Thursday, November 30, 2017


கவர்னரின் கூடுதல் தலைமை செயலர் பதவியேற்பு


Added : நவ 30, 2017 00:32




சென்னை: கவர்னரின், கூடுதல் தலைமை செயலராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜகோபால், பொறுப்பேற்றார். ராஜகோபால், 1984ல், ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றார். இயந்திரவியலில் பொறியியல் பட்டம், பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில், சப் - கலெக்டராக பணியை துவக்கினார். விருதுநகர், துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், 1994 முதல், 1997 வரை, கலெக்டராக பணியாற்றி உள்ளார். மாநில அரசில், முதன்மை செயலராக, பல்வேறு துறைகளில், 2005 முதல், 2013 வரை பணியாற்றினார். மத்திய அரசிலும், சுற்றுச்சூழல் மற்றம் வனம்; விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்; விவசாயம் மற்றும் உள்துறை ஆகியவற்றில், உயர் பதவிகளில் பணியாற்றி உள்ளார். தமிழக கவர்னரின் கூடுதல் தலைமைச் செயலராக நியமிக்கப்படும் முன், மத்திய அரசின் உள்துறையில், கூடுதல் செயலராக பணியாற்றி வந்தார்.

No comments:

Post a Comment

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees The Court refused to interfe...