துறை அதிகாரிகளை மாற்ற அமைச்சர்களுக்கு  அதிகாரம் இல்லை...

‘‘இந்த சம்பவத்தை அடுத்து கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மீது பல புகார்கள் குவிந்து வருகின்றன. போலீஸார் இடமாற்றத்தில் கடந்த ஒன்றரை வருடத்தில் 45 பரிந்துரைகளை காவல்துறைக்கு கொடுத்து கடும் நெருக்கடிகளை கொடுத்துள்ளார். டி.எஸ்.பி., அனுபமா ஷெனாய் இடமாற்ற உத்தரவுக்கும் இவர்தான் காரணம். பிறகு பல தரப்பினரும் எதிர்ப்பு  தெரிவித்ததால் ரத்து செய்யப்பட்டது. 2013 ஜூன் முதல் 2015 ஜனவரி வரை தனக்கு தேவைப்பட்ட காவல்துறை அதிகாரிகளை பெல்லாரி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்திருக்கிறார். 

உதாரணமாக பெல்லாரி சிட்டி டி.எஸ்.பி., முருகநன்னவார் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகளை  அங்கேயே பதவியில் நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று 2014 ஜூன், 10ம் தேதி  பெங்களூரு நிருபதுங்கா சாலையில் உள்ள தலைமை அலுவலக டி.ஜி.பி., ஐ.ஜி.,க்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூரு சி.ஐ.டி., டி.எஸ்.பி.,ரவிசங்கர் நாயக்கை பெல்லாரி மாவட்டத்துக்கு மாற்ற வேண்டும் என்பது உட்பட பல பரிந்துரைகளை செய்து, தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வதை காவல்துறை நிர்வாக வாரியம்தான் தீர்மானிக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவிட அதிகாரமில்லை.’’ என்கிறார் ஷிமோகாவை சேர்ந்த வழக்கறிஞர் வினோத்.  

முதல்வர் ரியாக்‌ஷன்


முதல்வர் சித்தராமையா, ‘‘அனுபமா ஷெனாய் சமூக விரோதிகளின் மிரட்டலுக்கு பயந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சட்டம் தனது கடமையை செய்யும்’’ என்று கூறி உள்ளார். 

'நேர்மையான அதிகாரிகள் பணியாற்ற முடியாத நிலை'

இதுபற்றி சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், ‘‘கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு நேர்மையான அதிகாரிகள் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சித்தராமையா ஆட்சி காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கமாகி விட்டது. இதனால் எதிர்காலத்தில் நேர்மையான அதிகாரிகளை பார்க்க முடியாத நிலை ஏற்படும். பாதிக்கப்பட்ட பெண் டி.எஸ்.பி., அனுபமா ஷெனாயை நேரடியாகத் தொடர்பு கொண்டு, அவருக்கு ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினால் மட்டுமே மாநிலத்தில் அனுபமா ஷெனாய் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு ஏற்படும். 

ஆனால் முதல்வர் சித்தராமையா நேர்மையான அதிகாரிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகத்  தெரியவில்லை. அனுபமா ஷெனாய் சமூக விரோதிகளின் மிரட்டலுக்கு பயந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, 'சட்டம் தனது கடமையை செய்யும்' என முதல்வர் சித்தராமையா தெரிவித்து இருப்பது பொறுப்பற்ற முறையில் பதில் அளிப்பதாக உள்ளது. இதனால் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது’’ என்று காட்டமாக கூறியுள்ளார்.


