Wednesday, November 1, 2017

'டெபிட் கார்டில்' மின் கட்டணம் : புதிய சேவையை அமைச்சர் துவக்கினார்
சென்னை: ''மழை காலத்தில், பாதுகாப்பு நடவடிக்கைக்காக, வீடுகளில் மின் சப்ளை நிறுத்தப்படுகிறது,'' என, மின் துறை அமைச்சர், தங்கமணி தெரிவித்தார்.

மின் கட்டண மையங்களில், 'டெபிட் கார்டு' பயன்படுத்தி, 'ஸ்வைப்பிங் மெஷின்' வாயிலாக, மின் கட்டணம் செலுத்தும் சேவையை, அமைச்சர் தங்கமணி, சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில், நேற்று துவக்கி வைத்தார். அதில், எரிசக்தி துறை செயலர், விக்ரம் கபூர், மின் வாரிய தலைவர், சாய்குமார் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின், அமைச்சர் தங்கமணி கூறியதாவது:தமிழகத்தில், தடையில்லாமல் மின் சப்ளை செய்யப்படுகிறது. தற்போது, மழை காலம் என்பதால், புயல் மற்றும் காற்று வேகமாக வீசும்போது, மக்களின் பாதுகாப்பிற்காக, வீடுகளில் மின் தடை செய்யப்படுகிறது. மழை நின்றதும், மீண்டும் மின் சப்ளை துவங்கும். இனி, நுகர்வோர், மின் கட்டண மையங்களில், டெபிட் கார்டு பயன்
படுத்தி, எளிதில் கட்டணத்தை செலுத்தலாம். இந்த சேவையை, முதல் கட்டமாக, சென்னை, மயிலாப்பூரில் உள்ள, 16 கட்டண மையங்களில் பெறலாம். விரைவில், அனைத்து மையங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட இருக்கிறது.எளிய வகையில், வணிக மின் திட்டத்தின் கீழ், 'ஜி.எம்.ஆர்., கிருஷ்ணகிரி' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, அந்நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டம், உதனப்பள்ளியில் அமைக்க உள்ள தொழில் பூங்காவுக்கு, தனி வழித்தடத்தில், தடையில்லா மின் சப்ளை செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பிப்ரவரியில் இடமாற்றம்! : மின் வாரிய அலுவலகங்களில் பலர் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் பணி செய்வோரை இடமாற்றம் செய்ய, மின் வாரியம், செப்., மாதம் உத்தரவிட்டது. இது, அரசியல் செல்வாக்கு உள்ள, சில அதிகாரிகளுக்கு பிடிக்கவில்லை. அவர்களின் வலியுறுத்தலால், இடமாற்ற உத்தரவுக்கு காரணமான, மின் வாரிய விஜிலென்ஸ் டி.ஜி.பி.,யாக இருந்த மகேந்திரனை, சமீபத்தில் இடமாற்றம் செய்தனர். இந்நிலையில், அமைச்சர் தங்கமணி, 'மூன்று ஆண்டுகளுக்கு, ஒரே இடத்தில் 
உள்ளவர்களின் இடமாற்ற உத்தரவு, வரும் பிப்., முதல் அமல்படுத்தப்படும்' என நேற்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...