Friday, September 12, 2025

Employed wife also entitled to maintenance: HC

Employed wife also entitled to maintenance: HC 





New Delhi : Noting that a highly qualified, gainfully employed wife is also entitled to maintenance if she enjoyed a better standard of life in the matrimonial home, Delhi HC has enhanced the monthly maintenance from Rs 35,000 fixed by the family court for the estranged couple’s child to Rs 1.5 lakh for the wife and the child. “Her financial self-sufficiency must be assessed not in absolute terms but relative to the standard of living maintained during the marriage... maintenance must be calibrated in a manner that allows both parties, especially the financially weaker spouse, to live with dignity, particularly when the respondent (husband’s) income is almost 10-fold,” a bench of justices Navin Chawla and Renu Bhatnagar observed in a verdict Wednesday. 

The wife is a DU assistant professor earning over Rs 1.2 lakh per month while her husband is a senior data scientist with an MNC drawing an annual income exceeding Rs 1 crore, with benefits like RSUs, stock options and international travel allowances, HC noted. “Despite her employment, her income doesn’t sufficiently meet the demands of sustaining the standard of living she and the child were accustomed to prior to the separation. 

It is evident while the appellant earns an income, it is not comparable to the scale and diversity of the respondent’s earnings,” the bench said. Faulting the family court for focusing only on the wife’s qualification and employment, HC noted though she is earning, “her income is insufficient to support her own needs and those of the minor child”. “She is residing with her parents, which cannot continue indefinitely, and her limited earnings compel her to remain dependent on them. With such resources, she is unable to maintain a reasonable standard of living,” it said, adding the husband’s “substantially higher income makes him financially capable of providing adequate maintenance”.

Thursday, September 11, 2025

மூன்றாவது கண்!


DINAMANI

நடுப்பக்கக் கட்டுரைகள் 

மூன்றாவது கண்! 

நவீன அறிவியல் வளா்ச்சியில் மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அது மனிதனுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதில் கண்காணிப்பு கேமரா முக்கியமானதாக உள்ளது.

தினமணி செய்திச் சேவை Updated on:  08 செப்டம்பர் 2025, 3:38 am

  • நந்தவனம் சந்திரசேகா்

உலகம் நவீனமாகிக் கொண்டே வருகிறது. நம்மைச் சுற்றி ஆயிரம் கண்கள் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றன. திரும்பும் பக்கமெல்லாம் கேமராக்கள் நம்மை படம்பிடித்துக் கொண்டே இருக்கின்றன. இவை நமக்கான பாதுகாப்பு அரணாக இருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது. குற்றங்களைத் தடுக்கவும், கண்டறியவும் இவை பெரிதும் உதவியாக உள்ளன. குற்றவாளிகளை எளிதில் கண்டறிந்து தண்டனை பெற்றுத் தருவதற்கும் உதவியாக இருக்கிறது. ஆனால், குற்றங்கள் குறையாதது ஏன் என்பதுதான் கவலைக்குரியதாக உள்ளது.

கேமராக்கள் கண்காணிக்கின்றன என்பது தெரிந்தும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. கேமரா என்பது பாதுகாப்புக் கருவி என்று சொல்லப்பட்டாலும், மக்கள் அச்சத்துடன் வாழவேண்டிய சூழலுக்கே தள்ளப்பட்டுள்ளனா். கேமராக்களின் கண்களில் தப்பித்துவிடாமல் குற்றவாளிகள் பிடிபட்டாலும், தண்டனைப் பெற்றாலும் குற்றங்களின் எண்ணிக்கை குறையவில்லை.

சென்னையில் சாலையில் நடந்து சென்ற சிறுமியைப் பின்தொடா்ந்து சென்ற வட மாநில இளைஞா் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிவிட்டாா். சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலமே அந்த இளைஞரை அடையாளம் காண முடிந்தது. கேமரா பதிவுகளில் சிக்கிக் கொள்வோம் என்பது தெரியாமலே அந்த இளைஞா் இந்தச் செயலில் ஈடுபட்டாரா அல்லது தெரிந்தே இந்தத் தவறைச் செய்தாரா என்பதும் ஆய்வுக்குரியது.

