Monday, April 30, 2018

City college 1 of 5 in country to get global recognition

TIMES NEWS NETWORK

Chennai: 30.04.2018


Sathyabama Institute of Science and Technology was awarded a four-star rating for overall performance by Quacquarelli Symonds (QS), a ranking organisation spread across five continents, an official release said.

Sathyabama was one of five institutions in the country to receive this global recognition.

QS Stars is a rating system that evaluates institutions on criteria like teaching, facilities, employability, inclusiveness, innovation and internationalisation. Marie Johnson, president, and Mariazeena Johnson, pro chancellor, Sathyabama Institute of Science and Technology, received the award from Ashwin Fernandes, regional director, Middle East, North Africa & South Asia, QS Intelligence Unit. Fernandes said these ratings would enhance the reputation of the institution on a global scale.
Varsity raps colleges without qualified principals, teachers

Siddharth.Prabhakar@timesgroup.com

Chennai: 30.04.2018

Some colleges affiliated to the University of Madras have been running coursesin their institutionswithout a qualified principal or the required number of teaching staff, a recent inspection and affiliation committee report hasfound.

The reportwastabled atthe syndicate meeting around 10 days ago. The university has rapped the colleges concerned and stated that affiliation will be given only if they appoint a qualified principal and the requiredstaff.Around200colleges in Chennai, Tiruvallur and Kancheepuram district are affiliatedtotheuniversity.

For instance, one arts and sciencecollegein Chennaiwas given the affiliation for its BA English course subject to the condition thatit appointsthree morequalifiedstaff and a principal before the start of the 2018-19 academic year.

In another case, a college which had applied for affiliation to courses like BCom, BSc visual communication and foundation courses in English andTamildid nothavethe requisite staff for English, apart from a principal.

Another college applying for affiliation to its MSc computer science course was also asked to appoint a qualified principalbeforethestartof the current academic year.

Professorssaythis practice is rampant among some self-financing colleges which appoint a professor as an incharge principal to avoid paying a high salary. “The principal will be a reader or higher grade professor with a salary of at least Rs1lakh per month. In somecases,colleges appoint retired professorswho agreeto workfor Rs 30,000 per month as they would have their pension to offset the low salary,” said a syndicate member, declining tobeidentified.

This has been a recurrent issue flagged off by the university attheend andin the midof the academic sessions in the pastfew years.

TOI had earlier reported how colleges appoint students in excessof their permittedcapacity in certain courses and come for syndicate’s ratification by piggybacking on the students’ future.

Sunday, April 29, 2018


இனிப்பு தேசம் 2: சிறுநீர் சுவைப்பும் சவாரி சிகிச்சையும்!

Published : 21 Apr 2018 10:20 IST

மருத்துவர் கு. சிவராமன்




நீரிழிவு ஒன்றும் புதிததல்ல. நேற்றுப் பிறந்த நோயல்ல. மூவாயிரம் ஆண்டுகளாகவே இது இருந்துதான் வருகிறது. இந்த நோயைப் பற்றி நம்மிடமும் கிரேக்கத்திலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பதிவுகள் இருந்திருக்கின்றன.

சிறுநீர் கழித்த இடத்தில், சிறுநீரை ருசி பார்க்க எறும்பு மொய்ப்பதைப் பார்த்து, ‘இனிப்பு எப்படி இதில்?’ என கிரேக்கத்திலும் இந்தியாவிலும் ஆராயத் தொடங்கியிருக்கின்றனர். இப்படிச் சிறுநீர் கழித்தவர்களை, சித்தமும் ஆயுர்வேதமும் பிரமேகம், மதுமேகம் என மேக நோய் உடையவர்களாக அடையாளம் காட்டியிருக்கின்றன.

கி.மு. 1552-லேயே ஹெஸி-ரா எனும் எகிப்திய மருத்துவர், நீரிழிவைப் பற்றிப் பேசியிருக்கிறார். அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செய்து, உடலை இளைக்கச் செய்து கொல்லும் விநோதமான நோய் என இதைப் பதிவும் செய்திருக்கிறார். அரேஷியஸ் எனும் கிரேக்க மருத்துவர், ‘தசையும் ஊனும் சிறுநீர் வழிக் கரைந்து வெளியேறும் நோய்’ என்றும் அப்போது பேசியிருக்கிறார். பின்னாளில் அந்த அர்த்தத்தில்தான் Diabetes (Flowing through) என்ற பெயர் இந்த நோய்க்கு ஏற்பட்டது. Mellitus என்றால் மது (தேன்) என்று பெயர்.

சிறுநீர் சுவைப்பாளர்கள்

எறும்பு மொய்க்கும் சிறுநீரை அடையாளமாக இந்த நோய்க்குக் கண்டறிந்த அந்தக் கால மருத்துவர்கள், நோயின் நிலைமையை அறிய சிறுநீரை சுவைத்துப் பார்த்துச் சொல்வதற்கென்றே, சிலரைப் பணியில் அமர்த்தி இருந்தனராம். அவர்களுக்கு ‘வாட்டர் டேஸ்டர்ஸ்’ என்று பெயருண்டு.

மைசூர்பாகில் பாகுபதம் எப்படி இருக்கிறது என்பதைக் கரண்டியில் பார்ப்பதுபோல, சாம்பாரில் உப்பு எப்படி என்பதை நாவில் சுவைத்துப் பார்ப்பதுபோல, சர்க்கரை நோயாளியின் சிறுநீரைக் கையால் தொட்டு, பிசுபிசுக்கிறதா எனப் பார்த்து, அப்புறம் நாவில் சுவைத்துப் பார்த்து, பல வருட காலத்துக்கு நோயைக் கணித்துச் சொல்லியிருக்கின்றனர்.

அளவுக்கு மிஞ்சினால் நோயா?

சித்த மருத்துவத்தில் மேக நோயின் பிரிவாகத்தான் பிரமேகம் அல்லது மதுமேகம் சொல்லப்படுகிறது. மேக நோயின் பத்து அவஸ்தைகளாக, மெலிய வைப்பதில் இருந்து முதுகில் ஏற்படும் ‘கார்பங்கிள்’ (carbuncle) கட்டிகள்வரை அன்றே அடையாளமும் காட்டியுள்ளனர். கடைசியாக குணப்படுத்தப்படாத மேகநோயின் முடிவில், மெல்ல உடலை இளைத்துக் கொல்லும் என்றும், சித்த மருத்துவம் பதறியிருக்கிறது.

