Thursday, September 28, 2017

குழந்தையைக் கடத்திய சென்னை சிறுவனின் தந்திரம்! குறிவைத்துப் பிடித்த போலீஸ்

சகாயராஜ் மு




சென்னை தண்டையார்பேட்டையில், தெருவில் விளையாடிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்ட குழந்தையை, கொருக்குப்பேட்டை பகுதியில் காவல்துறையினர் மீட்டுள்ளனர். "விளையாட்டாக குழந்தையை சிறுவன் கடத்தியதாகக் கூறும் காவல்துறையினர், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சைக்கிளின் நிறத்தைச் சிறுவன் மாற்றியுள்ளான் என்று தெரிவித்துள்ளனர்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை, நேதாஜி நகர் 2-வது தெருவைச் சேர்ந்த முகமது இலியாஸ் என்பவரின் இரண்டரை வயது ஆண் குழந்தை முகமது சாது, நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தபோது சைக்கிளில் வந்த ஒரு சிறுவன், கடத்திச் சென்றான். குழந்தை காணாமல்போனது குறித்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் இலியாஸ் புகார் கொடுத்தார்.

பட்டப்பகலில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தால், இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனிடையே, குழந்தையைக் கடத்திய சிறுவனையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையில், நேதாஜி நகர் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, குழந்தை முகமது சாதுவை, சிறுவன் ஒருவன் ஆரஞ்சு நிற சைக்கிளில் வைத்துக் கொண்டுசெல்வது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, கொருக்குப்பேட்டை பகுதியில் சிறுவன் இருப்பதைக் கண்டறிந்த தனிப்படையினர், குழந்தையைப் பத்திரமாக மீட்டனர்.



இதையடுத்து, குழந்தையைக் கடத்திய சிறுவனிடம் நடத்திய விசாரணையில், தண்டையார்பேட்டை கார்னேஷன் நகரில் உள்ள கஸ்தூரிபா தெருவில் வசித்துவரும் கூலித் தொழிலாளி குமார் என்பவரின் மகன் என்பது தெரியவந்தது. விளையாடுவதற்காகவே, குழந்தையை சிறுவன் அழைத்துவந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், கடத்தலுக்குப் பயன்படுத்திய சைக்கிளின் நிறத்தை மாற்றியது ஏன் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். இதையடுத்து, குழந்தையைக் கடத்தியதாகக் கூறப்பட்ட சிறுவனை, காவல்துறையினர் கைதுசெய்தனர்.

இதைத் தொடர்ந்து, சென்னைப் பெருநகர கூடுதல் காவல் ஆணையர் ஜெயராமன், நேற்றிரவு தந்தை இலியாஸிடம் குழந்தை முகமது சாதுவை ஒப்படைத்தார். குழந்தை கிடைத்ததால் மகிழ்ச்சியில் திளைத்த பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் விட்டதோடு, காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
“ரத்தம் கக்கி சாவேன்னு மிரட்டுறாங்க!”- கிராமத்து திருவிழாவை செய்தியாக்கிய பெண் நிருபரின் அனுபவம்

ஷோபனா எம்.ஆர்




கோயில் திருவிழாவில் சடங்கு என்கிற பெயரில் சிறுமிகளை மேலாடை இல்லாமல் ஊர்வலமாக அழைத்துச்செல்வது பற்றி செய்தி வெளிட்ட பெண் பத்திரிகையாளர்களுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான மிரட்டல்களும் கொலை மிரட்டல்களும் வந்துகொண்டிருக்கின்றன. இந்தச் சம்பவம், பெண் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாகியிருக்கிறது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே இருக்கும் கிராமம் வெள்ளளூர். இங்கே உள்ள ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் நடத்தப்படும் சடங்கு சமூக ஆர்வலர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள 61 கிராமங்கள் சேர்ந்து நடத்தும் திருவிழாவில், 15 வயதுள்ள சிறுமிகளை மேல் சட்டையில்லாமல் ஊர்வலமாக அழைத்துச் செல்கிறார்கள். இதுபற்றி ‘தி கோவை போஸ்ட்’ என்ற செய்தி இணையதளம், வீடியோ ஒன்றை கடந்த ஞாயிற்றுகிழமை வெளியிட்டிருந்தது.