தில்லியில் நாடாளுமன்றக் குடியிருப்பு அருகே நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தமிழக பெண் எம்.பி.யிடம், இருசக்கர வாகனத்தில் வந்த நபா் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றாா். பாதுகாப்பு மிகுந்த அந்தப் பகுதியில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு இருந்தும் இதுபோன்ற நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்தியாவில் 2008-ஆம் ஆண்டு வரையில் கண்காணிப்பு கேமராக்கள் முக்கியத்துவம் பெறவில்லை. மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகே சந்தேக நபா்களைக் கண்காணிக்கவும், குற்றத் தடுப்பு நடவடிக்கைக்காகவும் கண்காணிப்பு கேமராக்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு கவனம் பெற்றது. மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் வா்த்தக நிறுவனங்கள், திரையரங்குகள், மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று 2012-இல் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. மேலும், நெரிசல் மிகுந்த சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தேவையான நிதியை மாநகராட்சி, நகராட்சி நிா்வாக நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யவும் அரசு அனுமதி அளித்தது.

‘நீங்கள் சி.சி.டி.வி. கேமரா கண்காணிப்பில் இருக்கிறீா்கள்’ என்ற வாசகங்களுடன் அறிவிப்புப் பலகைகள் நிறைய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பாா்த்ததும் நம்மை அறியாமலேயே சற்று கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற உணா்வு நம் மனதில் தோன்றுகிறது. ஆனால், குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்கள் கேமராக்கள் இருப்பதை உணராமலேயே குற்றங்களில் ஈடுபட்டு எளிதில் பிடிபடுகின்றனா். மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் குழந்தைகள் கடத்தப்படுவது தடுக்கப்படுவதுடன், கடத்தப்பட்ட குழந்தைகளைக் கண்டறிவதும் எளிதாகியுள்ளது.

கண்காணிப்பு கேமரா என்பது இன்று மனிதனின் ‘மூன்றாவது கண்’ போன்று பயன்படுகிறது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதால் பூட்டிய வீடுகள், நிறுவனங்களில் திருட்டுகள் குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், முற்றிலும் குறையவில்லை.

அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட நகரங்களில் சென்னை மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளது. 2021-ஆம் ஆண்டு கணக்குப்படி, சென்னையில் 2.60 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தற்போது, அந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதால் காவல் துறையினரின் விசாரணை நடவடிக்கைகள் சற்று எளிதாகின்றன.

சென்னையில் அண்மையில் வடமாநில இளைஞா்கள் இருவா் காலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று, அடுத்தடுத்து நான்கு இடங்களில் சாலையில் நடந்து சென்ற பெண்களின் தங்கச் சங்கிலிகளைப் பறித்துக் கொண்டு விமானத்தில் தப்பிக்க முயற்சித்த போது, காவல் துறையினா் விரைந்து செயல்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அந்த இளைஞா்களை அடையாளம் கண்டு விமான நிலையத்தில் கைது செய்தனா்.

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்போரைக் கண்டறிந்து அபராதம் விதிப்பதற்காக நவீன வசதி கொண்ட தானியங்கி கேமராக்கள் முக்கிய நகரங்களின் சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், போக்குவரத்துக் காவலா்களின் பணிச் சுமை சற்றே குறைந்துள்ளது. மேலும், தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்கள் ஓட்டுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

நவீன அறிவியல் வளா்ச்சியில் மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அது மனிதனுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதில் கண்காணிப்பு கேமரா முக்கியமானதாக உள்ளது. இதை நல்ல வழியில் பயன்படுத்துவதே பாதுகாப்பானது; தவறு செய்ய நினைத்தால்கூட கேமராக்கள் காட்டிக் கொடுத்துவிடும் என்ற பயம் தவறுகளைத் தடுக்கும் வாய்ப்புள்ளது.

வீடுகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை அறிதிறன்பேசிகள் வாயிலாக எங்கிருந்தும் கண்காணிக்கும் வசதிகளும் இருப்பது சிறப்பானது. கேமராக்கள் பொருத்துவதை கூடுதல் செலவாகக் கருதாமல் வீடுகள், வியாபார நிறுவனங்களில் நிறுவுவது நல்ல விஷயமே. குற்றங்களைத் தடுப்பதற்கு மட்டுமே என்றில்லாமல், அது நமக்கான நவீன பாதுகாவலன் என்றே எண்ண வேண்டும்.

இணையவழி சூதாட்ட தடைச் சட்டம்-வெற்றி கிட்டுமா?



