Monday, October 26, 2015

வெளிநாடுகளிலிலிருந்து அடிக்கடி பணம் வரும் வங்கி கணக்குகளை கண்காணிக்க முடிவு

Dinamani

By Venkatesan Sr, புதுதில்லி

First Published : 25 October 2015 09:53 PM IST


வெளிநாடுகளில் இருந்து அடிக்கடி பணம் வந்தால் அந்த வங்கி கணக்கை கண்காணித்து, தவறு நடக்கிறதா என்று விசாரிக்க வேண்டும் என ஊழல் கண்காணிப்பு ஆணையம் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பாங்க் ஆப் பரோடா வங்கி மூலம் ரூ.6,100 கோடி பண பரிமாற்ற மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தில்லியில் உள்ள பரோடா வங்கி கிளையில் இருந்து ஹாங்காங்கிற்கு பணம் பரிமாற்றம் நடந்ததில், 59 போலி நிறுவனங்கள் அந்நிய செலாவணி வர்த்தகத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதாவது, போலி நிறுவனம் உருவாக்கி அந்நிய செலாவணி பரிவர்த்தனை மூலம் சுங்க வரியை திரும்ப பெற்றுள்ளனர். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஒரு லட்சம் டாலருக்கு குறைவான பரிவர்த்தனை விவரங்களையும் தெரிவிக்குமாறு வங்கிகளை கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து ஊழல் கண்காணிப்பு ஆணையர் டி.எம்.பாஷின் கூறுகையில், ‘ஒரு லட்சம் அமெரிக்க டாலருக்கும் குறைவான தொகை பரிமாற்றம் செய்யப்பட்டாலும் அது எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட வேண் டும் என்று ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளோம். சிறிய அளவிலான அந்நிய செலாவணி பரிமாற்றம் நடைபெற்றாலும் அதை கவனித்து தகவல் தர வேண்டும் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்’ என்றார்.

தற்போதுள்ள நடைமுறைகளின்படி அந்நிய செலாவணி வர்த்தகத்தில் ஒரு லட்சம் அமெரிக்க டாலருக்கு மேல் பரிவர்த்தனை நடந்தால்தான் அதனை வங்கிகள் கண்காணித்து கேஒய்சி விதிப்படி அறிவிக்கின்றன.

ஆனால், சிறிய அளவிலான பரிவர்த்தனைகள் ஒரே வங்கி கணக்கில் சிறிது சிறிதாக சேரும்போது இது கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இதை பயன்படுத்தி மோசடிகள் நடந்தா லும் தெரியாமல் போய் விடுகிறது. குறைந்த அளவிலான பரிவர்த்தனைகளை தெரிவிக்கும் பட்சத்தில், வெளிநாடுகளில் இருந்து ஆயிரம், இரண்டாயிரம் டாலர் அனுப்பினால் கூட கண்காணிக்கப்படும்.

இதன்மூலம் அந்நிய செலாவணி பரிவர்த்தனை மோசடிகளை தடுக்க முடியும் என ஊழல் கண்காணிப்பு ஆணையம் கருதுகிறது

குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு குற்றவாளிகளுக்கு ஆண்மை அகற்ற பரிந்துரை..dinamalar


சென்னை:குழந்தைகளிடம், பாலியல் தொந்தரவு செய்யும் குற்றவாளிகளுக்கு, ஆண்மை அகற்ற சட்டம் கொண்டு வருவது பற்றி, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று, சென்னை ஐகோர்ட் பரிந்துரைத்துள்ளது.இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் வில்லியம்ஸ், தமிழகத்தில் ஏழை மாணவர்கள் காப்பகம் ஒன்றுக்கு, 2011ல் வந்தார். அந்த காப்பகத்தில் இருந்த, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனை, படிக்க வைப்பதாக கூறி, டில்லிக்கு அழைத்துச் சென்றார். மேலும், மாணவனின் தாய்க்கு, பண உதவியும் செய்துள்ளார்.

