Thursday, September 25, 2025

Doctors posts remain vacant in TN medical colleges; services and promotions affected

Doctors posts remain vacant in TN medical colleges; services and promotions affected

 Pushpa.Narayanan@timesofindia.com 25.09.2025

Chennai : At least 35% of doctors’ posts in the Directorate of Medical Education have been vacant, affecting the quality of services and delaying surgeries and treatment for patients at staterun medical college hospitals across the state. On Monday, members from the Tamil Nadu govt doctors’ association met health officials at the secretariat, urging the govt to conduct counselling for promotions to fill up vacancies. Positions such as assistant, associate, and professors in medical colleges and hospitals are not direct recruitments to the govt.

 “Doctors who join as medical officers in primary health centres get placed in teaching and non-teaching positions at medical colleges after they clear their postgraduation,” said TN govt doctors’ association president K Senthil. They join as assistant professors and become eligible for promotion to associate professor in five years. Three years from then, they are eligible to become professors. “On average, it takes seventeen years for govt doctors to become associate professors and at least eight years after that to become professors. To fill up vacancies, the govt must conduct promotion counselling for associate professors and professors every year. 


When that does not happen, it delays promotions further,” he said. For instance, the 2024 round of counselling for assistant to associate professor is still due because the state just completed the promotions for 2023. The 2025 round of counselling for posts of associate professors and professors is delayed. “We have posts of at least 400 professors, 800 associate professors, and 1,800 assistant professors vacant. All this is because officials failed to conduct promotions on time,” he said. This year, all 36 govt medical colleges in the state received show cause notices from the National Medical Commission, the apex body regulating medical education in India, for deficiencies. “One of the main deficiencies quoted was vacancies in faculty positions. Some depts had up to 80% vacancies,” said service doctors and postgraduates association state secretary A Ramalingam.

Wednesday, September 24, 2025

ல‌ட்சிய ஆசிரிய‌ர்களி‌ன் ‘அறிவி‌ன் அருவி’



ல‌ட்சிய ஆசிரிய‌ர்களி‌ன் ‘அறிவி‌ன் அருவி’

உணர்வுபூர்வமாக செயல்படக்கூடிய ஆசிரியர்களை முறையாகப் பயன்படுத்தினால் மிகப் பெரிய மாற்றத்தை நம் பள்ளிக் கல்வியில் உருவாக்கலாம் என்பதைப் பற்றி...

ல‌ட்சிய ஆசிரிய‌ர்கள்!

க. பழனித்துரை Published on: 22 செப்டம்பர் 2025, 3:00 am

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு குழுவாக இணைந்து 'அரசமைப்பு சாசனத்தின் முகப்புரை' என்ற தலைப்பில் இணையவழியில் உரையாடல் ஒன்றை நடத்தினர். அந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆசிரியர்கள் உரையாற்றுவதை கவனிக்க வேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டனர். அதுபோன்ற நிகழ்வை தமிழகம் முழுவதும் மாணவர்களிடம் ஒருங்கிணைத்து நடத்தும் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் எனக்கு நினைவூட்டி, ‘அந்த நிகழ்வில் நீங்கள் கட்டாயம் கலந்துகொண்டு ஆசிரியர்கள் பேசியதன் அடிப்படையில் கருத்துக்கூற வேண்டும்' என்றும் கேட்டுக் கொண்டார்.

அந்த நிகழ்வுக்கு அவர்கள் ‘அறிவின் அருவி' எனப் பெயரிட்டு நடத்தினர். அதில் ஒன்பதுபேர் கருத்துரையாற்றினார்கள். அந்த நிகழ்வுக்கு ஒருவர் தலைமை வகித்தார். ஒருவர் வழிகாட்டியாக அந்த நிகழ்வில் பங்கேற்றார். பொதுவாக, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பொது நிகழ்வுகளில் பங்கேற்கும்போது இயல்பாகப் பேசாமல் அலங்காரமாக பேச்சைத் தயாரித்து ஒரு செயற்கை முறையில் பேசுவார்கள்; எங்கு சென்றாலும் ஒரே மாதிரியாக இருக்கும் பொதுப்பள்ளி நிகழ்வுகள்.

