Wednesday, December 31, 2014

வரும் ஆண்டு சிங்கப்பூரில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பரிசு

பொன்விழாவையொட்டி வரும் ஆண்டில் சிங்கப்பூர் குடிமக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்க அந்நாட்டின் அரசாங்கம் முடிவு

2015ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தனது பொன்விழாவை கொண்டாடுவதை குறிக்கும் வகையில் அடுத்த ஆண்டில் சிங்கப்பூர் குடிமக்களுக்கு பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்க அந்நாட்டின் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அடுத்து ஆண்டு பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், அவர்களின் நாளாந்தத் தேவைக்குப் பயன்படும் பொருட்கள் அடங்கிய ஒரு பரிசுப்பெட்டி வழங்கப்படும் என்று அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நான் ஒரு பொன்விழாக் குழந்தை" என்று குறிப்பிடும் குழந்தையின் ஆடைகள் உள்ளிட்ட பரிசுகளும், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் மறக்கமுடியாத தருணங்களை பதிவு செய்ய ஒரு நோட்டுப் புத்தகமும், நினைவு பதக்கமும் வழங்கப்படுகிறது.

சிங்கப்பூரில் வாழும் அனைத்து தரப்பு மக்களின் சார்பில் அளிக்கப்பட்ட யோசனைகளின் அடிப்படையில் இந்தப் பரிசுத் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் சிங்கப்பூரில் வாழும் சிங்கப்பூர் குடிமக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும், வெளிநாட்டில் வாழும் சிங்கப்பூர் குடிமக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த பரிசுப்பெட்டி வழங்கப்படும்.

2015 ஆம் ஆண்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு இது ஒரு பம்பர் பரிசு ஆண்டாக இருக்கும். அரசாங்கத்தை தவிர ஒரு முக்கிய வங்கியும் அந்த குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கவுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வங்கியின் பரிசுப்பெட்டியில் கையுறைகள், செல்பீ ஸ்டிக் மற்றும் ஒரு பணப்பெட்டியும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் இந்த பரிசுகள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அளிக்கப்பட்டாலும், பல நாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கம் பரிசுகள் அளிப்பது என்பது வழக்கமான ஒன்றாகும். ஃபின்லாந்தில் கடந்த 1930ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டில் கர்ப்பிணித் தாய்களுக்கு குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுவது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது.

Why SE Asia is air disaster-prone

Dec 31 2014 : The Times of India (Chennai)
Why SE Asia is air disaster-prone


In the past year, Malaysia’s aviation industry has suffered a number of tragedies. Although the odds of any person boarding a flight dying in a plane crash are about one in 11 million, three Malaysiabased aircraft have apparently gone down, with no survivors.

To some extent, the three Malaysian air disasters are just brutal bad luck. Still, they point to several disturbing trends that raise the question of whether flying in peninsular Southeast Asia is complete ly safe. The air market in the region has embraced low-cost carriers, leading to a proliferation of flights throughout Southeast Asia, stretching air traffic controllers, and possibly allowing airlines to expand too rapidly . Indonesian carriers, air traffic controllers, and Indonesian airspace have be come notorious for weak safety regulations.

But while air traffic has grown in the region, and while AirAsia had a mostly solid safety record, the increase in low-cost flights may have resulted in planes being operated by men and women with less experience. The pilot on the AirAsia flight had about 6,000 hours of flight experience on the Airbus plane he was flying, but it is unclear whether he had experience flying at 34,000 feet or higher, where he was trying to take the plane to avoid bad weather. BLOOMBERG

In Philippines, plane overshoots runway

An AirAsia Zest plane carrying 159 people overshot the runway and got stuck in a muddy field on Tuesday at an international airport in central Philippines after landing from Manila. No injuries were reported. AP

Flight forced to turn back in Bangkok

An AirAsia Flight FD3254 bound for northeast Thailand was forced to turn back to the capital Bangkok soon after take off on Tuesday after pilots detected an “irregularity“ in the luggage compartment. PTI

விடைகொடு 2014-ம் ஆண்டே!

Return to frontpage

இதோ 2014-ம் ஆண்டின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறோம். நம்மை விட்டுப் பிரியவிருக்கும் இந்த ஆண்டை எப்படி வழியனுப்புவது என்ற குழப்பம் எல்லோருக்கும் இருக்கும். மகிழ்ச்சியான ஆண்டு என்று கருதி துயரத்துடன் விடைகொடுப்பதா, அல்லது துயரமான ஆண்டு என்று கருதி பாராமுகத்துடன் விடைகொடுப்பதா? இந்தக் கேள்விகளுக்கு அவ்வளவு எளிதில் பதில் சொல்ல முடியாதுதான்.

