Saturday, June 2, 2018

மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு




சேலம் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

ஜூன் 02, 2018, 04:56 AM
சேலம்,

தமிழகத்தில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை மாணவ, மாணவிகள் குடும்பத்துடன் பல்வேறு இடங்களுக்கு சென்று உற்சாகமாக கொண்டாடினர்.

இந்தநிலையில் தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மாநகராட்சி தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.

கோடை விடுமுறை முடிந்து நேற்று முதல் நாளில் பள்ளி மாணவ-மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் தங்களது பள்ளிகளுக்கு சென்றனர். அதாவது, ஒரு வகுப்பில் இருந்து அடுத்த வகுப்பிற்கு செல்வதால் மிகுந்த உற்சாகத்துடன் அவர்கள் சென்றதை பார்க்க முடிந்தது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாள் என்பதால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆட்டோ மற்றும் வாகனங்களில் அனுப்பாமல் தாங்களே பள்ளிவரை அழைத்து சென்று விட்டனர். புதிதாக 1-ம் வகுப்பில் சேர்ந்த குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுத்து பெற்றோரிடம் சற்று அடம் பிடித்து அழுததை காணமுடிந்தது. அதிலும் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற கல்வி அவசியம் என்பதால் அவர்கள் முரண்டு பிடித்து கதறி அழுதாலும் விடப்படியாக தூக்கி சென்றும், வரவேமாட்டேன் என்று கதறி அழுத குழந்தைகளை கண்டும் காணாமலும் அழைத்து சென்றனர். பின்னர் குழந்தைகளை ஆசிரியர்கள் சமாதானம் செய்து பாடம் சொல்லி கொடுத்தனர்.

மாவட்டம் முழுவதும் நேற்று முதல் நாளில் அனைத்து அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வினியோகிக்கப்பட்டன. சேலம் கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி, தலைமை ஆசிரியர் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகம், நோட்டுகள் ஆகியவற்றை வழங்கினார்கள். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறுகையில், சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முதல்பருவத்திற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்றார். முன்னதாக பள்ளிகளில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக பிரார்த்தனை, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
தலையங்கம்

பாடம் தரும் தேர்தல் முடிவுகள்




பா.ஜ.க.வை பொறுத்தமட்டில், இது அதிர்ச்சிதரும் தோல்வி என்றாலும், அடுத்த ஒரு ஆண்டில் தங்களை தயார் படுத்திக்கொள்ள ஒரு பாடமாக அமைந்துவிடும்.

ஜூன் 02 2018, 03:30

அனைத்து அரசியல் கட்சிகளும் 2019–ம் ஆண்டு நடக்கப்போகும் பாராளுமன்ற தேர்தலை மனதில்வைத்து பணிகளை தொடங்கிவிட்டன. பா.ஜ.க.வுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற பல கட்சிகள் முயற்சிகளை தொடங்கியிருக்கின்றன. பா.ஜ.க. தனது

4 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லும் முயற்சியில் மிகத்தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இப்போது 4 பாராளுமன்ற தொகுதிகளிலும், 11 சட்டசபை தொகுதிகளிலும் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க. பெரும்சரிவை சந்தித்துள்ளது. நிச்சயமாக இது அதிர்ச்சிதரும் தோல்விதான்.

2014–ம் ஆண்டில் இருந்து இதுவரை 27 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்துள்ளது. இதில் 5 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது உத்தரபிரதேச மாநிலம் கைரானாவில் நடந்த தேர்தலில் பா.ஜ.க. பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த தொகுதி ஏற்கனவே பா.ஜ.க. வெற்றிபெற்ற தொகுதியாகும். இந்த தொகுதியில் ஏற்கனவே வெற்றி பெற்று மரணமடைந்த பா.ஜ.க. எம்.பி. ஹூக்கும்சிங்கின் மகள் மிரிகங்காசிங் பா.ஜ.க. வேட்பாளராக போட்டி யிட்டார். அவரை எதிர்த்து அஜித்சிங்கின் ராஷ்ட்ரீய லோக்தள வேட்பாளராக ஒரு முஸ்லிம் வேட்பாளர் தபசும்ஹசன் போட்டியிட்டார். தபசும்ஹசனை, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரித்தன. ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் ஒருபக்கம், பா.ஜ.க. ஒருபக்கம் என்று நடந்த இந்த போட்டியில் தபசும்ஹசன் வெற்றிபெற்றார். இதேபோல, மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க. வேட்பாளர் வெற்றிபெற்றிருந்த பந்தாரா–கோண்டியா தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர், பா.ஜ.க. வேட்பாளரை தோற்கடித்து வெற்றிபெற்றார். மராட்டிய மாநிலத்தில் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்த பால்கர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர், சிவசேனா வேட்பாளரை தோற்கடித்தார்.

