Tuesday, October 28, 2014

பள்ளியில் பாஸ்... கல்லூரியில் ஃபெயில்: ஏன் இந்த நிலை?

ண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில், கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்பட்ட பருவத் தேர்வுகளின் முடிவுகள், நமது கல்விமுறை குறித்த பல கேள்விகளை எழுப்புகின்றன.
மொத்தம் 7.02 லட்சம் பேர் எழுதிய அந்தத் தேர்வில் 3.47 லட்சம் பேர் மட்டுமே தேர்வாகி உள்ளனர். இது வெறும் 49.49 சதவிகிதம் தான். பாதிக்குப் பாதி பேர் தேர்ச்சி பெறவில்லை. இது மிகவும் அதிர்ச்சி அளிப்பது ஒருபுறம் என்றால், இதற்கு நேர் எதிராக கடந்த சில ஆண்டுகளாக நமது பள்ளிக்கூட தேர்வு முடிவுகள் மேல்நோக்கியதாக இருக்கின்றன. 100க்கு 100 மதிப்பெண் எடுப்போரும், அதிக மதிப்பெண் எடுப்போரும் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளனர். தேர்ச்சி விகிதமும் வெகுவாக கூடியிருக்கிறது. ஆனால் அங்கிருந்து கல்லூரியில் வந்து சேரும் அதே மாணவர்கள், இங்கு மட்டும் தேர்வில் தோல்வி அடைவது ஏன்?

இந்தக் கேள்விக்கு இரண்டு கோணங்களில் விடை தேடலாம். ஒன்று, நமது பள்ளிக்கல்வியின் தேர்ச்சியை சந்தேகிப்பது. தனியார் பள்ளியாக இருந்தாலும், அரசுப் பள்ளியாக இருந்தாலும் தற்போது தமிழகப் பள்ளிகளைப் பொருத்தவரை கல்வியின் தரம் என்பது இரண்டாம் பட்சமாகி விட்டது. தேர்ச்சி அடைய வேண்டும், அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற இரண்டும்தான் அங்கு பிரதான நோக்கம். ஆகவே பிள்ளைகளை மனப்பாடம் செய்ய வைத்து மதிப்பெண் எடுக்க வைத்துவிடுகிறார்கள்.
அரசுப் பள்ளிகளின் நிலைமையோ இன்னும் மோசமாக உள்ளது. 8ஆம் வகுப்பு வரையிலும் ஃபெயில் போடக்கூடாது என்ற வாய்மொழி உத்தரவு அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டப் பிறகு, ‘எப்படி இருந்தாலும் பாஸ்தான். அப்புறம் என்ன பெரிய படிப்பு?’ என்ற எண்ணம் ஆசிரியர்களுக்கும் வந்துவிட்டது, மாணவர்களுக்கும் வந்துவிட்டது. இதனால் வகுப்பறையில் தரமான கல்வி என்ற எண்ணம் வேகமாக குறைந்து வருகிறது.

தேர்ச்சி விகிதத்தில் தனியார் பள்ளிகளுடன் போட்டிப் போட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அரசுப் பள்ளிகள், மாணவர்கள் தோல்வி அடைந்ததாக காட்டிக்கொள்வதை விரும்புவது இல்லை. இதனால் கட்டாய ‘ஆல் பாஸ்’ என்ற நிலை இருக்கிறது. இத்தகையப் பின்னணியில் 10 முதல் 12ஆம் வகுப்பு வரை தட்டுத் தடுமாறிப் படித்து கல்லூரிக்கு வரும் மாணவர்கள், அந்த புதிய உலகத்தைப் பார்த்து மிரண்டு போகின்றனர்.
பள்ளிக்கூடத்தைப் போல் அல்லாமல் இங்கு புரிந்துகொண்டு படிக்க வேண்டிய நிலை அவர்களுக்கு தொந்தரவாக இருக்கிறது. பயன்படுத்தப்படாமல் உறைந்துகிடக்கும் மூளையின் செல்கள் உயிர்ப்பெற்று எழுந்துவரும் அவஸ்தையை அனுபவிக்கிறார்கள். அத்தனை ஆண்டு காலம் ஒரு வகையான மனப்பாட கல்விக்குப் பழகிவிட்டு, திடீரென மாறுவதற்கு அவர்களால் இயலவில்லை. பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகித வீழ்ச்சியை இந்தக் கோணத்தில் இருந்து பார்ப்பது அவசியமாகிறது.