‘ஏன் இந்த நோய் வருகிறது?’ என யோசித்ததில், ‘கன்னி மயக்கத்தால் கண்டிடும் மேகமே’, ‘கோதையர் கலவி போதை: கொழுத்த மீனிறைச்சி போதை, ஓதுவாய் நெய்யும் பாலும் பரிவுடன் உண்போருக்கு’ எனக் காரணங்களைப் பட்டியலிட்டிருக்கிறது சித்த மருத்துவம்.

எல்லாம் அளவுக்கு மிஞ்சும்போது, இந்த நோய்க்கு வழிவகுக்குமா என்பது மிக முக்கியமான ஆய்வுக்குரிய விஷயம். அதிலும் மிக முக்கியமாக, ‘சுக்கில/சுரோணித தாதுபலத்தை வலுப்படுத்தும் பல சித்த ஆயுர்வேத மருந்துகள் மதுமேகக் கட்டுப்பாட்டுக்கு உதவுகின்றன’, என்பது சமீபத்திய ஆய்வுத்தரவுகள் என்பதால், ‘கோதையர் கலவி போதை’ காரணி, பாரபட்சமில்லாத ஆய்வுக் கண்களோடு, கொஞ்சம் உற்றுப் பார்க்கப்பட வேண்டிய விஷயம்தான்.

‘சவாரி சிகிச்சை’

இங்கு மட்டுமல்ல, ‘இந்த நோயை எப்படித் தீர்க்கலாம்?’ என்ற சிந்தனை ஓட்டம், நெடுநாளாக உலகின் எல்லா மூலைகளிலும் இருந்திருக்கிறது. அதிகமாய்ப் போகும் சிறுநீரை அடக்குவது, நோயைக் கட்டுப்படுத்துமோ எனக் கருதி, நோயுற்றோரைக் குதிரையில் ஏற்றி ஓட வைத்துள்ளனர். வேகமாக ஓடும் குதிரைச் சவாரியில் கலோரிகள் எரிக்கப்பட்டு, குளுக்கோஸ் வற்றிப்போனதில் தற்காலிக விடுதலை வந்திருக்கும்போல! ரொம்ப நாளைக்கு இந்த ‘சவாரி சிகிச்சை’ மருத்துவமாக இருந்திருக்கிறது.

‘இனிப்பை நீக்கிவிட்டுக் கசப்பாய், துவர்ப்பாய்க் கொடுப்பா’ என இந்திய மருத்துவம் பாகற்காய், கோவைக்காய், வேம்பு, நிலவேம்பு, கறிவேம்பு எனப் பட்டியலிட்டது. அதே காலத்தில், மேற்கத்திய உலகும் இந்த நோய்க்கு உணவில் எப்படி சிகிச்சை அளிக்கலாம் எனச் சிந்தித்திருக்கிறது. சர்க்கரையை நேரடியாகத் தரும் அத்தனை தானிய, கிழங்கு உணவையும் நிறுத்திவிட்டு, வெறும் மாமிசத்தையும் கொழுப்புள்ள புலாலையும் கொடுத்து, இனிப்பு நோயைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது.

உணவும் உடற்பயிற்சியுமே மருந்து!

அப்போலனைர் எனும் பிரெஞ்சு மருத்துவர், பிரெஞ்சு போர்க் காலத்தில் குறைவான பஞ்ச உணவைச் சாப்பிட்டபோது பல நீரிழிவு நோயாளிகளுக்கு அதில் கட்டுப்பாடு ஏற்பட்டதைத் தற்செயலாகக் கண்டறிந்திருந்தார். உடனே தன் நோயாளிகளுக்கு, உணவைக் கட்டுப்படுத்தி மிகக் குறைந்த அளவு உணவை விநியோகித்து, நீரிழிவைக் கட்டுப்படுத்தி இருக்கிறார். அதற்குப் பின்னரே, ஓட்ஸ் வைத்தியம், பட்டினி வைத்தியம், உருளை வைத்தியம் எனப் பல வைத்திய முறைகள் 1900-களில் சர்க்கரை நோய்க்கு உலாவி இருக்கின்றன.

இத்தாலியைச் சேர்ந்த மருத்துவர் கெடோனி, ஒருபடி மேலே போய், நோயாளிகளுக்குக் குறைந்த உணவைக் கொடுத்து அவர்களைத் தன் மருத்துவமனை அறையில் போட்டு அடைத்துவைத்துச் சாவியைக் கையில் வைத்துக்கொண்டு சிகிச்சை அளித்து, வெற்றிபெற்றதை ஆவணப்படுத்தினார்.

1916-ல் அமெரிக்க பாஸ்டன் நகரத்திலிருந்த, உலகின் தலைசிறந்த நீரிழிவு மருத்துவர் எலியட் ஜோஸ்லின், ‘தி ட்ரீட்மெண்ட் ஆஃப் டயாபட்டீஸ் மெல்லிட்டஸ்’ எனும் மருத்துவ நூலை வெளியிட்டார். நல்ல கட்டுப்பாடான உணவும் உடற்பயிற்சியும்தான் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் என்ற முதல் கருத்து தெளிவாக அப்போதுதான் வெளியிடப்பட்டது. இன்றைக்குவரை, அந்தக் கருத்தை ஒட்டியே அத்தனை மருத்துவ முறைகளும் செயல்பட்டு வருகின்றன.

(தொடரும்)

கட்டுரையாளர், சித்த மருத்துவர்

தொடர்புக்கு: herbsiddha@gmail.com
இனிப்பு தேசம் 3: இனிது இனிது இன்சுலின் இனிது...

Published : 28 Apr 2018 12:16 IST

மருத்துவர் கு. சிவராமன்



சர்க்கரை வியாதிக்காரர்கள் நாய், ஆடு, மாடு, பன்றிக்கெல்லாம் மிகவும் கடமைப்பட்டவர்கள் என்று சொன்னால் அது பெரும் உண்மை. அதுவும் குறிப்பாக நாய்க்கு ரொம்பவுமே நன்றியுடையவராய் இருந்தே ஆக வேண்டும்.

