Friday, July 24, 2015

அரசியல் - சாக்கடையா? By கோமல் அன்பரசன்..தினமனி

அரசியலா... அது ஒரு சாக்கடையில்ல... - நம்மிடம் மிகச் சரளமாக புழக்கத்தில் இருக்கும் சொல்லாடல் இது. அதிலும் நடுத்தர வர்க்கத்தவரிடம் இந்த எண்ணம் ஆழ வேரூன்றி கிடக்கிறது. ஆனால், அரசியல் இல்லாமல் இங்கே என்ன நடக்கிறது அல்லது நடந்துவிட முடியும்?
காலையில் தூங்கி எழுந்திருப்பதில் இருந்து இரவு மீண்டும் தூங்கப்போகும் வரை எதிர்கொள்கிற எல்லாவற்றிலும் ஏதோ ஒரு வகையில் அரசியல் இருக்கிறது. பொழுதுபோக்குக்காக பார்க்கிற திரைப்படம், தொலைக்காட்சி, படிக்கிற இதழ்கள் எல்லாவற்றின் பின்னணியிலும் அரசியல்தான்.
இப்படி நம்முடைய பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொன்றிலும் அரசியல் ஒளிந்து கிடக்கிறது. சில இடங்களில்
பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. மொத்தத்தில் நம் உணவை, உடையை, செயல்பாடுகளை முடிவு செய்வது அரசியலே. நிறுத்தி, நிதானமாக யோசித்தால் இதிலுள்ள உண்மை உங்களுக்குப் புரியும்.
÷நம்முடைய வாழ்வை, நாம் விட்டுச் செல்லவிருக்கும் அடுத்த தலைமுறையின் வாழ்வியலை, நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற அரசியலை, அது ஒரு சாக்கடை என வெகு எளிதாகக் கடந்து செல்கிறோம். இது எப்படிச் சரியாக இருக்க முடியும்? அட, அதற்காக என்ன செய்ய? எல்லாரும் வேலையை விட்டுவிட்டு, கட்சிகளில் ஐக்கியமாகி, கரை வேட்டி கட்டிக்கொண்டு கிளம்பிடவா முடியும், கொடி ஏற்றி முழங்கிடவா முடியும் என்று நீங்கள் கேட்பது காதுகளில் விழுகிறது. அங்கேதான் பிரச்னை.
÷அரசியலைப் பற்றிய நம் சிந்தனை அப்படித்தான் இருக்கிறது. ஒன்று ஒதுங்கிப் போக வேண்டும். இல்லையென்றால் அதில் மூழ்கி முத்து எடுக்க வேண்டும். நம் தலையெழுத்தை நிர்ணயிக்கும் அரசியலைப் பற்றி பேசவே பயப்படும் மனநிலைக்கு நாம் வந்த இடம்தான், அரசியல் அவலமானதன் ஆரம்பம். நமக்கேன் அரசியல் என்று நாம் ஒதுங்கியதே நிலைமை இத்தனை மோசமானதன் தொடக்கம்.
÷அதைப் பற்றி பேசவும் அதில் இயங்கவும் யாரோ சிலர் இருக்கிறார்கள் என்ற எண்ணமே இங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. முதலில் ஒதுங்கியதால், அரசியல்வாதிகள் சகல அதிகாரம் கொண்ட தனி சமூகமானார்கள்.
பிறகு அவர்களைப் பார்ப்பதற்கே தயங்குவதற்கும், எண்ணி பயப்படும் அளவுக்கும் சூழல் மாறியது. கடைசியாக அரசியல்வாதி நம்மில் ஒருவர், நம்மால் தேர்ந்தெடுக்கப்படுபவர் என்று சிந்திப்பதற்கே அஞ்சி, அவர்களைத் தாழ்ந்து, பணிந்து தொழும் நிலைக்கு வந்து நிற்கிறோம்.
÷மேலை நாடுகள் பலவற்றில் வேலை அல்லது தொழில் செய்து கொண்டே அரசியலிலும் இருக்கிறார்கள். அங்கே யாருக்கும் இது முழு நேர தொழில் இல்லை. அதனால், பணத்தைக் குவிப்பதற்கான வழிமுறையாகவும் அரசியலைப் பார்ப்பதில்லை.
உலகத்தின் உச்சாணிக்கொம்பில் இருக்கிற அமெரிக்காவில் இரண்டாவது முறை அதிபரான ஒபாமா, அடுத்த ஆண்டு பதவிக் காலம் முடிந்ததும் பார்ப்பதற்கான வேலையை இப்போதே தேடிக் கொண்டிருக்கிறார்.