இதுபோல, நாகலாந்தில் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி, நாகா மக்கள் முன்னணி வேட்பாளரை தோற்கடித்து வெற்றிபெற்றது. ஆக, மொத்தம் நடந்த 4 பாராளுமன்ற தொகுதிகளில் 2 இடம் எதிர்க்கட்சிக்கும், 2 இடம் பா.ஜ.க.வுக்கும் கிடைத்துள்ளது. இதுபோல மேற்குவங்காளம், மேகாலயா, பஞ்சாப், உத்தர பிரதேசம், கேரளா, மராட்டியம், பீகார், ஜார்கண்ட், உத்தரகாண்ட், கர்நாடகம் மாநிலங்களில் நடந்த

11 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் மட்டும் பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ளது. மீதமுள்ள 10 தொகுதிகளில் காங்கிரஸ் 4 தொகுதிகளிலும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஜார்கண்டில் 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கேரளா, உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் மாநிலங்களில் ஆளுக்கொரு இடத்தில் வெற்றிபெற்றுள்ளன. இனி நிச்சயமாக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் மேலும் வலுப்பெறும்.

பா.ஜ.க.வை பொறுத்தமட்டில், இது அதிர்ச்சிதரும் தோல்வி என்றாலும், அடுத்த ஒரு ஆண்டில் தங்களை தயார் படுத்திக்கொள்ள ஒரு பாடமாக அமைந்துவிடும். இந்த தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலை வைத்து, 2019–ம் ஆண்டு நடைபெறபோகும் தேர்தலை கணிக்கமுடியாது என்றாலும், ஒவ்வொரு கட்சியும் தங்களை தயார் படுத்திக்கொள்ள இது ஊக்கமாக அமைந்துவிடும். எந்தவொரு விளையாட்டு போட்டிக்கும் முன்னால் வீரர்கள் தங்களை ‘வார்ம்அப்’ செய்துகொள்வது போலத்தான் இந்த தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
தேசிய செய்திகள்

‘நீட்’ தேர்வுக்கு எதிராக வழக்கு அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு



மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ‘சங்கல்ப் அறக்கட்டளை’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பின் சார்பில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ஜூன் 02, 2018, 05:15 AM

புதுடெல்லி,

‘‘நீட் தேர்வு வினாத்தாள், பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்படும்போது, அந்த மொழி பெயர்ப்புகளில் பிரச்சினைகளும், தவறுகளும் ஏற்படுவதால், அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும்’’ என அந்த வழக்கில் கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் நாகேஷ்வரராவ், சந்தான கவுடர் ஆகியோரை கொண்ட அமர்வின் முன் நேற்று வழக்குதாரரின் வக்கீல் முறையிட்டார். ஆனால் அதை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதிகள், வழக்குதாரர் நிவாரணம் பெறுவதற்கு டெல்லி ஐகோர்ட்டுக்கு செல்லுமாறு கூறினர்.

ஆனால், இதுபற்றி வழக்குதாரரின் வக்கீல் கூறுகையில், ‘‘இது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கி உள்ளது. எனவே திங்கட்கிழமை மீண்டும் சுப்ரீம் கோர்ட்டு அமர்வில் முறையிடுவேன்’’ என்று குறிப்பிட்டார்.

Friday, June 1, 2018

Passengers loss is railways gain

Railways earns Rs 2,670 cr in two years through cancellation fee, but commuters fume at exorbitant penalties soon after booking.



Published: 31st May 2018 04:54 AM | Last Updated: 31st May 2018 04:54 AM

Railways has earned a whopping Rs 2,670 crore in the past two years, through cancellation of train tickets.

 By B Anbuselvan


Express News Service

CHENNAI: Railways has earned a whopping Rs 2,670 crore in the past two years, through cancellation of train tickets. This includes Rs 314.94 crore earnings of Southern Railway, whose jurisdiction spreads over Tamil Nadu and Kerala.

Even as the Civil Aviation Ministry is planning to allow air passengers to cancel flight tickets without any charges within 24 hours, higher cancellation charges of the railways has left passengers fuming.