இந்த நிகழ்வு எனக்கு பல வியப்புகளை அளித்தது. அரசமைப்புச் சாசனம் ஒரு கடினமான தலைப்பு; அதை இந்த ஆசிரியர்கள் கையாண்ட விதம், பேசிய முறை இந்த இரண்டையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன். இயல்பாக அனைவருக்கும் புரியும் எளிய மொழியில் பேசி, அந்த முகப்புரையில் இருந்த வார்த்தைகளை ஒவ்வொன்றாக எடுத்து விளக்கியது நம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது இருந்த பார்வையை மாற்றியமைத்தது. ஆற்றல் வாய்ந்த, சமூகக் கண்ணோட்டம் கொண்ட ஆசிரியர்களாக, உணர்வுபூர்வமாக செயல்படக்கூடிய ஆசிரியர்கள் நம் பள்ளிகளில் இருக்கிறார்கள்.

இவர்களை நாம் முறையாகப் பயன்படுத்தினால் மிகப் பெரிய மாற்றத்தை நம் பள்ளிக் கல்வியில் உருவாக்கலாம் என்பதை அந்த நிகழ்வு எனக்குள் ஏற்படுத்தியது. பேசியவர்கள் பள்ளி ஆசிரியர்கள், பேசிய பொருள் அரசமைப்புச் சாசனத்தின் முகப்புரை. இந்த நிகழ்வை அப்படியே ஒவ்வொரு பள்ளியிலும் எல்லா மாணவர்களையும் வைத்து நடத்தினால், ஓராண்டுக்குள் நம்மை இந்தியக் குடிமக்களாக வழிநடத்தும் சாசனத்தை மக்கள் சாசனமாக மாற்ற அனைத்துப் பள்ளி மாணவர்களையும் தயார் செய்து விடலாம் என்ற பெரு நம்பிக்கை பிறந்தது.

இதைத் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் அந்த முகப்புரையை மாணவர்களைக் கொண்டு படிக்கப் பழக்கினால், நாம் இந்தியக் குடிமக்களாகச் செயல்பட நம் பொறுப்புகள் என்ன என்று தெரிந்துகொண்டு பொறுப்புமிக்கவர்களாக மாறிவிடுவார்கள் ஒட்டுமொத்த தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் என்ற நம்பிக்கை எனக்குள் பிறந்தது. இந்த நிகழ்வில் ஒரு அதிகாரம் மிக்க உயர் அதிகாரி கலந்திருந்தால் இதை தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒரு கலாசாரமாக மாற்றியிருக்கலாமே என்று எண்ணத் தோன்றியது.

அடுத்து இந்த ஆசிரியர்கள் பேசும்போது, அந்த முகப்புரையை ஒரு சட்டக் கண்ணோட்டத்துடனோ அல்லது அரசியல் கண்ணோட்டத்துடனோ விமர்சிக்காமல் சமூகக் கண்ணோட்டம் கொண்டு விளக்கியதால் மிக எளிதாக அனைவரையும் தொடும் மொழியில் பேசியதால் அதன் வீச்சு என்பது உச்சத்தில் இருந்தது. இவர்களால் சமூகத்தையும் அவர்களின் மாணவர்கள் மூலம் தொட முடியும் என்பதை நிரூபித்தார்கள். அவர்கள் அந்த கருத்துப் பகிர்வுக்கு அரசமைப்புச் சாசன முகப்புரையில் எடுத்த வரையறைகள் என்பது சமத்துவம், மக்களின் மாண்பு, இந்தியராக ஒற்றுமையுடன் இருத்தல் சமூக நீதி, பொருளாதார நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை போன்றவைதான்.

அந்த நிகழ்வுக்கு கவனிக்க அழைக்கப்பட்ட என்னை, இந்த நிகழ்வைப் பற்றிக் கருத்துக் கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். இந்திய அரசமைப்புச் சாசனம் உருவாகியபோது ஓர் ஆலோசகராகவும், இந்திய அரசமைப்புச் சாசனம் உருவானபிறகு அது நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்தும் புத்தகங்கள், கட்டுரைகள் எழுதிய கிரன்வில் ஆஸ்டின் கூறியது எனக்கு நினைவுக்கு வந்தது. அதை அந்த நிகழ்வில் நினைவுபடுத்தினேன்.

