Saturday, December 26, 2015

காற்று வாங்கப் போவோம்.


Dinamani


காற்று வாங்கப் போவோம்...!


By மன்னை. பாஸ்கர்

First Published : 25 December 2015 01:11 AM IST


சென்னை போன்ற பெருநகரங்களில் தண்ணீர் வணிகம் அமோகமாக நடைபெற்று வருவது நாம் அறிந்ததே.
இப்போது இயற்கை தந்த மற்றொரு வரப்பிரசாதமான காற்றையும் வியாபாரப் பொருளாக்கி விட்டனர் பன்னாட்டு வணிகர்கள்.
காற்று விற்பனையா? உண்மைதான். தூய்மையான காற்றை புட்டிகளில் அடைத்து விற்கும் தொழிலை வெற்றிகரமாகத் தொடங்கி விட்டது கனடாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம். "விட்டாலிட்டி ஏர்' என்ற அந்த பன்னாட்டு நிறுவனம் கனடாவில் உள்ள பான்ஃப் மலை உச்சி, லூயிஸ் ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியிலிருந்து தூய்மையான காற்றை புட்டிகளில் அடைத்து வணிக முத்திரையுடன் விற்பனையைத் தொடங்கி விட்டது.
இப்போதைக்கு மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் சீனாவில் அந்நிறுவனத்தின் காற்று விற்பனை கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியுள்ளது.
சீனாவின் பெய்ஜிங் நகரில் காற்று மாசு தொடர்பான மாநாடு ஒன்று நடைபெற்றது. அப்போது சீன நகரங்களில் காற்று மாசு அதிகரித்து வருவது குறித்து கடுமையான எச்சரிக்கை விடப்பட்டது.
அதை உறுதி செய்யும் வகையில் தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், வாகன உற்பத்திக் கூடங்கள் போன்றவற்றிலிருந்து பெருமளவு புகை வெளியேற்றப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
குளிர் காய்வதற்காக பெய்ஜிங் நகர வீடுகளில் நிலக்கரித் துண்டுகளை எரிப்பதால் வெளியேறும் அதிக அளவு புகையால் காற்று கடுமையாக மாசடைந்தது. இதனோடு பனிப்புகையும் சேர்ந்து கொண்டதால் மக்கள் பல்வேறு சுவாச நோய் பாதிப்புகளுக்கு உள்ளாயினர். இதனால், கடுமையான எச்சரிக்கை விடப்பட்டு பெய்ஜிங்கில் பள்ளிக் கூடங்கள் உள்பட கல்வி நிறுவனங்கள், தொழிலகங்கள் மூடப்பட்டன. மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.
இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி கனடாவின் விட்டாலிட்டி ஏர் நிறுவனம் சீனாவில் கால் பதித்து காற்று விற்பனையைத் தொடங்கியது. விற்பனை சூடுபிடிக்க உற்சாகமடைந்த அந்த நிறுவனம், சீனாவின் பல்வேறு நகரங்களிலும் தங்கள் நிறுவனத் தயாரிப்பை விற்க முகவர்களை நியமித்தது. ஒரு புட்டி காற்றின் விலை இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அதாவது, சீனாவில் ஒரு தண்ணீர் புட்டியின் விலையை விட 50 மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மலைத்தொடரின் உச்சியிலிருந்து அடைக்கப்பட்ட காற்றுப் புட்டிகளுக்கு மவுசும் விலையும் இன்னும் கொஞ்சம் அதிகம். இந்தக் காற்று 10 முதல் 12 மணி நேரம் வரை தூய்மையானதாக இருக்குமாம். இப்போது காற்று விற்பனை சீனாவில் கன ஜோராக நடக்கிறது.
தூய்மையான காற்றுப் புட்டிகளை வாங்கி பயன்படுத்துவதை ஓர் அந்தஸ்தாகவே கருதத் தொடங்கி விட்டனர் மேல்தட்டு மக்கள். குறிப்பாக பெண்களும், தொழில் அதிபர்களும் இந்த காற்றுப் புட்டிகளை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.
எங்கு சென்றாலும் தங்கள் கைப்பைகளில் காற்றுப் புட்டிகளை கையோடு எடுத்துச் செல்கின்றனர். காற்று மாசடைந்த பகுதிகளில் எப்போது தேவையோ அப்போது தேவையான அளவு பயன்படுத்திக் கொள்கிறார்கள். கைபேசிகளை எடுத்துச் செல்ல மறந்தாலும் காற்றுப் புட்டிகளை அவர்கள் மறப்பதில்லை. பெய்ஜிங்கில் சீனர்களின் நிலை அந்த அளவுக்கு பரிதாபகரமாகி விட்டது. வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியதைப் பார்த்த கனடா நிறுவனம் தற்போது அதைப் பெருக்கும் முயற்சியிலும் இறங்கி விட்டது. தூய்மையான காற்றின் அவசியம், மாசடைந்த காற்றால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விளம்பரங்கள் செய்யத் தொடங்கி இருக்கிறது.
தங்கள் நிறுவனம் தூய்மையான காற்றை எப்படிப்பட்ட இடங்களில் இருந்து எடுக்கிறது? புட்டிகளில் எப்படி அடைக்கிறது? என்பதைப் பற்றி தனது இணையதளத்தில் புகைப்படங்களுடன் விரிவாக கூறியிருக்கிறது இந்த நிறுவனம்.
தனது நண்பருடன் சேர்ந்து விளையாட்டாக இந்த நிறுவனத்தை ஆரம்பித்ததாக கூறும் விட்டாலிட்டி ஏர் நிறுவனத்தின் நிறுவனர் மோசஸ் லாம், முதலில் ஒரு பாலிதீன் பையில் பான்ஃப் மலைத்தொடரின் காற்றைப் பிடித்து அடைத்து 50 பென்ஸ் என்ற விலைக்கு விற்றாராம்.
பின்னர், இரண்டாவது முறையாக ஒரு பாலிதீன் பையில் காற்றை விற்றபோது அதை விட மூன்று மடங்கு கூடுதல் விலை, அதாவது 160 பென்ஸ் கிடைத்ததாம். அப்போதுதான் ஏன் இதையே ஒரு தொழிலாக செய்யக் கூடாது என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. உடனடியாக செயல்படத் தொடங்கினார்.
இப்போது விட்டாலிட்டி ஏர் நிறுவனம் பல நாடுகளில் கிளைகளையும் விற்பனை முகவர்களையும் கொண்டு செயல்படத் தொடங்கி விட்டது. உங்கள் ஊரில் நீங்களும் காற்று விற்பனை முகவராகலாம். அதற்கான ஒப்பந்தங்கள் மற்றும் விண்ணப்பங்கள் அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தற்போது இந்த நிறுவனம் காற்று மற்றும் ஆக்ஸிஜன் புட்டிகளை வட அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தீவிரமாக களமிறக்கியுள்ளது. சீனாவில் கொடி கட்டிப் பறக்கும் காற்று வியாபாரத்திற்கு இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வரவேற்பு இல்லையாம்.
ஆனாலும், தண்ணீர் புட்டிகள் இந்தியாவில் பெருமளவில் விற்பனையாவதால்,காற்றுக்கும் சந்தை கிடைக்கும் என்று காத்திருக்கிறது இந்நிறுவனம்.
அப்படி ஒரு நிலை இந்தியாவில் ஏற்பட்டால் என்னாகும் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இப்போதாவது விழித்துக் கொண்டு காற்று மாசு, வெப்பமயமாதல் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், எதிர்கால சந்ததியின் சாபத்திற்கு ஆளாக நேரிடும்.
பொருள்களைத் தயாரித்து விற்று வந்த நிலை மாறி, இயற்கையாக கிடைப்பவற்றையும் காசாக்க முயற்சிக்கும் இந்த வணிக உலகத்தின் ஆசைக்கு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. ஓர் அளவுக்கு மேல் அவர்களை அனுமதிப்பதும் தவறுதானே!

