Thursday, September 28, 2017

Eight graduates held for kidnapping businessman’s father

TNN | Updated: Sep 28, 2017, 08:13 IST



CHENNAI: A gang of eight graduates allegedly kidnapped the father of a businessman after the businessman cheated them of nearly Rs 2 lakh promising them jobs in K K Nagar on Wednesday morning.

Police have also detained the businessman's father on a cheating complaint given by the graduates.

Police said Imran, son of Muhammed Rafiq, 50, runs a placement firm in Valasaravakkam. He sends graduates abroad for employment. The graduates went to register themselves in the firm to get jobs abroad. Imran reportedly collected Rs 1.60 lakh from graduates claiming that he would get them jobs overseas.

"He failed to get them jobs and kept dodging them," said an investigating officer.

Since then they were searching for Imran and visted his office several times but in vain, as he failed to come for talks with them. Meanwhile when the graduates went looking for him in his house, they found his car in a house in KK Nagar.

However, Imran was not there so the gang decided to kidnap his father in Mohammad Rafiq on Tuesday night from K K Nagar.

Mohammad Rafiq's friend Lal Bhadur lodged a missing complaint claiming that a gang in a Maruti Swift car bundled his friend into the car and escaped. Since Imran remained unreachable over phone, the gang kept travelling with his father for a while. They kept him in a house and tried to call his son asking him to come with the money. Meanwhile, police who were tracing Imran's mobile number tracked their location.

A special police team which reached the scene arrested Prasanna, 27, native of Mayiladuthurai and K Aravind, 24, resident of Kodambakkam, K Hariharan of Red Hills, V Gokul Prasad, 19 of Peravallur, R Vinoth Raj, 20 of Villupuram, P Vagisan, 20 of Poonamallee, R Kumar, 20 of Agaram, S Vigneshwaran, 26 of Kodambakam.

During enquiry it was found that the graduates had filed a complaint against Imran with the Central Crime Branch (CCB) police on August 24. The CCB team had started inquiry into the issue but Imran was absconding so the case was not pursued further. Frustrated over this, the graduates hatched a plan to get back their money.

"Since Mohammad's son is involved in the offence, we are questioning his father to trace the whereabouts of his son. Some more people are involved in the kidnap. We have launched a manhunt for six of them, who are still at large," said the officer.
Unprepared CMBT to handle footfall of 3.5 lakh commuters for festival rush

Yogesh Kabirdoss| TNN | Sep 28, 2017, 00:07 IST

Chennai: Boarding buses at the Chennai Mofussil Bus Terminus (CMBT) could be a nightmare for commuters as thousands of passengers would make a beeline to Koyembedu from Thursday for visiting their hometowns on the account of Dasara holidays. Apart from the ordeal, people may have to put up with hardships at the terminus as it is not prepared to handle the massive footfall thanks to poor amenities.

Filthy toilets, poor housekeeping and stale food greet passengers at the CMBT. The facility is maintained by the Chennai Metropolitan Development Authority (CMDA). Munnar-bound passenger Ranjth said, "The housekeeping services at the terminus are very poor. The biggest problem is the smelly toilets, while the floors are dirty," he said.

During weekends, CMBT records an average footfall of two lakh passengers. However, it increases by one and half times during the festival season with long weekends like the Durga pooja holidays beginning Friday. Another passenger Anbu complained that the quality of food sold at the stalls in the terminus was not good and also costly. "The cost of a packet of tamarind rice is Rs 60 and it tastes poor. Passengers have no choice as they are left with no other option within the premises of the terminus," he added.

A visit to the place on Wednesday found water leaking from the ceiling near the bay for buses departing to southern districts. The terminus with a capacity to park 450 buses is likely to operate at least 3,000 buses, of which 1,000 are special ones, to different parts of the state from Thursday. The special buses have already started arriving at the terminus since Wednesday morning.

When contacted, officials at CMBT said adequate basic amenities are available at the terminus. There are no issues with housekeeping, the sources added.
Ahmedabad-Mumbai flight 'gets ticketless flyer': A bird
Saurabh Sinha| TNN | Updated: Sep 28, 2017, 07:05 IST

HIGHLIGHTS

The bird hopped inside the aircraft and is learnt to have remained under a seat in the front cabin.
Once the plane landed in Mumbai and the aircraft gate was opened, the bird flew out of the plane.
Sources said this unprecedented incident took place on August 21.

NEW DELHI: A bird taking to the skies is natural but not if it does so in an aircraft and that too in the front end of the passenger cabin! This flight of fancy reportedly took place on an Ahmedabad-Mumbai flight last month.