இந்திய அரசமைப்புச் சாசனம் ஒரு மக்களுக்கான சமூக சாசனம். இந்த மகா சாசனம் மக்களிடம் எடுத்துச் சென்று முறையாக விளக்கப்பட்டால், சமூகத்தில் மிகப் பெரிய புரட்சியையே ஏற்படுத்திவிடும் என்றார். ஆனால், அந்தச் செயல் இன்றுவரை நடைபெறவில்லை. ஆகையால்தான் அண்மைக்காலமாக அரசமைப்புச் சாசனத்தை மக்கள் சாசனமாக்குவோம் என்று ஒரு பெரு முயற்சியை முன்னெடுத்து அதையே ஓர் இயக்கமாக்க முனைந்து வருகின்றன பல சமூக இயக்கங்கள். இது என் நெடுநாள் கனவாக இருந்த காரணத்தால், இந்தப் பணியில் என்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறேன்.

இந்திய அரசமைப்புச் சாசனம் அரசாங்கம் எப்படி அமைத்துச் செயல்பட வேண்டும் என்றும் மட்டும் கூறவில்லை; அதன்மூலம் எப்படிப்பட்ட சமூகம் இந்தியத் திருநாட்டில் உருவாக வேண்டும் என்றும் அதை எப்படி உருவாக்க வேண்டும் என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது. மகாத்மா காந்தியின் கனவான சர்வோதய சமூகம் உருவாக அனைவருக்கும் சமத்துவம், அவருக்கும் சமூக, பொருளாதார அரசியல் நீதி கிடைக்க அரசும் சமூகமும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை உறுதி செய்கிறது.

அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளது. மக்கள் இந்தியக் குடிமக்களாக, இந்தியராக, ஒற்றுமையுடன், ஒருமைப்பாட்டுடன் சகோதர உணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. மற்றொரு அடிப்படையான கூறு பொதுமக்களின் மாண்பை உறுதி செய்தல் என்பது. இந்திய குடிமக்களின் சுயமரியாதை, கண்ணியம் காக்க அரசும் செயல்பட வேண்டும்; மக்களும் செயல்பட வேண்டும்.

ஆனால், இன்றுவரை இவற்றை மக்களிடம் எடுத்துச் சென்றிருக்கிறோமா என்று கேள்வி கேட்டால், ஆம், என்று எந்த இடத்திலிருந்தும் பதில் வராது. ஒரு முகமதியராக வாழ குரான் பேசப்படும் அளவுக்கு, ஒரு கிறிஸ்தவராக வாழ பைபிள் பேசப் படும் அளவுக்கு, ஒரு ஹிந்துவாக வாழ பகவத்கீதை பேசப்படும் அளவுக்கு இந்தியக் குடிமக்களாக வாழ இந்த அரசமைப்புச் சாசனம் பேசுபொருளாக ஆகவில்லை என்பதுதான் நாம் சந்திக்கும் எதார்த்தம்.

இந்தியாவில் மிக முக்கியமானது எது? இந்தியா என்ற நாடுதான். அதுதான் பிரதானமானது. அந்த நாட்டை உருவாக்கி, அதில் மக்களை மேம்பட வைக்க வேண்டும் என்றால் இந்தியர்களாகிய நாம் இந்தியர்களாக இணைய வேண்டும். இன்று அப்படி மக்களை இணைப்பதற்குப் பதிலாகப் பிரிப்பதையே தொழிலாகக் கொண்டு செயல்படும் அரசியலைத்தான் நாம் பார்க்கிறோம். பிரித்தலில் செயல்படும் அரசியலை, இணைத்தலில் கொண்டுசெல்ல, ஒரு புது விழிப்புணர்வும், செயல்பாடும் சமூகத்தில் கட்டமைக்கப்பட வேண்டியுள்ளன.

நாம் இன்று இந்தியராக சட்டபூர்வமாக இருக்கிறோம்; உணர்வுபூர்வமாக இந்தியராக வாழவில்லை. காரணம், அப்படி நாம் பிரிக்கப்பட்டுள்ளோம்-நம் நாட்டில் நடைபெறும் கட்சி அரசியலால். இந்த பிரிப்பு சிலருக்கு வாழ்வளிக்கிறது; பலருக்கு ஏக்கத்தை உருவாக்கியுள்ளது; இந்த நிலை மாற நமக்கு வழிகாட்டுவது நமது அரசமைப்புச் சாசனம்தான்.