டிஜிட்டல் மீட்டர் என்ன ஆச்சு?

logo

இந்திய பொருளாதாரம் இப்போது சீரடைந்து கொண்டுவருவதற்கு காரணம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மளமளவென்று குறைவதுதான். சமீபகாலங்களாக கச்சா எண்ணெய் விலை பெருமளவில் குறைந்துவருவதால், அரசின் அன்னிய செலாவணியும் குறைந்துகொண்டே வருகிறது. கடந்த 2008–ம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 140 டாலராக இருந்தது. இப்போது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 36.05 டாலராக குறைந்துள்ளது பெருமகிழ்ச்சியை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

ஆனால், கச்சா எண்ணெய் விலை குறைப்புக்கு ஏற்ப, பெட்ரோல்–டீசல் விலை குறையாதது மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஏனெனில், பெட்ரோல்–டீசல் மீதான கலால் வரி மற்றும் இதர வரிகள் வருமானம் கச்சா எண்ணெய் விலை குறையும்போது, குறைந்துவிடுவதால் அந்த வருமானம் குறையாத அளவில் வரியையும் கூட்டிவிடுகிறார்கள். 1989–ம் ஆண்டு ஏப்ரல் 1–ந்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 8.50 ஆகவும், மண்எண்ணெய் விலை 2.25 ஆகவும், டீசல் விலை 3.50 ஆகவும் இருந்தது. இப்போதும் கச்சா எண்ணெய் விலை குறையும்போது, அதற்கேற்ப இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துக்கொண்டுதான் வருகின்றன. ஆனால், அதற்கேற்ப ஆட்டோ ரிக்ஷா கட்டணம் குறையவில்லை என்பது மக்களுக்கு பெரும் குறையாக இருக்கிறது.

2013–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25–ந்தேதி தமிழ்நாட்டில் ஆட்டோ ரிக்ஷா கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அப்போது முதல் 1.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு 25 ரூபாய் என்றும், அதன்பிறகு ஒவ்வொரு கூடுதல் கிலோ மீட்டருக்கு 12 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. அந்த நேரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 72.25 காசாக இருந்தது. ஆனால், இப்போது ரூ.60.80 காசாக குறைந்துள்ளது. இவ்வளவு குறைந்தபிறகும் ஆட்டோ ரிக்ஷா கட்டணம் குறையவில்லை. இதன்பின்பு, ஐகோர்ட்டு வழங்கிய ஒரு தீர்ப்பில் 8 உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. அதில், முதல் அம்சமாக பெட்ரோல், டீசல் விலை மாற்றத்திற்கு ஏற்ப, 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆட்டோ ரிக்ஷா கட்டணம் மாற்றியமைக்கப்படவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரையில் அப்படி ஒருபோதும் கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை. பொதுமக்களை பொருத்தமட்டில், கட்டணத்தை மாற்றியமைக்காவிட்டாலும் பரவாயில்லை, மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டினாலே போதும் கட்டணத்தை கொடுக்கத்தயாராக இருக்கிறார்கள்.

இந்த நிலையில், அனைத்து ஆட்டோ ரிக்ஷாக்களிலும் ஜி.பி.எஸ். உடன் கூடிய டிஜிட்டல் மீட்டர் பொருத்துவதற்காக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதல்கட்டமாக சென்னை பெருநகரில் இயங்கிவரும் ஆட்டோ ரிக்ஷாக்களில் இடத்தை காட்டும் கருவியுடன், அதாவது ஜி.பி.எஸ். உடன் கூடிய, மின்னணு இலக்க அச்சடிக்கும் எந்திரத்துடன் (டிஜிட்டல் மீட்டர்) விலை ஏதும் இல்லாமல் அரசு சார்பில் பொருத்தப்படும் என்றும், இதற்காக அரசுக்கு 80 கோடி ரூபாய் செலவாகும் என்று அறிவிக்கப்பட்டு, அந்த நிதியும் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. ஆக, கோர்ட்டும் சொல்லிவிட்டது, அரசும் நிதி ஒதுக்கிவிட்டது. ஆனால், நிறைவேற்றவேண்டிய போக்குவரத்துத்துறை இதற்காக டெண்டர் விடுகிறோம் என்று அறிவித்து, அந்த டெண்டர் விடும் முறையே இன்னும் முடியாமல் நீண்டு கொண்டே போகிறது. இந்த குறையை போக்க உடனடியாக மீட்டர் போட்டு கட்டணம் வசூலிக்கும் கட்டாய நடவடிக்கைகளையும், தொடர்ந்து ஜி.பி.எஸ். கருவியுடன் இணைந்த டிஜிட்டல் மீட்டர் பொருத்தும் நடவடிக்கையையும் போக்குவரத்துத்துறை போர்க்கால அடிப்படையில் எடுக்கவேண்டும்.

Thursday, December 24, 2015

இந்தியாவில் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்

logo

புதுடெல்லி,

இந்தியாவில் இணையதளங்களில் நடப்பு ஆண்டில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களின் பட்டியலை கூகுள் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் விதமாக டிரெண்டிங்கில் இருப்பதாக கருதப்படும் ஆப்பிளின் ஐபோன் இந்த பட்டியலில் முதலிடத்தில் இடம்பெறவில்லை. அதேபோல், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ் 6 மற்றும் நோட் 5 ஆகியவையும் டாப்-10 பட்டியலில் இடம்பெறாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனால், முதல் 3 இடங்களுக்குள் மைக்ரோமேக்ஸ், லெனோவா ஸ்மார்ட்போன்கள் இடம்பிடித்துள்ளன.

2015-ம் ஆண்டு கூகுளில் (இந்தியா) அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களின் டாப்-10 பட்டியல் பின்வருமாறு:-

1. யூ யுரேகா
2. ஆப்பிள் ஐபோன் 6 எஸ்
3. லெனோவா கே.3 நோட்
4. லெனோவா ஏ 7000
5. மோட்டோ ஜி
6. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் சில்வர்
7. சாம்சங் கேலக்ஸி ஜே 7
8. மோட்டோ எக்ஸ் பிளே
9. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க்
10. லெனோவா ஏ 6000

முதலிடத்தை பிடித்துள்ள யூ யுரேகா ஸ்மார்ட்போன் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான யு டெலிவென்சர்ஸின் தயாரிப்பு ஆகும். இந்த துணை நிறுவனம் ஆன்லைனில் மட்டுமே பிராண்டிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு

logo


மிகவும் சர்ச்சைக்குள்ளாகி இருந்த சிறார் நீதிசட்டம் ராஜ்யசபாவில் நிறைவேறிவிட்டது. ஏற்கனவே லோக்சபாவில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு இதற்கு பலத்த எதிர்ப்புகள் இருந்தது. இந்தியாவில் எல்லா குற்றங்களும், இந்திய தண்டனைச்சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின்கீழ் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்படுகிறது. இதில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் குற்றம்செய்திருந்தால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். 18 வயதுக்கு குறைவானவர்கள் ஒரு குற்றத்தை செய்திருந்தால், அவர்களை மற்ற தண்டனை சட்டத்தின்கீழ் விசாரிக்காமல், இப்போதுள்ள சிறார் நீதி சட்டத்தின்கீழ் விசாரித்து, எந்த குற்றம் என்றாலும் அதிகபட்சம் 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப் படுகிறது. அந்த தண்டனை காலத்தையும் அவர்கள் சிறையில் கழிக்கவேண்டியது இல்லை. சிறார் சீர்திருத்த இல்லங்களில் வைத்து, திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இப்போது இந்த சட்டத்துக்கான திருத்தம் ராஜ்யசபையிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்தவுடன் நிறைவேறிவிடும். இதன்படி, இனி 16 வயது ஆனவர்களும், கற்பழிப்பு, கொலை போன்ற குற்றங்களை செய்திருந்தால், அவர்கள் மற்றவர்களைப்போல தண்டனை பெறுவார்கள் என்பதுதான் இந்த புதிய சட்டத்தின் சாராம்சம். அதேநேரம், இவர்களுக்கு ஆயுள் தண்டனையோ, தூக்குத்தண்டனையோ விதிக்கப்படமாட்டாது. இந்த சட்டம் நிறைவேறிய பிறகு, இனி எதிர்த்து பயனில்லை என்றாலும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்கள் யார் என்று பார்த்தால், பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்கள்தான் இருக்கிறார்கள்.