சரியான பணி அமையாவிட்டால், அதிபராவதற்கு முன்பு பார்த்த தன்னார்வத் தொண்டு நிறுவன ஆலோசகர் பணியை மீண்டும் தொடரலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பதாக ஒபாமா கூறியிருக்கிறார். இது அங்கே புதிதல்ல. ஏனெனில், அமெரிக்க சட்டப்படி இரு முறைக்கு மேல் ஒரே நபர் அதிபராக முடியாது.
÷ஏற்கெனவே அதிபராக இருந்த ஜிம்மி கார்ட்டர், தம்முடைய பூர்வீக வேர்க்கடலை விவசாயத்துக்குத் திரும்பி, அதில் கிடைக்கும் வருவாய் மூலம் மக்களுக்கும் சேவை செய்கிறார். சில நிறுவனங்களுக்கு ஆலோசகராக வேலை பார்க்கும் கிளிண்டன் அறக்கட்டளையும் நடத்துகிறார். நம் தலைவர்களைப் பற்றி நம்மால் இப்படி கற்பனை செய்து பார்க்க முடியுமா? தலைவர்களை விடுங்கள். முன்னாள் கவுன்சிலர்கள் குறித்தாவது நினைக்க இயலுமா?
எனவே, வளம் கொழிக்கும் தொழில் என்ற நிலையிலிருந்து நம்ம ஊர் அரசியலை மீட்டெடுக்க வேண்டிய அவசிய, அவசரம் இப்போது ஏற்பட்டிருக்கிறது.
÷ஒன்றிரண்டு ஆண்டுகளில் பதவி, அதன் பிறகு கார், பங்களா, சொத்து,
சுகம், ஊரே மிரளும் அதிகாரம் - இவற்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இளைஞர்களும் இன்ன பிறரும் அரசியலுக்கு வருகிறார்கள்.
இதனால், அரசியலுக்கு வருவதற்குத் தேவையான தகுதிகளும் அடியோடு மாறிவிட்டன. சித்தாந்த அரசியல் செத்து போய், தனி நபர் துதி பாடலும், தறுதலைச் செயல்களும் தூக்கலானதே அரசியலைப் பற்றிய அருவெறுப்புக்கு முக்கிய காரணிகளாகிவிட்டன. தவறானவர்களின் புகலிடம் என்பதோடன்றி, சரியானவர்கள் நுழைந்தாலும் கெட்டுப் போகாமல் அரசியலில் குப்பை கொட்ட முடியாது என்ற எண்ணமும் அழுத்தத்திருத்தமாகப் பதிந்திருக்கிறது.
÷காமராஜர், கக்கன், சத்தியமூர்த்தி, முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட பலரும் இளைஞர்களாக அரசியலுக்கு வந்தவர்கள்தான். அவர்களின் சிந்தனை நாட்டின் மீதும், மக்களின் மீதும் அக்கறை கொண்டதாக இருந்தது.
÷காமராஜர் ஆட்சியிலும் குற்றச்சாட்டுகள் இருந்தன. அதையெல்லாம் தாண்டி குறைந்தபட்ச தவறு, அதிகபட்ச அக்கறை, தார்மிக உணர்வு இருந்தது. மக்கள் தவறாக நினைப்பார்களே என்ற பயம் இருந்தது. அரசியலில் பணம் குவித்து, பகட்டாக இருப்பவர்களை அன்றைக்கு மக்கள் வெறுத்தார்கள். பெரும்பாலானோர் மனசாட்சிக்குப் பயந்து நடந்தார்கள்.
அடுத்தவனைக் கெடுத்தால், அநியாயம் செய்தால், அன்றே இல்லாவிட்டாலும் அடுத்த நாள் அதற்கான பலனை அனுபவிக்க நேரிடும் என்று அதிகம் பேர் அஞ்சினார்கள். தலைவர்கள், தங்களைவிட மேலானவர்களாக, உதாரண புருஷர்களாக, நாட்டுக்காகத் தியாகம் செய்தவர்களாக இருக்க வேண்டும் என விரும்பினார்கள். அதனால், தலைவர்களும் மக்களைக் கண்டு பயந்தார்கள்.
அன்றைய கனவு ஊர்தியான அம்பாசிடர் கார் வாங்குவதற்கும் சொந்த வீடு கட்டுவதற்கும் பயந்த அரசியல்வாதிகள் ஊருக்கு ஊர் இருந்தார்கள். ஏராளமான எம்.எல்.ஏ.க்கள் கடைசிவரை இரு சக்கர வாகனத்தில்தான் தொகுதியைச் சுற்றி வந்தார்கள்.
÷சிறு வயதில் பார்த்த காட்சிகள் இன்னும் அப்படியே மனக்கண்ணில் நிற்கின்றன. மதுக் கடைக்குச் செல்பவர்கள் பயந்து, அக்கம்பக்கம் பார்த்து, யாராவது தம்மைப் பார்த்து விடுவார்களோ என்று அஞ்சி செல்வார்கள்.
