Tuesday, October 27, 2015

திருவாரூர் ஆழித் தேர் வெள்ளோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் By திருவாரூர், First Published : 27 October 2015 12:14 AM IST

திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தியாகராஜர் கோயில் ஆழித் தேர் வெள்ளோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவாரூர் நகரில் நடைபெறும் விழாக்களில் தொன்மையும், பெருமையும் வாய்ந்த விழா என்றால் அது ஆழித் தேரோட்ட விழாவே. ஐந்தடுக்கு கட்டுமானங்களை கொண்ட தோó பீடத்தில் 96 அடி உயரத்தில் அலங்காரம் செய்யப்பட்டு சுமார் 350 டன் எடையில் தோó கம்பீரமாக அசைந்து வருவதைப் பார்க்க பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தாóகள் வருவார்கள்.
கடந்த 16.7.2010 அன்று நடைபெற்ற ஆழித்தேரோட்டத்துக்குப் பிறகு தேர் புதுப்பிக்க முடிவெடுக்கப்பட்டு, 2.8.2010 முதல் தேர் பிரிக்கும் பணி தொடங்கி சில மாதங்களில் நிறைவடைந்தது. பின்னர், புதுத்தேர் கட்டும் பணி சுமார் ஓராண்டுக்கு பிறகு தொடங்கி சில நாள்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
இதையடுத்து, தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை திங்கள்கிழமை ஆழித் தேர், சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்ட விழா நடத்த தீர்மானித்தது.
அதன்படி, திங்கள்கிழமை ஆழித்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி,பிரவேச பலி, ம்ருத்சஹ்கிரஹணம், மாலை 5 மணிக்கு அங்குரார்ப்பணம், ரஷ்பந்தனம், 6 மணிக்கு முதல்கால யாகம், பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது.
தேர் வெள்ளோட்டம்: திங்கள்கிழமை காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாகம், 9 மணிக்கு பூர்ணஹூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 9.15 மணிக்கு ஆழித்தேர் பிரதிஷ்டை செய்யப்பட்டதையடுத்து, காலை 9.20 மணியளவில் சுப்ரமணியர் தேர் வெள்ளோட்டம் தொடங்கியது. பின்னர் 9.30 மணிக்கு ஆழித்தேர் வெள்ளோட்டம் தொடங்கியது. தமிழக உணவு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.
அப்போது, பக்தர்கள் "ஆரூரா, தியாகேசா' என பக்தி கோஷம் எழுப்பினர். பிரமாண்ட தோற்றத்துடன் ஆழித்தேர் ஆடி அசைந்து வந்தக் காட்சி பிரமிக்க வைத்தது. தேருக்கு முன்னால் சிவபக்தர்கள் தேவாரப் பாடல்கள் பாடிச் சென்றனர். இசை வாத்தியங்கள் முழங்க ஆழித் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
தேரடியிலிருந்து தியாகராஜர் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. பாதுகாப்பு பணியில் காவல் துறை, தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். சுப்ரமணியர் தேர் நான்கு வீதிகளையும் 5 மணி 45 நிமிடங்கள் சுற்றி விட்டு மாலை 4 மணிக்கு மீண்டும் தேரடிக்கு வந்து சேர்ந்தது. இதேபோல், ஆழித்தேர் நான்கு வீதிகளிலும் ஏழரை மணி நேரம் சுற்றிவிட்டு, மாலை 5 மணிக்கு தேரடி நிலைக்கு வந்தடைந்தது. தேர்களை தள்ளும் பணியில் 3 பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
தேரோட்ட தேதி அறிவிப்பு எப்போது?
தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் கடந்த 2010-ஆம் ஆண்டு நடைபெற்றது.
அதற்கு பிறகு பழையத் தேர் பிரிக்கப்பட்டு, தற்போது ரூ. 2.18 கோடியில் புதியத் தேர் வடிவமைக்கப்பட்டு, திங்கள்கிழமை ஆழித்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
இதனால், பல ஆண்டுகளாக ஆடி அசைந்தாடும் திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை காண முடியாத ஏக்கத்தில் இருந்த பக்தர்களுக்கு விரைவில் ஆழித்தேரோட்டத்தை காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வெள்ளோட்டம் விடப்பட்டுள்ள நிலையில், தேரோட்டம் நடைபெறும் தேதி இதுவரை தொடர்புடைய துறை அறிவிக்காததால், அந்த அறிவிப்பு எப்போது என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் பக்தர்கள்.
ரூ. 45 லட்சத்தில் உருவான சுப்பிரமணியர் தேர்
திருவாரூர் தியாகராஜர் கோயில் சுப்பிரமணியர் தேர் ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பு சார்பில் ரூ. 45 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
அலங்கரிக்கப்படாத தேரின் உயரம் 18 அடி. ஆழித்தேரை போல் ஐந்து அடுக்குகளை கொண்ட இத்தேரின் முதல் அடுக்கில் 99 சிற்பங்கள், இரண்டாம் அடுக்கில் 95 சிற்பங்கள், மூன்றாம் அடுக்கில் 105 சிற்பங்கள் என மொத்தம் 299 சிற்பங்கள் உள்ளன.
மூன்றடுக்குக்கு மேல் தேவாசனம், சிம்மாசனம் உள்ளது. தேரைச் சுற்றிலும் 126 பித்தளை மணிகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
2000-க்கும் மேற்பட்ட கன அடி இலுப்பை மரங்கள், இரண்டு டன் அளவுக்கு இரும்பு பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.



No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...