டில்லி, ஒய்.எம்.சி.ஏ., விடுதியில், தங்கியிருந்த போது, மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, இயற்கைக்கு மாறாக உறவு கொண்டார். பின்னர், மாணவனை அங்கேயே விட்டு விட்டு, லண்டனுக்கு சென்று விட்டார்.பிறகு, அந்த மாணவன், சிலர் செய்த பண உதவியால், சென்னைக்கு திரும்பினான். மாணவனுக்கு நடந்த கொடுமையை அறிந்த, குழந்தைகள் நல அமைப்பு ஒன்று, போலீசில் புகார் செய்தது.

புகாரை பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக, மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில், வில்லியம்ஸ் மீது குற்றம்சாட்டி, குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.

வில்லியம்ஸ் மீது, கோர்ட், பிடிவாரன்ட் பிறப்பித்தது . இதன் அடிப்படையில், வில்லியம்சை, தேடப்படும் குற்றவாளி என, இன்டர்போல் என்கிற சர்வதேச போலீஸ் அறிவித்தது.

தன் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவாரன்டையும், தன்னை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளதையும், ரத்து செய்ய கோரி, சென்னை ஐகோர்ட்டில், வில்லியம்ஸ் மனு தாக்கல் செய்தார்.

மனுவில், 'டில்லியில் நடந்த சம்பவத்துக்கு, தமிழக போலீசார், வழக்கு பதிவு செய்ய முடியாது, தமிழக கோர்ட்டுக்கு விசாரிக்கவும் அதிகாரம் இல்லை.

மாணவனிடம் நான் எந்த தவறும் செய்யவில்லை. குழந்தைகள் நல அமைப்பு உள்நோக்கத்துடன், எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது' என கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் கூறியதாவது:

நாட்டில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அதிகரித்து வருகிறது, 2012ல், 38 ஆயிரத்து 172 வழக்குகளும், 2014ல், 89 ஆயிரத்து 423 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் குற்றங்களில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்க பெற்றோரும், குடும்ப உறுப்பினர்களும், பள்ளி நிர்வாகமும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில், ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, அறுவை சிகிச்சை மூலம், ஆண்மை அகற்றும், தண்டனை வழங்கும் சட்டத்தை கொண்டு வருவது பற்றி, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

தபாலில் அனுப்பிய மதிப்பெண் சான்றிதழ் மாயம்



கோவை: பாரதியார் பல்கலையின் தொலைமுறைக் கல்வி முறையில் பட்டம் முடித்த மாணவர்கள் சிலருக்கு தபாலில் அனுப்பப்பட்ட சான்றிதழ்கள் கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. பாரதியார் பல்கலையின் தொலைமுறை கல்விக் கூடத்தில் இளங்கலை, முதுகலை, எம்.பி.ஏ., பாடப்பிரிவுகள், பி.எட்., எம்.எட்., என, ௨௦௦க்கும் மேற்பட்ட பாடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த

மாணவர்கள் இம்முறையில் அதிகம் பயின்றுவருகின்றனர். இம்முறையில் கல்வி முடிக்கும் மாணவர்களுக்கு தபால் மூலம் பட்ட சான்றிதழ்கள், மதிப்பெண், புரவிஷனல் உள்ளிட்ட சான்றிதழ்கள் அனுப்பப்படுகின்றன. நகரத்தில் இருப்பவர்களுக்கு சான்றிதழ்கள் முறையாக

சென்றுவிடுகின்றன. ஆனால், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு சான்றிதழ்கள் முறையாக சென்றடைவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி சரண்யா கூறுகையில், ''நானும் எனது தோழியும் சின்ன தடாகத்திலுள்ள ஒரே வீட்டு முகவரியில் பட்ட சான்றிதழுக்கு விண்ணப்பித்திருந்தோம். என் தோழிக்கு தபாலில் சான்றிதழ் கிடைத்துவிட்டது; எனக்கு வரவேயில்லை.

''பல்கலையில் கேட்டபோது உரிய பதில் கிடைக்கவில்லை. பலமுறை தொடர்புகொண்ட பிறகுதான் நகல் சான்றிதழ் ஒன்றுக்கு, ௧,௫௦௦ செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றனர். இதனால், வீண் அலைச்சலும், செலவும் ஏற்படுகிறது,'' என்றார்.