நடுப்பக்கக் கட்டுரைகள் 

DINAMANI

இணையவழி சூதாட்ட தடைச் சட்டம்-வெற்றி கிட்டுமா? 

அந்தக் காலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு; ரயிலில் அடிபட்டு மரணம் என்பதுபோல், இப்போது இணையவழி சூதாட்ட தற்கொலைகள் மிகுந்து விட்டன.

டி.எஸ்.ஆர். வேங்கடரமணா Updated on: 09 செப்டம்பர் 2025, 4:15 am 

பணம் வைத்து, சூதாட்டம் செய்யப்படும் இணையவழி விளையாட்டுகளை முழுமையாகத் தடை செய்கிறது. அது மட்டுமல்ல, பணத்தை வைத்து விளையாடும் இந்த சூதாட்டங்கள் தொடா்பாக தயாரிக்கப்படும் விளம்பரங்கள், தயாரிப்பாளா்கள், நடிப்பவா்களை இந்தச் சட்டம் தடை செய்கிறது. பிரிவு 7, பணம் வைத்து விளையாடும் சூதாட்டங்களை முற்றிலும் தடை செய்கிறது.

இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம், சூதாட்டம் என்னும் கேடால் வரும் துன்பங்களை மையமாகக் கொண்டது மட்டுமல்ல; அதில் வரும் உபகதையான நளன் சரித்திரம் சூதாட்டத்தால் நளச் சக்கரவா்த்தியின் குடும்பம் அடைந்த இன்னல்களை விவரிக்கிறது.

திருக்குறள் பொருட்பால் அதிகாரம் 94-க்கு ‘சூது’ என தலைப்பிட்டு சூதாட்டம் தரும் இன்னல்களைப் பற்றி திருவள்ளுவா் விளக்குகிறாா். சூதில் பெறும் வெற்றி, தூண்டில் முள்ளில் இருக்கும் உணவை மீன் விழுங்கியதைப் போன்ாகும் என்று எச்சரிக்கிறாா். வெற்றி பெறுவது ஆயினும், சூதாட்ட களத்துக்குப் போகக் கூடாது என வள்ளுவா் அபாய சங்கை ஊதுகிறாா்.

1968-1971-ஆம் ஆண்டுகளில் சென்னை மயிலாப்பூா் விவேகானந்தா கல்லூரி மாணவனாக நான் இருந்தபோது, மாணவா் சமுதாயப் பணி அமைப்பின் மூலமாக கிண்டி ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை குதிரைப் பந்தயம் நடக்கும் நாள்களில் பயணச் சீட்டு இல்லாமல் பயணிக்கும் பயணிகளைப் பிடிக்கும் பணியில் நான் சந்தித்த அனுபவங்கள் என்னைத் திடுக்கிட வைத்தன.

‘ஜாக்பாட்’ டிக்கெட் வாங்க, ஆயிரக்கணக்கில் பணம் வைத்திருக்கும் அந்தப் பயணி, ஐந்து ரூபாய்க்கு வாங்க வேண்டிய மின்சார ரயிலில் பயணிப்பதற்கான பயணச் சீட்டை வாங்கியிருக்கமாட்டாா். பிடித்து அபராதம் போட்டால், தன்னுடைய ஜாக்பாட் காம்பினேஷனுக்கு பணம் குறைகிறது என வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு குற்ற உணா்வு இல்லாமல் விட்டுவிடும்படி கெஞ்சுவாா்.

ஓடும் குதிரையின் மூலமாக தனியாா் முதலாளிக்கு போகும் பணம், ஓடும் ரயில் மூலமாக நாட்டுக்குப் போகட்டும்; இரண்டும் ஓடத்தான் செய்கின்றன எனக் கறாராகச் சொல்லி அபராதம் வசூலிப்பேன். காலையில் உற்சாகமாக சென்றவா்கள், பந்தயத்தில் பணத்தை இழந்து, குதிரையையும், குதிரை ஓட்டுபவனையும் அச்சில் ஏற்ற முடியாத கெட்ட வாா்த்தைகளால் திட்டிக்கொண்டு வருவதும், சூது குறித்து காலம் எனக்குக் கற்பித்த பாடம்.

