Sunday, April 26, 2015

4th medical college in city unlikely before September

CHENNAI: The grand opening of Government Medical College and Hospital at Government Omandurar Estate, Chennai's fourth medical college, is likely to be put off till September. On Friday, the government announced sale of MBBS/BDS forms for 19 medical colleges from May 11, which account for 2,555 seats, but was silent on inaugurating the new college.

This comes close on the heels of the Global Investors Meet being deferred due to the impending verdict on an appeal by AIADMK chief J Jayalalithaa in the disproportionate wealth case. The construction of college and hostel/staff quarter blocks is almost complete and hospital blocks would be ready soon. "The Medical Council of India has given an in-principle approval for admitting 100 students, but it is unlikely to be opened before the Karnataka High Court verdict in the wealth case," said a government source. The final approval from MCI is expected any time now.

The 206-crore seven-tower block on Wallajah Road in Triplicane was originally designed to accommodate secretaries and their departments. The massive medical institution is coming up on an 8.7 lakh sqft plinth area. While the main complex was converted into a multi-specialty hospital after waging a prolonged legal battle, the tower blocks were altered to accommodate a medical college and hospital.

The city has Madras Medical College (founded in 1850), Stanley Medical College (1938) and Kilpauk Medical College (1960). According to sources, the MCI team recently made a couple of visits to the Omandurar college to assess the institution.

நேபாளத்தில் 7.9 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் வீடுகள், சுற்றுலா தலங்கள் இடிந்து தரைமட்டம் பூமி அதிர்ச்சிக்கு 1,500 பேர் பலி இந்தியாவின் வடமாநிலங்களில் 45 பேர் சாவு

நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் இடிபாடுகளில் சிக்கி 1,500 பேர் பலியானார்கள். 

காட்மாண்டு
இமயமலை நாடு என்று அழைக்கப்படுகிற நேபாளத்துக்கு நேற்று ஒரு கருப்பு நாளாக அமைந்து விட்டது.

சக்தி வாய்ந்த நில நடுக்கம்

அழகான அந்த நாட்டை நில நடுக்கம் என்ற பெயரில் இயற்கை சீற்றம், சின்னாபின்னப்படுத்தியது.

ரிக்டர் அளவுகோலில் 7.9 புள்ளிகளாக பதிவான இந்த நில நடுக்கம், தலைநகர் காட்மாண்டுவில் இருந்து 80 கி.மீ. வடமேற்கில் அமைந்துள்ள லாம்ஜங்கில் மையம் கொண்டிருந்தது. அது, காலை 11.56 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 11.41 மணி) தாக்கியது. அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து 10–க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. அவை ரிக்டர் அளவுகோலில் 4.5 மற்றும் அதற்கு அதிகமான புள்ளிகளாக பதிவாகின.

கட்டிடங்கள் தரைமட்டம்
இந்த நில நடுக்கம் தலைநகர் காட்மாண்டு தொடங்கி போக்ரா, லாம்ஜங், கீர்த்தி நகர் என அந்த நாடு முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடி விட்டது. கட்டிடங்கள் குலுங்கியபோது, ‘நில நடுக்கம்தான் ஏற்பட்டிருக்கிறது’ என்று மக்கள் உணர்ந்து, அவற்றில் இருந்து வெளியேறுவதற்கு முன் அது தன் கோர முகத்தை காட்டியது. எங்கு பார்த்தாலும் வீடுகளும், அலுவலகங்களும், வணிக நிறுவனங்களும், கோவில்களும் சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தன. அவற்றில் நூற்றுக்கணக்கானோர் சிக்கினர். நாடு முழுவதும் தகவல் தொடர்பு சாதனங்கள் செயல் இழந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பொதுமக்கள் வீடுகளை விட்டும், அலுவலகங்களை விட்டும், பிற கட்டிடங்களை விட்டும் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். எங்கு பார்த்தாலும் பதற்றமும், பரிதவிப்பும், அழுகையும், மரண ஓலமும்தான் காணப்பட்டது.
மக்களுக்கு எச்சரிக்கை
நில நடுக்கம் ஏற்பட்டதும், மக்களுக்கு அந்த நாட்டு ரேடியோ எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை அவசர அவசரமாக வெளியிட்டது.
அதில் நில நடுக்கத்தை தொடர்ந்து, மேலும் அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வீடுகள் உள்ளிட்ட எல்லாவிதமான கட்டிடங்களில் இருந்தும் வெளியேறி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
அடையாள சின்னம் தகர்ப்பு
நில நடுக்கத்தால் மக்கள் நெருக்கம் மிகுந்த காட்மாண்டு பள்ளத்தாக்கு பகுதி உருக்குலைந்து விட்டது. அங்கு பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அங்கு மட்டுமே பல நூறு பேர் பலியானதாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்தததாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறின.
காட்மாண்டுவின் அடையாளச் சின்னமாக கம்பீரமாக வீற்றிருந்து, அந்த நகருக்கே அழகு சேர்த்த 183 ஆண்டு கால பழமையான ‘தாரஹரா கோபுரம்’ (‘பீம்சென் கோபுரம்’) நில நடுக்கத்தின் கோரப்பிடியில் சிக்கி, தரை மட்டமானது. அதன் இடிபாடுகளில் சிக்கி 400–க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். அவற்றில் இருந்து 180 உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