இந்தியக் கல்வியின் எதிர்காலம்!

Dinamani

By உதயை மு. வீரையன்

First Published : 26 October 2015 01:19 AM IST


பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) அண்மையில் ஓர் அறிவிப்பினை வெளியிட்டு, நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஜூலை 21 அன்று போலிப் பல்கலைக்கழகங்களின் பட்டியலை யு.ஜி.சி. வெளியிட்டது.
÷இந்த நிலையில் இந்தப் பல்கலைக்கழகங்கள் மீது மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்போது கேட்டுக் கொண்டுள்ளது. இதுபற்றி மாநிலத் தலைமைச் செயலர்களுக்கு யு.ஜி.சி. கடிதம் அனுப்பியுள்ளது.
÷பட்டியலில் இடம்பெற்றுள்ள போலி பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி. சார்பில் அனுப்பப்பட்ட கடிதங்கள் முகவரி தவறு எனத் திரும்பி வந்துள்ளன. இதனால் அந்தப் போலிப் பல்கலைக்கழகங்கள் வேறு முகவரியில் செயல்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் மாணவர்கள் அந்தப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து ஏமாந்து போகும் நிலை உருவாகும்.
÷எனவே, பட்டியலில் இடம்பெற்றுள்ள பல்கலைக்கழகங்களை மூடுவதற்கான நடவடிக்கையை அந்தந்த மாநில அரசுகள் உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், இந்த நடவடிக்கை தொடர்பான தகவலையும் யு.ஜி.சி.-க்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் போலிப் பல்கலைக்கழகங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
÷உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிக அளவாக எட்டு பல்கலைக்கழகங்களும், தில்லியில் ஆறு பல்கலைக்கழகங்களும், தமிழ்நாடு, பிகார், கர்நாடகம், கேரளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஆகிய ஏழு மாநிலங்களில் தலா ஒன்றுமாக 21 போலிப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் இருக்கின்றன.
÷இந்தப் போலிப் பல்கலைக்கழகங்கள் பற்றிய எச்சரிக்கை ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறதே தவிர, இதன்மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவே தெரியவில்லை. இதனை நம்பி மாணவர்கள் சேர்ந்து படித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இவற்றைத் தடுக்காததன் காரணம் ஊழல் என்பதைத் தவிர வேறு என்ன?
÷இதனையொட்டி மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.), இந்தியக் கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதைப் பற்றி ஓர் எச்சரிக்கை செய்துள்ளது.
÷யு.ஜி.சி.-இன் வழிகாட்டுதலை முழுமையாகப் பின்பற்றாமல் சில கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு இளநிலை, முதுநிலைப் பட்டப்படிப்புகளை வழங்குவது கவனத்துக்கு வந்துள்ளது என்றும், இந்தக் கல்வி நிறுவனங்களில் பெறப்படும் பட்டங்கள், பட்ட மேற்படிப்புக்கோ அல்லது வேலைவாய்ப்புக்கோ செல்லத் தகுந்ததாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.
÷இந்தியாவில் உள்ள ஒரு கல்வி நிறுவனம் வெளிநாட்டுக் கல்வி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்னதாக அந்தந்த நாடுகளின் அங்கீகாரக் கவுன்சில்கள் மூலம் உரிய அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
÷இந்திய சுயநிதிக் கல்வி நிறுவனங்களைப் பொருத்தவரை குறைந்த அளவு "பி' கிரேடு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். கல்வி நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளைக் குறைந்த அளவு 5 ஆண்டுகள் வழங்கியிருக்க வேண்டும்.
