Sunday, September 10, 2023
Saturday, September 9, 2023
இன்றைய சிந்தனை🙏
Academics oppose V-C appointments by Governor
Faculty associations oppose Ravi’s move on V-C search committees for three universities
Announcement on BU V-C search panel by Governor evokes curiosity among faculty
09.09.2023
நீதித் துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்: உயா்நீதிமன்ற நீதிபதி வேதனை
நீதித் துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்: உயா்நீதிமன்ற நீதிபதி வேதனை
'லஞ்ச ஒழிப்பு தொடா்பான வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளை காணும்போது, நீதித் துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்' என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனையுடன் தெரிவித்தாா்.
2008-ஆம் ஆண்டு தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பாதுகாவலருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோா் மீது 2012-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கிலிருந்து, ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளாா்.
இதேபோல 2001- 2006-ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சி காலத்தில் சமூக நலத் துறை அமைச்சராக இருந்த பா. வளா்மதி, அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இருந்து பா.வளா்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், 2012-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவையும் மறு ஆய்வு செய்யும் வகையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளாா்,
இவ்விரு வழக்குகளும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன.
வழக்கை விசாரித்த நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறையின் நடைமுறை மோசமாக உள்ளது. ஒவ்வொரு வழக்கிலும் இதே நடைமுறைகள் பின்பற்றப்படுவது அதிா்ச்சியளிக்கிறது. முன்னாள் அமைச்சா் பா. வளா்மதிக்கு எதிரான வழக்கில் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரித்து ஏராளமான ஆவணங்களை ஆய்வு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா் மேல்விசாரணை கோரி தாக்கல் செய்த மனு அடிப்படையில், விசாரணை நடத்திய அதே புலன் விசாரணை அதிகாரி வழக்கை முடித்து வைக்கும்படி கூறியிருக்கிறாா்.
அமைச்சா் ஐ பெரியசாமிக்கு எதிரான வழக்கை பொருத்தவரை, வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனுவும், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவும் உயா் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், வழக்கு தொடுக்க அனுமதி வழங்கிய விவகாரத்தின் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.
கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளை பாா்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும். இந்த வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதால் என்னை வில்லனாக கருதுகின்றனா். தனிப்பட்ட முறையில் இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுக்கவில்லை என்று நீதிபதி தெரிவித்தாா். பின்னா், இரு வழக்குகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை, அமைச்சா் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சா் வளா்மதி ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்.12-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தாா்.
தற்கொலை எண்ணம் மாற்றுவோம்
dinamani
SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies
SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies Manash.Go...
-
NBEMS launches official WhatsApp channel for real-time updates The platform will offer timely updates on examinations, accreditation, and tr...
-
முடியும் என்றால் முடியும்! சென்னை மாநகரை தராசின் ஒரு தட்டிலும் எஞ்சிய மற்ற தமிழ்நாட்டுப் பகுதிகளை இன்னொரு தட்டிலும் வைத்தால் சமமாக இருக்கும்...



































