Thursday, February 25, 2016

எம்ஜிஆர் 100 | 8 - எம்.ஜி.ஆரின் பொதுவுடமை

Return to frontpage


தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்


M.G.R. பொது உடமைக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். திராவிட இயக்கங்களும் பொதுவுடமை கொள்கையை ஏற்றுக் கொண்டவைதான். எம்.ஜி.ஆர். தலைவர்களாக ஏற்றுக் கொண்டிருந்த பெரியாரும், அறிஞர் அண்ணாவும் ஏற்றத் தாழ்வுகளற்ற சமத்துவ சமூகம் அமைவதற்குத்தான் போராடினர்.

தனது படங்களில் பொதுவுடமைக் கொள்கைகள் தொடர்பான கருத்துகளையும் பாடல்களையும் எம்.ஜி.ஆர். இடம் பெறச்செய்வார். ஆரம்ப காலங்களில் எம்.ஜி.ஆரின் பொதுவுடமைக் கொள்கைகளுக்கு ஏற்ற பாடல்களுக்கு வரிவடிவம் தந்தவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த பாட்டுக் கோட்டையாக விளங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகையான ‘ஜனசக்தி’ யில் அவர் எழுதிய பாடலான ‘சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி..’ பாடலை தனது ‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆர் பயன்படுத்திக் கொண்டார். அந்தப் பாடல் வரிகளில் திரைக்கு ஏற்றவாறு பின்னர் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. 19 ஆண்டுகளுக்குப் பின்னர் நடக்கப் போவதை தீர்க்க தரிசனத்துடன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியது போல அமைந்துவிட்ட அந்த வரிகள்தான்... ‘நானே போடப் போறேன் சட்டம், பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்... நாடு நலம் பெறும் திட்டம்...’

அதற்கேற்ப, நாடு நலம் பெறும் திட்டங்களை இயற்றக் கூடிய இடத்தில், 1977-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். முதல்வராக ஆகிவிட்டார். எதேச்சையாக இருந்தாலும் அதை முதலில் சொன்ன பெருமை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு உண்டு.

எம்ஜிஆருக்கு உள்ள வசீகர சக்தி எல்லோரும் அறிந்ததுதான். அதற்கான பல நிகழ்ச்சிகளில் உதாரணத்துக்கு ஒன்று.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பால தண்டாயுதம். திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தவர். குறிப்பாக, அப்போது திமுகவில் இருந்த எம்.ஜி.ஆரை மிகக் கடுமையாக தாக்கி பேசியவர். பாலதண்டாயுதம் என்றில்லை; திமுகவில் இருந்து பின்னர் காங்கிரஸில் இணைந்த கவியரசு கண்ண தாசன் உட்பட பலரும் குறிவைத்து எம்ஜிஆரை கடுமையாக விமர்சனம் செய்தே பேசுவார்கள்.

அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் அவர்களைப் பொறுத்தவரை சரிதான். ‘அறிஞர் அண்ணாவால் முகத்தை காட்டினாலே 30 ஆயிரம் வாக்குகள் கிடைக்கும் என்று பாராட்டப்பட்ட எம்ஜிஆர்தான் திமுகவின் வாக்குகளை ஈர்க்கும் சக்தியாக விளங்குகிறார். எனவே, எம்ஜிஆரை தாக்கி அவரை விமர்சனம் செய்வதன் மூலம் திமுகவை பலவீனப்படுத்தி விடலாம்’ என்பது அவர்கள் கணக்கு. அப்படித்தான் பால தண்டாயுதமும் எம்ஜிஆரை விமர்சித்து வந்தார்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவ ரான ஜீவா அவர்களின் மீது பேரன்பு கொண்டவர் பாலதண்டாயுதம். ஜீவாவின் மரணத்துக்குப் பின் அவருக்கு சிலை எழுப்ப பாலதண்டாயுதம் முடிவு செய்தார். நேர்மைக்கும் எளிமைக்கும் உதாரணமாகத் திகழ்ந்த, எல்லா தரப்பினரின் மதிப்பையும் பெற்றிருந்த ஜீவாவின் சிலையை நிறுவுவதற்காக கட்சி வேறுபாடு இல்லாமல் எல்லா கட்சிகளையும் சேர்ந்தவர்கள், பிரமுகர்களிடம் நிதி திரட்டினார் பாலதண்டாயுதம். ஓரளவு நிதி சேர்ந்திருந்தது.

‘எம்.ஜி.ஆரிடமும் நிதி கேட்கலாமா?’ என்று பாலதண்டாயுதத்துக்கு ஒரு யோசனை. ஆனால், எம்.ஜி.ஆரைப் பற்றிய தனது கடுமையான விமர் சனங்கள் அவரது மனதில் நிழலாடி தயக்கத்தை ஏற்படுத்தின. இருந்தாலும் எம்.ஜி.ஆரை சந்தித்து ஜீவாவின் சிலைக்கு நிதி கேட்பது என்று முடிவு செய்து அவரை சந்தித்தார். ‘தனக்கு வரவேற்பு எப்படி இருக்குமோ’ என்று தயங்கிபடி சென்ற பாலதண்டாயுதத்தை அகமும் முகமும் மலர மகிழ்ச்சியுடன் வரவேற்றார் எம்.ஜி.ஆர்.

