Tuesday, November 28, 2017

உடைந்து தொங்கிய அரசு பஸ் படிக்கட்டு

Added : நவ 27, 2017 23:09

நெல்லிக்குப்பம்: அரசு போக்குவரத்துக் கழக பஸ்சின், பின் பக்க படிக்கட்டு உடைந்து தொங்கிய நிலையிலும், தொடர்ந்து இயக்கப் பட்டதால், பயணியரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விழுப்புரத்தில் இருந்து, கடலுார் வழியாக சிதம்பரத்திற்கு, நேற்று காலை புறப்பட்ட அரசு பஸ்சில் பயணித்தவர்களுக்கு ஒரு திகல் பயணமாக அமைந்தது. 


விழுப்புரத்தில் பஸ் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, பஸ்சின் பின் பக்கத்தில் இருந்த, கடைசி படிக்கட்டு உடைந்து தொங்கியது. அதிர்ஷ்டவசமாக கடைசி படிக்கட்டில் பயணியர் யாரும் நிற்காததால், விபத்து தவிர்க்கப்பட்டது.


இருப்பினும், படிக்கட்டு உடைந்த நிலையிலேயே, பஸ் தொடர்ந்து இயக்கப்பட்டது. இதனால், பயணியர் கீழே இறங்கவும், ஏறவும் மிகவும் சிரமம் அடைந்தனர்.

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...