ஃபேஸ்புக்கில் சவால் விட்ட அனுபமா

இந்நிலையில் ராஜினாமா செய்த டி.எஸ்.பி., அனுபமா ஷெனாய் தன்னுடைய முகநூல் பக்கத்தில்,' நான் ராஜினாமா செய்து விட்டேன். மக்களுக்கு சேவை செய்வதாக சொல்லும் நீ எப்பொழுது ராஜினாமா செய்யப் போகிறாய்?' என்று கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கு கேள்வி எழுப்பி உள்ளது கர்நாடகம்  முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த  ஞாயிற்றுக்கிழமையன்றும், " முதல்வர் சித்தராமையா 'ரம் ராஜ்ஜியம்' நடத்திக்கொண்டிருப்பதாக அனுபமா தனது ஃபேஸ்புக் பதவில் குற்றம் சாட்டி இருந்தார்.
 அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு எதிராக தாம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டதற்காக தமக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அனுபமா குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் அவ்வாறு வழக்குப்பதிவு செய்தால் அது இன்னும் கூடுதலான அரசியல் நெருக்கடியை ஏற்படுத்திவிடும் என தயங்கிக்கொண்டிருக்கிறது கர்நாடக அரசு.  

என்று தீரும் காவல்துறையில் அரசியல் தலையீடு? 

-வீ.கே.ரமேஷ்

'டிஸ்லெக்‌ஸியா' மாணவர்கள்... ஆசிரியர்களின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?

'உங்க பொண்ணு/ பையன் எழுதுறதல அவளோ மிஸ்டேக் வருது... இதுக்கு மேல இவனுக்கு எப்படி சொல்லி கொடுக்கிறதுன்னே புரியல...!" என்று குறைபட்டுக் கொள்ளும் ஆசிரியர்களால் நொறுங்கிப்போவது பெற்றோர்களும் மாணவர்களும்தான்.
இதில் ஆசிரியர்களுடைய எண்ணங்கள், அணுகுமுறைதான் மாற வேண்டும்" என்கிறார் சேலத்தில் ஹெலிக்ஸ் ஓப்பன் ஸ்கூல் அண்ட் லேர்னிங் சென்டர் (Helikx Open School and Learning Centre) என்னும் பள்ளியை நடத்திவரும் செந்தில்குமார்.

'' சிறு வயதில் மெதுவாகக் கற்கும் பிரச்னை எனக்கே இருந்தது. பள்ளிப் பாடங்களை எழுதும்போது எக்கச்சக்கமான எழுத்துப் பிழை வரும். தொடர்ந்து அரை மணி நேரத்துக்கு உட்கார்ந்து படிக்க முடியாது. இந்த மாதிரி பல சிரமங்களுடன்தான் நான் வளர்ந்தேன். பத்தாம் வகுப்பில் எனக்கு 37 மார்க் போட்ட ஆசிரியரைத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். அந்த மார்க் எனக்கு கிடைக்காமல் போயிருந்தால், நான் என்ன ஆயிருப்பேன் என்று எனக்கே தெரியாது.
பிறகு கோவை பி.எஸ்.ஜி.யில் சோஷியல் ஒர்க் படித்தபோது, பள்ளிகளில் திரும்பத் திரும்ப ஃபெயில் ஆக்கப்படும் மாணவர்கள் மீது என் கவனம் குவிந்தது. 'ஏன் சில மாணவர்களுக்கு மட்டும் இப்படிப்பட்ட சிரமங்கள் ஏற்படுகின்றன, என்ன செய்தால் அவர்களை இந்தச் சிக்கல்களிலிருந்து காப்பாற்ற முடியும்?' என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்காக டெல்லியில் இருந்தபோதும், இது தொடர்பான அரசுக் கொள்கைகள் அனைத்தையும் எடுத்துப் பார்த்தேன்.
அரசுத் தரப்பில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் எல்லாமே சரியாகத்தான் இருந்தன. வழக்கம் போல அவற்றை செயல்படுத்துவத்தில்தான் பல விதமான பிரச்னைகள். இந்த விஷயத்தில் ஆசிரியர்களின் அணுகுமுறையில் பெரிய மாற்றம் ஏற்பட வேண்டும். மெதுவாக கற்கும் மாணவர்கள் பற்றிய அறிவியல்பூர்வமான விஷயங்கள், பள்ளி ஆசிரியர்களுக்கு சொல்லித் தரப்பட வேண்டும். அடுத்த முக்கிய மாற்றம், பெற்றோர்களிடம் ஏற்பட வேண்டும். இது மாதிரி பிரச்னை உள்ள குழந்தைகளை எந்தக் காரணம் கொண்டும் வெறுத்து ஒதுக்கக் கூடாது.
 