பாராளுமன்றத்திலேயே மத்திய உள்துறை ராஜாங்கமந்திரி ஹரிபாய் பராதிபாய் சவுத்திரி பேசும்போது, ‘கடந்த ஆண்டு குற்றங்களில் ஈடுபட்டுள்ள சிறார்களின் கணக்கை பார்த்தால், 55.6 சதவீத சிறார்கள் ஆண்டு வருமானம் ரூ.25 ஆயிரத்துக்கு குறைவான குடும்பத்தை சேர்ந்தவர்கள். அடுத்த 22.4 சதவீத சிறார்கள் 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரையிலான ஆண்டு வருமானம் கொண்ட குடும்பத்தை சார்ந்தவர்கள். அடுத்த 14.3 சதவீத சிறார்களை எடுத்தால், அவர்கள் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் ஆண்டு வருமானம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்’ என்று கூறியிருக்கிறார்.

இவ்வளவு ஏன்? நிர்பயா வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சிறுவன் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். குற்றம் நடந்த தினத்துக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடியவன், பிளாட்பாரத்தில் பசியும், பட்டினியுமாக அலைந்து இருக்கிறான். அந்த ஒரு சம்பவத்துக்கு முன்பு எந்த குற்றமும் செய்யாதவன். நேற்று முன்தினம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாடு மேய்க்கச் சென்ற 21 வயது திருமணமான பெண்ணை கற்பழித்த வழக்கிலும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனும், 16 வயது ஏழை சிறுவன். ஆக, வறுமையால் வாடும் இளம் சிறார்களுக்கு இத்தகைய குற்றங்கள் பெரிதாக தெரியவில்லை. இவர்கள் எல்லாம் படிப்பறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இந்த சட்டத்தை நிறைவேற்ற இவ்வளவு அவசரம் காட்டிய அரசாங்கங்கள், இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும், படிப்பறிவு இல்லாத ஏழை சிறார்களின் வாழ்க்கை பாதுகாப்புக்கு, உணவு வழங்குவதற்கு, கல்வி புகட்டுவதற்கு உண்டான வழிகளை காணவேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசங்களையும், மானியங்களையும் வழங்கும் தீவிரத்தைவிட, இதுபோன்றவர்களின் வாழ்க்கை பாதுகாப்பில் காட்டினால்போதும், குற்றங்களை குறைத்துவிடலாம். வாழ்வின் கடைக்கோடியில் உள்ள இளஞ்சிறார்களுக்கு பசி அறியாத வகையில் உணவு வழங்கி, பள்ளிக்கூடங்களுக்கு கொண்டுசென்று கல்வி புகட்டி, அவர்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் கடமை நிச்சயமாக மத்திய–மாநில அரசுகளுக்கு இருக்கிறது.

Wednesday, December 23, 2015

குற்றமும் தண்டனையும்: இனி சுதந்திரமாகத்தான் இருக்கப் போகிறானா அந்தச் சிறுவன்? ....மு.அமுதா

Return to frontpage



ஓவியம்: தீபக் ஹரிசந்தன்.


நிர்பயா வழக்கில் இளம் குற்றவாளி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதன் எதிரொலியாக, தீவிர குற்றங்களில் ஈடுபடும் 16 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களை, வயது வந்தோராகக் கருதி நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சிறார் நீதிச்சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

'பாப்புலர் சென்டிமென்ட்' என்ற கூறப்படும் மிகப் பிரபலமான ஓர் உணர்ச்சிமிகுதியின் வெளிப்பாடாகவே இந்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக பொதுவெளியில் கூறப்படுகிறது.

சிறுவன் விடுதலையும், அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட மசோதாவும் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.

1. விடுதலையான இளம் குற்றவாளி உண்மையிலேயே இனி சுதந்திரமாக இருக்கப் போகிறாரா?

2. சிறுவன் மூன்று ஆண்டுகளாக பாதுகாப்பு மையத்தில் இருந்தபோது அவரது சீர்திருத்ததுக்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன?

3. சீர்திருத்தப் பள்ளிகளில் அடைக்கப்படும் சிறுவர்களை குற்றத்தை உணரச்செய்து, மனநலத்தைச் சீரமைத்து, மறுவாழ்விற்குத் தயார்ப்படுத்தும் முழுப் பொறுப்பு யாரிடம் இருக்கிறது?

4. ஒரு சிறுவன் பெருங்குற்றம் செய்து அது செய்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகும் வரை அந்தச் சிறுவன் அக்குற்றத்தை செய்யத் தூண்டிய பின்புலனும் காரணிகளும் கவனத்தில் வராதது ஏன்?

5. இத்தனை விமர்சனங்கள், நெருக்குதல்களுக்குப் பின் விடுதலையாகியுள்ள சிறுவனை இந்தச் சமூகம் எப்படி அணுகும்?

இது போன்ற இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன.

நிர்பயாவின் கொடூரக் கொலை போல இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் பெண் என்ற சக உயிரின் மீதே ஆண் என்ற பிம்பம் தாக்குதல் நிகழ்த்துகிறது, நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது.

இளஞ்சிறார் சட்டப்படி, பத்து முதல் பதினெட்டு வரை உள்ளவர்கள் குழந்தைகள், அவர்களுக்குத் தண்டனைக் காலம் குற்றங்களின் தன்மையை வைத்து மாறினாலும், பெரும்பாலும் எத்தனை ஆண்டுக் காலம் என்றாலும், அந்தத் தண்டனைக் காலம் என்பது அவர்களின் குற்றத்தை உணரச்செய்து, மனநலத்தைச் சீரமைத்து, மறுவாழ்விற்குத் தயார்ப்படுத்துவது போன்றவையே சட்டத்தின் நோக்கம்.

இந்த எல்லாச் சட்ட நோக்கமும் அப்படியே நிறைவேறினால் இங்கே குற்றங்களின் எண்ணிக்கை, பெருமளவு குறைந்து போகும்.

இந்தக் குழந்தைகள் ஏன் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் அல்லது ஈடுப்படுத்தப்படுகிறார்கள்?

வீட்டில் நிலவும் சூழல், குழந்தைகளுக்கு ஒரு நீதியும் நமக்கொரு நியாயமும் என்று பெரியவர்கள் நடந்துகொள்ளும் முறைகள், அவர்களின் கண்முன்னே நிகழும் குடும்ப வன்முறைகள், தங்கள் வீட்டுப் பெண்களை ஆண்கள் நடத்தும் விதம், அல்லது வீட்டில் உள்ள பெண்கள் நடந்து கொள்ளும் விதம், முறையான அடிப்படைக் கல்வி கிடைக்காத நிலை, வறுமை, இக்கட்டான சூழ்நிலை என்று வீட்டில் உள்ள ஏதோ ஒன்றில் ஒரு குழந்தை பாதிக்கப்படுகிறது, பாதிக்கப்படும் குழந்தையை அரவணைக்கும் யாரோ ஒருவர் இருந்தால் கூட அந்தக் குழந்தைத் தவறு செய்வதில்லை.

வீட்டில் கிடைக்காத அன்பையும் ஆதரவையும் குழந்தைகள் வெளியில் தேடும், தன் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள், குடும்பங்கள் என்று அதன் வெளி வட்டம் பெரிதாகும்போது, அந்த வெளிவட்டத்தில் சமூக விரோதிகளும், குற்றவாளிகளும் இருந்துவிட்டால், அல்லது ஒரு குழந்தையைப் போலவே பாதிக்கப்பட்ட மற்றொரு குழந்தையும் துணை சேர்ந்தால், தவறுகள் இயல்பாகும்.