இரண்டாவது, கல்வியின் தரம் குறைந்தததற்கு பொறியியல் கல்லூரிகளின் பாத்திரம் என்ன என்பதையும் விவாதிக்க வேண்டும். மாநிலம் முழுக்க எக்கச்சக்க பொறியியல் கல்லூரிகள் நிறைந்துள்ள நிலையில், அவற்றின் தரம் மிகவும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
நமது கண்பார்க்க ஒரு பொட்டக்காட்டில் கட்டடம் எழுப்பி கல்லூரி என்று பெயர் வைக்கிறார்கள். அந்தப் பக்கமாக போய்வரும் பேருந்துகள், அந்தக் கல்லூரியின் பெயரைச் சொல்லி மாணவர்களை இறக்கி விடுகின்றன. அந்த பஸ் ஸ்டாப்பின் பெயர் ஓர் அடையாளம் ஆகிறது. அப்பகுதியின் ரியல் எஸ்டேட் விலை அதிகரிக்கிறது. மாணவர்களின் வருகையை கணக்கில்கொண்டு சில கடைகளும், விடுதி அறைகளும் முளைக்கின்றன. இவ்வாறாக புறச்சூழலின் சந்தை மதிப்பை அதிகரித்துக்கொள்ளும் பொறியியல் கல்லூரிகள், மாணவர்களுக்கு வழங்கும் கல்வியின் மதிப்பையும், தரத்தையும் மேம்படுத்துவதில் எந்த அக்கறையும் செலுத்துவது இல்லை. பல பொறியியல் கல்லூரிகளில் முறையான ஆய்வகங்கள் கூட இருப்பது இல்லை
இதுபோன்ற தரக்குறைவான கல்லூரிகளும், தங்கள் பங்குக்கு கல்வியின் தரத்தை கீழே இழுக்கின்றன. மொத்தத்தில் தமிழக மாணவர்களை சோதனைச் சாலை எலிகளைப் போல மாற்றி, பகடை ஆட்டம் ஆடுகின்றன கல்லூரிகளும், பள்ளிகளும். இதன் பாதிப்பு இப்போது தெரியாது. எதிர்காலத்தில்தான் தெரியும்.

கணக்கை எளிதாகச் செய்ய ஓர் இணையதளம்!



கணக்கு என்றாலே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமில்லை, பலருக்கும் கசப்புதான் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் கணக்குகளை எளிமையாகக் செய்து பார்த்திட உதவ ஓர் இணையதளம் இருக்கிறது.

இந்த இணையதளத்தில் பரப்பளவு (Area), புள்ளியியல் (Statistics), முக்கோணவியல் (Trigonometry), பகுப்பாய்வு வடிவியல் (Analytical Geometry), எண்கள் (Numbers), அணிகள் (Matrix), இயற்கணிதம் (Algebra), மாற்றிகள் (Conversions), நிற மாற்றிகள் (Colour Converters), நாள் மற்றும் கிழமை (Date and Day), அடமானம் (Mortgage), அலகு மாற்றங்கள் (Unit Conversions), மாற்றக் காரணிகள் (Conversion Factors), உடல்நலம் (Health), இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), வானிலை (Weather), மருத்துவம் (Medical), இயந்திரவியல் (Mechanical), மேலான கணக்கீட்டு கருவிகள் (Top Calculators) எனும் முதன்மைத் தலைப்புகள் உள்ளன.

வடிவக் கணக்குகள்

பரப்பளவு எனும் தலைப்பில் சொடுக்கினால் சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம், நாற்கரம் எனப் பல வடிவங்களுக்கான எளிமையான கணக்கீட்டு கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. நமக்குத் தேவையான வடிவத்தினைத் தேர்வு செய்தால் அந்த வடிவத்திற்கான சில கணக்கீட்டு முறைகள் அதற்கான வழிமுறைகள் (Formula) உடன் கிடைக்கிறது.