இதுகுறித்து அந்தச் செய்தி வெளிட்ட பத்திரிகையாளர் மெய்யம்மையிடம் பேசினோம். “நான் மதுரையைச் சேர்ந்தவள். அந்த அம்மன் கோவிலில் நடக்கும் இந்தத் திருவிழாப் பற்றி எனக்குத் தெரியும். 15 வயதுடைய வளரிளம் சிறுமிகளை, மேல் சட்டையைக் களைந்து ஊர்வலமாக அழைச்சுட்டுப் போவாங்க. அந்தச் சிறுமிகளை ஏழு நாள்களுக்குக் கோவில் பூசாரியுடன் தங்கவைப்பாங்க. இதை, கடந்த ஞாயிற்றுகிழமை செய்தியாக வெளியிட்டேன். திங்கட்கிழமை முதல் எனக்கு போன் மூலமாகவும் ஃபேஸ்புக் மூலமாகவும் பாலியல் ரீதியான மிரட்டல்களும் கொலை மிரட்டல்களும் வர ஆரம்பிச்சது.

நான் எந்த மத நம்பிக்கைகளுக்கும் எதிரானவள் இல்ல. ஆனால், அந்தச் சிறுமிகளுக்குப் பூப்பெய்தும் வயது இது. கிட்டதட்ட 50,000 பேர் கூடும் ஒரு திருவிழாவில், இப்படி மேலாடை இல்லாமல் ஊர்வலமாக கூட்டிட்டுப்போறது கொடுமையானது. அந்தத் திருவிழாவை நான் நேரடியாகப் பார்த்தேன். அங்கே இருந்தவங்களே செல்போனில் அந்தச் சிறுமிகளைப் படம்பிடிக்கிறாங்க. அந்த சிறுமிகளின் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கலெக்டர்கூட அந்தச் சிறுமிகளுக்கு மேலாடை போட்டு, திருவிழா நடத்துங்கனு சொன்னாரு. ஆனா, அது எங்க வழக்கத்துக்கு மாறானதுனு மறுத்துட்டாங்க. இதெல்லாம் எனக்குப் பெரிய அதிர்ச்சியா இருந்துச்சு. அதனாலதான், இதைச் செய்தியாக்கினேன். எனக்குத் தொடர்ந்து மிரட்டல் வரவே, ஃபேஸ்புக் பக்கத்தை டிஆக்டிவேட் செய்துட்டேன்” என்கிறார்.

அந்தச் செய்தி நிறுவனத்தின் ஆசிரியரான வித்யாஸ்ரீ தர்மாராஜிக்கும் மிரட்டல் வந்துகொண்டிருக்கிறது. “எனக்கு திங்கட்கிழமை இரவு ஒரு கால் வந்துச்சு. அவங்களின் கோயில் திருவிழா பற்றி அவங்களுடைய நியாயத்தைப் பேசினாங்க. நானும் என் தரப்பைச் சொல்லிட்டிருந்தேன். ஆனால், அதற்கடுத்த ராத்திரி முழுக்க பல அழைப்புகள் வந்துட்டே இருந்துச்சு. 'ரத்தம் கக்கி சாவே', “உங்க இணையதளத்தையே ஹேக் செஞ்சுடுவோம்’னு பல வகையில் மிரட்டினாங்க. நேற்று (செவ்வாய்கிழமை) மதியம், சைபர் கிரைமில் புகார் கொடுத்திருக்கோம். அவர்கள் இணையதளம் கால் வழியே பேசியிருக்காங்க. இதை Voice over Internet Protocol தொழில்நுட்பம்னு சொல்வாங்க. இதைப் பயன்படுத்தி போன் செய்தால், 12 எண்கள் காட்டும். அதனால் கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்னு சொன்னாங்க. இதற்கு காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கும்னு நம்புறேன்.