அதை இன்று பள்ளி, கல்லூரி, ஊடகங்கள், குடிமைச் சமூக அமைப்புகள் என அனைத்துத் தளங்களிலும் எடுத்துச் சென்று அனைவரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தினால், நம்மால் பொறுப்புமிக்க குடிமக்களை உருவாக்க முடியும். பொறுப்புமிக்க குடிமக்கள் பொறுப்புமிக்க ஒரு சமூகத்தை உருவாக்குவார்கள்; பொறுப்புமிக்க சமுதாயத்தில் ஒரு பொறுப்புமிக்க அரசியல் உருவாகும்; பொறுப்புமிக்க அரசியலிலிருந்து பொறுப்புமிக்க அரசு உருவாகும்; பொறுப்புமிக்க ஆளுகை நிகழும், அந்த பொறுப்புமிக்க ஆளுகையில்தான் பொறுப்புமிக்க நிர்வாகம் நடைபெறும்.

எனவே, நமது பணி ஒரு நற்சமுதாயத்தை உருவாக்குவது. அதை ஆசிரியர்களாகிய நம்மிடம் உருவாகி, நம் மாணவர்கள் மூலம் குடும்பங்களில் உருவாகி, நல்ல குடும்பங்கள் நல்ல சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும். அதுதான் நம் லட்சியமாக இருக்க வேண்டும். அந்த லட்சிய சமுதாயத்தை உருவாக்க பொறுப்புமிக்க ஆசிரியர்களாக நாம் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் நம் பள்ளிகளில் செயல்படும்போது மிகப் பெரிய புரட்சிகர மாற்றங்களை உருவாக்க முடியும் எனக் கூறி என் ஆலோசனையை வழங்கி நிறைவு செய்தேன்.

இந்த நிகழ்வை ஒரு ஐந்து ஆறு ஆசிரியப் பெருமக்கள் இரண்டு மணி நேரம் செலவு செய்து அரசமைப்புச் சாசனம் என்பதுதான் மக்கள் சாசனம், அது நாம் எப்படி பொறுப்புமிக்க குடிமக்களாக வாழ்ந்து உரிமைகளுடன் பொறுப்புமிக்க சமூக வாழ்வை உருவாக்க வேண்டும் என்று ஒவ்வொரு கிராம சபையிலும்

‘அறிவின் அருவி'யை நடத்தினால் மிகப் பெரும் விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. அதற்கு நம் ஆசிரியப் பெருமக்கள் பள்ளிச் சுவர்களைக் கடந்து சமூகத்துக்குள் ஊடுருவத் தயாரான சமூக மனிதர்களாக மாற வேண்டும்.

இந்த நிகழ்​வில் பேசிய இணைந்​தி​ருந்​த​வர்​கள் ஏதோ ஒரு நிலை​யில் சமூ​கச் சிந்​தனை கொண்டு ஒரு சமூக இயக்​கத்​தில் செயல்​பட்​டுக் கொண்​டி​ருக்​கக்​கூ​டி​ய​வர்​கள், இவர்​க​ளின் எண்​ணிக்கை கூடி​னால் மிகப் பெரிய சமூக மாற்​றத்தை ஆசி​ரி​யர்​கள் மூலம் நம் சமு​தா​யத்​தில் பார்க்க முடி​யும். அப்​ப​டிப்​பட்ட லட்சிய ஆசிரியர்​களை உரு​வாக்​கு​வ​து​தான் இன்​றைய தேவை.

​கட்​டு​ரை​யா​ளர்: பே​ரா​சி​ரி​யர்.

தினமணி செய்திமடலைப் பெற.

NEWS TODAY 24.09.2025

 
























Tuesday, September 23, 2025

NEWS TODAY 23.09.2025













Cross FIRs after KGMU JRs, nursing staff clash Four Junior Residents Suspended

Cross FIRs after KGMU JRs, nursing staff clash Four Junior Residents Suspended 

TIMES NEWS NETWORK 23.09.2025



Lucknow : Tensions escalated at King George’s Medical University (KGMU) as cross FIRs were lodged at Chowk police station between nursing staff and junior resident doctors (JRs) following a series of alleged assaults in the orthopaedics department. 

On Sept 21, an FIR was filed against nine JRs of the orthopedics department for allegedly assaulting nursing officer Shubham Rao during duty hours. Rao claimed the doctors, allegedly under the influence of alcohol, physically assaulted him, used abusive language, and threatened him with death if he reported the incident. 

