Thursday, September 13, 2018

மாநில செய்திகள்

உலகத்தரம் வாய்ந்த டாக்டர் ரேலா நிலையம் மற்றும் மருத்துவ மையம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்



சென்னை குரோம்பேட்டையில் உலகத்தரம் வாய்ந்த டாக்டர் ரேலா நிலையம் மற்றும் மருத்துவ மையத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பதிவு: செப்டம்பர் 13, 2018 05:00 AM

சென்னை,

சென்னை குரோம்பேட்டை ஒர்க்ஸ் சாலையில் 36 ஏக்கர் பரப்பளவில் டாக்டர் ரேலா நிலையம் மற்றும் மருத்துவ மையம் கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறது. முன்னாள் மத்திய மந்திரி எஸ்.ஜெகத்ரட்சகன் இந்த மருத்துவ மையத்தின் நிறுவனராகவும், மகள் டாக்டர் ஜெ.ஸ்ரீநிஷா நிர்வாக தலைவராகவும் உள்ளார். மருத்துவ மையத்தின் தலைவராகவும், மேலாண்மை இயக்குனராகவும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் கின்னஸ் சாதனை படைத்த டாக்டர் ரேலா இருக்கிறார்.

இதன் திறப்பு விழா நிகழ்ச்சி குரோம்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி, டாக்டர் ரேலா நிலையம் மற்றும் மருத்துவ மையத்தின் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதன்பின்னர், கட்டிடத்தின் உள்ளே குத்துவிளக்கேற்றினார்.

அப்போது டாக்டர் ரேலா நிலையம் மற்றும் மருத்துவ மையத்தின் நிறுவனரும், முன்னாள் மத்திய மந்திரியுமான எஸ்.ஜெகத்ரட்சகன், அவருடைய மனைவி அனுசுயா, மகன் சந்தீப் ஆனந்த்(பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்), மகள் டாக்டர் ஸ்ரீநிஷா, மருமகன் இளமாறன், டாக்டர் ரேலா உள்பட பலர் உடன் இருந்தனர்.

திறப்பு விழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், அமைச்சர் எம்.சி.சம்பத், ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், அப்பல்லோ மருத்துவமனை குழு தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டாக்டர் ரேலா நிலையம் மற்றும் மருத்துவ மையத்தில் 450 படுக்கை வசதிகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர். அறுவை சிகிச்சை செய்வதற்கு உயர்தரத்தில் 14 அரங்குகளும், டயாலிசிஸ் செய்வதற்கு சமீபத்திய தொழில்நுட்பத்திலான 40 எந்திரங்களும் இருக்கின்றன.

மேலும், வெளிநோயாளிகள் டாக்டர்களின் ஆலோசனை பெற்று சிகிச்சை பெறுவதற்கு 75 அறைகள், பரிசோதனை கூடங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. உலகத்திலேயே மிகப்பெரிய கல்லீரல் தீவிர சிகிச்சை பிரிவு இந்த மருத்துவ மையத்தில் உள்ளது.

தொடக்க நிலையில் இருந்து உடல்நிலை மேம்பட உயர்தரத்திலான சிறப்பு கவனம் செலுத்துதல், நவீன ஆம்புலன்ஸ் சேவை போன்ற அனைத்து மருத்துவ சேவைகளையும் நோயாளிகளுக்கு அளிக்க உள்ளனர். மருத்துவ மையத்தின் சிறப்பம்சங்கள் குறித்து மருத்துவ மையத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குனருமான டாக்டர் ரேலா கூறியதாவது:-

மிகவும் உடல்நிலை மோசமான நிலையில் உள்ள நோயாளிகளை காப்பாற்றுவதற்கு தேவையான மருத்துவ சேவைகள் இங்கு இருக்கிறது. காப்பாற்றுவது கடினம் என்று சொல்லும் நோயாளிகளையும் குணப்படுத்துவதற்கு தேவையான அதிநவீன மருத்துவ உபகரணங்களை உள்ளடக்கிய உயர்ரக தீவிர சிகிச்சை பிரிவு இருக்கிறது. மேலும் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் என அனைத்து வகையான உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வசதியும் உள்ளது.

எங்கள் ஆஸ்பத்திரியில் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் சர்வதேச அளவில் இருக்கும். இதனால் சார்க் நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

உயர்தரத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வசதி இருப்பதால் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் அல்ல, நாடு முழுவதும் உள்ளவர்களின் மருத்துவ தேவையை கருத்தில்கொண்டே ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டுள்ளது.