வந்த விவரம் கேட்டதும் எம்.ஜி.ஆருக்கு மேலும் மகிழ்ச்சி. மனபூர்வமாக நன்கொடை வழங்கு கிறேன் என்றார். பாலதண்டாயுதத்துக்கும் மகிழ்ச்சி ஒருபுறம். அதோடு, தான் பல சந்தர்ப் பங்களில் தாக்கி பேசியும் அதுபற்றிய விவரமே தெரியாதவர் போல தன்னுடன் எம்.ஜி.ஆர். இன்முகத்துடன் பழகியதால் வியப்பு மறுபுறம்.

‘‘சிலை வைக்க உங்கள் கணக்குப்படி எவ்வளவு செலவாகிறது?’’ எம்.ஜி.ஆர். கேட்டார்.

குறிப்பிட்ட தொகையை சொல்கிறார் பால தண்டாயுதம்.

‘‘அந்த தொகைதான் என் நன்கொடை’’ - இது எம்.ஜி.ஆர்.

பாலதண்டாயுதத்துக்கு இன்ப அதிர்ச்சி. பின்னர், அவரிடம் ‘‘நான் கம்யூனிச கொள்கையில் ஈடுபாடு கொண்டவன். என் படங்களில் பாடல்கள், வசனங்கள் மூலம் கம்யூனிச கொள்கைகளையும் சொல்லி வருகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் பொதுவுடமை கொள்கை உடன் பாடே. சிறந்த பேச்சாளரான நீங்கள் உங்கள் பேச்சால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உங்கள் ஆற்றலை என்னை தாக்கு வதில் வீணடிக்கிறீர்களே? பொதுவுடமை கொள் கையை பரப்புவதில் நீங்கள் மேலும் சிறப்பாக தொண்டாற்ற வாழ்த்துகள்’’ என்றார் எம்.ஜி.ஆர்.

அவரது உயர்ந்த குணத்தையும் பண்பையும் அறிந்து நெகிழ்ந்த பாலதண்டாயுதம், அன்று முதல் எம்.ஜி.ஆரை தாக்குவதை நிறுத்தியதோடு மட்டுமல்ல; அவரது குணநலன்களை நண்பர் களிடம் புகழ்ந்தார்.

அதோடு மட்டுமல்ல; திமுகவில் இருந்து நீக்கப்பட்டு எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கிய பின் கம்யூனிஸ்ட்கள் அவருக்கு ஆதரவு அளித்தனர். ‘‘ஊழலை எதிர்க்கிறார்; லஞ்சத்தை எதிர்க்கிறார் என்பதற்காக எம்.ஜி.ஆர். மீது ஒரு துரும்பு பட்டாலும், ஒரு கீறல் பட்டாலும் தமிழ்நாட்டில் மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதை கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எச்சரிக்கையாக பிரகடனப்படுத்துகிறேன்’’ என்று சென்னை கோடம்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில் பாலதண்டாயுதம் பேசும் அளவுக்கு எம்.ஜி.ஆர். மீது அவர் அன்பு கொண்டார்.

மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் தன்பால் ஈர்த்துக் கொள்ளும் வசீகரத்தின் பெயர் எம்.ஜி.ஆர்.




அதிமுக தொடங்கிய 7 மாதங்களிலேயே திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தல் 1973 மே 20-ம் தேதி நடந்தது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தன. அதிமுக வேட்பாளரான மாயத் தேவர் 2 லட்சத்து 60 ஆயிரத்து 930 ஓட்டுக்கள் பெற்று பதிவான வாக்குகளில் பாதிக்கும் மேல் பெற்று வெற்றி பெற்றார். ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாவது இடத்தையும் திமுக 3-வது இடத்தையும் பெற்றன. இந்திரா காங்கிரஸ் டெபாசிட் இழந்தது. இந்த பிரம்மாண்டமான வெற்றி அகில இந்தியாவையும் எம்.ஜி.ஆரை திரும்பிப் பார்க்க வைத்தது!