The nursing officer sustained scratches on his neck, an injury behind his ear, and damage to his personal belongings including a gold chain, spectacles, and mobile phone. OT technician Pradeep, who tried to intervene, was also reportedly beaten and verbally abused. 

Following the complaint, KGMU suspended four JRs pending the final inquiry report. Hospital authorities conducted a preliminary investigation and assured strict action after the inquiry was completed. The situation escalated when the following day, on Tuesday, the JRs filed a counter FIR against nursing staff member Shubham. Both groups staged separate protests on the hospital campus, temporarily disrupting emergency services. KGMU spokesperson Dr KK Singh said action will be taken after the inquiry committee submits its report.

ஓய்வுக்குப் பிறகும் உற்சாகம்!


நடுப்பக்கக் கட்டுரைகள்

ஓய்வுக்குப் பிறகும் உற்சாகம்!

ஓய்வுக்குப் பிறகு புத்துணா்வு சமூகத்துடன் இணைந்திருப்பது, ஓய்வுக் காலத்தில் ஏற்படும் தனிமை உணா்வுகளை நீக்கி, புதிய உற்சாகத்தை அளிக்கிறது.

தினமணி செய்திச் சேவை Updated on: 23 செப்டம்பர் 2025, 5:13 am

அனந்த பத்மநாபன்

பணியிலிருந்து ஓய்வு என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அா்த்தங்களைக் கொண்டது. பலருக்கு, அது வாழ்க்கையின் வேகத்தைக் குறைத்துக் கொள்வதற்கான நேரம். எனினும், ஓய்வு ஒருபுறம் அமைதியைத் தந்தாலும், மறுபுறம் சிலருக்கு உணா்ச்சிபூா்வமான சவால்களைக் கொண்டுவரக்கூடும். வேலை செய்த காலத்தில் இருந்த அடையாளம், தனிமை மற்றும் எதிா்காலம் குறித்த பயம் போன்ற கவலைகள் அதனால் உருவாகலாம்.

ஆனால், இந்தக் கவலைகளைப் புறந்தள்ளி, ஓய்வு என்பது நம்மோடு மீண்டும் இணைந்துகொள்வதற்கும், புதிய ஆா்வங்களை ஆராய்ந்து மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

ஓய்வு என்பது ஒரு முற்றுப்புள்ளி அல்ல, அது ஒரு புதிய பாதை, புதிய இலக்குகள் மற்றும் தனிப்பட்ட வளா்ச்சிக்கான ஒரு தொடக்கம். கடலூரைச் சோ்ந்த 72 வயதான செல்வமணியின் வாழ்க்கை, விருப்பத்துக்கும் வளா்ச்சிக்கும் வயது ஒரு தடையல்ல என்பதை நமக்கு உணா்த்துகிறது.

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகும், அறிவைத் தேடும் தனது ஆா்வத்துக்கு அவா் ஓய்வு கொடுக்கவில்லை. அண்மையில் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னியல் பட்டயப் படிப்பில் சோ்ந்துள்ள இவா், ஓய்வு என்பது ஒரு முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் என்பதை தனது வாழ்வின் மூலம் மெய்ப்பிக்கிறாா்.

செல்வமணி தனது மகள்களுக்கு திருமணமான பிறகு, தனது நீண்ட நாள் கனவான படிப்பைத் தொடங்கினாா். அவா் ஒவ்வொரு நாளும் 50 கி.மீ. பயணம் செய்து கல்லூரிக்குச் செல்கிறாா். இது அவருடைய விடாமுயற்சியின் ஒரு சான்று. இந்த வயதிலும், தன் நோய்வாய்ப்பட்ட மனைவியைக் கவனித்துக்கொண்டே படிக்கும் அவரது செயல், அறிவுக்கும் ஆா்வத்துக்கும் வயது ஒரு தடையாக இருக்காது என்பதை நமக்கு உணா்த்துகிறது.

ஓய்வு என்பது சரிவு மற்றும் இழப்பின் காலகட்டமாகப் பாா்க்கப்படாமல், தனிப்பட்ட வளா்ச்சி, புதுப்பிக்கப்பட்ட உறவுகள் மற்றும் சமூகத்துக்கு தொடா் பங்களிப்புக்கான வாய்ப்புகள் நிறைந்த ஒரு புதிய அத்தியாயமாக அதைக் கருத வேண்டும் என்ற நம்பிக்கையை செல்வமணி நமக்கு அளிக்கிறாா்.

