Thursday, November 30, 2017

அடுத்த 36 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கனமழை

Added : நவ 30, 2017 03:52 



சென்னை: அடுத்த 36 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பு: கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். குறிப்பாக தென் தமிழகத்தில் அடுத்த 36 மணி நேரத்திற்குள் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். 45 கி.மீ., முதல் 55 கி.மீ., வரை காற்று வீசக்கூடும். கடல் அதிக சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். இவ்வாறு வானிலை மையம் எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment

பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு 12.04.2025 மதுரை: பழிவாங்கும் ...