Monday, June 1, 2015

டிரைவரை ஏமாற்றிய பெண்ணுக்கு48 கி.மீ., நடைபயண தண்டனை

சிகாகோ:அமெரிக்காவில், வாடகை டாக்சிக்கு பணம் கொடுக்காமல் ஓட்டுனரை ஏமாற்றிய பெண்ணுக்கு, 48 கி.மீ., துாரம் நடைபயணம் மேற்கொள்ள உத்தரவிட்ட நீதிபதியின் தீர்ப்பு, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அமெரிக்காவின், லேக் கவுண்டியைச் சேர்ந்த பெண், விக்டோரியா பாஸ்கம். இவர், க்லெவெலான்டிலிருந்து பெய்ன்ஸ்வெல்லே வரை, 48 கி.மீ., துாரம், வாடகை டாக்சியில் பயணம் செய்தார்.


பெய்ன்ஸ்வெல்லே வந்தவுடன் காரிலிருந்து இறங்கிய விக்டோரியா, காருக்கான வாடகை பணத்தை ஓட்டுனரிடம் கொடுக்க மறுத்தார். பணத்தை கொடுக்காமலேயே, அங்கிருந்து சென்றுவிட்டார். அதிர்ச்சியடைந்த ஓட்டுனர், விக்டோரியா மீது புகார் செய்தார். விக்டோரியா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், வழக்கை விசாரித்த நீதிபதி, மைக்கேல் சிக்கோனெட்டி, 48 கி.மீ., துாரம் வாடகை டாக்சியில் பயணித்து, பணம் கொடுக்காமல் ஓட்டுனரை ஏமாற்றிய விக்டோரியா, 48 கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டார்.




தவறினால், ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார். மேலும், சம்பந்தப்பட்ட வாடகை டாக்சி நிறுவனத்திடம், 6,000 ரூபாய் தொகையை, விக்டோரியா செலுத்த வேண்டும் எனவும் கூறினார். ஏமாற்றி பயணித்த துாரத்தை நடந்தே செல்ல வேண்டும் என்ற வினோத தீர்ப்பு, அந்நாட்டு மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மின் கட்டண கூடுதல் வைப்பு தொகை:20 லட்சம் பேரிடம் ரூ.50 கோடி வசூல்

மின் வாரியம், 20 லட்சம் பேரிடம், 50 கோடி ரூபாய் அளவிற்கு, கூடுதல் காப்பு வைப்புத் தொகை வசூல் செய்துஉள்ளது.


தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, வீடு, வணிகம், தொழிற்சாலை என, மொத்தம், 2.60 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். புதிய மின் இணைப்பு பெறும் போது, மின் நுகர்வோரிடம் இருந்து, ஒரு முனை, 200 ரூபாய்; மும்முனை, 600 ரூபாய் என, காப்பு வைப்புத் தொகை வசூலிக்கப்படுகிறது. மின் பயன்பாட்டை பொறுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, காப்பு வைப்புத் தொகையில் மாற்றம் செய்ய வேண்டும். அதன்படி, மின் இணைப்பு பெறும் போது, குறிப்பிட்டிருந்த அளவை விட, மின் பயன்பாடு அதிகரித்திருந்தால், கூடுதல் வைப்புத் தொகை வசூலிக்கப்படுகிறது. மின் பயன்பாடு குறைந்திருந்தால், வைப்புத் தொகை, வசூல் செய்யப்படுவதில்லை.

மின் வாரிய அதிகாரிகள், 2015-16க்கு, கூடுதல் வைப்புத் தொகை வசூலிக்கும் பணியை, கடந்த ஏப்ரலில் துவக்கினர். மொத்தம் உள்ள, 2.60 கோடி மின் நுகர்வோரில், 45 லட்சம் பேர் மட்டும், கூடுதல் வைப்புத் தொகை செலுத்த தகுதியானவர்கள். கடந்த, 29ம் தேதி வரை, 20 லட்சம் மின் நுகர்வோரிடம், 50 கோடி ரூபாய் கூடுதல் வைப்புத் தொகை வசூலிக்கப்பட்டு உள்ளது.




இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வீடுகளில், மின் பயன்பாடு எடுக்கும் போது, மின் கட்டண தொகை; கூடுதல் வைப்பு தொகையை, தனித்தனியாக எழுத வேண்டும். இதில், வைப்புத் தொகையை, மூன்று தவணையில் செலுத்தலாம். இதற்கு, மின் வாரியம் சார்பில், 9 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. வைப்புத் தொகை வசூலிப்பதில், குழப்பம், பிரச்னை ஏற்படாமல் இருக்க, பிரிவு அலுவலகங்களில், செயற் பொறியாளர்கள், தொடர் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

பதிலளிக்காதவர்களுக்குரூ.2 லட்சம் அபராதம்!