ஆனா, நாங்க யாரையும் புண்படுத்துறதுக்கு இந்த செய்தியை வெளியிடலை. நாங்கள் குழந்தைகள் பாதுகாப்பைத்தான் வலியுறுத்துறோமே தவிர, எந்த மத நம்பிக்கைகளுக்கும் சடங்குகளுக்கும் எதிரான நோக்கத்தில் இதை வெளியிடலை'' என்றார் ஆதங்கத்துடன்.
கணக்கில் வராத விடுமுறை! மூன்று நாள்கள் பிரச்னைக்கு முடிவு கேட்கிறது பெண்கள் பாதுகாப்பு சங்கம்
vikatan



பெண்களுக்கு எவ்வளவுதான் பிரச்னைகள் ஏற்பட்டாலும் அவற்றைச் சமாளித்துவிடும் சக்தியும், எண்ணமும் கட்டாயம் அவர்களுக்கு இருக்கும். ஆனால், மாதந்தோறும் ஏற்படும் மாதவிலக்குப் பிரச்னையை எதிர்கொண்டு, அதனைச் சமாளிக்கக்கூடிய சக்தியை இன்னமும் பெண்கள் கற்றுகொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். பெண்களுக்கு குறிப்பிட்ட அந்த நேரங்களில் ஏற்படும் வலி, மனரீதியான அழுத்தம் (Mood swings). கோபம், சோர்வு என எல்லா பிரச்னைகளையும் சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். நவீன மருத்துவம், வளர்ந்து விட்ட விஞ்ஞான தொழில்நுட்பம் என்று என்னதான் நாடுவளர்ச்சியடைந்துள்ள போதிலும், பெண்களின் இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வு மட்டும் கிடைக்கவில்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் பெண்கள்தங்களின் வலியையும், பிரச்னையையும் வெளிக்காட்டாமல் இருந்தாலும், மாதந்தோறும் ஏற்படும் உடல்ரீதியான மாற்றங்களால் பல பிரச்னைகள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.


பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் நாள்களில் விடுமுறை வழங்க வேண்டும் என்று பலரும் போராடி வருகிறார்கள். அதுபோன்ற வலியுறுத்தலை 'தமிழர் சுதேசி பெண்கள் பாதுகாப்புச் சங்கம்' தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 2015-ம் ஆண்டில் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்ட இந்த அமைப்பினர், தமிழக முதல்வரின் முதன்மைச் செயலருக்கு அளித்த மனுவில், "பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் மூன்று நாள்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். தற்போதைய உணவுப் பழக்கவழக்கத்தால் 10 முதல் 13 வயதிலேயே பெண் குழந்தைகள் பூப்பெய்தி விடுகிறார்கள். இதுபோன்ற சூழலில், பெண் குழந்தைகளுக்கு போதிய விழிப்பு உணர்வு இருப்பதில்லை. தவிர, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகளும் போதியளவு இருப்பதில்லை.

சில நேரங்களில் சக மாணவர்கள், ஆசிரியர்களால் மாணவிகள் கிண்டல், கேலிக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. இதேபோல், தனியார் மற்றும் அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு, அந்த காலகட்டங்களில் வெளியே சொல்ல முடியாத பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகும் நிலையும் உள்ளது. சில வெளிநாடுகளில் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு மூன்று நாள்கள் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அண்டை மாநிலமான கேரளாவிலும் இந்த காலத்தில் விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனவே, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நலன்கருதி, தனியார் மற்றும் அரசுத்துறைக்கும், அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மாதவிடாய் காலங்களில் மூன்று நாள் விடுமுறை அளிக்க வழிவகை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து 'தமிழர் சுதேசி பெண்கள் பாதுகாப்புச் சங்க' தலைவர் கலைச்செல்வியைத் தொடர்புகொண்டு பேசினோம், "எங்கள் சங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளாக பெண்கள் நலனுக்காகப் போராடி வருகிறது. சங்கத்தில் மேலும் பலரும் பெண்களுக்கு மூன்றுநாள் விடுமுறை கோரி தொடர்ந்து போராடி வருகிறார்கள். சங்கத்தின் சார்பில் பல அறவழிப் போராட்டங்களை நடத்தியுள்ளோம். பள்ளி மாணவி ஒருவர், மாதவிடாய் காலத்தில் விடுப்பு எடுத்ததற்காக, அந்த மாணவியை அடித்து துன்புறுத்தியது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன.மாணவிகள் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்ளக் கூடாது என்பதற்காகவே நாங்கள் போராடுகிறோம். மூன்று நாள்கள் விடுமுறை அளிக்க இயலாவிட்டாலும், ஒரு நாளாவது விடுப்பு அளித்தால், பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்" என்றார்.

