Monday, June 27, 2016

ரெயில்நிலைய கேமராவில் தெரியும் நபரே கொலையாளி, ரெயில்வே போலீஸ் உறுதி

சென்னை, DAILY THANTHI


நுங்கம்பாக்கம் ரெயில்நிலைய கேமராவில் தெரியும் நபரே பொறியாளர் சுவாதியை கொலை செய்தவர் என்று ரெயில்வே போலீஸ் உறுதிசெய்து உள்ளது.


சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், நேற்று முன்தினம் கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் மர்ம ஆசாமியால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மர்ம ஆசாமியை வலைவீசி தேடிவரும் போலீஸ் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணையை துரிதப்படுத்தி உள்ளது.


நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் போலீசார் நடத்திய சோதனையில் ‘டிராவல் பேக்’கில் ரத்தக்கறையுடன் கத்தி ஒன்றை கைப்பற்றினார்கள். சுவாதியை கொல்ல மர்ம ஆசாமி இந்த கத்தியை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். கத்தியில் இருந்து கை ரேகை எடுக்கப்பட்டது, இந்த ரேகையானது குற்றவாளிகள் தொடர்பான தரவுகளுடன் ஒத்து போகிறதா என்று சோதிக்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவத்தால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


ரெயில்வே போலீஸ் உறுதி


இந்நிலையில் ரெயில் நிலைய கேமரா பதிவில் தெரியும் நபரே பொறியாளர் சுவாதியை கொலை செய்தவர் என்று ரெயில்வே போலீஸ் உறுதிசெய்து உள்ளது.


கொலை செய்தநபர் தொடர்பாக கூடுதல் பதிவானது கிடைத்து உள்ளது என்று ரெயில்வே போலீஸ் தெரிவித்து உள்ளது. மர்மநபர் கொலை செய்துவிட்டு தப்பித்து செல்லும் காட்சிகள் புதிய பதிவுகளில் இடம்பெற்று உள்ளது என்றும் புதிய காட்சியில் இடபெற்று உள்ளவரின் அடையாளம் ஏற்கனவே வெளியானதுடன் ஒத்துபோகிறது என்றும் போலீஸ் குற்றவாளியை நெருங்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...