புள்ளியியல் எனும் தலைப்பில் சொடுக்கினால் புள்ளியியல் தொடர்பான பல்வேறு கணக்கீட்டுக் கருவிகள் கிடைக்கின்றன. இந்தக் கருவிகளில் நமக்குத் தேவையான கணக்கீட்டுக் கருவியைத் தேர்வு செய்து சொடுக்கினால் கிடைக்கும் கணக்கீட்டுக் கருவியின் கீழுள்ள காலிப்பெட்டியில் நம்மிடமுள்ள அளவீடுகளை உள்ளீடு செய்து நமக்குத் தேவையான விடையை உடனடியாகப் பெற முடியும்.

எண் கணிதம்

எண்கள் எனும் தலைப்பில் சொடுக்கினால் எண்கள் தொடர்பான கணக்குகளுக்கான பல கணக்கீட்டு கருவிகள் கிடைக்கின்றன. வர்க்கமூலம் (Square Root), சதவிகிதம் (Percentage), தசமப் பின்னம் (Decimal Fraction), மறுநிகழ்வுப் பின்னம் (Recurring Fraction), மடக்கைக் கணக்கீட்டு கருவி (Logarithmic Calculator), கூட்டு வட்டி (Compound Interest), ரோமானிய எண்கள் (Roman Numbers), தங்க விகிதக் கணக்கீட்டு கருவி (Golden Ratio Calculator) என்பது போன்று பல தலைப்புகளில் கணக்கீட்டு கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்கீட்டு கருவிகளில் தேவையானதைத் தேர்வு செய்து அதற்குள் இருக்கும் காலிப்பெட்டிகளில் நம்மிடமுள்ள அளவுகளை உள்ளீடு செய்து அதற்கான விடையைப் பெறலாம்.

வேடிக்கைக் கணக்குகள்

நிற மாற்றிகள் எனும் தலைப்பில் சொடுக்கினால் வேடிக்கைக் கணக்குகள் எனும் தலைப்பில் விலங்குகளின் வேகம் (Animal Speed), பீர் இழப்பு (Beer Loss) எனும் இரு கணக்கீட்டு கருவிகள் கிடைக்கின்றன. இதில் விலங்குகளின் வேகம் எனும் கணக்கீட்டு கருவியில் சொடுக்கினால் தூரம் எனும் தலைப்பில் ஒரு காலிப்பெட்டி கிடைக்கிறது. இதனருகில் மைல், கிலோமீட்டர், மீட்டர் எனும் அளவுகள் கொடுக்கப் பட்டுள்ளன.

காலிப்பெட்டியில் தூரத்தினை உள்ளீடு செய்து அதற்குரிய அளவையும் தேர்வு செய்து கீழுள்ள முடிவு எனும் பொத்தானை அழுத்தினால் சிங்கம், சிறுத்தைப் புலி, டயனோசர், யானை, வரிக்குதிரை, முயல், கங்காரு, பூனை, நரி, அணில், பன்றி, ஆமை, நத்தை, எறும்பு ஆகியவைகளின் பெயர்கள் கொண்ட பட்டியல் இடம் பெற்றுள்ளது. இதன் வலப்புறம் பட்டியலில் குறிப்பிட்டுள்ள விலங்குகள் உள்ளீடு செய்த தூரத்தைக் கடக்க எடுத்துக் கொள்ளும் காலம் மணி: நிமிடம்: வினாடி: மி.வினாடி எனும் அளவுகளில் தரப்பட்டுள்ளன. அதற்கடுத்து ஒவ்வொரு விலங்கும் சராசரியாக ஒரு மணி நேரத்தில் கடக்க எடுத்துக் கொண்ட தொலைவும், அதற்கடுத்து விலங்குகள் ஓட்டத்தில் பெற்ற இடத்தின் மதிப்பும் தரப்பட்டுள்ளன. பீர் இழப்பு எனும் தலைப்பில் சொடுக்கி அதில் கேட்கப்பட்டுள்ள அளவீடுகளை உள்ளீடு செய்து முடிவுக்கான பொத்தானை அழுத்தினால் விலை வடிவிலான இழப்புகள், வாரம், மாதம் கால அளவுகளிலான இழப்புகள் மற்றும் மொத்த இழப்புகள் போன்றவை கிடைக்கின்றன.