இன்னும் ஒருபடி மேலாக, தலையில்
முக்காடு போட்டு முகத்தை மூடிக்கொண்டு சாராயக் கடைக்குப் போனவர்களை எங்கள் கிராமத்தில் பார்த்திருக்கிறேன். உறவையோ, நட்பையோ மதுக் கடையில் பார்ப்பதைக் கேவலமாக
பார்த்த சமூகம், குடும்பம், மனிதர்கள் அன்றைக்கு இருந்தார்கள். இப்போது நிலைமை என்ன என்பதை மனதில் ஓட்டி பாருங்கள். மதுவும் மனிதனும் என்பது ஒரு குறியீடுதான். ஏறத்தாழ எல்லா மதிப்பீடுகளும் இதே கதிக்குதான் ஆளாகியிருக்கின்றன. ÷தவறுகள் எல்லாமே தவறுகள் இல்லை என்ற புதிய வாழ்வியல் சூத்திரத்தை நமக்கு வசதியாக உருவாக்கி வைத்திருக்கிறோம். நம்முடைய தலைவர்களும் அப்படியே இருக்கிறார்கள். மக்கள் எப்படியோ? அப்படித்தான் தலைவர்கள் உருவாகி வருவார்கள் என்று சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள். தேர்தல் நடக்கிறது.
ஏதோவொரு அளவீட்டில், மதிப்பீட்டில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறோம். அவரால் நன்மைகள் நடக்க வேண்டும் என்று நினைப்பதுதானே இயற்கையான எண்ணம். அத்தகைய எதிர்பார்ப்புதானே சரியாகவும் இருக்க முடியும். ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் இடைத்தேர்தலுக்காக நம் மனசு ஏங்குகிறதே!
÷அதனால்தான், தேன் எடுக்கிறவன் கொஞ்சமாக நக்கத்தான் செய்வான் என்று நம் தலைவர்கள் நியாயம் கற்பிக்கிறார்கள். மக்களுக்கு கொடுத்ததை நாங்கள் திரும்ப எடுக்க வேண்டாமா என்கிறார்கள். அடுத்த முறை கொடுப்பதற்காகவே எடுத்து வைக்கிறோம் என்றும் சொல்கிறார்கள். நாமும் அதனைச் சரியென்று வழிமொழிபவர்களாக இருக்கிறோம்.
மொத்த குறையும் மக்கள் மீதுதானா? நம்மைக் கெடுத்ததில் தலைவர்களுக்குப் பங்கில்லையா என்றால், இருக்கலாம். ஆனால், அவர்கள் துணிந்து கெடுப்பதற்கும், தொடர்ந்து கெடுப்பதற்கும் இடம் கொடுத்தது நம் தவறுதானே?
எல்லாம் சரி - இதற்கு என்னதான் தீர்வு? யாராவது வானத்திலிருந்து குதித்து வருவார்கள். அவர்கள் ஏதாவது ஆச்சரியங்களை நிகழ்த்துவார்கள். அதை வாய் பிளந்து பார்த்து, கை தட்டி மகிழ்வோம் என்ற எண்ணத்திலிருந்து முதலில் நாம் ஒவ்வொருவரும் வெளியே வர வேண்டும். அணு,அணுவாக நம்மை இயக்குவது அரசியலே என்பதிலும் அதனைத் தீர்மானிப்பதும் வழிநடத்துவதும் நாமே என்பதிலும் நமக்குத் தெளிவு பிறக்க வேண்டும்.
ஆரோக்கியமான அரசியலைப் பற்றி சிந்திக்காத, ஆர்வம் காட்டாத மக்களோ, தேசமோ உருப்பட்டதில்லை என்று வரலாறு நமக்குச் சொல்லித் தரும் பாடத்தை மனதில் இருத்த வேண்டும்.
÷நல்ல சிந்தனை, நல்ல எண்ணங்களுக்கு வலிமை உண்டு. யாரோ ஒரு தனி மனிதனின் நல்ல எண்ணமே செயல் வடிவம் பெறுகிறபோது, நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம் பேர் என ஒரு சமூகமே நல்லனவற்றைச் சிந்திக்கத் தொடங்கிவிட்டால் அதற்கு எவ்வளவு ஆற்றல் இருக்கும்.
நல்ல அரசியல் அல்லது அரசியலில் நல்லவர்கள் என்ற அந்த எண்ணம் செயலாக, நடைமுறையாக மாறிவிடுமல்லவா? ஊருக்கு சாக்கடை அவசியம். அதற்காக ஒட்டுமொத்த ஊரும் சாக்கடையாவதற்கு விடப்போகிறோமா என்பது நம் சிந்தனையில், செயலில்தான் இருக்கிறது.