ஏகாதிபத்தியமும் அதன் துணைவிளைவாகப் பயங்கரவாதமும் இந்த ஆண்டின் முகத்தைக் கோரமாகக் கிழித்துவிட்டிருக்கின்றன. ‘பாலஸ்தீன மக்களுக்குத் தோள்கொடுக்கும் ஆண்டு’ என்று ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்ட இந்த ஆண்டில்தான், காஸாவில் பேரவலங்கள் நிகழ்த்தப்பட்டன. சிரியாவில் லட்சக் கணக்கான மக்கள் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு கோடிப் பேர் அகதிகளாகியிருக்கிறார்கள். சிரியா, இராக் என்று ஐ.எஸ். அமைப்பின் விஷ வேர்கள் இன்னும் ஆழமாகவும் பரவலாகவும் ஊடுருவிக்கொண்டிருக்கின்றன. மேலை நாடுகளின் ஏகாதிபத்தியத் துக்கு எதிரான போர்களை, மேலை நாடுகளின் துணையால் உருவான அடிப்படைவாத அமைப்புகள் மேலை நாடுகளால் கொடுக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டே நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன.

அது மட்டுமா? கடவுள் துகளையே கண்டறிந்துவிட்டதாக நாம் பெரு மிதப்பட்டுக்கொண்டிருந்த வேளையில்தான், மார்ச் 8-ம் தேதியன்று மலேசிய விமானம் 239 பேருடன் மாயமானது. 26 நாடுகள் சேர்ந்து, 20 லட்சம் சதுர கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட பரப்பளவில் தேடியும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஜூலை மாதம் மற்றுமொரு துயரம்: மலேசிய விமானமொன்று உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இவையெல்லாம் போதாதென்று கடந்த 28-ம் தேதி இன்னொரு விமானம் மாயமாகியிருக்கிறது.

இதற்கிடையில், பாகிஸ்தானின் மலாலாவுக்கும் இந்தியாவின் சத்யார்த்திக்கும் கிடைத்த நோபல் அமைதி விருது சற்றே ஆசுவாசம் தரும் பூச்செண்டு. அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையில் துளிர்ப்பதாக நம்பப்படும் நட்பும் சற்று நம்பிக்கையைத் தருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை இது மாற்றத்தின் ஆண்டு. காங்கிரஸுக்கு வரலாறு காணாத தோல்வியையும், பாஜகவுக்குப் பெருவெற்றியையும் இந்த ஆண்டு வழங்கியிருக்கிறது. இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு பிறந்த ஒருவர், முதன்முறையாக இந்தியாவின் பிரதமராக ஆகியிருக்கிறார்.

நைஜீரியாவில் போகோ ஹராம் 250-க்கும் மேற்பட்ட இளம் பெண்களைக் கடத்திவைத்திருப்பது, ரஷ்ய-உக்ரைன் பிரச்சினை என்று உலக அளவிலும், காஷ்மீர் வெள்ளம், மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல், போடோ பயங்கரவாதிகளின் தாக்குதல், தலையெடுக்கும் மதவாதப் போக்கு என்று இந்திய அளவிலும், மவுலிவாக்கம் கட்டட விபத்து என்று தமிழக அளவிலும் இந்த ஆண்டுக்கு எதிர்மறையாக இன்னும் எவ்வளவோ முகங்கள் உண்டு.

ஆண்டு நிறைவை எட்டிக்கொண்டிருக்கும்போது, பாகிஸ்தானின் பெஷாவர் பள்ளியின் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டனர். சென்னை பள்ளி ஒன்றில் அந்தச் சிறுவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டபோது, கண்களில் நீர்த் துளிர்க்க, கைகளில் மெழுகுவத்தியுடன் நின்றிருந்த ஒரு சிறுமியின் புகைப்படம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. தேசம், மதம், மொழி கடந்த அந்தக் கண்ணீர்த்துளி, நம்முள் புதைந்து கொண்டிருக்கும் மனிதத்துக்கு எப்படியும் உயிர்கொடுக்கக் கூடியது. அந்த நம்பிக்கையுடன் இந்த ஆண்டுக்கு விடைகொடுத்து, வரும் ஆண்டை வரவேற்போம்.

Tuesday, December 30, 2014

Modi government to merge PIO and OCI cards; Home ministry may amend Indian Citizenship Act

The Economic Times

NEW DELHI: The government has quietly readied yet another ordinance — this one to merge the PIO and OCI cards — to make good a promise made by Prime Minister Narendra Modi during his visits to the US and Australia when he vowed to make it easier for the Indian diaspora to connect with their homeland.


The home ministry will soon bring an ordinance to amend the Indian Citizenship Act of 1955 and a senior official said this was likely to be done before January 7 inauguration of the Pravasi Bharatiya Divas in Gandhinagar. This will mark a fresh test to accepted political conventions for passing legislations using the ordinance route and could expose the government to criticism that it was disregarding Parliament.