Tuesday, February 23, 2016

எம்ஜிஆர் 100 | 6....தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

Return to frontpage

M.G.R. திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாட்டுப் பற்றிலும் தேச பக்தியிலும் தேசியவாதிகள் யாருக்கும் சளைத்தவர் இல்லை. ஆரம்பத்தில் சுதந்திரப் போராட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். காங்கிரஸ்காரராக இருந்தவர்தான். 1946-ல் சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக காமராஜர் ஆனபோது அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்தான். பின்னர், அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
காமராஜரை ஆரம்பத்தில் தலைவராக ஏற்றுக் கொண்டதால்தான் 1965-ம் ஆண்டு ஜூலையில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு ‘காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி’ என்று பேசினார். இது அப்போது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. என்றாலும், அண்ணாவுக்கு எம்.ஜி.ஆரின் உள்ளம் தெளிவாகப் புரிந்தது.
1954 -ம் ஆண்டில் மூதறிஞர் ராஜாஜி சென்னை மாகாண முதல்வர் பதவியில் இருந்து விலகிய பின், முதல்வராக காமராஜர் பதவியேற்றார். அப்போது அவர் சட்டப் பேரவை உறுப்பினராக இல்லை. குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் ‘குணாளா, குலக்கொழுந்தே..’ என்று போற்றி காமராஜருக்கு ஆதரவு அளித்த அண்ணாவுக்கு எம்.ஜி.ஆரின் உள்ளம் புரியாதா என்ன?
‘இந்தி சீனி பாய் - பாய்’ என்று உறவு கொண்டாடிய சீனா 1962-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திடீரென இந்தியா மீது தாக்குதலை தொடங்கியது. நண்பரைப் போல நடித்து நயவஞ்சமாக தாக்குதலில் ஈடுபட்ட சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாரானது. ஆசிய ஜோதி பண்டித நேரு அறைகூவல் விடுத்தார்.
‘‘ராணுவத்துக்கு உதவுவதற்காக பொது மக்கள் தாரளமாக யுத்த நிதி வழங்க வேண்டும்’’ என்று வானொலி மூலம் நாட்டு மக்களை பிரதமர் நேரு கேட்டுக் கொண்டார். அவரது உரையைக் கேட்டவுடன் 75 ஆயிரம் ரூபாய் நிதியை வழங்குவதாக அறிவித்த முதல் நடிகர் மட்டுமல்ல; நாட்டிலேயே முதல் குடிமகன் எம்.ஜி.ஆர்.தான். அது மட்டுமல்ல; அனைத்து இந்தியாவிலும் அவ்வளவு பெரிய தொகையை எந்த தனிநபரும் கொடுக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் 75,000 ரூபாய் இன்று பல கோடிகளுக்கு சமம்!
அறிவித்ததோடு நிற்காமல் உடனடியாக அப்போது முதல்வராக இருந்த காமராஜரிடம் முதல் தவணையாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை கொடுப்பதற்காக காமராஜர் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். சென்றார். காமராஜர் வீட்டில் இல்லை. ரயில் மூலம் வெளியூர் பயணம் செல்வதற்காக அவர் எழும்பூர் ரயில் நிலையம் சென்றுவிட்டது தெரியவந்தது. காமராஜர் திரும்பி வரட்டும், கொடுக்கலாம் என்று எம்.ஜி.ஆர். காத்திருக்கவில்லை. எழும்பூர் ரயில் நிலையம் விரைந்து காமராஜர் பயணம் செய்த பெட்டிக்குச் சென்றார் எம்.ஜி.ஆர்.
ரயில் நிலையத்தில் ஒரே பரபரப்பு. திடீரென அங்கு எம்.ஜி.ஆரைக் கண்டதும் காமராஜருக்கே வியப்பு. நேருவின் உரையை வானொலியில் கேட்டதாகவும் யுத்த நிதிக்கு ரூ.75,000 நன்கொடை அளிக்க இருப்பதை தெரிவித்து, முதல் தவணையாக ரூ.25,000க்கான காசோலையை காமராஜரிடம் வழங்கினார் எம்.ஜி.ஆர். ‘ரொம்ப சந்தோஷம்’ என்று மகிழ்ச்சி தெரிவித்த காமராஜர் இதுபற்றிய செய்தி பத்திரிகைகளில் வெளிவர ஏற்பாடு செய்தார். எம்.ஜி.ஆர். நிதி அளித்த விஷயம் மக்களுக்குத் தெரிய வந்தால், மக்கள் மேலும் ஆர்வமுடன் நிதி அளிக்க முன்வருவார்கள் என்பது காமராஜரின் எண்ணம்.
வெளியூர் பயணம் முடிந்து சென்னை திரும்பிய காமராஜர், பத்திரிகையாளர்களை சந்தித்தார். எம்.ஜி.ஆர். யுத்த நிதி வழங்கியது பற்றியும் பேச்சு வந்தது. அப்போது ஒருவர், ‘விளம்பரத்துக்காகத்தான் எம்.ஜி.ஆர். நிதி வழங்கியிருக்கிறாரா?’ என்று கேட்டதும் வந்ததே கோபம் காமராஜருக்கு.
‘‘சும்மா இருங்கிறேன். நீ எவ்வளவு கொடுத்தே? எப்ப கொடுத்தே? கொடுப்பியோ, மாட்டியோ? கொடுக்கிறவங்களையும் சும்மா ஏன் கிண்டல் செய்யணும்? நேரு ரேடியோவிலே பேசப் போறாரு. காமராஜரு ரெயில்லே போவாரு. முதல்லே கொடுக்கணும்னு பிளான் போட்டாரா? எப்படி முடியும்கிறேன்? ரயில்வே ஸ்டேஷன்லே எம்.ஜி.ஆர். கொடுத்த செக்கை வாங்கி யதும் நானே பிரமிச்சு போயிட்டேன். உடனே பேப்பருக்கும் செய்தி கொடுக்கச் சொன்னேன்’’ என்று பொரிந்து தள்ளிவிட்டார் உண்மையான நாட்டுப் பற்றைப் போற்றும் பெருந்தலைவர் காமராஜர்.
இதனிடையே, தான் யுத்த நிதி அளிக்கும் செய்தியை பிரதமர் நேருவுக்கும் கடிதம் மூலம் எம்.ஜி.ஆர். தெரிவித்தார். யுத்த வேளையில், நெருக்கடியான நேரத்தில் பிரதமர் நேரு நினைத்திருந்தால் தனது உதவி யாளரையோ, பிரதமர் அலுவலக ஊழியர் களையோ எம்.ஜி.ஆருக்கு பதில் கடிதம் எழுதச் சொல்லியிருக்கலாம். ஆனால், யுத்த நிதிக்கு பெரும் தொகையை அள்ளி வழங்கிய நாட்டின் முதல் குடிமகன் எம்.ஜி.ஆருக்கு நேருவே கடிதம் எழுதினார். ‘‘ராணுவத்தினரின் பயன்பாட்டுக்கு தாராளமாக நிதி வழங்கியமைக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்’’ என்று கடிதத்தில் நேரு குறிப்பிட்டார்.
எம்.ஜி.ஆருக்கு பிரதமர் நேரு எழுதிய கடிதம்
எம்.ஜி.ஆரின் நாட்டுப் பற்றையும் நேரு பாராட்டிய பெருந்தன்மையான அவரது மனதையும் பறைசாற்றும் வகையில், சென்னை யில் எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் சாட்சியாக உள்ளது நேருஜியின் அந்தக் கடிதம்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தேசத் தலைவர்கள், நாட்டுக்கு உழைத்தவர்கள், தியாகிகள் பெயர்களை மாவட்டங்களுக்கு சூட்டினார். 1984-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்த நாளன்று அவர் பிறந்த விருது நகரை தலைமையிடமாகக் கொண்டு காமராஜர் மாவட்டத்தை எம்.ஜி.ஆர். உருவாக்கினார்.
தொடரும்..
படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்