The bird hopped inside the aircraft at Ahmedabad airport and is learnt to have remained under a seat in the front cabin.

However by the time this ticketless passenger was spotted, the aircraft's nearest airport was Mumbai and so the crew decided to proceed to the destination. Once the plane landed in Mumbai and the aircraft gate was opened, the bird flew out of the plane.

TOP COMMENT  Thank GOD the bird was cultured enough so it did not cause any nuisance for fellow passengers unlike few human beings.Syed Masood Hassan

Sources said this unprecedented incident took place on August 21. A senior official of an airline on which sources claimed the bird flew said that the "same was never confirmed".


நடராஜன் தொடர்ந்து கவலைக்கிடம்: சசிகலா பரோல் கோரி விண்ணப்பிக்கவில்லை - கர்நாடக சிறைத்துறை அதிகாரி தகவல்

Published : 28 Sep 2017 07:56 IST

இரா.வினோத்பெங்களூரு



சசிகலாவின் கணவர் நடராஜன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதால், பரோலில் வெளியே வர சசிகலா விண்ணப்பித்து இருப்பதாக வெளியான தகவலை கர்நாடக சிறைத்துறை கூடுதல் டிஜிபி என்.எஸ்.மேக்ரிக் மறுத்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அன்றைய தினம் சசிகலாவின் கணவர் நடராஜன் சிறை வளாகத்துக்கு வந்திருந்தார்.அதன் பிறகு சசிகலாவை சந்திக்க அவர் பெங்களூரு சிறைக்கு வரவில்லை.


இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10-ம் தேதி நடராஜன் அனுமதிக்கப்பட்டார். அவரது கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழந்ததால் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து, நடராஜனை பார்க்க சசிகலா கர்நாடக சிறை நிர்வாகத்திடம் பரோலில் செல்ல அனுமதி கோரி இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.

இது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை கூடுதல் டிஜிபி என்.எஸ்.மேக்ரிக், 'தி இந்து'விடம் கூறியதாவது:

இதுவரை சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பிக்கவில்லை. கர்நாடக சிறைத்துறை விதிமுறைகளின்படி, ஒரு தண்டனை கைதி தனக்கு வழங்கப்பட்ட தண்டனையில் 3-ல் 2 பங்கு காலத்தை சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டும். அதன்பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறை நிர்வாகமும், நல்லெண்ண ஆலோசனை குழுவும் அனுமதி அளிக்கும் பட்சத்தில் பரோல் வழங்கப்படும்.

ஆனால் சசிகலா விவகாரத்தில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அதில் இன்னும் ஓராண்டு கூட முழுமையாக தண்டனை அனுபவிக்கவில்லை. எனவே சசிகலாவின் ரத்த உறவினருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டாலோ, வேறு ஏதேனும் அவசர தேவையாகவோ இருந்தால் சசிகலா ‘அவசர பரோல்' கேட்க முடியும்.

இதற்கு பெங்களூரு மாவட்ட அமர்வு நீதிமன்றம், சிறைத்துறை நிர்வாகம் மற்றும் நல்லெண்ண ஆலோசனை குழு அனுமதி அளிக்க வேண்டும். இந்த வகை பரோலில் 3 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை வெளியே செல்ல முடியும். சம்பந்தப்பட்ட கைதிக்கு எதிராக ஏதேனும் வழக்கு நிலுவையில் இருந்தாலும் பரோல் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்றார்.

இதனிடையே, சசிகலாவுக்கு நெருக்கமான பெங்களூருவை சேர்ந்த சிலர், ‘‘உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் சிறையில் சசிகலா உடல் எடை குறைந்து காணப்படுகிறார். தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையும் அவருக்கு எதிராக இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் நடராஜனை சென்று பார்க்க வேண்டுமா என யோசித்து வருகிறார். இருப்பினும் அவரது குடும்பத்தினருடன் கலந்து பேசி, பரோலில் செல்வது தொடர்பாக சசிகலாவே இறுதி முடிவெடுப்பார்’’என கூறுகின்றனர்.
அனிதா தற்கொலைக்கு வெளிப்புற அழுத்தம் காரணமா என்ற சந்தேகம் உள்ளது: ஆதிதிராவிட ஆணைய துணைத் தலைவர்

Published : 27 Sep 2017 16:35 IST



அனிதா

அரியலூர் மாணவி அனிதா மரணத்துக்கு வெளிப்புற அழுத்தம் காரணமா என்ற சந்தேகம் உள்ளது என ஆதிதிராவிட ஆணைய துணைத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "மாணவி அனிதா தற்கொலை குறித்த விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் அதை தமிழக அரசிடம் சமர்ப்பிப்போம். மாணவி அனிதா மரணத்துக்கு வெளிப்புற அழுத்தம் காரணமா என்ற சந்தேகம் உள்ளது.

