Wednesday, November 1, 2017

ரேஷன் கடையில் சர்க்கரை இன்று முதல் கிலோ ரூ.25

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில், கிலோ சர்க்கரை, 13.50 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு விற்கப்பட்டது. அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும், சர்க்கரை வாங்கினர். இந்நிலையில், இன்றுமுதல், சர்க்கரை விலையை, 25 ரூபாயாக உயர்த்த, தமிழக அரசு, சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி, இன்று முதல், சர்க்கரை விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சர்க்கரை விலை உயர்வால், ரேஷன் ஊழியர் - மக்கள் இடையில், பிரச்னை ஏற்படக் கூடாது என்பதற்காக, கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், புதிய விலை பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மிகவும் வறுமையில் உள்ள, 'அந்தியோதயா' ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கிலோ சர்க்கரை, 13.50; காவலர் கார்டுகளுக்கு, 12.50; மற்ற அனைத்து கார்டுதாரர்களுக்கும், 25 ரூபாய்க்கு விற்கப்படும். இந்த விலை உயர்வு, இன்று நடைமுறைக்கு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...