Wednesday, November 1, 2017

'டெபிட் கார்டில்' மின் கட்டணம் : புதிய சேவையை அமைச்சர் துவக்கினார்
சென்னை: ''மழை காலத்தில், பாதுகாப்பு நடவடிக்கைக்காக, வீடுகளில் மின் சப்ளை நிறுத்தப்படுகிறது,'' என, மின் துறை அமைச்சர், தங்கமணி தெரிவித்தார்.

மின் கட்டண மையங்களில், 'டெபிட் கார்டு' பயன்படுத்தி, 'ஸ்வைப்பிங் மெஷின்' வாயிலாக, மின் கட்டணம் செலுத்தும் சேவையை, அமைச்சர் தங்கமணி, சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில், நேற்று துவக்கி வைத்தார். அதில், எரிசக்தி துறை செயலர், விக்ரம் கபூர், மின் வாரிய தலைவர், சாய்குமார் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின், அமைச்சர் தங்கமணி கூறியதாவது:தமிழகத்தில், தடையில்லாமல் மின் சப்ளை செய்யப்படுகிறது. தற்போது, மழை காலம் என்பதால், புயல் மற்றும் காற்று வேகமாக வீசும்போது, மக்களின் பாதுகாப்பிற்காக, வீடுகளில் மின் தடை செய்யப்படுகிறது. மழை நின்றதும், மீண்டும் மின் சப்ளை துவங்கும். இனி, நுகர்வோர், மின் கட்டண மையங்களில், டெபிட் கார்டு பயன்
படுத்தி, எளிதில் கட்டணத்தை செலுத்தலாம். இந்த சேவையை, முதல் கட்டமாக, சென்னை, மயிலாப்பூரில் உள்ள, 16 கட்டண மையங்களில் பெறலாம். விரைவில், அனைத்து மையங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட இருக்கிறது.எளிய வகையில், வணிக மின் திட்டத்தின் கீழ், 'ஜி.எம்.ஆர்., கிருஷ்ணகிரி' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, அந்நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டம், உதனப்பள்ளியில் அமைக்க உள்ள தொழில் பூங்காவுக்கு, தனி வழித்தடத்தில், தடையில்லா மின் சப்ளை செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பிப்ரவரியில் இடமாற்றம்! : மின் வாரிய அலுவலகங்களில் பலர் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் பணி செய்வோரை இடமாற்றம் செய்ய, மின் வாரியம், செப்., மாதம் உத்தரவிட்டது. இது, அரசியல் செல்வாக்கு உள்ள, சில அதிகாரிகளுக்கு பிடிக்கவில்லை. அவர்களின் வலியுறுத்தலால், இடமாற்ற உத்தரவுக்கு காரணமான, மின் வாரிய விஜிலென்ஸ் டி.ஜி.பி.,யாக இருந்த மகேந்திரனை, சமீபத்தில் இடமாற்றம் செய்தனர். இந்நிலையில், அமைச்சர் தங்கமணி, 'மூன்று ஆண்டுகளுக்கு, ஒரே இடத்தில் 
உள்ளவர்களின் இடமாற்ற உத்தரவு, வரும் பிப்., முதல் அமல்படுத்தப்படும்' என நேற்று தெரிவித்தார்.

ரயில்களின் நேரம் மாற்றம் இன்று முதல் அமல்

சென்னை: தெற்கு ரயில்வே கால அட்டவணை, நேற்று வெளியிடப்பட்டது. சென்னை, சென்ட்ரல் - பழநி எக்ஸ்பிரஸ் உட்பட, மூன்று ரயில்கள், முக்கிய நகரங்கள் இடையே நீட்டிக்கப்பட்டுள்ளன. இவை, இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

நீட்டிக்கப்பட்டுள்ள ரயில்கள்:

 சென்னை, சென்ட்ரலில் இருந்து பழநிக்கு இயக்கப்படும், எக்ஸ்பிரஸ் ரயில், கேரள மாநிலம், பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், சென்ட்ரலில் இருந்து, இரவு, 9:40 மணிக்கு புறப்பட்டு, மறு நாள் காலை, 11:00 மணிக்கு, பாலக்காடு சென்றடையும். அங்கிருந்து, மாலை, 3:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 4:15 மணிக்கு, சென்ட்ரல் வந்தடையும்
 எழும்பூர் - திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கொல்லம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், எழும்பூரில் இருந்து, இரவு, 7:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம், 1:00 மணிக்கு, கொல்லம் சென்றடையும். அங்கிருந்து மாலை, 3:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 8:05 மணிக்கு, எழும்பூர் வந்தடையும்
 திருவனந்தபுரம் - பாலக்காடு அமிர்தா எக்ஸ்பிரஸ், பொள்ளாச்சி, பழநி வழியாக, மதுரைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், திருவனந்த புரத்தில், இரவு, 10:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம், 1:10 மணிக்கு, மதுரை சென்றடையும். மதுரையில் இருந்து, மாலை, 3:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 6:25 மணிக்கு, திருவனந்தபுரம் சென்றடையும்
 தஞ்சாவூர் - கும்பகோணம் பயணியர் ரயில், மயிலாடுதுறை வரையும், நாகூர் - திருச்சி பயணியர் ரயில், காரைக்கால் வரையும், திருச்செந்துார் - பழநி பயணியர் ரயில், பாலக்காடு வரையும் நீடிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் - மன்னார்குடி மன்னை எக்ஸ்பிரஸ், மார்ச், 1 முதல் பாதை மாற்றி, திருவாரூர், நீடாமங்கலம், மன்னார்குடி வழியாக, இயக்கப்பட உள்ளது என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரேஷன் கடையில் சர்க்கரை இன்று முதல் கிலோ ரூ.25

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில், கிலோ சர்க்கரை, 13.50 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு விற்கப்பட்டது. அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும், சர்க்கரை வாங்கினர். இந்நிலையில், இன்றுமுதல், சர்க்கரை விலையை, 25 ரூபாயாக உயர்த்த, தமிழக அரசு, சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி, இன்று முதல், சர்க்கரை விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சர்க்கரை விலை உயர்வால், ரேஷன் ஊழியர் - மக்கள் இடையில், பிரச்னை ஏற்படக் கூடாது என்பதற்காக, கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், புதிய விலை பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மிகவும் வறுமையில் உள்ள, 'அந்தியோதயா' ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கிலோ சர்க்கரை, 13.50; காவலர் கார்டுகளுக்கு, 12.50; மற்ற அனைத்து கார்டுதாரர்களுக்கும், 25 ரூபாய்க்கு விற்கப்படும். இந்த விலை உயர்வு, இன்று நடைமுறைக்கு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

அனுமதியின்றி உயர் கல்வி படித்த ஆசிரியர்களுக்கு, 'கிடுக்கிப்பிடி'


அரசின் அனுமதி பெறாமல், உயர் கல்வி படித்த, 4,300ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பணியில் இருக்கும் போது, மேற்படிப்பு படிக்க, பாஸ்போர்ட் எடுக்க, வெளிநாடு செல்ல மற்றும் சொத்துகள் வாங்க, அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாவிட்டால், சம்பந்தப்பட்டோர் மீது, 'சஸ்பெண்ட், டிஸ்மிஸ்' உள்ளிட்ட, பல நடவடிக்கைகள் பாயும். இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறையில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும், 4,300 ஆசிரியர்கள், தங்கள் துறையின் முன் அனுமதி பெறாமல், உயர் கல்வி படித்துள்ளனர்.படித்து முடித்த பின், பின் ஏற்பு அனுமதி தரும்படி, கல்வித் துறைக்கு கடிதம் கொடுத்துள்ளனர்.
இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, துறை செயலரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து, முன் அனுமதி பெறாதவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய, தொடக்கக் கல்வி இயக்குனரகத்துக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதனால், நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், சங்க நிர்வாகிகளை அணுகி வருகின்றனர்.

- நமது நிருபர் -
சென்னை புறநகரின் பல பகுதிகளில் பாதிப்பு சுரங்கப்பாதையில் மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து துண்டிப்பு



சென்னை புறநகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சுரங்கப்பாதையில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 01, 2017, 04:15 AM

ஆலந்தூர்,

சென்னை புறநகர் பகுதிகளான கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம் புழுதிவாக்கம், வேளச்சேரி, கீழ்க்கட்டளை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை பலத்த மழை கொட்டியது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது.