வேளாண் படிப்பில் சேரத் தயாரான மாணவி அனிதா ஏன் தற்கொலை செய்துகொண்டார்? அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா என்று விசாரிக்க ஆணையத்திடம் கேட்டுள்ளோம். கல்வியில் எஸ்.சி., எஸ்,டி., மாணவர்களுக்கு 18% இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்துவருகிறோம்" என்றார்.

உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காத நிலையில் செப். 1-ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரில் இன்று 4-ஆவது ஒரு நாள் ஆட்டம் : வரலாறு படைக்குமா இந்தியா?
By DIN | Published on : 28th September 2017 01:03 AM |



பெங்களூரில் புதன்கிழமை பயிற்சியில் ஈடுபட்ட இந்திய கேப்டன் விராட் கோலி.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் பெங்களூரில் வியாக்கிழமை நடைபெறுகிறது.

இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெல்லும்பட்சத்தில் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வென்ற பெருமையைப் பெறும். இந்திய அணி தனது 926-ஆவது ஆட்டத்தில் மேற்கண்ட சாதனையை படைக்கும் வாய்ப்பை நெருங்கியுள்ளது.
இதுவரையில் 7 அணிகள் தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வாகை சூடியுள்ளன. ஆஸ்திரேலியா 6 முறையும், தென் ஆப்பிரிக்கா 5 முறையும், பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை ஆகிய அணிகள் தலா இரு முறையும், இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகியவை தலா ஒரு முறையும் தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளன. எனினும் தென் ஆப்பிரிக்கா தொடர்ச்சியாக 12 ஆட்டங்களில் வெற்றி கண்டதே இன்றளவும் சாதனையாக உள்ளது. 

கடந்த ஜூலைக்குப் பிறகு இந்திய அணி ஒரு நாள் ஆட்டத்தில் தோல்வியை சந்திக்கவில்லை. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணி வெளிநாட்டு மண்ணில் கடைசியாக விளையாடிய 11 ஆட்டங்களிலும் தோற்றுள்ளது.
தற்போதைய நிலையில் முதல் 3 ஆட்டங்களிலும் வெற்றி கண்ட இந்திய அணி, தொடரையும் கைப்பற்றிவிட்டது. எனவே இந்த ஆட்டத்தில் எவ்வித நெருக்கடியும் இன்றி இந்திய அணி களமிறங்கும். ஆனால் ஆஸ்திரேலிய அணி, இந்தத் தொடரில் எஞ்சிய இரு ஆட்டங்களிலும் தோற்குமானால், தரவரிசையில் இறக்கத்தைச் சந்திக்கும். அதாவது 3-ஆவது இடத்தில் இருந்து 4-ஆவது இடத்துக்கு தள்ளப்படும். எனவே கடும் நெருக்கடிக்கு மத்தியில் களமிறங்குகிறது ஆஸ்திரேலியா. 

வலுவான பேட்டிங்: இந்தியாவின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் தொடக்க வீரர்கள் அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா ஆகிய இருவரும் அபாரமாக ஆடி வருகின்றனர். கடந்த ஆட்டத்தில் ரஹானே 70, ரோஹித் சர்மா 71 ரன்கள் குவித்தனர். அவர்கள் இந்த ஆட்டத்திலும் இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் கேப்டன் விராட் கோலி, எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். கடந்த ஆட்டத்தில் முன்வரிசையில் களமிறங்கி 72 பந்துகளில் 78 ரன்கள் குவித்த ஹார்திக் பாண்டியா இந்த ஆட்டத்திலும் சோதனை அடிப்படையில் முன்வரிசையில் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. கடந்த 3 ஆட்டங்களிலும் வாய்ப்பு கிடைக்காத கே.எல்.ராகுல் இந்த ஆட்டத்தில் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் களமிறங்கும்பட்சத்தில் மணீஷ் பாண்டே நீக்கப்படுவார். 