The upcoming ordinance is expected to specify a date by which existing PIO (Persons of Indian Origin) cardholders will be deemed as having the rights and privileges enjoyed by Overseas Citizens of India (OCI).

Modi had promised, most recently in his 
Sydney speech to the Indian diaspora on November 17, that the PIO and OCI cards would be merged within two months. The home ministry had introduced the Citizenship (Amendment) Bill, 2014 in the Lok Sabhaearlier this month but it could not be taken up due to frequent disruptions.

The thinking in the government, officials said, was that if it decided to wait until the next session in February, the promise would not be met. "It will be an embarrassment if the PIO-OCI cards are not merged by then. Hence, the home ministry has prepared an ordinance as a gift to NRIs," a home ministry official told ET, adding that the upcoming Pravasi Bharatiya Divas gave the government the perfect setting to make good the PM's promise.

The home ministry official said the ordinance would be presented to the union cabinet for clearance very soon, preferably as early as in its next meeting. Modi has for long aggressively courted the Indian diaspora, many of whom are financially well off in their ed nations, to invest in India. His public meetings during his visits abroad as PM have been well attended and his election campaign too also saw the involvement of large numbers of Indian expatriates.

The PIO and OCI cards are expected to be merged into a new scheme that will be called Indian Overseas Cardholder and will retain many of the features of the OCI, which is more popular among Indian expatriates because it allows them to have a lifelong Indian visa and financial privileges applicable to nonresident Indians. A PIO card-adoptholder by comparison could only stay in Indian for six months at a time. The government has issued nearly 53,000 PIO cards so far, while around 10 lakh people have been granted OCI status.

The planned ordinance will also involve amendments to allow foreigners breaks for a period not exceeding 30 days during the prescribed one-year stay in the country before they can apply for Indian citizenship. At present, foreign nationals marrying Indians cannot leave the country even for a single day during the one-year period before applying for citizenship.

Monday, December 29, 2014

திரை விமர்சனம்: மீகாமன்....சினிமா » இந்து டாக்கீஸ்

Return to frontpage





மீகாமன் என்றால் மாலுமி என்று பொருள். இங்கே போதைக் கும்பலை வேரறுக்கும் நடவடிக்கையை முன்னின்று நடத்தும் ஒருவன் அதை எப்படிச் செய்கிறான் என்பதுதான் கதை.

கடற்கரையில் கிடக்கும் பிணங்கள், போதை மருந்துக் கும்பலிடமிருந்தே திருடப்படும் சரக்கு மூட்டைகள், உள்ளே கருங்காலி இருப்பதை அறிந்து அவனுக்கு வலை வீசும் மனித வேட்டை, யாருமே பார்த்திராத நிழல் உலகத் தலைவன், கும்பலைப் பிடிக்கக் காவல் துறையின் ரகசிய வலை வீச்சு, அந்தத் துறைக்குள்ளேயே அதற்கு எதிரான சதி என்று த்ரில்லர் களத்தில் நின்று விளையாடுகிறது மகிழ்திருமேனியின் ‘மீகாமன்’.

கோவாவில் இருக்கும் போதை மருந்துக் கும்பல் நெட்வொர்க்கில் நான்கு வருடங்களாக வேலை செய்கிறார் சிவா என்கிற அருண் (ஆர்யா). அவ்வளவு நாட்கள் வேலை செய்திருந் தாலும் அந்த நெட்வொர்க் தலைவனைப் பார்க்க முடியாத அளவுக்குக் கெடுபிடிகளும், இறுக்கமான செயல்முறைகளும் கொண்ட நெட்வொர்க் அது. இதேபோல அவரது சகா ரமணாவும் குஜராத்தில் இன்னொரு கும்பலிடம் நெருங்குகிறார்.

மும்பையிலிருந்து 1000 கிலோ கொகைனை கோவாவில் இருக்கும் ஜோதியின் அமைப் பிடம் விற்க ஏற்பாடு நடக்கிறது. இந்தப் பரிவர்த்தனையில் குறுக்குச் சால் ஓட்டி மடக்குவது காவல் துறையின் திட்டம். துறைக்குள்ளேயே சிலர் இந்தத் திட்டத்துக்கு கட்டைபோட, திட்டம் தாறுமாறாகிவிடுகிறது. ஆர்யாவும் அவர் சகாவும் சிக்கிக்கொள்ள, பிரச்சினை தீவிரமடைகிறது.

ஆர்யா எப்படித் தப்பித்தார்? காவல் துறையின் துணை கொண்ட இந்தக் கும்பல்களின் கதி என்ன ஆயிற்று?

வழக்கம்போல நிழல் உலக நெட்வொர்க்கை அழிக்கும் போலீஸ் கதைதான். ஆனாலும், நெருக்கமான, திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை யின் மூலம் புத்தம் புதிதாய் உணரச் செய் கிறார் மகிழ். அடுத்து என்ன என்பதைப் பதைபதைப் பூட்டும் வகையிலும் சில சமயம் ரத்தமும் சதையுமாகவும் காண்பித்திருக்கிறார்கள்.