All-India medical entrance dress code violates religious freedom: Petition in HC

All-India medical entrance dress code violates religious freedom: Petition in HC

TIMES OF INDIA

HI: The dress code stipulated for All-India medical entrance that asks women candidates to wear half-sleeve dress violates the constitutional right to practise one's religion, a 20-year-old Muslim woman has alleged at the Kerala High Court.
A petition filed to the high court by Amna Bint Basheer of Pavaratti in Thrissur said the dress code mentioned in the information bulletin given to candidates who have applied for the All India Pre-Medical Entrance Test (AIPMT) 2016 infringes on her religious beliefs and practices. This year's AIPMT is scheduled for May 1 stat present.
In the bulletin, it is stated that women candidates should wear light clothes with half sleeves. She is a practising Muslim woman and wearing a half-sleeve dress as mentioned in the bulletin will be against Quranic instructions. As per Quran, she is required to cover all her body except face when she is appearing in public or is with non-relatives, the petition filed through advocate Shameem Ahamed said.
The dress code specified for AIPMT has no nexus with the objectives sought to be achieved and it is unconstitutional as it violates the fundamental right of the petitioner to practise her religion as per Article 25 (1) of the Constitution. The only exception is the authorization for the State to make law for regulating or restricting any economic, financial, political, or other secular activity which may be associated with religious practice, the petition stated.
The condition imposed on the petitioner and other similarly-placed candidates is a clear infringement of their fundamental right and is against the Supreme Court's 1986 decision in Bijoe Emmanuel vs State of Kerala case, it is alleged.
Further, the petitioner points out that a similar challenge was raised by candidates who appeared for last year's AIPMT and the high court had issued orders in their favour. Even after the high court issued orders, authorities prevented Muslim and Christian candidates from appearing for the examination citing dress code, the petitioner contends citing media reports. In such circumstances, the petitioner is constrained to approach the high court, the petition said.

இந்தியாவில் இருந்து இங்கிலாந்து சென்ற விமானத்தில், பயணியொருவர் மது கேட்டு கலாட்டா செய்ததுடன் சிறுநீர் கழித்துள்ளதை அடுத்து இங்கிலாந்து நீதிமன்றம் 500 பவுண்டுகள் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

WEBDUNIA

இந்தியாவில் இருந்து இங்கிலாந்து சென்ற விமானத்தில், பயணியொருவர் மது கேட்டு கலாட்டா செய்ததுடன் சிறுநீர் கழித்துள்ளதை அடுத்து இங்கிலாந்து நீதிமன்றம் 500 பவுண்டுகள் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
 

 
கடந்த ஜனவரி 17ஆம் தேதி ஜினு ஆப்ரஹாம் [39] தனது 10 வயது மகனுடன் ’ஏர் இந்தியா போயிங் 787’ ரக விமானத்தில் இந்தியாவில் இருந்து இங்கிலாந்தின் பிர்மிங்காம் பகுதிக்கு பயணம் செய்துள்ளார். அப்போது அவர்
 
அப்போது அவர், விமானத்தில் அதிக அளவு மது கேட்டுப்பெற்று அருந்தியதாக கூறப்படுகிறது. போதை அதிகமானதும் விமான ஊழியர்களை அழைத்து தமக்கு மீண்டும் மது வேண்டும் எனக் கேட்டு நச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
அதற்கு விமான ஊழியர்கள் மறுப்பு தெரிவித்ததோடு, அவரை எச்சரித்துள்ளனர். விமானம் தரையிறங்குவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்பு, அவர் விமாத்தின் மையப்பகுதிக்கு வந்து நின்றுகொண்டு தனது கால்சட்டை கழற்றி அங்கேயே சிறுநீர் கழித்துள்ளார்.
 