மூன்று அல்லது நான்காயிரம் வருடங்களாக உருக்கி உருக்கி உருக்குலைத்துக் கொல்லும் நோயாக, ‘முகம் தெரியா பிசாசு’ என்றழைக்கப்பட்ட நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த 20-ம் நூற்றாண்டின் விடிவெள்ளிக் கண்டுபிடிப்பாக வந்ததுதான் ‘இன்சுலின்’. நீரிழிவைக் குணப்படுத்தும் மருந்தல்ல இன்சுலின். ஆனால், மிக நுட்பமாகக் கட்டுப்படுத்தும் மருந்து.

தொடையில் பந்தைத் தேய்த்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் 140 கி.மீ. வேகத்தில் பந்தை வீசவும், எல்லைகள் தெரியாத கடலில் சின்னதாய் ஒரு கப்பலில் இருந்துகொண்டு ஆண்டன் பாலசிங்கம் தமிழ் ஈழப் போராட்டத்தில் சுமார் 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு அரசியல் வியூகம் அமைத்து நடத்தியதும் இந்தச் சின்ன ஊசியைப் போட்டுக் கொண்டுதான்!

நாய் தந்த நன்மை

அதெல்லாம் சரி, இதற்கும் நாய்க்கும் என்ன சம்பந்தம்? நாய்களை வைத்துத்தான் ஒட்டுமொத்த இன்சுலின் ஆய்வும் நடந்திருக்கிறது. நாய்களின் கணையத்தைக் கழற்றிப் போட, தடாரென நாய் மெலிந்துபோய் சுகர் பேஷண்ட் ஆனதை ஜெர்மனியில் பல மருத்துவ ஆய்வாளர்கள் கண்டறிந்திருந்தனர்.

ஆனால், கனடாவைச் சேர்ந்த பேண்டிங் மட்டுமே, ‘அதன் நாளத்தின் வழியாக அல்லாமல், குறிப்பிட்ட பகுதியில் சுரக்கும் பழுப்பான திரவப் பொருள்தான், இந்த இனிப்பு சமாச்சாரத்தைக் கவனமாகக் கையாளுகிறது’ எனும் தகவலைக் கண்டறிந்தார். பேண்டிங் பெரிய மருத்துவப் பட்டம் பெற்ற இளைஞர் கிடையாது. என்றாலும், இந்த நோய்க்கு மருந்து கண்டறியும் ஆர்வம் மட்டுமே அவரிடம் இருந்தது.


பேண்டிங்

ஆய்வுக்காக, கனடாவில் இருந்து கப்பலேறி இங்கிலாந்துக்குப் போய், அங்கே மிகப் பெரிய உடல் இயங்கியல் (physiology) விஞ்ஞானியாக இருந்த பேராசிரியர் மெக்லியாய்டுவின் ஆய்வகத்தில் தன் ஆய்வுச் சிந்தனைக்கு உதவி கேட்டார். பெரும் புறக்கணிப்புக்குப் பின்னர், ‘அட்லீஸ்ட் எல்லோரும் கோடை விடுமுறைக்குப் போகும்போது, எனக்கு ஆய்வகத்தையும் இரண்டு உதவியாளர்களையும் மட்டுமாவது கொடுங்கள்’ எனக் கேட்டுப்பெற்றுத்தான் பேண்டிங் இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்திருக்கிறார்.

பகிர்ந்துகொண்ட மருத்துவர்

மாதத்துக்கு 100 டாலர் சம்பளம், கூடவே பெஸ்ட் எனும் ஆராய்ச்சி மாணவருடன் இந்த ஆராய்ச்சி தொடர்ந்தது. ஆராய்ச்சிக்குப் போதுமான நாய்கள் கிடைக்கவில்லை. இரவு நேரத்தில், தெரு நாய்களை 1 டாலருக்கும் 2 டாலருக்கும் சொந்தப் பணத்தில் பிடித்து வந்து, இரவும் பகலும் ஆய்வு நடத்தியிருக்கிறார்கள். தொடர்ச்சியான ஆய்வின் முடிவில், 1922-ல் நாயின் கணையத்திலிருக்கும் சாரத்தை (extract) அவர்கள் பிரித்தெடுத்தார்கள். அதற்கு ‘இன்சுலின்’ எனப் பெயரிட்டனர். பிறகு கோலித் எனும் இன்னோர் அறிஞருடன் சேர்ந்து பல ரத்த மாதிரி ஆய்வுகளை நாய்களில் மேற்கொண்டார்கள். கடைசியாக, கனடா நாட்டு டொரண்டோ நகரத்தில் மரணத்தின் விளிம்பில் இருந்த இளைஞன் ஒருவனின் ரத்தத்தில், அந்தச் சாரத்தை நேரடியாகக் கலந்தபோதுதான், சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் உலகுக்குக் கிடைத்தது.

இந்தக் கண்டுபிடிப்புக்காக பேண்டிங், மெக்லியாய்டு இருவருக்கும் நோபல் பரிசு கிடைத்தது. அந்த ஆராய்ச்சியில் துணை நின்ற கோலித், பெஸ்ட் உடன் பரிசையும் பரிசுப் பணத்தையும் அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள். பென்சிலின்போல், போலியோ தடுப்பூசிபோல் உலகின் மிகச் சிறந்த மருத்துவக் கண்டுபிடிப்பு இன்சுலின். இன்றைக்கு இன்சுலின் என்பது ‘பில்லியன் டாலர்’ லாபம் புழங்கும் வணிகமாக மாறிவிட்டது!

குணப்படுத்தாது… கட்டுப்படுத்தும்!