உயர்தர சிகிச்சை வழங்குகிறோம். ஆனால் அதே சமயத்தில் பணக்காரர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்போம் என்று நாங்கள் சொல்லவில்லை. மருத்துவ மையத்துக்கு அருகில் 5 கி.மீ. மற்றும் 10 கி.மீ. சுற்றளவில் உள்ள உள்ளூர்வாசிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தனியாக கவனம் செலுத்த உள்ளோம். அவர்களிடம் ஆதார் அடையாள அட்டை மற்றும் முகவரி சான்றிதழ் இருந்தால் உயர்மதிப்பு கொடுத்து சர்வதேச அளவிலான சிகிச்சை மிகவும் குறைவான விலையில் அளிக்கப்படும்.

தெற்கு ஆசியாவிலே இதுபோன்ற நவீன வசதிகள் உடைய ஆஸ்பத்திரி இல்லை என்று நான் கருதுகிறேன். அனைத்து வகையான சிகிச்சைகளும் எங்கள் ஆஸ்பத்திரியில் அளிக்கப்படும். புற்றுநோய்க்கு உயர்தரமான சிகிச்சை எங்களிடம் இருக்கிறது.

‘ரேடியாலஜி’, எம்.ஆர்.ஐ., நவீன வசதியுடன் ஸ்கேன் செய்யும் எந்திரங்கள், ‘ரோபாட்டிக்ஸ்’ அறுவை சிகிச்சை செய்வதற்கு அதிநவீன உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இருக்கிறது.

ஆஸ்பத்திரியின் நிறுவனர் எஸ்.ஜெகத்ரட்சகன், ‘இவ்வளவு பெரிய ஆஸ்பத்திரி கட்டி உங்கள் கையில் ஒப்படைக்கப்போகிறேன். உங்களிடம் எதிர்பார்க்கிறது எல்லாம் தமிழகத்திலும், இந்தியாவிலும் இதுதான் சிறந்த ஆஸ்பத்திரியாக இருக்கவேண்டும். வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை’ என்று கூறினார். அதற்கான முழு முயற்சியையும் நான் எடுப்பேன்.

லாபத்துக்காக மட்டும் இல்லாமல் சேவையை கருத்தில்கொண்டே இந்த ஆஸ்பத்திரி திறக்கப்பட்டுள்ளது. மருத்துவ சுற்றுலாவுக்கான அனைத்து அம்சங்களும் உள்ளது. புது பிரிவு தொடங்கியிருக்கிறோம். அதில் 96 அறைகள் உள்ளன.

வெளியூர்களில் இருந்து வருபவர்கள் அங்கு தங்கலாம். அது ஓட்டலை போன்றே இருக்கும். தீவிர சிகிச்சை பிரிவில் மட்டும் 140 படுக்கைகள் உள்ளன. இதை வைத்துதான் நாங்கள் மிகவும் நோய்வாய்ப்பட்டவர்களின் நலனில் அக்கறை செலுத்துகிறோம் என்று கூறுகிறேன். இதையும் சேர்த்து மொத்தம் 450 படுக்கைகள் உள்ளன. அரசு ஆஸ்பத்திரிகளிலும் என்னுடைய சேவை தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து டாக்டர் ரேலா நிலையம் மற்றும் மருத்துவ மையத்தின் நிர்வாக தலைவர் டாக்டர் ஸ்ரீநிஷா கூறுகையில், ‘சர்வதேச தரத்திலான அனைத்து வசதிகளை கொண்ட, மிகவும் நிபுணத்துவம் பெற்ற டாக்டர்களால் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக இது இருந்தாலும், சாதாரண ஏழை எளிய மக்கள் வந்து சாதாரண கட்டணத்தில் சிகிச்சை பெறும் வகையில் இருக்கும்’ என்றார்.