வருமான வரித்துறையினர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்காத வருமான வரி செலுத்து வோருக்கு, அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் வகையிலான சட்டம், அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது.
சமீபத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ள, கறுப்பு பணம் (வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துகள் பதுக்கல்) தடுப்பு சட்டம் மற்றும் வரி விதிப்பு சட்டம், 2015ன் படி, இந்த புதிய நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.

வருமான வரி செலுத்துவோருக்கு, வருமான வரித்துறை, இ - மெயில், 'பேக்ஸ்' அல்லது 'சம்மன்' மூலம், நோட்டீஸ் அனுப்பும். அந்த நோட்டீசுக்கு, பதிலளிக்க தவறுபவர்களுக்கு, குறைந்தபட்சம், 50 ஆயிரம் ரூபாய் முதல், அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க, இந்த புதிய சட்டத்தில் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த புதிய சட்ட மசோதா, லோக்சபாவில், மே 13ல், ராஜ்யசபாவிலும், அடுத்த நாள் லோக்சபாவிலும் நிறைவேற்றப்பட்டது. கடந்த 26ல், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்ததை அடுத்து சட்டமாகியுள்ளது.

அனலாய்க் காற்று!

ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் அதிகமான கோடை வெயில் மற்றும் அனல் காற்றால் இறந்தோர் எண்ணிக்கை மே 31-ஆம் தேதி வரை 2,218 பேராக அதிகரித்திருக்கிறது. ஆந்திரத்தில் 1,677 பேரும், தெலங்கானாவில் 541 பேரும் இறந்துள்ளனர். இதுதவிர, ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களிலும் அனல் காற்றால் இறந்துள்ள போதிலும் அதன் எண்ணிக்கை மிகக் குறைவுதான்.
÷ஆந்திரத்தில் கோடைக் காலத்தில் அளவுக்கு அதிகமான வெயில் காய்வது புதிதல்ல. கடந்த பதின் ஆண்டுகளாக தென் இந்தியாவில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவைக் கடக்கும் நகரங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருவது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், தற்போது ஆந்திரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வெயில் அளவு சராசரியாக 115 டிகிரி பாரன்ஹீட் (46 டிகிரி செல்சியஸ்) என்பதாக இந்த ஆண்டு உயர்ந்திருப்பதுதான் இத்தனை பேரின் மரணத்துக்குக் காரணம்.
÷ரத்தத்தைச் சுண்ட வைக்கும் வெயிலில் அதிகம் பாதிக்கப்படுவோர் முதியோர், சிறார்கள். இவர்கள் வெளியில் நடமாடினால்தான் இறப்பு நேரிடும் என்பதல்ல. இவர்கள் வீட்டுக்குள் இருந்தாலும், இந்த அனல் காற்றைத் தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு உடல் வலுவிழந்து இருப்பின், இறந்து போகிறார்கள்.
÷கடந்த ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் அதிகமான வெப்பத்துக்கும், அனல் காற்றுக்கும் ஒரு முக்கியக் காரணம் சுற்றுச்சூழல் பாதிப்பு. அத்துடன் பல்வேறு அறிவியல் காரணங்களையும் வானியல் வல்லுநர்கள் பட்டியலிடுகிறார்கள். இப்போது அதைப் பற்றிக் கவலைப்படுவதைக் காட்டிலும், மனிதர்களைக் காப்பாற்றுவதும், ஏரி, குளங்களில் இருக்கும் நீர் ஆவியாகாமல் தடுப்பதும்தான் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய மிக இன்றியமையாப் பணிகள்.
÷ஒளி ஊடகங்கள், பண்பலை வானொலிகள், செல்லிடப்பேசியில் குறுந்தகவல்கள் மூலமாக அனல் காற்று, வெப்பம் குறித்த அறிவிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், அனைத்து மருத்துவமனைகளிலும் உடனடியாக இலவச மருத்துவம் அளிக்கும் ஏற்பாடுகளும் இத்தகைய மரணங்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்கும்.