திறந்தவெளியில் சிகிச்சை

இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் கை, கால்கள் என உறுப்புகள் சேதம் அடைந்த நிலையில், காட்மாண்டு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காயம் அடைந்தவர்களுக்கு டாக்டர்கள், வீதிகளிலேயே திறந்தவெளி மருத்துவ முகாம்களை அமைத்து சிகிச்சை அளிக்கின்றனர்.
பனிப்பாறை சரிவுகள்

நில நடுக்கத்தை தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் பனிப்பாறை சரிவுகள் ஏற்பட்டதாக அந்தப் பகுதியில் அமைந்துள்ள மவுண்ட் புமோரி என்ற இடத்தில் இருந்து அலெக்ஸ் காவன் என்பவர் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியிட்டார்.
நில நடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் பலரும் மலை ஏறிக்கொண்டிருந்ததாகவும் அவர் கூறி உள்ளார். அங்கு 10–க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டதாக தெரிய வந்துள்ளது.
இந்திய தூதரகம் பாதிப்பு

காட்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகமும் நில நடுக்கத்தால் சேதம் அடைந்தது.
இதுதொடர்பாக அதன் செய்தித்தொடர்பாளர் அபய்குமார் கூறுகையில், ‘‘தூதரக கட்டிடத்தின் சுவர்கள் இடிந்து விழுந்தன. தூதரகத்தின் சார்பில் ஹெல்ப் லைன்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன’’ என்றார்.

920 பேர் பலி

நில நடுக்கத்தின் பிடியில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக தெரிய வரவில்லை. இருப்பினும் 920 பேர் பலியாகி விட்டதாகவும், 500–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும், பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து வீதிகளுக்கு வந்து விட்டதாகவும் கடைசியாக கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என நேபாள அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
நேபாளத்தில் இதற்கு முன்பாக 1934–ம் ஆண்டு, ஜனவரி மாதம் 15–ந் தேதி ஏற்பட்ட நில நடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளிகளாக பதிவாகி இருந்ததும், 10 ஆயிரத்து 600 பேரை பலி கொண்டதும் நினைவுகூரத்தகுந்தது.

பிரதமர் மோடி உறுதி

நேபாள நாட்டின் பிரதமர் சுஷில் கொய்ராலா, தாய்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். நில நடுக்கம் குறித்த தகவல் அறிந்ததும் அவர் தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.
அவருடன் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நில நடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்தார்.

இந்தியாவில் 36 பேர் சாவு

நேற்றைய நேபாள நில நடுக்கத்தின் தாக்கம், இந்தியாவிலும் உணரப்பட்டது. பீகார் உள்ளிட்ட 10–க்கும் மேற்பட்ட வட மாநிலங்களில் நில நடுக்கம் உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கின. இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் அகப்பட்டு, 36 பேர் உயிரிழந்தனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கம், இந்தியாவில் மட்டுமல்லாது பாகிஸ்தான், வங்காளதேசம், பூடான், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Saturday, April 25, 2015

சிறைச்சாலைக்குள் பசுஞ்சோலை!