இச்சம்பவத்தினால் சக பயணிகள் அனைவரும் முகம் சுழித்துள்ளனர், தொடர்ந்து விமான ஊழியர்கள் வலுக்கட்டாயமாக அவரை இருக்கையில் வைத்து பிணைத்துக் கட்டியுள்ளனர். பர்மிங்காம் விமான நிலையம் சேர்ந்ததும் காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
 
அவரின் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, பர்மிங்காம் குற்றவியல் நீதிமன்றம் 500 பவுண்டுகள் விமான நிறுவனத்திற்கு இழப்பீடாகவும், கூடுதல் கட்டணமாக 30 பவுண்டுகளும், செல்வீன தொகையாக 185 பவுண்டுகளும் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
 
இவரது மருந்து மாத்திரைகளை இந்தியாவில் உள்ள விமான நிலையத்தில் அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மனைவியின் உடல்நலம் குறித்து கவலையினால், ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவ்வாறு நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

குடிநீர் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் ஏ.சி. அறையில் ஓய்வெடுத்துக் கொண்டு கோர்ட்டு உத்தரவை எதிர்பார்ப்பதா? டெல்லி அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

குடிநீர் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் ஏ.சி. அறையில் ஓய்வெடுத்துக் கொண்டு கோர்ட்டு உத்தரவை எதிர்பார்ப்பதா? டெல்லி அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

DAILY THANTHI

புதுடெல்லி,
டெல்லிக்கு குடிநீர் தடைபட்ட பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். ஏ.சி. அறையில் ஓய்வெடுத்துக் கொண்டு, கோர்ட்டு உத்தரவை எதிர்பார்க்கிறீர்கள் என்று டெல்லி அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.
குடிநீர் நிறுத்தம்
அரியானா மாநிலத்தில் ஜாட் சமூகத்தினர், இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
டெல்லிக்கு தண்ணீர் வினியோகமாகும் முனாக் கால்வாயை முற்றுகையிட்டு டெல்லிக்கு தண்ணீர் விடுவதை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து டெல்லியில் கடுமையான முறையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டது. பல பகுதிகளில் தண்ணீர் வராமல் மக்கள் மிகவும் அவதியுற்றனர்.
இதையடுத்து டெல்லி மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், ‘ஜாட் இனத்தவரின் போராட்டத்தினால் டெல்லியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. குடிநீர் வினியோகத்தை உறுதி செய்ய ராணுவத்தை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மந்திரி ஆஜர்
இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது.
டெல்லி மாநில அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராஜீவ் தவான், தனது வாதத்தில், ‘அரியானாவில் நடைபெறும் போராட்டத்தினால் டெல்லியில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. கடுமையான தண்ணீர் பஞ்சம் டெல்லியை பாதிக்கும் ஆபத்து உள்ளது. சம்பந்தப்பட்ட மந்திரி கபில் மிஸ்ரா இந்த கோர்ட்டில் ஆஜராகி இருக்கிறார்’ என்று கூறினார்.
ஏ.சி. அறை
இதையடுத்து தலைமை நீதிபதி மிகுந்த கோபத்துடன், ‘இதுபோன்ற மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக சம்பந்தப்பட்ட மந்திரி கோர்ட்டு அறையில் அமர்ந்து இருக்கிறார். அரியானா சென்று அந்த மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதை விட விஷயத்தை கோர்ட்டுக்கு எடுத்துக் கொண்டு வருவது சுலபமாக இருக்கும் என்று கருதுகிறீர்களா? ஏ.சி. அறையில் ஓய்வெடுத்துக் கொண்டு கோர்ட்டு உத்தரவை எதிர்பார்க்கிறீர்கள். எல்லாவற்றையும் தட்டில் வைத்து தரவேண்டும் என்று விரும்புகிறீர்கள்.
இது டெல்லி மற்றும் அரியானா மாநிலங்களுக்கு இடையிலான நிர்வாக பிரச்சினையாகும். அங்கு நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தி டெல்லிக்கு தண்ணீர் கொண்டு வரும் வழியை பாருங்கள். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று கூறினார்.
நோட்டீசு
இதையடுத்து இந்த மனுவை தயவு செய்து தள்ளுபடி செய்ய வேண்டாம் என்றும், நிலைமையை உத்தேசித்து மறுபரிசீலனை செய்யுமாறும் ராஜீவ் தவான் வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு நீதிபதிகள், டெல்லிக்கு குடிநீர் வினியோகத்தை சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அரியானா மாநில அரசை கேட்டுக்கொண்டனர்.
அரியானா மாநில அரசு சார்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், ‘நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. இன்றே குடிநீர் வினியோகத்தை தொடங்க முயன்று வருகிறோம்’ என்றார்.
இதையடுத்து அரியானா அரசு இந்த விவகாரம் குறித்து இரு நாட்களில் விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
மத்திய அரசு மற்றும் உத்தரபிரதேச அரசுக்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்