கும்பலின் தலைவன் யார் என்று நான்கைந்து பேருக்கு மட்டுமே தெரியும். பொது இடங்களில் சாதாரணமாகப் பயணிப்பான். அவனிடம் பேசினாலும் கண்டுபிடிக்க முடியாது. மது, மாது போன்ற எந்தச் சபலமும் இல்லாத அக்மார்க் வில்லனைத் தீர்த்துக்கட்டும் கதையைக் கையில் எடுத்திருக்கிறார் மகிழ்திருமேனி.

பல பாத்திரங்களையும் கதையின் பின்புலத் தையும் அறிமுகப்படுத்துவதற்கான தொடக்கக் காட்சிகள் சற்றே மெதுவாக நகர்கின்றன. கதா நாயகி அறிமுகமும் இந்தச் சமயத்தில் நடந்து நம்மைச் சோதிக்கிறது. அந்த நேரத்தில் காவல் துறை விரிக்கும் ரகசிய வலையைக் காட்டிப் பரபரப்பைக் கிளப்பிவிடுகிறார் இயக்குநர். அடுத்தடுத்த காட்சிகளை யும் திருப்பங்களையும் வேகமாகவும் பெருமளவு நம்பகத்தன்மையுடனும் அமைத்து ரசிகர்களைக் கட்டிப் போடுகிறார்.

கதைக்குத் தேவையாக இருந்தா லும் ஆளை அறுக்க வரும் ரம்பத்தின் சத்தத்தைக் கேட்க முடியவில்லை. இடைவேளை சண்டைக் காட்சியை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம், இரண்டாம் பாதியில் ஹீரோயிஸம் தூக்கலாக இருப்பதையும் ஏற்க முடியவில்லை.

இதுபோன்ற வேடங்களுக்கென்றே பிறந்ததுபோன்ற பார்வையுடன் வரும் ஆர்யா கச்சிதம். குறிப் பாக ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்து கிறார். ஹன்சிகாவுக்கு நடனம் சொல்லித்தரும்போது தன் நெருக்கடியை மீறி மெலிதாகச் சிரிக்கும் இடத்தில் அவர் நடிப்பு நன்றாக உள்ளது.

ஹன்சிகா உற்சாகமும் அழகும் ததும்ப வளையவருகிறார். அவருக் குக் கதையில் பெரிய வேலை இல்லை. புதிதாக ஒரு இளைஞ னைப் பார்க்கும்போது அவர் பதற்ற மடைவதும் தன் தோழியுடன் அவனைப் பற்றிப் பேசுவதும் ரசிக்கும்படி இருக்கின்றன.

வில்லன் ஆசுதோஷ் ராணா உடல் மொழியாலும் பார்வையாலும் பார்வையாளருக் குப் பயத்தைக் கடத்துகிறார். ‘உலகத்துல சாவை விட மோசமானது நிறைய இருக்கு’ என்பதுபோன்ற வசனங்கள் பளிச்.

எஸ். தமனின் பின்னணி இசை பயத்தையும் திரில்லையும் சேர்த்துக் கொடுக்கிறது.

இவ்வளவு இரத்தமும் சதையும் தேவையா என்று கேட்கலாம். இரண்டாம் பாதியில் ஹீரோயிஸம் தூக்கலாக இருப்பதைக் கண்டு சலிப்பு ஏற்படலாம். தேவைக்கு மேல் சற்றே நீள்வதை நினைத்து ஆதங்கம் எழலாம். என்றாலும் எடுத்துக்கொண்ட கதைக்களத்தைச் சிறப்பாகக் கையாண்டிருக்கும் இயக்குநர் பாராட்டுக்குரியவர்.

சொல்லத் தோணுது 15 - படிக்க... கிழிக்க...

Return to frontpage

மாற்றங்களை எளிதில் ஏற்றுக் கொள்ளாத மனங்கள் எல் லாம் எல்லாவற்றையும் ஏற் றுக் கொள்ளத் தயாராகிவிட்டன. மாற்றங்கள்தான் வாழ்க்கை என ஒரு வரியில் சொல்லிவிடலாம். எதில்தான் மாற்றம் இல்லை? உண்ணும் உணவில், உடுத்தும் உடைகளில், அன்றாடப் பழக்க வழக்கங்களில், பேசும் பேச்சுக்களில், நினைக்கும் நினைப்புகளில், சிந்திக்கும் சிந்தனைகளில், வசிக்கும் வீடுகளில், போக்குவரத்து ஊர்திகளில், ஊடகங்களில், சுற்றுப்புறச் சூழ்நிலை களில்… என எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன.