கைதிகளின் கலக்கல் விவசாயம்

சிறைச்சாலை என்றாலே... ஓங்கி உயர்ந்த மதில்சுவர், பெரிய கதவு, பறக்கும் தேசியக்கொடி, விரைப்பான காக்கிச் சட்டை அணிந்த துப்பாக்கியுடன் கூடிய காவலர்கள், சீருடையில் கைதிகள்... இதெல்லாம்தான் நினைவுக்கு வரும். இப்படி பரபரப்பாக இருக்கும் சிறைச்சாலைகளில் விவசாயமும் நடந்து வருவது ஆச்சர்யமான விஷயம்தானே. எப்போதும் பரபரப்பாக இருக்கும் வேலூர் மத்திய சிறைச்சாலையில் காய்கறிகள், தானியங்கள் எனப் பலவித பயிர்களை சாகுபடி செய்து அசத்தி வருகிறார்கள், கைதிகள்.

கண்காணிப்பு வீடியோ திரையைப் பார்வையிட்டுக் கொண்டே... வாக்கி டாக்கியிலும், இ்ன்டர்காமிலும் துறை அதிகாரிகளை அழைத்து ‘அங்கே என்ன கூட்டமா இருக்குறாங்க?’, ‘கைதிகளுக்குச் சாப்பாடு ரெடியாச்சா?’, ‘பரோல் கைதிகள் கிளம்பிட்டாங்களா?’ என நிமிடத்துக்கு ஒரு முறை தகவல்களைக் கேட்டுக்கொண்டு பணியில் மும்முரமாக இருந்த சிறைக் கண்காணிப்பாளர் கருப்பண்ணனைச் சந்தித்தோம். பணிகளைப் பார்த்துக்கொண்டே சிறையில் பூத்த விவசாய சிந்தனை பற்றி நம்மிடம் விளக்க ஆரம்பித்தார், கருப்பண்ணன்.


வரலாற்றுச் சிறப்பு மிக்க சிறைச்சாலை!

‘‘1867-ம் ஆண்டு, 153 ஏக்கரில் இந்தச் சிறைச்சாலை துவங்கப்பட்டது. இங்கு, முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன், முன்னாள் பிரதமர் வி.வி.கிரி, முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணாதுரை என முக்கிய தலைவர்கள் பலரும் அரசியல் கைதிகளாக இருந்துள்ளனர். தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டாவது பெரிய சிறைச்சாலை இது. நானூறுக்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகள் இங்கு இருக்கிறார்கள்” என வரலாறு சொன்னவர், தொடர்ந்தார்.

இது தண்டனைக்கூடம் அல்ல...

மனம் திருந்துவதற்கான இடம்!

‘‘சிறைச்சாலை என்பது குற்றவாளிகளைத் தண்டிக்கும் தண்டனைக்கூடம் அல்ல. மனம் திருந்தி வாழ்வதற்கான இடம். இங்கு இருக்கும் அனைத்து கைதிகளும் ஏதாவது ஒரு வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் மனதில் ஒரு மாற்றத்தை உண்டாக்குவதற்கும், சமுதாயத்துக்கு உதவும் வகையிலும் காவல்துறை அலுவலர்களுக்குத் தேவையான பூட்ஸ் தயாரித்துக் கொடுப்பது, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் தேவையான நாடா கோப்புகள் தயாரித்துக் கொடுப்பது, கோர்ட் தீர்ப்பு நகல்களை பைண்டிங் செய்து கொடுப்பது, அயர்னிங் கடை நடத்துவது, முடி திருத்தகம் நடத்துவது மாதிரியான தொழில்களுடன் விவசாயத்தையும் கைதிகள் செய்கின்றனர். எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு படிப்புச் சொல்லிக் கொடுப்பது மற்றும் ஆர்வமுள்ளவர்களுக்கு ஓவியம் கற்றுக்கொடுக்கும் பணிகளும் உண்டு” என்ற கருப்பண்ணன், விவசாயம் பற்றி விளக்க ஆரம்பித்தார்.
3

0 ஏக்கரில் முத்தான விவசாயம்!

