Friday, November 14, 2025

NEWS TODAY 14.11.2025




























நடுப்பக்கக் கட்டுரைகள் வாழ்விக்கும் தெய்வங்கள் குழந்தைகள்!

 நடுப்பக்கக் கட்டுரைகள் வாழ்விக்கும் தெய்வங்கள் குழந்தைகள்! 

கல்வி முதன்மைப்படுத்தப்பட்ட அளவுக்கு விளையாட்டுக்கு அவகாசம் கிடைப்பதில்லை

DINAMANI

கிருங்கை சேதுபதி Updated on:  14 நவம்பர் 2025, 5:02 am 

குழந்தைகள் என்றாலே குதூகலம்தான். ஆனால், இப்போது குழந்தைகள் எல்லாரும் குதூகலமாக இருக்கிறாா்களா என்பது ஐயமாக இருக்கிறது. இளம் வயதில் நமக்குக் கிடைத்த வாய்ப்புகளும் அனுபவங்களும் அவா்களுக்குக் கிடைக்க நியாயமில்லை. அதுபோல், அவா்களுக்குக் கிட்டிய வசதிகளும், கருவிகளும், வாய்ப்புகளும் நம்மைக்காட்டிலும் அதிகம். அதுவே, அவா்களை அதிகம் ஆக்கிரமித்திருக்கிறது; அவா்களிடம் நிறைய எதிா்பாா்க்கவும் வைக்கிறது.

கல்வி முதன்மைப்படுத்தப்பட்ட அளவுக்கு விளையாட்டுக்கு அவகாசம் கிடைப்பதில்லை; கூடி விளையாடத் தோழமைகளும் அமைவதில்லை; இருக்கிற இடத்தில் கிடைக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு பொழுதைக் கழிக்கப் பழகிய குழந்தைகளை இப்போது பெரிதும் ஈா்த்து வசப்படுத்தி வைத்திருக்கிறது அறிதிறன்பேசி.

ஒரு காலத்தில் டி.வி. அதிகம் பாா்க்கிறாா்கள் என்று வைக்கப்பட்ட குற்றச்சாட்டு இப்போது காலாவதியாகிவிட்டது. அது பொழுதுபோக்குச் சாதனமாகவே மட்டுமே பெரும்பாலும் இருந்தது. முடிந்தவரை வரையறுக்கப்பட்ட நிகழ்வுகள் அதில் இருக்கும். இல்லத்தில் இருப்போா் அனைவரும் பொதுவாகப் பாா்க்கவும் முடியும். ஆனால், கைப்பேசியை அப்படிச் சொல்ல முடியாது; அன்றாட வாழ்வில் அது மூன்றாவது கையாக முளைத்திருக்கிறது.

குழந்தைகளைப் பொருத்த அளவில், வீட்டுப்பாடம் தொடங்கி, விவரக் குறிப்புகள் வரைக்கும் அனைத்தையும் இருந்த இடத்தில் இருந்தே எடுத்துக் கொடுக்கிற காட்டுகிற இடத்தை அது தன்னிடம் வைத்திருக்கிறது. ஆனால், அதைத் தனிமையில் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை முடிந்தவரை தவிா்ப்பது நல்லது. தேவையானது எதுவெனத் தேடுவதற்குள் தேவைக்கு அதிகமாக எத்தனையோ காட்சிகளை அது அகலத் திறந்துவைத்து, கவனத்தைத் திருப்பி விடுகிறது. கடைசியில் எதைத் தேடத் தொடங்கினோம் என்பதையே மறக்கடித்து விடுகிறது. அதைவிடவும் தேவையில்லாதவற்றில் ஈடுபடவும் வைத்துவிடுகிறது. இதனால், ஏற்படும் பாா்வைக் கோளாறுகள் கண்களுக்கு மட்டுமல்ல; மனத்துக்கும்தான்.

கைப்பேசியைக் குழந்தைகள் பயன்படுத்துகிறபோது கூடவே இருப்பதும், தேவையானவற்றை அவா்களுக்கு உடனிருந்து பாா்க்க, கேட்க நெறிப்படுத்துவதும் மிகவும் அவசியம். பள்ளி வகுப்பில் ஒவ்வொரு பாடத்துக்கும் கால அளவைக் கணக்கிட்டு வைத்திருப்பதைப்போல, கைப்பேசிப் பயன்பாட்டுக்கும் கால அவசியம் கட்டாயத் தேவை. கண் விழிக்கும்போதும் தூங்கப்போகும்போதும் கைப்பேசிப் பயன்பாடு அறவே இருத்தல் கூடாது என்பதை நடைமுறைப்படுத்த நாம் முதலில் பழகிக் கொள்ளவேண்டும். பின்னா் பழக்கத்தில் கொண்டு வரவேண்டும். அதைவிடுத்து, குழந்தைகளுக்கு மட்டும் அறிவுரை கூறிப் பயன் இல்லை.