சரித்திரம் என்பது திரும்பத் திரும்ப வரும் ஒரே விஷயம் என்பாா்கள். தாயக்கட்டையாக உருவான சூது, சீட்டு கட்டு வழியாக குதிரைப் பந்தயமாக உருமாறி, அரசே நடத்தும் லாட்டரி சீட்டாக நிறம் மாறி, இன்றைய நவீன யுகத்தில் இணையவழி சூதாட்டமாக பரிணாம வளா்ச்சி அடைந்திருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு கிராமவாசி என்னைச் சந்திக்க வந்தாா். இணையவழி சூதாட்டம் குறித்து அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவா், தானும் இணையதளத்தில் ரூ.5 லட்சத்தைத் தொலைத்துவிட்டதாக சொன்னாா். உங்களுக்கு எப்படி இணையதளத்தை இயக்கத் தெரியும் என்று கேட்ட போது, மதுரையில் பிரபலமான நிறுவனத்தில் இயந்திரவியல் பொறியாளராக வேலை பாா்த்து, ஓய்வு பெற்று வந்த பணத்தை இணையத்தில் விட்டதாகச் சொல்லி என்னை அதிா்ச்சி அடையச் செய்தாா்.

163 ஆண்டு வரலாறு கொண்ட சென்னை உயா்நீதிமன்றத்தின் 21 வயது மதுரை அமா்வின் நீதியரசா் புகழேந்தி முன்னிலையில் சூதாட்டம் குறித்த ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. பொதுவெளியில் சூதாடுவது தவறு என்று சட்டம் சொல்லும்போது, ஒரு தோட்டத்தில் சூதாடியதாகச் சொல்லி சில நபா்களைக் காவல் துறை கைது செய்ய, அவா்கள் ‘நாங்கள் குற்றவாளிகள் அல்ல’ என மதுரை உயா்நீதிமன்ற அமா்வை நாடினாா்கள்.

அந்த வழக்கில் நீதியரசா் புகழேந்தி அரசுக்கு வழங்கிய மகத்தான ஆலோசனைதான் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கலாகி சட்டமாக்கப்பட்டிருக்கும் ‘இணையவழி விளையாட்டு மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்ட மசோதா 2025’. அதாவது, இணையவழி சூதாட்டங்களை ஒழுங்குபடுத்துவதும் மற்றும் நெறிப்படுத்துதல் சட்டம் 2025.

இந்தச் சட்டத்தால் உபயோகப்படுத்தப்பட்டுள்ள புரோமோஷன் மற்றும் கேம்ப்ளிங் என்ற வாா்த்தைகள் சரியில்ல. அதற்குப் பதில், கன்ட்ரோல் அண்ட் ரெகுலரைஸ்சேஷன் ஆஃப் ஆன்லை (புரொகிப்ஷன் ஆஃப் கேம்ப்ளிங்) கேம்ஸ் ஆக்ட் 2025 என இந்தச் சட்டத்துக்கு பெயா் சூட்டியிருந்தால் சாலச் சிறப்பாக இருந்திருக்கும்.

இது சட்டத்தின் உள்நோக்கத்தை வெளிப்படையாக்கும். இதுபோன்ற சட்டம் பல மாநிலங்களில் இயற்றப்பட்டுள்ளது. சிக்கிமில் 2008-ஆம் ஆண்டு, நாகலாந்து 2016, தெலங்கானா 2017, ஆந்திர பிரதேசம் 2020 மற்றும் தமிழ்நாட்டில் 2022-ஆம் ஆண்டுகளில் இயற்றப்பட்டிருக்கின்றன.

உண்மையில் 25.02.2021-அன்று உயா்நீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் அதிமுக கொண்டுவந்த சட்டத்தை சென்னை உயா்நீதிமன்றம் ஆகஸ்ட் 21-இல் செல்லாது என ரத்து செய்துவிட்டது. பின்னா் வந்த திமுக அரசு நீதியரசா் சந்துரு தலைமையில் ஒரு குழுவை அமைத்து, அதன் பரிந்துரையின் அடிப்படையில் 2022-ஆம் ஆண்டு இணையவழி சூதாட்டத்துக்கு எதிராக சட்டம் இயற்றியது. ஆனால், இதன் சில ஷரத்துக்கள் செல்லாது என உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