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, பாண்டியா கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் கூட்டணியும் பலம் சேர்க்கிறது. இந்தூரில் நடைபெற்ற 3-ஆவது ஆட்டத்தின் ஆரம்பத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை வீழ்த்த முடியாமல் தடுமாறினாலும், கடைசிக் கட்டத்தில் அபாரமாக செயல்பட்டு அந்த அணியை கட்டுப்படுத்தினர். எனவே இந்த ஆட்டத்திலும் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரோன் ஃபிஞ்ச்: ஆஸ்திரேலிய அணி ஆரோன் ஃபிஞ்சின் வருகையால் நம்பிக்கை பெற்றுள்ளது. கடந்த ஆட்டத்தில் சதமடித்த அவர், இந்த ஆட்டத்திலும் சிறப்பாக ஆடி ரன் குவிக்க முயற்சிப்பார் என நம்பலாம். மற்றொரு தொடக்க வீரரான டேவிட் வார்னர், கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரும் ஓரளவு சிறப்பாக ஆடி வருகின்றனர். ஆரோன் ஃபிஞ்ச், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய 3 பேரும் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பு அமையும். 

மிடில் ஆர்டரில் டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும், அவர்களால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியவில்லை. இது அந்த அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பின்வரிசையில் மார்கஸ் ஸ்டோனிஸ் சிறப்பாக ஆடினாலும், அவருக்கு சரியான ஜோடி கிடைக்காததால், ஆட்டத்தின் போக்கை ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக திருப்பமுடியவில்லை.
கம்மின்ஸுக்கு ஓய்வு? வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் பட் கம்மின்ஸுக்கு ஓய்வளிக்கப்படலாம் என தெரிகிறது. அவருக்கு ஓய்வளிக்கப்படும்பட்சத்தில் ஜேம்ஸ் ஃபாக்னர் இடம்பெற வாய்ப்புள்ளது. 

மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான நாதன் கோல்ட்டர் நீல், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறார். சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஆஷ்டன் அகர் வலது கை சுண்டு விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து விலகிவிட்டார். அதனால் சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஆடம் ஸம்பாவையே நம்பியுள்ளது ஆஸ்திரேலியா.

இந்தியா (உத்தேச லெவன்): அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா.
ஆஸ்திரேலியா (உத்தேச லெவன்): டேவிட் வார்னர், ஆரோன் ஃபிஞ்ச், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), கிளன் மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்டோனிஸ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் (விக்கெட் கீப்பர்), பட் கம்மின்ஸ்/ஜேம்ஸ் ஃபாக்னர், நாதன் கோல்ட்டர் நீல், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஸம்பா.
மைதானம் எப்படி? 

பெங்களூரு சின்னசாமி மைதானம் ஓரளவு மெதுவான ஆடுகளமாக இருக்கும் என தெரிகிறது. சமீபத்திய காலங்களில் இங்கு நடைபெற்ற ஆட்டங்களில் ரன் குவிப்பது கடினமாக இருந்தது.
இந்த மைதானத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 6 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் இந்தியா 4 வெற்றிகளையும், ஒரு தோல்வியையும் சந்தித்துள்ளது. 

ஓர் ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை. 

மிரட்டும் மழை... 

பெங்களூரில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே போட்டி நடைபெறுவது வருண பகவானின் கையில்தான் உள்ளது.
ரோஹித் சர்மாவுக்கு ராசியான மைதானம்!

பெங்களூரு சின்னசாமி மைதானம் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மாவுக்கு ராசியான மைதானம் ஆகும். இங்கு 2013 நவம்பர் 2-இல் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா 158 பந்துகளில் 16 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 209 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

சங்கரன்கோவிலிருந்து பொறியியல் கல்லூரிக்கு பேருந்து இயக்கம்

By DIN | Published on : 28th September 2017 07:38 AM

சங்கரன்கோவிலிருந்து சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரிக்கு அரசுப் பேருந்து சேவையை புதன்கிழமை செய்தி - விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி ஆகியோர் தொடக்கிவைத்தனர்.

இந்த பேருந்து சங்கரன்கோவிலில் நாள்தோறும் காலை 7.40 மணிக்கு புறப்பட்டு, கழுகுமலை, குருவிகுளம் வழியே கல்லூரியை காலை 8.50 மணிக்கு வந்தடையும். இதுபோல கல்லூரி வளாகத்திருந்து மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு, சங்கரன்கோவிலுக்கு மாலை 5.20 மணிக்கு சென்றடையும். சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் ஆர். சோலைச்சாமி, தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி கிளை பொதுமேலாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவிலிருந்து கழுகுமலை வழியே கல்லூரிக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


NEWS TODAY 2.5.2024