தேவை புரிதல் மனப்பான்மை

தேவை புரிதல் மனப்பான்மை

By  ச. கந்தசாமி
First Published : 23 February 2016 01:09 AM IST
DINAMANI


பதினெட்டு வயதுக்குள்பட்ட சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்குச் சட்டம் தடை விதிக்கிறது. தடை மீறிச் சிறுவர்கள் வாகனங்களை ஓட்டுவார்களானால் அவ்வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். வாகன உரிமையாளர்களுக்கு அபராதம், தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்'. இவ்வாறு, சமுதாய நன்மைக்காக இங்கு இல்லாத சட்டங்கள் இல்லை.
 ஆனால், காவல் துறையினரின் மெத்தனம், கடமைப் புறக்கணிப்பு, கையூட்டு இவைகளால் சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய மக்கள் அற்பமாகவும், சட்டத்தை மீறுவது தவறில்லையெனவும் நினைக்கிறார்கள். "மீறுதல் இயல்பே' எனவும் நினைத்து வாழப் பழகிவிட்டார்கள்.
 "குடும்ப கெளரவம், சமூகத்தில் மதிப்பு, பொதுமக்களிடம் அந்தஸ்து, தலைமை ஸ்தானம்' என்ற போலிப் பெருமைகளைத் தக்க வைப்பதற்காகச் சில அவசியமில்லாத பழக்க வழக்கங்கள், அநாவசியத் தேவைகள், மிதமிஞ்சிய ஆசைகளுக்கும் பலர் ஆட்பட்டு விடுகிறார்கள். 
 வீட்டிலுள்ள அத்தனை பேர்களுக்கும் தனிதனியாக உடைகள், செருப்புகள் (காலணிகள்) இருப்பது போலத் தனித்தனி வாகனங்கள், தனித்தனி கைபேசிகள், குடைகள், வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிகள் வைத்திருப்பதைப் பெருமையாகக் கருதும் குடும்பங்களும் உண்டு. இவ்வாறு வாழ்வது "கெளரவத்தின் அம்சம்' எனவும் பெருமைபட நினைக்கிறார்கள்.
 "பணத்தை எதில் முதலீடு செய்யலாம், எதற்குச் செலவழிக்கலாம்? என்ன பொருள்கள் வாங்கலாம்?' என்ற தெளிவேதும் இல்லாமல், கண்ட கண்ட பொருள்களையெல்லாம் வீட்டில் வாங்கிக் குவிக்கும் பலர் கடை கடைகளாக அலைந்து திரிவர். 
 சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள், செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்துவது கண்டு பூரித்துப் போகும் பெற்றோர்களும் பலர் இருக்கிறார்கள். "வாழ்க்கை, அமைதி, உண்மையான மகிழ்ச்சி, அவசியத் தேவைகள் எவை?' என்பதைப் புரிதலின்றி வாழும் மக்கள் நிறைந்த சமூகத்தில் சட்டம், ஒழுங்கு, கட்டுப்பாடு என்பதெல்லாம் விலக்கி வைக்கப்படுகின்றன.
 பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துவர, பள்ளி முடிந்து வீடுகளில் கொண்டு சேர்க்க அனைத்துத் தனியார் பள்ளிகளும் நான்கு சக்கர வாகனங்களைப் பயன்பாட்டுக்கு வைத்துள்ளன. தனியாகக் கட்டணங்களையும் வசூல் செய்கின்றன. 
 அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசக் கட்டணப் பேருந்து வசதிகளை மாநில அரசே கிராமப்புறக் குழந்தைகளின் முக்கியத்துவம் கருதி ஏற்பாடு செய்துள்ளது. 
 அரசுப் பேருந்து வசதிகள் இல்லாத குக்கிராமங்களே இல்லையெனும் அளவுக்கு அரசு போக்குவரத்து வசதிகளைப் பெருக்கியுள்ளது. இலவசச் சைக்கிள்களும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
 இத்தனை வாய்ப்பு வசதிகளுக்குப் பிறகும் பதினெட்டு வயது நிரம்பாத பள்ளி மாணவர்கள் இரண்டு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவது அவசியமில்லாதது; தவறு. 
 இவ்வாறு வரும் மாணவர்களை அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனுமதிப்பது பள்ளிகளின் நிர்வாகத் தவறு; தலைமையாசிரியர், கல்வித் துறையின் உதாசீனப் போக்கு. பிள்ளைகளிடம் பெற்றோர்கள் கண்டிப்பையும் உறுதியையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
 மக்களின் நுகர்வு கலாசாரத்துக்கும் பேராசைகளுக்கும் வலை விரிக்கும் நோக்கில் வாகன உற்பத்தியை எல்லையின்றித் தயார் செய்யும் தொழில் நிறுவனங்களை அரசே கட்டுப்படுத்த வேண்டும். ஆசையைத் திருப்தி செய்யப் பொருள் உற்பத்தி என்றிராமல், தேவையை நிறைவு செய்யும் அளவுக்கே பொருள் உற்பத்தி என்பது அமைய வேண்டும். 
 உற்பத்தியைப் பெருக்கும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை வெளிநாடுகளின் ஏற்றுமதிக்குப் பயன்படுத்தட்டுமே. இதனால் அன்னியச் செலாவணி கிடைக்குமே. இது நாட்டின் பொருளாதார வளத்துக்கு நல்லது தானே! 
 சட்டத்தையும் ஒழுங்கையும் மீறும் காவல் துறையினர், தனி மனிதர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். கடுமையின்மை, விதிதளர்வு, பாரபட்சம் என்பதையெல்லாம் ஓரங்கட்டி கண்டிப்பைக் காட்டிடும் அரசு நிர்வாகம் நம்மிடம் தேவை.
 "உயர் மதிப்பெண்கள், உயர் பதவிகள், அதிகப்படியான ஊதியம், சொகுசு வாழ்க்கை, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு இவை கிட்டுவதற்கான கற்பித்தல் மட்டுமே கல்விக் கூடங்களின் பணியன்று.
 உடல் ஆரோக்கியம், சமூகத்தோடு இசைவு, பணியில் பொறுப்புணர்வு, கடமையில் ஈடுபாடு, சட்டத்தையும் விதிகளையும் மதித்து நடத்தல், தேசத் தொண்டை விழையும் தியாக உணர்வு, பிறர்க்கு உதவும் மனோபாவம், பெரியோரை மதித்தல், தாய், தந்தையரையும் ஆசிரியர்களையும் போற்றி வணங்கி பண்புடன் நடத்தல், சக மாணவ, மாணவிகளை மதித்தல், கல்வி உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு தகுந்த உதவியை அவர்களுக்கு அளித்தல், பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பதெனும் எண்ணம், இவை தேவை, இவை தேவையற்றவை என உணர்ந்து விலக்கும் புரிதல் மனப்பான்மை'- இவையே பள்ளிகளில் கற்பித்தலில் முக்கியத்துவம் பெற வேண்டும்.
 எந்திரங்கள் போலும் சுயநல வாழ்வுக்கு மாணவர்களை ஊக்குவிப்பது கல்வியின் நோக்கமன்று.

