Wednesday, November 1, 2017


ரயில்களின் நேரம் மாற்றம் இன்று முதல் அமல்

சென்னை: தெற்கு ரயில்வே கால அட்டவணை, நேற்று வெளியிடப்பட்டது. சென்னை, சென்ட்ரல் - பழநி எக்ஸ்பிரஸ் உட்பட, மூன்று ரயில்கள், முக்கிய நகரங்கள் இடையே நீட்டிக்கப்பட்டுள்ளன. இவை, இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

நீட்டிக்கப்பட்டுள்ள ரயில்கள்:

 சென்னை, சென்ட்ரலில் இருந்து பழநிக்கு இயக்கப்படும், எக்ஸ்பிரஸ் ரயில், கேரள மாநிலம், பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், சென்ட்ரலில் இருந்து, இரவு, 9:40 மணிக்கு புறப்பட்டு, மறு நாள் காலை, 11:00 மணிக்கு, பாலக்காடு சென்றடையும். அங்கிருந்து, மாலை, 3:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 4:15 மணிக்கு, சென்ட்ரல் வந்தடையும்
 எழும்பூர் - திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கொல்லம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், எழும்பூரில் இருந்து, இரவு, 7:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம், 1:00 மணிக்கு, கொல்லம் சென்றடையும். அங்கிருந்து மாலை, 3:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 8:05 மணிக்கு, எழும்பூர் வந்தடையும்
 திருவனந்தபுரம் - பாலக்காடு அமிர்தா எக்ஸ்பிரஸ், பொள்ளாச்சி, பழநி வழியாக, மதுரைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், திருவனந்த புரத்தில், இரவு, 10:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம், 1:10 மணிக்கு, மதுரை சென்றடையும். மதுரையில் இருந்து, மாலை, 3:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 6:25 மணிக்கு, திருவனந்தபுரம் சென்றடையும்
 தஞ்சாவூர் - கும்பகோணம் பயணியர் ரயில், மயிலாடுதுறை வரையும், நாகூர் - திருச்சி பயணியர் ரயில், காரைக்கால் வரையும், திருச்செந்துார் - பழநி பயணியர் ரயில், பாலக்காடு வரையும் நீடிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் - மன்னார்குடி மன்னை எக்ஸ்பிரஸ், மார்ச், 1 முதல் பாதை மாற்றி, திருவாரூர், நீடாமங்கலம், மன்னார்குடி வழியாக, இயக்கப்பட உள்ளது என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024