மருத்துவ மையம் நேற்று முதல் செயல்பட தொடங்கியது. முதல்நாளிலேயே ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தனர்.
மாவட்ட செய்திகள்

“கணவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் குழந்தையை கொன்றேன்” - கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்



“கணவர் எப்போதும் வாட்ஸ்-அப்பில் மூழ்கி இருந்ததால் அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் குழந்தையை கொன்றேன்” என்று கைதான பெண் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

பதிவு: செப்டம்பர் 12, 2018 05:01 AM மங்கலம்,

குழந்தை சிவன்யாஸ்ரீயை கொலை செய்த தாயார் தமிழ் இசக்கி போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

எனது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம். எனது பெற்றோர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பூரை அடுத்த சாமளாபுரத்திற்கு குடிவந்தனர். நான் அந்த பகுதியில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்தேன். அப்போது அந்த கடைக்கு செல்போன் ரீசார்ஜ் செய்ய நாகராஜ் வருவார். அப்போது அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடையில் எங்களுக்குள் காதலாக மலர்ந்தது. இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு சிவன்யாஸ்ரீ என்ற குழந்தை பிறந்தாள்.

நாகராஜ் அந்தபகுதியில் உள்ள தனியார் மில்லில் மூடை தூக்கும் வேலை செய்து வருகிறார். நான், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். தினமும் வேலைக்கு செல்லும் நாகராஜ், இரவு தாமதமாகத்தான் வீட்டிற்கு வருவார். அப்போது நான் போன் செய்தால் போனை எடுத்து பேச மாட்டார். மேலும் செல்போனில் அவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக தகவல் கூறும். அப்போது தான் அவர் வேறு ஒருவருடன் வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்டு பேசுவது தெரியவந்தது. இதனால் அவருக்கும் வேறு பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருக்குமோ? என்று சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் தினமும் வீட்டிற்கு வந்ததும், அவருடன் சண்டைபோடுவேன். அப்போது எனது மாமியார் தலையிட்டு சமரசம் செய்வார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று நாங்கள் 3 பேரும் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்தோம். உடனே நாகராஜ் வெளியில் சென்றார். அப்போது இரவு 7 மணிக்கு நானும், குழந்தை சிவன்யாஸ்ரீயும் வீட்டில் இருந்தோம். இதற்கிடையில் வெளியூர் சென்று இருந்த எனது மாமியார் தனலட்சுமி வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் குழந்தைக்கு புதுத்துணியை அணிவித்து, பால் கொடுத்து தூங்க வைத்து விட்டு வெளியே சென்று விட்டார். அப்போது நான் வைத்து இருந்த ஸ்மார்ட் போன் மூலம் எனது கணவர் நாகராஜை தொடர்பு கொள்ள முயன்றேன். 6 முறை தொடர்பு கொள்ள முயன்றும் அவர் செல்போனை எடுத்து பேசவில்லை. ஆனால் யாருடனோ வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டு பேசுவது மட்டும் தெரியவந்தது. இதனால் எனக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது.

அவருக்காக குடும்பத்தை உதறிவிட்டு வந்தேன். ஆனால் நான் இனி நடுத்தெருவுக்கு சென்று விடுவேனோ? என்று பயம் ஏற்பட்டது. எனவே இனி இந்த உலகில் வாழ வேண்டாம் என்று, குழந்தையை கொன்று விட்டு நானும் தற்கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி முதலில் ஒரு குச்சியை எடுத்து குழந்தையின் தலையில் ஓங்கி அடித்தேன். இதனால் வலி தாங்க முடியாமல் குழந்தை அழுதது. பின்னர் குழந்தையின் வாயை பொத்தி அருகில் இருந்த பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்தேன். 5 அடி உயரம் கொண்ட அந்த பிளாஸ்டிக் தொட்டியில் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்தது. இதனால் குழந்தை மூச்சுவிட திணறியது. சிறிது நேரத்தில் குழந்தை இறந்தது.

உடனே குழந்தையை வெளியில் தூக்கி கட்டிலில் போட்டு விட்டு நானும், தற்கொலை செய்ய முடிவு செய்து கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றேன். அதற்குள் எனது கணவர் நாகராஜ் வந்து விட்டார்.

இதனால் தற்கொலை முயற்சியை கைவிட்டு, அவசரமாக தூக்குப்போட பயன்படுத்திய சேலையை பீரோவில் வைத்து விட்டு கதவை திறந்தேன். குழந்தை வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து விவரத்தை என்னிடம் கேட்டார். அப்போது மர்ம ஆசாமி ஒருவன் வீட்டிற்குள் புகுந்து குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து விட்டு, என்னையும் தாக்கி விட்டு சென்று விட்டான் என்று கூறினேன். இதை உண்மை என எனது கணவர் நம்பினார். உடனே நானும், அவரும் குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றோம். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக சொன்னார்கள். அதன்படி ஆம்புலன்சில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையில் எனது மாமியார் மங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் என்னை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். முதலில் குழந்தையை கொல்லவில்லை என்று மறுத்தேன். ஆனால் கணவர் மீதுள்ள சந்தேகத்தில் நான்தான் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றேன்.