கட்டுரையாளர்: ஊடகவியலாளர்
இதற்கு என்னதான் தீர்வு? யாராவது வானத்திலிருந்து குதித்து வருவார்கள். அவர்கள் ஏதாவது ஆச்சரியங்களை நிகழ்த்துவார்கள். அதை வாய் பிளந்து பார்த்து, கை தட்டி மகிழ்வோம் என்ற எண்ணத்திலிருந்து முதலில் நாம் ஒவ்வொருவரும் வெளியே வர வேண்டும்.


Thursday, July 23, 2015

NET, GATE & MPhil qualifiers not exempted from PhD entrance test

INDORE: Revising its minimum standards and procedures for award of PhD degree as per UGC regulations 2009, Devi Ahilya Vishwavidyalaya (DAVV) released admission instructions making it compulsory for national eligibility test (NET), GATE and MPhil qualifiers to appear in PhD course entrance examinations from this year.

However, candidates qualifying NET with junior research fellowship will be exempted from PhD entrance examination.

DAVV executive council had approved amendments and sent them for approval of apex higher education regulatory body in state - coordination committee that further gave its nod on recommendations.

On Tuesday, varsity administration released ordinance 18 and instructions for admissions to PhD course that were approved by coordination committee recently.

Among other changes, the varsity has reduced time of examination from three to two hours, qualifying marks in the entrance examination have been increased from 40% to 50%, a combined entrance examination will be held for PhD and MPhil courses and only regular teachers will be able to become supervisors.

For candidates taking admission in PhD/MPhil courses in 2015, entrance examination is scheduled to be held on September 1, whereas last date for submitting application form is August 24.

Results will be declared on September 12. Coursework classes will begin from October 5.

Entrance test shall comprise one multiple choice objective type paper comprising one hundred questions of one mark each covering all basic papers of Post Graduate courses concerned of two-hour duration to assess fundamental knowledge of the candidate. There will not be any negative marking.

Southern rly introduces ‘Suvidha’ special trains

TRICHY: To meet the demand on popular routes, Southern Railway has introduced Suvidha special trains with a flexible fare system. Passengers have given thumbs up to the new special trains.

After facing criticism from passengers on premium trains that were operated on dynamic fares, Southern Railway has decided to try a new system by introducing Suvidha special trains.

Southern Railway will begin its 'Suvidha special train' operation in the state from Chennai Egmore to Tirunelveli on August 14.