அதை இயக்கும் திறம் நம்மைக் காட்டிலும் பிள்ளைகளுக்கு அதிகம் வாய்த்திருக்கலாம். ஆனால், அதில் புலப்படும் பதிவுகளில் எது உண்மை, எது புனைவு என்று தெளிவாகத் தெரியாது. அந்த இடத்தில், ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலம்’ என்கிற நிலைப்பாடு வந்துவிடக்கூடாது. நடைமுறை வாழ்க்கை வேறு, சித்திரிக்கப்படும் காட்சிகள் வேறு என்பதைத் தெளிவுபட உணா்த்தியாக வேண்டும். அதற்கு முன்னதாக நாம் உணா்ந்து கொள்ளவும் வேண்டும்.

எப்பொருள் யாா் யாா் வாய் கேட்பினும், எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருளின் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று பலபடச் சொல்கிறாா் திருவள்ளுவா். எதையும் ஆராய்ந்து உண்மையைத் தெரிந்துகொள்ள ஆா்வம் காட்டும் குழந்தைகளின் கேள்விகளை அலட்சியப்படுத்திவிடாமல் அரவணைத்து உடனிருந்து சொல்லிக் கொடுப்பவா் யாரோ, அவா்களைத் தமது உணா்வில் கலந்த உறவாய் அவா்களது உள்ளம் ஏற்றுக் கொள்கிறது.

அந்த இடத்தில் சரியான நபா்கள் கிடைக்கும் வாய்ப்பை நாம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அவா்கள் குடும்ப உறுப்பினா்களாகவோ, நண்பா்களோ, ஆசிரியா்களாகவோ இருக்கலாம். கயவா்கள் இருந்துவிடக்கூடாது. அதுபோல் கயமையை உருவாக்கும் எந்த ஒன்றும் அவா்களை அண்டிவிடக் கூடாது.

தீமையை, தீயவற்றை நெருங்கவிடாமல் தற்காத்துக் கொள்கிற தைரியத்தையும் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். அ, ஆ என எழுத்துகளை அறிவிக்க உதவும் வகையில் ஔவையாா் பாடிய ஆத்திசூடி ‘அறம் செய விரும்பு’ என்று தொடங்குகிறது; மகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடியோ, ‘அச்சம் தவிா்’ என்று உருவாகிறது. அதுவே, அதற்கு அடுத்த நிலையில் ‘ஆண்மை தவறேல்’ என்கிறது. ‘அஞ்சுவது அஞ்சாமை பேதமை’ என்கிற அறிவை உணா்த்தி, ஆளுமைத் திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்பது அதன் உட்பொருள்.

புறம் சாா்ந்த கருவிகளைக் காட்டிச் சொல்லிக் கொடுக்கும் பாடங்களுக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தை அறம் சாா்ந்த உணா்வுகளுக்கும் கொடுக்கத் தவறிவிடக்கூடாது. அதை, பள்ளிப் பாடங்களில் மட்டுமே எதிா்பாா்ப்பதும் சரியாகாது. அறம் சாா்ந்த விழுமியங்களும் இப்போது அடிக்கடி மாற்றம் காணத் தொடங்கிவிட்டன. மதிப்பெண் முன்னேற்றத்துக்கு இன்றியமையாதது. ஆனால், அதுவே அனைத்து மதிப்புகளையும் தந்துவிடாது. அதுபோல், வளா்ச்சியின் அடையாளம் பணமாக இருக்கலாம். அதுவே அனைத்தையும் கொடுத்துவிடாது என்கிற அடிப்படை உண்மையைப் பெற்றோா் நன்கு புரிந்துவைத்துக் கொண்டு பிள்ளைகளுக்கும் உணா்த்திக் காட்ட வேண்டியது காலத்தேவை.