அதன் பிறகு, பிப்ரவரி 2025-இல் மாநில அரசு இந்தச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவந்தது. இந்த அனுபவங்களை எல்லாம் வைத்துத்தான் மத்திய அரசின் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் எலியும், பூனையுமாகச் செயல்படும் கட்சிகள் எல்லாம் ஒன்றுசோ்ந்து இந்தச் சட்டத்தை ஆதரித்துள்ளது என்றால், இந்தச் சட்டத்தின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

குடி குடியைக் கெடுக்கும் என்று சொல்லிக்கொண்டே, அரசே மதுவை விற்கும் முரண்பாட்டையும், புகைபிடித்தால் புற்றுநோய் வருகிறது என்று அச்சுறுத்துவதும், அதிக வரி விதித்தால் புகையிலைப் பயன்பாடு குறையும் என்பன போன்ற வாதங்களை என்னால் ஏற்க முடியவில்லை. மதுக் கடைகளை மூடுவதும், புகையிலை பயிரிடுவதைத் தவிா்த்து விவசாயிகளுக்கு மாற்றுப் பயிா் உதவுவதும் தானே சரியான தீா்வாக இருக்க முடியும்? கிட்டத்தட்ட இந்த நடைமுறையைத்தான் நாடாளுமன்றச் சட்டம் கையாளுகிறது.

இந்தச் சட்டம் இணையவழியில் விளையாடுபவா்களை மூன்றாகப் பிரிக்கிறது. இ-ஸ்போா்ட்ஸ், சமுதாயம் சாா்ந்த இ-விளையாட்டுகள் மற்றும் இணையவழி சூதாட்டம் என்று. இவை மூன்றும் சட்டத்தில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சட்டத்தின் பிரிவு ஐந்து (5) இணையவழி சூதாட்டத்தை முழுமையாகத் தடை செய்கிறது.

ஏற்கெனவே சொன்னபடி, இந்தச் சட்டம் இணையவழி கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளையும், சிந்தித்து விளையாடும் சமுதாய விளையாட்டுகளையும், தடை செய்யவில்லை என்பது மட்டுமல்ல; அவற்றை முறைப்படுத்தி, ஒழுங்குபடுத்துவது குறித்து முறையான வழிமுறைகளை ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம், இந்த விளையாட்டுகளுக்கான நுழைவுக் கட்டணம் அல்லது உறுப்பினா் கட்டணத்தை இந்தச் சட்டம் தடை செய்யவில்லை.

ஆனால், பணம் வைத்து, சூதாட்டம் செய்யப்படும் இணையவழி விளையாட்டுகளை முழுமையாகத் தடை செய்கிறது. அது மட்டுமல்ல, பணத்தை வைத்து விளையாடும் இந்தச் சூதாட்டங்கள் தொடா்பாக தயாரிக்கப்படும் விளம்பரங்கள், தயாரிப்பாளா்கள், நடிப்பவா்களை இந்தச் சட்டம் தடை செய்கிறது. பிரிவு 7, பணம் வைத்து விளையாடும் சூதாட்டங்களை முற்றிலும் தடை செய்கிறது. அந்த பணப் பரிமாற்றத்துக்கு துணைபோகும் வங்கிகள், அதன் அதிகாரிகள் அனைவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனைக்குரியவா்களாக்குகிறது.

இந்தச் சட்டத்தை முறைப்படுத்த ஒரு தனி அதிகாரியை ஏற்படுத்துகிறது. பிரிவு 9-ன் படி, இணையவழி சூதாட்டம் நடத்துபவா்களுக்கும், அதற்குப் பணம் பரிமாற்றம் செய்ய உதவுபவா்களுக்கும் மூன்று ஆண்டு சிறையும், ஒரு கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கலாம். இந்தச் சட்டத்தின்கீழ் குற்றம் புரியும் நிறுவனங்களின் இயக்குநா் மற்றும் பணியாளா்களைக் கண்டிக்க சட்டப்பிரிவு 11 வகை செய்கிறது. இந்தச் சட்டத்தின்கீழ் மத்திய அரசு அல்லது தனி அதிகாரி உதவியுடன் கீழ்ப்படியாதவா்களை ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் உரிமைகளை ரத்து செய்யவும் முடியும்.