ஒரு மாணவன் பள்ளியில் மெதுவாக கற்கும் பிரச்னையினால் பாதிக்கப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இது பரம்பரைப் பழக்கமாக வரலாம். சிலர் பிறந்தபின் காலதாமதமாக பேசத் தொடங்கி இருக்கலாம் அல்லது நடக்கத் தொடங்கி இருக்கலாம். வீட்டிலோ, பள்ளியிலோ, கற்பிக்கும் சூழலிலோ ஏதாவது குறை இருந்தாலும் இது மாதிரியான பிரச்னை வரலாம்.
நமது பள்ளிகளில் ஐ.க்யூ ( IQ)  அடிப்படையில் குழந்தைகளைப் பிரிக்கிறார்கள். பொதுவாக, 75 - 89 வரை ஐ.க்யூ இருப்பவர்கள் 'ஸ்லோ லேனர்' என்று சொல்லப்படுகிற மெதுவாக கற்கும் குறைபாடு உடையவர்களாக இருப்பார்கள். ஆனால், 90-க்கு மேலே, சராசரி கற்றல் திறன் கொண்டவர்கள் என்றாலும் இவர்களில் சிலருக்கு சரியாக படிக்க வராது. தப்பும் தவறுமாக எழுதுவார்கள். படித்ததை மறந்துவிடுவார்கள். இந்தக் குறைபாடு கொண்டவர்கள்தான்  'டிஸ்லெக்ஸியா' பிரச்னையினால் பாதிக்கப்பட்டவர்கள்.  

இந்த வகை மாணவர்களை அடித்துப் படிக்க வைப்பதைவிட, இவர்களுக்கு எப்படி சொல்லித் தரவேண்டும் என்பதை புரிந்துகொண்டு கற்றுக் கொடுத்தால் தீர்ந்தது பிரச்னை. எனவே, இது மாதிரியான பிரச்னை கொண்ட மாணவர்களுக்குக் கற்றுத் தருவதற்காக, நாங்கள் மாற்று முறை பயிற்சித் திட்டத்தை (Remedial teaching) பின்பற்றி வருகிறோம். 

உதாரணமாக, ஆங்கிலத்தில் 'cat' என்றால் 'கேட்' என்று நம்மில் பலரும் படிப்போம். ஆனால், டிஸ்லெக்ஸியா பிரச்னை கொண்ட மாணவர்கள் இதனை 'காட்' என்று படிப்பார்கள். இவர்களுக்கு ஒலி அடிப்படையில் இந்த வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதன் மூலம் இந்தப் பிரச்னையைத் தீர்க்கலாம்.
தவிர, இது மாதிரி உள்ள குழந்தைகளை எப்போதும் படிக்கச் சொல்லி துன்புறுத்தக் கூடாது. படிப்பு தவிர, உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் தருகிற மாதிரி பல வேலைகளைக் கற்றுத் தரவேண்டும். நாங்கள் நடத்தும் பள்ளியில் மாணவர்களுக்கு விவசாயம் கற்றுத் தருகிறோம். வித்தியாசமாக படம் வரையக் கற்றுத் தருகிறோம். கம்ப்யூட்டரில் அனிமேஷன் படங்களை வரையவும் கற்றுத் தருகிறேன். இதன் மூலம் 10-வது படித்தபின் அவர்கள் வெறும் படிப்பை மட்டுமே நம்பி காலத்தை ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்க மாட்டார்கள். 
 