தனியார் மற்றும் அரசுத் துறைகளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காவிட்டாலும்கூட, பெண்கள் தங்களின் மாதாந்திர உடல்ரீதியான பிரச்னைகளுக்காக விடுப்பு எடுக்கும்போது, அதை உயர் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டாலே போதுமானது. அப்படிச் செய்வதால், மற்ற நாள்களில் பெண்கள் தங்களின் பணிநேரத்தைப் பயனுள்ளதாக அமைத்துகொள்ள முடியும். தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் மயம் என்று உலக அளவில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டாலும், பெண்களுக்கே உரித்தான இயற்கையான உபாதைகள் மாறப்போவதில்லை. அந்த நாள்களில் பெண்களால் தங்களின் பணியை திட்டமிட்டுச் செய்ய இயலாத நிலைதான் இன்றளவும் உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, வீடுகளிலும், அலுவலகங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களிலும் பெண்களுக்கு சிரமங்களை அளிக்காத வகையில் பணி வழங்கினாலே, அவர்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருக்கும்.
கன்னியாகுமரியில் 10 எஸ்.பி.ஐ வங்கிக் கிளைகள் மூடல்..! பொதுமக்கள் அதிருப்தி

த.ராம் ரா.ராம்குமார்

ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் என்கிற எஸ்.பி.டி உள்பட 5 அசோசியேட் வங்கிகள், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு விட்டன. இந்த இணைப்பு, கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. வங்கிகள் இணைப்பைத் தொடர்ந்து, குமரி மாவட்டத்தில் ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியாவின் ஒரு கிளையும், ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவிதாங்கூரின் 9 கிளைகளும் மூடப்படும் நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளன. அதைத் தொடர்ந்து, எஸ்.பி.டி உள்ளிட்ட 5 அசோசியேட் வங்கிகளின் பணியாளர்கள் கட்டாயமாக ஓய்வுபெற்றுச் செல்லும் வகையில் வி.ஆர்.எஸ் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.




கேரளாவில், மொத்தம் உள்ள 852 எஸ்.பி.டி வங்கிக் கிளைகளில் 204ஐ மூடவும், இதே போன்று தமிழகத்தில் மொத்தம் 176 கிளைகளில் 58 கிளைகளை மூடவும் திட்டமிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில், ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவிதாங்கூரின் கிளைகள் 37 இருக்கின்றன. இதில் எஸ்.பி.டி 9 மற்றும் எஸ்.பி.ஐ ஒன்று என மொத்தம் 10 கிளைகள் மூடப்படுகின்றன. அதோடு, ஸ்டேட் பேங்க ஆஃப் திருவிதாங்கூரின் மண்டல அலுவலகமும் மூடப்படுகிறது.

அதைப்போன்று ஏ.டி.எம்-களும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், வங்கிக் கிளைகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருவதால், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியும் எதிர்ப்பும் நிலவுகிறது.

கல்விச் செய்தி: 7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்து...

கல்விச் செய்தி: 7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்து...: மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக் குழுவின்படி மாநில அரசு ஊழியர்களுக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஊதிய முரண்பாடு ஆய்வுக் குழ...
7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்துக்குள் அமல்?
மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக் குழுவின்படி மாநில அரசு ஊழியர்களுக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஊதிய முரண்பாடு ஆய்வுக் குழு தனது பரிந்துரையை முதல்வரிடம் நேற்று வழங்கியது. மத்திய அரசு ஒவ்வொரு 5 ஆண்டுக்கு பிறகும், அதன் ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றி அமைத்து வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை 1988ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் 10 ஆண்டுக்கு ஒரு முறை ஊதியம் மற்றும் முரண்பாடுகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி 2006ம் ஆண்டு 6வது ஊதியக் குழு அமலுக்கு வந்தது. அதன் படி 2007ம் ஆண்டு பணப்பயன் வழங்கப்பட்டது. அதற்கு பிறகு வந்த 7வது ஊதியக் குழுவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது.