‘‘பல ஆண்டுகளாக கைதிகள் இந்த சிறைச்சாலையில் விவசாயம் செய்தாலும், சிறப்பாக நடப்பது கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத்தான். கைதிகளின் விவசாயத்தை விரிவுபடுத்த எங்களுக்கு இருந்த எண்ணத்தை செயல் வடிவம் கொடுப்பதற்கு ஏற்றார் போல... அன்றைய தமிழக முதல்வர், சிறைத்துறை இயக்குநர் மூலம் ‘சிறைச்சாலையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கான அங்காடிகளை ஆரம்பிக்க உத்தரவிட்டார். அது கைதிகள் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்வதற்கு வசதியாக அமைந்தது.

விவசாயத்தில் ஆர்வம் இருக்கும் நன்னடத்தைக் கைதிகள் 45 பேரைத் தேர்வு செய்து, 30 ஏக்கரில் பல பயிர்களை சாகுபடி செய்கிறோம். நான், சிறைத்துறையில் வேலை பார்த்தாலும் எனக்கு விவசாயத்தில் ஆர்வம் அதிகம். தினம் காலையில் சிறைச்சாலைக்கு வந்ததும் தோட்டத்தைப் பார்வையிட்டு, அந்த சந்தோஷத்தை அனுபவித்து விட்டுத்தான் அலுவலகத்துக்கே வருவேன். இது எனக்கு நாள் முழுவதும் சந்தோஷமான மனநிலையில் வேலை பார்க்கத் தேவையான ஊக்கத்தைக் கொடுக்கிறது.

11 மாதங்களில் `19 லட்சம் வருமானம்!

இங்கு 2014-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை உள்ள 11 மாதங்களில் 19 லட்சத்து, 45 ஆயிரத்து, 337 ரூபாய் விவசாயம் மூலமாக வருமானமாகக் கிடைத்திருக்கிறது. செலவு போக 8 லட்சத்து, 60 ஆயிரத்து, 658 ரூபாய் நிகர லாபம். இந்த லாபத்தில் 20 சதவிகித தொகையை அரசுக்குச் செலுத்த வேண்டும். 20 சதவிகித தொகையை பணியாளர் நிதிக்கும், 40 சதவிகித தொகையை விவசாயச் செலவினங்களுக்கும், 20 சதவிகித தொகையை, கைதிகளுக்கு ஊக்கத்தொகையாகவும் வழங்குகிறோம். அடுத்த கட்டமாக ஆடு, மாடு, மீன் வளர்ப்புக்கும் ஏற்பாடுகள் செய்து வருகிறோம்” என்ற கருப்பண்ணன் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.

சிறைச்சாலை வளாகத்தில் தக்காளி வயலில் களை எடுத்துக் கொண்டிருந்த சிறைச்சாலை விவசாயிகளைச் சந்தித்தோம். அனைவரின் சார்பாக பேசிய துரைராஜ், ‘‘எனக்கு சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம், மிட்டாரெட்டிஹள்ளி. ஒரு கொலை வழக்குல ஆயுள் தண்டனை கைதியா சிறையில இருக்கேன். ஆரம்பத்துல ‘பூட்ஸ்’ தயாரிக்குற பிரிவுல வேலை பார்த்தேன். அதுக்குப் பிறகுதான் விவசாயத்துக்கு வந்தேன். எங்க அப்பாவுக்கு விவசாயம்தான் தொழில். விவசாயம் பார்க்கணுங்குற ஆர்வத்துல இந்தக் குழுவுல சேர்ந்துக்கிட்டேன். சிறைச்சாலை வளாகத்துல இருக்குற இந்த இடமெல்லாம் காடா இருந்தது. கண்காணிப்பாளர் ஐயாதான் அரசாங்கத்துக்கிட்ட சொல்லி சுத்தம் செய்துகொடுத்தார். பல வருஷமா சும்மா கிடந்த மண்ணுங்குறதால மண் வளமா இருக்கு.



இதுல, 5 ஏக்கர்ல கத்திரி, வெண்டை, முள்ளங்கி, தக்காளி, முருங்கை, கொத்தவரை, கீரை, பாகல், பீர்க்கன், புடலை, காய்கறியும், 25 ஏக்கர்ல இறவையிலும், மானாவாரியிலும் கடலை, எள், துவரை, காராமணி, பாசிப்பயறுனு பல வகையான தானியங்களையும் உற்பத்தி செய்றோம். நாங்க உற்பத்தி செய்யுற காய்கறிகள், தானியங்களை சிறையில பயன்படுத்திக்கிறோம். மீதியை, சிறைச்சாலைக்கு வெளியில இருக்குற அங்காடி மூலம் விற்பனை செய்றோம். அதுல இருந்து கிடைக்குற வருமானத்துல 20 சதவிகித தொகையை எங்களுக்கே ஊக்கத்தொகையா கொடுக்குறாங்க” என்றார்.