According to railway officials, Train No.00603 Chennai Egmore-Tirunelveli 'Suvidha' special train will leave Chennai Egmore at 9pm on August 14 (Friday) and will reach Tirunelveli at 10.45am the next day with stoppages at Tiruchchirappalli, Dindigul, Madurai, Virudhunagar and Kovilpatti. The special train will be operated on August 21 and 28 as well. Advance reservations for the trains have commenced from July 17 and are filling briskly, say railway officials.

S Kalyani, a passenger, said the dynamic fare system was introduced on a par with airlines, which led to many passengers feeling the pinch. Besides, there was no cancellation under the dynamic fare system. Reservation on regular trains usually commences 60 days in advance, whereas it was 15 days in case of premium trains for the benefit of passengers who plan their journey at a short time period and also assured of a confirmed accommodation.

For Suvidha special trains, maximum advance reservation period will be 30 days while the minimum advance reservation period will be 10 days. Each zonal railways can decide the exact advance reservation period for trains within its limit.

With only limited stoppages, passengers are delighted that the Suvidha service be continued. Train number 00604 Tirunelveli - Chennai Egmore 'Suvidha' special train will leave Tirunelveli at 2.45pm on Sundays (August 16, 23 and 30) and reach Chennai Egmore at 4.20am the next day. Railway officials said that the composition of the trains will be one AC 2-tier, one AC 3-tier, 12 sleeper class and two luggage-cum-brake vans.

Smriti Irani's ambiguous reply to House on MPhil, PhD via correspondence...TOI

NEW DELHI: On Tuesday HRD minister Smriti Irani gave a ambiguous reply in Lok Sabha to a question on allowing Ph.D and M.Phil through correspondence.

Irani said UGC has informed that as per their regulation of 2009 M.Phil and Ph.D programmes "shall not be conducted through distance education mode in the country."

This is contrary to the facts. Only last month, HRD ministry asked UGC to furnish status of regulation of 2011 that allowed open universities to conduct M.Phil/Ph.D programmes. Since UGC had not notified the regulation of 2011, it could not be put in operation. Indira Gandhi National Open University had been demanding that UGC should notify it at the earliest.

IGNOU had already amended its ordinance allowing M.Phil/Ph.D through distance mode. But when IGNOU sought visitor's approval for its amendment, HRD ministry could not forward it since UGC had not notified the changes in regulations.

In July 2011, UGC in its 479th meeting had amended its UGC (Minimum Standards for award of M.Phil/Ph.D) Regulations-2009. It was decided that an open University may be permitted to conduct M.Phil./Ph.D. programmes through distance education mode, subject to the condition that it does so strictly as per the provisions of the UGC Regulations, 2009.

It also said the 11-point criteria laid down by the Standing Committee on M.Phil./Ph.D. Regulations, 2009 may be uploaded on UGC website and circulated to all institutions of higher education for information and further action. UGC had also stipulated that for undertaking Ph.D. under distance education mode, the principal guide should be from within the open university, and a joint guide, wherever necessary, may be from outside the university. However, a teacher should not have more than two candidates under his supervision as a joint guide.

HC criticises college

The Madras High Court Bench here has criticised a private engineering college at Srivaikundam in Tuticorin district for preventing a third-year mechanical engineering student from attending classes without suspending him or issuing a charge memo after he was accused of damaging college property following a suicide bid by a girl student.

Allowing a writ petition filed by the student seeking permission to write his sixth semester examinations, Justices S. Manikumar and G. Chockalingam said that it was a fit case to impose cost on the educational institution.

However, the judges deferred from passing such an order since the student had to pursue his education in the same college for at least one more year.

Marriage, no reason to prevent woman from completing graduation: HC

In a significant judgment, the Madras High Court Bench here has ruled that a woman pursuing final year of graduation cannot be prevented by the college from completing her course just because she fell in love with a person professing a different faith and married him despite opposition from both their families.

Allowing a writ appeal filed by a Muslim student who had married a Christian youth, Justices S. Manikumar and G. Chockalingam said: “Marrying a person during the course of study cannot be construed a misconduct or an act contrary to the rules and regulations of the college affecting its reputation and perpetuating indiscipline among students.”

