Tuesday, November 28, 2017

மத்திய அரசு ஊழியர்களுக்கு 'டெபுடேஷன் அலவன்ஸ்' உயர்வு

Added : நவ 27, 2017 22:51

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும், 'டெபுடேஷன் அலவன்ஸ்' இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
'டெபுடேஷன்' எனப்படும், அயல் பணிக்கு செல்லும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, அதற்கான படி வழங்கப்படுகிறது. உள்ளூரில், அயல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு, அவர்களின் மாத அடிப்படை சம்பளத்தில், 5 சதவீதம் அல்லது அதிகபட்சம், 2,000 ரூபாய், டெபுடேஷன் அலவன்சாக வழங்கப்படுகிறது.
வெளியூரில், அயல் பணியாற்றும் ஊழியர்களுக்கு, அவர்களின் மாத அடிப்படை சம்பளத்தில், 10 சதவீதம் அல்லது அதிகபட்சம், 4,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், டெபுடேஷன் அலவன்சை, இரு மடங்காக உயர்த்தி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, உள்ளூர் அயல் பணிக்காக, அதிகபட்சம், 4,500 ரூபாயும், வெளியூர் அயல் பணிக்காக, அதிகபட்சம், 9,000 ரூபாய் வழங்கப்படும். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win  G Babu Jayakumar & D Sekar 1 2 May 2026 10:05 PM  AMMK member Kamraj supports TVK, expell...