÷அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் 1995-98களில் அனல்காற்று வீசியபோது, கண்காணிப்பு மற்றும் அறிவிப்புகளால் மூன்று ஆண்டுகளில் 117 உயிர்கள் காப்பாற்றப்பட்டன (அதாவது சராசரியாக உயிரிழப்பு குறைந்தது) என்று அமெரிக்க வானிலை மையம் கணித்துள்ளது. இந்தியாவிலும் மக்களுக்கு அறிவுறுத்துதல் மூலம் மரணங்களைக் குறைக்க வாய்ப்புள்ளது.
÷மழை, வெள்ளத்துக்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வாறு முக்கியத்துவம் தந்து, பேரிடர் மீட்பு நடவடிக்கைக்கு உள்பட்டதாக அதனை அறிவிக்கின்றனவோ, அதேபோன்று, இந்த அனல் காற்றையும், அதனால் ஏற்படும் மரணங்களையும்கூட பேரிடர் என்றே கருத வேண்டும். இந்தியாவில் இதுவரையிலும் அனல் காற்று குறித்தும், அதன் தாக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவது குறித்தும் எந்தவொரு திட்டமும் இல்லை. இனியும் அவ்வாறு மெத்தனமாக இருத்தல் கூடாது என்பதையே தற்போதைய அனல் காற்று மரணங்கள் அறிவுறுத்துகின்றன.
÷பொதுமக்கள் தங்கள் பணிகளை காலை 10 மணிக்குள் முடித்துக் கொள்வது என்பதும், பிறகு மாலை 5 மணிக்கு மேல் தொடங்குவது என்பதும், எங்கிருந்தபோதிலும் வழக்கத்தைவிட அதிகமான தண்ணீர் அருந்துதல் அல்லது நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் சாப்பிடுதல் அவசியம் என்பதும் பொதுவான காப்புமுறைகள்.
÷ஆயினும், நண்பகலிலும் போக்குவரத்து இயக்கமும், கடைகள் திறந்திருப்பதும் காணப்படும் என்றால், தொழிலை நம்பியிருக்கும் சாதாரண மக்கள் வேறு வழியின்றி வீதிக்கு வர வேண்டிய அவசியம் நேரிடுகிறது. அரசு அலுவலகம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரைதான் செயல்படும் என்றால் அரசு சார்ந்த செயல்பாட்டுக்காக பொதுமக்கள் வெளியே வராமல் இருக்க முடியுமா? அரசின் அறிவுறுத்தல் மிகத் தெளிவானதாக இருப்பின், குறிப்பிட்ட நேரத்துக்கு, இன்றியமையாத பணிகள் தவிர்த்து, மற்ற பணிகளுக்கு ஓய்வு நேரமாக அறிவிப்பதும், பணி நேரத்தை மாற்றி அமைப்பதும் மக்களுக்குப் பேருதவியாக அமையும்.
÷மனிதர்களின் மரணம் ஒருபுறம் இருக்க, இத்தகைய வெயில் மற்றும் அனல் காற்று அந்த மாநிலங்களின் நீர் ஆதாரங்களை ஆவியாக்கிவிடும். நிலத்தின் மேற்பரப்பில் இருக்கும் ஈரப்பதம் முழுவதையும் அனல் காற்று இழுத்துச் சென்றுவிடும். கோடை முடிந்த பிறகு இந்த மாநிலங்களில் மிகக் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடும், விவசாயத்துக்கு பாசன நீர் இல்லாத நிலைமையும் தலைவிரித்தாடும்.
÷ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் சில வேதிப் பொருள்களைத் தூவுவதன் மூலம் நீர் ஆவியாவதைப் பெருமளவு குறைக்க முடியும். அதற்கான ஆலோசனை வழங்குதல், அத்தகைய வேதிப்பொருள் கிடைக்கச் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவதும், விவசாயிகள் எந்தெந்தப் பயிருக்கு, எந்தெந்த நேரத்தில் பாசனத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளும் நீர் வீணாகாதபடி பயன்படுத்த உதவும்.
÷தமிழ்நாட்டிலும்கூட, கோடைக் காலத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவைத் தாண்டும் நகரங்கள் குறைந்தது 10-ஆக உள்ளது. தமிழ்நாட்டில் அனல் காற்று இல்லை என்றாலும், நீர் ஆதாரங்களில் நீர் ஆவியாகாமல் தடுப்பதற்கான வழிமுறைகள், பாசன மேலாண்மை ஆலோசனைகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதால் நமக்கு நன்மையே. 2025-இல் இந்தியாவில் மிகக் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவும் என்று அறிக்கைகள் எச்சரிக்கும் நிலையில், நாம் இப்போதே நடவடிக்கையில் இறங்கத்தான் வேண்டும்.