Holding that the college had no role to play on such issues, the judges said that the inter-religious marriage between the couple was a personal issue to be sorted out between two families. “Even assuming it to be a mistake, we only wish to quote Martin Luther King who had said that he who is devoid of the power to forgive is devoid of the power to love,” the judges said.

Authoring the verdict, Mr. Justice Manikumar also quoted the Dalai Lama to have said: “All religious traditions carry basically the same message that is love, compassion and forgiveness. The important thing is they should be part of our daily lives.” He also observed that courts cannot lose sight of intolerance prevalent in society against inter-religious and inter-caste marriages.

Since the writ appellant, a meritorious student had been permitted to write the final year examinations of her Bachelor of Arts course in English literature through interim orders passed on the appeal on April 20, the judges directed the petitioner’s college in Nagercoil in Kanyakumari district and the university, to which it was affiliated, to declare the results forthwith.

Bench rules that a woman cannot be prevented by college from completing her course just because she married a person professing a different faith





சாதனை தருகிற வேதனை

அன்று தொலைக்காட்சியைப் பார்த்தவர்கள் துடித்துப் போனார்கள். "இது என்ன கொடுமை?' என்று சொல்லாதவர்களே இல்லை. அப்படி ஒரு காட்சியை இதற்கு முன் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். "இப்படியும் நடக்குமா?' என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர். வேறு என்ன செய்வது?
4 வயதுக் குழந்தைக்கு மதுவை ஊற்றி அருந்தச் செய்யும் காட்சி மனிதநேயம் கொண்டோரைப் மனம் பதறச் செய்யாதா? இளைஞர்கள் சிலர் சேர்ந்து சிறுவனை வலுக்கட்டாயமாக மது அருந்த வற்புறுத்துவதும், அருந்தி முடித்ததும் சிறுவன் குவளையை வீசி எறிவதும் அக்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
மதுவை ஊற்றிக் கொடுக்கும் காட்சி கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்), முகநூலில் (ஃபேஸ்புக்) வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொலைக்காட்சிகள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி பார்த்தவர்களைப் பதை பதைக்க வைத்தது.
குடி குடும்பத்தை அழிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். தெரிந்துதான் குடிக்கிறார்கள். "மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உடம்புக்குக் கேடு' என்று அச்சடித்து ஒட்டி வைத்துக் கொண்டுதான் அரசு விற்பனை செய்கிறது. அப்பாவி மக்களும் படிக்காமல் குடித்து அழிகிறார்கள்.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனையே கடித்ததுபோல முதியவர்களிடமிருந்து இளைஞர்களுக்குத் தாவி, இப்போது மாணவர்களையும், குழந்தைகளையும் சீரழிக்கும் அளவுக்குச் சமுதாயம் செயல் இழந்து போய்விட்டது. இதனைப் பார்த்துக் கொண்டு எதுவும் செய்யாமல் "சும்மா இருப்பதே சுகம்' என்று இருப்பதைவிட, வேறு தேசத் துரோகம் ஏதும் இருக்க முடியாது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகேயுள்ள மேல் சோழங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவனின் பெற்றோர் கட்டுமானத் தொழிலாளர்கள்; சென்னையில் தங்கி வேலை செய்கிறார்கள். பாட்டியின் பராமரிப்பில் சிறுவன் இருந்து வருகிறான். அங்கன்வாடிக்குச் சென்று படித்து வருகிறான்.
