Monday, May 28, 2018

Few takers for PG medical seats under management quota in Tamil Nadu

Over one-third of the unfilled PG medical seats under management quota in the deemed medical universities are in Tamil Nadu.



Published: 28th May 2018 03:53 AM | Last Updated: 28th May 2018 03:53 AM | A+A A-

By Express News Service

CHENNAI: Over one-third of the unfilled PG medical seats under management quota in the deemed medical universities are in Tamil Nadu. The Medical Council Committee, functioning under the Union Health Ministry’s Directorate General of Health Services, has surrendered over 150 PG medical degree and diploma seats to various private medical universities in Tamil Nadu. The committee usually conducts the single-window admission counselling for all management seats of PG medical courses in deemed universities across the country.

Even after a mop-up round of counselling, over 450 seats across the country remained unfilled and over 150 were in Tamil Nadu. The private universities are now free to admit students on their own, before the deadline of May 31.

“Non-clinical PG seats were not filled even after the mop-up round (of the counselling). Because there is no scope in these courses,” a Directorate General of Health Services official told Express.“Also across India, over 200 non-resident Indian (NRI) seats were not filled. This is because of the huge fee that the private medical colleges charge. Per annum, Rs 40 lakh fee is collected for each NRI seat and many cannot afford it. These colleges should reduce the fee,” the official added. The official said that the percentile was further reduced, but still, there were no takers for many of the courses.
நடுவழியில் நின்ற சிறப்பு ரயில்; சிக்கி தவித்த திருப்பூர் பயணியர்

Added : மே 28, 2018 02:55


திருப்பூர் : ஷீரடி சிறப்பு ரயிலில் புறப்பட்ட திருப்பூர் பயணியர், நடுவழியில் உணவின்றி தவித்தனர்.

திருப்பூரில் இருந்து, மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள, ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு, திருப்பூரை சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனம், ஐ.ஆர்.டி.சி., ஒப்புதலுடன், கடந்த, 25ம் தேதி, 940 பயணிகள், 14 பெட்டிகளுடன் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. கடந்த, 26ம் தேதி மதியம், தரிசனம் முடித்து, மீண்டும், 2௮ல் திருப்பூர் திரும்பும் வகையில், பயண திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால், நேற்று மதியம் வரை, சீரடி சென்றடையாமல், ரயிலில் பயணியர் காத்திருக்கின்றனர். குறைவான பணம் எடுத்துச் சென்றவர்கள், குழந்தைகளுடன், உணவின்றி தவிப்பதாக தெரிவித்தனர்.

சேலம் கோட்ட, ஐ.ஆர்.டி.சி., மூத்த மேலாளர், விஜ்வனிடம் கேட்ட போது, ''ஷீரடி வழித்தடத்தில் நெரிசல் அதிகம் என்பதால், இதுபோன்று சிறப்பு ரயில் இயக்க அனுமதியில்லை.''இருப்பினும், டிராவல்ஸ் ஏஜென்சியினர், 'புக்கிங்' செய்து விட்டதால், வேறு வழியின்றி ரயில் இயக்க அனுமதியளித்தோம். செல்லும் வழியில் குடிநீர் மற்றும் உணவுக்காக, ரயிலை, 50 நிமிடம் வரை நிறுத்தியுள்ளனர். ''இதனால், அடுத்தடுத்த ஸ்டேஷனுக்கு ரயில் செல்ல தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலால், அந்த வழித்தடத்தில் இயங்கிய, 14 ரயில் போக்குவரத்து தாமதமானது,'' என்றார்.
வங்கி கிளைகள் திறப்பு பணிச்சுமை அதிகரிப்பு

Added : மே 28, 2018 02:31 | 

 'ஐந்து ஆண்டுகளில், வங்கி கிளைகள் திறப்பு அதிகமானதால், வங்கி ஊழியர்களுக்கு, பணிச்சுமை அதிகரித்துள்ளது' என, சங்கங்கள் புகார் தெரிவிக்கின்றன.

இது குறித்து, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கப் பொதுச்செயலர், வெங்கடாச்சலம் கூறியதாவது: தேசிய வங்கிகளில், நாடு முழுவதும், 70 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன், 68 ஆயிரம் கிளைகள் இருந்தன. தற்போது, 90 ஆயிரம் கிளைகள் உள்ளன. புதிதாக, 22 ஆயிரம் கிளைகள், ஐந்து ஆண்டுகளில் துவக்கப்பட்டுள்ளன. புதிதாக துவங்கப்பட்ட வங்கி கிளைகளுக்கேற்ப, ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. புதிய கிளைகளில், ஒரு மேலாளர், காசாளர் மற்றும் கணக்காளர் மட்டுமே பணியில் இருக்கின்றனர். பதவி நிலை இல்லாத அதிகாரிகளை, வங்கிகளின் கிளை மேலாளராக நியமிக்கும் சூழல் தற்போது நிலவுகிறது.