‘அய்யோ இன்சுலினா?’ எனப் பயப்படுகிற சாமானியர்கள் ஒருபக்கம். ‘இன்சுலினை நேரடியாக அளிக்கும் அணுகுமுறை, முற்றிலும் தவறு’ எனச் சாடும் மருத்துவர்கள் இன்னொரு பக்கம் என்ற நிலை இன்றும் தொடரத்தான் செய்கிறது. ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இன்சுலின் நீரிழிவு நோயைக் குணப்படுத்தும் மருந்தல்ல. அதைக் கட்டுப்பாட்டில் வைக்கும் என்சைம். கணையத்தில் உள்ள செல்கள்தாம், என்சைமைச் சுரக்க வைக்க வேண்டும். நோய் எதிர்ப்பாற்றல் சரியாக இல்லாமல் போனால், அந்த என்சைம் சுரப்பது நின்று போகும். அந்த நிலையில், இன்றளவில் எந்த மருந்தையும் கொடுத்து, அந்த என்சைமை அதிக அளவில் சுரக்க வைக்க முடியாது என்பதே நிதர்சனம்.



மெக்லியாய்டு

அதனால்தான், இளமையில் வரும் குழந்தை நீரிழிவு நோய் (Juvenile diabetes), இன்சுலின் சார்பு நீரிழிவு (Insulin Dependent Diabetes-IDDM) நிலைகளில் இன்சுலினைத் தவிர்த்துவிட்டு, மரபு மருத்துவ முறைகளை, மூலிகை மருந்துகளை, சித்த மருத்துவத்தை மட்டும் நம்பியிருக்க முடியவில்லை. அதே இன்சுலின் சுரப்பு இயல்பாக உள்ளது. ஆனால், அதன் செயல்படும் திறனில் மட்டுமே பிழை என்றால் (Non Insulin Diabetes Mellitus -NIDDM), அத்தனை மரபு மருந்துவ முறைகளிலும் சிகிச்சையை மேற்கொள்ளலாம். சித்த மருத்துவ அனுபவம் இதில் பல வியக்கத்தக்க விஷயங்களை, கூடவே அதன் எல்லைகளை நிறையவே அடையாளம் காட்டுகிறது. ஆவாரம்பூவில் ஆரம்பித்து அழுத்தும் வர்மம், ஆயுர்வேதம், அக்குபிரஷர் சிகிச்சை, ஆசன சிகிச்சைவரை என்னவெல்லாம் நடக்கிறது? தொடர்ந்து பார்க்கலாம்!

(தொடரும்)
கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com
இதுக்கு சொல்லலாமா ‘சியர்ஸ்?

Published : 28 Apr 2018 12:16 IST

டாக்டர் ஆ. காட்சன்



இன்றைக்குப் பல ஆட்கொல்லித் தொற்றுநோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், தொற்றாநோய்களான உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு போன்றவற்றால் உயிரிழப்புகளும், வாழ்க்கைத் தரத்தில் பாதிப்புகளும் அதிகரித்துள்ளன. அந்த வரிசையில் சத்தமில்லாமல் இடம்பிடித்திருக்கும் இன்னொரு நோய்… மது அடிமைத்தனம்!

மது குடிப்பதை ஒருவரால் நிபந்தனையின்றி நிறுத்தமுடியாத தன்மை, நிச்சயமாக நோய்நிலைதான். ‘கொஞ்சமே கொஞ்சம் மது அருந்தினால் உடலுக்கு நல்லதுதான்’ என்ற போதனைகள், நண்பர்கள் வட்டாரத்தில் மட்டுமல்லாமல், மருத்துவர்கள் வட்டாரத்திலும் சில நேரம் தவறாகப் பரிந்துரைக்கப்படுகிறது.

மூளை நரம்புகள், குறிப்பிட்ட அளவு மதுவுக்குப் பழகிவிட்டால், பின்பு அதே அளவு அருந்தும்போது போதை ஏற்படாமல் போய், போதையைப் பெறுவதற்காகவே மேலும் மேலும் மதுவின் தேவை அதிகரிக்கும். இதனால் நாளடைவில் பெரும்பாலோர் மதுவுக்கு அடிமையாகிவிடுவார்கள். இன்றைக்குக் கொஞ்சமாகக் குடிப்பவர்கள்தான், நாளைக்கு மொடாக்குடிகாரர்களாக மாறுவார்கள்.

திடீரென நிறுத்தலாமா?

‘நீங்கள் ஏன் மதுவை நிறுத்த முன்வரவில்லை?’ என்று ஒருவரிடம் கேட்டால், ‘திடீரென மது அருந்துவதை நிறுத்தினால் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று உறவினர்கள், நண்பர்கள் சொன்னார்கள்’ என்ற பதில் வரும். இப்படிச் சொல்லிக்கொண்டே தங்கள் ஆயுளைக் குறைக்கும் முயற்சியில் மீண்டும் தீவிரமாக இறங்குவார்கள். இதுபோன்ற பதில்கள், மது அருந்துவதை நியாயப்படுத்தும் முயற்சிதானே ஒழிய, நிச்சயம் உயிர் மீது உள்ள பயம் கிடையாது.

அடிமைத்தனத்துக்குள் இருக்கும் ஒருவரால் நிச்சயமாக மதுவின் அளவைப் படிப்படியாகக் குறைத்து நிறுத்தமுடியாது. ஏனென்றால் வழக்கமான அளவைக் குறைத்தாலே தூக்கமின்மை, உடல் நடுக்கம், பதற்றம் போன்றவை ஏற்படுவது மட்டுமல்லாமல், மீண்டும் அதிகம் அருந்தினால் மட்டுமே மேற்கண்டவை இல்லாமல் ஆகும் என்ற நிலையில், பழைய அளவுக்கே குடியைத் தொடர்வதற்கான சாத்தியமே அதிகம். எனவே, குடியை ஒரே நாளில் முற்றிலுமாக நிறுத்துவதே நல்ல பலன் தரும்.

பிரச்சினையும் தீர்வும்

தினமும் சாக்லேட் சாப்பிட்டுப் பழகிவிட்ட குழந்தையின் கையிலிருந்து சாக்லேட்டைப் பிடுங்கிவிட்டால் அது எப்படி அழுது புரளுமோ, அதுபோலவே தினமும் கிடைத்த ஒரு போதைப் பொருள் திடீரென்று கிடைக்காவிட்டால் மூளை நரம்புகளும் விறைத்துக்கொண்டு நிற்கும். இதனால் பெரும்பாலும் உடல் நடுக்கம், தூக்கமின்மை, எரிச்சல், பதற்ற உணர்வு ஏற்படும். அரிதாகச் சிலருக்கு மனக்குழப்பம், அதீத பயம், காதில் மாயக்குரல்கள் கேட்பது, கண்ணில் மாய உருவங்கள் தெரிவது போன்ற அறிகுறிகளை உடைய ‘டெலிரியம்’ (Delirium) என்ற பிரச்சினை உருவாகலாம். ஒரு சிலருக்கு வலிப்பு அறிகுறிகளும் வரும்.

அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் குழந்தைக்கு வேறு தின்பண்டங்களையோ மிட்டாயையோ கொடுத்தால் அது எப்படி சமாதானம் ஆகிவிடுமோ, அதுபோலவே மதுவின் வேதியியல் தன்மைக்கு ஒத்த மருந்துகளை உட்கொள்வதால் மேற்குறிப்பிட்ட எந்தப் பாதிப்புகளும் ஏற்படாமல் ஒரு நபரால் மதுவின் தாக்கத்திலிருந்து வெளிவரமுடியும். எனவே, மனநல மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நிறுத்துவது சிறந்தது.

மாத்திரை, ஒவ்வாமை தருமா?

மேற்கண்ட சிகிச்சை முறையானது திடீரென நிறுத்தும்போது எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்கான ‘மதுவின் நச்சு நீக்கும்’ முறைதான். பலர் ‘மாத்திரை சாப்பிட்டாலே ஒவ்வாமை ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று கேள்விப்பட்டேன்’ என்று சொல்லி சிகிச்சையே எடுப்பதில்லை. அவர்கள் நினைப்பதுபோல இந்த சிகிச்சை முறை எல்லோருக்கும் பயன்படுத்தப்படுவதில்லை.

கைசூப்பும் குழந்தைகளுக்கு தூங்கும்போது விரலில் வேப்ப எண்ணெய் தடவிவைக்கும் பழக்கம் முன்பு இருந்தது. வேப்ப எண்ணெயின் கசப்பை அனுபவித்த குழந்தைகள், நாளடைவில் வாயில் விரல் வைப்பதைத் தவிர்க்க ஆரம்பித்துவிடுவார்கள். இதைப் போன்ற சிசிச்சை முறைதான் ‘டைசல்ஃபிரம் சிகிச்சை’ (Disulfiram). குடியை நிறுத்தி சில நாட்களுக்குப் பின் அவர்கள் மீண்டும் குடிக்காமல் இருக்க, மதுவின் மீது ஒருவித பயத்தை ஏற்படுத்தவே இந்த சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது.

இதில் தரப்படும் மருந்துகளால் எந்த ஒவ்வாமையும் ஏற்படாது. ஆனால், மருந்தையும் எடுத்துக்கொண்டு குடியையும் தொடர்ந்தால் வாந்தி, தலைசுற்றல், மரண பயம், மது வாடையால் குமட்டல் ஆகிய ‘ஒவ்வாமை’கள் ஏற்பட்டு, குடியின் மீது வெறுப்பு ஏற்படும். சுருக்கமாகச் சொன்னால், மனக் கட்டுப்பாட்டை உருவாக்குவதே இந்த சிகிச்சையின் நோக்கம்.

மனக் கட்டுப்பாடு மட்டும் போதுமா?

குடிக்கு அடிமையானவர்களை சிகிச்சைக்கு அழைத்தால் ‘என் மனக் கட்டுப்பாட்டால் என்னால் குடியை நிறுத்திக்கொள்ள முடியும்’ என்று பலர் சவால் விடுவார்கள். ஆனால், அதை ஒருபோதும் முயற்சித்துப் பார்க்க மாட்டார்கள். மனக் கட்டுப்பாடு, மருத்துவம், மனநல ஆலோசனை, குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு, சூழ்நிலை மாற்றம் ஆகிய எல்லாமே சேர்ந்து கிடைத்தால் மட்டுமே மது அடிமைத்தனத்திலிருந்து மீள முடியும்.

தவறான தகவல்களாலும் மூடநம்பிக்கைகளாலும் திசை திருப்பப்பட்டு சாக்குப்போக்குகள் சொல்லி, காலம் தாழ்த்தாமல், அறிவியல்பூர்வமான விளக்கங்களுக்குக் காது கொடுத்து நம்மையும் வாரிசுகளையும் காப்பாற்றிக்கொள்வது நம் கையில்தான் உள்ளது.

ஆம்… குடி, நாட்டுக்கு, வீட்டுக்கு மட்டுமல்ல உயிருக்கும் சேர்த்தே கேடு!

குடிப்பதால் சிறுநீரகம் பாதிக்கப்படுமா?

ஒரு தவறான தகவலைத் திரும்பத் திரும்பச் சொல்லி உண்மை ஆக்கிவிடும் தந்திரம் அரசியலில் மட்டுமல்ல, சினிமாவுக்கும் பொருந்தும். ‘குடிச்சா கிட்னி பாதிச்சிரும்’ என்ற வசனத்தை பல சினிமாக்களில் கேட்கலாம். ஆனால், குடிப் பழக்கத்துக்கும் சிறுநீரகத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்பதே மருத்துவ உண்மை.

இரைப்பை, குடல் ஆகியவற்றால் உறிஞ்சப்படும் மதுவானது, நேராக கல்லீரலுக்குத்தான் செல்கிறது. 99 சதவீத மதுவானது கல்லீரலில் செரிமானம் செய்யப்பட்டு, ரத்த ஓட்டத்தில் கலந்து மூளை நரம்புகளுக்கும் மற்ற உறுப்புகளுக்கும் செல்கிறது. இது கல்லீரலுக்கு நச்சுத்தன்மையை உண்டாக்கி, நாளடைவில் மஞ்சள் காமாலை, புற்றுநோய், கல்லீரல் செயலிழப்புவரை ஏற்படுத்தும். சிறுநீரகத்தில் சிறுநீர் வழியாகக் கழிவுநீக்கம் செய்யப்பட்டாலும், இது சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. சிறுநீரகங்களை மாற்றுவது நடந்துவரும் இக்காலக்கட்டத்தில், கல்லீரல் மாற்று சிகிச்சை என்பது சாமானியருக்குச் சாத்தியப்படும் விஷயமல்ல என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