23.6.2015 அன்று ஆடு மேய்க்கச் தனது பேரனையும் பாட்டி அழைத்துச் சென்றுள்ளார். மேல் சோழங்குப்பம் ஏரி அருகே உள்ள மைதானத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிறுவனை அவனது தாய்மாமன் அழைத்துச் சென்றுள்ளார்.
அவனை மரத்தடியில் உட்கார வைத்து, வாங்கி வைத்திருந்த மதுவைக் குவளையில் ஊற்றி அருந்தச் செய்து உள்ளனர். இளைஞர்களின் இந்தக் கேளிக்கை நிகழ்வை செல்லிடப்பேசியில் படம் பிடித்து நண்பர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
மதுவின் போதையில் அந்த இளைஞர்கள் தாம் செய்வது எவ்வளவு பெரிய பாதகம் என்பதுகூடத் தெரியாமல் குதூகலமாகக் கொண்டாடியிருக்கிறார்கள். என்னே கொடுமை!
இது கட்செவி அஞ்சலில் பகிரப்பட்டு பரவியதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸôர், இளைஞர்களைக் கைது செய்தனர். குழந்தைகள் பராமரிப்பு, பாதுகாப்புச் சட்டம், கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி வெளிச்சத்துக்கு வந்த பிறகு, இதே போன்ற பல நிகழ்வுகள் பல இடங்களில் நடந்திருப்பதாகவும் தெரிய வருகிறது. இதனை வெறும் சட்டம் - ஒழுங்குப் பிரச்னையாக மட்டும் பார்க்கக் கூடாது. அழுகிப் போன சமுதாயத்தின் முடைநாற்றம் இது; வார்த்தைகளில் எழுத முடியாத வக்கிரம்; ஆறறிவு கொண்ட மனிதனுக்கு அவமானம்.
"குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்பது நம் பாரம்பரிய பழமொழி. அந்த வணக்கத்துக்குரிய குழந்தைகளை இப்படித்தான் கொண்டாடுவதா? மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடுகளைக் குறைத்துக் கொண்டே போனால் எதிர்காலம் என்னாகும்?
2015 ஜூலை 8. கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி தன் தோழிகளுடன் சேர்ந்து மது அருந்தி விட்டு போதை தலைக்கேறி போக்குவரத்து நிறைந்த நடுசாலையில் கூச்சல் போட்டு ரகளை செய்துள்ளார். தகவல் அறிந்து துடியலூர் காவல் துறையினர் விரைந்து சென்று மாணவியை மீட்டு காவல் நிலையத்துக்குக் கொண்டு போயுள்ளனர்.
அங்கு மாணவியின் போதையைத் தெளிய வைத்த மகளிர் காவலர்கள், மாணவியின் முகவரி, பெற்றோரின் செல்லிடப்பேசி எண்ணைப் பெற்று அவர்களைக் காவல் நிலையத்துக்கு வரவழைத்துள்ளனர்.
போதையிலிருந்த மகளின் நிலை கண்டு பெற்றோர் கதறி அழுதுள்ளனர். காவல் துறையினர் அறிவுரை கூறி, மாணவியின் நலனைக் கருதி வழக்குப் பதிவு செய்யாமல் எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக் கடை முன்பு குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு ஒரு பெண் மது வாங்கி அருந்தியிருக்கிறார். போதை ஏறியதும் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு புறப்பட்டு விட்டார். குழந்தையைத் தூக்கிச் செல்லுமாறு சிலர் வலியுறுத்தியபோது அவர்களைக் கடுஞ்சொற்களால் ஏசியுள்ளார்.
அந்தப் பெண், குழந்தையைக் கடத்தி வந்திருப்பாளோ என்று சந்தேகப்பட்டு சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அந்தப் பெண் சேலம் ஜங்ஷன் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அந்தக் குழந்தை அவளுடையதுதான் என்றும் தெரிய வந்துள்ளது. இதுவும் ஜூலை 8 அன்று நடந்ததுதான்.
இந்த நிகழ்வுகள் எல்லாம் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போலத்தான். தமிழ்நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டும் எடுத்துக்காட்டுகள். சமுதாயத்தின் முக்கிய அங்கங்களான பெண்களும், குழந்தைகளும் வழிமாறிப் போய் விடுவார்களானால், அந்தச் சமுதாயத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.