7வது ஊதியக் குழுவில் தெரிவிக்கப்பட்ட ஊதிய உயர்வு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது அவசர அவசரமாக இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டது. அப்போது ஊதியத்தில் முரண்பாடுகள் இருப்பதாக ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.

அதனால் 2008-2009ம் ஆண்டு ஊதிய முரண்பாடுகளை ஆய்வு செய்து அதில் குறைகளை களைய அரசுச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையின் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. ஆனால் அதில் திருப்தி ஏற்படாத நிலையில் கிருஷ்ணன், உதயசந்திரன் ஆகியோர் அடங்கிய 3 நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த குழு ஊதிய முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வந்தனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் ஊதிய முரண்பாடுகள் குறித்து முடிவு எட்டப்படாமல் இருந்தது. ஊதிய பிரச்னைகள் நீடித்து வந்தது. இதையடுத்து, நிதித் துறை செயலாளர் சண்முகம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கோரிக்கைகளை அந்த குழு கேட்டுவாங்கியது. ஆனால், இதுவரை பரிந்துரை அமல்படுத்தப்படாமல் இருக்கிறது. இதையடுத்து, அப்போது முதல்வராக இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

இதற்கிடையே, பழைய ஓய்வு ஊதியத்தை கொண்டு வருதல், தொகுப்பு ஊதியம், தற்காலிக பணியில் வேலை செய்வோருக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை பெற்று அதை அமல்படுத்த வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடந்த இரண்டு மாதங்களாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் உச்சக்கட்டமாக தொடர் வேலை நிறுத்தத்தையும் செய்தனர். இதற்கு அனைத்து தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி, தமிழகமே பெரும் போர்க்களம் போல மாறியது.இந்நிலையில், கடந்த 6ம் தேதி ஈரோட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஜாக்டோ-ஜியோவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை பெற்று நவம்பர் 30ம் தேதிக்குள் அந்த பரிந்துரைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரிவித்தார்.

அதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் மதுரையை சேர்ந்த சேகரன் என்ற வக்கீல் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் ஜாக்டோ-ஜியோவினர் தெரிவித்த கருத்துகளை ஏற்ற நீதிமன்றம் அரசு தலைமைச் செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.

இதன்படி கடந்த 15ம் தேதி அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, வரும் 30 ம் தேதிக்குள் சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல் செய்ய ேவண்டும் என்று நீதி மன்றம் தெரிவித்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை நிதித்துறை செயலாளர் நேற்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அளித்துள்ளார்.

கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தும் தேதியை கோர்ட்டில் அக்டோபர் 13 ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட் கிளை கூறியிருந்தது; இதன்படி, கோர்ட்டில் தேதியை அறிவிக்கும் என்றும் புதிய சம்பள விகிதத்தை நவம்பர் 30ம் தேதிக்குள் அமல்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அமல்படுத்தினால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 25 சதவீதம் வரை ஊதியம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 COURTESY: kALVISEITHI

Anna University relaxes arrear rule

Those who joined in 2010 and earlier can write exams next year

Anna University has decided to give a one-time exemption from its earlier decision to disallow students who joined in 2010 and earlier from taking up arrear exams.
Minister for Higher Education K.P. Anbalagan said on Wednesday that the government has granted an extension to the students on humanitarian grounds.
“Students are generally given a maximum of of seven years to finish their arrears and complete their degree. However, those who have exhausted this window will be permitted to write their examination for only two semesters — sometime around February 2018 and August 2018 — as a special case,” he said.
One centre in each district
A schedule for the arrear examinations and details of registration for the subjects, including the process to pay examination fees, will be announced at a later date and the exam will be conducted at one centre in every district.
Earlier this year, the university had decided to implement the UGC norm that specifies that the engineering candidates and architecture students should complete their degree within seven and eight years of joining respectively.
The reason given for implementing the norm was that conducting arrear examinations for a long period of time affected the regular academic schedule and curtailed vacation time for regular students. When the university released the timetable for the November/ December semester, it did not contain details of exams for students of those who had joined in 2010 and before. Mr. Anbalagan further said that there were approximately around 40,000 students who had joined in 2010 and before who had to clear their arrears.
“As no further chance will be given to students from the category, they should utilise this opportunity and take utmost care to clear all the subjects,” he added.

NEWS TODAY 22.04.2024