இருவேறு சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது.

முதல் சம்பவம்:

ஒன்று ஆதரவற்ற இல்லத்தில் நிகழ்ந்தது, அங்கு ஒரு பதினான்கு வயது மாணவனை, மாலை வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த ஓர் இருபது இருபத்திரண்டு வயது பெண், கையில் ஒரு பிரம்பை வைத்து அடி அடியென்று அடித்துக் கொண்டிருந்தாள், தடுத்துவிட்டு வந்தபோது, அந்த இல்லத்தின் பொறுப்பில் இருந்தால் மற்றுமொரு ஆசிரியை, அனாதைகளான இந்தச் சிறுவர்களை மிகுந்த கண்டிப்புடன் அடித்து உடைத்து வளர்த்தால்தான் ஒழுங்காய் வளர்வார்கள் என்று சொன்னதைக் கேட்டதும் வேதனைதான் மிஞ்சியது.

இரண்டாவது சம்பவம்:

இரண்டாவது நிகழ்வு நான் பள்ளியில் படிக்கும்போது என் பக்கத்து வீட்டில் குடியிருந்த ஒரு குடும்பத்தைப் பற்றியது, கணவன் மனைவி இருவரும் படிக்கவில்லை, அவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள், அவர்களின் மூத்த மகனுக்கு இரண்டாவது மகனுக்கும் இரண்டே வயது வித்தியாசம், ஏழு வயது மூத்த மகனை, எல்லாம் தெரிந்தவனாய் இருக்கவேண்டும், தம்பியும் தங்கையும் குறும்பு செய்யலாம், தவறு செய்யலாம், ஆனால் ஏழு வயது கழுதை அதைச் செய்யலாமா என்று பொழுது தவறாமல் ஒரு பிரம்பை வைத்து அவனை அடிப்பார்கள், யார் சொன்னாலும் அந்தப் பெண் கேட்டதேயில்லை, கூடவே அச்சிறுவனின் தகப்பனும், அடி உதை மட்டுமே வாங்கிய மூத்தமகன், யாருடைய அரவணைப்பும் இன்றி, மனநிலைப் பிறழ்ந்து, அவனுடைய இருபத்திரண்டு வயதில் தொலைந்துபோனான், மனநிலைப் பிறழ்ந்த மகனின் ஏக்கத்தில் இருந்த பெற்றோருக்கு, இளையவன் என்று தூக்கி கொண்டாடிய மகன், தகாத நட்பினால் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி, ஒருநாள் மெரினாவின் கடலலையில் சிக்கி உயிரை விட்டுவிட்டான் என்ற செய்தி அடுத்த இடியாக இறங்கியது.

ஏறக்குறைய மனச்சிதைவுக்கு ஆளாகிவிட்ட பெற்றோர், ஒரே பெண்ணை வெளியில் எங்கும் அனுப்பாமல், எப்படியோ திருமணம் செய்து கொடுத்து அனுப்பி விட்டனர்.

ஆதரவில்லை என்றாலும், பெற்றோர் இருந்தாலும் எல்லாப் பிள்ளைகளுக்கும் அரவணைப்புக் கிடைத்துவிடுவதில்லை, ஒரே குழந்தை என்று மிதமிஞ்சிய அன்பும், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் என்றால் மிதமிஞ்சிய கண்டிப்பும் குழந்தைகளின் ஏதோ ஒரு தவறுக்கு அடித்தளம் அமைக்கிறது, கண்டுகொள்ளப்படாத சிறு தவறுகள் காலப்போக்கில் பெரும் குற்றங்களுக்கு ஏதுவாகிறது.

மாற்றம் என்பது தண்டனையில் வருமா?

குழந்தைகள் ஈடுபடும், அல்லது ஈடுபடுத்தப்படும் குற்றங்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு மனநிலைப் பிறழ்வால், சூழ்நிலையால், போதிக்கப்பட்ட எண்ணங்களின் விளைவால், கூடா நட்பினால், சமூகத்தால், பெற்றோர்களின் அலட்சியத்தால் என்று ஏதோ ஒரு காரணத்தினால் நிகழ்ந்துவிடுகிறது.

குற்றவாளிகளை நாம்தான் உருவாக்குகிறோம், நம்முடைய தவறு, ஒரு குழந்தையைக் குற்றவாளியாக்குகிறது, இன்னொரு குழந்தையை அந்தக் குற்றத்திற்கு இரையாக்குகிறது.

பத்திரிகைகளில், விளம்பரங்களில், தொலைக்காட்சித் தொடர்களில், திரைப்படங்களில் பெண்ணென்றால் போகப்பொருள், ஆணுக்குப் பெண் அடிமைபட்டவள், ஒழுக்கமும் கற்பும் பெண்ணுக்கே உரியது, ஆடை என்பது பெண்ணுக்கு அரண், இதில் தவறும் எந்தப் பெண்ணும் தண்டிக்கப்பட வேண்டியவள் என்று கருத்துக்கள் நேரிடையாகவோ மறைமுகமாகவோ தொனிக்கும் வகையில் தான் சித்தரிக்கப்படுகிறார்கள். இவை நாம் சகித்துக் கொள்கிறோம் அல்லது ரசிக்கிறோம்!

வீட்டில் வெளியில் என்று எதிலும் நாம் மாற்றத்தைக் கொண்டு வராமல், அதற்கான கட்டமைப்பை உருவாக்காமல் சட்டங்களை மட்டுமே மாற்றி என்ன பயன்?

தண்டனை என்பது ஒரு பயமுறுத்தும் காரணியாக இருக்கிறது. தண்டனையை அதிகப்படுத்துவது குற்றங்களைக் குறைக்க உதவுமா அல்லது குற்றத்தை மறைக்கத் தூண்டுமா என்பதை நாம் யோசிக்க வேண்டும், தண்டனைக் கொடுத்துச் சிறையில் தள்ளி, வாழ்க்கையை முடித்துவிட்டால் அது பிறருக்கு பாடமாய் இருக்குமா? இருக்கும் தான், இல்லையென்று சொல்ல முடியாது, அது மட்டுமே போதுமா?

இளஞ்சிறார்களின் தண்டனைக்குரிய குற்றங்களுக்கு வயதைக் குறைத்துக் கொண்டே போவது மட்டுமே தீர்வு ஆகாது. பதினெட்டில் இருந்து பதினாறாக ஆக்கி, பின்பு அதையும் குறைக்கும் காலம் வரலாம்!

தீர்மானம் தீர்வா?

ஒரு நிர்பயாவை கொன்றவர்களில், இளம் குற்றவாளி ஒருவன் பேசும் பேச்சு பாமரச் சமூகத்தைப் பிரதிபலிக்கிறது, அவனுக்காக வாதாடிய வழக்கறிஞர்களின் பேச்சுப் படித்த சமூகத்தைப் பிரதிபலிக்கிறது... இந்தச் சமூகத்தைத் தண்டிக்காமல் அல்லது திருத்தாமல் இந்தக் குற்றவாளிகளை மட்டுமே தண்டிப்பதால் மாற்றம் நிகழாது!

மாற்றங்களை நாம் வீட்டில் இருந்து தொடங்கவேண்டும், எந்தக் குழந்தைக்கும் நல்ல கல்வியும், நல்ல உணவும், அன்பும் ஆதரவும் தேவை, குறைந்தபட்சத் தேவைகளைச் சமூகம் பூர்த்திச் செய்யாதபோது சட்டங்கள் என்பது குற்றவாளிகளைத் தண்டிக்கக் கால சூழலுக்கேற்ப மாறிக் கொண்டே இருக்கும் அல்லது நாம் மாற்றிக்கொண்டே இருப்போம், குற்றங்கள் மட்டும் குறையாது.