÷இந்த ஒப்பந்தம் மூலம் அளிக்கப்படும் படிப்புகள் பற்றிய முழு விவரத்தை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் கல்லூரி இணையதளத்தில் வெளியிட வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்னதாக தொடர்புடைய இணைப்புப் பல்கலைக்கழகத்திடமும், யு.ஜி.சி.யிடமும் முன் அனுமதி பெற வேண்டும் என்னும் விதிகளை யு.ஜி.சி. வகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
÷இந்த நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் தங்கள் கடமைகளிலிருந்து நழுவிக் கொண்டிருக்கின்றன. உள்ளூர்த் தொழில்களை ஊக்குவிப்பதற்கு பதிலாக உலக முதலீட்டாளர்களை அறைகூவி அழைக்கின்றன. இழப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் அரசுப் பொதுத் துறை நிறுவனங்களில் தொடங்கி, லாபத்தில் இயங்கும் நிறுவனங்கள் வரை விற்பனை செய்வதற்கே அரசு துடிக்கிறது.
÷இப்போது கல்வித் துறையிலும் அயல்நாட்டு நிறுவனங்களை அனுமதிக்க மத்திய அரசு முனைப்புக் காட்டுகிறது. இதன் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படவில்லை.
÷160 நாடுகள் கலந்து கொள்ளும் உலக வர்த்தக மையம் (WTO), வரும் டிசம்பர் 15 அன்று கென்யா நாட்டின் நைரோபியில் கூடுகிறது. இந்த பத்தாவது வட்ட அமைச்சக மாநாட்டில் கல்வித் துறைக்குள் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடப் போகிறது.
÷உலக வர்த்தக மையம் என்பது உலகின் செல்வந்த நாடுகள் தாங்கள் உற்பத்தி செய்தவற்றை வளரும் மற்றும் வளரா நாடுகளுக்குள் தடையில்லாமல் விற்பனை
செய்ய உதவுகிறது. இதில் உறுப்பினராக இருந்தால் மற்ற உறுப்பினர் நாடுகளின் ஒப்புதலோடு அந்த நாடுகளைச் சந்தையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
÷இந் நிலையில் பொருள்களை மட்டும் பிற நாடுகளுக்கு விற்பனை செய்து கொண்டிருந்த நாடுகள் இப்போது மருத்துவம், காப்பீடு, கல்வி போன்ற சேவையையும் விற்பனை செய்யலாம் என்று முடிவு செய்துள்ளன. இதனால் சேவையில் வணிகத்துக்கான காட்ஸ்
(GATS) ஒப்பந்தம் உருவானது.
1995 ஆம் ஆண்டு நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு, இந்தியா அதில் உறுப்பு நாடாக இருக்க ஒப்புதல் அளித்துவிட்டது. 2004-ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கமும் ஒப்புதல் அளித்துவிட்டுச் சென்றது. 2005-இல் மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் அரசும் சம்மதம் தெரிவித்து விட்டுப் போய்விட்டது.
÷இப்போது நரேந்திர மோடியின் பா.ஜ.க. அரசாங்கம் இதனை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது. முந்தைய அரசுகளின் கொள்கைகளை எதிர்த்து விமர்சித்து வெற்றி பெற்று வந்தவர்கள், பழைய வழியிலேயே போய்க் கொண்டு இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
÷காட்ஸ் ஒப்பந்தம் மாணவரை வாங்குபவர் என்றும், ஆசிரியரை விற்பவர் என்றும், பல்கலைக்கழகங்களைக் கடைகள் என்றும் சொல்கிறது. அதன் அறிக்கையில் மாணவர்கள், ஆசிரியர்கள் என்ற வார்த்தைகளே இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
÷அவர்கள் கடை திறந்தால் அவர்களுக்கு மற்ற கடைக்காரர்களோடு சமமான போட்டி இருக்க வேண்டும். அதாவது அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், மானியங்கள் அவர்களுக்கும் தரப்பட வேண்டும் என்று கூறுகிறது காட்ஸ் ஒப்பந்தம்.