இதுபோல முக்கோணவியல், பகுப்பாய்வு வடிவியல், அணிகள், இயற்கணிதம், மாற்றிகள் எனும் தலைப்புகளிலும் கணக்கீட்டுக் கருவிகள் கிடைக்கின்றன. தேவையான கணக்கீட்டுக் கருவியைத் தேர்வு செய்து அங்குள்ள காலிப்பெட்டிகளில் நம்மிடம் உள்ள அளவுகளை உள்ளீடு செய்து நமக்குத் தேவையான விடையைப் பெற முடியும்.

மொத்தத்தில் இந்த இணைய தளம் பல்வேறு கணக்கீட்டுக் கருவிகளைக் கொண்டு அனைவருக்கும் பயன் தருவதாக உள்ளது. இந்த இணையதளத்திற்குச் செல்லhttp://easycalculation.com/ எனும் இணைய முகவரியினைப் பயன்படுத்தலாம்.

- தேனி. மு. சுப்பிரமணி

Times of India...Staff count during MCI inspection will be considered final strength

AHMEDABAD : Medical Council of India (MCI) has issued a circular to all colleges that are either awaiting renewal or have applied for affiliation to send a staff profile in advance for its perusal. The apex body has also clarified that only surprise checks would be conducted and staff found present would be considered the full and final strength.

It needs mention that medical colleges are known to inflate staff strength at the last minute during inspection by officiating transfers or showing certain staff on paper saying they are currently on leave. MCI used to specify dates during which medical inspections would happen at colleges.

Currently, MCI inspection is expected at a string of colleges in Gujarat especially at the Himmatnagar Government Medical College which has sought permission from MCI. Jamnagar College has applied for its intake to be increased from 180 to 200 seats. Similarly, Bhavnagar and Rajkot Medical Colleges have applied for increase in intake from 100 to 150 seats.

University gets record number of placements



It is the season of placements and everyone is watching out for the companies hiring the most number of students and offering the maximum compensation.

This year, SRM University, Kattankulathur, saw three major IT firms offering jobs to 3,689 students on the first day of campus interview sessions.

Speaking to mediapersons, president of SRM University and managing director of SRM Group of Institutions P. Sathyanayaranan said that Cognizant, Infosys and Wipro had together offered this record number of placements for the batch of 2015. “While Cognizant made 1,502 job offers, Infosys offered 1,105 and Wipro, 1,082. All these placements were offered in a single day of the campus recruitment drive that began a couple of days ago,” he added. The salary packet ranged from Rs. 3 lakh to Rs. 3.5 lakh.

Mr. Sathyanarayanan said Works Applications, a Japanese company, offered the highest annual package of Rs. 5 million Japanese Yen (Rs. 33 lakh approximately) for a computer science final-year student, Abhishek Gupta.

“Students from ECE, CSE and IT branches were the most sought after candidates by these IT firms,” said S. Ganapthy, dean-placement.

Viswanathan Venkatasubramanian, senior manager, Wipro, said the quality of recruits had improved, thanks to the efforts of the career development centre of the varsity.

N. Sethuraman, registrar, and C. Muthamizh Selvan, director (E&T), SRM University, were present on the occasion.

Karnataka doctors resign en masse

But it will be work as usual today for doctors, until month-end



In was a display of solidarity and a way of stepping up pressure on the Karnataka government to consider their demands. Doctors working in hospitals run by the Health and Family Welfare Department submitted their resignations to the Health Commissioner on Monday. While daring the government and virtually turning it into a battle of who will blink first, the doctors have also left a window open for negotiations. They will get back to work on Tuesday and continue in government service for a month to ensure that patients are not put to hardship.

“After a month, we plan to run clinics near the primary health centres and provide services on the lines of government hospitals,” said H.N. Ravindra, honorary president of the Karnataka Government Medical Officers’ Association (KGMOA).