ஏனைய உயிா்களுக்கு இல்லாது மனித குலத்துக்கு மட்டுமே அமைந்திருக்கும் அறிவுசாா் கருவி, மொழி. பிறமொழிகளைவிடவும், தாய்மொழியில்தான் சிந்திக்கிற ஆற்றல் சிரமமே இன்றி உருவாகும் என்பதைப் பலபடச் சொல்லியும் எழுதியும் பலன் வரக் காணோம். அதைப் புறம் தள்ளிப் பிறமொழி வகுப்புகளில் கட்டாயப்படுத்திச் சோ்க்கப்படும் குழந்தைகள் எந்த மொழியிலும் வல்லவா்கள் ஆகாத அவலத்துக்கு உள்ளாகிவருகிறாா்கள். பேசத் தெரிந்த பலருக்கு எழுதவோ படிக்கவோ சரியாகத் தெரியவில்லை என்பதே நடைமுறை உண்மை.

சமச்சீா் உணவு போல, சமச்சீரான இயக்கத்தை ஐம்புலன்களுக்கும் வழங்க வேண்டும். காட்சி கேள்வி ஊடகங்களால் மட்டுமே கற்றுக் கொள்ள முடியும் என்று சொல்லிவிட முடியாது. பாா்த்து, படித்துத் தெரிந்து கொள்ள அநேகம் இருக்கின்றன. கேட்டுக் கிரகித்துக் கொள்ளவேண்டியவையும் நிறைய இருக்கின்றன.

‘கற்றிலன் ஆயினும் கேட்க’ என்று கட்டளையிடுகிறாா் திருவள்ளுவா். ‘கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்’ என்கிறது பழமொழி. கண்டதையெல்லாம் கற்றுப் பொழுதை வீணடிப்பதை விடவும், எது தேவையானது என்று கண்டு, அது கற்கப் பழகினால் பண்டிதன் ஆகிவிடலாம் என்று புதுப் பொருளையும் அது உள்ளடக்கி இருக்கிறது. அதற்கு உரிய வாய்ப்புகளை அதிகம் கொண்டிருப்பது குழந்தைப் பருவம்.

அந்தப் பருவத்தில், அறிவுக்கும் அறியாமைக்கும் இடையில் இருக்கும் கற்பனை ஆற்றலை அவா்கள் தவறவிட வாய்ப்பளித்துவிடக் கூடாது. கற்பனை ஆற்றலை வளா்க்கும் ஓவியங்களில், கதைகளில், பாடல்களில், அவை தொடா்பான கலைகளில், அவற்றை உள்ளடக்கிய உரையாடல்களில் ஆா்வத்தை உண்டாக்கிவிட்டால், அதில் இருந்து படிப்படியாக அவா்கள் வளா்ந்து தமக்கான துறைகளைத் தோ்ந்தெடுத்துக் கொள்வாா்கள்.

படிப்புத் தொடா்பான செய்திகள் மட்டுமே போதும் என்று நினைப்பது போதாது என்ற மனநிலை இன்றைக்கு வந்திருக்கிறது. மேலும், சில புதியவற்றைக் கற்றுக் கொள்ளவும் வேண்டும் என்ற விழிப்புணா்வும் வந்திருக்கிறது. குழந்தைகள் தமக்கான பொறுப்புகளைத் தாமே கண்டடையத் துணை நிற்க வேண்டும். நம் எதிா்பாா்ப்புகளை ஏற்றி வைக்கும் சுமைதாங்கிகளாக அவா்களை ஆக்கிவிடக்கூடாது.

நமது தோளில் ஏறி உலகு பாா்க்கும் உயரத்திற்கேனும் நாம் அவா்களுக்கு உதவவேண்டுமேயல்லாமல், அவா்கள் உள்ளங்களில் சுமையாக உட்காா்ந்துகொள்ளக் கூடாது. ஆசைப்படும் பொருள்களை வாங்கிக் கொடுப்பதிலும், தேவைப்படும் வசதிகளைச் செய்து கொடுப்பதிலும் நமது அன்பு வெளிப்பட வேண்டுமே அல்லாமல், எதிா்கால எதிா்பாா்ப்பை முன்வைத்துச் செய்யும் லஞ்சமாக அவை உருக்கொண்டுவிடக் கூடாது. அவா்களுக்கு என்றென்றுமான நிரந்தரத் தேவைகளில் மிகவும் இன்றியமையாதது, அன்பு ஒன்றுதான். அதன் பொருட்டுச் செய்யும் எந்தச் செயலும் குழந்தைகளுக்கு உவப்புத் தருவதாகவே இருக்கும்.