÷160 நாடுகளின் கடைகள் வரும் என்பதால் அரசாங்கத்தினால் அனைவருக்கும் சலுகைகள், மானியங்கள் வழங்க இயலாது என்பதால் மானியமும், சலுகைகளும் இல்லாமல் அரசுப் பல்கலைக்கழகங்கள் படிப்படியாக மூடப்படலாம்.
÷திறக்கப்படும் கல்விக் கடைகள் தரமானதாக இருக்கும் என்று யாராலும் உத்தரவாதம் வழங்க இயலாது என்று காட்ஸ் கூறுகிறது. அத்துடன் பாடத் திட்டம், கற்றுக்கொடுக்கும் முறை ஆகியவை அவர்களாலேயே முடிவு செய்யப்படும்.
÷அவர்கள் கல்வி, வணிகம் செய்ய நமது நாட்டுச் சட்டம் ஏதாவது தடையாக இருந்தால் அதை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். கல்விக்கான கட்டணத்தை அவர்களே முடிவு செய்வார்கள். நமது அரசு, நீதிமன்றம் ஆகிய எதற்கும் அவர்கள் கட்டுப்பட்டவர்கள் அல்லர். இவ்வாறு அவர்களுக்கு வசதியாக ஒப்பந்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
÷இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் இந்தியாவின் இறையாண்மைக்கு மிகப்பெரிய அறைகூவலாகும். வளர்ந்த நாடுகளோடு போட்டி போட முடியாமல், இருப்பதையும் இழக்கும் அபாயம் ஏற்படும். நமது மொழி, கலை, பண்பாடு அனைத்தும் காலப்போக்கில் அழிந்துவிடும். மத்திய, மாநில அரசுகளின் உரிமைகள் எல்லாம் பறிக்கப்படும்.
÷இந்தியக் கல்வித் துறையில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வெளிப்படையாகக் கூறாமல் ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனை எப்படியோ தெரிந்து கொண்ட கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும், இடதுசாரி சிந்தனையாளர்களும் இதனைக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அரசாங்கம் எப்போதும் போல மெüனம் சாதித்து வருகிறது.
÷மனித குல வரலாற்றில் கல்விக்கென ஓர் இன்றியமையாத இடம் உண்டு. அதுதான் நாகரிக வளர்ச்சியின் ஆரம்பம். அறியாமை அகலாமல் நாகரிகம் ஏற்பட முடியாது. அறியாமை இருளை அகற்றுவதற்கு கல்வி வெளிச்சம் அவசியமாகிறது. நாகரிக சமுதாயத்தில் முக்கியப்புள்ளியாக கல்வி இருந்து வருகிறது.
÷ஆதிக்க சமுதாயமும், அரசாங்கமும் கல்வியினை மக்களுக்கு அளிக்காமல் மறுதலித்துக் கொண்டே வந்ததற்குக் காரணம் இல்லாமல் இல்லை. மக்களுக்குக் கல்வி தரப்பட்டால் அவர்கள் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள்; ஆதிக்கத்தையும், அரசாங்கத்தையும் எதிர்க்க ஆரம்பித்து விடுவார்கள் என்ற அச்சமே இதற்குக் காரணம்.
÷இந்திய அரசமைப்புச் சட்டம், 14 வயதுக்கு உள்பட்ட அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வியை உறுதி செய்கிறது. இருந்தாலும் நாடு விடுதலையடைந்து 68 ஆண்டுகள் ஆகியும் கல்வி பெறும் உரிமை மக்களிடம் முழுமையாகச் சென்றடையவில்லையே!
÷தொடக்கக் கல்விதான் இப்படியென்றால் உயர்கல்வி எட்டாத உயரத்தில் ஏறிக் கொள்ளுமோ? இந்திய மக்களின் எதிர்காலம் போல இந்தியக் கல்வியின் எதிர்காலமும் உறுதி செய்யப்பட வேண்டும்.
போலிப் பல்கலைக்கழகங்கள் பற்றிய எச்சரிக்கை ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறதே தவிர, இதன்மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவே தெரியவில்லை. இதனை நம்பி மாணவர்கள் சேர்ந்து படித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இவற்றைத் தடுக்காததன் காரணம் ஊழல் என்பதைத் தவிர வேறு என்ன?