மாற்றங்களை நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்… அது நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.

இது இப்படித்தான் இருக்க வேண் டும் என இனி எதைப் பற்றியும் சொல்வதற்கு இல்லை. அரசியல் என்பது தொண்டாக இருந்தது மாறிப் போய்… பிழைப்பாகவும், பணம் சேர்க்கும் தொழிலாகவும் மாறிப் போன மாதிரிதான்!

காந்தியையும், காமராஜரையும், கக்கனையும் இன்னும் எவ்வளவு நாட் களுக்குத்தான் சொல்லிக் கொண்டே இருக்கப் போகிறோம்?

நகரங்களில் நாள்தோறும் புதிதாக வந்து குடியேறுபவர்கள் மீண்டும் கிராமங்களுக்குத் குடியேறுவதில்லை. பண்டிகை விடுமுறைகளுக்கோ, நெருங்கிய உறவினர் காரியங்களுக்கோ எப்போதாவது சென்று வருகிற மாதிரி மட்டும் அவரவர்கள் பிறந்து வளர்ந்த கிராமங்கள் தொலைவில் போய்க் கொண்டிருக்கின்றன.

நகரம்தான் தனக்கு சோறு போடும் என ஒவ்வொருவரும் எண்ணத் தொடங்கிவிட்டனர். இப்படியே போனால் இன்னும் சில ஆண்டுகளில் நகரங்கள் மட்டுமே இருக்கும்.

கிராமங்கள் தேய்ந்து நகரங்களாக மாறிக் கொண்டிருப்பது நல்லதுதானா? நல்லது என்றால் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டுவிடலாம். நல்லதில்லை என்றால்… என்ன செய்யலாம்? யார் செய்வது? ஆட்சியாளர்கள்தான் செய்ய வேண்டும்!

‘ஒரு நாட்டுக்கு கிராமங்கள்தான் முதுகெலும்பு’ என காந்தி சொன்னார். ஆனால், கிராமங்களை அழிக்கிற வேலை மட்டும்தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு மேல் இந்தப் பலூனை ஊத முடியாது. ஊதினால் வெடிக்கும் எனத் தெரிந்தும் ஊதிக் கொண்டேயிருக்கிறோம்.

நகரத்துக்கு வந்து குவிபவர்களைக் கட்டுப்படுத்தாமல், அவர்களுக்கான நலத் திட்டங்களையும், நகர வளர்ச்சியையுமே செய்து கொண்டிருக் கிறோம் என்று சொல்லிக்கொண்டு… ஆள்பவர்கள் பெருமை அடைவது எந்த வகையில் சரியானது? மக்கள் எதற்காக நகரங்களை நாட வேண்டும்? அந்த மக்களின் தேவைதான் என்ன? என்பது பற்றி அவர்கள் சிந்திக்கிறார்களா?

இந்தியாவில் குடியரசுத் தலைவரோ, தலைமை அமைச்சரோ, மற்றைய அமைச்சர்களோ, முதலமைச்சர்களோ, அதிகாரிகளோ... கிராமங்களில் என்ன தான் நடக்கிறது என அங்கு நேரில் சென்று பார்த்திருக்கிறார்களா? கிரா மத்து மக்களின் வாக்குகள் வேண்டும் என்பதற்காக தேர்தல் வந்தால் மட்டும் அங்குச் சென்று 20 நாட்கள் ஓயாமல் உழைக்கிறார்கள். ஹெலிகாப்டரில் இருந்து கிராமங்களைப் பார்த்தால் என்ன தெரியும்? சாலை வழியாக வந்தால் நெடுஞ்சாலைகளில் நட்டு வைக்கப்பட்டுள்ள அவர்களின் விளம்பரப் பதாகைகளே மக்களை மறைத்துவிடும் என்பதால்தான் ஹெலிகாப்டரில் இருந்து பார்க்கிறார்களோ எனத் தோன்றும்.

இவர்களெல்லாம் வாரத்துக்கு இரண்டு நாள்… என கிராமங்களில் தங்கி மக்களின் தேவைகளை அறிந்து கொள்ள முடியாதா? தங்களின் தலைவர் களுக்குப் ஏதாவது பிரச்சினை என்றால் மண்சோறு தின்பவர்கள், தரையில் விழுந்து புரள்பவர்கள் கிராமத்து வீட்டில் தங்கி அந்த மக்கள் தருகின்ற உணவை உண்டு, அலுவல்களைக் கவனிக்க முடியாதா?