அது மட்டுமல்ல, அரசின் முறையான அறிவிப்புகள் மற்றும் விதிகளைக் கடைப்பிடிக்காத குற்றவாளிகளின் தொடா்புகளையும், இணைப்புகளையும் ரத்து செய்ய பிரிவு 14 அதிகாரம் அளிக்கிறது. இந்தச் சட்டத்தின் கீழ், அதற்கு விரோதமாகச் செயல்படும் குற்றங்களைக் கண்டறிந்து, தேவையான மத்திய, மாநில அதிகாரிகளை நியமனம் செய்ய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. அது மட்டுமல்ல, குற்றம் நிகழும் இடங்களில் பரிசோதிக்கவும், ஆவணங்களைப் பறிமுதல் செய்யவும் அரசுக்கு பிரிவு 16 அதிகாரம் அளிக்கிறது.

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில், நன்கு படித்த, நல்ல வேலையிலிருந்த தம்பதி இணையவழி சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டதுதான் முதல் நிகழ்வாக இருக்கும் என எண்ணுகிறேன். அந்தக் காலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு; ரயிலில் அடிபட்டு மரணம் என்பதுபோல், இப்போது இணையவழி சூதாட்ட தற்கொலைகள் மிகுந்து விட்டன.

மனைவியை வைத்துச் சூதாடிய தருமனின் வழித்தோன்றல்கள், இன்று தாயின் மருத்துவச் செலவுக்கான பணத்தையும், தங்கையின் திருமணச் செலவுக்கு வைத்திருக்கும் பணத்தையும், படிப்புக்கு வைத்திருக்கும் பணத்தையும், வழிமுறையில்லாமல் சூதாடி, பணத்தையும், உயிரையும்வைத்து விற்கும் சோகம் இந்த இணையவழி சூதாட்ட தடைச் சட்டத்தால் குறைவதற்கு வாய்ப்புள்ளது.

இலவசங்கள்-மறுபரிசீலனை தேவை!



DINAMANI

இலவசங்கள்-மறுபரிசீலனை தேவை!

அரசியல் செய்யும் கட்சிகள்தான் தங்கள் வாக்கு வங்கிக்காக இலவசங்களை வலிந்து திணிக்கின்றன என்பதே நிதர்ச னம்.

பிரதிப் படம் எஸ். நாராயணன் Published on: 09 செப்டம்பர் 2025, 4:29 am

தமிழகத்தில் 2026 பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளைத் தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிவிட்டன. இதில் வழக்கம்போல் இலவசங்கள் என்பது பிரதான வாக்குறுதியாக இருக்கும். ஏனென்றால், இலவசத் திட்டங்களை ரத்து செய்வோம் என உரக்கக்கூற கட்சிகள் முன்வருமா என்பது சந்தேகமே.

இலவசங்களை வழங்கும் திட்டங்களுக்கு தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்கிறது என்றால் அது மிகையில்லை. 2006 பேரவைத் தேர்தலில் இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் முதல்முதலாக இலவசங்களுக்கு அச்சாரம் போட்டது. அந்தத் தேர்தலில் திமுக வெற்றியும் பெற்றது.

இதைத் தொடர்ந்து 2011 தேர்தலில் இலவச மிக்ஸி அல்லது கிரைண்டர் வழங்குவதாக திமுக அறிவித்தது. இதற்கு ஒருபடி மேலாக அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் மாநிலத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இலவச மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர் வழங்குவதாக உறுதியளித்து வெற்றி பெற்றது. இடையில் பொங்கல் பரிசாக ரூ.100 வழங்கப்படும் எனவும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தப் பொங்கல் பரிசு தொகை உயர்த்தியும் வழங்கப்பட்டது. இதுதவிர மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளும் வழங்கப்பட்டன.

இந்நிலையில், 2021 பேரவைத் தேர்தலில் மகளிர் உரிமைத்தொகையாக மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் எனவும் கட்டணம் இல்லா மகளிர் பேருந்து பயண சேவையையும் தேர்தல் அறிக்கையாக அறிவித்து திமுக வெற்றி பெற்றது.

இவ்வாறாக 'இலவசங்கள் என்ற அறிவிப்பு தேர்தல் வெற்றிக்கு முக்கியக் காரணியாக உள்ளதை அனைத்து அரசியல் கட்சிகளும் நன்கு புரிந்துகொண்ட நிலையில், தற்போது தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பிற மாநிலங்களிலும் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள்' முக்கியத்துவம்பெற்றுவருகின்றன.