சமுதாயப் பங்களிப்பு!

அடுத்து பேசிய சந்திரன், ‘‘நாங்க சாகுபடி செய்ற எல்லா பயிருக்கும் இயற்கை உரத்தை மட்டும்தான் பயன்படுத்துறோம். சிறைச்சாலையைச் சுற்றி 5 கிலோ மீட்டருக்கு விவசாயம் இல்லாததால சில சமயம் பூச்சித்தாக்குதல் அதிகமா இருக்கும். அப்போ மட்டும் பூச்சிக்கொல்லி தெளிக்கிறோம். அதிகளவுல விஷமில்லாத காய்கறிகளை உற்பத்தி செய்து கொடுக்குறது மூலமா சமுதாயத்துக்கும் உபயோகமா இருக்கோம். எங்களோட காய்கறிகள் கலெக்டர்,எஸ்.பி, நீதிபதினு முக்கியமான அதிகாரிகள் வீடுகளுக்குப் போகுது. விவசாயம் பார்க்குறது மூலமா எங்களோட நன்னடத்தை பற்றி அதிகாரிகளுக்குத் தெரியுது. சிறையில இருந்து விடுதலையாகிப் போனாலும், எங்களுக்குனு ஒரு தொழில் இருக்கும். இந்த ஏற்பாடுகளைச் செய்து கொடுத்த சிறைத்துறை அதிகாரிகளுக்கு நன்றி” என்றார்.

சிறையில் தயார் ஆகும் இயற்கை உரம்!

இயற்கை உரங்கள் தயாரிப்பு பற்றிப் பேசிய விஜயன், ‘‘கைதிகள்ல 15 பேர் சேர்ந்து இயற்கை உரங்களைத் தயாரிக்கிறோம். சிறை முழுக்க கிடைக்கிற குப்பைகளை மட்க வைத்து உரமா மாத்துறோம். அந்த உரத்துக்கு மேல காய்கறிச் செடிகளை நட்டு வளர்க்கிறோம். முழுசா நாலு மாசம் ஆன பிறகு பிரிச்சு எடுக்கிறோம். சலிச்சு சுத்தம் செஞ்சு, இயற்கை உரத்தை கிலோ 10 ரூபாய்னு விற்பனை செய்றோம். கடந்த ஒரு வருஷத்துல மொத்தம் 16 டன் இயற்கை உரத்தைவிற்பனை செய்திருக்கிறோம். இந்த உரத்தை பெங்களூர்ல இருக்குற ஆராய்ச்சி மையத்துக்கு சோதனைக்கு அனுப்பி இருக்கோம்” என்றார்.

சிறை அங்காடி!

சிறை அங்காடியில் காய்கறிகள் வாங்க வந்திருந்த வேலூர், பாகாயம் பகுதியைச் சேர்ந்த சுஜாதாவிடம் பேசியபோது, ‘‘தினம் எங்களோட வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை இங்க வந்து வாங்கிக்கிட்டுப் போறேன். இங்க விற்பனை செய்யுற காய்கறிகள் பசுமையா இருக்குறதோட சுவையாவும் இருக்கு. அதோட கைதிகள் விளைவிக்குற காய்கறிகளை வாங்கிட்டுப் போனா அவங்களும் சந்தோஷப்படுறாங்க. உழவர் சந்தையில விற்பனை செய்யுற விலைக்கே இங்க காய்கள் கிடைக்குது” என்று தானும் சந்தோஷப்பட்டுச் சொன்னார்.
 காசி.வேம்பையன்

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மலையேற்ற வீரர்களா?