முதுமையில் புது அத்தியாயம் செல்வமணியைப் போலவே, ஓய்வுக்குப் பிறகு தங்கள் வாழ்க்கையை ஒரு புதிய அத்தியாயமாக மாற்றிய பலரின் கதைகள் இந்தியாவில் உள்ளன.

ஓய்வுக்குப் பிறகு கல்வியைத் தழுவிய மூத்த குடிமக்களின் ஓா் அமைதியான புரட்சியின் பகுதியாக இது உள்ளது. உதாரணமாக, 98 வயதில் முதுகலைப் பட்டம் பெற்ற ராஜ்குமாா் வைஷ்யா, அதிக வயதில் பட்டம் பெற்றவா் என்ற சாதனையை ‘லிம்கா’ இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளாா். மேலும், 64 வயதான ஓய்வுபெற்ற வங்கியாளா் ஜெய் கிஷோா் பிரதான், நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று தனது மருத்துவக் கனவை நனவாக்கினாா்.

இவா்களது கதைகள், விடாமுயற்சியும் கனவும் இருந்தால் வயது ஒரு தடையல்ல என்பதையும், அறிவைத் தேடுவதற்கு வயது ஒருபோதும் தடையாக இருக்காது என்பதையும் நமக்கு உணா்த்துகின்றன.

பழைமையும், புதுமையும் முதுமை என்பது, நாம் ஒரு காலத்தில் இருந்த வாழ்க்கையை நினைத்து வருத்தப்படும் காலமாக இருக்க வேண்டியதில்லை. நாம் இழந்த இளமை, வலிமை மற்றும் நண்பா்களைப் பற்றிய நினைவுகள் மனதில் எழலாம். ஆனால், முதுமையைக் கடந்து, நாம் யாா் என்பதை முழுமையாக உணா்ந்து கொள்வதற்கான ஓா் ஆழமான வாய்ப்பாக இதைப் பாா்க்க வேண்டும். ஓய்வுபெற்ற பிறகு ஏற்படும் வெற்றிடம், குடும்பத்துடன் ஆழமான உறவுகளை வளா்த்துக்கொள்ளவும், புதிய சமூகங்களைக் கண்டறியவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

திருவள்ளுவா், ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தா்க்குக் கற்றனைத் தூறும் அறிவு‘ என்ற தனது கு மூலம் இதை உணா்த்துகிறாா். இந்தக் கு, மணற்கேணியைத் தோண்டத் தோண்ட நீா் பெருகுவதுபோல், மனிதா்கள் கற்க கற்க அறிவு பெருகிக்கொண்டே இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் உரியதல்ல, அது வாழ்நாள் முழுவதும் வளரும் ஒரு செல்வம் என்பதை இது வலியுறுத்துகிறது.

ஓய்வுக்குப் பிறகு புத்துணா்வு சமூகத்துடன் இணைந்திருப்பது, ஓய்வுக் காலத்தில் ஏற்படும் தனிமை உணா்வுகளை நீக்கி, புதிய உற்சாகத்தை அளிக்கிறது. தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவது, சமூகக் குழுக்களில் பங்கேற்பது போன்ற செயல்கள், நமக்கு புதிய நோக்கங்களையும், சமூகப் பொறுப்புகளையும், மகிழ்ச்சியையும் தருகின்றன. இது, ஓய்வு என்பது தனிமைக்கான காலம் அல்ல, மாறாக, சமூக உறவுகளையும் நம் ஆன்ம பலத்தையும் வளா்த்துக்கொள்ளும் ஒரு வாய்ப்பு என்பதைப் புலப்படுத்துகிறது.

முதுமையின் சவால்களை எதிா்கொள்ளும்போது, சமூக ஆதரவும் புதிய கற்றல் அனுபவங்களும் நமக்கு மன வலிமையைத் தருகின்றன. இவை, வாழ்க்கையின் இறுதிகட்டம் என்பது ஒரு சுமையாக அல்ல, ஒரு வரமாக மாறும் என்பதை உணா்த்துகின்றன.