இவ்வாறு போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். கணவர் மீது உள்ள சந்தேகத்தால் 2½ வயது குழந்தையை தாயே தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்மார்ட் போனால் வந்த வினை

தற்போது குடும்பங்களில் ஸ்மார்ட் போன்களால் தான் பிரச்சினை உருவாகிறது. கணவன் செல்போனில் பிசியாக இருந்தால் மனைவிக்கும், மனைவி செல்போனில் பிசியாக இருந்தால் கணவனுக்கும் சந்தேகம் ஏற்படுகிறது.

அதுபோல்தான் நாகராஜூம், தமிழ் இசக்கியும் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் கடந்த 3 மாதமாக நாகராஜின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் இரவு நேரத்தில் வீட்டிற்கு தாமதமாக வருவதும், யாருடனோ செல்போனில் ஷாட்டிங் செய்வதும் தமிழ் இசக்கிக்கு தெரியவந்தது.

மேலும் கடந்த ஒரு மாதமாக செல்போனை யாரும் திறந்து பார்க்காதவாறு அவர் லாக் செய்து வைத்துள்ளார். இது மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியதால் குழந்தையை கொன்று விட்டு தமிழ் இசக்கி தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட செய்திகள்

புனித ஹஜ் பயணத்தை முடித்துக்கொண்டு 341 பேருடன் முதல் விமானம் சென்னை வந்தது





புனித ஹஜ் பயணத்தை முடித்துக்கொண்டு 341 பேருடன் முதல் விமானம் சென்னை வந்தது.

பதிவு: செப்டம்பர் 13, 2018 04:15 AM

சென்னை

புனித ஹஜ் பயணத்தை முடித்துக்கொண்டு 341 பேருடன் முதல் விமானம் சென்னை வந்தது.

உலகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்ற புனித மெக்கா நகருக்கு ஆண்டுதோறும் துல்ஹஜ் மாதத்தில் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்துக்காக தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலமாக 3,829 பேர் கடந்த ஜூலை மாதம் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றனர்.

புனித ஹஜ் பயணத்தை முடித்துக்கொண்டு ஹாஜிகளுடன் முதல் விமானம் நேற்று மதியம் சென்னை திரும்பியது. இதில் ஒரு குழந்தை மற்றும் 167 பெண்களுடன் 341 பேர் வந்தனர்.

புனித பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியவர்களை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார், மாநில ஹஜ் கமிட்டி செயலாளர் முகமது நசிமுத்தின், தமிழக பிற்படுத்தபட்டோர் நலத்துறை செயலாளர் கார்த்திக் ஆகியோர் விமான நிலையத்தில் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

பின்னர் தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார், நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தில் இருந்து சென்று புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியவர்களுக்கு ஹஜ் மானிய தொகையை வழங்கிய தமிழக முதல்–அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஆண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற அனைத்து வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தது. ஹஜ் பயணம் முடித்துவிட்டு திரும்பியவர்கள் சிறு சிறு குறைகளை தெரிவித்தனர். வருங்காலத்தில் அவை சரி செய்யப்படும்.

ஹஜ் பயணத்துக்கு தமிழகத்துக்கு கூடுதல் இடஒதுக்கீடுகள் வழங்கும்படி கேட்டு பிரதமருக்கு முதல்–மைச்சர் கடிதம் எழுதி உள்ளார். கூடுதல் இடங்களை மத்திய ஹஜ் குழுதான் ஒதுக்க வேண்டும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமான ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. வரும் ஆண்டிலும் கூடுதல் இடங்கள் ஒதுக்க முதல்–அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஹஜ் பயணம் முடித்து சென்னை திரும்பிய முகமது அலி என்பவர் கூறும்போது, ‘‘நாங்கள் புனித ஹஜ் பயணத்தை எந்த சிரமும் இன்றி முடித்து வர தமிழக அரசும், தமிழக ஹஜ் கமிட்டியும் சிறப்பான வசதிகளை செய்து கொடுத்தனர். அவர்களுக்கு எங்கள் நன்றி’’ என்றார்.
மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் குவைத் விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு 172 பேர் உயிர் தப்பினர்





சென்னையில் இருந்து குவைத்துக்கு புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் சென்றபோது எந்திரக்கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்து விட்டார்.