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் படும்பாடு சொல்லி மாளாது. வயோதிகம், தனிமை, நோய்களால் பாதிப்பு, நடமாட்டமே குறைந்துவிட்ட நிலைமை, உற்றவர்களாலும் நண்பர் களாலும் கைவிடப்பட்ட நிலை என்று வெளியில் சொல்ல முடியாத வேதனை களோடு வாழ்கின்றனர். அவர்களை ஆண்டுக்கு ஒருமுறை அழைத்து, ‘உயி ரோடு இருக்கிறீர்களா’ (மஸ்டரிங்) என்று நேரில் பார்க்கும் நடைமுறையை மாநில அரசு பாசத்தோடு கடைப்பிடிக்கிறது. அரசு நிர்வாகத்துக்கான இந்த நடை முறையைத் தவறு என்று கூறமுடியாது. அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்து விட்ட இந்நாளில் அரசின் நடைமுறை விதிகளையும் சற்றே தளர்த்தினால் அது ஓய்வூதியர்களின் அலைக் கழிப்பைப் பெரிதும் குறைக்கும்.

ஓய்வுபெற்றவர்களில் பெரும் பாலானவர்கள் உடல்நலக் குறைவால் அவதிப்படுவதை அரசும் அறியும். பக்கவாதம், மூட்டுத் தேய்வு, நரம்புத் தளர்ச்சி, கை கால் எலும்பு முறிவு, நினைவிழத்தல் என்று பல் வேறு விதமான நோய்களால் பீடிக்கப் பட்டு நடமாட்டம் இல்லாமல் வாழ்பவர் கள் ஏராளம். அடிக்கடி சிறுநீர் கழிப் பது, வயிற்றுப் பொருமல் போன்ற தொல்லைகளும் அதிகம். இப்படிப்பட்ட வர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கருவூலத் துக்கோ, சார்நிலைக் கருவூலத் துக்கோ வருவதற்குக்கூட யாருடைய உதவியையாவது நாட வேண்டியிருக் கிறது. உதவும் நிலையில் மகனோ, மகளோ அருகில் இல்லாதவர்கள் மற்ற வர்களைக் கெஞ்ச வேண்டியிருக்கிறது. ஆட்டோ, கால்டாக்ஸிக்கு செலவழிக் கும் அளவுக்கு அவர்களில் பெரும்பாலானவர்களிடம் நிதி வசதி இருப்பதில்லை.

இந்த நிலையில் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள் சான்று அளிக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக, ஓய்வூதியர்களின் வீடுகளுக்கு அருகில் குடியிருக்கும் அரசு அலுவலர்கள், அரசு பள்ளிக்கூடங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், அவர்கள் உயிரோடு இருப்பதைத் தக்க விதத்தில் சான்று அளிக்கலாம் என்று விதிகளைத் தளர்த்தினாலே போதும். எல்லோராலும் இந்த உயிர்வாழ்வுச் சான்றிதழை எளிதாகத் தந்துவிட முடியும். தன்னுடைய ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது அரசு நம்பிக்கை வைத்து இப்பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். மத்திய அரசு ஊழியரான தபால்காரரைக்கூட சான்று அளிக்கச் சொல்லலாம். இதனால் ஓய்வூதியர்கள் தங்கள் இருப்பிடங்களைவிட்டு அலுவலகங்களுக்கு வந்தே தீர வேண்டும் என்ற கட்டாயச் சுமை குறையும். நேரில் வருவது கட்டாயம் இல்லை என்று அரசு கூறினாலும் பல முதியவர்கள் மாற்று வழிமுறைகளைக் கேட்பதில்லை. ஓய்வூதியம் நின்றுவிடுமோ என்று அச்சப்படுகிறார்கள்.

ஆவடி சார்நிலைக் கருவூலம்

சென்னைக்கும் திருவள்ளூருக்கும் இடையில் உள்ள ஆவடி சார்நிலைக் கருவூலம் மாடியில் செயல்படுகிறது. ஆயுதங்களுடன் வந்து கொள்ளையடிக்கும் கும்பல் அதிகமாகிவிட்டதால் தரைதளத்தில் இருப்பது பாதுகாப்பாக இருக்காது என்று மாநில அரசு கருதியிருக்கலாம். உச்சபட்ச பாதுகாப்புக்காக சார் நிலைக் கருவூலத்தைச் சுற்றி அகழி கட்டி, சூலங்களை நட்டு, சில முதலைகளைக்கூட விட்டுவைக்கலாம் இன்னும் பலத்த பாதுகாப்பாக இருக்கும்.