மெதுவாகக் கற்கும் குழந்தைகளுக்கென ஒரு பள்ளியை சேலத்தில் நாங்கள் நடத்துகிறோம். இது மாதிரியான மாணவர்களுக்கு கற்றுத் தரும் ஆசிரியர்கள்,  இந்த வகை மாணவர்களை எப்படி அணுக வேண்டும் என்பதை கற்றுத் தர ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை ஆகிய நகரங்களில் மையங்களை நடத்தி வருகிறோம். தமிழகத்தின் பல நகரங்களில் இது மாதிரியான பிரச்னை கொண்ட குழந்தைகள் நிறைய இருப்பதால், ஆசிரியர்கள் அனைவருக்குமே இந்த பயிற்சி அவசியம்.
மெதுவாக கற்பது ஒரு பிரச்னையே அல்ல. நோய் நாடி நோய் முதல் நாடி என்கிற விதத்தில் அணுகினால், இதனை எளிதாகத் தீர்க்கலாம். இதனால் குழந்தைகளை தேவை இல்லாமல் வாட்டி வதைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்காது'' என்றார் செந்தில்குமார்.
டிஸ்லெக்ஸியா பற்றிய போதுமான விழிப்பு உணர்வு நம் மக்களிடம் இல்லை . மூளை வளர்ச்சிக் குறைபாடுகளான ஆட்டிசம், டவுண் சிண்ட்ரோம் ஆகியவற்றுக்கும், நரம்புகளை அதிர்வலைகள் மூலம் செயல்படவைக்கும் செல்களான நியூரான்களின் செயல்திறன் குறைபாடான டிஸ்லெக்ஸியாவுக்கும் உள்ள வேறுபாட்டை, முதலில் பெற்றோர்களும்  ஆசிரியர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
சரியாகப் படிக்கவில்லை என்பதற்காக குழந்தைகள் ஒதுக்கப்படும் நிலையை இனியாவது தவிர்ப்போம்!

பஸ் டிரைவர் ஓட்டம்: பயணிகள் தவிப்பு

DINAMALAR

திருமங்கலம்:திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. துாத்துக்குடி நடுவீர்பட்டி டிரைவர் கோமதிநாயகம், 42, பஸ்சை ஓட்டினார்.பஸ்சில், எட்டு பெண்கள், இரு குழந்தைகள், இன்ஜினியரிங் கவுன்சிலுக்கு செல்லும் மாணவர்கள் என, 32 பேர் இருந்தனர். கோவில்பட்டியில் ரோட்டோரம்,15 நிமிடங்கள் பஸ்சை நிறுத்திய டிரைவர், பஸ்சிலேயே மது அருந்தினார். அதிர்ச்சியுற்ற பயணிகள் டிரைவரிடம், 'பஸ்சை ஓட்டக் கூடாது' என்றனர்.

''பயப்படாதீங்க... சரக்கு அடிச்சா ஸ்டெடியா ஓட்டுவேன்,'' எனக் கூறி, டிரைவர் பஸ்சை ஓட்டியுள்ளார். தொடர்ந்து, பயணிகள் சத்தமிட, கிளீனரிடம் பஸ்சை ஓட்டும்படி டிரைவர் கூறியுள்ளார். பயந்த பயணிகள், தொடர்ந்து பஸ்சை நிறுத்த கோரி கூச்சல் போட்டுள்ளனர். பின், கோமதிநாயகம் ஓட்டியுள்ளார்.

இரவு, 11:00 மணிக்கு கப்பலுார் ரிங் ரோட்டில் சென்றபோது, எதிரே வந்த லாரி மீது பஸ் உரசியதில், கண்ணாடி உடைந்தது. பயணிகள் கோமதி நாயகத்திடம் வாக்குவாதம் செய்தனர்.

முழு போதையில் இருந்த அவர், எதிரே வந்த தங்கள் நிறுவன வேனை நிறுத்தி, அதில் ஏறி தப்பி விட்டார். கிளீனரும் தப்பிவிட, பயணிகள், திருமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு

பயணிகள் சென்றனர்.