The government, however, has so far refused to concede to the demands, which include increase in salaries and better facilities. But Chief Minister Siddaramaiah has said he is open to talks with the protesting doctors, if they want to find a solution.

Meanwhile Health Minister U.T. Khader held a meeting with directors of medical colleges (both government and private). “We will use the services of doctors and students from the medical colleges, private doctors and AYUSH practitioners to keep the show going till we come out with concrete measures,” Mr. Khader said.

விடுதலையாகும் கூண்டுக்கிளிகள்

பொதுவாக யார் மீதாவது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தால், 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். நீதிமன்றம் அவர்களை காவலில் வைப்பதற்காக சிறையில் அடைக்க உத்தரவிடும். இவர்களை ரிமாண்டு கைதிகள் என்று அழைப்பார்கள். 15 நாட்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். சில குற்றங்களுக்கு 60 நாட்களுக்குள்ளும், சில குற்றங்களுக்கு 90 நாட்களுக்குள்ளும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவுடன் கோர்ட்டில் வழக்கு நடத்த வேண்டும். இவ்வாறு வழக்கு நடத்தும் காலத்தில் அந்த கைதிகள் விசாரணை கைதிகள் என்று அழைக்கப்படுவார்கள். ரிமாண்டு கைதிகளாக இருக்கும்போதும், விசாரணை கைதிகளாக இருக்கும்போதும், அந்த கைதிகள் சிறை கைதிகளுக்கான உடை அணிய வேண்டியது இல்லை. அதுபோல, சிறை கைதிகளுக்கான வேலையும் செய்யவேண்டியது இல்லை. வழக்கு விசாரணை முடிந்தபிறகு, நீதிபதி குற்றவாளி என்று தண்டனை விதிக்கவும் செய்யலாம் அல்லது நிரபராதி என்று விடுதலையும் செய்யலாம்.

எந்த ஒரு குற்றவாளியும் அவரது குற்றம் நிரூபிக்கப்படும் வரை, குற்றவாளியாகவும் இருக்கலாம், நிரபராதியாகவும் இருக்கலாம். பல வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் ஏற்படும் தாமதத்தால், அதன்பிறகுதான் ஜாமீன் பெறமுடியும் என்ற நிலையில் சிறையில்தான் வாடவேண்டும். அதுபோல ஜாமீன்பெற வசதியில்லாதவர்கள், அந்த நடைமுறைகளைத் தெரியாதவர்கள் தீர்ப்புவரும் வரையில் சிறையில்தான் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். பலகாலம் ரிமாண்டு கைதிகளாகவும், விசாரணை கைதிகளாகவும் இருப்பவர்கள், நீதிமன்ற தீர்ப்பில் அவர்களில் சிலர் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டால், சிறையில் அடைக்கப்பட்ட காலத்துக்கு யாரை பொறுப்பாக்குவது? என்பதுதான் காலம்காலமாக உருவெடுக்கும் கேள்வியாகும்.

இந்த நிலையில், 1973–ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குற்றவியல் நடைமுறைச்சட்டம் 436–ஏ பிரிவின்படி, ஒரு விசாரணை கைதி எந்த குற்றத்தின்கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாரோ, அந்த குற்றத்துக்காக சட்டம் கூறும் தண்டனையின் அளவில் பாதிகாலத்தை சிறையில் கழித்து இருந்தால், அவரை தனது சொந்த ஜாமீனில் பிணைத்தொகையோடோ அல்லது பிணைத்தொகை இல்லாமலோ நீதிமன்றம் விடுதலை செய்யலாம் என்று குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், நடைமுறையில் பலர் இந்த சட்டத்தை பயன்படுத்தவில்லை. இந்த நிலையில், உச்சநீதிமன்ற பெஞ்சு ஒரு பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளில் 60 சதவீதம் பேர் விசாரணை கைதிகள். மாஜிஸ்திரேட்டுகள், செசன்சு நீதிபதிகள், தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டுகள், தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சிறைகளுக்கு வாரம் ஒருமுறை சென்று, இப்படி பாதிகாலம் சிறையில் விசாரணை கைதிகளாக இருப்பவர்களை விடுதலை செய்ய அங்கேயே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் நவம்பர் மாதத்தில் வாரம் ஒருமுறை செசன்சு நீதிபதிகளும், மாஜிஸ்திரேட்டுகளும் சிறைச்சாலைகளுக்கு சென்று நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள். கூண்டுக்கிளிகள் விடுதலையாகப்போகின்றன.

தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட மிகவும் வித்தியாசமானது. மற்ற மாநிலங்களில் சிறைகள் நிரம்பி வழிகிறது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள 136 சிறைகளிலும் மொத்தம் 22,101 கைதிகளை அடைத்து வைக்கமுடியும். ஆனால், சமீபத்தில் எடுத்த கணக்குப்படி கைதிகளின் எண்ணிக்கை 13,769 தான். இதில் ரிமாண்டு கைதிகளின் எண்ணிக்கை 5,920. விசாரணை கைதிகளின் எண்ணிக்கை 1,669 தான். இவர்களில் 670 பேர் இந்த நடவடிக்கையால் விடுதலை செய்யப்பட இருக்கிறார்கள். இந்த 670 வழக்குகளில் தாமதம் ஏற்படுத்திய காவல் நிலையங்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். மற்ற மாநிலங்களைவிட, தமிழ்நாட்டில் இவர்களின் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், இந்த அளவுக்குக்கூட இல்லாத அளவுக்கு போலீசார் குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கை விரைவாக நடத்த வேண்டும். இதற்கு அரசு வக்கீல்களும், நீதிமன்றங்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வழக்கும் எவ்வளவு காலத்துக்குள் முடிக்கப்பட வேண்டும்? என்பதை காவல்துறையும், நீதித்துறையும் முடிவு செய்ய வேண்டும்.

