Tuesday, June 28, 2016

சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி அடையாளம் தெரிந்தது: விரைவில் பிடிபடுவார் என தகவல்



நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி (24) கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய ஆதாரங்கள் மூலம் குற்றவாளியின் அடையாளம் தெரிந்துள்ளது. கொலையாளியை நெருங்கிவிட்டதாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர். | வீடியோ இணைப்பு கீழே |

சந்தேகத்தின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான இளைஞரின் படத்தை ரயில்வே போலீஸ் வெளியிட் டுள்ளது. ரயில்வே போலீஸார் 2 டிஎஸ்பி, 4 இன்ஸ்பெக்டர் கள் தலைமையில் தனிப்படை கள் அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரையில் 4 வகையான வீடியோக்கள் வெளியிடப்பட் டுள்ளன.

சவுராஷ்டிரா நகர் முதல் தெரு முதல் அங்குள்ள 10 தெருக்கள் வரையிலுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் சந்தேகிக்கும் இளைஞர் வந்து போவது பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஒரு மாதம் முன்பு சுவாதியை ஒரு இளைஞர் பின்தொடர்ந்து வந்துள்ளார். அவர் தொடர்ந்து சுவாதிக்கு தொந்தரவு கொடுத்து வந்தாரா, அவர்தான் கொலையில் ஈடுபட்டாரா என்றும் விசாரணை நடக்கிறது.

கொலையாளி என சந்தேகிக் கப்படும் நபரின் புதிய வீடியோ காட்சி ஒன்றும் போலீஸாரிடம் கிடைத்திருக்கிறது. அதில் இளை ஞர் ஒருவர் தண்டவாளத்தில் குதித்து தப்பிச் செல்லும் காட்சி பதிவாகி இருக்கிறது. 2-வது நடைமேடையில் இருந்து தண்டவாளம் இருக்கும் பகுதியில் குதிக்கும் அந்த இளைஞர், ரயில் நிலையம் அருகில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

நெருங்கிவிட்டோம்

இது தொடர்பாக ரயில்வே போலீஸிடம் கேட்டபோது, ‘‘சுவாதி கொலை வழக்கில் பல்வேறு முக்கிய தடயங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் கிடைத்துள் ளன. அதன் மூலம் குற்ற வாளியை சந்தேகிக்கும் வகை யில் அடையாளம் கண்டறிந்துள் ளோம். அவரை நெருங்கிவிட் டோம். விரைவில் பிடித்து விடு வோம். சந்தேகிக்கும் குற்றவாளி யின் படத்தை வெளியிட்டுள் ளோம். அந்த இளைஞரை நேரில் பார்த்தால் 1512 என்ற எண்ணுக்கு தகவல் அளிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என்றனர்.

பட்டா கத்தி

கொலை செய்த இளைஞர் பட்டா கத்தியை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையில் போட்டுவிட்டு சென்றுள்ளார். அந்த கத்தியை பறிமுதல் செய்துள்ள ரயில்வே போலீஸார், இதுபோன்ற கத்தி எந்த மாவட்டத்தில் தயாரிக்கப்படுகிறது, அது எப்போது தயாரிக்கப்பட்டிருக்கும் என்றும் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...