Monday, June 27, 2016

வீடியோ: லஞ்சபணத்தை பிரித்து கொள்வதில் போலீசார் கட்டி புரண்டு சண்டை

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் முக்கிய சாலையில் நான்கு போலீச்சார் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு கட்டி புரளும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது

லாரி டிரைஅவர்கலீடம் இருந்து பெறபட்ட லஞ்சம் பணம் மொத்தத்தையும் ஒரே அதிகாரி கொண்டு செல்ல முற்பட்டதாகவும், அத்னால் உடன் இருந்த அதிகாரி ஒருவர் லஞ்ச பணத்தை சரி சமமாக பங்கு பிரித்துதரும் படி கூறியதாகவும். இதை தொடர்ந்து இருவருக்கும் இடையில் நடந்த வாக்கு வாதம் முற்றி சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது

வீடியோவில் மேம்பாலம் அருகே பணியில் இருந்த போது, போலீசார்களிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இருவரும், பொதுமக்கள் முன்னிலையில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.

அருகில் இருந்த சக போலீசார் அவர்களை தடுக்க முயன்றும், அதனைப் பொருட்படுத்தாத இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். போலீஸ் சீருடையில் இருந்தும் இருவரும் ஒருவரை ஒருவர்‌ தாக்கிக் கொண்டதை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்தவாரே சென்றுள்ளனர்.

இந்நிலையில், லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக உள்ளுர் போலீஸ் நிலையத்தில், குற்றவாளி போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...