பல்லாயிரக்கான குழந்தைகளை இந்தச் சமூகத்தின் அலட்சியம் அரசியல்வாதிகளின் சுயநலம் குற்றவாளிகளாக்கிக் கொண்டிருக்கிறது, பதைக்க வைக்கும் என்சிஆர்பி புள்ளி விவரத்தின் படி 2014 ஆம் ஆண்டு 36,138 வழக்குகள் இளம் குற்றவாளிகளின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 75 சதவீதம் குற்றங்களைச் செய்தோர் பதினாறில் இருந்து பதினெட்டு வயதுக்கு உட்பட்டோர். இதே காலகட்டத்தில் நாடு முழுவதும் பதிவான ஒட்டுமொத்த குற்ற வழக்குகள் 28,51,563. இவற்றில், சிறார் குற்றங்களின் பங்கு வெறும் 1.27 சதவீதம் மட்டுமே. அதாவது, 2 சவீதத்துக்கும் குறைவு.

எண்ணிக்கை வழங்கும் உண்மை நிலவரம் இப்படி இருக்க, இளம் குற்றவாளிக்கான வயது வரம்பு 16 ஆக குறைக்க வகை செய்வது என்பது, எதிர்காலத்தில் வழிதவறும் குழந்தைகளின் வாழ்க்கையை முற்றிலும் சிதைக்கும்படி தண்டனைகள் வழிவகுத்திடுமோ அல்லது பல்வேறு சட்டப் பிரிவுகள் போலவே இதுவும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, அப்பாவிச் சிறார்களை சிறைவாசம் அனுபவிக்கச் செய்துவிடுமோ என்ற அச்சங்களை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.

நம்முடைய இயந்திர வாழ்க்கையின் சுயநல எந்திரங்கள் பழுதடையும்போது நம்முடைய இளைய தலைமுறை மொத்தமும் சிறையில் இருக்க நேரிடலாம்... மாற்றம் அவசியம் மனநிலையிலும் சமூகத்திலும்.

மு.அமுதா - தொடர்புக்கு amudhamanna@gmail.com

சிதறிக் கிடக்கும் நியாயங்கள்…நிர்பயாக்கள்! By உமா ஷக்தி First Published : 23 December 2015 12:39 PM IST

Dinamani

இளம் குற்றவாளி ஒருவரை விடுதலை செய்வது சரி / தவறு. இது ஒரு தவறான முன் உதாரணமாகி விடக் கூடும் என்று இரு தரப்பிலும் வாதங்கள் நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும். இந்த வேளையில் நம் முன் நிற்கக் கூடிய சில கேள்விகளுக்கு மனசாட்சிக்கு உட்பட்டு பதில் தேடவேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.

2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி. நாடே வெட்கித் தலைகுனிந்து நின்ற ஓர் கருப்பு தினம். ’லைஃப் ஆஃப் பை’ எனும் திரைப்படத்தை பார்த்துவிட்டு இரவு 9 மணிக்கு இளம் பிசியோதெரப்பி மாணவி நிர்பயா (ஜோதி சிங் பாண்டே) மற்றும் அவளது தோழன் அவிந்ர பிரதாப் பாண்டே இருவரும் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். குறைந்த பயணிகள் கொண்ட அந்தப் பேருந்து அவளுக்கு யமனாக மாறப் போகிறது என்று நிர்பயா அப்போது அறிந்திருக்கவில்லை. அடுத்த நாள் ” ஓடும் பஸ்ஸில் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு வெளியே வீசப்பட்ட நிர்பயா, சிகிச்சை பலனின்றி பலியானார்” என்று செய்தித்தாள்களில் படித்து அதிர்ந்து போகாதவர்களே இருக்கமுடியாது.

இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட ஆறு குற்றவாளிகளும் பிடிபட்டனர். அவர்களில் ராம்சிங் என்பவன் 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மற்ற நால்வர்களான முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா, அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை கிடைத்தது (ஆனால் 2014 மார்ச் மாதம் அவர்கள் மேல் முறையீடு செய்ததால் தூக்குதண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது). அந்தக் கடைசி ஒருவனுக்கு அப்போது 17 வயதே நிரம்பியிருந்ததால் இருந்ததால், அவன் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் அவனுக்கு அதிகபட்ச தண்டையாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவனுடைய தண்டனைக் காலம் தற்போது சட்டப்படி முடிந்து விட்டதால் அவன் விடுதலை செய்யப்பட்டான். அந்த ஆறு குற்றவாளிகளில் ராம்சிங்கும் இளம் குற்றவாளியும் தான் தான் மிகக் கொடூரமான முறையில் நடந்து கொண்டார்கள் என்று காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது.

தற்போது அவனுக்கு இருபத்தியோரு வயதாகிவிட்டதால், இதற்கு மேல் சிறுவர் சீர்திருத்தக் காப்பதில் வைத்திருக்க சட்டத்தில் இடமில்லை என்று தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. அவனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பதால் அவனைப் பற்றிய விபரங்களையோ புகைப்படத்தையோ வெளியிடாமல், ஒரு ரகசிய இடத்தில் அவனை விடுவித்துள்ளனர். தவிர குறிப்பிட்ட காலம் வரை அவனைத் தொடர்ந்து கண்காணிக்கவும் ஆணையிட்டுள்ளது மத்திய அரசு சிறார் காப்பகத்திலிருந்து வெளியேறிய அவனுக்கு ரூ. 10,000 நிதியுதவியும் அளித்துள்ளார்களாம். இதை விடக் கொடுமையான தகவல் இந்த மூன்று வருடங்களில் அவனுடைய மனநிலையில் பெரிய மாற்றங்கள் எதுவுமில்லை என்பதுதான். குற்றவுணர்வு கூட இல்லாமல் அவன் இனி தில்லி தெருக்களில் சுதந்திரமாக நடமாட முடியும் என்பதே வேதனைக்கும் விவாதத்திற்கும் உரிய விஷயமாகி உள்ளது. அவனுடைய தண்டனை காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று, தில்லி பெண்கள் கமிஷன், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய, விசாரணை நடத்திய நீதிமன்றம், அடுத்த நாளே அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. சிறுவனின் (தற்போதைய வயது 20) தண்டனையை நீட்டிக்க சட்டத்தில் இடமில்லை என உச்சநீதிமன்றம் கூறி விட்டது. சட்டத்தில் இடமில்லாத நிலையில், ஒருவரின் உரிமையை கோர்ட் பறித்துக்கொள்ள முடியாது என்று கோர்ட் அழுத்தம் திருத்தமாக கூறி, பெண்கள் கமிஷன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. நிர்பயா சம்பவத்தை தொர்ந்து, 6 மாதங்கள் முன்பு, சிறுவர்கள் நீதி சட்டத்தில், திருத்தம் கொண்டுவந்தது மத்திய அரசு. இதன்படி கொடும் குற்றங்கள் செய்திருந்தால், 16 வயதாகியிருந்தாலும்கூட, அந்த குற்றவாளி சிறார் என கருதப்படமாட்டார். பிற குற்றவாளியை போலவே கருதப்பட வேண்டும். இந்த சட்ட திருத்தம் ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் அமளி மற்றும் ஒத்துழைப்பு இன்மையால் 6 மாதங்களாக இச்சட்டம், கிடப்பில் கிடக்கிறது என்பது வேதனை அளிக்கக் கூடிய மற்றொரு விஷயம்.