பணி ஓய்வுக்குப் பிறகு?

THE HINDU TAMIL

பணி ஓய்வுக்குப் பிறகு?

தற்போது 30 வயதுக்குள் இருக்கும் நபர்களிடம் சென்று ஓய்வுகாலத்துக்கு முதலீடு செய்துவிட்டீர்களா என்று கேட்டால், அதற்கு இப்போது என்ன அவசரம் என்று பதில் கேள்வி கேட்பார்கள். ஆனால் இப்போது சேமிக்க முடியாவிட்டால் எப்போதும் சேமிக்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.
இப்போது ஏன்?
ஓய்வு காலத்துக்கு இப்போதே திட்டமிட வேண்டியது அவசியம். இதற்கு பல காரணங்கள். முன்பெல்லாம் கூட்டுக்குடும்ப முறை இருந்தது. அதனால் குடும்பத்துக்கு வருமானம் ஈட்டுபவர்கள் சிலர் இருந்தனர். ஆனால் இப்போது தனிக்குடும்ப சூழ்நிலை அதிகரித்து வரும் நிலையில், ஓய்வு காலத்துக்கு பிறகு வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் குறைவு. பணிபுரியும் அனைவருக்கும் ஓய்வூதிய பலன்கள் இல்லை என்பதால் இப்போது சேமிக்கும் தொகைதான் வருங்காலத்தில் பயன்படும்.
வாழ்க்கை முறை
பொதுவாக இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பணி ஓய்வுக்கு பிறகு 20 ஆண்டுகள் வாழ்வது என்பது இப்போது சாதாரணமாகி விட்டது. அதனால் 60 வயதுக்கு பிறகு நமக்கு என்ன செலவு இருக்கப்போகிறது என்று யோசிப்பதை விட்டுவிடுங்கள். அதுபோல இப்போது ஒரு மாதத்துக்கு ஆகும் செலவு தொகை அப்போது பல மடங்கு அதிகரிக்கும். இந்த பணவீக்கத்தையும் கணக்கிலெடுக்க வேண்டும். சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு பிரச்சினை இல்லை. வாடகை வீட்டில் இருந்தால் இன்னும் 10 வருடங்களுக்கு பிறகு வாடகை எந்த அளவுக்கு உயரும், விலைவாசி எவ்வளவு உயரும் என்பதை முன்கூட்டியே திட்டமிடவேண்டும். இத்தனை சவால்களை சந்திக்க வேண்டும் என்றால் ஓய்வுக்காலத்துக்கு இப்போதே முதலீடு செய்ய வேண்டியது அவசியம்.
எதில், ஏன்?
ஓய்வு காலத்துக்கு பல வகையான முதலீட்டு திட்டங்கள் உள்ளன. ஆயூள் காப்பீடு, புதிய பென்ஷன் திட்டம், பிபிஎப் உள்ளிட்ட பல வகையான முதலீட்டு திட்டங்கள் இதுவரை இருந்தன. இப்போது மியூச்சுவல் பண்ட்களிலும் இதுபோன்ற திட்டங்கள் வர ஆரம்பித்துள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக பிராங்க்ளின் இந்தியா மற்றும் யூடிஐ மியூச்சுவல் பண்ட்களில் இந்த வகையிலான பண்ட்கள் இருந்தாலும், கடந்த ஆண்டில் ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனமும் இதுபோன்ற ஓய்வு கால பண்டை அறிமுகப்படுத்தியது. கடந்த வாரத்தில் ஹெச்டிஎப்சி மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் ஓய்வு கால பண்டுக்கான என்.எப்.ஓ (புதிய பண்ட் வெளியீடு) முடிந்துள்ளது. மேலும், எஸ்பிஐ, ஆக்ஸிஸ், ஐசிஐசிஐ, கனரா ராபிகோ, ஐடிபிஐ, டிஎஸ்பி பிளாக்ராக், பிர்லா சன்லைப் மற்றும் எல்ஐசி நொமுரா ஆகிய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் இதுபோல ஓய்வு கால பண்ட் வெளியிட செபியிடம் அனுமதி கோரியிருக்கின்றன. பட்ஜெட்டுக்கு பிறகு இந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
சலுகைகள் என்ன?
வரிவிலக்கு மியூச்சுவல் பண்ட் திட்டமான இஎல்எஸ்எஸ் திட்டங்களுக்கு 80 சி பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு. இந்த இஎல்எஸ்எஸ் வகை பண்ட்களில் செய்யப்படும் முதலீட்டை மூன்று வருடத்துக்கு வெளியே எடுக்க முடியாது. அதுபோல ஓய்வு கால மியூச்சுவல் பண்ட்களில் செய்யப்படும் முதலீட்டை ஐந்து வருடங்களுக்கு எடுக்க முடியாது. ஐந்து வருடம் முடிந்தாலும், 60 வயதுக்கு முன்பாக முதலீட்டை எடுக்க முடியாது. அப்படி எடுக்க வேண்டிய தேவை இருந்தால் வெளியேறும் கட்டணமாக ஒரு சதவீதம் செலுத்த வேண்டி இருக்கும்.