கட்டுரையாளர், மனநல மருத்துவர் மற்றும் உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com
மனசு போல வாழ்க்கை 31: பாராட்டு எனும் மூலதனம்

Published : 27 Oct 2015 10:54 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்



நல்ல வார்த்தைகளுக்கு நாம் எல்லோரும் ஏங்குகிறோம் என்றால் நீங்கள் நம்புவீர்களா? நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, உங்களுக்கு வந்து சேரும் ஒரு சின்னப் பாராட்டுக் கூட உங்களை ஒரு நொடியாவது சிறு ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

‘முதல் மரியாதை’ படத்தில் “ பா.. ரா.. ட்ட, மடியில் வச்சு தா..லாட்ட, எனக்கொரு தாய்மடி கிடைக்குமா.. ?” என்று நடிகர் சிவாஜி பாடும்போது உங்கள் கண்களும் கலங்கியிருந்தால் நீங்களும் பாராட்டுக்கும் ஆதரவுக்கும் காத்திருக்கிறீர்கள் என்று பொருள்.

தொடுதலும் உணவே

சிசு வளர்வது சுவாசத்தாலும் உணவாலும் மட்டுமா? தாயின் ஸ்பரிசம் தரும் வெப்பத்தினால் தான் அது வளர்கிறது. உளவியல் ஆய்வாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டு திரும்பத் திரும்பச் சொல்லும் செய்தி இதுதான். உணவை விட ஆதரவும் பாராட்டும்தான் தொடர்ந்து பிள்ளையை வளர்க்கிறது. தாயிடமிருந்து தனிமைப்படுத்தப்படும் விலங்கினங்களின் குட்டிகள் தொடுதல் இல்லாதபோது குறைந்த ஆயுட்காலத்தில் இறந்து போகின்றன.

மொழியறிவு வளரும் வரை வார்த்தைகள் தரும் நம்பிக்கையும் பாராட்டும் தொடுதல் மூலமாகவே முழுமையாக நிகழ்கிறது. பிறகு வார்த்தைகள் அதைச் செய்ய வேண்டும். ஆனால் வளர்ந்த பின்னாலும் கூட ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாத செய்தியை ஒரு தொடுதல் சொல்லிவிடும் என்பதுதான் உண்மை.

தொடுதலுக்கு இசைந்து வெளிவரும் வார்த்தைகள் பிடிப்புடன் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. மடியில் போட்டு முதுகை நீவிக்கொடுக்கும் தாய் பாதுகாப்பு உணர்வைத் தருகிறாள். விரல் பிடித்து அழைத்துச் செல்லும் அப்பா பாதி ஆசிரியர் ஆகிறார். தட்டிக்கொடுத்துக் கதை சொல்லும் பாட்டி கற்பனையை வளர்க்கிறாள். தோளில் கை போட்டு ரகசியம் பேசும் சகோதரன் உலகைச் சொல்லிக்கொடுக்கிறான். வாரி அணைக்கும் காதலி ஆசையை அள்ளித் தெளிக்கிறாள். முதுகில் ஏறும் பிள்ளை உங்கள் பொறுப்பை உணர்த்துகிறான். உடல் மொழி சொல்லாததை வாய் மொழி சொல்வது கடினம்.

பேச்சுகளின் பெருக்கம்

நாம் வளர்கையில் தொடுமொழி குறைந்து வாய் மொழி ஆதிக்கம் பெருகுகிறது. வார்த்தைகள் மூலம் தான் பெரும்பாலான செய்திகள் செல்கின்றன. அதனால் வார்த்தைகள் பெரும் முக்கியத்துவம் பெற்று விட்டன.

உறவுகள் இயந்திரத்தனமாக இயங்குகையில் தேவைகள் கருதி மட்டுமே வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. நேரம் தான் செல்வம் என்று இயங்குகின்ற உலகில் பொருள் ஈட்ட வழியில்லாத வார்த்தைகள் குறைந்து போகின்றன. பிரச்சினை என்றால் பேசுகிறோம். காரியம் என்றால் பேசுகிறோம். பரஸ்பர அன்புக்கும் நட்புக்கும் அபிமானத்துக்கும் பேசும் பேச்சுகள் குறைந்துவருகின்றன.

இதனால் மனதார ஒருவரைப் பாராட்டுவது என்பதே அரிதான செயலாகிறது. ஒருவர் பாராட்டினாலே ‘இவர் எதற்காக இப்படிப் பாராட்டுகிறார்? இவருக்கு என்ன வேண்டும்?” என்று சந்தேகப்படுகிறோம்!

எதையும் எதிர்பார்க்காமல் ஒருவரை மனதாரப் பாராட்டுதல் என்பது பாராட்டுபவரின் மன வளத்தைக் காட்டுகிறது. அது ஒரு பரிமாண வளர்ச்சி. அதனால் தான் பலருக்கு மனதாரப் பாராட்டும் மன விசாலம் இருப்பதில்லை.

ஆனால் நாம் அனைவரும் பாராட்டுக்கு ஏங்குகிறோம். எங்கிருந்து பாராட்டு வரும்? கொடுத்தால்தானே திரும்பப்பெற?

நல்ல சாப்பாடு என்றால் வார்த்தை பேசாமல் மிச்சம் வைக்காமல் சாப்பிடுபவரில் எத்தனை பேர் மனதாரச் சமைத்தவரை பாராட்டுகின்றனர்? சரியில்லை என்றால் திட்டித் தீர்க்க யோசிப்பதில்லை.

“ஒரு நாளில் எத்தனை பேரிடம் பாராட்டு வாங்குகிறோமோ அவ்வளவு நல்ல சேவையைச் செய்கிறோம்!” என்பது சேவை நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்குச் சொல்லித் தரும் பாடம். இதை நான் சற்றுத் திருப்பிப்போட்டுச் சொல்வேன். “ஒரு நாளில் எத்தனை பேரைப் பாராட்டுகிறீர்களோ அவ்வளவு நல்ல வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று பொருள்.”

பாராட்டுவதற்காக பாராட்டு

பாராட்டுவதற்குப் பாராட்டப்படும் பொருளோ மனிதரோ அருகதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பாராட்டுபவரின் அருகதைதான் முக்கியம்.