Saturday, October 24, 2015

விபத்துக்கு யார் காரணம்?

Dinamani

By ஆசிரியர்

First Published : 24 October 2015 01:40 AM IST


தமிழக நெடுஞ்சாலை விபத்துகளில் கொத்துக் கொத்தாக மனித உயிரிழப்பு ஏற்படுவதற்கு இரண்டு விதமான விபத்துகள்தான் காரணம். ஒன்று, டயர் வெடித்து வாகனம் கட்டுப்பாட்டை இழப்பதால், சாலைத் தடுப்பில் மோதிக் கவிழ்கிறது. இரண்டாவதாக, நின்று கொண்டிருக்கும் வாகனத்தின் மீது விரைந்து வரும் வாகனம் மோதுவதால் ஏற்படும் விபத்து.
இந்த இரண்டு விபத்துகளுமே மனிதத் தவறுகளால் நடைபெறுபவை. ஆனால், இதுவரை நெடுஞ்சாலைத் துறையோ, வாகன உற்பத்தியாளர்களோ, நெடுஞ்சாலைக் கண்காணிப்பு காவலர்களோ இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைந்தபட்ச முயற்சியைக்கூட மேற்கொள்ளவில்லை.
ஆயுதபூஜைக்கு முன் தினம் இருங்களூர் அருகே நடந்த விபத்தில் 10 பேர் இறந்தனர். இதற்காக டிரெய்லர் லாரி, அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் இருவருமே கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவர் மீதும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மிகமிக இயந்திரத்தனமான அரசு நடைமுறை. விபத்துக்கான காரணம் வெறும் கவனக்குறைவு மட்டுமல்ல.
லாரியில், அதன் உடல்பகுதிக்குள் அடங்காமல் வெளியே அகன்று இருந்த இரும்புத் தகடுகள்தான் பேருந்தின் ஒரு பகுதியை வெட்டிக் கிழித்துள்ளன. இருக்கையில் இருந்தவர்களின் வயிற்றுப் பகுதியை வெட்டி இரண்டு கூறாக்கியதால் வாகனத்தின் வலது பக்க இருக்கைகளில் ஜன்னல் ஓரம் அமர்ந்தவர்கள் மட்டும் இறக்கவும், மற்றவர்கள் காயமடையவும் நேர்ந்தது. இதேபோன்ற சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் அருகே நடந்தது. இரும்புத் தகடு பேருந்தின் வலப்புறத்தைக் கிழித்துச் சென்றதில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த பயணிகளின் கால்கள் துண்டாகின.
ஒரு லாரியின் உடல்பகுதியைத் தாண்டிச்செல்லும் இரும்புத் தகடுகளை ஏற்றிச் செல்ல எவ்வாறு அனுமதிக்கப்படுகிறது? அதுவும் இரவு நேரத்தில்? அதிலும் குறிப்பாக, இந்த இரும்புப் பலகைகளின் கடைசி முனைப் பகுதியில் சிகப்பு விளக்குகளால் எச்சரிக்கை செய்யப்படாமல்? வாகனம் சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டுவிட்டால், எச்சரிக்கை விளக்குகளையும் லாரி ஓட்டுநர் அணைத்துவிடுவதா? நாற்கரச் சாலையில் வாகனங்களை நிறுத்தத் தனி இடங்கள் ஆங்காங்கே உருவாக்கப்பட்டுள்ளபோது, ஏன் நெடுஞ்சாலையில் நிறுத்துகிறார்கள்? இது குற்றமில்லையா?
இத்தகைய வாகனங்களை அந்த நாற்கரச் சாலையில் இயங்க அனுமதித்ததற்காக அந்த பகுதிக்குரிய போக்குவரத்து கண்காணிப்பு அதிகாரிகள் அனைவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். போக்குவரத்து காவல் துறை வழக்கு மட்டும்தான் பதிவு செய்யுமா? அவர்கள் பொறுப்பேற்க மாட்டார்களா?