Tuesday, June 7, 2016

அமெரிக்க பல்கலை.யில் இருந்து 25 இந்திய மாணவர்கள் வெளியேற்றம்!


நியூயார்க்: அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் படித்து வரும் 25 இந்திய மாணவர்களை வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கென்டக்கி மாகாணம், பவுலிங் கிரீன் நகரில் மேற்கு கென்டக்கி பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு கம்ப்யூட்டர் அறிவியல் பட்டப்படிப்பில், இந்தியாவைச் சேர்ந்த 60 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பல்கலைக்கழகத்தில் முதல் பருவ தேர்வுகள் நடைபெற்றது. இதில், இந்திய மாணவர்கள் 25 பேர் பல்கலைக் கழகத்தின் அனுமதி தரநிலைகளை எட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த மாணவர்கள் 25 பேரையும் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அந்த பல்கலைக்கழகத்தின் கம்ப்யூட்டர் அறிவியல் திட்டத்தின் தலைவர் ஜேம்ஸ் கேரி கூறுகையில், ''முதல் பருவ தேர்வில் இந்தியாவைச் சேர்ந்த 40 மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அனுமதி தரநிலைகளை எட்டவில்லை. ஆனால், இந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் உதவி செய்துள்ளது. இந்த மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் புரோகிராம்களை எழுத தெரியவில்லை. இது அமெரிக்க இளநிலை பட்டதாரிகளுக்கான படிப்பில் சேர அடிப்படை விதியாகும்.

இந்த மாணவர்கள் கம்ப்யூட்டர் புரோகிராம்களை எழுத தெரியாமல் சென்றால் எனது துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தும். எனவே, அவர்களை தொடர அனுமதி அளிக்க முடியாமல் இருக்கிறோம்'' என்றார்.

டாக்டரின் உயிரை பறித்த 'வழுக்கை'..! வினையாகிப் போன விளம்பரம்


மனிதனை அழகாக காட்டுவதில் தலைமுடிக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால், இன்றைய சூழ்நிலையில் பல்வேறு காரணங்களால் இளம் வயதிலேயே தலைமுடி கொட்டி வழுக்கை தலையுடன் வலம் வருபவர்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகையவர்களை குறி வைக்கும் சில அழகு நிலையங்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை கொடுத்து வழுக்கை தலைக்கு சொந்தகாரர்களை கவருகின்றன. இதனால் ஏமாந்தவர்கள் பலர். அதை வெளியில் சொல்ல முடியாமல் தவிப்பவர்களும் உண்டு. பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்ந்த வேலூர் மாவட்டம், ஆரணியை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் சந்தோஷ்குமார், முடி வளர ஆசைப்பட்டு உயிரையே விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்த சந்தோஷ்குமார், பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு தலையில் வழுக்கை விழ, எல்லோரைப் போல அவரும் மனம் வருந்தினார். அப்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள அழகு நிலையத்தின் விளம்பரத்தை அவர் பார்த்துள்ளார். அங்கு சென்று தன்னுடைய வருத்தத்தை சொல்ல.. 'இதற்கெல்லாம் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு தலையில் முடியை நட்டி பழைய சந்தோஷ்குமாராக மாற்றி விடுகிறோம்' என்று அங்குள்ளவர்கள் உறுதி அளித்துள்ளனர். அதன்படி கடந்த மே மாதம் சந்தோஷ்குமார் அங்கு சென்றார்.

