Sunday, June 19, 2016

எம்ஜிஆர் 100 | 89 - நடிகர் நலனில் அக்கறை கொண்டவர்!

எம்.ஜி.ஆருடன் கே.பி.ராமகிருஷ்ணன்


தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R.தன்னுடன் நடிக்கும் நடிகர்களின் நலனில் அக்கறை கொண்டவர். அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் சகோதரனைப் போல கவனித்து உதவிகள் செய்வார். சில தயாரிப்பாளர்கள் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படத்துக்கு மேல் எடுக்காமல் ஒதுங்கிவிட்டனர் என்று விமர்சனங்கள் உண்டு. தன் படங்கள் மூலம் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கும் லாபம், எல்லா கலைஞர்களுக்கும் பகிரப்பட வேண்டும் என்று அவர் நினைத்ததுதான் அதற்கு காரணம்!

எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான வட்டத் தில் இருந்தவர்களில் அவரது மெய்க்காவலரும் ஸ்டன்ட் நடிகரு மான கே.பி.ராமகிருஷ்ணனும் ஒருவர். 1949-ம் ஆண்டு பி.யூ.சின்னப்பா நடித்த ‘மங்கையர்க்கரசி’ படத்தில் கே.பி.ராம கிருஷ்ணன் சண்டைக் காட்சியில் நடித் தார். சென்னை கீழ்ப்பாக்கம் நியூடோன் ஸ்டுடியோவில் படப்பிடிப்பின்போது, பி.யூ.சின்னப்பாவை சந்திக்க வந்த எம்.ஜி.ஆருக்கு ராமகிருஷ்ணன் அறி முகமானார். பின்னர், ‘நாடோடி மன்னன்’ படத்தில் அவருக்கு எம்.ஜி.ஆர். வாய்ப் பளித்தார். ஏறத்தாழ 30 ஆண்டுகள் எம்.ஜி.ஆருடன் கூடவே இருந்தவர்.

‘ஒரு தாய் மக்கள்’ படத்தின் படப் பிடிப்பு சென்னை வடபழனியில் சாரதா ஸ்டுடியோவில் நடந்தது. எம்.ஜி.ஆருடன் ராமகிருஷ்ணன் மோதும் காட்சி பட மாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். அடித்ததும் ராமகிருஷ்ணன் அருகில் உள்ள குளத் தில் விழ வேண்டும். அப்படி, விழுந்த போது குளத்தில் தண்ணீர் குறைவாக இருந்ததால், அதில் ராமகிருஷ்ணன் குதித்தபோது கணுக்காலில் எலும்பு முறிந்துவிட்டது. எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘‘அண்ணே, கால் உடைஞ்சு போச்சு’’ என்று கத்தினார் ராமகிருஷ்ணன்.

படத்தின் தயாரிப்பாளர் எலும்பு முறி வுக்கு சிகிச்சை அளிக்க ராமகிருஷ் ணனை புத்தூருக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார். அதை எம்.ஜி.ஆர். ஏற்கவில்லை. ராமகிருஷ்ணனை தன் காரிலேயே பூந்தமல்லி நெடுஞ்சாலை யில் உள்ள கே.ஜே.மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். ராமகிருஷ்ணனுக்கு தைரியம் சொன்னதோடு, ஒருநாள் விட்டு ஒருநாள் அவரைப் பார்க்க வருவார். சிகிச்சைக்கான செலவை தயாரிப்பாளரை ஏற்கச் சொல்லா மல், ரூ.37 ஆயிரத்தை எம்.ஜி.ஆரே கொடுத்தார். அதோடு, ராமகிருஷ்ண னின் குடும்பச் செலவுக்காக ரூ.10 ஆயிரமும் கொடுத்தார்.

இதைவிடவும் முக்கியமான ஒன்று. ‘‘ராமகிருஷ்ணன் குணமடைந்து வந்து, அவர்தான் மீண்டும் இந்தக் காட்சியில் நடிக்க வேண்டும். அதுவரை செட்டை கலைக்க வேண்டாம்’’ என்று எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டார். அதன்படியே, அந்த செட் மூன்று மாதங்களுக்கு அப்படியே இருந்தது. எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால் வேறு ஸ்டன்ட் நடிகர்களை வைத்து அந்தக் காட்சியை எடுத்திருக்கலாம். ஆனால், உடன் நடிக்கும் கலைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர் எம்.ஜி.ஆர்.! அவர் விருப்பப்படியே, ராமகிருஷ்ணன் குணமாகி வந்ததும், குளத்தில் நிறைய தண்ணீர் ஊற்றப் பட்டு சண்டைக் காட்சி மீண்டும் படமாக்கப்பட்டது.