Monday, October 27, 2014

மழையை விரட்டும் மாயக்குடை




ஒரு வாரமாக மழை கொட்டித் தீர்க்கிறது. மழையில் நனையாமல் இருக்க குடை, ஷவர் கேப், ரெயின் கோட்டு என எடுத்துக்கொண்டு வெளியே கிளம்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. ரெயின் கோட் போட்டால் பார்க்கவே பயங்கரமாக இருக்கும். குடை பிடித்தபடி இரு சக்கர வாகனங்களை ஓட்ட முடியாது. நடந்து சென்றால்கூடப் பேருந்து ஏறி இறங்கும்போது குடையை விரித்து, மடக்குவதற்குள் நனைந்துவிடுவோம். இவை எல்லாவற்றிற்கும் ஓர் எளிய தீர்வைக் கண்டுபிடித்திருக்கிறது சீனாவைச் சேர்ந்த ஓர் இளைஞர் குழு.
சீனாவில் இருக்கும் நான்ஜிங்க் பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோநாட்டிக்ஸ் பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர்கள் புரட்சிகரமான ஒரு குடையை உருவாக்கியுள்ளார்கள். குடையின் முக்கிய பாகம் என்ன? அரை வட்டத்தில் ஒரு விரிப்பு போன்ற வடிவம் தானே! இவர்கள் கண்டுபிடித்திருக்கும் குடைக்கு விரிப்பே கிடையாது. அட குடையே இல்லாத குடையா? எப்படி? இது ‘காற்றுக் குடை’. அதி வேகமாக வீசப்படும் காற்றின் மூலம் மழைத் துளிகள் நம் உடல் மேல் விழாமல் சிதறியடிக்கும் நவீனத் தொழில்நுட்பம் கொண்ட குடை.
மைக் போன்ற காற்றுக் குடை
பிளாஸ்டிக் மைக் போல் காட்சியளிக்கிறது இந்தக் காற்றுக் குடை. இதன் உட்புறத்தில் ஒரு மோட்டார், மற்றும் லித்தியம் பாட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. வெளிப்புறத்தில் ஒரு பட்டன் இணைக்கப்பட்டுள்ளது. பட்டனை அழுத்தியதும், மோட்டார் சுற்றுப்புறக் காற்றை உள்ளிழுத்து பின்பு அதி வேகமாக அதே காற்றை உந்தித்
தள்ளும். அப்போது வெளியே வரும் காற்று கிட்டத்தட்ட 1 மீட்டர் நீளம்வரை மழை நீரைச் சிதறியடிக்கும். இதை நீங்கள் கையில் பிடித்துக்கொண்டு சென்றால் ஏதோ மாயாஜால வித்தை புரிவது
போல பார்ப்பவர்கள் ஆச்சரியப் படுவார்கள். ஒரு சமயத்தில் இருவர் இந்தக் குடையைப் பிடித்தபடி நனையாமல் பயணிக்கலாம். “எல்லா இடங்களிலும் இருப்பது காற்று. காற்றின் வேகம் கூடக் கூட அதிக ஆற்றல் உருவாகும். பொருள்களின் பாதையைக்கூடக் காற்றால் மாற்ற முடியும். நாங்கள் காற்று வீசும் விதத்தைப் பயன்படுத்திக்கொண்டோம் அவ்வளவுதான்” என்கின்றனர் காற்று குடையை உருவாக்கிய இளம் பொறியாளர்கள்.
கிக்ஸ்டார்ட் ஆன கிக்ஸ்டார்ட்டர்
காற்றுக் குடையைப் பெரிய அளவில் தயாரிப்பதற்காக கிக்ஸ்டாட்டர் கேம்பெய்ன் (Kickstarter Campaign) என்ற அமைப்பை நிறுவி நிதி திரட்டி வருகிறது இந்தக் குழு. இவர்களை ஊக்குவிக்கும் வகையில் இதுவரை 3 கோடியே 68 லட்சம் ரூபாய் உலகின் பல்வேறு முனைகளிலிருந்து வந்து குவிந்துள்ளது.
ஆனால், இந்தக் காற்றுக் குடையில் ஒரு சிக்கல் இருக்கிறதாம். நம்ம தமிழ் பேய்ப் படங்களில் ஹீரோவைப் பேயிடமிருந்து காப்பாற்ற ஒரு அமானுஷ்யமான சாமியார் மந்திரிக்கப்பட்ட தாயத்தை ஹீரோ கையில் கட்டிவிடுவார். ஆரம்பத்தில் தாயத்து இருக்கும் தைரியத்தில் ஹீரோ பேயை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்குவார். ஆனால் கொஞ்ச நேரத்துல தாயத்தோட பவர் ஃபியூஸ் போயிடும். அது போல, காற்றுக் குடையில் 30 நிமிடங்கள்தான் பாட்டரி சார்ஜ் நிற்கும். நல்ல மழை கொட்டும்போது காற்றுக் குடையை ஸ்டைலாகத் தலை மேலே தூக்கிப் பிடித்துக்கொண்டு கிளம்பினால் ரிஸ்க் இருக்கு. அரை மணி நேரத்திற்குள் அந்த இடத்தைச் சென்றடையவில்லை என்றால் 30 நிமிடங்கள் கடந்த அடுத்த நொடியில் குடையில் இருந்து காற்று அடிப்பது நின்றுவிடும். அவ்வளவுதான் தொப்பலாக நனைந்துவிடுவோம்.
ஆனால் கேலி செய்வதற்கில்லை. இந்தத் துடிப்பான இளைஞர் படையினர் காற்றுக் குடையின் தோற்ற அழகு, பயன்பாட்டுத் திறன், பாட்டரி வாழ் நாள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த தொடர்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இப்போது ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் இவர்களுடைய ஆராய்ச்சி 2015-ல் முடியுமாம். “மேம்படுத்தப்பட்ட காற்றுக் குடையை உலகச் சந்தைக்கு 2015 டிசம்பரில் அறிமுகம் செய்வோம். அப்போது அனைவரும் விரும்பிப் பயன்படுத்தும் குடையாக இது இருக்கும்” எனத் தன்னம்பிக்கையோடு கூறுகிறார்கள் கிக்ஸ்டார்ட்டர் இளைஞர்கள்.
‘காற்றுக் குடை’ பற்றிய சுவாரஸ்யமான வீடியோ மற்றும் தகவல் அறிய:https://www.kickstarter.com/projects/1243275397/air-umbrella

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...