நம் கவலை அதைப்பற்றியது அல்ல. நடமாடவே முடியாத முதியவர்கள், கை கால் எலும்பு முறிந்தவர்கள், எப்போது வேண்டுமானாலும் முறியக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தக்காரர்கள். நீரிழிவு நோயாளிகள் என்று பலதரப்பட்டவர்கள்தான் ஓய்வூதியர்கள். சுமார் 20 படிகளைக் கடந்து மாடிக்கு வந்ததால், ‘கணினியின் வலைப்பின்னல் வேலை செய்யவில்லை. 3 மாதம் அவகாசம் இருக்கிறது. போய்விட்டு திங்கள்கிழமை வாருங்கள்” என்று வெள்ளிக்கிழமை சென்றவர்களிடம் தெரிவித்தார்கள்.

முதியவர்கள் வந்து செல்லும் அரசு அலுவலகங்கள் பலவற்றை ‘தாயுள்ளத்தோடு’ இப்படி எத்தனை இடங்களில் முதல் மாடி, இரண்டாவது மாடி என்று வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. சொந்தக் கட்டிடமாக இருந்தாலும் வாடகைக்காக இருந் தாலும் தரைதளமாக இருந்தால் நல்லது. மாற்றுத் திறனாளிகள் எளிதில் சக்கர நாற்காலியில் வந்துபோகும் வகையில் அரசு அலுவலகங்கள், பொது கட்டிடங்களில் சாய்வு தளம் அமைக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றங்களும் பலமுறை அறிவுறுத்தி விட்டன. அதை எப்போது முழுமையாக அமல்படுத்துவார்கள் என்று தெரியவில்லை. இதில் அரசுதானே முன்மாதிரியாக இருக்க வேண்டும்?

இத்தனை படிகள் கடந்து வந்துவிட்ட முதியவர்களை அப்படியே திருப்பி அனுப்பாமல் அவர்கள் கொண்டுவந்த ஆவணங்களையும் படிவத்தையும் சரிபார்த்து அனுப்பிவைத்துவிட்டு, கணினியின் கோளாறு நீங்கிய பிறகு பதிவு செய்துகொள்ளக்கூடிய நடைமுறைகளையும் அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். இன்றைய அரசு ஊழியர்கள் நாளைய ஓய்வூதியர்கள் என்பதை மறக்க வேண்டாம்.

முதியவர்களிடம் மரியாதையையும் குழந்தைகளிடம் பாசத்தையும் பொழியும் சமுதாயம்தான் உண்மையான நாகரிகச் சமுதாயம். தமிழகம் இனி இதிலும் முன்னோடியாக மாற வேண்டும். கருவூலங்களும் சார்நிலைக் கருவூலங்களும் ஓய்வூதியர்களின் ‘அம்மா’ கருவூலங்களாக மாறும் நாள் எந்நாளோ?

Nod for medical degrees obtained from off-campus centres

Students with medical degrees obtained through off-campus centres of a West Indies-based health sciences university before 2010 will be allowed to enrol provisionally as medical interns and doctors in Tamil Nadu.

The Tamil Nadu Medical Council (TNMC) has agreed to register provisionally students who had pursued medical courses of the International University of Health Sciences, based in the West Indies, at its off-campus study centres in Cochin, Pune, Mumbai and Dubai before April 2010 and allow them to take up Compulsory Rotatory Residential Internship (CRRI) in the State.

TNMC counsel Veera Kathiravan made the submission before Justice S. Vaidyanathan during the hearing of a writ petition filed by a candidate before the Madras High Court Bench here.

The judge recorded the submission and directed the TNMC to consider registering the candidate permanently also after she completes the CRRI and complies with other mandatory requirements.

According to Mr. Kathiravan, the Medical Council of India had initially refused to register such candidates by citing its Screening Test Regulations, 2002, which state that candidates who had pursued medical courses in institutions located abroad should have undergone the entire duration of the course directly in those institutions and not in their off-campus study centres located elsewhere.

The rejection was challenged by about 20 students before the High Court of Kerala in 2011. A single judge of the High Court allowed their writ petitions on October 1, 2012 and ordered that all of them should be registered since they had completed their course before the introduction of the regulation, relied upon by the MCI to deny registration, on April 16, 2010.