குடியரசுத் தலைவர் அந்த மாளி கையை விட்டு வெளியே வருவதே அரிதாக நிகழ்கிறது. தலைமை அமைச் சரோ… நாடு நாடாக பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார். சத்தியமாக முதல் அமைச்சர்கள் எந்தக் காலத்துக்கும் கீழிறங்கி வந்து, கிராமங்களில் தங்கி வேலைகளைக் கவனிக்க முன்வர மாட்டார்கள். தலைநகரத்தில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மக்களுக்காக, அத்தனை அமைச்சர்களும் ஒரே இடத்தில் தலை

நகரத்தில் இருந்தபடிதான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். மக்க ளால் தேர்ந்தெடுக்கப்படுகிற இவர்களே இப்படி என்றால்… கடிகாரத்தைப் பார்த்து வேலை செய்கிற அதிகாரிகளைப் பற்றி நாம் கேட்க முடியுமா?

உலகத்துக்கே சட்டாம்பிள்ளையாக இருக்கிற அமெரிக்காவின் தலைவர் ஒபாமாவே தனக்கும், தன் குடும்பத்துக்கும் தேவையான பொருட்களை கடைகளுக்குச் சென்று அவரேதான் வாங்குகிறார். உணவகத்துக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு, தன்னுடைய கடன் அட்டை செயல்படாமல் போனதால் மனைவியின் அட்டையில் இருந்து பணத்தைச் செலுத்திவிட்டுச் செல் கிறார்..

ஒபாமாவும் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்டவர்தான். பாதுகாவல் என்கிற பெயரில்… நம் நாட்டுத் தலைவர்கள் போல் ஒரு பெருங்கூட்டத்தையும், அணிவகுத்து மிரட்டிச் செல்லும் கார்களையும், கூட்டத்தையும் அவர் வைத்துக் கொள்ளவில்லை. தலைவன் எவ்வழி செல்வானோ… அவ்வழிதானே தொண்டனும் செல்வான்.

மக்களின் அடிப்படைத் தேவைகளை உணராதவர்கள், அவர்களுடன் பழகி பணியினை செய்யத் தெரியா தவர்கள், அவர்களின் வாக்கு களுக்காக மட்டுமே திட்டங்கள் தீட்டுபவர்கள் எவ்வாறு அவர்களை வழி நடத்துவார்கள்?

நம் ஆட்சியாளர்கள் மனமிருந்தால் ஒரு முறை தனியாளாக மாறு வேடத் திலாவது ஒவ்வொரு கிராமங் களுக்கும் சென்று பாருங்கள். வேளாண் தொழி லுக்கு ஆட்கள் இல்லை. நீர் கொடுத்த குளம், குட்டைகள், ஓடைகள், ஏரிகள் என எதுவும் இல்லை. ஒருவேளை இருந்தால் அங்கே நீர்ப்பிடிப்பு இல்லை.

பள்ளிகளில் மாணவர்கள் இல்லை. ஆரம்ப சுகாதார மருத்து வமனை, நூலகங்கள், கால்நடை மருத்துவமனைகள் என எல்லாமுமே பெயர்ப் பலகைத் தாங்கிக் கொண்டுப் பெயரளவுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆடு, மாடுகள் எங்கேயாவது ஒன்றிரண்டைப் பார்த்துவிட்டால்… நீங்கள் கொடுத்து வைத்தவர்தான். எல்லா வீடுகளிலும் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது. வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோர் 24 மணி நேரமும் சிரிப்பு மூட்டிக் கொண்டிருப்பார்கள்.

அப்படியே கொஞ்சம் தெருக்களை இணைக்கிற சாலைக்கு வாருங்கள். கட்டாயம் தேநீர்க் கடைகள் இருக்கும். வெட்டிப்பேச்சு பேசியபடி வேலை செய்ய விரும்பாத படித்த இளைஞர்கள், வேலை செய்ய முடியாத மது போதையில் இருக்கிற, இன்றையோ, நாளையோ சாகப் போகிறவர்களைப் பார்க்கலாம். அநேகமாக எல்லா வீடுகளிலும் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களின் படங்களைப் போட்டு, திரைப்படக் கதாநாயகர்களுடனோ, அரசியல்வாதிகளுடனோ காட்சியளிக் கும் பதாகைகளை வாசலிலோ, வீட்டுக் கூரையிலோ, வைக்கோல போரிலோ காண்பீர்கள் என்பதைக் குறிப்பிட மறந்துவிட்டேன்.

அந்த இளைஞர்களெல்லாம் வேறு யாருமில்லை. தொழிற்கல்லூரிகளில் படிப்பதற்காக, குடும்பத்துக்கு சோறு போட்ட கொஞ்ச நிலத்தையும் விற்றுக் கொடுத்துவிட்டு, தொழில் இல்லாமல் வீட்டிலேயே முடங்கப் பிடிக்காமல் தேநீர்க் கடையிலும், பேருந்து நிலையத்திலும் போவோர் வருவோர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிற இளைஞர்கள்தான் அவர்கள். எல்லாவற்றுக்கும் புள்ளி விவரங்களைத் தரத் தயாராக இருப் பவர்கள், 50 வயதுக்கு மேல் உயிர் வாழ்கிற ஆண்களின் பட்டியலைத் தாருங்கள். முடிந்தால் தெருவுக்கு எத்தனை இளம் விதவைகள் இருக் கிறார்கள் என்கிற கணக்கினையும் மறைக்காமல் தாருங்கள்.