அண்மையில் புகழ்பெற்ற தனியார் ஆம்னி பேருந்தின் ஓட்டுநர் குடிபோதையில் ஓட்டியதைக் கண்டு பயணிகள் எதிர்த்தனர். முசிறி அருகே பேருந்து நிறுத்தப்பட்டது. அந்த ஓட்டுநரைக் காவல் துறையிடம் ஒப்படைத்தார்கள். அவர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், மாற்று ஓட்டுநரை அனுப்ப அந்த நிறுவனம் ஏழு மணி நேரம் எடுத்துக்கொண்டது. இதனால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இதற்காக அந்த நிறுவனத்தின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பயணிகள் பேருந்தின் ஓட்டுநர் குடித்துவிட்டு ஓட்டினால் அதற்கு அந்த நிறுவனத்துக்குப் பொறுப்பு கிடையாதா? ஒருவேளை இந்த ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளாகிப் பலர் இறந்திருந்தாலும், ஓட்டுநர் குடித்திருந்தது மறைக்கப்பட்டிருக்கக்கூட வாய்ப்பு உள்ளது. பயணிகளுக்கு என்னதான் பாதுகாப்பு என்பதுதான் நாம் எழுப்பும் கேள்வி.
அடுத்ததாக, டயர் வெடிப்பு விவகாரம். டயர்கள் ஏன் வெடிக்கின்றன? இந்தக் கேள்வியைப் போக்குவரத்துத் துறையோ அல்லது வாகன உற்பத்தியில், டயர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களோ சட்டை செய்வதே இல்லை.
டயர்களில், டியுப்களில் மிகச் சிறு குமிழ் போன்ற இடைவெளிகள், வெற்றிடங்கள் உற்பத்தி நிலையிலேயே ஏற்பட்டுவிடும் என்றும், வாகனம் அதிவேகத்தில் செல்லும்போது வெப்பத்தால் அந்தக் குமிழியில் சிக்கியுள்ள காற்று வெப்பமடைந்து விரிந்து வெடிக்கும்போது, அது அளவில் சிறியதாக இருந்தாலும், அவை மிகச் சிறு மாற்றத்தையே ஏற்படுத்தினாலும், அதிவேகம் காரணமாக வாகனம் நிலைகுலைகிறது என்றும் தொழில்நுட்பம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். இதுகுறித்து குறைந்தபட்சம் கார், லாரி ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்துவதும்கூட கிடையாது.
எந்தெந்த டயர்கள் பூட்டப்பட்ட, எத்தனை எடையுள்ள வாகனங்கள், எத்தனை கிலோ மீட்டர் தூரம் சென்றதும் சற்று ஓய்வுக்காக நிறுத்தப்பட வேண்டும் என்பதை ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தினாலே டயர்வெடிப்புகளை தவிர்த்துவிட முடியும். இந்தப் பொறுப்பு டயர் உற்பத்தி நிறுவனங்களுக்கு இருக்கிறது. அவர்கள் இதுகுறித்துக் கவலைப்படுவதில்லை.÷
டயர் வெடித்ததால் விபத்து என்று பதிவு செய்யும் காவல் துறை, அந்த டயர் எந்த நிறுவனத்தின் தயாரிப்பு, அது வெடிக்கக் காரணம் என்ன என்பதை ஆய்வுக்கு அனுப்புகிறதா? குறைந்தபட்சம் இத்தகைய நடவடிக்கைகளை ஆட்டோமொபைல் என்ஜினியரிங் படிப்பு சார்ந்த கல்லூரி மாணவர்களின் பொறுப்பில் ஒப்படைத்தால்கூட அவர்கள் இதுகுறித்து ஆய்வு செய்வார்கள்.
வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கும் நடைமுறை வெறும் இயந்திரத்தனமாக, ஊழல் நிறைந்ததாக இருப்பதும் இத்தகைய விழிப்புணர்வு ஏற்படாமல் போனதற்குக் காரணம். ஏதாவது ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிக்குப் பணம் கட்டிவிட்டு, அரைகுறையாக ஓட்டத் தெரிந்தாலும் போதும், எந்த வாகனத்துக்கான ஓட்டுநர் உரிமம் என்றாலும் கிடைத்துவிடும் என்ற நிலைதான் இந்தியா முழுவதிலும் இருக்கிறது.
இந்தியாவில் உயிர் - விலைமதிக்கவியலாத ஒன்றா, விலைமதிப்பில்லாத ஒன்றா?