160 கி.மீ. வேக ரயிலை விரைவில் தொடக்கிவைக்கிறார் மோடி

தில்லி - ஆக்ரா இடையே மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடிய "கதிமான்' விரைவு ரயில் சேவையை ஜூன் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
தில்லி - ஆக்ரா இடையிலான 200 கி.மீ. தொலைவை, அந்த ரயில் 105 நிமிடங்களில் சென்றடையும் என கணக்கிடப்பட்டுள்ளது. கதிமான் விரைவு ரயிலுக்கு பலமுறை வெள்ளோட்டம் பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதலுக்குப் பிறகு தொடக்கவிழா நடைபெற உள்ளது.
"தில்லி - ஆக்ரா இடையிலான ரயில் சேவையை ஜூன் 9-ஆம் தேதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது' என்று ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவசரகால நிறுத்தக் கருவி (பிரேக்), தானியங்கி தீ எச்சரிப்புக் கருவி உள்ளிட்ட வசதிகள் புதிய ரயிலில் இடம்பெற்றுள்ளன. இந்த ரயிலுக்கான பயணக் கட்டணம், சதாப்தி ரயில்களை ஒப்பிடுகையில் 25 சதவீதம் கூடுதலாக இருக்கும்.
மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் ரயில்களை சென்னை - ஹைதராபாத், கான்பூர் - தில்லி, கோவா - மும்பை உள்ளிட்ட 9 வழித்தடங்களில் விரைவில் இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

Ticketless train travel up by 22% in Pune

PUNE: The number of ticketless travelers in the Pune railway division has increased by 15% this year, says the latest report released by the railway administration.

The cases of ticketless travel have gone up by 22% in 2014-15 while that of improper ticket travel were up by 10%. The cases of unbooked luggage increased by about 4% over the previous year.

The railway officials termed the rise in offences as alarming. They said it is a matter of serious concern because despite repeated appeals, commuters just do not care enough to purchase proper tickets before entering the train.

A senior railway official said, "Over one lakh people were caught for not having proper journey tickets this year — a rise of 9,000 against the previous year. About 84,000 travellers were booked for not purchasing tickets. The number is higher by 16,000. Most offenders were caught in suburban sections in the Pune-Lonavla and Pune-Daund routes."

"The cases of travel without proper tickets include travelling either in wrong compartment or in wrong train, travelling in second class reserved compartment while having a ticket of general class or travelling in express train with a ticket of local train," the official said.

The cases of unbooked luggage increased from 7,202 in 2013-14 to 7,519 last fiscal. The division collected a total fine of Rs 10.38 crore in 1.94 lakh cases, against last year's collection of Rs 8.91 crore from 1.69 lakh cases.

CHENNAI: Realizing that around 15% of suburban travellers - 8 lakh to 10 lakh per day - change over from the southern line to the western line every day, Southern Railway is planning to introduce direct trains between Tambaram and Arakkonam via Beach railway station.

Now people get down at beach and board trains to Tiruvallur or Arakkonam from another platform.
Divisional railway manager, Chennai, Anupam Sharma said, "The 12-car services will start by end of the year. This will ensure that there will be more 12-car trains on the Beach-Tiruvallur-Arakkonam route."
Tambaram-Beach and Beach-Arakkonam line together handle more than 80% of the suburban traffic.
"The demand for a through train has been there for a long time. The number of commuters who get down at Beach railway station and board trains to Tiruvallur and Arakkonam has increased," said a railway official. He also said that the move to run 'through' trains came because of the patronage for services.
The move will be beneficial to hundreds of commuters because they currently spend 15 minutes to 20 minutes at Beach waiting for the connection on the Arakkonam route.
In November, six trains on the Arakkonam-Beach line and two trains on the Sulurpet-Beach line were extended to Velachery. This includes a ladies special from Arakkonam at 7am.
Railway Passengers Association, Tiruvallur, K Baskar, said, "Railways should introduce fast trains between Tambaram and Arakkonam with stops at major stations. This will not only cut down the travel time but also make the trains less crowded."
Several passengers who live in the western suburbs travel to Saidapet, Guindy and also Tambaram for work and education.

Similarly, people who live in neighbourhoods along the southern line travel to Perambur, Ambattur and Tiruvallur for work.
"Trains are cheaper for people. It costs Rs 1,000 to buy a monthly pass on bus but a season ticket will cost only Rs 235 from Chrompet to Tiruvallur. This matters a lot to the monthly budget of people. Trains are faster also," said Baskar.
Railways have started to upgrade stations on Beach-Tiruvallur to accommodate 12-car trains. "Platforms are being lengthened at many stations. We are planning to extend platforms at five stations between Korattur and Pattabhiram and in seven stations between Egattur and Puliyamangalam this year so that the services can be operated from Tambaram," said Anupam Sharma.
He also said that a new foot overbridge would be built and platforms 2 and 3 would be extended at Arakkonam railway station.

NEWS TODAY 2.5.2024