கிராமத்தில் தன்னுடன் இருந்த யார், யாரெல்லாம் பணக்காரர்களாகி விட்டார்கள் என்பதை மக்கள் பார்த்து விட்டார்கள். மற்றெல்லாரையும்விட அரசியல் கட்சியில் சேர்ந்தால் மட்டுமே கார், பங்களா, அடியாட்கள், பெரிய மனிதர்கள் தொடர்பு, ஊடகங்களில் இடம் கிடைக்கும் என நினைத்த இளைஞர்கள் தொழிலுக்குப் புறப்பட்டுவிட்டதையும் அங்கே தவறாமல் அறியலாம்.

- இன்னும் சொல்லத் தோணுது…
எண்ணங்களைத் தெரிவிக்க: thankartamil@gmail.com

தமிழர்களுக்குத் தமிழ்நாட்டில் வேலை இல்லையா?

Return to frontpage


மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பற்றோர் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம். தமிழகத்தில் 95 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ளார்கள். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களான ரயில்வே துறை, பி.எச்.இ.எல். (பெல்), ராணுவத் தொழிற்சாலைகள், வருமான வரி உற்பத்தி அலுவலகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பெட்ரோலியத் தொழிலகங்கள் போன்ற வற்றில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாகப் பணியமர்த்தப்படுகிறார்கள்.

இந்தியாவிலேயே சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். ரயில்வே துறையில் 2012-2013-ல் 82% வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் 18% தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் வேலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 2013-2014-ல் 83% வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் 17% தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் வேலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். தமிழக வருமானவரித் துறையில் 2012-ல் சேர்க்கப் பட்ட 384 பேரில் 28 பேர்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 356 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 2014-ல் சேர்க்கப்பட்ட 78 பேரில், 75 பேர் வெளிமாநிலத்தவர். 3 பேர்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டிலுள்ள உற்பத்தி வரி அலுவலகங்களில், 2012-ல் சேர்க்கப்பட்ட 224 பேரில் 221 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 3 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இதே போல்தான் ஆவடி, திருச்சி, அரவங்காடு போன்ற இடங்களில் உள்ள பாதுகாப்புத் தொழிற்சாலைகளில் 50% மேல் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப் பட்டுள்ளார்கள். திருச்சி, ராணிப்பேட்டை, திருமயம் ஆகிய இடங்களில் உள்ள பி.எச்.இ.எல். தொழிற்சாலைகளில் வெளிமாநிலத்தவரையே அதிகமாகச் சேர்க்கிறார்கள்.

சரோஜினி மஹிஷி ஆணையம்

கர்நாடகத்தில் வெளிமாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வேலை பெறுவதைத் தடுப்பதற்கு சரோஜினி மஹிஷி தலைமையில் ஆணையம் அமைத்து, அதன் பரிந்துரைகளைச் செயல்படுத்துகிறார்கள். கடந்த 1996-ல் ஒன்றிய அரசு ஊழியர் தேர்வாணையத் தேர்வில் (யூ.பி.எஸ்.சி.) தேறி, வேலை ஆணையுடன் பெங்களூர் தலைமைக் கணக்காயர் அலுவலகத்துக்கு வேலையில் சேரச் சென்ற 19 தமிழ் இளைஞர்களை வேலையில் சேர விடாமல், அதே நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த கன்னட ஊழியர்கள் தடுத்துத் திருப்பி அனுப்பினார்கள். சரோஜினி மஹிஷி பரிந்துரையைக் காரணம் காட்டித்தான் அவர்கள் திருப்பி அனுப்பினார்கள்.

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் ஆகியவற்றில், இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து செல்வோர் அம்மாநில அரசிடம் உள் அனுமதி பெற்றுத்தான் உள்ளே நுழைய முடியும். அடுத்து, அம்மாநிலங்களில் பிற மாநிலத்தவர்கள் வேலை பார்க்க முடியாது. இது போன்ற உள் அனுமதி வழங்கும் அதிகாரம் கேட்டு மணிப்பூர் சட்டமன்றம் தீர்மானம் போட்டிருக்கிறது. அசாம் மாணவர்கள், ‘வெளியாட்களை வெளியேற்றும் போராட்டம்’ நடத்தியபோது, அவர்களுடன் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி போட்ட ஒப்பந்தத்தின்படி 1971 வரை அசாம் குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே உள்ளூர் மக்கள் என்று அங்கீகரிக்கப்பட்டார்கள். ஹரியாணாவில் ஹரியாணாவாசிகளுக்குத் தனியார் துறை, அரசுத் துறை ஆகியவற்றில் அதிக இடஒதுக்கீடு கொடுக்க காங்கிரஸ் கட்சி உட்படப் பல கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.