இதன் காரணமாக, ஊழியர்கள் மீது, அதிக சுமை ஏற்றப்படுகிறது. அதிகாரிகள் பற்றாக்குறை காரணமாகவும், வாராக் கடன் மீது சரியான கவனம் செலுத்த தவறியதாலும், ஐந்து ஆண்டுகளில், வாராக் கடனின் அளவு, ஒன்பது லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வாராக் கடன்களை ஈடுகட்ட, வங்கி நிகர லாபத்தில், 70 சதவீதம் தொகை ஒதுக்கப்படுகிறது. இதனால், வங்கி வாடிக்கையாளர்களுக்கு, பல்வேறு கட்டணங்கள் விதிக்கப்படுகிறது. ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு உட்பட, பல்வேறு சலுகைகள் நிறுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
பவுர்ணமி கிரிவலத்துக்கு உகந்த நேரம்

Added : மே 28, 2018 02:17

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் பவுர்ணமி தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசித்து செல்வது வழக்கம். வைகாசி பவுர்ணமி கிரிவலம் செல்ல, பவுர்ணமி திதி இன்று இரவு, 7:34 மணிக்கு துவங்கி, நாளை இரவு, 8:38 வரை உள்ளது. இந்த நேரத்தில், கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
'ஆரூரா... தியாகேசா' கோஷம் முழங்க திருவாரூர் ஆழி தேரோட்டம் கோலாகலம்

Added : மே 28, 2018 02:08





திருவாரூர் : திருவாரூர், தியாகராஜ சுவாமி கோவில் ஆழித் தேரோட்டம், நேற்று, 'ஆரூரா, தியாகேசா' கோஷங்கள் முழங்க, கோலாகலமாக நடந்தது.

திருவாரூர், தியாகராஜ சுவாமி கோவில், வரலாற்று சிறப்புமிக்கது; மிகவும் பழமை வாய்ந்தது.'இக்கோவில் தோன்றிய காலத்தை கூற முடியாத அளவு பெருமை பெற்றது' என, திருநாவுக்கரசர் பாடியுள்ளார். இக்கோவிலுக்கு பெருமை சேர்ப்பது, ஆழித்தேர். இத்தேர், ஆசியாவிலேயே மிகப் பெரியது. அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம், 96 அடி; எடை, 350 டன். முன்புறம், தேரை இழுப்பது போல், நான்கு குதிரை சிலைகள் உள்ளன.

ஒவ்வொன்றும், 26 அடி நீளம், 11 அடி உயரம் உடையவை. இவை, தமிழர்களின் கலைநயத்தை பறைசாற்றும் விதமாகவும், நான்கு வேதங்களை குறிப்பிடும் வகையிலும் அமைந்துள்ளன.தேரை இழுக்கும் வடத்தின் நீளம், 425 அடி, சுற்றளவு, 21 அங்குலம். திருச்சி பெல் நிறுவனம், ஆழித்தேரை நவீனமயமாக்கி, 'ஹைட்ராலிக் பிரேக்' அமைத்துள்ளது.

சிறப்பு பூஜை :

கடந்த, 20ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, தேருக்கு தியாகராஜர் எழுந்தருளினார். அன்று முதல், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன.நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு மேல், விநாயகர், சுப்ரமணியர் தேரோட்டம் நடந்தது.காலை, 6:30 மணிக்கு, கலெக்டர் நிர்மல்ராஜ், உணவு துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் வடம் பிடித்து, ஆழித் தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், 'ஆரூரா... தியாகேசா...' கோஷங்கள் முழங்க, தேரை இழுத்தனர்.