இது தொடர்பாக அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஜெ.எஸ்.வர்மா தலைமையிலான 3 பேர் குழு அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி லீலாசேத், கோபாலசுப்பிரமணியம் ஆகியோரும் அக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். இது குறித்து நீதிபதி ஜெ.எஸ்.வர்மா செய்தியாளர்களிடம் அப்போது பேசிய போது, நாட்டில் பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் அதிகரித்துவிட்டதாக கூறினார். காவல் நிலையங்களில் 25 சதவீதம் பெண் காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும், சிறார்களுக்கான வயது உச்சவரம்மை 18 லிருந்து 16 குறைக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளதாக வர்மா கூறினார். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் செய்ய அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதாக வர்மா தெரிவித்துள்ளார். பாலியல் வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு மன்னிப்பு அளிக்க கூடாது என்றபோதிலும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்க அரசியல் சட்டம் அனுமதி அளிக்கவில்லை என்பதால் அதற்கு தாங்கள் பரிந்துரைக்க முடியாது என்றும் ஜே,சி வர்மா குறிப்பிட்டுள்ளார். இதனிடையே பாலியல் பலாத்கார குற்றவாளிகள் போலீசாராக இருந்தாலும், அரசு அதிகாரிகளாக இருந்தாலும் பாரபட்சமின்றி கடுமையான தண்டனை வழங்கும் வகையில் இந்திய குற்றவியல் சட்டங்களில் திருத்தம் செய்யப்படவேண்டும் என்பது உள்ளிட்ட மொத்தம் 630 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை வர்மா கமிஷன் மத்திய அரசிடம் சமர்ப்பித்திருந்தது. ஆனால் அதற்கு சரியான வரவேற்பு இல்லை.

லெஸ்லி வுட் இயக்கி பிபிசியில் ஒளிபரப்பான ‘இந்தியாவின் மகள்’ காணொலியை நம் நாட்டில் உடனடியாக தடை செய்துவிட்டார்கள். இளம் குற்றவாளியான அவனுக்கு விடுதலை அளித்ததுடன் அவனுடைய முகத்தை ஊடகங்களில் வெளியிட அனுமதிக்கவில்லை.

என்ன மாதிரியான தேசத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? முழுமையான அகிம்சையும் பின்பற்றாத முழுமையான தண்டனைகளும் கொடுக்க இயலாத ஒரு அரைவேக்காடான அரசியலும் சட்டமும் கொண்ட ஒரு நாடாக நம் நாடு தேங்கிக் கிடப்பதைப் பார்த்து வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. பெண்களுக்கு எதிராக இத்தகைய கொடூரமான கொலை பாதகச் செயலை செய்பவர்களை வயது வரம்பு பார்த்து விடுவிப்பது என்ன நியாயம்? மதுரையை எரித்த கண்ணகியைப் போல் உயிர்த்தெழுந்து நிர்பயாக்களே தங்களுக்கான நீதியை தேடிக் கொள்ளவேண்டுமா? மக்களை பாதுகாக்க சட்டங்கள் உள்ளனவா அல்லது பாதுகாப்பற்ற ஒரு மனநிலையில் இந்தியப் பெண்கள் தினமும் படிக்கவும் பிழைக்கவும் உயிரையும் அதைவிட பெரிதான அவரிகள் நினைக்கும் மானத்தையும் பணயம் வைக்க வேண்டுமா? என்று பல விடையற்ற கேள்விகளை மனம் எழுப்பிக் கொண்டே இருக்கிறது.

நகம் வெட்டுகையில் தப்பித் தவறி நம் கரங்களாலேயே சதையையும் சேர்த்து வெட்டிக் கொள்கையில் வலியால் எப்படித் துடிக்கிறோம். அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு உடல் சிதைந்து கிடந்த நிலையில், இரும்புக் கழியை அவள் உடலுக்குள் செலுத்தி சிறுகுடலை வெளியே எடுத்துள்ளார்கள் என்று தெரிந்த போது நெஞ்சம் பதைத்துத் பதறித் தவித்தது. துடிதுடித்து இறந்து போவதற்கு முன் அவளுக்குள் எத்தனை எத்தனை ஆசைகள் இருந்திருக்கும்? அவளுடைய கனவுகளை களவாடிக் கருகக் செய்ய யாருக்கு உரிமை இருக்க முடியும்? படிப்பு வேலை வாழ்க்கை திருமணம் என்று எல்லோருக்கும் கிடைக்கும் சந்தோஷங்களை சிதைக்க விதி அந்த ஆறு பேரின் சாயலில் வந்து சேர்ந்ததா?

கற்பனையிலும் நினைக்க முடியாத அளவுக்கு கொடூரமான செயலில் ஈடுபட்டவனுக்கு விடுதலைலும் வெளிநாட்டுக்கு அனுப்பி கடைசி கட்ட சிகிச்சையும் பலன் அளிக்காமல் உயிர் இழந்த நிர்பயாவுக்கு மரணம் தண்டனையாகவும் கிடைத்திருப்பது இந்த தேசத்தின் மனசாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கிறது.

இந்திய சட்டத்தின் அடிப்படைகளை மாற்றாத வரை இது போன்ற தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிகழ்வுகள் தொடரும். நமது குற்றவியல் சட்டங்கள் அந்தந்த வழக்குகளுக்கு ஏற்ற வகையில் விசாரணைகளைச் செய்து அதன் சூழலுக்கேற்ப தீர்ப்பு சொல்லும் அளவுக்கு மாற்றப்படவேண்டும். விரைவு நீதிமன்றங்கள் அதிகரிக்கப்பட்டு நீதித் துறையில் காலத்துக்கு ஏற்ற வகையில் சீர் திருத்தங்கள் செய்ய வேண்டும். இந்த வழக்கைப் பொருத்தவரையில் இக்குற்றத்தை செய்தவன் நிச்சயம் சிறுவனாக இருக்க முடியாது. மனத்தளவில் அவன் ஒரு வக்கிரமான வன்செயலைச் செய்தவன். எனவே அதை முன் நிறுத்தித்தான் குற்றத்தின் அளவை கணிக்க வேண்டும். இனியேனும் வயதை வைத்து குற்றவாளியை வகைப்படுத்தக் கூடாது என சட்டத்தில் அதற்கேற்ப மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். இல்லையெனில் நிர்ப்பயா என்பது இந்நாட்டின் யாராலும் அழிக்க முடியாத நிரந்தரக் கறையாகி விடும்.

சமூகத்தின் பொக்கிஷங்களாக கருத வேண்டிய குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்புச் சட்டங்களை பொறுப்புணர்வுடன் நடைமுறைக்கு சாத்தியமாகும் விதமாக உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கூட்டு வல்லுறவு போன்ற கொடூரமான குற்றங்களை செய்பவர்களை சமூகத்தில் அடையாளப்படுத்த வேண்டும். மனவக்கிரம் முற்றிய அந்த நோயாளிகளை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும். வல்லுறவு சம்பவங்கள் நிகழும் காலகட்டத்தில் மட்டும் பொதுமக்களும் ஊடகங்களும் மட்டும் உரக்கப் பேசுவதும் அதன் அரவம் அடங்கியபின் சொந்த விஷயம், அடுத்த செய்தி என்று அவரவர் வேலைகளில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றுதான். கொந்தளிப்பான மனநிலையில் அச்செயலில் ஈடுபடுவோருக்கு எதிராக குரல் எழுப்புவதோ உணர்ச்சி வசப்பட்டு போராடுவதோ அந்தந்த நேர வெளிப்பாடுகளே அன்றி வேறு எந்த உருப்படியான தீர்வையும் அளிக்காது. இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு காண வேண்டும்.

நம் தமிழகத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்கவில்லையா வாச்சாத்தி கிராமத்தில் காவல் துறை மற்றும் வனத்துறையினர் பதினெட்டு பெண்களை இழுத்துச் சென்று நிகழ்த்திய கொடூரச் செயலுக்கு தண்டனை கிடைக்க இருபத்து ஐந்து ஆண்டுகள் தேவைப்பட்டன. எனவே இது போன்ற கொடிய குற்றங்களுக்கு அவசரச் சட்டத்தில் உடனடியாக தண்டனை கிடைப்பது தான் குற்றங்களைக் குறைக்கும் ஒரே வழி. தாமதிக்கப்ப்டும் ஒவ்வொரு தீர்ப்பும் மறுக்கப்பட்ட நீதியெனவே கொள்ளலாம். தண்டனைகள் மற்றும் குற்றங்களை குறைத்துவிடும் என்றும் சொல்ல முடியாது. சமூகத்தில் பல சீர் திருத்தங்கள் நிகழ்ந்தால் தவிர அதிசயங்கள் ஏதும் நிகழ்ந்துவிடாது.