பதிவு: செப்டம்பர் 13, 2018 03:00 AM

ஆலந்தூர்,

சென்னையில் இருந்து குவைத்துக்கு புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் சென்றபோது எந்திரக்கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்து விட்டார். இதனால் 172 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து குவைத்துக்கு நேற்று அதிகாலை 2.50 மணியளவில் விமானம் புறப்பட்டது. அதில் 166 பயணிகளும், 6 விமான சிப்பந்திகளும் பயணம் செய்ய இருந்தனர்.

நடைமேடையில் இருந்து ஓடுபாதைக்கு கொண்டு செல்லப்பட்டு, ஓடுபாதையில் சிறிது தூரம் சென்றபோது விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு ஏற்பட்டு இருந்ததை விமானி கண்டுபிடித்தார்.

இதற்கு மேல் விமானத்தை இயக்கினால் விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் மீண்டும் நடைமேடைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து ஓடுபாதையில் நின்றிருந்த குவைத் விமானம், விமான நிலையத்தில் உள்ள விமான தள்ளு வாகனங்கள் மூலமாக மீண்டும் நடைமேடைக்கு கொண்டு வரப்பட்டது. உடனடியாக தொழில்நுட்ப வல்லுனர்கள் விரைந்துவந்து விமானத்தின் எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் அவர்களால் உடனடியாக பழுதை சரிசெய்ய முடியாததால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தின் எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு மீண்டும் விமானம் குவைத்துக்கு புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓடுபாதையில் சென்றபோதே விமானத்தில் எந்திரக்கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்து விட்டதால் அதில் பயணம் செய்ய இருந்த 172 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
மாநில செய்திகள்

“ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க கூடாது” குண்டு வெடிப்பில் உயிர்தப்பிய முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி எதிர்ப்பு




“ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க கூடாது”, என 1991-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

பதிவு: செப்டம்பர் 13, 2018 05:15 AM

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் வந்தார். அப்போது அவர் குண்டு வெடிப்பில் பலியானார். இதில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளாக நளினி, பேரறிவாளன், சாந்தன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.

இந்த படுகொலை சம்பவத்தின்போது ராஜீவ்காந்தி அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காஞ்சீபுரம் மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் (அப்போது பணியாற்றியவர்) அனுசியா டெய்சியும் படுகாயம் அடைந்து உயிர் பிழைத்தார். தற்போது அவர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக (விழுப்புரம்) பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுக்கும் முயற்சிக்கு, அவர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அனுசியா டெய்சி ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி என் வாழ்நாளின் மிகப்பெரிய கருப்பு நாள் ஆகும். இந்த தினத்தை மறக்க நான் ஒவ்வொரு நாளும் முயற்சித்தாலும், என்னால் முடியவில்லை. அழுகையை அடக்கிக்கொண்டே கனத்த இதயத்துடன் என் காவல் பணியை நிறைவு செய்துவிட்டேன். இருந்தாலும் வேதனையை சுமந்தபடி என் சோகத்தை பகிர்கிறேன்.

அன்றைய தினம், முன்னாள் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்திருந்தார். அப்போது மக்கள் கூட்டத்தில் இருந்து, குறிப்பாக பெண்களை கூட்டத்தை கட்டுப் படுத்தும் நோக்கில் என்னை பாதுகாப்பு அதிகாரியாக நியமித்திருந்தனர். என் தலைமையில் 10 பெண் போலீசார் ராஜீவ்காந்தியை பெண்கள் கூட்டம் நெருங்கவிடாமல் பார்த்துக்கொண்டு இருந்தோம். நான் ராஜீவ்காந்திக்கு மிக அருகில் நின்றுகொண்டிருந்தேன்.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஒருகட்டத்தில் நான் தடுமாறி விழப்போனேன். அப்போது ராஜீவ்காந்தி என்னை பார்த்து, ‘பீ ரிலாக்ஸ்’ (பதற்றம் வேண்டாம்) என்று கூறினார். நான் புன்னகைத்தேன். அப்போது ஒரு சிறுமி இந்தியில் ஏதோ அவரிடம் பேச, அதை ராஜீவ்காந்தி உன்னிப்பாக கேட்டுக்கொண்டு இருந்தார்.