மற்ற நடிகர்களுக்கு, குறிப்பாக உயிரைப் பணயம் வைத்து நடிக்கும் ஸ்டன்ட் நடிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் நியாயமான ஊதியத்தைக் கொடுக் காமல் இருப்பதை எம்.ஜி.ஆர். அனுமதிக்க மாட்டார். அவர் நடித்த ஒரு படத்தில் சண்டைக் காட்சியில் ராமகிருஷ்ணன் நடித்திருந்தார்.

அந்தத் தயாரிப்பாளரிடம் சென்று 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் வேண்டும் என்று ராமகிருஷ்ணன் கேட்டார். ‘‘சண்டைக் காட்சியில் நடிக்க 5 ஆயிரமா? 3,500 ரூபாய் வாங்கிக் கொள்’’ என்றார் தயாரிப்பாளர். ராமகிருஷ்ணன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் வந்துவிட்டார். எம்.ஜி.ஆரை சந்தித்து விஷயத்தைக் கூறினார். அதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட எம்.ஜி.ஆர்., ‘‘என்னிடம் சொன்னதாக காட்டிக் கொள்ளாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்றார்.

பின்னர், தன்னை சந்தித்த தயாரிப் பாளரிடம், ‘‘இந்த ராமகிருஷ்ணன் இருக்காரே, என் பேரை சொல்லி சம்பளம் அதிகமாக கேட்பார்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். தயாரிப்பாளரின் முகம் மலர்ந்தது. ‘‘ஆமாண்ணே…’’ என்று மேற்கொண்டு பேச முயன்றவரைத் தடுத்து, ‘‘நீங்க அவர்கிட்ட எதுவும் பேசாதீங்க. 20 ஆயிரம் ரூபாய்க்கு மேலே ஒரு பைசா கூட கொடுக்காதீங்க. மேலே கேட்டால் என்கிட்டே சொல்லுங்க’’ என்றார். தயாரிப்பாளருக்கு மெல்லவும் முடியவில்லை, முழுங்கவும் முடிய வில்லை. எம்.ஜி.ஆரே சம்பளம் நிர்ணயித்த பிறகு, அதைத் தட்ட முடியுமா? ராமகிருஷ்ணனுக்கு 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்க மறுத்த அதே தயாரிப்பாளர் பிறகு, 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். தான் மட்டுமே லாபம் சம்பாதிக்க நினைக்கும் தயாரிப்பாளர்களை எம்.ஜி.ஆர். இப் படிப் படுத்துவது வழக்கம்!

ஜெயந்தி ஃபிலிம்ஸ் சார்பில் கனக சபை செட்டியார் தயாரித்த வெள்ளி விழா படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘மாட்டுக்கார வேலன்’. நூறாவது நாளையொட்டி நடந்த படத்தின் வெற்றி விழாவின்போது எம்.ஜி.ஆர். ஆலோசனையின்படி, கலை ஞர்களுக்கு ஒரு பவுன் மோதிரத்தை தயாரிப்பாளர் பரிசாக அளித்தார். ‘ஜெயந்தி ஃபிலிம்ஸ்’ என்பதை குறிக்கும் வகையில், ‘ஜே. எஃப்’ என்ற ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அந்த மோதிரத்தை ராமகிருஷ்ணன் இன்னும் அணிந்துள்ளார்.

‘சிரித்து வாழவேண்டும்’ படத்தில் ‘உலகமெனும் நாடக மேடையில் நானொரு நடிகன்…’ என்ற பாடல் காட்சி இடம்பெறும். கீழ்க்கண்ட வரிகளை எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும்போது தியேட்டர் அதகளப்படும்.

‘சிலர் ஆடிடும் ஆட்டம் முடிவதற்கே

நான் ஆடியும் பாடியும் நடிப்பது

என் ஆசையும் தேவையும் நல்லவர் எல்லாம்

நலமாய் வாழ்ந்திட நினைப்பது…’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்


எம்.ஜி.ஆர். நடித்து சடையப்ப செட்டியார் தயாரிப்பில், தர் இயக்கத்தில் 1977-ம் ஆண்டு வெளியான படம் ‘மீனவ நண்பன்’. படத்தில் கே.பி.ராமகிருஷ்ணனும் நடித்துள்ளார். ‘‘இந்தப் படத்துக்காக எம்.ஜி.ஆருக்கு அதிகபட்சமாக ரூ.45 லட்சம் சம்பளம் தரப்பட்டது. அதுவரை தென்னகத்தில் வேறு எந்த ஹீரோவுக்கும் அவ்வளவு சம்பளம் கொடுக்கப்படவில்லை. இப்போது அந்த தொகை பல கோடிகளுக்கு சமம்’’ என்று நினைவுகூர்கிறார் ராமகிருஷ்ணன்!

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...