Thursday, October 29, 2015

மகாமக விழாவுக்காக புதிய இணையதளம் தொடக்கம்..dinamani


By தஞ்சாவூர்,

First Published : 29 October 2015 12:21 AM IST


கும்பகோணத்தில் மகாமகம் விழா தொடர்பான புதிய இணையதளத்தை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகத் திருவிழா 2016 ஆம் ஆண்டு பிப். 22-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்காக தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு துறைகளின் சார்பில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கும்பகோணம் மகாமக விழா தொடர்பான புதிய இணையதளத் தொடக்க விழா கும்பகோணம் நகராட்சி படேல் மன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், புதிய இணையதளத்தை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் பேசியது:
மகாமக விழாவின் முக்கிய தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காகப் புதிய இணைதளத்தைத் தொடங்குவது எனத் தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கும்பகோணத்தில் உள்ள தங்குமிடம், கோயில்களின் தல வரலாறு போன்ற தகவல்களுடன் www.onlinethanjavur.com/mahamaham என்ற பெயரில் புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் மகாமக விழாவின் சிறப்புகள், பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகள், பணிகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இணையதளத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...