அந்தசமயம் திடீரென்று ஒரு பயங்கர சத்தம் கேட்டது. அடுத்த நொடி என் உடம்பில் எதேதோ துளைத்துக்கொண்டு போனது. அதேவேகத்தில் நான் தூக்கி எறியப்பட்டேன். என் உடலின் இடதுபுறம் முழுவதும் சிதைந்தன. என் கையில் 3 விரல்கள் காணவில்லை. முடிகள் அனைத்துமே கருகிவிட்டன. வெடிகுண்டு வெடித்ததில் அதன் ரவைகள் என் உடலை துளைத்து சிதைத்திருந்தன. ஆனாலும் என் உயிர் என்னை விட்டு பிரியாமல் இருந்தது. அப்போது என்னை சிலர் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். மயக்கம் அடைந்த நான், கண்விழித்தபோது ஆஸ்பத்திரியில் இருந்தேன்.

அவ்வப்போது சிகிச்சைகள் அளிக்கப்பட்டு என் உடலில் இருந்த குண்டின் ரவைகள் அகற்றப்பட்டன. என் மார்பு பகுதி முழுவதும் கரித்துண்டாய் மாறிப்போனதை நினைத்து நினைத்து அழுதேன்.

சுமார் 3 மாதம் வரை சிகிச்சையில் இருந்தேன். சிகிச்சைக்கு பிறகும் வலி என்னை பாடாய் படுத்தியது. இருந்தாலும் நான் நேசித்த காவல் பணி என்னை விட்டு போகக்கூடாது என்பதால், மீண்டும் காவல் பணிக்கு உடனடியாக திரும்பினேன். என் உழைப்பு, என் நம்பிக்கை எனக்கு பதவி உயர்வை தந்தது. நாகையில் மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 2 வருடம் தலைமையக பணி, ஒரு வருடம் விழுப்புரத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விசாரணை பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி, கடந்த மே மாதம் ஓய்வு பெற்றேன்.

தற்போது நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு துடிப்பதையும், அரசியல் கட்சிகள் போராடுவதையும் பார்க்கும்போது என் நெஞ்சு கொதிக்கிறது. இவர் களை விடுதலை செய்ய நியாயமான காரணத்தை யாராவது சொல்லமுடியுமா? ‘இத்தனை ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டார்கள், பாவம்’, என்று பேசுபவர்கள், என்னை போன்றோர் நடைபிணங்களாய் வாழ்வதை நினைத்து பார்க்காதது ஏன்?

இவர்களை விடுவிக்கட்டும், ஆனால் இவர்களால் செத்துமடிந்த அத்தனை பேருக்கும் உயிர் கொடுத்து எழுப்பிட முடியுமா? என் கை திரும்ப எனக்கு கிடைக்குமா? இந்த நாட்டில் பிறந்ததற்கு, நேர்மையான காவல்பணி செய்ததற்கு இதுபோன்ற வருத்தம் நிறைந்த பரிசுகள் கிடைக்கவேண்டுமா? ஒரு தேச தலைவரை, அப்பாவி மக்களை குண்டு வைத்து கொன்ற பாவிகளை விடுதலை செய்து நடமாட வைக்க இந்த அரசு நினைக்கிறதா? இதற்கு மக்கள் துணைபோகிறார்களா? குற்றவாளிகளுக்கு பரிதாபமும், சாதகமான தீர்ப்பும் கிடைத்துவிட்டால் அது நீதி ஆகாது.

தற்போது அரசியலுக்காக யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம். ஆனால் காயத்தின் சுவட்டை இன்னமும் சுமந்து கொண்டிருக்கும் என் போன்றோரின் கண்ணீருக்கு யாருமே பதில் சொல்லிவிட முடியாது. குற்றத்துக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கவேண்டும். செய்த தவறை நினைத்து நினைத்து சம்பந்தப்பட்டோர் வருந்தவேண்டும்.

இதற்கு முன்பு நான் அரசு பணியில் இருந்தேன். அதனால் என் கடமைக்கு கட்டுபட்டு நான் எதுவும் பேசவில்லை. இப்போது நான் பணியில் இல்லை. எனவே என் வேதனையை தெரிவிக்கிறேன். நளினி உள்பட அந்த 7 குற்றவாளிகள் வெளியே வரக்கூடாது. அவர்களை விடுதலை செய்யக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.
HC confirms judicial officer’s retirement

CHENNAI, SEPTEMBER 13, 2018 00:00 IST

His conduct in the court was assessed to be poor

The Madras High Court has confirmed the compulsory retirement of a judicial officer because his conduct inside as well as outside the court was assessed to be either poor or bad and his reputation with respect to honesty, integrity and impartiality was assessed to be either doubtful or poor in the annual confidential reports (ACR).

