Saturday, October 24, 2015

தினத்தந்தி

logo

புதுடெல்லி,


வெளிநாடுகளில் இருந்து ரூ.5 லட்சம் வரை மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத பொருட்களை கொண்டு வருபவர்களுக்கு அபராதமும், அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களை கொண்டு வருபவர்கள் மீது வழக்கு அல்லது கைது நடவடிக்கையும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வெளிநாடு சென்று திரும்புவோரை தொந்தரவு செய்வதை குறைக்கும் வகையில், தண்டனை விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தி உள்ளது. அதன்படி, இனிமேல், ரூ.20 லட்சம் வரை மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத பொருட்களை கொண்டு வந்தால், வழக்கு அல்லது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது. அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களை கொண்டு வந்தால்தான், அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

இதுபோல், மத்திய உற்பத்தி வரி, சுங்க வரி, சேவை வரி உள்ளிட்ட சட்டங்களின் கீழ் குற்றங்கள் இழைப்போரை கைது செய்வதற்கான பண உச்சவரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், இந்திய கள்ள நோட்டுகள், ஆயுதம், வெடிபொருட்கள், அரியவகை உயிரினங்கள் ஆகியவற்றை கடத்தி வருவோர் மீது, அந்த பொருட்களின் மதிப்பை கவனத்தில் கொள்ளாமல், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது. கைது செய்வதற்கும், வழக்கு தொடர்வதற்கு அனுமதி அளிப்பதற்குமான விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...