நம் வாழ்க்கையை மெலிதாகத் தொட்டுச் செல்லும் மனிதர்கள் செய்யும் சிறு காரியங்களைப் பாராட்டுங்கள். அவர்கள் நாள் அன்று நிச்சயம் சிறப்பாக இருக்கும். உங்களுடன் வாழும் மனிதர்களின் நல்ல பண்புகளை, நல்ல செயல்களைப் பாராட்டுங்கள். அது அவர்களின் வாழ்க்கையையே சிறப்பானதாக மாற்றும்.

வீட்டுக்குள் தேவைக்கு அதிகமான பாராட்டு அவசியமா என்று வாதாடுவார்கள். அது வீண் வாதம். பாராட்டுகள் அதிகமானால் பாதகமில்லை. குறைவானால் தான் பாதகம். முடியாதவரிடம் முடியும் என்று சொல்லிச் சற்று அதிகப்படியாகப் பாராட்டினால் பிழையில்லை. ஆனால் முடியும் என்பவரையும் பாராட்டாமல் விடும் பொழுது பலர் தங்கள் திறமைகளின் மேல் நம்பிக்கை வைக்கத் தவறுகிறார்கள்.

பெரும் குடும்பத்தில் வாழும் சூழலில்கூடப் பெரிய பாராட்டுகள் அவசியப்படவில்லை. நல்ல வார்த்தைகள் வந்து விழுந்து கொண்டிருக்கும். இன்று மூன்று பேராய், நான்கு பேராய் சிறுத்துள்ள குடும்பங்களில் வாய் மொழியே குறைந்துவருகிறது. அவசர யுகத்தில் பாராட்டுக்கு ஏது நேரம்?

ஒரு நாள் முயற்சி செய்யுங்கள். ஒரு பத்துப் பேரை இன்று மனதார, பிரதி பலன் எதிர்பார்க்காமல் அவர்கள் நல்ல செயல்களுக்குப் பாராட்டுங்கள். சங்கிலித் தொடர்ச்சியாக நல்ல நிகழ்வுகளை நடத்துவீர்கள்.

ஒருவரைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றிவிட்டால் அவரிடம் பாராட்டத்தக்கவல்ல பண்புகளைத் தேட ஆரம்பிப்பீர்கள். அது நல்ல உறவுக்கான வீரிய விதைகளைத் தூவும்.

பாராட்ட நினைத்தும் பிறகு செய்யலாம் என்று ஒத்திப் போடுபவர்கள் பலர் இருப்பார்கள். பாராட்டை இன்றே செய்யுங்கள். உறவுகளில் குறைகள் சொல்வதைத் தள்ளிப்போடுங்கள்.

உங்களைத் தொட்டுச் செல்லும் உறவுகளில்; மனிதர்களில் யாரையெல்லாம் பாராட்டலாம் என்று பட்டியல் போடுங்கள். இன்றே செயல்படுத்துங்கள்.

பாராட்டு ஒரு மூலதனம். அது பன்மடங்கு பெருகி உங்களிடம் திரும்ப வந்து சேரும் என்பது உறுதி.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நிர்மலா தேவி விவகாரம்: காலம் தாழ்ந்த விழிப்பு?

Published : 26 Apr 2018 09:15 IST

மு.இராமசுவாமி

THE HINDU TAMIL




எல்லா நிகழ்வுகளிலும், முதற்கோணலானது சீர்செய்யப்படாமல் முற்றும் கோணலாகிக்கொண்டிருக்கிறது. முதற்கோணலைப் பார்க்கத் தவறியும்விடுகிறோம். குற்றம்சாட்டப்பட்டவர்கள் உச்சியில் உட்கார்ந்து கோலோச்சுகையில், குற்றங்கள் தங்கள் பங்குக்குத் தலைவிரித்தாடுகின்றன!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனம் முறைகேடானது என்ற மதுரை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு மதுரையிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டு, அக்டோபர் 2017-ல் வாதி-பிரதிவாதி விவாதங்கள் முடிந்த பிறகு, ஆறு மாதங்களாகத் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது. அதைப் போலவே, ‘காமராசர் பல்கலைக்கழகத்தைக் காப்போம்’ (‘சேவ் எம்.கே.யு’) அமைப்பின் அமைப்பாளர் பேராசிரியர் அ.சீனிவாசன், நடைப்பயிற்சியின்போது தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு. 16.05.2014 காலை நடைப்பயிற்சிக்குப் போகையில், அடியாட்களை வைத்து பேராசிரியர் அ.சீனிவாசனின் கைகளை முறித்த வழக்கில், செல்லத்துரையின் பெயர் காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் மூன்றாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டது.

மறைந்து கிடக்கும் பூதங்கள்

இப்போது இன்னொரு புது வழக்கும் மதுரை காமராசர் பல்கலைக்கழக அலுவலகத்தை வளைய வந்தபடி, அதன் வாசற்கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறது. அது, பல்கலைக்கழக உயரதிகாரிகளுக்காக மாணவிகளைத் தவறான உறவுக்கு அழைக்கும் விதமாக, அருப்புக்கோட்டை கல்லூரியின் கணிதப் பேராசிரியை நிர்மலாதேவி செல்போனில் பேசியது தொடர்பான வழக்கு. தனக்கும் மதுரை காமராசர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கும் இருக்கும் நெருக்கத்தை, அதன் மூலம் அடையவிருக்கும் ஆதாயத்தை இந்த உரையாடலில் உணர்த்தியிருந்தார் நிர்மலா தேவி.

இந்தப் பிரச்சினையால், பெண்களை உயர் கல்விக்கு அனுப்ப விரும்புகிற சாதாரண பெற்றோர்களும், கல்வியில் நேர்மையையும் தூய்மையையும் விரும்புகிற ஆசிரியர்களும்தான் செய்வதறியாது தவித்துக் கிடக்கின்றனர். குறைந்தபட்சமாக, கடந்த ஓராண்டில் மட்டுமாவது, பல்கலைக்கழகங்கள் சார்ந்த அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் போடப்பட்ட அனைத்துப் பணி நியமனங்களையும் பதவி உயர்வுகளையும் ஆய்வுக்கும் விசாரணைக்கும் உட்படுத்தினால், பாதாளம் வரை பாய்ந்திருக்கிற பல பகீரதப் பூதங்கள் வெளிவரும்.