16 வயது கொடூரக் குற்றவாளிகளுக்கும் இனி கடும் தண்டனை என்று சிறார் நீதி சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது என்பது சற்று ஆறுதலான செய்தி. நிலுவையில் இருக்கும் சட்டத்திருத்தங்களை அமல்படுத்தியும், அந்தந்த வழக்குகளுக்கு ஏற்ப புதுச் சட்டங்கள் இயற்றவும் அரசு முன்வர வேண்டும்.

தவிர சமூகத்தில் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உணர்ந்து அதற்கேற்ற வகையில் குழந்தைகளை வளர்க்க்க ஒவ்வொரு பெற்றோரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். அதிலும் குறிப்பாக ஆண் பிள்ளைகளுக்கு பெண்ணை மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். பெண்களை எப்போது சக உயிராக மதிக்க இச்சமூகம் கற்றுக் கொள்கிறதோ அப்போது தான் பெண்கள் பாதுகாப்புடன் வாழத் தகுந்த இடமாக நாடு மாறும். முழுமையான மாற்றம் ஏற்படவேண்டும் எனில் வீட்டில் சொல்லிக் கொடுக்கும் இப்பழக்கம் பள்ளியிலும் தொடர வேண்டும். அதற்கேற்ற வகையில் நம்முடைய கல்வி பாடத் திட்ட முறைகள் மாற வேண்டும். கேடு கெட்ட செயல்கள் இனி நிகழாமல் இருக்க ஒரு தரமான சமூகத்தை நாம் தான் கட்டமைக்க வேண்டும். அப்போது நிர்பயாக்களின் ஓலம் நிச்சயம் கேட்காது. கேட்க வேண்டாம்.



***

இன்று கொல்லும் தெய்வம்



சொந்த வீட்டில் அக்கம்பக்கத்தில் என

நீளும் அந்தக் கைகளின்

முதல் அத்துமீறல்..

அச்சமும் அருவருப்பும்

புரியாமையும் கலந்து

எங்கள் குழந்தைமையை திருடிக்

கொன்று சுவைத்தீர்கள்!

பிறிதொரு நாளில்

பள்ளியில் கல்லூரியில்

வீதியில் அலுவலகத்தில்

என எங்கெங்கும்

ராட்சச நிழலாக

ஊர்ந்து தொடர்கின்றன

அழுகிப் புழுத்த விரல்கள்…

இது புனிதமான தேசம்

அவர்களை கொல்ல வேண்டாம்

வன்புணரத்தான் செய்வார்கள்

அதனால் என்ன?

காது கேளாத அவர்களிடம்

அகிம்சையை போதியுங்கள்

மனநலம் பிசகியவர்களிடம்

கருணை காட்டி

உங்களை நிருவிக் கொள்ளுங்கள்

உங்கள் கருணையின்

கரங்களின் அன்பெனும் வெப்பம்

அமிலமாகட்டும்.

நியாயங்கள் அப்போது

அறம் சார்ந்தவை ஆகிவிடும்

மன்னிப்புக்களை தண்டனையாகும்

வீணான சட்டங்களை

தீயில் கொளுத்திவிட்டு

அந்த நெருப்பில்

நிர்பயாக்களுக்கு சிறு

வெளிச்சம் காட்டுங்கள்!

சிறியதும் பெரியதுமாக

நாடு முழுவதும்

பெருகி வரும் எங்களில்

சிலர் உடனுக்குடன் இறந்துவிடுகிறோம்

அல்லது கொலை செய்யப்படுகிறோம்

பலர் உயிர் சுமக்கும்

பிரேதங்களாக இருக்கிறோம்..

சிதைக்கப்பட்ட உடல்களில்

மிச்சமிருக்கும் ஆன்ம பலத்தால்

பலி கொடுப்போம்

எம்மைத் தீண்டிய ஒவ்வொரு

கரங்களையும் வேர் அறுப்போம்!

ஆதி காலந்தோறும்

அசுரர்களை வதைக்கவே

இறைவிகள் தோன்றினார்கள்..

எங்கள் சதைப் பிய்த்து உடல் கிழித்த

உங்கள் மண்டையோடுகளும் குடல்களும்

வெப்பமான ரத்தம் மட்டுமே கேட்கும்

காளிகளாக உருபெற்றுவிட்டோம்.

- உமா ஷக்தி

அன்பாசிரியர் 10 - கிருஷ்ணவேணி: அரசுப் பள்ளிக்காக கடன் வாங்கி கல்வி புகட்டும் ஆசிரியை!


Return to frontpage




க.சே. ரமணி பிரபா தேவி

ஆசிரியர் ஒரு நல்ல மாணவரை உருவாக்குகிறார்; அவர் நூறு மாணவர்களை உருவாக்குகிறார்.

1986-ம் ஆண்டு. அரசுப் பள்ளியில் படித்து, பத்தாம் வகுப்பில் 427 மதிப்பெண்கள் பெற்று, மேலே படிக்காமல் வீட்டில் இருந்தார் மாணவி கிருஷ்ணவேணி. அப்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்காக அவரின் வீட்டுக்கு வந்தார் ஓர் ஆசிரியர். 'இவ்வளவு மதிப்பெண்கள் பெற்று ஏன் படிக்கவில்லை?' என்று கேட்க, வசதியில்லை என்றார் கிருஷ்ணவேணி. உடனே படிப்பதற்கு பணம் கட்டி, உடைகள் வாங்கிக்கொடுத்து, ஊக்கமும் அளித்தார் அந்த ஆசிரியர்.

இப்போது அந்த மாணவி, நல்லாசிரியர் விருது, மாநில அளவில் சிறந்த நடுநிலைப்பள்ளி விருது, தமிழ்நாடு அறிவியல் இயக்ககத்தின் சிறந்த சாதனை ஆசிரியர் விருது, தனியார் மெட்ரிக் பள்ளியின் அப்துல் கலாம் நினைவு சாதனை ஆசிரியர் விருது உள்ளிட்டவைகளுக்குச் சொந்தக்காரர். பள்ளி தலைமையாசிரியர், இலக்கிய ஆர்வலர், பேச்சாளர் என்று பல முகங்கள் கொண்டவர்.

எப்படி இந்தப் பயணம் சாத்தியமானது? - கிருஷ்ணவேணியே சொல்கிறார்.

"கணக்கெடுப்புக்கு வந்த ஆசிரியர், பலன் எதையும் எதிர்பார்க்காமல் என்னைப் படிக்க வைத்தார். அப்போது பத்தாம் வகுப்பு படித்தாலே ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து ஆசிரியர் ஆகலாம் என்ற நிலை இருந்தது. அவரால் மட்டும்தான் இன்று நான் ஆசிரியர் ஆகியிருக்கிறேன். அவர் என்னை உருவாக்கினார்; நான் மேலும் சிலரை உருவாக்குகிறேன்.

எங்களின் சின்னமுத்தூர் பள்ளி, இட வசதி இல்லாத காரணத்தால் அரை கி.மீ. இடைவெளிக்குப் பிரிந்து தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி என தனித்தனியாக இருக்கிறது. இதனால் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி என அரசிடம் என்ன கேட்டாலும் இரண்டிரண்டாகக் கேட்டுப் பெற வேண்டும். முதலிரு வருடங்களில் கோயில் வளாகம், மகளிர் சுய உதவிக்குழு உள்ளிட்ட பொது இடங்களில் வகுப்புகள் நடந்திருக்கின்றன. ஒரே வகுப்பறையில் இரண்டு வகுப்புகள் நடந்த காலமும் உண்டு.