முடி நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தலையில் ஊசி மூலம் முடிகளை நடும் போது வலியை பொறுத்துக் கொள்ள டாக்டர் ஹரிபிரசாத், சந்தோஷ்குமாருக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார். காலையிலிருந்து மாலை வரை முடி நடும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையை டாக்டர் வினித் செய்துள்ளார். அப்போது, சந்தோஷ்குமாருக்கு தலைசுற்றல், மயக்கம் வந்துள்ளது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர்கள் சந்தோஷ்குமாரை அழைத்துச் சென்றுள்ளனர். இதன்பிறகு நிலைமை மோசமானதும் வேலூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் சந்தோஷ்குமார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதையடுத்து சந்தோஷ்குமாரின் பெற்றோர், மகனுக்கு இறுதி சடங்கு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தோஷ்குமாரின் குடும்பம் தரப்பில் யாரும் போலீசுக்கு புகார் கொடுக்கவில்லை. இதனால் அவரது உடல் பிரேத பரிசோதனையும் செய்யப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவத்துறை சார்பில் மருத்துவ கவுன்சிலுக்கு புகார் செய்யப்பட்டது. உடனடியாக களமிறங்கியது மருத்துவ கவுன்சில். இதுகுறித்து தமிழக மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் செந்தில் விசாரணை நடத்தி வருகிறார். சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

டாக்டர் செந்திலிடம் கேட்ட போது, "மயக்க மருந்து கொடுத்து விட்டு கடைசி வரை நோயாளியின் அருகில் இருக்காமல் சென்ற மயக்கவியல் டாக்டருக்கும், அறுவை சிகிச்சை தகுதி பெறும் முன்பே சிகிச்சை அளித்தது எப்படி? என்பது பற்றி டாக்டர் வினித்திடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பியூட்டி பார்லர் மற்றும் சலூன், முடிவெட்டவும், அழகு கலைக்காகவும் அனுமதி பெற்றுள்ளது. முடி நடும் சிகிச்சைக்கு அனுமதி பெறவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் அந்த பியூட்டி பார்லருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

மருத்துவத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "பண சம்பாதிக்கும் ஆசையில் மக்களின் உயிரோடு விளையாடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக அழகு நிலையங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் முறைகேடாக நடக்கின்றன. முடி நடுவதற்காக 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள். அதை நம்பி பலர் ஏமாந்து செல்கிறார்கள். 40 வயதை கடந்த பெண்கள் முகத்தில் விழும் சுருக்கத்தை பார்த்து துடித்து போகிறார்கள். அதை போக்குவதற்காக ‘போட்டாக்ஸ்’ என்ற ஊசியை போட்டுக் கொள்ளும் சம்பவங்களும் நிகழ்கின்றன. சரியான மருத்துவ உபகரணங்கள், டாக்டர்கள் வசதி இல்லாமல் இந்த மாதிரி சிகிச்சை அளிப்பது குற்றமாகும். உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே மக்கள் விழிப்பு உணர்வாக இருக்க வேண்டும். அழகுக்கு ஆசைப்பட்டு உயிரை இழப்பதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற அழகு நிலையங்கள் குறித்து மருத்துவ கவுன்சிலிடம் புகார் கொடுக்கலாம்" என்றனர்.

எஸ்.மகேஷ்

தன்னை உயர்த்த அடுத்தவரை தாழ்த்தலாமா?