ஆலந்தூரில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி இருந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மடிப்பாக்கம்–புழுதிவாக்கம் ராம்நகர் வடக்கு பகுதியில் உள்ள 10–க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய்கள் சரியாக தூர்வாரப்படாததால் தண்ணீர் செல்ல வழியின்றி கழிவு நீருடன் தேக்கம் அடைந்துள்ளது.

ஒரே நாளில் பெய்த மழையிலேயே முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி இருப்பதால் மீண்டும் மழை பெய்தால் வீடுகளை விட்டு வெளியேறக்கூடிய நிலை ஏற்படும் என்ற அச்சத்தில் இருப்பதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து தண்ணீரை அகற்றி நிரந்தரமாக வடிகால்வாய்களை அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.

வேளச்சேரி பாரதி நகர், உதயம் நகர் போன்ற பகுதிகளிலும் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கி இருந்ததால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. கீழ்கட்டளை காசிவிஸ்வநாதபுரம் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. கோவிலம்பாக்கம் என்ஜீனியர்ஸ் அவென்யூ பகுதியில் உள்ள ஓடை தூர் வாரப்படாததால் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது.

கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் உள்ள சுரங்கப்பாதை வழியாக போரூர், வடபழனி போன்ற பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த சுரங்கப்பாதை மழைநீரினால் குளம்போல் நிரம்பியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்வோர் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மின்மோட்டார் மூலம் அங்கு இருக்கும் தண்ணீரை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் அகற்றப்படாததே மழைநீர் தேங்குவதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினார்.
தலையங்கம்
எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆச்சு?




நவம்பர் 01 2017, 03:00 AM

பொதுவாக மத்திய–மாநில அரசாங்கங்கள் வளர்ச்சித்திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள், கல்வித் திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுகின்றன. இதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டு அதை நிறைவேற்றுவதற்கென நிதியும் ஒதுக்கப்படுகிறது. ஆனால், நிர்வாக காரணங்களினால் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டும், அதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டும், பல திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்படாமலும், தொடக்கத்தையே காணாமலும் அப்படியே தேங்கிக்கிடக்கின்றன. பொதுவாக நிதி ஒதுக்கும்போது, அன்றைய மதிப்பீட்டின் அடிப்படையில்தான் ஒதுக்கப்படுகிறது. ஆனால், இப்படி காலதாமதமாவதால் பொதுவான விலையேற்றத்தின் காரணமாக இந்த திட்டமதிப்பீடும் உயர்ந்துவிடுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது. இதுபோன்ற நிலைமைகளை தவிர்க்க, மத்திய அரசாங்கம் இப்போது புதிதாக செயல்படு!, நிதி பெறு! என்றவகையில், ‘‘சவால் திட்டம்’’ ஒன்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் அடிப்படையில், எந்தவொரு திட்டத்தையும் குறிப்பிட்ட காலத்திற்குள் அதற்கான அனைத்து அனுமதிகளையும் வழங்கி நிறைவேற்றும் மாநிலங்களுக்கு பரிசாக கூடுதல் நிதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரெயில்வே, சாலை வசதி, மின்சாரம், புதுப்பிக்கத்தக்க மின்சாரம், ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவை முதல்கட்டமாக இந்தத்திட்டத்தின்கீழ் எடுக்கப்படுகின்றன. இதுபோன்ற திட்டங்களுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கும்போது 20 முதல் 30 சதவீதம்வரை தனியாக வைக்கப்படுகிறது. நிலம் ஒப்படைத்தல் உள்பட பல்வேறு அனுமதிகளை வழங்கி திட்டங்களை குறித்தநேரத்தில் நிறைவேற்றும் மாநிலத்திற்கு, கூடுதலாக அந்தத்தொகையை ஒதுக்கிட இந்த புதிய திட்டம் வகை செய்கிறது. ‘‘சவால் திட்டம்’’ என்று அழைக்கப்படும் இந்தத்திட்டம் மாநிலங்களுக்கு இடையே மத்திய அரசாங்கத்தின் பல உள்கட்டமைப்பு வசதி திட்டங்களை நிறைவேற்றுவதில் ஒரு ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயமாக இந்தத்திட்டம் வரவேற்கத்தகுந்த ஒரு திட்டமாகும். மாநிலஅரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு இந்த ‘‘சவால் திட்டம்’’ கொண்டு வருவது சரிதான். ஆனால், மத்திய அரசாங்கம் அறிவித்த பல திட்டங்கள் தொடங்கப்படாமல் தாமதமாகிக் கொண்டிருப்பதற்கு மத்திய அரசாங்கம் என்ன பதில் சொல்லப்போகிறது?. குறிப்பாக தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று அறிவித்த திட்டம் 2 ஆண்டுகளாக எங்கு தொடங்கப்படும்? என்று இடம் தேர்வு செய்யப்படாத நிலையில் இருக்கிறது.