திசைகாட்டும் கருவிகளே திசைமாறிப் போய் விடுமானால் கப்பலும், அதில் பயணம் செய்யும் பயணிகளும் என்ன ஆவது? அலைகடலில் அவர்களைச் சூழ்ந்து கொண்டுள்ள சூறாவளியிடமிருந்து அவர்கள் தப்பிக்க வழி என்ன?
சிறுவர்களை இழிவுபடுத்தும் விடியோ, புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்புவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
18 வயது நிறைவடையாத சிறார்களைப் பற்றிய அடையாளம் தெரியக் கூடிய படங்கள், விடியோக்களை வெளியிடுவது குற்றம். அப்படி வெளியிடுவோருக்கு இளைஞர் நீதிச் சட்டம் 2000 (திருத்தப்பட்டது 2006) பிரிவு 21-ன்படி ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதை உணராமல் பலர் இந்தக் குற்றச் செயலைச் செய்கின்றனர்.
இதுபோன்ற தகவல்கள் தெரிய வந்தால் அதை சமூக ஊடகங்களில் உலவ விடாமல் சைல்டு லைன் அல்லது காவல் துறையினருக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும். அப்படிச் செய்யாமல் சமூக ஊடகங்களில் காட்சிகளைப் பரப்பும் நபர்கள் குற்றவாளியாகக் கருதப்பட்டு தண்டிக்கப்படுவர் என்றும் சென்னை மத்திய குற்றப் பிரிவுக் காவல் துறையும் கூறியுள்ளது.
நாட்டில் ஆங்காங்கு நடக்கும் இதுபோன்ற நிகழ்வுகளை ஊடகங்கள் வெளிப்படுத்துவதன் காரணமாகவே சமூக அவலங்கள் வெளியில் தெரிகின்றன. சமூக ஆர்வலர்கள் இதனைக் கண்டித்துப் போராடுவதன் மூலமாகவே மக்களுக்கும், அரசுக்கும் காவல் துறைக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிகிறது. ஊடகங்களின் ஒலிபரப்புகளைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் யாருக்கு நன்மை செய்கிறார்கள்?
குடும்பத்தில் யார் மது அருந்தினாலும், சமுதாயத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் தெருவில் இறங்கிப் போராடுவதற்குக் காரணமும் அதுதான்.
பீர், விஸ்கி, பிராந்தி, ரம் உள்ளிட்ட மது பானங்கள் தமிழக அரசுக்குச் சொந்தமான தடய அறிவியல் ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்டு, இந்த மது பானங்கள் அருந்துவதற்குத் தகுதியானவை என்று சான்றிதழ் பெற்ற பிறகே விற்பனை செய்யப்படுகின்றன என்று டாஸ்மாக் நிறுவனம் கூறியுள்ளது.
ஆனால், தமிழக தடய அறிவியல் துறையும், மத்திய அரசுக்குச் சொந்தமான தேசிய ஆய்வுக் கூடமும், "மது பானங்களிலுள்ள நச்சுத் தன்மையை ஆய்வு செய்யத் தங்களிடம் எந்த ஒரு வசதியும் இல்லை' என்று கூறியுள்ளன. இதுபற்றி உயர்நீதிமன்றமும் தமிழக அரசிடம் பதில் அளிக்குமாறு கேள்வி எழுப்பியுள்ளது.
மக்களைச் சீர்திருத்தும் கல்வியைத் தனியாருக்கு விட்டுவிட்டு, மக்களைச் சீரழிக்கும் மதுவை அரசே விற்பனை செய்வது மக்கள் நலம் நாடும் அரசுக்கு அழகில்லை; இது தீராத பழியாகும். கேரளத்தைப் போல் தமிழக அரசும் மதுக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
"ஒரு மணி நேரத்துக்கு இந்தியா முழுமைக்கும் என்னைச் சர்வாதிகாரியாக நியமித்தால், முதல் காரியமாக நான் என்ன செய்வேன் தெரியுமா? இழப்பீடு கொடுக்காமல் எல்லா மதுக் கடைகளையும் மூடி விடுவேன்...' என்று உரத்தக் குரலில் பேசினார் காந்தியடிகள். (யங் இந்தியா: 25-6-1931)
இந்தியாவிலேயே பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி மட்டுமே. தமிழ்நாட்டிலோ ஆண்டுக்கு ரூ.26 ஆயிரம் கோடி. இது சாதனையா? வேதனையா?
"ஒரு மணி நேரத்துக்கு இந்தியா முழுமைக்கும்
என்னைச் சர்வாதிகாரியாக நியமித்தால், முதல் காரியமாக நான் என்ன செய்வேன் தெரியுமா? இழப்பீடு கொடுக்காமல் எல்லா மதுக் கடைகளையும் மூடி விடுவேன்...'
என்று உரத்தக் குரலில் பேசினார் காந்தியடிகள்

NEWS TODAY 2.5.2024