இதன் முன்கதை, இப்படி இருக்கிறது: ‘மதுரை காமராசர் பல்கலைக்கழக உயரதிகாரிகளுடன் கடந்த பத்து ஆண்டுகள் கொண்டிருந்த பல்வேறு வகைத் தொடர்புகளின் நீட்சியாக, பேராசிரியர் முனைவர் நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு 2018-ல், மூன்று முறை வந்ததாகக் கூறப்படுகிறது. ஜனவரி மாதக் கடைசியில் தொலைநிலைக் கல்விப் பிரிவுத் தேர்வுத்தாள்களைத் திருத்த வந்துள்ளார். அதன் பின்னர், இரண்டாவது முறையாக 09.03.2018 முதல் 29.03.2018 வரை, 21 நாட்கள் நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சி வகுப்பில், தேவாங்கர் கல்லூரியின் சார்பில் கலந்துகொண்டார். பயிற்சி வகுப்பின், அந்த வார முடிவில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலிருந்துதான், 15.03.2018 வியாழக்கிழமையன்று, தன் மாணவியரிடம் செல்பேசியில் பேசியிருக்கிறார். 18.03.2018 ஞாயிற்றுக்கிழமைக்குள் மாணவிகள் நன்கு யோசித்து தங்கள் முடிவுகளைச் சொல்லச் சொல்கிறார்.

மாணவிகளின் புகார்

‘வெளியில் யாருக்கும் தெரிய வேண்டாம்; ரகசியம் காக்கப்பட வேண்டும்’ என்று அவர் கேட்டுக்கொண்டாலும், அந்த உரையாடலைத் திட்டமிட்டுப் பதிவுசெய்த மாணவியர், பேராசிரியை முனைவர் நிர்மலா தேவி மேல் நடவடிக்கை எடுக்கக் கூறி, 19.03.2018 அன்று கல்லூரி நிர்வாகத்தினரிடம் எழுத்துவழி அவர்கள் முறையிட்டிருக்கின்றனர். கல்லூரி நிர்வாகத்தை யார் கைப்பற்றுவது என்கிற மும்முனைப் போட்டியில் இதுவும் கையாளப்பட்டிருக்கலாம் என்கிற தனிக் கதையும் கிளைக் கதையாய்ப் போகிறது. ஆனால், கடிதத்தை யார் எழுதியது என்று நிர்வாகம் கணித வகுப்பு மாணவியரை மிரட்டியபோது, ஒட்டுமொத்த மாணவியரும் ஒற்றைக் குரலில் ‘நாங்கள்தான்’ என்று உரத்துச் சொன்னதாகச் சொல்லப்படும் சம்பவம், மாணவியர் மீது மரியாதையை வரவழைக்கக்கூடியது!

மாணவிகளின் குற்றச்சாட்டின் அடிப்படையில், புத்தாக்கப் பயிற்சி வகுப்பின் 13-வது நாளில் 21.03.2018 அன்றே பேராசிரியை முனைவர் நிர்மலா தேவி கல்லூரிக்குத் திரும்ப வரவழைக்கப்பட்டார். மூன்று மூத்த பேராசிரியர்களின் விசாரணைக்குப் பின், தேவாங்கர் கல்லூரியின் நிர்வாகக் குழுச் செயலரால், அதேநாளில் முனைவர் நிர்மலா தேவி இடைநீக்கம் செய்யப்படுகிறார். அதன் நகல், உயர்கல்வித் துறைச் செயலருக்கும், கல்லூரிக் கல்வித் துறைக்கும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. அதன் பின்னும், மார்ச் இறுதியில் பல்கலைக்கழகம் வந்து விருந்தினர் இல்லத்தில் தங்கிச் சென்றுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏறக்குறைய 24 நாட்களுக்குப் பிறகு, 14.04.2018-ல் இச்செய்தி ஊடகங்களில் வெளிவந்ததன் காரணமாக, கல்லூரி மாணவ-மாணவியரின் போராட்டத்துக்குப் பின், நிர்மலா தேவி மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி, 16.04.2018 அன்று கல்லூரி நிர்வாகத்தால், அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் பதியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், 17.04.2018-ல் பேராசிரியை முனைவர் நிர்மலா தேவி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நடவடிக்கைகளும் நம்பிக்கையும்

12 நாட்கள் மதுரை மத்திய சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கும் திடீரென்று சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அவர்களும் 20.04.2018 அன்று சாத்தூர் நீதிமன்றத்தில் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து அவரை விசாரிக்க அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், சிபிசிஐடி தலைவர் ஜெயந்த் முரளி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதும் கூடுதல் டி.ஜி.பி.யாக அம்ஜேஷ் பூஜாரி நியமிக்கப்பட்டிருப்பதும் இதற்குத் தொடர்பேயில்லாதது என்றே நம்புவோம்!

இந்நிலையில், ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி சந்தானத்தின் ஒரு நபர் உயர்மட்ட விசாரணை, ஆளுநரால் அவசர அவசரமாக 16.04.2018-ல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த விசாரணையில் அவருக்கு உதவுவதற்காக, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகப் பேராசிரியர் கமலியும் மதுரை வேளாண்மைக் கல்லூரி மண்ணியல் மற்றும் சூழலியல் துறைப் பேராசிரியர் தியாகேசுவரியும் நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அவரின் விசாரணையானது, ‘பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், அதிகாரிகளுக்கு இந்த விவகாரத்தில் எந்த அளவு தொடர்பு உள்ளது என்பது தொடர்பாக மட்டுமே இருக்கும்’ என்றும் கூறப்பட்டுள்ளது. 19.04.2018-ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அதன் விசாரணையும் தொடங்கியிருக்கிறது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மீதான முதல் இரண்டு வழக்குகள் போலல்லாமல், இந்த வழக்கின் விசாரணை அறிக்கை உரிய காலத்தில், அதாவது 15 நாட்களுக்குள், நியாயமாக வெளிவரும் என்று நம்புவோம்!

- மு.இராமசுவாமி, பேராசிரியர்.

தொடர்புக்கு: dramaswamy.mu@gmail.com

NEWS TODAY 2.5.2024