துாறியது மழை :

தேரின் பின் சக்கரங்கள், புல்டோசர்களால் தள்ளப்பட்டன. ஆடி அசைந்து, நிலையில் இருந்து புறப்பட்ட ஆழித்தேர், கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆழித்தேருக்கு பின், அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் இழுக்கப்பட்டன.ஆழித்தேர், மேல வீதிக்கு திரும்பும் போது, மழை துாறல் இருந்தது. இருப்பினும், தொடர்ந்து தேர் இழுக்கப்பட்டு, வடக்கு வீதி வழியாக, மாலை நிலையை அடைந்தது.
அரபிக்கடலில் புயல் சின்னம்; 100 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்

Added : மே 28, 2018 01:28



சென்னை : அரபிக்கடலில் உருவான இரண்டாவது புயல், நேற்று கரையை கடந்த நிலையில், மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதனால், மீனவர்கள், கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில், முன் எப்போதும் இல்லாத வகையில், புயல்கள் உருவாகின்றன. இந்த மாத துவக்கத்தில், கன்னியாகுமரிக்கு மேற்கே, அரபிக்கடலில் புயல் சின்னம் உருவானது. 'சாகர்' என, பெயரிடப்பட்ட இந்த புயல், மேற்கு திசையில் சுழன்று, ஏடன் வளைகுடா வழியாக சென்று, ஏமன் நாட்டில் கரையை கடந்தது. இந்தப் புயல், கரையை கடந்த நாளில், குமரிக்கு மேற்கே, மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதுவும் வலுப்பெற்று, புயலாக மாறியது.

காற்றழுத்த தாழ்வு :

'மேகுனு' என பெயரிடப்பட்ட, இந்த புயல், சாகர் புயல் சென்ற அதே பாதையில் பயணித்து, நேற்று ஓமன் நாட்டில், கரையை கடந்தது. இந்நிலையில், மூன்றாவதாக, அரபிக்கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. கேரளா, கர்நாடகா கடற்பகுதிக்கு அருகே உருவாகியுள்ள, இந்த காற்றழுத்த தாழ்வு, மேலும் வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், மணிக்கு, 100 கி.மீ., வேகத்திற்கு காற்று வீசும் என்றும், வானிலை மையம் கணித்துள்ளது. அதனால், வரும், 30ம் தேதி வரை, அரபிக்கடலில், மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், வங்கக்கடலின் கிழக்கு மத்திய பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும் என, கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகளில், எது புயலாக மாறும்; எது வலுவிழக்கும் என்பது, இரண்டு நாட்களில் தெரியவரும்.

மழை நிலவரம் :நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தேனி மாவட்டம், பெரியாறில், 7 செ.மீ., மழை பதிவானது. வத்திராயிருப்பு, பவானி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், பேச்சிப்பாறை மற்றும் அரியலுாரில், 2 செ.மீ., மழை பெய்துள்ளது. அடுத்த, 24 மணி நேரத்தில், வேலுார், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலுார், பெரம்பலூர் ஆகிய, வடக்கு உள் மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரியில், சில இடங்களில் இடியுடன் கன மழை பெய்யும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஒரே மேடையில் 52 தம்பதியரின் 70ம் திருமணம்

Added : மே 28, 2018 01:20




காரைக்குடி:காரைக்குடியில், 52 தம்பதியருக்கு, 70ம் திருமணம், விமரிசையாக நடந்தது.

மனிதன் செய்ய வேண்டியதாக, 41 வகை சடங்குகள், இந்து மத ஆகமங்களிலும், புராணங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இதில், பல சடங்குகள், குழந்தை பருவத்திலும், வாலிப பருவத்திலும், தந்தையால் செய்யப்பட்டு விடுகின்றன.

அதன் பின், தீயவற்றிலிருந்து தன்னை காத்துக் கொள்ள, 60, 70, 80, 90, 100 வயதில் சாந்தி சடங்குகளை செய்து கொள்கின்றனர். செட்டிநாட்டு நகரத்தார், இந்த சாந்தி நிகழ்ச்சிகளை வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர்.காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில், நேற்று, 52 நகரத்தார் தம்பதியருக்கு, 70வது பீமரதசாந்தி விழா விமரிசையாக நடந்தது. செட்டிநாட்டின், 76 ஊர்களை சேர்ந்த நகரத்தார், இதில் பங்கேற்றனர்.
காலை, 7:00 மணி முதல் கணபதி ஹோமம், ஆயுஷ் ஹோமம், ம்ருத்யுஞ்சய ஹோமம்   நடந்தது. பின், 102 கும்பங்கள், யாகசாலையில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.தொடர்ந்து, தம்பதியருக்கு கும்ப கலசங்கள் வழங்கப்பட்டு, அவர்களது வாரிசுதாரர்கள் அபிஷேகம் செய்தனர். காலை, 11:30 மணிக்கு, 52 ஜோடிகளும், திருப்பூட்டி கொண்டனர். தம்பதியரின் பிள்ளைகள், அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

NEWS TODAY 2.5.2024