இந்த பண்டில் மூன்று வகையான வாய்ப்புகள் உள்ளன. முழுவதும் பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகள். 60-80 சதவீதம் வரை பங்குச்சந்தை முதலீடு செய்வது, 5-30 சதவீதம் வரை பங்குச்சந்தையில் முதலீடு செய்வது என மூன்று வகையான வாய்ப்புகள் உள்ளன. முதலீட்டாளர்கள் தங்களது ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப இந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
வயது குறைவாக இருப்பவர்கள் முழுவதும் ரிஸ்க் உள்ள பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களிலும், நடுத்தர வயதில் இருப்பவர்கள் பங்குச்சந்தை சார்ந்த பேலன்ஸ்டு பண்டையும், 50 வயதுக்கு மேல் இருப்பவர்கள் கடன் சந்தை சார்ந்த பேலன்ஸ்ட் பண்டையும் தேர்வு செய்யலாம்.
என்பிஎஸ்
என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகிறவர்கள் அதிகபட்சம் 50 சதவீதம் வரை மட்டுமே பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய முடியும். ஆனால் மியூச்சுவல் பண்ட்களில் 100 சதவீதம் பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. தவிர என்பிஎஸ் அல்லது இன்ஷூரன்ஸில் உள்ள பென்ஷன் திட்டங்களில் முதலீடு செய்த மொத்த தொகையையும் எடுக்க முடியாது. குறிப்பிட்ட தொகையை ஆனுட்டி திட்டங்களில் முதலீடு செய்தே மாதந்தோறும் தொகையை வாங்க முடியும். ஆனால் இங்கு எஸ்டிபி முறையில் ஒவ்வொரு மாதமும் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். மொத்தமாக வேண்டும் என்றால் எடுத்துக்கொள்ள முடியும்.
முதலீடு செய்யலாமா?
புதிதாக வந்திருக்கும் ஓய்வு கால மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்யலாமா என்று நிதி ஆலோசகர் சொக்கலிங்கம் பழனியப்பனிடம் கேட்டோம். பொதுவாக புதிய பண்ட் வெளியீடுகளை நான் பரிந்துரை செய்வதில்லை. ஒரு பண்டின் செயல்பாடு, பண்ட் நிர்வாகி, மியூச்சுவல் பண்ட் நிறுவனம் உள்ளிட்டவற்றை ஆராய்ந்த பிறகே பரிந்துரை செய்வேன்.
ஆனால் பெரும்பாலான முதலீடுகள் இலக்கில்லாமல் செய்யப்படுபவையாக இருக்கின்றன. பலர் முதலீட்டை பாதியில் எடுக்கிறார்கள். சிலர் அவசியமாகவும், சிலர் அநாவசியமாகவும் முதலீட்டை பாதியில் திரும்ப பெருகின்றனர். ஓய்வு சமயத்தில் பார்க்கும் போது அவர்களிடம் போதுமான நிதி இருப்பதில்லை.
இது போன்ற சமயங்களில்தான் இலக்குகளுடன் கூடிய முதலீடுகள் அவசியமாகின்றன. ஒரு இலக்குடன் முதலீடு செய்யும் போது அந்த தொகையை வெளியே எடுக்க முடியாது. எடுக்கும் பட்சத்தில் ஒரு சதவீத கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்பதனால் முதலீட்டை திரும்ப பெறாமல் தொடரவே வாய்ப்புகள் அதிகம். இந்த கட்டுப்பாடு அவசியம் என்றே தோன்றுகிறது.
சாதாரண ஈக்விட்டி பண்ட்கள் அல்லது சந்தையில் சிறப்பாக செயல்படும் இஎல்எஸ்எஸ் பண்ட்களின் வருமானத்துடன் ஒப்பிடும் போது இதுபோன்ற புதிய ஓய்வுகால பண்ட்களின் வருமானம் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாது. ஆனால் நீண்ட காலத்தில் முதலீடு செய்யும் போது கணிசமான வருமானம் கிடைக்கலாம். ஓய்வு பெற்ற கவலை வேண்டுமானாலும் பட முடியுமே தவிர, திட்டமிட முடியாது. திட்டமிடலை இப்போது தொடங்க வேண்டும் என்றார்.
உங்கள் திட்டத்தை எப்போது தொடங்கபோகிறீர்கள்?

NEWS TODAY 2.5.2024