According to documents on earnings, (a copy of which is available with Express), Indian Railways earned Rs 1,357 crore between April 2017 and March 2018, while the previous year’s earnings was Rs 1,303 crore. Similarly, Southern Railway’s earnings stood at Rs 171.27 crore in 2017-18 and Rs 170.67 crore during the corresponding period the preceeding year. Railways’ earnings through ticket cancellation increased substantially after it raised the cancellation fee in November 2015.


For cancelling confirmed tickets even within one or two days after booking, passengers are penalised with hefty charges, lament passengers.

“I have booked two tickets from Chennai to Thanjavur in Uzhavan Expresss for travel by second week of July. Due to unavoidable circumstances, I changed my plans and cancelled the ticket the next day. While the ticket cost was Rs 450 (Rs 225 a ticket), I have got only Rs 210 back. More than 50 per cent of fare had been deducted,” rued S Ramakrishnan, a native of Thanjavur, who is also a rail enthusiast.


Railway charges Rs 120 for cancelling sleeper class tickets, while Rs 180 is charged for 3rd AC class. Cancellation of 2nd AC and First AC class tickets cost Rs 200 and Rs 240 a ticket respectively. Railways also collects Rs 60 for cancelling waitlisted tickets.

Though railways claimed that higher cancellation fee prevented malpractices in booking, and facilitated genuine rail passengers to get tickets, regular passengers questioned the rationale behind the move in States like Tamil Nadu and Kerala, as there is a huge demand for tickets throughout the year.


S Mohanram, president, Consumer Protection Council, Thiruninravur and a former member of Zonal Rail Users Consultative Committee demanded that passengers be allowed to cancel tickets without charges or with lesser charge within two to three days after booking.

When contacted, Southern Railway Principal Chief Commercial Manager, Priyamvada Viswanathan told Express that cancellation charge is inevitable to run the railway system.


“Unlike other transporters, railways cannot cancel trains when trains have less occupancy. Even if the trains are operated with 100 per cent occupancy throughout the year, railways can recover only up to 60 per cent of operational cost,” she said.

One-year govt. service optional for medicos 

Staff Reporter 

 
VIJAYAWADA, June 01, 2018 00:00 IST

The State Cabinet has approved the proposal to place an ordinance to amend the A.P. Medical Practitioners Registration Act, 1968, making it optional for medical students to work for the government for a year before becoming licensed medical practitioners.

This is in response to the demand from the Junior Doctors Association to remove the condition of one-year government service.

It was learnt that Chief Minister N. Chandrababu Naidu wanted officials of the Law Department to work out the modalities of payment of interim relief under court directions to the victims of the AgriGold scam, which is expected to cost up to Rs. 250 crore, and expressed displeasure at their lethargic attitude in dealing with the issue of auction of properties belonging to the defunct company.

Nod for cold chain co.

The Cabinet has cleared the establishment of Andhra Pradesh Cold Chain Promotion Company Limited under the Companies Act as a Special Purpose Vehicle.

The SPV will enable farmers to extend the life cycle of perishable products and reach out to wider market segments and a larger consumer base.

The Cabinet has cleared the allotment of 56.63 acres in Chittoor district to Apollo Tyres Ltd. for the establishment of a tyre manufacturing plant with an investment of Rs. 4,500 crore.

ADMISSION NOTICE 2018-19

40 தலைமை ஆசிரியர் ஒரே நாளில் ஓய்வு

Added : ஜூன் 01, 2018 01:32

தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 40 பேர், நேற்று ஓய்வு பெற்றனர். உதவி தலைமை ஆசிரியர், பொறுப்பு தலைமை ஆசிரியர்களாக செயல்பட, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும், இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தர்மபுரி மாவட்டத்தில், அரசு பள்ளிகளில், 100 மேல்நிலை, 112 உயர்நிலை, 837 நடுநிலை, 325 தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 19 மேல்நிலைப் பள்ளி, நான்கு உயர்நிலைப் பள்ளி, 17 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் என, மொத்தம், 40 பேர், நேற்று ஓய்வு பெற்றனர்.இதையடுத்து, அந்தந்த பள்ளிகளில், உதவி தலைமை ஆசிரியர்கள், பொறுப்பு தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 'தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், பதவி உயர்வுக்கான பட்டியலில், முதல் இடத்தில் உள்ள ஆசிரியர்கள், பொறுப்பு தலைமை ஆசிரியர்களாக செயல்படுவர்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

NEWS TODAY 22.04.2024