Wednesday, June 8, 2016

பஸ் டிரைவர் ஓட்டம்: பயணிகள் தவிப்பு

DINAMALAR

திருமங்கலம்:திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. துாத்துக்குடி நடுவீர்பட்டி டிரைவர் கோமதிநாயகம், 42, பஸ்சை ஓட்டினார்.பஸ்சில், எட்டு பெண்கள், இரு குழந்தைகள், இன்ஜினியரிங் கவுன்சிலுக்கு செல்லும் மாணவர்கள் என, 32 பேர் இருந்தனர். கோவில்பட்டியில் ரோட்டோரம்,15 நிமிடங்கள் பஸ்சை நிறுத்திய டிரைவர், பஸ்சிலேயே மது அருந்தினார். அதிர்ச்சியுற்ற பயணிகள் டிரைவரிடம், 'பஸ்சை ஓட்டக் கூடாது' என்றனர்.

''பயப்படாதீங்க... சரக்கு அடிச்சா ஸ்டெடியா ஓட்டுவேன்,'' எனக் கூறி, டிரைவர் பஸ்சை ஓட்டியுள்ளார். தொடர்ந்து, பயணிகள் சத்தமிட, கிளீனரிடம் பஸ்சை ஓட்டும்படி டிரைவர் கூறியுள்ளார். பயந்த பயணிகள், தொடர்ந்து பஸ்சை நிறுத்த கோரி கூச்சல் போட்டுள்ளனர். பின், கோமதிநாயகம் ஓட்டியுள்ளார்.

இரவு, 11:00 மணிக்கு கப்பலுார் ரிங் ரோட்டில் சென்றபோது, எதிரே வந்த லாரி மீது பஸ் உரசியதில், கண்ணாடி உடைந்தது. பயணிகள் கோமதி நாயகத்திடம் வாக்குவாதம் செய்தனர்.

முழு போதையில் இருந்த அவர், எதிரே வந்த தங்கள் நிறுவன வேனை நிறுத்தி, அதில் ஏறி தப்பி விட்டார். கிளீனரும் தப்பிவிட, பயணிகள், திருமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு

பயணிகள் சென்றனர்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...