DINAMANI

By இரா. சோமசுந்தரம்

பிகார் மாநிலத்தில் இன்டர்மீடியட் தேர்வு முடிவுகளில் மாநில அளவில் தரவரிசையில் இடம்பெற்ற முதல் 14 மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தி, உண்மையாகவே அந்த கேள்விகளுக்கு அவர்கள்தான் விடையளித்தார்களா என்பதைக் கண்டறிந்துள்ளது அம்மாநில கல்வித் துறை.
 இதற்குக் காரணம், அந்த மாணவ, மாணவிகளிடம் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டி கண்ட போது, அடிப்படையான கேள்விகளுக்கும்கூட அவர்கள் தப்பான பதில்களை அளித்ததாக ஒளிபரப்பாகி, பிகார் மாநிலத்தின் கல்வித்துறையை கேலிக்கு இடமாக்கியுள்ளது என்பதுதான். இருப்பினும், பிகார் மாநில கல்வித் துறை இவ்வளவு அவசர அவசரமாக, அவர்களுக்குத் தேர்வு நடத்தும் முடிவுக்கு வந்திருக்க வேண்டியதில்லை.
 தமிழ்நாட்டில் தரவரிசையில் இடம்பெற்ற மாணவர்களைக்கூட இவ்வாறு திடீரென கேமிரா முன்பாக நிறுத்திவைத்து, கேள்விகள் கேட்டால், அந்த மாணவ, மாணவியர் பதற்றமாகிவிடுவார்கள். அவர்களால் சரியாக பதில்சொல்ல முடியாது. 
 ஆங்கிலத்தில் 100 மதிப்பெண் வாங்கிய மாணவரிடம் ஒரு வடநாட்டு தொலைக்காட்சி நிறுவனம் நுனிநாக்கு ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால், அவரால் அந்தக் கேள்வியைப் புரிந்துகொள்வதே கடினமாக இருக்கும். 
 அந்தக் கேள்விக்கு ஆங்கிலத்திலேயே "பொளந்துகட்ட' வேண்டும் என்று அந்த தொலைக்காட்சி நிறுவனம் எதிர்பார்த்தால், அவ்வாறு நடக்கவில்லை என்பதற்காக அந்த மாணவரைத் தரம் தாழ்த்தினால், அதை நாம் அனுமதிப்போமா?
 தரவரிசையில் இடம்பெறும் மாணவர்கள் பலருக்கு விடையை மனப்பாடமாக எழுத மட்டுமே தெரியும். அவர்களிடம் பதிலைச் சொல்லும்படி சொன்னால் திணறிப் போவார்கள். கோர்வையாக எடுத்துவைக்கத் தெரியாது. 
 ஏனென்றால், அவர்களது பயிற்சி முழுதும், ஒவ்வொரு நாளும், ஒரே மாதிரியான கேள்விக்கு ஒரே மாதிரியான விடைகளை எழுதிக்கொண்டே இருப்பதுதான். கேள்வியை கண்கள் பார்க்கும், விடையை கைகள் எழுதும். மூளைக்கு அங்கே வேலையே இல்லை. மதிப்பெண் பெறுவதற்காக விடைகளை எழுத மட்டுமே பயிற்சி தரப்படுகிறது. 
 பெங்களூருவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சுதா மூர்த்தி (இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மனைவி) ஒரு பள்ளியில் சிறுவர்களுக்காக தான் எழுதிய கதையை வாசித்தார். அப்போது ஒரு சிறுவன் எழுந்து, உங்களுக்குப் படிக்கத் தெரியவில்லை என்று கூறினான். ஆசிரியர்களின் மழுப்பல்களை மீறி, அந்தச் சிறுவனிடம் அவர், ஏன் அப்படிச் சொன்னாய்? என்று கேட்டார். 
 பேசியதில் அந்தச் சிறுவன் பள்ளி நாடகத்தில் ஏற்றஇறக்கத்துடன் பேசிப் பழகியிருந்ததை அறிந்துகொண்டு, "என் கதையைப் படிக்க முடியுமா?" என்று அந்தச் சிறுவனிடம் கேட்டார். சிறுவனும் கதையை வாசித்தான்; சுதா மூர்த்தியைவிட மிக அழகாக! "அப்போதுதான் எனக்குப் புரிந்தது. எழுத மட்டுமே எனக்குத் தெரியும்!' என்று கட்டுரையை முடிக்கிறார் சுதா மூர்த்தி.
