Tuesday, November 28, 2017

ரயில் தண்ணீர் எச்சரிக்கை

Added : நவ 28, 2017 00:27

சபரிமலை: ரயிலில் வரும் சபரிமலை பக்தர்கள் உணவு மற்றும் தண்ணீரை ரயில்களிலும், பிளாட்பார கடைகளிலும் வாங்குகின்றனர். இவ்வாறு பக்தர்களுக்கு வழங்கும் போது,
கூடுதல் கவனம் வேண்டும் என்று திருச்சூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் இருந்து
ரயில்வேக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதால் கவனமாக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுஉள்ளது. குடிநீரில் விஷம் கலக்க வாய்ப்பு
உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதாகவும், எனவே உணவு, குடிநீர் ஆகிய
வற்றில் கவனம் செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கடிதம் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இந்த கடிதம் எப்படி வெளியானது என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், இது வழக்கமான கடிதம் தான் என்று போலீஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

COVID Duty By PG Doctors Should Be Considered Bond Service: Madras High Court Directs Thanjavur Medical College To Return Original Certificates

COVID Duty By PG Doctors Should Be Considered Bond Service: Madras High Court Directs Thanjavur Medical College To Return Original Certifica...