ரயில்வே துறை மற்றும் பிற இந்திய அரசுத் துறை வேலைகளுக்கான தேர்வெழுத பிற மாநிலங்களுக்குப் போன தமிழ் இளைஞர்களை, அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அடித்து விரட்டிய நிகழ்வுகளும் நடந்துள்ளன.

குறுக்கு வழியில்…

‘வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்றும் ‘தனி நாடு வேண்டும்’ என்றும் திமுக 1950-களில் முழக்கம் எழுப்பி, அது மக்களின் பேராதரவைப் பெற்றுவந்த நிலையில், தமிழ் மக்களின் வேலைவாய்ப்பைப் பெருக்கும் நோக்குடன் காமராஜர் ஆட்சியில், புதிய புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தொடங்கப் பட்டன. அப்போது அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வேலைக்குத் தொழி லாளர்களையும் ஊழியர்களையும் சேர்க்கும் வகையில் நடுவண் அரசு ஆணைகள் பிறப்பித்திருந்தன. ஆனால், அந்த முறை பின்னர் கைவிடப்பட்டது. இந்தியாவில் 9 தேர்வெழுதும் மண்டலங்கள் மூலம், வேலைக்குச் சேர்க்கும் முறை வந்தது. பின்னர், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையொட்டி, இந்தியா முழுவதையும் ஒரே மண்டலமாக்கி, ஒவ்வொரு தொழிலுக்கும் தேர்வு நடத்தும் முறை 2006-க்குப் பிறகு வந்தது. இந்த முறை வந்த பிறகு, வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வேலை பெறும் வாய்ப்பு ஏற்பட்டது. பல்வேறு குறுக்கு வழிகளில் வேலை வழங்கும் நடைமுறைகள் உருவாயின.

ரயில்வே துறையைத் தவிர, மற்ற துறைகளில் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் தேர்வெழுத முடியும் என்ற நிலை இருப்பதால், வட மாநிலங்களைச் சேர்ந்த வர்களுக்கு இந்தியில் எழுத வாய்ப்பாக இருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஏதாவதொரு அயல் மொழியில் எழுதுவதால் மதிபெண் குறைவாகப் பெறு கிறார்கள். தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வடமாநிலங்களில் மோசடியாக வெளியிடுவது உள்ளிட்ட ஊழல்கள் நடைபெறுகின்றன. இந்த ஊழலால் 2013-ல் நடந்த சி.ஜி.எல்.ஈ. தேர்வு முடிவுகள் வெளியிடப் படுவதை நீதிமன்றம் தடை செய்தது.

கையெழுத்து இல்லை…

வேலைவாய்ப்புக்கான தேர்வு விளம்பரங்களை வடமாநிலங்களில் பல்வேறு இந்தி ஏடுகளில் வெளியிடு கிறார்கள். தமிழ்நாட்டில் உரியவாறு தமிழ் ஏடுகளில் தமிழில் வெளியிடுவதில்லை. அண்மையில், ரயில்வே துறை பணித் தேர்வுக்கு, தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்த 2 லட்சத்து 13 ஆயிரம் விண்ணப்பங் களை ஒப்புகைக் கையொப்பம் இல்லை என்ற மிகச் சாதாரணமான காரணத்தைக் காட்டித் தள்ளுபடி செய் தார்கள். எனவே, தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களின் வேலைவாய்ப்புக்கு அனைத்திந்திய அளவில் தேர்வு நடத்தும்போது, இதுபோன்ற மாநிலப் பாகுபாடுகளும் ஊழல்களும் நடைபெறுவதால், தமிழகத்தைச் சேர்ந்த மக்களுக்கு உரியவாறு வேலைகள் கிடைப்பதில்லை. இந்நிலை நீடித்தால், இன முரண்களாக மாறிப் பல சிக்கல்கள் உருவாக வழி ஏற்படும்.

நடுவண் அரசு தமிழக அளவில் தேர்வு நடத்தி 90% வேலைகளைத் தமிழர்களுக்கு வழங்க வேண்டும். இந்திய அளவில் நடைபெறும் தேர்வு மூலம் 10 சதவீதத் தினரைத் தமிழகத்துக்குப் பெற்றுக்கொள்ளலாம்.

தமிழக அரசு, மண்ணின் மைந்தர்களுக்கு 90% வேலை கிடைப்பதை உறுதி செய்திட சரோஜினி மஹிஷி ஆணையம்போல தமிழகத்துக்கு ஓர் ஆணையத்தை அமைத்துப் பரிந்துரை பெற வேண்டும்.

- பெ. மணியரசன்,

NEWS TODAY 2.5.2024