 இன்றைய கல்விச் சூழலில் பல மாணவ, மாணவியருக்கு எழுத மட்டுமே தெரியும். அவர்களை குறுக்குக்கேள்வி கேட்டு, மடக்குவது எளிது. அதை புத்திசாலித்தனமான அராஜகம் அல்லது அறிவீனம் என்று எப்படியும் எடுத்துக்கொள்ளலாம். பிகாரில் குறை கூறப்பட்டுள்ள இந்த ஏழு மாணவ, மாணவியரும் ஒரே இடத்தில் தேர்வு எழுதியவர்கள் அல்லர். அவர்களும்கூட கேள்விக்கு, இயந்திரத்தனமாக, புரிதல் இல்லாமல் பதில் எழுதியவர்களாக இருக்கலாம்.
 ஒரு தொலைக்காட்சி நிறுவனம், ஒரு மாநிலத்தின் கல்வித் தரத்தை சோதிப்பதாக இருந்தால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாநிலத்திலும், மாவட்ட அளவிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் பட்டியலை எடுத்து, அந்த மாணவர்கள் இப்போது என்னவானார்கள்? அவர்கள் உயர் கல்வியில் தேர்ச்சி பெற முடிந்ததா? 
 அதே அறிவுத்திறத்துடன் கல்லூரிகளைவிட்டு வெளியேறி, பேரும் புகழும் மிக்கவர்களாக அறிவுலகில் இயங்குகிறார்களா என்பதை தேடிச் சென்று, மதிப்பீடு செய்வதுதான் சரியாக இருக்க முடியும். அதுதான் கல்வித் துறையின் பலவீனங்களை அம்பலப்படுத்துவதாக அமையும். அதைவிடுத்து, மாணவ - மாணவியரை கேள்வி கேட்டு, அவர்களை அறிவு இல்லாதவர்களாக சித்திரிப்பது முறையற்ற செயல்.
 காப்பியடித்தல், வினாத்தாள் முன்கூட்டியே வெளியாதல், வேறுநபர் தேர்வு எழுதுதல் எல்லாவற்றுக்கும் சாத்தியம் இருக்கிறது என்றாலும், இத்தகைய பேட்டி வெளியானவுடன், பிகார் மாநில கல்வித் துறை அதிகாரிகள் அந்த மாணவ, மாணவியர் படித்த பள்ளியில் அவர்களது காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை எடுத்துப் பார்த்து ஒப்பீடு செய்திருக்கலாம். அப்பள்ளியின் மற்ற மாணவர்களிடம் அவர் உண்மையாகவே வகுப்பறையில் சிறந்து விளங்கினாரா என்று விசாரித்திருக்கலாம். அதைவிடுத்து, மறுதேர்வு நடத்தியது தவறான முன்னுதாரணம். 
 நாடு முழுவதும் கற்பித்தல் முறை, மதிப்பிடும் முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்; ஒரு மாணவர் ஒரேயொரு தேர்வில் பெறும் மதிப்பெண் மட்டுமே அவருடைய கல்வித்திறனாக மதிக்கப்படும் நிலை மாற வேண்டும் என்பது உண்மை. 
 மேலும், ஒரு கல்வியாண்டில் இரு பருவம் அல்லது மூன்று பருவத் தேர்வுகளில் கிடைக்கும் மதிப்பெண்களின் சராசரியைக் கொண்டு மதிப்பிடவாகிலும் செய்யலாம். தற்போதைய கல்வி நடைமுறைகள் சரியில்லை என்பதற்காக, தரவரிசையில் இடம்பெறும் மாணவர்கள் புத்திசாலிகள் அல்ல என்பதை இப்படியெல்லாம் நிரூபிக்க வேண்டியதில்லை.
 கல்வித் தரம் தாழ்ந்திருக்கிறது என்பதை அம்பலப்படுத்துவது மட்டுமே ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் குறிக்கோளாக இருந்தால், பாராட்டலாம். டி.ஆர்.பி. ரேட்டிங்கை (தொலைக்காட்சி தரப் புள்ளியை) உயர்த்திக்கொள்வதற்காக இப்படியா?

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...