Further pointing out that the International University of Health Sciences was located in the Federation of St. Christopher and Nevis, the judge said the MCI had not produced any material to prove that under the regulations in force in that island nation, an accredited institution in its territory could not award degrees to students who had undergone studies in its off-campus centres.

The single judge’s order was confirmed by a Division Bench of the Kerala High Court on August 29, 2014. Thereafter, the MCI decided against taking the matter on appeal to the Supreme Court and issued a circular on February 11, 2015 asking the medical councils in all the States to register such candidates besides permitting them to take up internship in hospitals within their jurisdiction.

“Accordingly, the application of the present petitioner is being processed by the Tamil Nadu Medical Council for grant of provisional affiliation,” the counsel added.

Sudden showers cool Chennai, more expected today

CHENNAI: After the blazing heat earlier in the week, a sudden downpour brought down the temperature in the city on Friday. The Met department has forecast rain for the entire state on Saturday.

The city recorded 5.4mm of rainfall, while the suburbs experienced 0.6mm though the downpour began only around 7pm. Traffic slowed down in many areas and at the airport flights from Singapore, Kolkata, Mumbai and Coimbatore came in late, while a Chennai-Delhi flight took off more than half an hour after the scheduled time.

The minimum temperature dipped by 6 degrees Celsius from 29 degrees C on Thursday. The weather turned pleasant in the afternoon as the sky was cloudy.

A Regional Meteorological Centre (RMC) official said a trough of low pressure over the Indian Ocean was causing the rain. "It is located near the equator right in south of Indian peninsula. And it is moving north," said a duty officer. While the state's southern regions can expect up to 6cm of rain, the northern parts, including Chennai, may get up to 3cm. "Rain will be widespread, accompanied by thundershowers," he added. A trough is a region of low atmospheric pressure that usually brings in clouds and rain.

For Chennaiites suffering due to the high temperatures in the last few days, Friday's rain was a blessing. "Living along the coast gets really difficult at times. Clothes stick our bodies and the humidity makes the summer worse than what it is already," said Mandaveli resident K Suresh. Weather experts say rain in the southern parts of Tamil Nadu increases humidity across the state, making it uncomfortable for everyone during non-rainy days.

Rain in April is unusual for Chennai. It received no rain in April in 2009, 2010 and 2014 and in 2007 received only 0.1mm. On April 15 this year, Chennai witnessed one of its biggest downpours for the month with Meenambakkam recording 103.2mm. Nungambakkam recorded only 2.6mm.

On April 12, 1951, the city received 100.3mm of rainfall, highest on a single day in its history. In April 1909, the city recorded 191mm for the whole month - highest for the month.

Between March 1 and April 24 this year, Tamil Nadu received 99mm of rain, 102% more than the normal of 49.1mm. In this period, apart from Nilgiris which got 254.4mm, Kanyakumari got the highest rainfall. While Against the normal of 119.9mm, Kanyakumari received 205.3mm.

Ration shop worker alleges harassment by seniors, ends life

CHENNAI: A 50-year-old employee of a ration shop committed suicide at his residence on Mint Street in Washermenpet on Thursday evening.

V Elangovan's relatives claimed that he took the extreme step as he was unable to bear the pressure from the senior officials. However, the staff at the ration shop said Elangovan, who engaged in the packaging work at the shop in J J Nagar, had been pulled up for mismanagement of funds and was placed under suspension for two days after a raid at the shop.

He was reportedly questioned for mismanagement of 15,000 in the accounts.

Elangovan went inside his room at 2pm saying that he was going to sleep for a while but did not come out for a long time. Around 5.30pm, his brother went to check on him and found him hanging. He immediately informed the Washermenpet police who moved the body to Stanley Medical College and Hospital for postmortem.

His relatives handed over a suicide note to the police, reportedly written by the victim. The note, written on April 22, mentioned the names of the joint registrar and deputy registrar and said that they harassing him. "I have never faced such humiliation in my 32 years of service in the department," wrote the victim in his suicide note.

The members of the ration shop staged a sit-in for a sometime on Friday evening in Washermanpet demanding justice.

Police are trying to verify whether the suicide note was written by Elangovan.

Staff, however, said that Elangovan had been suspended for mismanagement of 15,000 in the accounts.

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...