தினத்தந்தி

logo

புதுடெல்லி,


வெளிநாடுகளில் இருந்து ரூ.5 லட்சம் வரை மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத பொருட்களை கொண்டு வருபவர்களுக்கு அபராதமும், அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களை கொண்டு வருபவர்கள் மீது வழக்கு அல்லது கைது நடவடிக்கையும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வெளிநாடு சென்று திரும்புவோரை தொந்தரவு செய்வதை குறைக்கும் வகையில், தண்டனை விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தி உள்ளது. அதன்படி, இனிமேல், ரூ.20 லட்சம் வரை மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத பொருட்களை கொண்டு வந்தால், வழக்கு அல்லது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது. அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களை கொண்டு வந்தால்தான், அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

இதுபோல், மத்திய உற்பத்தி வரி, சுங்க வரி, சேவை வரி உள்ளிட்ட சட்டங்களின் கீழ் குற்றங்கள் இழைப்போரை கைது செய்வதற்கான பண உச்சவரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், இந்திய கள்ள நோட்டுகள், ஆயுதம், வெடிபொருட்கள், அரியவகை உயிரினங்கள் ஆகியவற்றை கடத்தி வருவோர் மீது, அந்த பொருட்களின் மதிப்பை கவனத்தில் கொள்ளாமல், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது. கைது செய்வதற்கும், வழக்கு தொடர்வதற்கு அனுமதி அளிப்பதற்குமான விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

ஒரே செல்போனில் 2 சிம்களிலும் வாட்ஸ்ஆப் வசதி ஆர். தினகரன் | தமிழில்: கா.கி

Return to frontpage

அலுவலக எண், தனிப்பட்ட உபயோகம் என இன்று ஒருவரே பல எண்களை வைத்துக் கொண்டிருப்பது சாதாரணமான சங்கதி. இதனால் இரண்டு சிம்கள் பொருத்தக் கூடிய டூயல் சிம் மொபைல்களை பயன்படுத்துவோரும் இன்று அதிகம்.

ஆனால், இந்த போன்களில் இருக்கும் பிரச்சினை, இருக்கும் இரண்டு எண்களில் ஒரு எண்ணிலிருந்து மட்டும்தான் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியும். மற்றொரு எண்ணைக் கொண்டு, அதே மொபைலில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது. இதனால், வாட்ஸ்ஆப் பயன்பாட்டுக்காக மட்டும் வேறொரு புது மொபைலை நாடும் நிலை உள்ளது.

ஆனால் தற்போது, ஒரு மொபைலில் இரண்டு நம்பர்களுக்கும் தனித் தனியாக வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் விதமாக புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் டூயல் சிம் மொபைல் பயன்படுத்துபவர் என்றால், திசா (Disa) என்ற இந்த செயலியின் மூலம், உங்கள் மொபைலில் உள்ள இரண்டு எண்களுக்கும், தனித்தனியாக வாட்ஸ்ஆப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கான வழிமுறைகள் மிக எளியவை. திசா செயலியை https://goo.gl/bW2ELo என்ற இணைப்பின் மூலம் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

அதில் ‘+’ என்ற தேர்வை அழுத்தி, உங்கள் மற்றொரு எண்ணை (அதாவது வாட்ஸ்ஆப் பயன்படுத்தாத எண்) '+91' என குறியீட்டோடு தரவும். (உதாரணம்: +91 98765*****)

அடுத்து வெரிஃபை செய்வதற்கான கட்டம் வரும். இதைத் தாண்டினால் ஒரே நேரத்தில் இரண்டு எண்களுக்கு தனித்தனியாக வாட்ஸ்ஆப் பயன்படுத்த உங்கள் மொபைல் தயாராகிவிடும். நீங்கள் ஏற்கெனவே வைத்துள்ள வாட்ஸ்ஆப் இல்லாமல், திசா செயலிக்குள் இன்னொரு வாட்ஸ்ஆப் பக்கம் உருவாகிவிடும்.

ஆனால் தற்போது திசா செயலியில் உள்ள வாட்ஸ்ஆப் மூலம் செய்திகளை அனுப்ப மட்டுமே முடியும். வாட்ஸ்ஆப் கால்கள் (Whatsapp call) செய்ய முடியாது. அதே போல ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் மட்டுமே தற்போது இந்த செயலி வேலை செய்யும்.
Keywords: வாட்ஸ்ஆப், இரண்டு எண்கள், புதிய செயலி, டூயல் சிம், திசா செயலி

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...