முதுமையடைவது தவிா்க்க முடியாதது, ஆனால் நாம் எப்படி முதுமையடைகிறோம் என்பது நம் கையில் உள்ளது.

மனதளவில் சுறுசுறுப்பாக இருப்பது, உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதைப் போலவே, அறிவாற்றல் செயல்பாட்டைப் பராமரிக்கவும், முதுமையின் தளா்வுகளைத் தடுக்கவும் மிக முக்கியமானது.

எனவே, வெறுமனே வயதாகாமல், புத்திசாலித்தனமாக வயதாவோம். வெறுமனே வயதடையாமல், மகிழ்ச்சியாக வயதாவதே நமது இலக்காக இருக்கட்டும்.

Stalin launches Chennai One app to bring seamless commute experience



Stalin launches Chennai One app to bring seamless commute experience

The mobile app from CUMTA works as a journey planner for commuters and provides multiple transport options, including buses, Chennai Metro Rail, suburban trains, and autorickshaws. The app enables its users to travel by different modes of commute using a single QR code ticket

Ease of travel: Chief Minister M.K. Stalin, Deputy Chief Minister Udhayanidhi Stalin, Minister P.K. Sekarbabu and Chennai Mayor R. Priya with other Ministers and officials during the launch of the mobile application ‘Chennai One’ in Chennai on Monday.



 SPECIAL ARRANGEMENT

The Hindu Bureau

CHENNAI. 23.09.2025

With the launch by Tamil Nadu Chief Minister M.K. Stalin on Monday, Chennai city has now got a single ticketing application — ‘Chennai One’ for commuting using different modes of transportation.


Rigorous testing

The mobile app that underwent trials for many months aims bring in a seamless commuting experience for travellers in city.

This app works as a journey planner for a commuter and offers multiple options of commuting including buses, Chennai Metro Rail services, suburban trains or autos.

The plan for developing an app to create a single QR code was mooted by Chennai Unified Metropolitan Transport Authority (CUMTA)more than two years ago and following that,CUMTA did the ‘Journey Planner-cum-Integrated Ticketing in Chennai Metropolitan Area’ study.

With 47 lakh travellers in the city commuting using different modes, CUMTA felt such an app could significantly benefit commuters if it could help them plan their daily travel and generate a single QR code ticket that could be used in all these modes.

Subsequently, they floated bids, awarded the contract for developing the app. Early this year, CUMTA started trials for the app before the launch on Monday.

On the social media platform X, CUMTA said: “For the first time ever, MTC Buses, Metro Rail, Suburban Rail, Autos & Cabs come together in ONE powerful app CHENNAI ONE – making travel in Chennai seamless, smart & stress-free.”

Deputy Chief Minister Udhayanidhi Stalin, Minister for Natural Resources S. Regupathy,Transport Minister S.S. Sivasankar, Minister for Housing, Prohibition and Excise S Muthusamy, Chennai Mayor R. PriyaandMinister for Hindu Religious and Charitable Endowments and Chennai Metropolitan Development Authority (CMDA) P.K. Sekarbabu were also present at the launch of the app.

How to use the app

After downloading the mobile application (available for free on both Android and iOS platforms), a commuter has to register their mobile phone number which is verified through one-time password (OTP). Later, the user is required to enter details including their full name, e-mail address, gender. Then, the commuter has to provide the origin and destination of the journey.

User choice

After a request for location access, the app will ask the preferred mode of transport of the commuter and the if the commuter wants fewer transfers, best route or less walking.

For instance, if someone wants to travel from Vadapalani to Thiruvanmiyur, the app indicates a few commuting options, routes and cost taken to travel for each route. One of the routes suggested for travel between Vadapalani and Thiruvanmiyur is 13.4 km ride (a 50-minute trip) which will cost the commuter ₹35.

As the first option, the commuter is suggested to walk to the nearest Vadapalani Metro Rail station and to take a train till Ekkatuthangal. For the second leg of the journey, the app suggests the option of bus and an auto; if the commuter chooses to travel by bus, it provides direction to the nearest bus stop, the bus number (49, in this case) and time taken to the stop, which is about half a km walk.

The final step is the last leg of the ride by the bus till Thiruvanimyur.

If the commuter picks the route he wants to travel by, then the app takes him to the payment gateway and provides the Unified Payments Interface (UPI) option and finally, the single QR code ticket is generated.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...