இப்போது, வகுப்பறை முழுக்கப் படங்களால் நிரப்பியிருக்கிறோம். எங்கள் மாணவன் வீட்டில் எப்போதும் கீழேதான் உட்காருகிறான் என்பதால் பள்ளியில் யாரையும் தரையில் உட்கார அனுமதிப்பதில்லை. பெஞ்சுகள் வாங்கியிருக்கிறோம். ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு முழுக்கவும் ஏசி வசதி செய்யப்பட்டிருக்கிறது. டைல்ஸ் ஒட்டியிருக்கிறோம்.

பள்ளிக்காக லோன் வாங்கியவர்

இவை அனைத்துக்கும், அதிக நிதி தேவையாக இருந்தது. நன்கொடையாளர்கள் சிலர், தருவதாகக் கூறியிருந்த தொகையைக் கடைசி நேரத்தில் தரவில்லை. மூன்று லட்ச ரூபாய் பற்றாக்குறை காரணமாக வேலை பாதியிலேயே நின்றது. அதனால் வங்கி ஒன்றில் லோன் வாங்கி, கட்டிடத்தைக் கட்டி முடித்தோம். இப்போது தவணை முறையாக மாதாமாதம் 8,000 ரூபாய் கட்டி வருகிறேன். முத்தூரை அடுத்து, உள்ளே 1 1/2 கி.மீ. தாண்டி சின்னமுத்தூரில் இரண்டு பெரிய தனியார் பள்ளிகளுக்கு இடையில் கம்பீரமாக நிற்கிறது எங்கள் அரசுப்பள்ளி.

குஜராத்தில் ஆட்சியராக இருக்கும் நண்பர் மூலமாக, அங்குள்ள அரசுப் பள்ளி மாணவர்களிடம் ஸ்கைப்பில் உரையாடினோம். மொழி ஒரு தடையாக இருந்தாலும், உணர்வுபூர்வமாக அவர்களை அணுகினோம். உள்கட்டமைப்பு வசதி, தொழில்நுட்பம், சுகாதாரம் ஆகியவற்றில் பின் தங்கியிருக்கிறார்கள் குஜராத் குழந்தைகள்.

ஆரம்பகாலத்துக்கும், இப்போதைக்கும் என்ன வித்தியாசத்தை உணருகிறீர்கள்?

ஆரம்பத்தில் கையைப் பிடித்து, எழுத, படிக்கக் கற்றுக் கொடுப்பதே கல்வி என்று நினைத்தேன். இப்போதோ ஒரு வார்த்தையை சொல்லித்தர நூறு முறைகள் இருக்கின்றன. தொடக்கப்பள்ளிகளில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். ஒன்று குறும்பு செய்தால், மற்றொன்று அழும், இன்னொன்று தூங்கும். இப்போது குழந்தைகள் அனைத்தையும் அரவணைக்கும் பாங்கு வந்திருப்பதாக உணர்கிறேன். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை யாராக இருந்தாலும், மூன்று மாதங்களில் அவருக்கு தமிழ் எழுத, படிக்கக் கற்றுக்கொடுக்க என்னால் முடியும்.



எங்கள் பள்ளியில் படிக்கும் எல்லா மாணவர்களும் கட்டாயம் ஆங்கிலம் எழுத / பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். இதனால் எங்களின் ஒவ்வொரு மாணவனுக்கும், குறைந்தபட்சம் ஐந்நூறு ஆங்கிலச் சொற்கள் தெரியும். முதலில் வினைச்சொற்களைக் கற்றுக் கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆங்கில அறிவை வளர்க்கிறோம். ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகள் கதை, கவிதைகள் எழுத வேண்டும். இது எழுத்துத் திறனை மேம்படுத்துவதோடு, கற்பனையையும் சேர்த்து வளர்க்கிறது. இதுவரைக்கும் தொகுக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள், மலராக வெளியிடப்படக் காத்து நிற்கின்றன.

அருவருப்புக்கு இடமில்லை

உங்கள் பள்ளியில் மட்டும் எப்படி எல்லா ஆசிரியர்களுமே உதவுகிறார்கள் என்று பலர் கேட்டிருக்கிறார்கள். எல்லாவற்றுக்குமே கவுன்சலிங்தான் காரணம். மாதமொரு முறை எங்கள் ஆசிரியர்களிடம் மாணவர்கள் குறித்துப் பேசுவேன். அப்போது, நம் குழந்தைக்கும், அரசுப்பள்ளியில் படிக்கும் குழந்தைக்கும் எந்த வித்தியாசமும் பார்க்கக்கூடாது என்று கூறுவது வழக்கம். 'நம் மகன்/ மகள் என்றால் வேலை செய்ய வைப்போமா, இயலாமையால்தான் பெரும்பாலான ஏழை குழந்தைகள் அரசுப்பள்ளிக்கு வருகிறார்கள். அவர்களை வேலை செய்யச்சொல்வது முறையா' என்று யோசிக்கச் சொன்னேன்.

'நம் குழந்தைகளிடம் அருவருப்பு வருவதில்லையே, பிறகெப்படி மற்ற குழந்தைகளிடம் மட்டும் அந்த எண்ணம் வருகிறது' என்று அவர்களும் யோசிக்க ஆரம்பித்தார்கள். இப்போது துப்புரவுப் பணியாளர்களே தேவைப்படாமல் ஆசிரியர்களே எல்லாவற்றையும் சுத்தம் செய்கிறார்கள்.

மாதமொரு முறை பெற்றோர் சந்திப்பும் இங்கே உண்டு. அவர்களிடம் முறையாக எல்லாவற்றையும் எடுத்துச் சொல்கிறோம். இதனால் மாணவர்களின் சுத்தமான உடை, இரட்டை ஜடை, ஒழுங்காக நகம் வெட்டுவது உள்ளிட்டவைகளுக்கு பெற்றோரே பொறுப்பெடுத்துக் கொள்கிறார்கள்.

பாடம் சொன்ன மாணவர்?

'எல்லா மாணவர்களையும் பாரபட்சமில்லாமல் ஒன்றுபோல் நடத்த வேண்டும்' என்ற பாடத்தைக் கற்றுக்கொடுத்தது ஒரு மாணவன்தான். பொதுவாக நன்றாக படிக்கும் மாணவர்களிடம் ஆசிரியர்களுக்கு ஒரு பிரியம் இருக்கும். படிக்காதவர்கள் மீது அதட்டல், மிரட்டல் தொனி இருக்கும். ஒரு முறை ஆசிரியர்களைப் பற்றிய கருத்துகளை எழுதிக் கொடுக்குமாறு மாணவர்களிடத்தில் கேட்டிருந்தேன்.

அதில் ஒரு மாணவன், 'டீச்சர், ஒரு தடவையாவது நல்லா படிச்சு, உங்ககிட்ட நல்ல பேர் வாங்கணும்; நீங்க என்கிட்ட சிரிச்சுப் பேசணும்னு ஆசைப்பட்டேன்; ஆனா கடைசிவரை என்னால அதைப் பண்ண முடியல!' என்று எழுதியிருந்தான். எனக்கு சுரீரென்றது. அதற்குப் பிறகு அவனிடம் சகஜமாகப் பேசினாலும், நான் இதைப் படிச்சு வாங்கல டீச்சர் என்று படித்து முடித்துப் போகும்வரை சொல்லிக்கொண்டே இருந்தான். அந்த சம்பவத்துக்குப் பிறகுதான் எல்லா மாணவர்களுடனும் சமமாகப் பழக ஆரம்பித்தேன்.

எதிர்காலத் திட்டங்கள் பற்றி...

தமிழ்நாட்டின் எல்லாப்பகுதிகளுக்கும், எங்கள் பள்ளியின் பெயர் பரவ வேண்டும் என்ற இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறேன். பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் சீட் வாங்க வரிசையில் நிற்பது போல, அரசுப் பள்ளிகளிலும் வரிசையில் நிற்கும் நிலை வரவேண்டும் என்பதே என்னுடைய ஆசை!''.

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...