நடந்துமுடிந்த மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி, பெண்களுக்கான மாதாந் திர உதவித் தொகையாக ரூ.2,100 வழங்கப்படும் என அறிவித்தது. இதற்குப் போட்டியாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ரூ.3,000 வழங்கப்படும் எனவும், தமிழகத்தைப் போலவே அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உறுதி செய்யப்படும் எனவும் அறிவித்தது.

இதுபோலவே தில்லி பேரவைத் தேர்தலில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் மற்றும் பாஜக என இரண்டு கட்சிகளுமே தங்களது தேர்தல் அறிக்கையில் கூறின.

தமிழகத்தின் 2025-26-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதன்படி, தமிழகத்தின் மொத்த வருவாய் ரூ.3,31,569 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த வருவாய் செலவினங்கள் ரூ.3,73,204 கோடி. ஆகவே, நிகழாண்டு வருவாய் பற்றாக் குறை ரூ.41,635 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் தமிழகத்தின் மொத்த வரு வாய் செலவினத்தில் பெரும் பகுதி அதாவது, ரூ.1,53,724 கோடி உதவித் தொகைகளுக்கும் மானியங்களுக்கும் செலவி டப்படுவதாக இந்த நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது. இதில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ரூ.13,807 கோடி யும், கட்டணம் இல்லா மகளிர் பேருந்து பயண சேவைக்கு ரூ.9/682 கோடியும், இலவச வேஷ்டி, சேலைக்கு ரூ. 673 கோடியும், பொது விநியோகத் திட்டமானியமாக ரூ. 14,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கண்ணை விற்று சித்திரம் வாங்குவதால் என்ன பயன்? மார்ச் 31, 2026 நிலவரப் படி நிலுவையில் உள்ள கடன் ரூ. 9,29959 கோடியாக இருக்கும் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.

அதுபோல் கடன்சுமை இருக்கும்போது இலவச அறிவிப்புகளை வெளியிட்டு, அதை நிறைவேற்றும் வகையில் கடன் சுமையை மேலும் அதிகரிக்க வேண்டுமா?

தமிழகத்தில் நியாயவிலைக் கடை கள் மூலம் வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசுத் தொகை இந்த ஆண்டு வழங்கப்படவில்லை. இதனால் யாரும் பாதிக்கப்படவில்லை.

இதையே ஒரு பாடமாக கொண்டு வரும் தேர்தலில் இலவச வாக்குறுதிகளை நிறுத்தினால் அடுத்த தேர்தலிலும் அதை தொடரவேண்டிய அவசியம் ஏற்படாது. இலவசங்கள் கோரி யாரும் அரசுக்கு கோரிக்கை விடுக்கவில்லை. அரசியல் செய்யும் கட்சிகள்தான் தங்கள் வாக்கு வங்கிக்காக இலவசங்களை வலிந்து திணிக்கின்றன என்பதே நிதர்ச னம்.

நாட்டை ஆட்சி செய்வோர் தன்னலத்தைப் பெரிதாகக் கொண்டு நாட்டு வளங்களைச் செழிக்கச் செய்யாமல், கிடைத்த பொருளை வீணாகச்செலவிட்டு பொருள் அனைத்தும் தீர்ந்த பிறகு, அரசை நடத்த மீண்டும் மக்களிடமே, பொருள்வேண்டுவது என்பது வழிப்போக்காகச் செல்பவரிடம், வேல் எனும் ஆயுதம் கொண்டு வழிப்பறி செய்வது போன்றதாகும் என இடித்துரைக்கிறது திருக்குறள் (குறள்-552).

இலவச அறிவிப்புகளைத் தவிர்த்து தேர்தல் அறிக்கையைத் தயாரித்தால், அது வாக்கு வங்கியைப் பாதிக்கும் என அரசியல் கட்சிகள் கருதுவதைப் புறந்தள்ள வேண்டும்.

ஏற்கெனவே சமத்துவ சமுதாய நிலையை உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் ஒதுக்கீடுகள் நடைமுறையில் உள்ளன. வருவாய் மிகை மாநிலமாக தமிழகத்தை மாற்றும் திட்டங்களுடன், இலவசங்களுக்கு வசப்படுத்தாத தேர்தல் அறிக்கையை உரக்கக் கூறி வெளியிடும் கட்சியால்தான் வல்லமையான அரசை அமைக்க இயலும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.

NEWS TODAY 11.09.2025

 


































SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...