2014–15–ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தத்திட்டத்திற்காக 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக அனுப்பவேண்டும். அந்த 5 இடங்களில் ஒரு இடத்தை மத்திய அரசாங்கம் தேர்வுசெய்து, அதற்கான பணிகளை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இது ஒரு ஆயிரம் கோடி ரூபாய் திட்டம். மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா இந்த எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழ்நாட்டில் தொடங்கவேண்டும் என்பதில் அதிக ஆர்வத்தோடு இருந்தார். உடனடியாக அனைத்து வசதிகள் குறிப்பாக சாலை வசதி, தண்ணீர் வசதி, மின்சார வசதிகொண்ட 5 இடங்கள் செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிங்கிப்பட்டி, மதுரை மாவட்டத்தில் உள்ள தோப்பூர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் 200 ஏக்கர் நிலத்தையும் அடையாளம் கண்டு மத்திய அரசாங்கத்திற்கு தமிழக சுகாதாரத்துறை அனுப்பி வைத்தது. இந்த இடத்தை தேர்வுசெய்ய மத்திய அரசாங்கத்தின் குழுவும் வந்து 5 இடங்களையும் பார்த்துவிட்டு சென்றுவிட்டது. மேலும் அனைத்து அலுவலக நடைமுறைகளும் நடந்துள்ள நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. இது மதுரையில் அமைய வாய்ப்பு இருப்பதாக இல.கணேசன் எம்.பி. கூறுகிறார். மத்திய அரசாங்கம் உள்கட்டமைப்பு வசதி திட்டங்களுக்கு ‘‘சவால் திட்டம்’’ கொண்டுவரும் நிலையில், அவர்கள் நிறைவேற்றவேண்டிய இந்த எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பை உடனடியாக அதிகாரபூர்வமாக வெளியிடவேண்டும். பணிகளை தொடங்கவேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் கோரிக்கையாகும்.

Madras HC allows filing of IT returns without Aadhaar

Sureshkumar| TNN | Oct 31, 2017, 23:12 IST


The petitioner also pointed out similar petitions had been allowed by Kerala high court permitting such petiti... Read More

CHENNAI: As the law mandating linking income taxreturns with Aadhaar is still to be put to litmus test by the Supreme Court, Madras high court on Tuesday allowed a petitioner to file her income tax returns without quoting Aadhaar number or Aadhaar enrolment number.

Justice T S Sivagnanam, posting the case to December 18, passed the interim order on a plea moved by Preethi Mohan. She had moved the plea relying upon the apex court decision in Binoy Viswam Vs Union of India case, in which the court had imposed a partial stay on operation of section 139AA of the Income Tax Act, which mandates linkage of Aadhaar with IT returns.

In his interim ruling, Justice Sivagnanam said: "I am inclined to grant a similar relief, since today being the last day for filing income tax returns. If the returns are filed belatedly and if ultimately, the matter decided by the Constitution Bench of Supreme Court against the petitioner, then she may be liable to pay interest for belated payment of tax.

"Accordingly, there will be an interim direction to the income tax department to permit the petitioner to file her returns for the assessment year 2017-18 either manually or through appropriate e-filing facility without insisting for Aadhaar number," he said.

It was submitted on behalf of the petitioner that the directions issued by the Supreme Court in the case made it clear that Aadhaar scheme was always meant to be voluntary. "But despite a partial stay imposed by the apex court, the income tax department was acting in a manner directly opposed to the court order and are demanding linkage of Aadhaar," counsel said.

The petitioner also pointed out similar petitions had been allowed by Kerala high court permitting such petitioners to file returns manually without quoting Aadhaar number or enrolment number.

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...