Monday, October 26, 2015

தபாலில் அனுப்பிய மதிப்பெண் சான்றிதழ் மாயம்



கோவை: பாரதியார் பல்கலையின் தொலைமுறைக் கல்வி முறையில் பட்டம் முடித்த மாணவர்கள் சிலருக்கு தபாலில் அனுப்பப்பட்ட சான்றிதழ்கள் கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. பாரதியார் பல்கலையின் தொலைமுறை கல்விக் கூடத்தில் இளங்கலை, முதுகலை, எம்.பி.ஏ., பாடப்பிரிவுகள், பி.எட்., எம்.எட்., என, ௨௦௦க்கும் மேற்பட்ட பாடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த

மாணவர்கள் இம்முறையில் அதிகம் பயின்றுவருகின்றனர். இம்முறையில் கல்வி முடிக்கும் மாணவர்களுக்கு தபால் மூலம் பட்ட சான்றிதழ்கள், மதிப்பெண், புரவிஷனல் உள்ளிட்ட சான்றிதழ்கள் அனுப்பப்படுகின்றன. நகரத்தில் இருப்பவர்களுக்கு சான்றிதழ்கள் முறையாக

சென்றுவிடுகின்றன. ஆனால், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு சான்றிதழ்கள் முறையாக சென்றடைவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி சரண்யா கூறுகையில், ''நானும் எனது தோழியும் சின்ன தடாகத்திலுள்ள ஒரே வீட்டு முகவரியில் பட்ட சான்றிதழுக்கு விண்ணப்பித்திருந்தோம். என் தோழிக்கு தபாலில் சான்றிதழ் கிடைத்துவிட்டது; எனக்கு வரவேயில்லை.

''பல்கலையில் கேட்டபோது உரிய பதில் கிடைக்கவில்லை. பலமுறை தொடர்புகொண்ட பிறகுதான் நகல் சான்றிதழ் ஒன்றுக்கு, ௧,௫௦௦ செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றனர். இதனால், வீண் அலைச்சலும், செலவும் ஏற்படுகிறது,'' என்றார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...