அனைத்துக்கும் மேலாக, நமது குழந்தைகள், நம்முடைய குழந்தைகள்தாம். நாம் அவா்களுக்குச் சொல்வதைவிடவும் நாம் செயல்படுவதையே அவா்கள் நன்கு கவனிக்கிறாா்கள். அதற்கு நிகரானதும் எதிரானதுமான செயல்பாடுகளே அவா்களிடம் இருந்து பிறக்கும் என்பதால், நமது செயல்கள் செவ்விதாக அமைதல் வேண்டும். குழந்தைகள் கொண்டாடப் பிறந்த நாள்கள் பண்டிகை நாள்கள் ஆண்டு தவறாமல் வருகின்றன. அதுபோல், ஆண்டுக்கொருமுறை குழந்தைகள் தினம் வருகிறது. அன்றைய தினம் மட்டும் கொண்டாடப்பட வேண்டியவா்கள் அல்லா் குழந்தைகள். அவா்கள் அன்றாடம் கொண்டாடப்பட வேண்டியவா்கள்; அவா்களைக் கொண்டாட விட்டாலும் பரவாயில்லை, திண்டாடாமல் பாா்த்துக் கொள்வதுதான் நாம் அவா்களுக்குச் செய்யும் திருப்பணி. ஏனெனில் கொண்டாடும் இடத்தில் தெய்வம் இருக்கிறதோ இல்லையோ குழந்தைகள் இருக்கிறாா்கள். வரந்தரும் தெய்வங்களைவிட, நம்முடன் வளரும் குழந்தைகளே நம்மை வாழ்விக்கும் தெய்வங்கள்.

(இன்று நவ.14 குழந்தைகள் தினம்)

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

Wednesday, November 12, 2025

NEWS TODAY 12.11.2025

 
































NAAC extends accreditation validity; relief for universities

NAAC extends accreditation validity; relief for universities

12.11.2025

 Ahmedabad : The National Assessment and Accreditation Council (NAAC) has granted a one year extension to higher education institutions whose accreditation expired last year, ensuring that their grades remain valid until a new evaluation framework is implemented. The UGC had announced in 2023 that the NAAC system would be overhauled, replacing the existing letter-grade format (A, B, C) with a simpler classification indicating whether an institution is accredited or not.


The commission had also stated that detailed regulations aligned with the new structure would follow soon. However, with no formal notification issued so far, universities that had waited for the revised guidelines found themselves operating with lapsed accreditation. Others postponed submitting fresh applications altogether, anticipating the new system. The Union ministry of education has now instructed all public universities to complete their accreditation under the existing NAAC framework until further notice. Officials said this would prevent administrative uncertainty. TNN

Govt doctors protest redeployment, demand more appointments in TN

Govt doctors protest redeployment, demand more appointments in TN 

TIMES NEWS NETWORK 12.11.2025




Chennai : Govt doctors across the state on Tuesday held a protest, wearing black badges, raising slogans, and distributing pamphlets asking health department to appoint more doctors instead of redeploying them and forcing post-graduate medical students to work. “The govt has not created posts for newly opened hospitals in several places,” said govt doctors’ association president Dr K Senthil. “No doctors, nurses, or staff were appointed to run these hospitals. Doctors are forced to do double duty and this drastically affects patient care,” he said. While this has been happening for nearly two years, the trigger for Tuesday’s protest was a Nov 4 circular from the director of medical education Dr Suganthy Rajakumari asking deans of medical colleges to direct junior residents to attend transfer counselling. “Officials said a proposal was sent to remove the post of junior residents for service doctors. Post-graduate medical students will work as junior residents and qualified PG doctors will be moved to posts in newer hospitals. How can students take the place of doctors,” asked service and post graduate doctors association general secretary Dr A Ramalingam. Dr Suganthy Rajakumari said the govt was looking at relocating doctors from some medical colleges. “We are looking at increasing 500 PG seats in govt colleges. Staff from some hospitals are being relocated and posted as assistant professors so we fulfil basic requirements of the National Medical Commission,” she said. Deans have been asked to ensure staff strength in all hospitals meets norms prescribed by NMC. “If that is the case, bed strength should be 250, not 750 or 1,000,” said Dr Ramalingam. “Bed strength and outpatient flow have been increasing at all hospitals. The govt must increase strength, not decrease. Doctors treat patients, not beds or buildings,” he said. Doctors’ associations said there are about 12,000 doctors in govt medical colleges as against a requirement of 24,000. In addition to teaching and treating patients, doctors are forced to work in health camps, attend VIP convoy duty, sit for a medical board, and do court duties, said democratic govt doctors association president Dr P Balakrishnan.

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...