Dismissing a writ petition filed by S. Murugadoss who was serving as the IV Assistant Judge in the City Civil Court here at the time of his compulsory retirement at the age of 50, a Division Bench of Justices M. Venugopal and M. Nirmal Kumar held that there were good and sufficient reasons for having forced him to retire.

“To secure efficiency in public service and to preserve honesty and integrity among the serving judicial officers, the inefficient/deadwood or dishonest person can be retired compulsorily... When the performance of an employee is unsatisfactory, it is detrimental or prejudicial to the interest of the institution,” the Bench observed.

Authoring the judgment, the senior judge in the Bench also said that the powers vested on the High Court judges to make entries in the ACR of subordinate judicial officers would not only help in keeping a vigil over the performance of the members of the subordinate judiciary but also assist in shaping the career of the judicial officers. In so far as the history of the present case was concerned, Mr. Justice Venugopal pointed out that the writ petitioner had joined the Tamil Nadu State Judicial Service as a Civil Judge (Junior Division) in 1995 and got promoted to the Senior Division in 2007.

However, his performance was assessed to be poor/bad in 2004 and 2006.

Full court’s approval

The Administrative Committee of the High Court comprising top seven judges met on April 23, 2009, and decided that he should not be allowed to continue in service. The decision was approved in the full court (all judges) meeting held on March 11, 2010, when the petitioner had undergone a renal transplantation.

When the full court resolution was forwarded to the government for issuing a G.O., the latter called for materials based on which a decision was taken to retire the petitioner compulsorily. However, the Registrar General refused to part with the materials on the ground that the government could not review the decision of the full court. Hence, a G.O. was issued on September 5, 2011, retiring the petitioner from service compulsorily with effect from November 1, 2011.
No prima facie case of corruption made out against CM, says 
DVAC

CHENNAI, SEPTEMBER 13, 2018 00:00 IST


Marriage between parties no reason to book case: AG

The Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) on Wednesday told the Madras High Court that a complaint by DMK organising secretary R.S. Bharathi “does not show, on the face of it, a prima facie case of cognisable offence” for the registration of a First Information Report against Chief Minister Edappadi K. Palaniswami.

Appearing before Justice A.D. Jagadish Chandira, Advocate General Vijay Narayan said the Chief Minister’s son P. Mithun got married only in 2014 whereas his in-laws were in the business of laying roads since the 1990s. They had obtained the contracts from successive governments, including the period when the DMK ruled the State, and therefore, could not be prevented all of a sudden, he said.

Opposing the DMK leader’s plea to book a case against the Chief Minister, the Advocate General said the petitioner could not level wild allegations and expect them to culminate in the registration of an FIR, especially when the DVAC had already conducted a thorough preliminary inquiry.

Asserting that no cognisable offence had been made out, he said: “A marriage between two parties is not a cognisable offence. Awarding contracts is not a cognisable offence.”

He went on to add that the petitioner’s plea had actually become infructuous since the DVAC had completed its preliminary inquiry and submitted a report to its Director (an officer in the rank of Additional Director General of Police) as well as the Vigilance Commissioner (a post held by a senior Indian Administrative Service officer) on August 28. Now, it was up to those two officials to take a call on further course of action.

If the officials were satisfied with the report, they may accept it and drop further action. On the other hand, if they disagree with the conclusions arrived at by the investigating officer, they may send the report back with a direction to conduct a fresh inquiry, the AG said and submitted a copy of the report in a sealed cover. However, the judge chose not to open it and directed the High Court Registry to keep it in safe custody.

He, instead, directed the DVAC to file a status report, also in a sealed cover, by Monday listing out the steps taken by it on a day- to-day basis between June 13 and August 28. The direction was issued after the AG said that even if the two officials decide to drop further action, the petitioner would not be without any remedy and that he could pursue any course that was available to him under the criminal law.

In his submissions, senior counsel N.R. Elango, representing the petitioner, wondered how the preliminary inquiry could have been completed by the DVAC without even obtaining a statement from the complainant. “How can I expect this agency to come and say, yes our CM is guilty of corruption? That is the reason I have now sought for a court monitored probe by a special investigation team on my complaint,” he said.

NEWS TODAY 01.07.2026